Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நான் மிக மிக சின்னவன்   யாழ் மிகப்பெரிய ஊடகம்.  அதில் என்னைப் பற்றி விவாதங்கள் செய்வது… யாழை  அவமானப்படுத்துவது ஆகும்    😁

உங்களை பற்றி யாழில் நன்றாகவே எழுதலாம். ஆனால் தான் ஒரு மோசமான ரவுடி வெட்டிபோடுவேன் என்று பகிரங்கமாக சொன்ன சீமானை  அண்ணன் சீமான் என்றும் செந்தமிழ் சீமான் என்று யாழில் எழுதி தான் யாழ் அவமானப்படுத்தபடுகிறது.

  • Replies 196
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரிருவர் சீமானுக்கு சார்பாக எழுதுவதை வைத்து ஒட்டுமொத்த தமிழினமும் சீமான் சார்பாக நிற்கின்றார்கள்  என்றொரு பிரமையை இந்த திரி உருவாக்கி விட்டது. இதுதான் உக்ரேன் கலவர திரியிலும் நடந்தது. அவரவர் தமக்கு பிடித்த தெரிந்த கருத்துக்களை சொல்கின்றார்கள். அவ்வளவுதான்.
சீமானுக்கான ஆதரவை விட திராவிட கட்சிகளுக்கு யாழ்களத்திலும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. இது ஊர் உலகம் அறிந்த விடயம். அப்படியிருந்தும் ஓரிருவரின் சீமான் ஆதரவு கருத்திற்காக  மற்றவர்கள் அல்லல்பட்டு  ஓடித்திரிவது நகைப்பிற்குரியது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

திமுக அல்ல திமுகவின் 15 கட்சிக்கூட்டணி. அதுவும் 3 வீத வாக்குகள் வித்தியாசத்தில். 2009 இற்குப் பின் அசுர பலத்தோடு ஜெயலலிதா இருந்தார். தனித்து நின்று இந்தியாவின் 3 பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தினார். ஸ்டானுக்கு அந்தத் தில் எந்தக்காலத்திலும்வராது.

அசுர பலத்தோடு ஜெயலலிதா இருந்தார் என்று புளகாங்கிதத்தோடு சொல்லும் நீங்கள் அதே ஜெயலலிதா புலிகளை படு மோசமாக கேவலமாக,  “கொலைகாரர்கள் பயங்கரவாதிகள்”,  என்று பொதுமேடைகளில் தொடர்ந்து பேசினார். விடுதலைப்புலிகளின் மீதான தடைக்கு முக்கிய காரணியானார். திமுகவும் விடுதலைப்புலிகளும் இணைந்தே ராஜீவை படுகொலை செய்தனர் என்று பகீரங்கமாக பிரச்சாரம் செய்து 1991 ல் அசுர பலத்தை பெற்ற மாபெரும் வெற்றியை பெற்றார்.  என்பதையும் ஒத்துக்கொள்வீர்களா?  

ஈழத்தமிழர்களுக்கு எம். ஜி. ஆர் அரசு கொடுத்த உயர் கலவி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததார். (பின்னர் வந்த திமுக அரசு அதை மீண்டும் அது மீண்டும் வழங்கியது.)

புலிகளின் ஆயுத போராட்ட காலம் முழுவதும் புலிகளையும் ஈழத்தமிழர்களையும் கடுமையாக வெறுத்து புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்று செயற்பட்ட ஜெயலலிதாவின் அரசு பலத்தை வியந்து பாராட்டும் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன? 

சீமான் ஜெயலலிதாவை ஆதரித்து ஈழத்தாய் என்று கூறிவிட்டார் என்ற ஒரே காரணத்திக்காக வாழ்நாள் முழுவதும் புலிகளை மோசமான பயங்கவாதிகள் என்று திட்டி தீர்தத ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியை  அதுவும் புலிகளை திட்டி திட்டி அவர் பெற்ற வெற்றிகளை வியந்து பாராட்டுகின்றீர்கள். 

புலிகள் 1979/1980 காலப்பகுதியில்  தமிழகம் வந்த போது பயிற்சி முகாங்கள் நடத்த காணி மறைவிடங்களை வழங்கி போராட்டத்திற்கு அத்திவாரம் அமைக்க உதவிய கொளத்தூர் மணியை கூட துரோகி என்று திட்டியவர்கள் தானே ஈழத்து சீமான் ரசிகர்கள்.

 ஈழத்தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப்பெயரை சீமான் ரசிகர் கும்பல் ஏற்படுத்துகிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

திமுக அல்ல திமுகவின் 15 கட்சிக்கூட்டணி. அதுவும் 3 வீத வாக்குகள் வித்தியாசத்தில். 2009 இற்குப் பின் அசுர பலத்தோடு ஜெயலலிதா இருந்தார். தனித்து நின்று இந்தியாவின் 3 பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தினார். ஸ்டானுக்கு அந்தத் தில் எந்தக்காலத்திலும்வராது.

