Jump to content

திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு - குவியும் கண்டனங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மன்சூர் அலி கான்

பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN/INSTAGRAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்பது ‘இழிவானது’ மற்றும் ‘அருவருப்பானது’ என, எக்ஸ் தளத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். ”ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வந்த மோசமான ரசனை கொண்ட பேச்சு” என தெரிவித்துள்ள அவர், ”அத்தகைய நபருடன் நடிக்காததே நல்லது” என தெரிவித்துள்ளார். என்னுடைய சினிமா வாழ்க்கையில் அவருடன் நடிக்க மாட்டேன் என்பதில் தான் உறுதியாக இருப்பேன் என தெரிவித்துள்ள திரிஷா, “மன்சூர் அலி கான் போன்றவர்கள் மனிதத்திற்கு இழிவான பெயரை பெற்றுத் தருவதாக” கூறியுள்ளார்.

மன்சூர் அலி கானின் பேச்சுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

 
மன்சூர் அலி கான்

பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN / INSTAGRAM

விளக்கத்திலும் சர்ச்சை

தன்னுடைய பேச்சுக்கு எதிர்வினைகள் வந்ததையடுத்து மன்சூர் அலி கான் அளித்துள்ள விளக்கமும் ‘மிக மோசமானதாக’ இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தன்னுடைய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாலும், பிரபல கட்சி சார்பாக தான் போட்டியிட உள்ளதாலும் தான் திரிஷா குறித்த தனது பேச்சு பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் அந்த பேட்டியில் திரிஷா குறித்து நல்ல முறையில் பேசியுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வு புகார்

நடிகைகள் குறித்து மட்டுமல்லாமல் சினிமா, அரசியல் என எந்த துறையாக இருந்தாலும் அதுகுறித்து ‘வெளிப்படையாக’ பேசுபவராக மன்சூர் அலி கான் அறியப்படுகிறார். மக்கள் பிரச்னைகளுக்காக சாலையில் தனியாக அமர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை கூறுதல் என தன்னுடைய செயல்களுக்காக விமர்சனங்களுக்கு மத்தியில் வெளிச்சம் பெற்றவராக மன்சூர் அலி கான் உள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழக்குகளுக்காக சிறை தண்டனை பெற்றுள்ளார் மன்சூர் அலி கான். குறிப்பாக, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் மன்சூர் அலி கான். ஆனால், 2012-ம் ஆண்டு புகார் அளித்த பெண் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக அப்பெண் மன்சூர் அலி கானுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றவர்கள் மீதான அவதூறு பேச்சுகளுக்காகவும் மன்சூர் அலி கான் சிறை சென்றுள்ளார்.

இவற்றுக்கு மத்தியில், திரிஷா எதிர்வினை ஆற்றியதைத் தொடர்ந்து மன்சூர் அலி கானின் பேச்சு பொதுவெளியில் கவனம் பெற்றிருக்கிறது.

மன்சூர் அலி கான் தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கம், அதுவரை அவரை ஏன் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கக்கூடாது என கருதுவதாக கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது.

 
குஷ்பூ சுந்தர்

பட மூலாதாரம்,KHUSHBOO SUNDAR / INSTAGRAM

‘தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு’

மன்சூர் அலி கானின் பேச்சு குறித்து பிபிசியிடம் பேசிய குஷ்பூ, “அவருடைய தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடே இந்த பேச்சு. பொதுவெளியில் பெண்களை மதிக்கத் தெரியவில்லை என்றால், வீட்டிலுள்ள பெண்களை எப்படி மதிப்பார்கள். இம்மாதிரியான பேச்சுகளை முன்பு இருந்த நடிகைகள் கண்டிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், இப்போதைய நடிகைகள் தைரியமாக அதனை வெளியில் கண்டிக்கின்றனர். இது ஆரோக்கியமானது. மக்களின் பார்வை மாறுகிறது. அதற்கேற்ப சினிமாவின் போக்கும் மாறியுள்ளது. அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

 
ஜா. தீபா

பட மூலாதாரம்,DEEPA JANAKIRAMAN / FACEBOOK

படக்குறிப்பு,

எழுத்தாளர் ஜா. தீபா

”தான் பேசியது தவறு என்றே புரியவில்லை”

பெண் இயக்குநர்கள், நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்திவரும் எழுத்தாளரும் சின்னத்திரை தொடர்களுக்கு திரைக்கதை எழுதுபவருமான ஜா. தீபா பிபிசியிடம் கூறுகையில், “தான் பேசுவது தவறு என தெரியாத அளவில்தான் மன்சூர் அலி கான் இருக்கிறார். அப்படித்தான் அவர் சினிமா துறையை பார்க்கிறார். ஒரு நடிகையை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அதில் தவறில்லை என அவர் நினைக்கிறார்.

