Jump to content

சுமனரத்தின தேரரின் "தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்" என்ற கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன்  வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணிக்கின்ற வேளையில் இவருடைய மிக மோசமான இனவாத கருத்துக்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் போதிக்கவேண்டிய மதத் தலைவர் ஒருவர்  நாட்டையும் மக்களையும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.  இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நாட்டில் இவரை போன்ற மதத் தலைவர்களினாலேயே இன்று இனவாத, மதவாத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. 

தமிழ் மக்கள் இன அழிப்புக்குட்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள நிலையில், அதற்கான சர்வதேச விசாரணை ஒன்றை கோரியுள்ள நிலையில் தேரரின் இந்தக் கருத்தினையும் எமது தரப்பு சாட்சியாக எடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சுமனரத்தின தேரரின் கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உடைக்கு பொருத்தமான கருத்ததைதான் கூறி  இருக்கிறார். அது அவரது தவறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   27 OCT, 2023 | 10:35 AM

image

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன். எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

இதுபற்றி தனது முகநூல், டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,   

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில்,  மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.  அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?  

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார். இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்? 

https://www.virakesari.lk/article/167847

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்ற அம்பிட்டிய தேரரின் கருத்து குறித்து சுமந்திரன்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

 

வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும் அவரது கருத்து தண்டனைக்குரிய குற்றம் என்பதால் ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும், தென்பகுதியில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1355951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட கொணொலிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமனரத்தின தேரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவருக்கு முதலில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய வேண்டும். மனநோயாளி போல் தமிழர்களை வெட்டுவேன் என பகிரங்கமாகக் கூறுகின்றார்.

விசேடமாகப் பௌத்தர்கள் புனித போயா தினத்தினை அனுஷ்டிக்கும் இந்த வேளையில் அவர் அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக அவர் தெரிவிக்கும் அந்த மயான பூமி தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட துறையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறையிட்டு இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

நடைமுறையிலுள்ள ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் உடனடியாக அந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் குறித்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே சில மதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.

அவ்வாறு அம்பிட்டிய சுமனரத்தின தேரரை கைது செய்யாவிட்டால் அவர் மீண்டும் மீண்டும் அவ்வாறு தான் நடந்து கொள்வார்.

இதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1355918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, valavan said:

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

இவரை பற்றி தமிழ் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

என்னவாயிருந்தாலும், நம்ம கீரோ, எங்கண்ட தூசணப்பிக்கர் தான்.

என்ன, இண்டைக்கு காத்தாலவே, மெண்டிஸ் ஸ்பெசல் வாங்கனுப்பின ஆள் வர லேட்டாயிட்டுதெண்டு, ஆத்திரம் அவசரத்துக்கு வைச்சிருந்த கசிப்பில வாயை நணைச்சுப் போட்டார். கழுதை டபக்கெண்டு ஏத்தி விட்டுது! 🤣😂

அதுக் காண்டி, வழக்கு, கைது.... ரூ மச்.... அப்புறம் தூசண ரெயினிங் ஆர் தருவினமாம்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இவ்வளவு சட்டத்தின் நுணுக்கம்  தெரிந்தவர் அதுவும் ஒரு சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர், இவரே தேரர்மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் செல்லலாமே அது , ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தமது மக்கள்மீது கக்கப்படும் இனவாதம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார் என்ற சர்வதேச கவனிப்பை பெறுமே?

மாட்டார் ஏனென்றால் அரச அதிரடிப்படை பாதுகாப்பில் வலம்வந்த மனிதர் அரச இனத்திற்கு எதிராக எப்படிகடுமையாக போவது?

தமிழருக்கு சார்பா பேசினமாதிரியும் இருக்கவேண்டும், சிங்களவர்களுக்கும் நோககூடாது.

ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் கொள்கை .

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

 

2 hours ago, தமிழ் சிறி said:

அதுதானே.... ஆபிரஹாம் சுமந்திரன் தமிழர்களின் காதில் பூ சுத்துகிறார். animiertes-gefuehl-smilies-bild-0050.gif 😂

 

1 hour ago, nunavilan said:

இவரை பற்றி தமிழ் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம் சுமந்திரன்

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவரது இந்த கருத்து 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் 56 ஆம் பிரிவுன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டனைக்குரிய குற்றம் என்றால் வழக்கைப் போடவேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

 

22 minutes ago, ஈழப்பிரியன் said:

தண்டனைக்குரிய குற்றம் என்றால் வழக்கைப் போடவேண்டியது தானே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

 

 

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

ஆபிரஹாம் மற்றும் யூதர் எல்லோருமே லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் பரம்பரை (தொப்பிள்கொடி உறவுகள்)தான். இதை கிருபன்  ஏற்கெனவே  இங்கே தெரிவித்திருக்கிறார்.  ஆபிரஹாம் சுமந்திரன் செந்தமிழனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

சுமந்திரன்தான் சுயநலமாக செயட்படுகின்றார். தமிழ்மக்களுக்காக போராடும் ஜனாதிபதி சடடதரணி தவராசாவாவது வழக்கு போடலாமே? சுமந்திரன்தான் கூறினார் என்றால் அவர்தான் வழக்கு போடணும் என்று அவசியம் இல்லை.  