உண்மைதான். ஆனால் அதிமுகவும் கூட கூட்டணியாகத்தான் நின்றது இல்லையா? 

First past the post முறையில் 3% என்பது  சிறிய விடயம் அல்ல.

ஜெவின் 2009 வெற்றி விதிவிலக்கு. அண்மைய தமிழக தேர்தல்களை பாருங்கள் வாக்கு வீத வித்கியாசம் அதிகம் இராது. ஆனால் இரெண்டில் ஒரு கூட்டணி அநேக சீட்டுக்களை அள்ளி இருக்கும்.

ஸ்டாலின் இப்போதான் பாதி பதவிக்காலத்தை கழித்துள்ளார். 

அவசரப்பட்டு அவர் ஜாதகத்தை எதிர்வுகூற நான் விரும்பவில்லை🤣.

பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, island said:

அசுர பலத்தோடு ஜெயலலிதா இருந்தார் என்று புளகாங்கிதத்தோடு சொல்லும் நீங்கள் அதே ஜெயலலிதா புலிகளை படு மோசமாக கேவலமாக,  “கொலைகாரர்கள் பயங்கரவாதிகள்”,  என்று பொதுமேடைகளில் தொடர்ந்து பேசினார். விடுதலைப்புலிகளின் மீதான தடைக்கு முக்கிய காரணியானார். திமுகவும் விடுதலைப்புலிகளும் இணைந்தே ராஜீவை படுகொலை செய்தனர் என்று பகீரங்கமாக பிரச்சாரம் செய்து 1991 ல் அசுர பலத்தை பெற்ற மாபெரும் வெற்றியை பெற்றார்.  என்பதையும் ஒத்துக்கொள்வீர்களா?  

ஈழத்தமிழர்களுக்கு எம். ஜி. ஆர் அரசு கொடுத்த உயர் கலவி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததார். (பின்னர் வந்த திமுக அரசு அதை மீண்டும் அது மீண்டும் வழங்கியது.)

புலிகளின் ஆயுத போராட்ட காலம் முழுவதும் புலிகளையும் ஈழத்தமிழர்களையும் கடுமையாக வெறுத்து புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்று செயற்பட்ட ஜெயலலிதாவின் அரசு பலத்தை வியந்து பாராட்டும் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன? 

சீமான் ஜெயலலிதாவை ஆதரித்து ஈழத்தாய் என்று கூறிவிட்டார் என்ற ஒரே காரணத்திக்காக வாழ்நாள் முழுவதும் புலிகளை மோசமான பயங்கவாதிகள் என்று திட்டி தீர்தத ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியை  அதுவும் புலிகளை திட்டி திட்டி அவர் பெற்ற வெற்றிகளை வியந்து பாராட்டுகின்றீர்கள். 

புலிகள் 1979/1980 காலப்பகுதியில்  தமிழகம் வந்த போது பயிற்சி முகாங்கள் நடத்த காணி மறைவிடங்களை வழங்கி போராட்டத்திற்கு அத்திவாரம் அமைக்க உதவிய கொளத்தூர் மணியை கூட துரோகி என்று திட்டியவர்கள் தானே ஈழத்து சீமான் ரசிகர்கள்.

 ஈழத்தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப்பெயரை சீமான் ரசிகர் கும்பல் ஏற்படுத்துகிறது. 

 

1991 ஜெ யின் புலிகள் பற்றிய நிலைப்பாடு 👇. இது 2009 வரை மாறவில்லலை.

https://www.indiatoday.in/magazine/indiascope/story/19910815-jayalalitha-takes-on-ltte-in-tamil-nadu-814699-1991-08-14

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Kandiah57 said:

அனுபவம்   அதாவது எப்படி எப்படி செயற்பட்டலும். ஒன்றுமே செய்ய முடியாது  எந்த பலனுமில்லை   சீமானுக்கு இன்னமும் அது தெரியவில்லை    நீங்கள் சொல்லி உள்ளீர்கள்  மோடியாலும் முடியாது என்று   பிறகு ஏன். இந்த சீமான்  பட்டி தொட்டி. எல்லாம்   இலங்கை தமிழர்கள் பற்றி பேசுகிறார்   ??  இதனால் என்ன பிரயோஜனம்   ??  தமிழ் ஈழம் கிடைத்து விடுமா  ?? இவர் வளர முயற்சிகள் செய்கிறார். இவரால் மற்றைய அமைப்புக்கள் ஈழத்தமிழர்களை  எதிர்த்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்  என்று ரஞ்சித் சொல்லுகிறார்கள்   ஆகவே சீமானை ஆதரிக்க கூடாது பிரயோஜனம் இல்லை   

நான் சிறு வயதிலேயே பள்ளி பாடங்களில் நேரு மாமா காந்தி தாத்தா என இந்திய வரலாறுகளை  படித்து வளர்ந்து விட்டேன். அதோடு இலங்கை வரலாறும் படித்துதான் வளர்ந்தேன்.
சரி விடயத்திற்கு வருவோம்.