ஒரு பெரிய நடிகரை அடிப்பது போன்று எனக்கு காட்சி இல்லை என அவர் சொல்லிவிட முடியுமா? கதாநாயகிகளை பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற காட்சிகளே இப்போது வைப்பதில்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமா மாறியுள்ளது. அவர் இன்னும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்திலிருந்தே வெளியே வரவில்லை” என்றார்.

எதையுமே வெளிப்படையாக பேசுகிற, யாருக்குமே அஞ்சாத நபர் என்ற பிம்பம் மன்சூர் அலிகானுக்கு உள்ளதால், தான் என்ன பேசினாலும் சரிதான் என அவர் நினைக்கிறார் என ஜா. தீபா கூறுகிறார்.

“ஒரு நடிகரின் நடிப்புத் திறமையைத் தாண்டி “அவர் கெத்து” எனக்கூறி அவரை துதிபாடுவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து பொதுவெளியில் பேசியதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தில் திரிஷா முறையிட வேண்டும்” என்றார் தீபா.

 
எழுத்தாளர் ஜீவசுந்தரி

பட மூலாதாரம்,JEEVA SUNDARI/FACEBOOK

படக்குறிப்பு,

எழுத்தாளர் ஜீவசுந்தரி

’வளரும் நடிகைகள் குரல் எழுப்ப முடியுமா?’

மூத்த பத்திரிகையாளரும் தமிழ் சினிமாவில் நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பா. ஜீவசுந்தரி கூறுகையில், “முன்பு தமிழ் சினிமாவில் பாலியல் வன்புணர்வு காட்சிகள் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான காட்சிகளில் கதாநாயகிகளின் ஆடைகள் கிழிந்திருக்கும்.

70களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அறிமுகமான குறிப்பிட்ட நடிகை ஒருவர் பாலியல் வன்புணர்வு காட்சியில் நடித்து அறிமுகமானதாலேயே அவருக்கு ‘ரேப் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்வு காட்சிகளில் சேலைகள் கிழிந்து போய் உள்ளாடை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரத்யேகமான உடைகளெல்லாம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. அந்தளவுக்கு பிரயத்தனப்பட்டு அந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது பாலியல் வன்புணர்வு காட்சிகளை வெளிப்படையாக அப்படி காண்பிப்பதில்லை. குறியீடுகளின் மூலமாகவே உணர்த்தப்படுகிறது. அப்படியிருக்கையில் மன்சூர் அலிகான் சொல்லியிருப்பது வக்கிரமானது” என தெரிவித்தார்.

எல்லா காலகட்டங்களிலும் நடிகைகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால், இப்போதைய காலகட்டத்தில் தான் நடிகைகள் அவை குறித்து குரல் எழுப்ப தொடங்கியிருப்பதாகவும் கூறுகிறார் ஜீவசுந்தரி.

நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் கதையில் இயக்குநர்கள் சொல்லாததையும் செய்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜீவசுந்தரி கூறுகிறார்.

இப்போது போன்று அல்லாமல், 60களில் தொடங்கி 2000களுக்கு முன்பு வரையே பெரும்பாலான நடிகைகளுக்கு நடிப்பு என்பது கனவு, லட்சியம் என்பதைத் தாண்டி அதுவொரு தொழிலாக இருந்திருக்கிறது. அது அவர்களின் வாழ்வாதாரம். இதனாலும் சக நடிகர்களின் பாலியல் சீண்டல்கள், பாலியல் ரீதியிலான பேச்சுகளை நடிகைகள் பொதுவெளியில் சொல்லாமல் இருந்திருப்பதாக ஜீவசுந்தரி தெரிவிக்கிறார்.

