Jump to content

எங்களின் மனோஹரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

@தமிழ் சிறி

@ஈழப்பிரியன்


(Only Kantharmadam Gang 😎)


யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974).                            யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா!        :                                                               மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி"  படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை.     யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்தான் யாழ் இந்துவில் படிக்கையில் தங்கிப்படித்த ஆச்சி வீடிருந்தது. யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தது முதலே மனோஹராவில் திரைப்படம் பார்ப்பது தொடங்கிவிட்டது.

அப்பொழுதெல்லாம் மனோஹராவில் பழைய படங்கள் திரையிடுவார்கள். கலரி என்றால் முழு டிக்கற் 65 சதம். அரை டிக்கற் 35 சதம். அவ்விதம் பார்த்த திரைப்படங்களில் சில: பாகவதரின் 'புது வாழ்வு', சிவாஜி , பானுமதி நடித்த 'அறிவாளி', வாத்தியாரின் 'மாடப்புறா', 'பாசம்', 'கொடுத்து வைத்தவள்'. இவ்விதம் பார்த்த பழைய திரைப்படங்கள் பல.


இன்னுமொரு சமயம் யாழ் மனோஹராவில் அதிகமாக ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அப்பொழுது பார்த்த திரைப்படங்களும் பல. அந்தனி குயீனின் தி ஹன்ச் பாக் ஒஃப் எ நோட்ர டாம் (The Hunchback of Notre Dame) .
இன்னொரு சமயம் மனோஹராவில் புதுத்திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன.

வாத்தியாரின் 'இதயக்கனி', 'உலகம் சுற்றும் வாலிபன்', ஜெய்சங்கரின் 'உயிர் மேல் ஆசை' , 'வெள்ளிக்கிழமை விரதம்', 'மேனாட்டு மருமகள்'.. இவை மனோஹராவில் நான் பார்த்த , இன்னும் நினைவில் நிற்கும் புதுத்திரைப்படங்கள். இவற்றில் 'இதயக்கனி' நூறு நாள்களைக் கடந்து ஓடியது. இது தவிர ராஜேந்திரகுமார், மாலாசின்ஹா நடிப்பிலுருவான 'கீத்' (Gheet) மறக்க முடியாத ஹிந்தித்திரைப்படம்.

மனோஹராவில் நீண்ட காலம் ஓடிய திரைப்படமாக நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் 'மேரே மித்துவா' பாடலை மறக்க முடியாது. இங்கு பார்த்த இன்னுமொரு ஹிந்தித்திரைப்படம் ஷம்மி கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மசாரி'. இதுவே பின்னர் தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான  'எங்க மாமா'.
'உலகம் சுற்றும் வாலிபன்' திரையிட்டபோது ஆரம்பத்தில் மனோஹராவிலும், ஶ்ரீதரிலும் மாறி மாறித் திரையிட்டதாக நினைவு. முதல் நாள் நள்ளிரவே மனோஹராவில் முதற் காட்சி ஆரம்பமாகிவிட்டது இன்னும் நினைவிலுள்ளது. திருவிழா மாதிரி சனக்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் திரைப்படங்களில் புகழ்பெற்றவை இவ்விதமே முதல் நாள் நள்ளிரவே முதற் காட்சி ஆரம்பமாகிவிடுவது அக்காலகட்டத்தில் வழக்கமாகவிருந்தது.  

மனோஹரா தியேட்டருக்கு உரிமையாளர்களாகப் பலரிருந்தனர் என்று கேள்வி. அவர்களில் ஒருவர் குழந்தை என்று அழைக்கப்படும் ஒருவரிருந்தார். அங்கு பணிபுரிந்த அண்ணாமலை என்பவரை மறக்கவே முடியாது. அவர் உரிமையாளர்களி லொருவரின் சகோதரர் அல்லது உறவினராகவிருக்க வேண்டும். ( மனோஹராவின் உரிமையாளர்கள் பற்றி அறிந்தவர்கள் அவ்விபரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளாலாம். ) அவரின் பெயர் அண்ணாமலை. நல்ல குரல் வளமுள்ளவர்.


அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் லவுட் ஸ்பீக்கர் பூட்டிய காரில் நகரில் வெளியாகும் திரைப்படம் பற்றி ஒலிபரப்பிக்கொண்டு வருவார்கள். அவ்விதம் வருகையில் அத்திரைப்படம் பற்றிய 'நோட்டீ'சுகளை எறிந்துகொண்டு வருவார்கள்.

அவ்விதம் விளம்பரக் காரில் ஒலிபரப்பிக்கொண்டுவருவார் அண்ணாமலை. அவர் ஒருமுறை ஒலிபரப்பிக்கொண்டுவந்த சிங்களப்படமொன்றின் விளம்பரம் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பெயர் 'பாரா வலலு'. நடித்திருப்பவர்கள்: காமினி பொன்செகா & மாலினி பொன்செகா. அண்ணாமலை அப்படத்தை விளம்பரத்திக்கொண்டுவருகையில் ' ஸ்டைலா'க விளம்பரத்துவதாக எண்ணிக்கொண்டு "காமினி கொன்செகரா , மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு" என்று விளம்பரத்திக்கொண்டு வந்தது அழியாத கோலங்களிலொன்றாக அடிமனத்தில் பதிந்து விட்டது.
என் பதின்ம வயதுகளில் என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருந்த சூழலாக மனோஹரா திரையரங்கு, நாவலர் வீதி, சாந்தையர் மடப்பிள்ளையார், சந்திரா கபே, அருகிலிருந்த கந்தசாமி மாஸ்டரின் டீயூசன் கிளாஸ், கந்தசாமி மாஸ்டரின் டியூசன் கிளாஸ் நடக்குமிடத்தில் சிறிது காலம் நடந்த சிவஞானசுந்தரம் மாஸ்ட்டரின் பல்கலைக்கழகப்புகுமுக வகுப்புக்கான கணிதப்பாடத்துக்கான இரை மீட்டல் வகுப்பு, ஐந்து சந்தியிலிருந்த பிளவுஸ் உணவகம், மொக்கங் உணவகம், ஆசாத் உணவகம் , அண்ணா அறிவகம் ஆகியவை அமைந்திருந்த சூழல் விளங்கியது.


மனோஹரா திரையரங்கைப்பொறுத்தவரையில் இன்னுமொரு விசேடமென்னவென்றால்... அங்கு ஒரு காலத்தில் நாடகங்களும் மேடையேறின என்று கூறினார்கள். அதனை நிரூபிப்பது போல் திரை அமைந்துள்ள மேடையின் கீழ் நடிகர்கள் மேக் அப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு அறைகள் விளங்கின.
பதின்ம வயதுகளில் எம் கனவுலகத் திரையரங்காக விளங்கிய மனோஹராவின் அண்மைக்காலத் தோற்றத்தினையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.       போனவருடம் போய்ப் பார்த்தபின்புதான்.. "வந்திருக்கக்கூடாது, உன்னைப்பார்த்திருக்கக் கூடாது, .பார்க்காமலே உன் நினைவுகளுடன் வாழ்ந்திருக்கலாம்" எனச்சொன்னது மனசாட்சி. அந்தக்காற்றுவெளி. அரசமரம். அந்த ரசிகர்.

அனைத்தையும் இழந்து கதைசொல்ல முடியாமல் தவிக்கும் பாலைவனம் எங்களின் மனோஹரா.
நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

large.IMG_4063.jpeg.a7b6618fcea490234c458948dd441738.jpeg

Edited by Nathamuni
  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாதம்.

யாழ் இந்துக்கு அருகில் மனோகரா படமாளிகை இருந்ததால் நிறைய படங்கள் அங்கு பார்த்திருக்கிறேன்.

சிறு வயதிலேயே மறக்க முடியாத கிளுகிளுப்பான இரண்டு படங்கள் பார்த்தது இன்னமும் கண்ணுக்குள் ஓடுகிறது.

அதுசரி இந்த கந்தர்மட கூட்டத்தில்   @தமிழ் சிறி இல்லையோ?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில் இருக்கும் போது... விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் 
மிகக் குறைவான படங்களே பார்த்திருந்தாலும்,
மனோகரா தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்ததை மறக்க முடியாது.

மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி ( Box) வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

நான் இலங்கையில் இருக்கும் போது... விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் 
மிகக் குறைவான படங்களே பார்த்திருந்தாலும்,
மனோகரா தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்ததை மார்க்க முடியாது.
மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

 

பம்பலப்பிட்டி மஜஸ்டிக் தியேட்டரில் இருந்தது. 

நாலு சீற் இருக்கும். இதில அநுபவம் மிக்கவர்கள், நாலு சீற்றையும் வாங்கி, பெட்டையோட தனிய போவீனம்!!

😎😂😜

Link to comment
Share on other sites

28 minutes ago, தமிழ் சிறி said:

 

மேலும் இந்தத் திரையரங்கில் இருவர் மட்டுமே... (புது தம்பதிகள், காதலர்கள்)
அமர்ந்து பார்க்கக் கூடியதாக பெட்டி ( Box) வடிவில் மறைப்பு செய்து 
சில இருக்கைகள் இருக்கும். அதே நேரம் இலங்கையில் இப்படி 
மறைப்பான ஆசனங்கள் வேறு திரை அரங்கில் இருந்ததா என்று தெரியவில்லை.

கொழும்பில் ரீகல் திரையரங்கிலும் இவ்வாறான Box சீட்டுகள் இருந்தன என எனக்கு 1000 வீதம் தெரியும். அது  எப்படி இப்படி உறுதியாக சொல்ல முடிகிறது  எனக் கேட்க கூடாது 

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

கொழும்பில் ரீகல் திரையரங்கிலும் இவ்வாறான Box சீட்டுகள் இருந்தன என எனக்கு 1000 வீதம் தெரியும். எப்படி இப்படி உறுதியாக சொல்ல முடிகிறது எனக் எனக் கேட்க கூடாது 

நீங்கள், யாரையோ  உள்ளே  கூட்டிக் கொண்டு  போய்... 
கசமுசா பண்ணியிருக்கிறியள் எண்டு எங்களுக்கு தெரியும். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

இதுதான் மூலம் என்று நினைக்கிறன் https://iravie.com/யாழ்-நகரத்துத்-திரையரங்-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? இல்லை எனில் மூலத்தை குறிப்பிடுங்கள் 

51ம் ஆண்டு திறக்கேக்க நிண்டனீயளே எண்டு அடுத்த கேள்வி வருமே?

இது யாழ் இந்து குறூப்புகிலாள வந்தது. முகநூலா இருக்கலாம்.

அட இந்தா பெருமாள் தந்துவிட்டார்.

நன்றி @பெருமாள்

அது, சரி.... ரீகல்... சிங்களத்து சின்னக்குயில் தானே... சிங்களம் நல்லா கதைப்பன் எண்ட போதே... ஒரு டவுட் இருந்தது. டியூசன் எடுத்திருப்பியள்... 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு

கெல்கா Helha என்று ஒரு ஆங்கில படம். தொடங்கியது முதல் முடியும்வரை (90%படம்) உடுப்பே இல்லாமல் நடித்திருந்தனர்..

நண்பர்களுடன் கலரிக்கு போக கலைத்துவிட்டார்கள்.

முதலாம்வகுப்பு ரிக்கட் எடுத்து வாணீர் வடியவடிய பார்த்த படம்.

இதே மாதிரி த ஐடியல் மரீட்ஸ் The Idial Marriage என்றொரு படம். எப்படி உடலுறவு கொண்டு பிள்ளை பெறுவது என்பதை அப்பிடியே காட்டுகிறார்கள்.(இது எந்த படமாளிகை என்பது நினைவில்லை)

இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் கை தூக்குங்கோ.

பார்க்காதவர்கள் முயற்சி பண்ணுங்கள்.

பின் விளைவுகளுக்கு ஈழப்பிரியன் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

@Nathamuni இந்த ஆக்கத்தை எழுதியவர் யார்? நீங்களா? 

என்ன கதை இது?
 

உங்களுக்கு @Nathamuni பார்த்தால் 65 சதத்துக்கு டிக்கெட் வாங்கும் காலத்து ஆள் மாதிரியா படுகிறது🤣.

ஆனால்  பம்பலபிட்டி மஜெஸ்டிக் சினிமாவில் படம் பார்த்தேன் என்பதன் மூலம் தன் வயதை கோடி காட்டி விட்டார்.

