Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

காப்பிலி என்ற சொல் நடைமுறையில் வசவுதான் என எப்படி தீர்மானித்தீர்கள் என்பதே என் கேள்வி.

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

😂தவறேயில்லை! இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்ல

நிழலி

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு.  காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள்,

goshan_che

நானறிந்த வரை: காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு. ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இர

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த வாதம் சரியே.

ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

எனக்குப் புரியவில்லை நீங்கள் எழுதி இருப்பது? எனக்கு வேலைக் களை😀. யாருக்கு எழுதியது என்று சொல்லுங்கள் 

6 minutes ago, island said:

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

நான் இதுவரை இலங்கையில் இப்படிக் கூறுவதாகக் கேள்விப்பட்டதில்லை. எந்த ஊரில் ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது??? எங்கள் ஊரில் கோழிகளுக்கே சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 19:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

இதை 

“விழ இருந்த என்னை ஒரு கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான்.” 

என்று எழுதியிருக்கலாம்.

காப்பிலி என்பது கறுப்பர்களை இழிவாக அருவருப்புடன் குறிக்கவே தமிழர்கள் பாவிக்கின்றவர்கள். கறுப்பர்களுடன் அடிமட்ட வேலை பார்த்த எனக்கு அவர்களுடன் அன்னியோன்யமாகப் பழக நன்றாகவே தெரியும். ஆனால் பல தமிழர்கள் முதல் பார்வையிலேயே கறுப்பர்களை சந்தேகத்துடனும், பயத்துடனும் பார்ப்பார்கள். அந்த அருவருப்புப் பார்வை போலவே காப்பிலி என்ற வார்த்தைப் பிரயோகமும்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் நீக்ரோ என்று கறுப்பர்களைச் சுட்டியவர்கள் இப்போது பிளாக், ஆபிரிக்க அமெரிக்கன் என்று சொல்லுவது போல தமிழர்களும் காப்பிரி, காப்பிலி என்று சுட்டுவதைக் கைவிட்டு கறுப்பர் என்று நாகரீகமாக வெளியே அழைக்கலாம்; எழுதலாம் (உள்ளே காப்பிலி என்றே நினைக்கலாம்!)

 

ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

“யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

மோகன் அண்ணை, இதனை கவனித்து, உங்களை மட்டு ஆக்க வேண்டும்.

சோ இராமசாமி அரசியலுக்கு வரக்கூடாது…

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக கூடாது….

ப்ளு சட்டை மாறன் படம் எடுக்க கூடாது….

கோஷான் மட்டு ஆக கூடாது.

குதிரை செய்யும் வேலையை நாய் பார்க்க கூடாது.

நாய் செய்யும் வேலையை குதிரை பார்க்க கூடாது.

வட்டா.

 

15 minutes ago, island said:

காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

காத்திரமான உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்த ஊரில் ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது???

எனக்கு என் தந்தையாரும், ஏன் தாயாரும் சொல்லியிருக்கின்றார்கள்!  நல்லெண்ணை வைக்காத தலையைப் பார்த்து “கழிசடைக் காப்பிலி மாதிரி பரட்டைத்தலையை வைச்சிருக்காதை” என்று வாழ்த்தப்பட்டிருக்கின்றேன்😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

“யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

 

 

காப்பிரி நாடு அவசொல்லானால், யவனரின் யவனநாடு, அவச் சொல்லா, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்வது தவறாகாது.

தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்துபவரை மேலும் மேலும் கஸ்டப்படுத்தாமல் விடுவதுதான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சோ இராமசாமி அரசியலுக்கு வரக்கூடாது…

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக கூடாது….

ப்ளு சட்டை மாறன் படம் எடுக்க கூடாது….

கோஷான் மட்டு ஆக கூடாது.

குதிரை செய்யும் வேலையை நாய் பார்க்க கூடாது.

நாய் செய்யும் வேலையை குதிரை பார்க்க கூடாது.

வட்டா.