இப்போது அந்த நிலை மாறியிருப்பதால் பொதுவெளியில் நடிகைகள் பேசுவதாக அவர் கூறுகிறார். வில்லன் நடிகராக அறியப்படும் மன்சூர் அலி கான் போன்றல்லாமல் பெரிய நடிகர்கள் குறித்த இத்தகைய சர்ச்சைகளை நடிகைகள் பொதுவெளியில் பேசுவார்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

“அதேமாதிரி, திரிஷா எழுப்பியது போன்று வளர்ந்துவரும் நடிகை ஒருவர், ‘தன்னால் இனி இவருடன் நடிக்க முடியாது’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது” என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c2v21352z6zo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோ பார்த்தேன்.. அவர் சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடப்பதையே நினைத்து பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது… 

இது குறித்து ரேகாநாயர் பேசுவது மிக தெளிவானதும் சரியானதுமான கருத்து..

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோ பார்த்தேன்.. அவர் சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடப்பதையே நினைத்து பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது… 

இது குறித்து ரேகாநாயர் பேசுவது மிக தெளிவானதும் சரியானதுமான கருத்து..

 

 

 

இந்தக் கேவலம் கெட்ட ஆபாசமான பேச்சைத் தான் நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

 

இந்தக் கேவலம் கெட்ட ஆபாசமான பேச்சைத் தான் நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்...

 

 

நான் பார்த்த‌ ம‌ட்டில் மன்சூர் அலிகான் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌தின‌ர்............ஏன் தேவை இல்லாம‌ இப்ப‌டி வார்த்தைய‌ விட்டார் தெரிய‌ல‌.............எதை சொன்னாலும் அதில் ஒன்று இர‌ண்டு காமெடி க‌ல‌ந்து தான் பேட்டியில் சொல்லுவார்...............நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

.நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

அதுதான் ஆண் என்கின்ற திமிர்

அண்மையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் தொடர்பாக தவறான ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். "நல்ல பிள்ளைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்தால், அது தவறாக போய்த்தானே முடியும்" என்றமாதிரி பத்திரைகயாளர் மானாட்டில் கூறி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உடனே தான் சொல்லியது தவறு என்றும் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்றும் அறிவித்து இருந்தார்.

ஒரு பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இந்திய நடிகையைப் பற்றி தவறாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கும் போது இந்த மன்சூர் அலிகான் திமிர் தனமாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் மன்சூர் அலிகான் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌தின‌ர்............ஏன் தேவை இல்லாம‌ இப்ப‌டி வார்த்தைய‌ விட்டார் தெரிய‌ல‌.............எதை சொன்னாலும் அதில் ஒன்று இர‌ண்டு காமெடி க‌ல‌ந்து தான் பேட்டியில் சொல்லுவார்...............நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

இதெல்லாம் ஒரு செட்டப் ஆளும்கட்சி ஏதோ ஒன்று செய்கிறது அநேகமாக சிப்கார்ட் தொழில்சாலை போராட்ட கள செய்திகளை மழுங்கடிக்க அதிகாரா ஊடகங்கள் பண்ணும் சேட்டை . 

இப்படி ஒரு செய்திக்கு இவ்வளவுதூரம் சரி பிழை பிடிபதுக்கு பாதிக்க பட்டவ ஒன்றும் பத்தினியும் அல்ல உளறிகொட்டினவர் ஒன்றும் உத்தமனும் அல்ல ரெண்டு கூத்தாடி அடிபடுது என்று விலகிபோயிட வேண்டியதுதான் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதுதான் ஆண் என்கின்ற திமிர்

அண்மையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் தொடர்பாக தவறான ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். "நல்ல பிள்ளைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்தால், அது தவறாக போய்த்தானே முடியும்" என்றமாதிரி பத்திரைகயாளர் மானாட்டில் கூறி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உடனே தான் சொல்லியது தவறு என்றும் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்றும் அறிவித்து இருந்தார்.

ஒரு பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இந்திய நடிகையைப் பற்றி தவறாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கும் போது இந்த மன்சூர் அலிகான் திமிர் தனமாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

ஆமாம் சரியான கருத்துகள்  இவர்களின் இந்த திமிருக்கு  படங்கள் பார்பவர்களும். காரணம் ஆவார்கள்  தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள்  படம் பார்ப்பதை தவிர்த்து  

1,கால் பந்து  

2,.ரென்னிஸ்  

3 நீச்சல் போட்டி 

4. கிறிகேற்

5. ஒட்டப் போட்டி .....இப்படியான விளையாட்டுகளில். கவனம் செலுத்த வேண்டும்  வருமானம் வரும் வாய்ப்புகள் உண்டு   மேலும் உடல் ஆரோகியத்திற்கும் சிறந்தது 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதுதான் ஆண் என்கின்ற திமிர்

அண்மையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் தொடர்பாக தவறான ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். "நல்ல பிள்ளைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்தால், அது தவறாக போய்த்தானே முடியும்" என்றமாதிரி பத்திரைகயாளர் மானாட்டில் கூறி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உடனே தான் சொல்லியது தவறு என்றும் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்றும் அறிவித்து இருந்தார்.