சீமான் தன் தலைவன் பிரபாகரன் என்கிறார்.  
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பேன் என்கிறார்
ஈழத்தமிழர்களுக்கு அவலங்கள் நடந்தால் குரல் கொடுப்பேன் என்கிறார்
நேற்றைய திலீபன் நினைவூர்த்தி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

ஈழத்தமிழினத்திற்காக ஒரு அமைப்பு குரல் கொடுக்கின்றது. உயிரையும் கொடுப்போம் என்கிறது... அதுவும்  தமிழ்நாட்டிலிருந்து....

இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

1991 ஜெ யின் புலிகள் பற்றிய நிலைப்பாடு 👇. இது 2009 வரை மாறவில்லலை.

https://www.indiatoday.in/magazine/indiascope/story/19910815-jayalalitha-takes-on-ltte-in-tamil-nadu-814699-1991-08-14

ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்: இந்த நிலைப்பாடுகள், அகதிகள் நடத்தப் பட்ட விதம் பற்றி சீமான் ஏதாவது பேசியிருக்கிறாரா அல்லது மௌனம் தானா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

நான் சிறு வயதிலேயே பள்ளி பாடங்களில் நேரு மாமா காந்தி தாத்தா என இந்திய வரலாறுகளை  படித்து வளர்ந்து விட்டேன். அதோடு இலங்கை வரலாறும் படித்துதான் வளர்ந்தேன்.
சரி விடயத்திற்கு வருவோம்.

சீமான் தன் தலைவன் பிரபாகரன் என்கிறார்.  
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பேன் என்கிறார்
ஈழத்தமிழர்களுக்கு அவலங்கள் நடந்தால் குரல் கொடுப்பேன் என்கிறார்
நேற்றைய திலீபன் நினைவூர்த்தி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

ஈழத்தமிழினத்திற்காக ஒரு அமைப்பு குரல் கொடுக்கின்றது. உயிரையும் கொடுப்போம் என்கிறது... அதுவும்  தமிழ்நாட்டிலிருந்து....

இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஒரு காலத்தில் இப்படியான செய்திகளுக்கு மதிப்பு அளித்திருக்கிறேன்  ஆனால் இப்போது ஒரு துளியுமில்லை  ஏனெனில் இது செயல்கள் அற்ற சிந்தனை அல்லது எண்ணங்கள் போன்றது’  இவர்களின் குரல்களுக்கு  கண்டனங்களுக்கு இந்தியா அரசே மதிப்புயளிபபது இல்லை   இலங்கை கணக்கில் எடுக்குமா ??   இவர்கள் முதலில் இந்தியா அரசு மட்டததில்.தங்கள் குரலின் மதிப்பை  உயர்ந்த வேண்டும்  இந்தியா அரசில் முக்கிய பதவியில்  அரசின் பங்காளிகள் ஆக இருந்தாலும் இலங்கை விடயத்தில் இவர்களின் சொல் ஏற்றுக்கொள்ளபபடவில்லை   என்பது கடந்த காலங்களில் கண்கூடாக. கண்ட. உண்மையாகும் 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/apr/20/why-is-sonia-silent-on-mks-ltte-remark-42633.html

 

2009 ல்  யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த போது இப்படி பேசிய ஜெயலலிதாவைத்தான்  சீமான ஈழத்தாய் என்று 2011 ல் அவருக்காக பிரசாரம் செய்து வாக்கு கேட்டார்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்: இந்த நிலைப்பாடுகள், அகதிகள் நடத்தப் பட்ட விதம் பற்றி சீமான் ஏதாவது பேசியிருக்கிறாரா அல்லது மௌனம் தானா?

நானறிய மெளனம்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2023 at 05:03, ரஞ்சித் said:

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கொண்டிருக்காத பலர் இன்று சீமானினால் அறிவூட்டப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல விடயங்களே.

