Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாயம் வெளுத்த துவாரகா நாடகம் | தோலுரித்த ஜெர்மனி ஊடகம் | Dwaraka drama is scripted by Lankan agency?

 

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன்.

இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட‌ ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

 

இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா  என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல. ஆனால் ஏன் செய்தார்கள் என்பதுதான் முக்கியம். 

இன்று இலங்கையர் எல்லோருக்கும்  பொதுவாக ஒத்துப்போகும் ஒரு விடயம் இந்திய வெறுப்பு.

அதை நிவர்த்தி செய்து, எம்மிடையே உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை இலங்கைத்த மிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரை முன்னிறுத்தி தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தனது பக்கம் கொண்டு வரும் அற்பத்தனமான ஒரு முயற்சியே இந்தியாவின் இந்த துவாரகா விளையாட்டு.

இதில் நல்ல விடயம் என்னவென்றால்,  துவாரகா எனும் நாடகம் ஆரம்பமாகி 24 மணித்துளிகளிலேயே இழுத்து மூடப்பட்டதுதான்.

இதில் இன்னொரு நல்ல விடயமும் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் இந்திய ஏஜன்ட்கள் பலரும் அம்பலப்பட்டுப் போயினர். இதை இந்தியாவே எதிர்பார்த்திருக்க மாட்டாது. 

இது தொடர்பாக புரட்சிகரத் தமிழ்த் தேசியனிடம் கேட்டால் அவர் நிறையவே சொல்லுவார். 

😉

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Eppothum Thamizhan said:

என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா??

அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூவாரகாவின் மீள்வருகை...

கொள்கை அளவில் பல செய்திகளை காவி வந்துள்ளது. இது துவாரகாவை வைச்சு தமிழர்களின் ஒற்றுமையை.. உளப்பாங்கை கண்டறிய நடத்திய இந்த தேர்வில்..

1. தமிழர்களில் ஒரு பகுதி.. சாதாரணமாகக் கடந்து போய் மாவீரர்களுக்கான..தன் கடமையை செய்துவிட்டது.

2.இன்னொரு பகுதி.. ஆளையாளுக்கு துவாரகாவின் நிழலுக்கு பொய் சாயம் பூசுவதில் குறி. மாவீரர் நாளையே மறந்துவிட்டது. இந்தக் கூட்டம் எப்பவுமே இப்படித்தான். இதனால்.. தானும் குழம்பி தன் சார்ந்த கூட்டத்தையும் குழப்புவதே குறி.

3. சிங்களத்திற்கு உள்ளூர ஓர் அச்சம். பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே மிஞ்சி இருக்கக் கூடாது என்ற நிலையில் நிழல் துவாரகா மீளவும் தமிழர்களிடம் பிரபாகரனிசத்துக்கு உயிர் கொடுத்திடுமோ என்ற பயம்.

4. ஹிந்தியாவுக்கு மாவீரர் தினத்தின் கனத்தை குறைப்பதில் குறி. ஆனால்.. தமிழ் மக்களின் உள்ளுணர்வோடு கலந்திட்ட மாவீரர்கள் தொடர்பில் அதன் கணக்கு மீண்டும் பிழைத்துவிட்டது.

5. மேற்குலகிற்கு.. இதெல்லாம் ஒரு பெரிய கவனத்தில் கொள்ளத்தக்க தமக்கு ஆதாயமான மாட்டரே இல்லை.

6. தமிழகத்தில் இரண்டும் கெட்டான் கூட்டம் ஆதிக்கம்.  இன்னும் ஈழத்தமிழர்களின் தேவைகள் குறித்த தெளிவில்லை.

7. கோட்பாட்டு ரீதியில்.. நிழல் துவாரகாவின் வருகை என்பது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்தது உண்மை. அதில்... பிரபாகரன் போர்களத்தில் இருந்த போது காட்டிக்கொடுத்து பிழைத்த கூட்டம் கூட.. துவாரகாவை வைச்சு உண்டியல் குலுக்கிற பிரச்சாரத்திற்கு முண்டு கொடுத்திருக்குது. பிரபாகரன் இருந்த போது ஒரு சதத்தைக் கூட மண்மீட்புக்கு கொடுக்காத கூட்டம்.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்குது. 