ஒரு பேச்சுக்கு சொன்னேன். சுமந்திரனின் ஆதரவாளர் என்று சொல்ல போகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

முடியாது என்று தான் ஊகிக்கிறேன். 1. காவல் துறையிடம் முறையிட வேண்டும், 2. காவல் துறை விசாரிக்க வேண்டும், 3. பின்னர் சட்டமா அதிபர் அரசின் சார்பில் வழக்குப் போட வேண்டுமென நினைக்கிறேன்.

சரியா?

பி.கு: இதையெல்லாம் சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் ஏன் கேட்கிறீர்கள் மெனக்கெட்டு😂?

உண்மையில் இலங்கை நிலவரம் எனக்கு தெரியாது. இப்படி ஒரு வழக்கை தனியார் போட இலங்கை சட்டம் அனுமதிக்கிறதா என தெரியவில்லை.

ஆனால் பொதுவாக கிரிமினல் வழக்கு போடும் வேலை முழுக்க முழுக்க பொலிஸ், அரச தரப்பு வக்கீல் குழாம் எடுக்கும் நடவடிக்கை.

இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட, தனியார் கிரிமினல் வழக்கு போடுவது என்பது கிட்டதட்ட இல்லை என்ற நிலைதான்.

அதேபோல் தனியார் கிரிமினல் வழக்கு போட்டு, ஒருவரை குற்றவாளி என நிறுவுவதும் மிகவும் கடினமான ஒரு விடயம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் பொலிஸ் கொண்டுள்ள நடுநிலைமையோ, வல்லமையோ, நிபுணத்துவமோ, தரவு சேகரிக்கும் இயலுமையோ, குற்றாவாளிகளை பேட்டி எடுத்தல், சாட்சியங்களை நெறிப்படுத்தல் போன்ற மேலும் பல சிறப்பு தேர்ச்சிகளோ தனியார் குடிமக்களிடம், வக்கீல்களிடம் இல்லை.

சுமந்திரன் ஒரு வக்கீல். பொலிஸ் திணைக்களம் அல்ல.

ஆகவே இப்படி தனியாராக, ஒரு கிரிமினல் வழக்கை போட்டு வெல்லுவது (அதற்கு இலங்கை சட்டம் பெயரளவில் இடம் கொடுத்தாலும்) மிக, மிக முடியாத காரியம்.

ஒருவர் ஒரு கிரிமினல் குற்றதை செய்தார் என்பதை வழக்கு போடுபவர், சந்தேகத்துக்கு அப்பால் நிறுவ வேண்டும்.  உதாரணமாக இந்த வழக்கில் சுமணே இந்த வீடியோ பொய், deepfake என சொல்கிறார் என வைப்போம். இதை தக்க சான்றோடு அப்படி டீப்பேக் இல்லை என நிறுவ வேண்டும். இதை ஒரு அரச பகுப்பாய்வு நிறுவனம் செய்யும் (இலங்கையில் அரசுக்கே இந்த வல்லமை இருப்பது சந்தேகம்). சுமந்திரனால் முடியுமா?

அப்படி சுமந்திரன் ஒரு தனியார் அமைப்பின் மூலம் இந்த வீடியோவை பகுப்பாய்வு செய்தாலும், அந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் - இது புலம்பெயர் தமிழரின் சதி என சுமணே சொன்னால், 100% சிங்களவர் உள்ள யூரி சபை யாருக்கு சார்பாக முடிவு எடுக்கும்? 

தவிரவும் double jeopardy என்ற ஒரு சட்ட நடைமுறை உண்டு (இது இங்கிலாந்தில் இப்போ கொஞ்சம் மறுமலர்சிக்கு உள்ளாகியுள்ளது, இலங்கை நிலவரம் தெரியவில்லை). இதன் படி ஒரு குற்றத்தை வழக்கு போட்டு அதை நீதிமன்று தள்ளுபடி செய்துவிட்டால் அதே குற்றத்தை மீளச் சுமத்தி வழக்கு போட முடியாது. இது தனியார் குற்றவியல் வழக்கு தொடுதலை high risk ஆக்குகிறது.

இப்படியான நிலையில் உண்மையில் இப்படி தனியார் வழக்கு போட இலங்கை சட்டம் அனுமதித்தாலும், அப்படி செய்வது தவறான முடிவாகவே இருக்கும்.