இனி மரியாதையா நாதம் அண்ணை எண்டுதான் கூப்பிடப்போறன்🤣.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு

கெல்கா Helha என்று ஒரு ஆங்கில படம். தொடங்கியது முதல் முடியும்வரை (90%படம்) உடுப்பே இல்லாமல் நடித்திருந்தனர்..

நண்பர்களுடன் கலரிக்கு போக கலைத்துவிட்டார்கள்.

முதலாம்வகுப்பு ரிக்கட் எடுத்து வாணீர் வடியவடிய பார்த்த படம்.

இதே மாதிரி த ஐடியல் மரீட்ஸ் The Idial Marriage என்றொரு படம். எப்படி உடலுறவு கொண்டு பிள்ளை பெறுவது என்பதை அப்பிடியே காட்டுகிறார்கள்.(இது எந்த படமாளிகை என்பது நினைவில்லை)

இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் கை தூக்குங்கோ.

பார்க்காதவர்கள் முயற்சி பண்ணுங்கள்.

பின் விளைவுகளுக்கு ஈழப்பிரியன் பொறுப்பல்ல.

இப்ப எத்தினை hub இதுக்கெண்டே இருக்கு. HD, 4K, 8K, VR, AR வரைக்கும் வந்துட்டு.

இப்ப போய் உந்த புள்ளி புள்ளி ஈஸ்மண்ட் கலர் கண்றாவிய ரெக்கெமண்ட் பண்ணுறியளே ஐயா, நியாயமா, தர்மமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அது, சரி.... ரீகல்... சிங்களத்து சின்னக்குயில் தானே... சிங்களம் நல்லா கதைப்பன் எண்ட போதே... ஒரு டவுட் இருந்தது. டியூசன் எடுத்திருப்பியள்

போறது படம் பார்க்க இல்லைத்தானே. படம் சிங்களமோ, வங்காலியோ, அமெசன் பழங்குடி மொழியோ…

பிகு

பிற்காலத்தில் ரீகலில் ஹிந்தி படமும் ஓடியது?

 

 

@Nathamuni நாதம் அண்ணை, ஒரு வினயமான வேண்டுகோள். மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை எங்கள் மண் பகுதியில் இருந்து வேறு பொருத்தமான பகுதிக்கு மாற்றிவிடலாம் என்பது என் யோசனை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

இப்ப எத்தினை hub இதுக்கெண்டே இருக்கு. HD, 4K, 8K, VR, AR வரைக்கும் வந்துட்டு.

இப்ப போய் உந்த புள்ளி புள்ளி ஈஸ்மண்ட் கலர் கண்றாவிய ரெக்கெமண்ட் பண்ணுறியளே ஐயா, நியாயமா, தர்மமா? 

இது 1969-70 கதை.

இப்பவெல்லாம் நீங்க சொல்வது போல விரல் நுனியில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதுதான் மூலம் என்று நினைக்கிறன் https://iravie.com/யாழ்-நகரத்துத்-திரையரங்-2/

நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

 

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிலாமதி said:

கந்தர்மட காங்ஸ்

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிலாமதி said:

கந்தர்மட காங்ஸ்

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

 

5 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

 

5 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

 

50 minutes ago, நிலாமதி said:

நன்றி வ.ந.கிரிதரன்  அவர்களுக்கு

 

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

இத்தனைக்கும் ஒறிஜினல் கந்தர்மடம் பேசாமலிருக்குது.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ  இவர்கள் ஒரிஜினல்  காங்ஸ்  இல்லையா ? புகுந்த வீடா ?   ஒரிஜினல்ஸ்  மன்னிக்கவும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @நிழலி

முதலுக்கு மோசம் எண்டு நிழலி எஸ்.

மஜெஸ்டிக் தியேட்டரை வைச்சு வயசா?  தாரு உங்கட மற்ஸ் வாத்தியார், சாமீயார்: பரமார்த்த குருவாய் இராது!!

நிழலியண்ணரிலும் குறைவு தான் 😜🤣

51 minutes ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

அட, இவரிண்ட எரிச்சலப் பாரூங்கோ!

ப்பானை பனீரெண்டீல வையுங்கோ!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.