8. துவாரகாவை முன்னிறுத்திய இந்த மாவீரர் தினம்.. நிச்சயம் வழமையை மாற்றிவிட்டுள்ளது.. என்றால் மிகையல்ல. 

9. தத்துவப் பித்துக்கள்.. முடியை பிய்த்துக் கொண்டு அலசி ஆராய்கிறார்கள். இதுகள் கடந்த 14 ஆண்டுகளாக.. தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக.. சிந்திக்க மண்டையை பாவிச்சதே இல்லை.

10. தமிழ் தேசிய தாயகக் கட்சிகள். மெளனமாக கடந்து போகப் பிரியப்பட்டுள்ளனர். காரணம்.. இதனை தமது எதிர்காலத்துக்கு முதலீடாக்கலாமா என்ற கோணத்தில்.. சிந்தித்துக் கொண்டிருக்கினம்.

11. சர்வதேச சமூக ஊடகங்கள்.. சீன ஊடகங்கள்.. வியாபாரத்தில் குறி. மேற்குலக ஊடகங்கள்.. இரண்டும் கெட்டான் நிலை. 

12. யதார்த்தமாக.. நிழல் துவாரகா.. நிஜ துவாரகாவை விட சாதித்து விட்டது... அதிகம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா  என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல

இதை ஏன் இலங்கை செய்திருக்கக் கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan

நாட்டாமை 

உப்பு ச‌ப்பில்லாம‌ ப‌தில் அளித்து விட்டார் புரியும்ப‌டி ப‌தில் அளித்தால் நாட்டாமை உன் ப‌திலுக்கு திருப்ப‌ பதில் அளிக்க‌ மாட்டார் ந‌ண்பா😁..........வீட்டுக்குள் இருந்து கொண்டு த‌லைவ‌ர் த‌லைவ‌ர் என்று புல‌ம்புவ‌தை விட‌........த‌லைவ‌ர் என்ன‌ இலட்சியத்துக்காக போராடினாரோ அத‌ற்கா நாட்டாமை முன்னெடுத்த‌ போராட்ட‌ம் என்ன‌ என்று கேட்டால் ப‌தில் வ‌ராது...............டென்மார்க் நாட்டுக்கு 1999க‌ளில் வ‌ந்தேன்.............2000ம் ஆண்டு நானும் என‌து வ‌ய‌து உடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சேர்ந்து டென்மார்க் த‌லைந‌க‌ர‌ம் Copenhagen ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு வின் அதிர‌ எங்க‌ட‌ த‌லைவ‌ரின் பெய‌ரை சொன்னோம்...........அந்த‌ ஆர்பாட்ட‌ம் டென்மார்க் அரசாங்க‌த்தின் காதுக்கும் போய் இருக்கும்...........இந்த‌ நாட்டில் உள் நாட்டில் எது ந‌ட‌ந்தாலும் அதை நேர்மையா ம‌க்க‌ளிட‌த்தில் கொண்டு சேர்ப்பார்க‌ள் இங்க‌த்த‌ ஊடகவியலாளர்க‌ள்..............அப்பேக்க‌ மிக‌ சிறு வ‌ய‌து...........த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ பாச‌ம்..........போராட்ட‌த்தின் மீது இருந்த‌ ப‌ற்றினால் எதையும் செய்ய‌ துணிந்தோம்...........புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ராட்டி எப்ப‌வோ என்ர‌ க‌ல்ல‌றை மீது புல்லு முளைத்து இருக்கும்............2009க்கு பிற‌க்கு ப‌ல‌ துரோக‌ங்க‌ள் ப‌ண‌ மோச‌டி....... போரில் காய‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் கைவிட‌ என்ன‌ ஜென்ம‌ங்க‌ள் இது என்று யோசிக்க‌ தோனிச்சு............அதுக்கு பிற‌க்கு எல்லாத்தையும் வெறுத்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்க்க‌ தொட‌ங்கினேன்............அத‌ற்கு பிற‌க்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ளின் ந‌ல்ல‌ தொட‌ர்வு கிடைச்சு இப்போது அவ‌ர்க‌ளுட‌ன் ப‌ய‌ணிக்கிறேன்🥰🙏................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் இலங்கை செய்திருக்கக் கூடாது?

இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் செய்யிவில் ப‌ல‌ கோடிக‌ள் தேவை.........இல‌ங்கையே பிச்சை எடுக்குது........அவ‌ர்க‌ள் இதை செய்ய‌ மாட்டார்க‌ள்...........2009க‌ளில் ச‌ர‌த்பென்சேக்கா சொன்ன‌தை மீண்டும் கேலுங்கோ.............இன‌ அழிப்பு தொட‌ங்க‌ முத‌ல் ச‌ர‌த் பென்சேக்கா எத்த‌ன‌ த‌ட‌வை டெல்லி போய் வ‌ந்தார் என்ப‌து என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு.............2008ம் ஆண்டு சொன்ன‌வ‌ன் இது தான் பிர‌பாக‌ர‌னின் க‌ட‌சி மாவீர‌ நாள் உரை என்று அவ‌ன் சொன்ன‌து போல் 2008ஓட‌ த‌லைவ‌ரின் மாவீர‌ நாள் உரை நின்று போச்சு த‌லைவ‌ரின் மூச்சும் த‌மிழ் இன‌த்துக்காக‌ நின்று போச்சு த‌லைவ‌ருக்கு வீர‌ வண‌க்க‌ம்🙏🙏🙏.............

இந்த‌ மேக்க‌ப் மாமியின் நாட‌க‌ம் பூரா இந்தியா மற்றும் த‌மிழின‌ துரோகிய‌ல் சேர்ந்து செய்த‌ செய‌ல்............காசு அங்கும் இங்குமாய் ப‌ற‌ந்து இருக்கும்..........ஆனால் நாட‌க‌ அர‌ங் ஏற்ற‌ம் பிழைச்சு போச்சு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா😏...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் இலங்கை செய்திருக்கக் கூடாது?

இப்போது தேர்தல் காலம் வருகின்றது. ராஜபக்சேக்கள் தேர்தல் காலம் வரும்பொழுது இப்படியான ஒன்றை கொண்டு வந்து விடுவார்கள். இனி ராஜபக்சே  , விமல், கம்மன்பில, சரத் வீரச்செக்கிற எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.

சிங்கள மக்கள் நாட்டின் வங்குரோத்து எல்லாவற்றையும் மறந்து இதிலே திளைக்க போகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த துரும்பு காணும் தேர்தலில் வெற்றி பெறுவதட்கு. நம்மட ஆட்கள் யாருக்காவது பணம் கொடுத்து இப்படியான புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு SBC எனும் தொலை காட்சியில் இரவு ஏழு மணிக்கு சிங்களத்தில்  ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் இதை பற்றித்தான் விவாதித்தார்கள். அதாவது புலிகள் மீண்டெழ போகிறார்களாம். இன்று இரவும் ஏழு மணிக்கு அதனை பார்க்கலாம்.

இந்த தொலைக்காட்சி லைகா சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. இப்போது உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் இலங்கை செய்திருக்கக் கூடாது?

அந்தத் தேவை இலங்கைக்கு இல்லை. 

தமிழர் எல்லோரும் நம்பக்கூடிய, தமிழரை ஒன்று சேர்க்கக்கூடிய இந்திய சார்புத் தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய தேவை இந்தியாவிற்கு மட்டும்தான் உள்ளது.  

தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியா தனது தேவைக்குப் பாவிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!

என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!!

 மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மகள் துவாரகாவா? உண்மை என்ன?

-சாவித்திரி கண்ணன்
1988018-10.jpg

பேசிய பெண் பிரபாகரனின் மகளா? அதை உறுதிபடுத்த பழ.நெடுமாறனும், கவிஞர் காசி ஆனந்தனும் மெனக்கெடுவதின் பின்னணி என்ன? இலங்கை தமிழர்களுக்கு பாஜக அரசின் உதவியை பெற்றுத் தரும் நகர்வுகள் பலனளிக்குமா? இந்திய உளவுத் துறைக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு..?

”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருக்கிறார்கள், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள்” என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமில்லாது, உலக அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது!

இந்த நிலையில், இந்த அறிவிப்பு குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயாமோகனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசியதில் அவர்,

”இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பாக, பிபிசியின் மூலமாக பிரபாகரன் இறந்ததை நாங்கள் உறுதிசெய்தோம். நாங்கள் போர்க்களத்தில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குத் தெரியாத செய்தி, இந்தியாவில் இருந்த இவர்களுக்கு எப்படித் தெரியுமெனத் தெரியவில்லை.