கேள்வி என்னவென்றால், தனது அரசியல் மூலம் சீமான் அடைய நினைப்பது என்ன? அல்லது, தமிழ்நாட்டில் சீமானினால் அடையக் கூடிய அதியுச்ச‌ பதவி/அதிகாரம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதற்கப்பால் வேறு இருக்கிறதா?  ஒரு பேச்சிற்கு சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அதிகாரத்தைக் கொண்டு சீமான் எமக்குச் செய்யக் கூடியது என்ன? அது, எம்.ஜி.ஆரோ அல்லது கருநாநிதியோ (1980 களின் ஆரம்பத்தில் அவர் இருந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்)முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் செய்ய முடிந்தவற்றைக் காட்டிலும் எந்தளவிற்கு வேறுபட்டதாக இருக்கும்? புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்த எம்.ஜி.ஆர் தனது பங்காளியாக மத்தியில் ஆட்சிசெய்த இந்திராவையோ அல்லது ரஜீவையோ அழுத்தம்கொடுத்து தமிழருக்கு நீதியான தீர்வொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா? புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்படாத, ராஜீவின் மரணத்திற்கு முற்பட்ட காலத்திலேயே எமக்கு வெளிப்படையாக ஆதரவு தந்த (சீமானைப் போல் இல்லாதுவிட்டாலும், ஓரளவிற்கு) எம்.ஜி.ஆர் இனால் செய்யமுடியவில்லையென்றால், தற்போது புலிகள் மீதான தடையும் ராஜீவைக் கொன்றவர்கள் என்கிற அவப்பெயரும், தமிழினப் படுகொலையில் இந்தியாவின் நேரடிப் பங்கும் தெளிவாகிவிட்ட சூழ்நிலையில் சீமானினால் எமக்கு தரக்கூடிய தீர்வென்ன? மத்திய அரசு மீது சீமான் செலுத்தப்போகும் (முதலமைச்சர் ஆகியபின்னர்) அழுத்தம் எவ்வாறிருக்கும்? என்னைப்பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சீமான் செலுத்தக்கூடிய அரசியல் செல்வாக்கு குறுகியது. தமிழ்நாட்டின் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இன்னமும் நீண்டகாலம் காத்திருக்கவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஆகியபின்னரும் அவர் மத்திக்குக் கொடுக்கப்போகும் அழுத்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அந்த மட்டுப்படுத்தப்பட்ட அழுத்ததினைப் பாவித்து தமிழருக்கான நியாயமான, கெளரவமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 

சீமானை மட்டும் அல்ல எந்த தமிழக அரசியல்வாதிகளையும் நாங்கள் கணக்கெடுக்க தேவையில்லை ...அவர்கள் தங்கட நாட்டு அரசியலை பார்க்கட்டும் ...நாங்கள் எங்கள் அரசியலை மட்டும் கவனிப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சீமானை மட்டும் அல்ல எந்த தமிழக அரசியல்வாதிகளையும் நாங்கள் கணக்கெடுக்க தேவையில்லை ...அவர்கள் தங்கட நாட்டு அரசியலை பார்க்கட்டும் ...நாங்கள் எங்கள் அரசியலை மட்டும் கவனிப்போம் 

வாங்கக்கா, கண நாளுக்கு பிறகு!

தலை, தலயா அடிச்சு சொல்லுறன்.

பாருங்கோ, கேளுங்கோ, சிரிச்சுப் போட்டுப் போங்கோ ரென்சன் இல்லாமல் போகும் எண்டு.

இரவு பகலா, நித்திரையே இல்லாமல் ரென்சனா நிக்கினம்.

நிர்க்கதியாய், நம்பி நிண்டவர்களுக்கு, 2009ல பெரும்ஆப்பு சொருகியவர்கள் மீண்டும் அரவணைக்க வருவார்கள் என்று இலவு காக்கும் கிளிகளுக்கு வாழ்த்து சொல்லி நகர்வோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிருவர் சீமானுக்கு சார்பாக எழுதுவதை வைத்து ஒட்டுமொத்த தமிழினமும் சீமான் சார்பாக நிற்கின்றார்கள்  என்றொரு பிரமையை இந்த திரி உருவாக்கி விட்டது.]

சீமானின் பரப்புரையாளர் ஒருவர் யாழ்களத்தில் கோஷான் சேயிடம் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களிடம் ஒரு பொதுவாக்கெடுப்பு யாரை ஆதரிக்கிறீர்கள் என்று நடத்துங்கோ அப்ப தெரியவரும் சீமானின் ஆதரவு என்று சவால் விட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

இந்த திரியை ரகு திறந்தது ஒரு கருத்து கணிப்பு போன்றது. எனவே உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள் உறவுகளே. எதிர் போர் வேண்டாமே??

விசுகு அண்ணா நான் நினைப்பது இதுதான்

தமிழக அரசியலில் அவர் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம், தலைவரைப் பற்றிப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். முன்பை விட எங்களது போராட்ட வரலாற்றை இன்று வரை மேடைகளில் பேசுகிறார். குரல் கொடுகிறார். அதற்காகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு உதவுவதும் (உ+ம் அவருடைய தொகுதி ஒன்றிற்கு தேர்தல் சமயம் புலம்பெயர்தமிழர்கள் உதவியிருந்தார்கள் என அறியமுடிந்தது}.  என்றெல்லாம் இருந்தாலும் கூட விஜயலட்சுமி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.