சோ இராமசாமி; ஜெயின் பிரதம ராஜகுரு ஆக அரசியலில் கோலோச்சினார்.

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக இருந்தாரே

ப்ளு சட்டை மாறன் படம் எடுத்தாரே

என்ன தல, எல்லா உதாரணமும், டமால், பணால் வகையில இருக்குதே.

அதுசரி, அக்கா, கணநாளுக்கு பிறகு ஆசையா எழுத வந்திருக்கிறா என்றால், political correctness அதிகமாக இருக்குதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

காப்பிரி நாடு அவசொல்லானால், யவனரின் யவனநாடு, அவச் சொல்லா, இல்லையா?

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

காத்திரமான உதாரணம்.

எனது பெரியம்மா, தலை மயிர் வெட்டாமல் இரண்டு மூன்று மாதம் போனால், இதென்னடா இது, காப்பிலி, கடப்புலி மாதிரி மோனே என்று சொல்வார். ஆனால் அவருக்கு அர்த்தம் தெரிந்து சொல்வதில்லை. இன்று கேட்டாலும் தெரியாது. அது காலகாலமாக தொடர்ந்து வரும் சொல்வடை போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எனக்கு என் தந்தையாரும், ஏன் தாயாரும் சொல்லியிருக்கின்றார்கள்!  நல்லெண்ணை வைக்காத தலையைப் பார்த்து “கழிசடைக் காப்பிலி மாதிரி பரட்டைத்தலையை வைச்சிருக்காதை” என்று வாழ்த்தப்பட்டிருக்கின்றேன்😝

எனது அம்மம்மா, அப்பம்மாவும் சொல்லியுள்ளார்கள். ஐலண்ட் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

கழிசடை, காப்பிலி, கய**லி போல் இராதே என்பார்கள். மூன்றாம் சொல்லின் அர்த்தம் தெரியவில்லை. சாதிய வசவாய் இருக்கலாம் என நினைக்கிறேன்

8 minutes ago, Nathamuni said:

சோ இராமசாமி; ஜெயின் பிரதம ராஜகுரு ஆக அரசியலில் கோலோச்சினார்.

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

8 minutes ago, Nathamuni said:

சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக இருந்தாரே

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

 

9 minutes ago, Nathamuni said:

ப்ளு சட்டை மாறன் படம் எடுத்தாரே

செய்திருக்க கூடாது. பெயரை கெடுத்து கொண்டார்.

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

10 minutes ago, Nathamuni said:

என்ன தல, எல்லா உதாரணமும், டமால், பணால் வகையில இருக்குதே

வாசிப்பவரின் புரிதல் அப்படி தல🤣

8 minutes ago, Nathamuni said:

எனது பெரியம்மா, தலை மயிர் வெட்டாமல் இரண்டு மூன்று மாதம் போனால், இதென்னடா இது, காப்பிலி, கடப்புலி மாதிரி மோனே என்று சொல்வார். ஆனால் அவருக்கு அர்த்தம் தெரிந்து சொல்வதில்லை. இன்று கேட்டாலும் தெரியாது. அது காலகாலமாக தொடர்ந்து வரும் சொல்வடை போலுள்ளது.

நான் தவிர்த்த சொல்லை நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

தமிழர் வெண் தோலை பிசாசின் அடையாளமாக கருதினர் எனவும், பிள்ளைகள் கறுப்பாக வேண்டும் என எண்ணை பூசி வெயில் கிடத்தினர் எனவும் இபின் பதூதா தனது குறிப்பில் எழுதி உள்ளாராம்.

ஒரு காலத்தில் வெள்ளை இழிவு. பின்னர் கறுப்பு இழிவு

எல்லாமுமே கால ஓட்டத்தில் மாறுவனவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

யவனர் பொன்னிறக் கேசமும், பால்நுரை வெண்மைத் தோலுமாக இருப்பதால் அவச்சொல்லாகாது. அடிமையாக, இழிவான தொழில் என்று கருதுபவற்றை செய்யும் ஆபிரிக்கனை காப்பிரி என்று விளிக்கும்போது அவன் செய்யும் இழிதொழிலே மனதில் துருத்துவதால் காப்பிரி(லி) அவச்சொல்லேயாம்!