ஒரு பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இந்திய நடிகையைப் பற்றி தவறாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கும் போது இந்த மன்சூர் அலிகான் திமிர் தனமாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

இதில என்ன ஆண் திமிர்த்தனம், நிழலி?

இது அவர்களது தொழில் ரகசியம். சம்பந்தப்பட அனைவருமே சினிமாக்காரர்கள். ஒரே நாற்றம் பிடித்த குட் டையில் ஊறும் மட்டைகள்.

இவர்களை நம்பி, நாம் சில்லறையை சிதற விடுவது வேஸ்ட்.

நான் நேற்று சொன்னதுபோலவே, இது சரக்கு படத்துக்கான, விளம்பரம். எனது கணிப்பு சரியானால், பட விநியோகம், ரெட் ஜெயண்ட் இடம் போகும்.

அப்புறம், கூட்டிக், கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாக இருக்கும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் சரியான கருத்துகள்  இவர்களின் இந்த திமிருக்கு  படங்கள் பார்பவர்களும். காரணம் ஆவார்கள்  தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள்  படம் பார்ப்பதை தவிர்த்து  

1,கால் பந்து  

2,.ரென்னிஸ்  

3 நீச்சல் போட்டி 

4. கிறிகேற்

5. ஒட்டப் போட்டி .....இப்படியான விளையாட்டுகளில். கவனம் செலுத்த வேண்டும்  வருமானம் வரும் வாய்ப்புகள் உண்டு   மேலும் உடல் ஆரோகியத்திற்கும் சிறந்தது 

முதலே இந்த திரியை கண்டு எனக்கு தெரியாத காரணத்தால் கடந்து சென்றுவிட்டேன். நிழலியின்  மன்சூர்  என்பவரின் பெண் வெறுப்பு பேச்சு என்ற வீடியோ வந்தபடியால் பார்த்தேன்.மிகவும் கேவலமான பேச்சு. இதை ஏன் இங்கே சிலர் நியாயபடுத்த முயல்கிறார்கள் என்று பார்த்தால் (2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு..) என்ற தகவல் தெரிய வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முதலே இந்த திரியை கண்டு எனக்கு தெரியாத காரணத்தால் கடந்து சென்றுவிட்டேன். நிழலியின்  மன்சூர்  என்பவரின் பெண் வெறுப்பு பேச்சு என்ற வீடியோ வந்தபடியால் பார்த்தேன்.மிகவும் கேவலமான பேச்சு. இதை ஏன் இங்கே சிலர் நியாயபடுத்த முயல்கிறார்கள் என்று பார்த்தால் (2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு..) என்ற தகவல் தெரிய வருகின்றது.

ஆகா.. அதுவா விசயம்...

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?

முதல்ல, சரக்கு படம் ரிக்கற் எடுத்து தியேட்டரில் பாருங்க.

சம்பந்தப்பட்ட அணைவருக்குப் நன்மை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?

முதல்ல, சரக்கு படம் ரிக்கற் எடுத்து தியேட்டரில் பாருங்க.

சம்பந்தப்பட்ட அணைவருக்குப் நன்மை!!