- சீமான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி/தலைவர் என்றால் அவர் தன்மீது இந்த மாதிரி ஏற்படும் அவதூறுகளை சரியான முறையில் கையாளவேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான அம்சம். அதை விட்டுவிட்டு தூதுவர்களை அனுப்புவதும், டீல் போடுவதும் சரியான செயலா? 

- ஒரு வளர்ந்துவரும் அரசியல்வாதியான அவருக்கெதிராக இந்த மாதிரி அவதூறு பரப்புவதை அவர் ஏன் முறையாக கையாளவில்லை?. 

- மற்றப்படி இந்த அரசியல்வாதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை காலைத்தொட்டு கும்பிடுவார்கள். இவர்களுடைய அரசியலுக்காக எங்களது வரலாற்றை கொச்சைப்படுத்த விடமுடியாது இல்லையா? 

 -  ஆகவே தமிழ் நாட்டு அரசியலில் நாங்கள் எட்டவே நிற்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடன் அல்ல.
அவ்வளவுதான். 

இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன், யாழ்களத்தில் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அவதானித்தது, வளர்ந்து வரும் தமிழ்நாட்டு அரசியல்வாதி சீமானை குற்றம் நிரூபிக்கப்படாமல் பாலியல் குற்றவாளி எனக் கூறியது தவறு என கள உறவு யாரோ எழுதியிருந்தார், ஆனால் அவருக்கு விளங்கவில்லையா அதே போல விஜயலட்சுமியை மனநோயாளி என கூறுவது தவறு என்று?? 
 

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா நான் நினைப்பது இதுதான்

தமிழக அரசியலில் அவர் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம், தலைவரைப் பற்றிப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். முன்பை விட எங்களது போராட்ட வரலாற்றை இன்று வரை மேடைகளில் பேசுகிறார். குரல் கொடுகிறார். அதற்காகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு உதவுவதும் (உ+ம் அவருடைய தொகுதி ஒன்றிற்கு தேர்தல் சமயம் புலம்பெயர்தமிழர்கள் உதவியிருந்தார்கள் என அறியமுடிந்தது}.  என்றெல்லாம் இருந்தாலும் கூட விஜயலட்சுமி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.

- சீமான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி/தலைவர் என்றால் அவர் தன்மீது இந்த மாதிரி ஏற்படும் அவதூறுகளை சரியான முறையில் கையாளவேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான அம்சம். அதை விட்டுவிட்டு தூதுவர்களை அனுப்புவதும், டீல் போடுவதும் சரியான செயலா? 

- ஒரு வளர்ந்துவரும் அரசியல்வாதியான அவருக்கெதிராக இந்த மாதிரி அவதூறு பரப்புவதை அவர் ஏன் முறையாக கையாளவில்லை?. 

- மற்றப்படி இந்த அரசியல்வாதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை காலைத்தொட்டு கும்பிடுவார்கள். இவர்களுடைய அரசியலுக்காக எங்களது வரலாற்றை கொச்சைப்படுத்த விடமுடியாது இல்லையா? 

 -  ஆகவே தமிழ் நாட்டு அரசியலில் நாங்கள் எட்டவே நிற்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடன் அல்ல.
அவ்வளவுதான். 

இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன், யாழ்களத்தில் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அவதானித்தது, வளர்ந்து வரும் தமிழ்நாட்டு அரசியல்வாதி சீமானை குற்றம் நிரூபிக்கப்படாமல் பாலியல் குற்றவாளி எனக் கூறியது தவறு என கள உறவு யாரோ எழுதியிருந்தார், ஆனால் அவருக்கு விளங்கவில்லையா அதே போல விஜயலட்சுமியை மனநோயாளி என கூறுவது தவறு என்று?? 
 

நன்றி. 

நமக்கு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பிரச்சணைகள் தேவையா என்ன?

அப்படியே போனால், கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்று சாக்கடைக்குப்பை தனிபட்ட வாழ்வுக்குள் நுழைய வேண்டிவரும்.

அரசியலை மட்டும் பார்ப்போம், ரசிப்போம், சிரிப்போம் நகர்வோம் என்கிறேன்.

இல்லை அவர்கள் உதவி எதிர்காலத்தில் தேவை என்று அடம் பிடிக்கிறர்கள்.

பாலியல் பலாத்காரம் செய்தவன் கலியாணம் கட்ட வருவான் என்ற தமிழ் பட மனப்பான்மை.