வெள்ளைத்தோல் என்றால், உயர்வு, கறுப்பு தோல் என்றால் தாழ்வு என்பது, எமது பார்வை என்றே சொல்வேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இங்கு யாரும் இன்னும் பாலர் வகுப்பில் இல்லை என்று நினைக்கிறேன்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

தமிழர் வெண் தோலை பிசாசின் அடையாளமாக கருதினர் எனவும், பிள்ளைகள் கறுப்பாக வேண்டும் என எண்ணை பூசி வெயில் கிடத்தினர் எனவும் இபின் பதூதா தனது குறிப்பில் எழுதி உள்ளாராம்.

ஒரு காலத்தில் வெள்ளை இழிவு. பின்னர் கறுப்பு இழிவு

எல்லாமுமே கால ஓட்டத்தில் மாறுவனவே. 

சீனத்து வெடிமருந்தை, பாவித்து பீரங்கி போன்ற போர்கருவிகளையும், துப்பாக்கிகளையும், கண்டு பிடித்த பின்னர், அதுவரை இருந்த துடுப்புகளால் இயக்கப்பட்ட சிறு படகுகளை, பெரியதாக்கி, புதிய நெடும்தூரம் செல்லும் பாய்கப்பல் பாவனைக்கு வந்த பின்னர், 1444AD அளவில் போர்த்துகேயர்கள், மேற்கு ஆப்பிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தனர். அப்படியே ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்கும், 1498ல் இந்திய துணைக்கண்டத்துக்கும் போர்த்துகேயர்கள் வந்த பின்னர், தம்மை வெல்ல முடியாத ஒரு பிம்பமாக காட்டியபோதே, நமது பகுதி உள்ளிட்ட கறுத்ததோல் காரர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டனர்.

இது பிரிட்டிஷ் காலத்தில் அதிகமாக இருந்தது.

அதேபோல, வெள்ளைத்தோல் ஆரியர்களும் , தென் இந்தியரை, முக்கியமாக தமிழரை ஏமாத்த, இமயமலையில் இருந்து இறங்கி வரும், இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று கதை விட்டு, கோவில்களை ஆக்கிரமித்துக்கொணடார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சீனத்து வெடிமருந்தை, பாவித்து பீரங்கி போன்ற போர்கருவிகளையும், துப்பாக்கிகளையும், கண்டு பிடித்த பின்னர், அதுவரை இருந்த துடுப்புகளால் இயக்கப்பட்ட சிறு படகுகளை, பெரியதாக்கி, புதிய நெடும்தூரம் செல்லும் பாய்கப்பல் பாவனைக்கு வந்த பின்னர், 1444AD அளவில் போர்த்துகேயர்கள், மேற்கு ஆப்பிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தனர். அப்படியே ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்கும், 1498ல் இந்திய துணைக்கண்டத்துக்கும் போர்த்துகேயர்கள் வந்த பின்னர், தம்மை வெல்ல முடியாத ஒரு பிம்பமாக காட்டியபோதே, நமது பகுதி உள்ளிட்ட கறுத்ததோல் காரர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டனர்.

இது பிரிட்டிஷ் காலத்தில் அதிகமாக இருந்தது.

அதேபோல, வெள்ளைத்தோல் ஆரியர்களும் , தென் இந்தியரை, முக்கியமாக தமிழரை ஏமாத்த, இமயமலையில் இருந்து இறங்கி வரும், இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று கதை விட்டு, கோவில்களை ஆக்கிரமித்துக்கொணடார்கள்.

ஐரோப்பியரை விட வெள்ளை சிறந்தது என கட்டமைத்தவர்கள் ஆரியர்களே/பிராமணியர்களே என நினைக்கிறேன்.