 

1 hour ago, goshan_che said:

தூக்கிபோட பிடிச்ச மாதிரி சரியா நாலு பேர், இதில இது ஒரு கேங்காம்🤣

 

42 minutes ago, குமாரசாமி said:

எதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ......உது ஓவர் பில்டப் 🤣

 

35 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தனைக்கும் ஒறிஜினல் கந்தர்மடம் பேசாமலிருக்குது.

 

19 minutes ago, நிலாமதி said:

அப்போ  இவர்கள் ஒரிஜினல்  காங்ஸ்  இல்லையா ? புகுந்த வீடா ?   ஒரிஜினல்ஸ்  மன்னிக்கவும்.

என்னம்மா அங்க சத்தம் | Facebook

என்ன... அங்க, சத்தம். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மஜெஸ்டிக் தியேட்டரை வைச்சு வயசா?  தாரு உங்கட மற்ஸ் வாத்தியார், சாமீயார்: பரமார்த்த குருவாய் இராது!!

 

அது காண்டம் பாக்கிற மாரி ஒரு கணக்கு. சொல்லி தர ஏலாது🤣.

ஆனால் வயசை 3 வருட margin of error either side உடன் கணித்து விட்டேன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அது காண்டம் பாக்கிற மாரி ஒரு கணக்கு. சொல்லி தர ஏலாது🤣.

ஆனால் வயசை 3 வருட margin of error either side உடன் கணித்து விட்டேன் அண்ணா.

அப்ப நான் இன்னும் நாதத்திற்கு "அய்யா" தானா அல்லது "அங்கிளா"😎?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

அப்ப நான் இன்னும் நாதத்திற்கு "அய்யா" தானா அல்லது "அங்கிளா"😎?

அண்ணா😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அண்ணா😎

ம்..பதவியிறக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அண்ணா😎

உடான்ஸ் சுவாமியார் என்றாலே வயசெல்லாம் கடந்த மகோன்னத நிலை!

அது போக, ரதியக்காவோடையும் போய், ஆண்ட்டி எண்டு கொண்டு அடம் பிடிக்கிறியள்.

அநுராதபுரம் கதையைப் பிடிச்சு தொங்கிறியள்.

உதென்ன விசயம், நடக்குது🤔.

எங்கண்ட சாமீயார், கைலாசா போகப் போறாரோ அல்லது, சரவணபவா ஆச்சிரமத்தை மடக்கப் போறாரா?

இளமை ததும்பும் எண்ணங்களும், கனவுகளும்!!!

நித்தியானந்தர், வயசு போவதை பீல் பண்ணக் கூடாது எண்டுதான், சின்னப்பெட்டைகளா பக்கதில வைச்சிருக்கிறாராம். இப்பெல்லாம், ரஞ்சிதா தூரத்தில!!

வாழ்த்துக்கள். உங்கட ஆசைய ஏன் கெடுப்பான், தாத்தா!! 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

உடான்ஸ் சுவாமியார் என்றாலே வயசெல்லாம் கடந்த மகோன்னத நிலை!

அது போக, ரதியக்காவோடையும் போய், ஆண்ட்டி எண்டு கொண்டு அடம் பிடிக்கிறியள்.

அநுராதபுரம் கதையைப் பிடிச்சு தொங்கிறியள்.

உதென்ன விசயம், நடக்குது🤔.

எங்கண்ட சாமீயார், கைலாசா போகப் போறாரோ அல்லது, சரவணபவா ஆச்சிரமத்தை மடக்கப் போறாரா?

இளமை ததும்பும் எண்ணங்களும், கனவுகளும்!!!

நித்தியானந்தர், வயசு போவதை பீல் பண்ணக் கூடாது எண்டுதான், சின்னப்பெட்டைகளா பக்கதில வைச்சிருக்கிறாராம். இப்பெல்லாம், ரஞ்சிதா தூரத்தில!!

வாழ்த்துக்கள். உங்கட ஆசைய ஏன் கெடுப்பான், தாத்தா!! 😂🤣

இமயமலை போறம்…மூலிகை வலிக்கிறம்…பரட்டை மாரி சும்மா பறந்து பறந்து பைட் சீன் பண்றம்🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
    • வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.