2009 படுகொலைகள் ரத்தம் காய்ந்து விட்டது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா சிதம்பரநாதன்,  நல்ல கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.  சீமானின்  நான் ஒரு மோசமான ரவுடி என்ற பேச்சை கேட்டால் நீங்கள் பயந்தே போய்விடுவீர்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓரிருவர் சீமானுக்கு சார்பாக எழுதுவதை வைத்து ஒட்டுமொத்த தமிழினமும் சீமான் சார்பாக நிற்கின்றார்கள்  என்றொரு பிரமையை இந்த திரி உருவாக்கி விட்டது.]

சீமானின் பரப்புரையாளர் ஒருவர் யாழ்களத்தில் கோஷான் சேயிடம் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களிடம் ஒரு பொதுவாக்கெடுப்பு யாரை ஆதரிக்கிறீர்கள் என்று நடத்துங்கோ அப்ப தெரியவரும் சீமானின் ஆதரவு என்று சவால் விட்டுள்ளார்.

உங்கள் கருத்தின் எதிர்பதமும் உண்மை.

தளத்தின் கொள்கையால் பலர் வாதாட வராததால், எதிர்பாளர்கள் ஓவர்ரைம் செய்கிறார்கள்.

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிரபா சிதம்பரநாதன்,  நல்ல கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.  சீமானின்  நான் ஒரு மோசமான ரவுடி என்ற பேச்சை கேட்டால் நீங்கள் பயந்தே போய்விடுவீர்கள் ☹️

ஆகா,

ஏன் சொன்னார் என்று விளங்க நிணைக்கவில்லையா?

ஒரு ரவுடி போல மோசமாக அடிதடியில் இருந்த ஒருவரின் தைரியத்தை ஒரு வருடம் ஒற்றுப் பார்த்து வன்னிக்கு அழைத்து, இன்று முப்பத்தொரு லெட்சம் வாக்குகளை பெற்ற தலைவன் ஆக்கியது பிரபாகரன் என்கிறாரே.

என்ன சொல்லப்போகிறீர்கள்?

அங்க சுத்தி, இங்க சுத்தி வராமல், பிரபாகரன் மேல் பழியை போடுங்கள்.

அமைதியாக இருந்த தமிழக திராவிட அரசியலுக்குள், இனவாத விதையை போட்டது பிரபாகரனும், ஈழத்தமிழரும் தான் என்று நேரடியாக சொல்லுங்கள்.

ஏற்றுக்கொண்டு நடையைக் கட்டுறோம்.

அங்கே சிவனே எண்டு படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருததரை கூப்பிட்டு உருவேத்தி, நிதியும் கொடுத்து இப்ப, நீலிக்கண்ணீரா என்றால் பதில் என்ன வைத்திருக்கிறோம்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

அமைதியாக இருந்த தமிழக திராவிட அரசியலுக்குள், இனவாத விதையை போட்டது பிரபாகரனும், ஈழத்தமிழரும் தான் என்று நேரடியாக சொல்லுங்கள்.

பிடுங்கிஎறிய வேண்டிய ஆணி ரவுடி சீமானுக்காக எப்படி எல்லாம் பேசுகிறீர்கள்😟

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிடுங்கிஎறிய வேண்டிய ஆணி ரவுடி சீமானுக்காக எப்படி எல்லாம் பேசுகிறீர்கள்😟

ஆணீயை அடிச்சது ஆரு எண்டால், பிடுங்கிறது பத்தி கதைக்கிறீங்க!

முதல்ல எனது கேள்வி விளங்குதா, விளங்க நிணைப்பவரே?

நீங்களே ஆணீய அடிப்பியள். பிறகு ஆணீ குத்துது, குடையுது பிடுங்கு எண்டு கதை விடுவியளாம்.

என்னய்யா கதை?

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா நான் நினைப்பது இதுதான்

1 - தமிழக அரசியலில் அவர் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம், தலைவரைப் பற்றிப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். முன்பை விட எங்களது போராட்ட வரலாற்றை இன்று வரை மேடைகளில் பேசுகிறார். குரல் கொடுகிறார்

அதற்காகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு உதவுவதும் (உ+ம் அவருடைய தொகுதி ஒன்றிற்கு தேர்தல் சமயம் புலம்பெயர்தமிழர்கள் உதவியிருந்தார்கள் என அறியமுடிந்தது}.  என்றெல்லாம் இருந்தாலும் கூட விஜயலட்சுமி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.

- சீமான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி/தலைவர் என்றால் அவர் தன்மீது இந்த மாதிரி ஏற்படும் அவதூறுகளை சரியான முறையில் கையாளவேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான அம்சம். அதை விட்டுவிட்டு தூதுவர்களை அனுப்புவதும், டீல் போடுவதும் சரியான செயலா? 

- ஒரு வளர்ந்துவரும் அரசியல்வாதியான அவருக்கெதிராக இந்த மாதிரி அவதூறு பரப்புவதை அவர் ஏன் முறையாக கையாளவில்லை?. 