பிறகு நான் பிபிசி மூலம் அந்தச் செய்தியை அறிவித்தேன். இப்போது அவர்கள் செய்வது மக்களைக் குழப்பும். எதிரியைத் தூண்டிவிடும். இப்போதுதான் கொஞ்சம் மீண்டு, புனர்வாழ்வு பெற்றிருக்கும் அவர்கள் மீது எதிரிப் படையின் கண்காணிப்பை தொடர்ந்து தக்கவைக்கும். அதுதான் இந்த அறிவிப்பின் மூலம் நடந்திருக்கிறது” என்றார்.

”பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினார்கள். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்பாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை. இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஓர் எழுச்சியும், நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இளவேங்கை உறுமியிருக்கிறது. சினவேங்கை விரைவில் உறுமும்…”என தெரிவித்தார்!

1160214.jpg

பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் உரை ஆற்றி வந்தார்! 1989 முதல் 2008 வரை சுமார் 20 ஆண்டுகள் அந்த உரையை பலரும் கேட்டிருப்பார்கள்! அந்த உரையில் ‘சமகால உலக அரசியல் சூழலில் தமிழ் ஈழப் போராட்டத்தின் திசை வழியும், அணுகுமுறையும் என்ன’ என்பது வெளிப்படும். தற்போது பிரபாகரன் மகளாக தன்னைச் சொல்லிக் கொள்பவரால் குறைந்தபட்சம் ”விடுதலைப் புலிகள் மீதான தடை இந்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் வைக்கக் கூட துணிவில்லை!

எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது. போர் நிகழ்ந்த பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஊட்டிய உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், ஐ.நா மன்றம் இன்று வரை எங்களுக்கு தீர்வை வழங்கவில்லை. எனச் சொல்லும் அவரால், ‘இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியது’ என சொல்ல முடியவில்லை என்பது கவனத்திற்கு உரியது!

‘’எங்களது மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், எமது சுதந்திரத்துக்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு தான் உள்ளது “ என அவர் சொல்லும் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்வதற்கு இந்திய அரசுக்கு தேவைப்படும் காரணத்தை அவர் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பது தான் முக்கிய செய்தியாகும்.

943756.jpg

மேலும் பழ. நெடுமாறனின் சகாவான ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், ”இந்திய அரசின் உதவி மற்றும் அனுசரணையுடன் தமிழ் ஈழ பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்ற நம்பிக்கையை விதைக்கிறார். இவர் தான் கடந்த பிப்ரவரி மாதம், ”விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் துவாரகா தங்கள் குடும்பத்தை கவனிக்க சுவிட்சர்லாந்தில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நிதி சேர்த்ததாக கூறிய தகவல் எனக்கு வருத்தமாக இருந்தது” எனப் பேசினார். இதைவிட பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் இழிவுபடுத்த முடியாது என்பது ஒருபுறம் இருக்க,

இதன் மூலம் நமக்கு எழுகின்ற முக்கிய கேள்விகள் சில; அப்படியானால், விடுதலை புலிகளின் பினாமியாக இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில் பெரும் வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை வைத்து செயல்பட்டவர்கள் இன்று அவர் குடும்பத்தை கூட கவனிக்காமல் பிச்சை எடுக்க விட்டுவிட்டனர் எனச் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

screenshot39198-1676970207.jpg

உலகின் போராளி இயக்கங்களில் மிகப் பெரிய பணபலம், ஆயுத பலம் கொண்டு இயங்கிய இரண்டாவது பெரிய இயக்கமாக சர்வதேச அளவில் அறியப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல லட்சம் கோடி சொத்துக்களை பராமரித்தவர்கள் இன்று இலங்கையில் சிங்கள அரசின் ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தால் வறுமையில் உழலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூட உதவத் தயாரற்றவர்களாக உள்ளனரே ஏன்?