நிழலியின் வீடியோவில் அந்த நடிகர் பேசிய கேவலமான பேச்சு உள்ளது. பின்பு ஏராளன் பதிவிட்ட செய்தி கட்டுரையில் முழு விபரம் உள்ளது.- அவர் பேசியது அநாகரிகமான முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது - என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.அப்படியிருக்க நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்கிறீர்கள், என்னை ரிக்கற் எடுத்து அவரின் படத்தை தியேட்டரில் பார்க்கும் படி சொல்கிறீர்கள். உங்களது பிடித்தமான நடிகரின் படத்தை நான் ஏன் பார்க்க வேண்டும். இந்த திரியில் அவர் நடித்த படத்தை பற்றிய  விமர்சனம் நடைபெறவில்லை.அவரின் கேவலமான பேச்சு பற்றியதே இந்த திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நிழலியின் வீடியோவில் அந்த நடிகர் பேசிய கேவலமான பேச்சு உள்ளது. பின்பு ஏராளன் பதிவிட்ட செய்தி கட்டுரையில் முழு விபரம் உள்ளது.- அவர் பேசியது அநாகரிகமான முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது - என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.அப்படியிருக்க நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்கிறீர்கள், என்னை ரிக்கற் எடுத்து அவரின் படத்தை தியேட்டரில் பார்க்கும் படி சொல்கிறீர்கள். உங்களது பிடித்தமான நடிகரின் படத்தை நான் ஏன் பார்க்க வேண்டும். இந்த திரியில் அவர் நடித்த படத்தை பற்றிய  விமர்சனம் நடைபெறவில்லை.அவரின் கேவலமான பேச்சு பற்றியதே இந்த திரி.

உங்களுக்கு நான் சொல்வது விளங்காமல் அப்பாவித்தனமா பேசுகிறீர்கள்.

நிழலிக்கு நான் எழுதின பதிலைப் பாருங்கள்.

இது சரக்கு படத்திற்கான திட்டமிட்ட விளம்பரம். அணைவருமே சினிமாக்காரர்கள்.

நேரவிரயம் செய்யாமல், விளங்கினால் நல்லது!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், "எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு" என்று நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆம், அடக்க நினைத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை.

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு.

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்துக்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்." என்று அவர் கூறியுள்ளார்.

பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை | Trisha please forgive me - Mansoor Ali khan apologized - hindutamil.in

“மன்னிப்பது தெய்வீக குணம்” - மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

சென்னை: தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகியிருந்தார்.

 

 

 

அப்போது போலீசாரிடம், “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” என தெரிவித்ததாக கூறினார். இதனையடுத்து இன்று “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என கூறி அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

----------------------------

ஆகவே மக்களே, இந்தப் பிரச்சனையால் மூன்றாம் உலகப் போர் மூளும் என்று இனிப் பயப்படத் தேவை இல்லை.

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயில்வான் ரங்கநாதன் கிட்டத்தட்ட வழிச்சு ஊத்தாத நடிகைகளே இல்லை. அதுக்கு பொங்கியெழாத மான ரோஷ சங்கங்கள் மன்சூர்  அலிகான் சும்மா ஒரு கலகலப்புக்காக சொன்னதையெல்லாம் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள்.😎

அதை விட திரிஷாவின்ர கிசு கிசு படங்களுக்கும் இணையத்தளங்களில் பஞ்சமேயில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர்  அலிகான் என்ற நடிகருக்கு சும்மா ஒரு கலகலப்பு தேவைபட்டால்  தன்னுடன் வேலை செய்கின்ற பெண்ணை பற்றி கேவலமாக பேசுவார். அவருக்கு பொழுது போவில்லை என்று சும்மா ஒரு பொழுது போக்கு தேவைபட்டால் அந்த பெண்ணின் நிலைமை பயங்கரம்

 

 

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, திட்டினவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள் எல்லாம் வாங்கப்பா!

தலைவனின் சரக்கு படம் டிரெயிலர் வந்து பட்டையக் கிளப்புது, பாருங்கோ.

வழக்கமா 300,000 தாண்டாத வியூ 1.5M தாண்டிப் போகுது.

சர்ச்சையில சம்பந்தப்பட்டவர்கள் அணைவரும், சினிமாக்காரர்கள், நடிகர்கள், பட விளம்பரத்துக்காக நடித்தார்கள் என்றேன்.

விளங்க நிணைக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி? 🤣😂

 

 

On 24/11/2023 at 14:57, குமாரசாமி said:

அதை விட திரிஷாவின்ர கிசு கிசு படங்களுக்கும் இணையத்தளங்களில் பஞ்சமேயில்லை.🤣

அட, அந்த படம்...🤨

தமிழ் சூரியன் என்று உறவு முன்னர் வருவார். இங்கே யாரோ அதைப் பத்தி சொல்ல, இரவிரவாக தேடிப் பார்த்து, அடுத்தநாள், கண்டேன், பார்த்தேன் என்றார்.

பே அறைஞ்சது போல, பிறகு இந்தப்பக்கம் வரத்தே இல்லை. 😂🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.