ஐரோப்பா “இருண்ட காலத்தில்” இருந்த போது, யானைகளை கப்பல் ஏற்றி கடாரம் வரை போய், ஶ்ரீ விஜய சாம்ராஜ்யத்தையே வீழ்த்திய நாம், அப்போதே எமது மன்னர்களின் அரண்மனையில் பிராமணர்களை முதல் நிலையில் வைத்திருந்துள்ளோம்.

எப்படி சாதியை புகுத்தினரோ அப்படி “கறுப்புன்னா கலீஜு” என்ற மன நிலையையும் பரப்பி விட்டிருப்பர்.

அதை பின்னர் வந்த ஐரோப்பியர் சிக்கென பிடித்திருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

நான் தவிர்த்த சொல்லை நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

அர்த்தம் யாருக்காவது தெரியுமா?

 காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன் ...

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

 

அதுவல்ல என்  பதிவின் நோக்கம். நான் எழுதியது சரியா ??? தவறா /// என்பதுதான்


நீங்கள் கதை எழுதியது தமிழ் மக்களுக்கு தெரிவிக்க , உங்களை விழாது   தடுத்தவனை விபரிக்க "காப்பிலி "என எழுதினீர்கள். இதை கதையின் சுவாரசியம் கருதி நம்மின மக்களுக்கு இலகுவில் விளக்கம் தர இவ்வாறு  எழுதியது சரியே ...குற்றம் காண நினைப்பவர்கள் கதையை ரசிக்காமல்  குறை காண்பார்கள்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 20:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காப்பிலி என்னும் சொல்லை நான் அதுவும் நேர்மறையான "காப்பிலி என்னை விழாது காப்பாற்றினான்" என்று குறிப்பிட்டது தவறல்ல என்கிறேன். அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

நீங்களே அந்தச் சொல் தவறு என்று சொல்கிறீர்கள். அந்தச் சொல் ஒருவருக்கு முன்னாலோ பின்னாலோ சொன்னாலும் தவறுதான்.  தவிர்த்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சாதியும் இதுவும் ஒன்றல்ல என்று கூறியும் நீங்கள் வாசிக்காது கருத்து வைக்கிறீர்கள்.

நான் சொல்ல வந்தது இழி சொற்கள் எப்படி வரும் என்பதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2023 at 05:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

 

On 5/10/2023 at 18:59, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

உண்மையில் இந்த இரண்டு பந்திகளிலும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் முகத்துக்கு நேரே கூறுவது தவறு என்று பின்பு ஏன் அதனை கதை சுவாரசியமாகப் போக வேண்டும் என்பதற்காக அப்படியான சொற்களை பயன்படுத்தவேண்டும்? 

அப்படியான சொற்கள் தவறு எனத் தெரிந்தால் முகத்துக்கு நேர கூறினாலும் சரி அவர்களைப் போகவிட்டு பின்னால் கூறினாலும் சரி, கதையில் எழுதினாலும் சரி, அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறுதானே??

உங்களது மகள்கள் இப்படிக்கூறுவதை ஏற்பார்களா? நான் நினைக்கவில்லை அவர்கள் இப்படியான அடையாளச் சொற்களை சரியான நினைப்பார்கள் என.. 

காப்பிலி என்றால் தலைமயிரை ஒழுங்காக சீவாமல் அலங்கோலமாக உள்ளவர்களை கூறும் சொல் .. இன்னமும் ஊரில உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவது காபிரீன்(நம்பிக்கையற்றவன்) விரிவுதான் காப்பிலி என்றால் நேரடியான வசவு சொல் இல்லாவிட்டாலும் விரும்பத்தக்க பண்பைக்கொண்ட சொல் இல்லை. 

இப்படி அந்த பிரச்சனைக்குரியது என்றால் தவிர்த்திருக்கலாம். 

இல்லை நீங்கள் தவறாக எதுவும்   செய்யவில்லை என்றால் விமர்சனங்களை கடந்து போகவேண்டியதுதான்..

Edited by P.S.பிரபா
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்

நன்றி.