 

👆🏼 @valavan @nunavilan @ஈழப்பிரியன் @தமிழ் சிறி

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 07:40, goshan_che said:

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை தனி நபர்கள் தொடரலாமா? (private criminal prosecution) ?

நான் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவனல்ல, இருந்தாலும் தனிமனிதனால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க சட்டமா அதிபரோ அல்லது பொலிஸ்மா அதிபரின் அனுமதி தேவையா என்பதை நானறியேன்.

அப்படியென்றால் இளைஞன் கடத்தல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காமீது தொடுக்கப்பட்ட வழக்கும், காணாமல்போன ஊடகவியலாளர் தொடர்பாக அவர் மனைவி ஞானசாரதேரர்மீது தொடுக்கப்பட்ட வழக்கும் எந்த பிரிவுக்குள் அடங்கும் என விபரம் அறிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் பிறருக்கு அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, valavan said:

நான் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவனல்ல, இருந்தாலும் தனிமனிதனால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க சட்டமா அதிபரோ அல்லது பொலிஸ்மா அதிபரின் அனுமதி தேவையா என்பதை நானறியேன்.

அப்படியென்றால் இளைஞன் கடத்தல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காமீது தொடுக்கப்பட்ட வழக்கும், காணாமல்போன ஊடகவியலாளர் தொடர்பாக அவர் மனைவி ஞானசாரதேரர்மீது தொடுக்கப்பட்ட வழக்கும் எந்த பிரிவுக்குள் அடங்கும் என விபரம் அறிந்தவர்கள் விளக்கம் கொடுத்தால் பிறருக்கு அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இவை ஆள்கொணர்தல் மனுக்கள் Habeas Corpus என நினைக்கிறேன். காணாத ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு அவர் சார்ந்தோர் தொடுக்கும் விண்ணப்பம். வழக்கு அல்ல.

இங்கே சுமணே காணாமல் போகவில்லை. இங்கே குற்றச்சாட்டு தன் பேச்சின் மூலம் அவர் சட்ட கோவையை மீறியுள்ளார் என்பதே.

ஆகவே இப்போதைக்கு செய்ய கூடியது இதை விசாரிக்குமாறு அளுத்தம் கொடுப்பது, பாராளுமன்றில் பேசுவது போன்றனவே.

ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

இலங்கையின் சட்டத்தின் ஆளுமை இதுதான் என வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளுக்கு கடிதம் எழுதலாம்.

இதை வைத்து, வழக்கு போடவில்லை என்பதை வைத்து எவ்வளவோ செய்யலாம்.

ரணில் கெட்டிக்காரன் என்றால் விசாரித்து, வழக்கை போட்டு இழுத்தடியுங்கள், விடயத்தை மறக்கடியுங்கள் என இப்போதே பொலிசுக்கு உத்தரவிட்டிருப்பார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:
On 27/10/2023 at 07:40, goshan_che said:

இப்ப ஒராள் பார்த்தியளே சுமந்திரனின் பெயரில் கூட ஆபிரகாம் எண்டு இருக்கு, ஆகவே ஆபிரஹாம் யூதர் அல்ல, தமிழர் எண்டு கொண்டு வரப்போறார்🤣.

ஆபிரஹாம் மற்றும் யூதர் எல்லோருமே லெமூரிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் பரம்பரை (தொப்பிள்கொடி உறவுகள்)தான். இதை கிருபன்  ஏற்கெனவே  இங்கே தெரிவித்திருக்கிறார்.  ஆபிரஹாம் சுமந்திரன் செந்தமிழனே

பத்த வைக்கிறீங்களே பரட்டைகளா.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

- - - ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

இலங்கையின் சட்டத்தின் ஆளுமை இதுதான் என வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளுக்கு கடிதம் எழுதலாம்.

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

ஒரு எம்பியாக பொலிஸ்மா அதிபரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம்.

 

3 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளாரென எண்ணுகிறேன்.

On 27/10/2023 at 04:31, தமிழ் சிறி said:

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரஹாம்… இதையாவது செய்வார் என்று, நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? 😁

இல்லை🤓

47 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளாரென எண்ணுகிறேன்.

ஓம் சும்மா கடிதத்தை தட்டி விடாமல் இதை நேரில் போய் கொடுத்து -அதற்கு பத்திரிகையாளரை அழைத்துப்போய், பேட்டி கொடுத்தால் - பரப்புரையாக இருக்கும் எல்லோ?

 சும்மை பலஸ்தீனுக்கு அனுப்பி ஹமாஸ் பரப்புரையாளரிடம் பயிற்ற்சி எடுக்க சொல்ல வேண்டும்🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவை ஆள்கொணர்தல் மனுக்கள் Habeas Corpus என நினைக்கிறேன். காணாத ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு அவர் சார்ந்தோர் தொடுக்கும் விண்ணப்பம். வழக்கு அல்ல.