- மற்றப்படி இந்த அரசியல்வாதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை காலைத்தொட்டு கும்பிடுவார்கள். இவர்களுடைய அரசியலுக்காக எங்களது வரலாற்றை கொச்சைப்படுத்த விடமுடியாது இல்லையா? 

 -  ஆகவே தமிழ் நாட்டு அரசியலில் நாங்கள் எட்டவே நிற்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடன் அல்ல.
அவ்வளவுதான். 

இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன், யாழ்களத்தில் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அவதானித்தது, வளர்ந்து வரும் தமிழ்நாட்டு அரசியல்வாதி சீமானை குற்றம் நிரூபிக்கப்படாமல் பாலியல் குற்றவாளி எனக் கூறியது தவறு என கள உறவு யாரோ எழுதியிருந்தார், ஆனால் அவருக்கு விளங்கவில்லையா அதே போல விஜயலட்சுமியை மனநோயாளி என கூறுவது தவறு என்று?? 
 

நன்றி. 

சீமான் விடயத்தில் நான் உங்கள் முதலாவது கருத்துடன் நின்று விடுகின்றேன். சீமான் மட்டும் அல்ல தமிழக அரசியல்வாதிகள் அனைவர் சார்ந்தும் அதே நிலைப்பாடு தான். 

எமக்கு எது தமிழகத்தில் இருந்து தேவையோ அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நூறு வீத தூய்மை என்று எதுவும் இல்லை என்பது எனது அனுபவப் பாடம். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அமைதியாக இருந்த தமிழக திராவிட அரசியலுக்குள், இனவாத விதையை போட்டது பிரபாகரனும், ஈழத்தமிழரும் தான் என்று நேரடியாக சொல்லுங்கள்.

ஏற்றுக்கொண்டு நடையைக் கட்டுறோம்.

அங்கே சிவனே எண்டு படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருததரை கூப்பிட்டு உருவேத்தி, நிதியும் கொடுத்து இப்ப, நீலிக்கண்ணீரா என்றால் பதில் என்ன வைத்திருக்கிறோம்?

பச்சை பொய் 

தலைவர் ஒரு போதும் ஈழத்திலோ, தமிழ் நாட்டிலோ வேறு எங்குமோ போரட்டத்கை அடுத்து நகர்த்தும் தலைமை என யாரையும் கை காட்டவில்லை. 

அவர் எமக்கு சொல்ல வந்ததை எந்த முகவர் வைத்தும் எப்போதும் சொன்னதில்லை. 

அவரின் கடைசி மாவீரர் நாள் உரையை போய் மீள படியுங்கள். அதுதான் அவர் காட்டிய வழி (அதன் படி புலம்பெயர் சமூகம் ஒழுகவில்லை என்பது வேறு).

தளபதி சூசை ஆடியோ உண்மையா  மிமிகிரியா என்பதே தெரியாத நிலை (சீமானின் பல ஆபாச, பொட்டம்மானை தூசணத்தால் பேசிய ஆடியோக்கள் மிமிகிரி என சத்தியம் செய்பவர் நீங்கள்).

அந்த ஆடியோ உண்மையாகவே இருந்தாலும் அப்போ சூசை சொன்னது எதை என்பதில் பெரும் குழப்பம் உண்டு - அந்த ஆடியோவை கேட்டால் புரியும், அது முதலும், தொங்கலும் எடிட் செய்யப்பட்ட ஆடியோ. முழு சம்பாசணையை கேட்காமல் அதில் சூசை சொல்வது எதை என கூறவியலாது.

அடுத்து அந்த காலத்தில் சூசை குடும்பம் வள்ளத்தில் வெளிக்கிட்டு நேவியிடம் மாட்டுப்பட்டனர். ஆகவே இந்த ஆடியோ வெளியிட்ட சூழலை வைத்து -  சீமானின் அரசியல் தலைவரால் அனுமதிக்க, உத்தரவிட பட்ட ஒன்று என ஏற்க முடியாது.

இதை பல தடவை யாழில் நானும் பலரும் எழுதி விட்டோம்.

ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பொய்யை காவி வருகிறீர்கள்.

இந்த பொய்யை பால்குடியாக டென்மார்க்குக்கு ஏறிய, அல்லது 2000 பிந்தி பிறந்த அப்பாவிகள் நம்ப கூடும்.

போராட்ட காலத்தில் வாழ்ந்தோரிடம் இந்த பருப்பு வேகாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பச்சை பொய் 

தலைவர் ஒரு போதும் ஈழத்திலோ, தமிழ் நாட்டிலோ வேறு எங்குமோ போரட்டத்கை அடுத்து நகர்த்தும் தலைமை என யாரையும் கை காட்டவில்லை. 

அவர் எமக்கு சொல்ல வந்ததை எந்த முகவர் வைத்தும் எப்போதும் சொன்னதில்லை. 