இந்தியாவிலேயே கூட, சீனாவால் பாதிக்கப்பட்ட திபெத் அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்த இந்திய அரசு இங்குள்ள இலங்கை அகதிகள் சுமார் 80,000 பேரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை தராமல், அகதி முகாம்களில் திறந்த வெளிச் சிறையில் வைத்துள்ளதைப் போல நடத்தி வருகிறது! அவர்களுக்கு மனிதாபிமானம் காட்ட வக்கில்லாத – அதற்கு முயற்சி செய்யாத – தமிழர் தலைவர்களாக வலம் வருபவர்கள் இன்னும் விடுதலைப் புலிகள் பெயரால் ஆதாய அரசியலை – அவர்களின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், துரோக அரசியலை முன்னெடுப்பது வேதனை தரக் கூடியதாக உள்ளது.

rohingya-refugee-1280x7201-1630045293.jp

தமிழ் நாட்டில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் கரிசனம் கொண்டவர்கள் போல பாவனை செய்யும் ஒரு அரசியலை முன்னெடுத்து அதற்கான ஆட்களை இயங்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக என்ற பின்னணியை உணர்பவர்களுக்கு இந்த துவாரகா விவகாரம் எந்த குழப்பத்தையும் உருவாக்க வாய்ப்பில்லை! மேலும், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் அவர்களே, ”பேசிய பெண் என் தங்கை துவாரகா இல்லை! என் சித்தப்பாவும், சித்தியும் உயிரோடு இல்லை” என உறுதிபடக் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது!

பிரபாகரன் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவர் சர்வதேச ஊடகங்களின் பார்வையில் இருந்து 14 ஆண்டுகள் தப்பி இருக்க முடியாது என்பது மாத்திரமல்ல, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உளவுத் துறைகளின் கண்களில் இருந்து அவர் தப்பி இருக்கவே வாய்ப்பில்லை!

இலங்கையிலும் இங்குமுள்ள ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், ‘நாம் இந்து, பாஜக இந்துக்களை ஆதரிக்கும் கட்சி. ஆகவே பெளத்த மத பின்னணி கொண்ட சிங்கள அரசை எதிர்க்க பாஜகவின் உதவியை பயன்படுத்துவது தான் ராஜ தந்திரம்’ என காய் நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு பலியாகிக் கொண்டுள்ளார்கள்! ஆனால், இவர்கள் ஒரு உண்மையை உணரத் தவறுகின்றனர். இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவுவது என்பதில், தமிழர் என்ற இன உணர்வை அங்கீகரிக்கும் ஒரு மனப் பக்குவம் தேவை! அது பாஜகவிடம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல, அது இன உணர்வையே பகையாக பாவிக்கும் கொள்கையுள்ள இந்திய தேசிய மேலாதிக்கச் சிந்தனை கொண்ட கட்சி என்ற யதார்தத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்துப் பேசுகிறார்கள்!

bjp-annamalai-2-16525776073x2-1.jpg

அது ‘இலங்கையைத் தமிழர்களுக்காக துண்டாடினால், அது தமிழகத்திலும் பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தி, இந்திய தேசியத்திற்கு நெருக்கடி தரும்’ என சிந்திக்கும் தேசியக் கட்சி என்பதை கூட உணர முடியாதவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள்!

இது பாஜக அரசின் உளவுத் துறை இயக்கத்தில் நடத்தப்படும் நாடகம். இந்த நாடகத்திற்கு துணை போகுமளவுக்கு அவல நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளது! ‘ஐயோ, பரிதாபம்’! தமிழ் இன உணர்வை ஒரு காலத்தில் அரசியல் வெற்றிக்கான சூத்திரமாகப் பயன்படுத்தி, சில கட்சிகள் தமிழர்களை காயடித்தது போல, தற்போது பாஜகவும் செய்யப் பார்க்கிறது! அவர்களுக்கும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் ”ஐயோ பாவம்” என்பதை சொல்லி வைப்போம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்
 

https://aramonline.in/15824/prabakaran-thuvaraka-tamils/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!!

 மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡

ப‌தில் இருந்தா தானே வ‌ரும்
நான் மேல‌ எழுதின‌து ச‌ரியாகி விட்ட‌து...........2006க‌ளில் இருந்து இவ‌ரின் எழுத்தை விரும்பி வாசிச்சேன் ஒரு சில‌ வ‌ருட‌மாய் இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து..........இன்னொருத‌ர் அருணாவை முன் நிலைப் ப‌டுத்தி ஏதோ சாத‌னை நிக‌ழ‌ போவ‌து போல் வில்டாப் விட்டார்...........க‌ட‌சியில் வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம்  அவ‌மான‌ ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் ஹா ஹா............
இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வேவு பார்க்கும் பொருப்பில் அம‌ர்த்தி இருக்க‌னும் எல்லாத்தையும் லூசு செய‌ல் செய்து  எதிரியிட‌ம் சிம்பிலா எம்பிட்டு இருப்பின‌ம்............த‌லைவ‌ர்150 போராளிக‌ளுட‌ன் உள்ளார் என்று சொல்லும் போது சுய புத்தி எங்கை போன‌து ந‌ண்பா................ந‌ல்ல‌ வேலை நாங்க‌ள் உந்த‌ சித்து விளையாட்டை ஆர‌ம்பிச்சு வைக்க‌ல‌............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!!

 மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡

பவுடர் மாமியால் பலரின் முகங்களை அடையாளங்காண கூடியதாக இருக்கு.👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

பவுடர் மாமியால் பலரின் முகங்களை அடையாளங்காண கூடியதாக இருக்கு.👍

நான் வைச்ச‌ பெய‌ர் மேக்க‌ப் மாமி................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நான் வைச்ச‌ பெய‌ர் மேக்க‌ப் மாமி................

நான் வச்ச பெயர் போலி-கா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

ப‌தில் இருந்தா தானே வ‌ரும்
நான் மேல‌ எழுதின‌து ச‌ரியாகி விட்ட‌து...........2006க‌ளில் இருந்து இவ‌ரின் எழுத்தை விரும்பி வாசிச்சேன் ஒரு சில‌ வ‌ருட‌மாய் இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து..........இன்னொருத‌ர் அருணாவை முன் நிலைப் ப‌டுத்தி ஏதோ சாத‌னை நிக‌ழ‌ போவ‌து போல் வில்டாப் விட்டார்...........க‌ட‌சியில் வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம்  அவ‌மான‌ ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் ஹா ஹா............
இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வேவு பார்க்கும் பொருப்பில் அம‌ர்த்தி இருக்க‌னும் எல்லாத்தையும் லூசு செய‌ல் செய்து  எதிரியிட‌ம் சிம்பிலா எம்பிட்டு இருப்பின‌ம்............த‌லைவ‌ர்150 போராளிக‌ளுட‌ன் உள்ளார் என்று சொல்லும் போது சுய புத்தி எங்கை போன‌து ந‌ண்பா................ந‌ல்ல‌ வேலை நாங்க‌ள் உந்த‌ சித்து விளையாட்டை ஆர‌ம்பிச்சு வைக்க‌ல‌............

மாவீரர் நாளுக்காக வேலையுடன் நித்திரை இல்லாமல் இருந்து இருப்பார் அந்த உளைச்சலில் இங்கு என்ன எழுதுவது என்று எழுதி இருப்பார் பொறுத்துக்கொள்ளுங்க பையன் .

9 minutes ago, goshan_che said:

நான் வச்ச பெயர் போலி-கா

அதென்ன போலி -கா ?

  • கருத்துக்கள உறவுகள்

போலி+துவாரகா = போலி-கா

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

மாவீரர் நாளுக்காக வேலையுடன் நித்திரை இல்லாமல் இருந்து இருப்பார் அந்த உளைச்சலில் இங்கு என்ன எழுதுவது என்று எழுதி இருப்பார் பொறுத்துக்கொள்ளுங்க பையன் .

அதென்ன போலி -கா ?

ப‌தில் வ‌ராது பெருமாள் அண்ணா.............தனது பாதுகாப்பு கருதி அட‌ம் பிடிப்பார்.........இதை க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பாய் இருக்கும் பெருமாள் அண்ணா............இனிதை ப‌ற்றி எழுத‌ விரும்பல............புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் பெருமாள் அண்ணா🙏..................

14 minutes ago, goshan_che said:

போலி+துவாரகா = போலி-கா

 

உன்டாஸ் சாமியார் நீங்க‌ளும் ந‌ல்ல‌ பெய‌ர் தான் வைச்சு இருக்கிறீங்க‌ள் மேக்க‌ப் மாமிக்கு😁..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரப்போகும் அரசியல்/ குணா கவியழகன்...