இல்லை கோசான் அது காணாமல் போன ஒருவரை முன்னிலை படுத்துமாறு ஞானசார தேரர்மீது தொடரப்பட்ட வழக்கல்ல, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சம்பந்தமான   விச்சரணையின்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளரின் மனவிக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்காகவே ஞானசாரதேரர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/12989

ஹிரோணிகா விஷயமும் அப்படியே.  தனிமனித அச்சுறுத்தல் விடுத்தமைக்காக வழக்கு தொடரப்பட்டவர்கள் என்ற ரீதியில் சுமணதேரரும் அந்த வகையறாவுக்குள்ளேயே அடங்குகிறார்.

இதற்கு சிறிது அப்பாற்பட்ட விஷயம் என்றாலும் மனிதாபிமான ரீதியான சுனாமி நிதியையே தமிழர் பகுதிக்கு கொடுக்கவிடாமல் ஒரு கட்சி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற முடியும் என்றால், கட்சி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அனைத்து தகுதிகளும் ஒருங்கே வாய்ந்த சுமந்திரனால்   ஒரு இனத்துக்கு கொலை மிரட்டல் விடும் ஒருவருக்கு எதிராக  ஏன் வழக்குபோடமுடியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, valavan said:

இல்லை கோசான் அது காணாமல் போன ஒருவரை முன்னிலை படுத்துமாறு ஞானசார தேரர்மீது தொடரப்பட்ட வழக்கல்ல, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சம்பந்தமான   விச்சரணையின்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளரின் மனவிக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்காகவே ஞானசாரதேரர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கை தொடுத்தது பிரகீத்தின் மனைவியா?

இல்லை. அவர் மிரட்டபட்ட அடிப்படையில் பொலிஸ்தான் வழக்கை போட்டது என நினைக்கிறேன்.

30 minutes ago, valavan said:

ஹிரோணிகா விஷயமும் அப்படியே.  தனிமனித அச்சுறுத்தல் விடுத்தமைக்காக வழக்கு தொடரப்பட்டவர்கள் என்ற ரீதியில் சுமணதேரரும் அந்த வகையறாவுக்குள்ளேயே அடங்குகிறார்.

இங்கேயும் வழக்கு பொலிஸ்சால்தான் தொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்.

கிரிமினல் குற்றங்களுக்கு பாதிக்க பட்ட தரப்பு முறைப்பாடு செய்யும். வழக்கு அரச தரப்பால்தான் தாக்கல் செய்யப்படும்.

இங்கே உடான்ஸ் சாமி மீது ஒரு கிரிமிமினல் வழக்கு என்றால் அதை R v Udance Sami என பெயரிடுவர். 

இங்கே R என்பது Regina / Regis அதாவது அரசி அல்லது அரசன். இலங்கையில் R க்கு பதில் state என்பார்கள் என நினைக்கிறேன்.

34 minutes ago, valavan said:

இதற்கு சிறிது அப்பாற்பட்ட விஷயம் என்றாலும் மனிதாபிமான ரீதியான சுனாமி நிதியையே தமிழர் பகுதிக்கு கொடுக்கவிடாமல் ஒரு கட்சி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற முடியும் என்றால், கட்சி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அனைத்து தகுதிகளும் ஒருங்கே வாய்ந்த சுமந்திரனால்   ஒரு இனத்துக்கு கொலை மிரட்டல் விடும் ஒருவருக்கு எதிராக  ஏன் வழக்குபோடமுடியாது?

ஏன் என்றால் ஒன்று சிவில் சட்டம் அல்லது அரசியலமைப்பு சட்டம் பற்றியது - இதில் தனி நபருக்கு வழக்கு தொடுக்க முடியும்.

மற்றையது கிரிமினல் வழக்கு (மேலே சொன்ன விளக்கம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சும்மை பலஸ்தீனுக்கு அனுப்பி ஹமாஸ் பரப்புரையாளரிடம் பயிற்ற்சி எடுக்க சொல்ல வேண்டும்🤣.

அப்படி சுமந்திரன் பலஸ்தீனத்திற்கு சென்று பொய் பரப்புரை நிபுணர்களான ஹமாஸ்சிடம் பொய்களை பரப்புரைகள் செய்வது எப்படி என்று பயிற்ற்சி எடுத்து வந்தால் ஏதாவது பயன் உண்டா ?    ஹமாஸ்சின் பொய் பரப்புரைகளுக்கு கதறி கண்ணீர் வடிப்பார்கள் சுமந்திரன் உண்மையாக செய்வதை நாடகம் என்பார்கள்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.