அவரின் கடைசி மாவீரர் நாள் உரையை போய் மீள படியுங்கள். அதுதான் அவர் காட்டிய வழி (அதன் படி புலம்பெயர் சமூகம் ஒழுகவில்லை என்பது வேறு).

தளபதி சூசை ஆடியோ உண்மையா  மிமிகிரியா என்பதே தெரியாத நிலை (சீமானின் பல ஆபாச, பொட்டம்மானை தூசணத்தால் பேசிய ஆடியோக்கள் மிமிகிரி என சத்தியம் செய்பவர் நீங்கள்).

அந்த ஆடியோ உண்மையாகவே இருந்தாலும் அப்போ சூசை சொன்னது எதை என்பதில் பெரும் குழப்பம் உண்டு - அந்த ஆடியோவை கேட்டால் புரியும், அது முதலும், தொங்கலும் எடிட் செய்யப்பட்ட ஆடியோ. முழு சம்பாசணையை கேட்காமல் அதில் சூசை சொல்வது எதை என கூறவியலாது.

அடுத்து அந்த காலத்தில் சூசை குடும்பம் வள்ளத்தில் வெளிக்கிட்டு நேவியிடம் மாட்டுப்பட்டனர். ஆகவே இந்த ஆடியோ வெளியிட்ட சூழலை வைத்து -  சீமானின் அரசியல் தலைவரால் அனுமதிக்க, உத்தரவிட பட்ட ஒன்று என ஏற்க முடியாது.

இதை பல தடவை யாழில் நானும் பலரும் எழுதி விட்டோம்.

ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பொய்யை காவி வருகிறீர்கள்.

இந்த பொய்யை பால்குடியாக டென்மார்க்குக்கு ஏறிய, அல்லது 2000 பிந்தி பிறந்த அப்பாவிகள் நம்ப கூடும்.

போராட்ட காலத்தில் வாழ்ந்தோரிடம் இந்த பருப்பு வேகாது.

 

இதை போய் புயல் காத்தீல பொரி சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களிடம் சொல்லுங்கள், நம்புவார்கள்.

அந்தாள் ஊர், ஊரூரா பிரபாகரன் படத்தோட போய் முப்பத்தொரு இலட்சம் வாங்கினது என்ன கணக்கு?

சரி, உங்களோட இண்டைக்கும் மல்லுக்கட்ட நேரம் இல்லை!

சந்திப்பம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அந்தாள் ஊர், ஊரூரா பிரபாகரன் படத்தோட போய் முப்பத்தொரு இலட்சம் வாங்கினது என்ன கணக்கு?

என்ன கணக்கு? தலைவர் இல்லை என்றான பின் - இதை வைத்து தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப கூடாது, அந்த அழிவே இன்னொரு உயிர்புக்கு பிறப்பாக அமைய கூடாது என்பதில் ரோ கவனமாக இருந்தது.

அடுத்த எழுச்சிக்கு ஒரு உண்மயான தலைமை வரக்கூடாது என்பதால் ஒரு போலியை தலைவனாக்கி அதை சுதந்திரமாக தலைவர் படத்தை காவவும் அனுமதித்தது.

தலைவர் - explosion 

சீமான் - (raw) controlled explosion 

பிகு

நேரம் இல்லாவிட்டால் பொய் பரப்புரையை நிப்பாட்டுங்கள். அனைவரின் நேரமும் மீதமாகும்.

சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

என்ன கணக்கு? தலைவர் இல்லை என்றான பின் - இதை வைத்து தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப கூடாது, அந்த அழிவே இன்னொரு உயிர்புக்கு பிறப்பாக அமைய கூடாது என்பதில் ரோ கவனமாக இருந்தது.

அடுத்த எழுச்சிக்கு ஒரு உண்மயான தலைமை வரக்கூடாது என்பதால் ஒரு போலியை தலைவனாக்கி அதை சுதந்திரமாக தலைவர் படத்தை காவவும் அனுமதித்தது.

தலைவர் - explosion 

சீமான் - (raw) controlled explosion 

பிகு

நேரம் இல்லாவிட்டால் பொய் பரப்புரையை நிப்பாட்டுங்கள். அனைவரின் நேரமும் மீதமாகும்.

சந்திப்பம்.

றோ -  சிரிப்பு போலீஸ்!!

ஜோக் அடிக்காம போங்க சாரே!!

🤣🥳😂

  • கருத்துக்கள உறவுகள்

நாம பிரபாகரனை விட்டுக்கொடுக்க ரெடி. ஆனால் சீமானை விட்டு கொடுக்க மாட்டோம் என்று ஒரு கும்பல் அலைவது தெரிகிறது. 😂😂

வீழ்வது தமிழினம் என்றாலும் வாழ்வது சீமானாக இருக்க வேண்டுமாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.