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்..!

தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். 

மேலும் முள்ளிவாய்க்கால்.. என்பது.. தலைவருக்கான அஞ்சலிக்குரிய இடம் மட்டுமல்ல.. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் கூட தியாகம் செய்த இடம். தலைவர் கூட நிச்சயமாக.. இந்த நாளை தனக்கான அஞ்சலி நாளாக கொள்ள இடமளித்திருக்கமாட்டார். மாவீரர் நாள் போல்.. பொதுவான ஒரு அஞ்சலி நிகழ்வு இனப்படுகொலை நினைவு நாளாகவே அது கடைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

எந்த ஒரு உண்மையான மக்கள் புரட்சியாளனும் இதை அதை செய்யச் சொல்லி செல்வதில்லை. தலைவரும் செய்யவில்லை. ஏனெனில்.. அவர்களின் வேணவா என்பது.. தமது மக்களுக்கான இலட்சியம் வெல்லப்படனும் என்பது தான்.

மேலும்..

இந்த நிழல்.. துவாரகாவை வைச்சு கழுவி உத்திறவை.. நிஜ துவாரகாவை தலைவர் போராளிகள் தவிர.. இயக்கம் பொதுவெளியில் அறிமுகம் செய்ததாகத் தெரியவில்லை. தலைவரின் பாரியார் மட்டுமே சில நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். அப்படி இருக்க.. ஏன்.. இவை நிழல் துவாரகா மீது அநாவசிய கவனம் செலுத்தினம். வேற செயலுக்கு பற்றாக்குறையா.. இல்லை.. நிழலை வைச்சு... நிஜத்தை நிந்திக்கினமா..??!

நிஜமே.. நிழலோ.. சொல்ல வந்த சேதியை.. இங்கு கருத்திட்ட எவரும் அலசவில்லை. வெளியில் உள்ளவையும் அலசவில்லை என்பது.. இவர்களின் அறிவுத்திறனை.. செயல் திறனை அப்பட்டமாக இனங்காட்டி விட்டது. இவர்களால்.. இனத்தின் விடிவுக்கான பயணம்.. காத தூரம் கூட நகராது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகாவின் இறப்புச் சான்றிதழால் வெடித்தது பெரும் சர்ச்சை.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறப்பு சான்றிதழை உரிய விதத்தில் கோராமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் வரலாற்று மையம் ஆகிய மூன்று அமைப்புக்களும் போலி துவாரகா என்ற காணொளி தொடர்பில் மௌனம் காத்து வருகிறது.

இந்த மூன்று அமைப்புகளையும் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

இந்த விவகாரம் குறித்து எவ்வித கேள்விகளையும் எழுப்பாத காரணத்தினால் இவர்களை நான் மிகவும் பயந்தவர்களாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/dwaraka-death-certificate-controversy-1701365089

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

துவாரகாவின் இறப்புச் சான்றிதழால் வெடித்தது பெரும் சர்ச்சை.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறப்பு சான்றிதழை உரிய விதத்தில் கோராமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் வரலாற்று மையம் ஆகிய மூன்று அமைப்புக்களும் போலி துவாரகா என்ற காணொளி தொடர்பில் மௌனம் காத்து வருகிறது.

இந்த மூன்று அமைப்புகளையும் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

இந்த விவகாரம் குறித்து எவ்வித கேள்விகளையும் எழுப்பாத காரணத்தினால் இவர்களை நான் மிகவும் பயந்தவர்களாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/dwaraka-death-certificate-controversy-1701365089

தலைவரின் இறப்புச் சான்றிதழும் இன்னும் உருவாக்கப்படவில்லையே..! ஹிந்தியா கேட்டும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தொடர்பான டி என் ஏ அறிக்கையும் இல்லை. அதை இட்டும் இவர் கோவப்படலாமே.

தமிழ்வின் ஒரு காலத்தில் யாழின் கறுப்புப்பட்டியலில் இருந்ததை பலர் வசதியாக மறந்திட்டாங்க.

என்ன இப்ப.. சில ஈனத்தமிழர்களுக்கு தலைவரையும் அவர் குடும்பத்தை எப்படியாவது நிந்திக்கனும். அவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்தனும். அதற்கு எவர் எந்தக் கட்சி.. சார்ப்பு என்றில்லாமல்.. ஒன்றாக் கூடி நல்லா கழுவி ஊத்தினம். ஆளாளுக்கு நல்லா முதுகு சொறியினம். 