இதில் கடைசி சொல்லு தூஷணம் என நினைக்கிறேன்.

பொதுப்படையாக அன்றி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன என அறிய ஆவல்.

ஓடுகாலி என்றால் வீட்டில் தங்காதவர்கள். விடுகாலி?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்
 
வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்
 
இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.
 
உதாரணம்
 
1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?
 
நன்றி  தமிழாயம்
 
தினம் ஒரு ஈழத்தமிழ் சொல் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேறு ஒருவருடன் இதுபற்றிக் கதைத்தபோது என்னைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினார். எனக்கே என் எழுத்தில் சந்தேகம் வந்துவிட இருக்கவே இருக்கு யாழ் இணையம் என்று இங்கக்கு வந்து எழுதினேன்.  ஏனெனில் முகமூடியில் இருப்பவர்கள் துணிவாகத் தம் கருத்தைக் கூறுவார்கள் என எண்ணினேன். ஆனாலும் பலரிடமிருந்து சரியான விடை கிடைக்கவில்லை.

நான் எழுதியது ஒரு சம்பவம். அதில் அவனை நிறுத்திவைத்து எந்த நாடு என்றா கேட்க முடியும் 😂

உங்கள் ஏனைய துலங்கல்களைப் பார்க்கும் போது நான் ஊகிப்பது, நீங்கள் தவறு என்று ஏற்கனவே புரிந்து கொண்ட ஒரு விடயத்தை இங்கே இருக்கும் முகம் தெரியாத பதிவர்கள் யாராவது "தவறில்லை" என்று சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதனால் தான் யாயினி, நிழலி உட்பட பலர் இது பிழை என்ற தெளிவாக எழுதிய பின்னரும் "எனக்குப் பதில் இன்னும் கிடைக்கவில்லை!" என்று முறைப்படுகிறீர்கள் போல தெரிகிறது! இது self-fulfilling  prophecy, இதில் நேரம் மெனக்கெட்டு எழுதுவது வீண் வேலை என்று யாயினி சொன்னது சரி தான்😂!

கடைசியாக: நீங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதே சமநேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்திருக்கிறீர்களென இன்று தான் தெரிகிறது😎. இதனால் தான், தோல் நிறம், எங்கையிருந்து அந்த மனிதர் வந்திருப்பார் என்ற மீள்பார்வையே இல்லாமல் உடனே "காப்பிலி" என்று எழுதி விட்டீர்கள்! ஆற அமர இருந்து அவர் எந்தக் கண்டத்திலிருந்து வந்திருப்பார் என்று யோசிக்க முடிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்! சரியா நான் சொல்வது? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்
 
வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்
 
இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.
 
உதாரணம்
 
1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?
 
நன்றி  தமிழாயம்
 
தினம் ஒரு ஈழத்தமிழ் சொல் 

மிக்க நன்றி உங்களுக்கும் தமிழாயத்துக்கும்🙏

1 hour ago, Justin said:

கடைசியாக: நீங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதே சமநேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்திருக்கிறீர்களென இன்று தான் தெரிகிறது😎. இதனால் தான், தோல் நிறம், எங்கையிருந்து அந்த மனிதர் வந்திருப்பார் என்ற மீள்பார்வையே இல்லாமல் உடனே "காப்பிலி" என்று எழுதி விட்டீர்கள்! ஆற அமர இருந்து அவர் எந்தக் கண்டத்திலிருந்து வந்திருப்பார் என்று யோசிக்க முடிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்! சரியா நான் சொல்வது? 

🤣

ஏதோ அன்ரி இந்த திரியை திறந்ததால் - ஒரு அரிய தமிழ் சொல்லை தூசணம் என நினைத்து கொண்டிருந்த என் அறியாமை நீங்கியது. 

அதேபோல் கட(ய)புலி என்பது சாதிய வசவு இல்லை என்பதும்,

விடுகாலி = கட்டுபாடற்றவன் என்பதும் தெளிவாகியது.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.