இது நடந்து முடியும் போது.. உணரப்படும் குற்ற உணர்வில்.. பல தலைகள்... கவிழ்ந்தது நிமிர முடியுமோ தெரியவில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

இப்போது தேர்தல் காலம் வருகின்றது. ராஜபக்சேக்கள் தேர்தல் காலம் வரும்பொழுது இப்படியான ஒன்றை கொண்டு வந்து விடுவார்கள். இனி ராஜபக்சே  , விமல், கம்மன்பில, சரத் வீரச்செக்கிற எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.

சிங்கள மக்கள் நாட்டின் வங்குரோத்து எல்லாவற்றையும் மறந்து இதிலே திளைக்க போகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த துரும்பு காணும் தேர்தலில் வெற்றி பெறுவதட்கு. நம்மட ஆட்கள் யாருக்காவது பணம் கொடுத்து இப்படியான புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு SBC எனும் தொலை காட்சியில் இரவு ஏழு மணிக்கு சிங்களத்தில்  ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் இதை பற்றித்தான் விவாதித்தார்கள். அதாவது புலிகள் மீண்டெழ போகிறார்களாம். இன்று இரவும் ஏழு மணிக்கு அதனை பார்க்கலாம்.

இந்த தொலைக்காட்சி லைகா சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. இப்போது உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். 

மகிந்த கும்பலுக்கு இப்ப புலிகள் மீண்டெழுவதாக கதை எழுதினால் தான்.. தமது குற்றங்கள் மீதான மக்கள் கவனத்தை தேர்தலுக்கு முன் திசை திருப்பலாம். கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் இது நடந்தே வந்துள்ளது. கடந்த தேர்தலில் கருணாவை ஆனையிறவில் தான் ஆயிரம் சிங்களப் படைகளைக் கொன்றதாக கூவ விட்டு திரித்துப் பார்த்தார்கள்.. கருணாவுக்கு வேலைக்கு ஆகவில்லை. கோத்தாவுக்கு ஆகிச்சுது. 

புலிகளின் மீள் எழுச்சியை சித்தரிக்க உண்மையில் சிங்களத்துக்கு துவாரகா அவசியமில்லை. உள்ளூர்.. வெளியூர்க் கூலிகளே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

கிவ

1 hour ago, குமாரசாமி said:

வரப்போகும் அரசியல்/ குணா கவியழகன்...

 

தலைவர் மகளின் வேற புதுப்படங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை போலும். ஆளாளுக்கு ஒரு இரண்டு படத்தை வைச்சு.. ஒட்டுறாங்கள்.. பிசையிறாங்கள்.. கசக்கி வீசுறாங்கள். ஒன்றுமா பொருந்துதில்லை. 

என்ன நாங்க முன்னர் சொன்னது போல்.. யு ரியுப் வியாபாரிகளுக்கு நல்ல வசூல் தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, nedukkalapoovan said:

தலைவரின் இறப்புச் சான்றிதழும் இன்னும் உருவாக்கப்படவில்லையே..! ஹிந்தியா கேட்டும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தொடர்பான டி என் ஏ அறிக்கையும் இல்லை. அதை இட்டும் இவர் கோவப்படலாமே.

தமிழ்வின் ஒரு காலத்தில் யாழின் கறுப்புப்பட்டியலில் இருந்ததை பலர் வசதியாக மறந்திட்டாங்க.

என்ன இப்ப.. சில ஈனத்தமிழர்களுக்கு தலைவரையும் அவர் குடும்பத்தை எப்படியாவது நிந்திக்கனும். அவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்தனும். அதற்கு எவர் எந்தக் கட்சி.. சார்ப்பு என்றில்லாமல்.. ஒன்றாக் கூடி நல்லா கழுவி ஊத்தினம். ஆளாளுக்கு நல்லா முதுகு சொறியினம். 

இது நடந்து முடியும் போது.. உணரப்படும் குற்ற உணர்வில்.. பல தலைகள்... கவிழ்ந்தது நிமிர முடியுமோ தெரியவில்லை. 

தலைவரும் அவர் குடும்பமும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றால் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.