Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரேஷ்ட பிரஜைகளால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்படும்.

இலங்கையில் மக்கள் வாழுகின்றபோதும்,உழைக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும் அதேபோன்று ஓய்வில் இருக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும்.

ஆனால் ஏனைய பெரும்பாலான நாடுகளில் மக்களின் ஓய்விற்கு பின்னர் அவர்களின் மறைவு வரை அவர்களின் வாழ்க்கையை தமது கையில் எடுத்து இறுதி காலத்தை ஒழுங்காக கவனிக்கிறார்கள்.

 

ஒரு பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்ய முடியாத கூட்டம் ஒன்று நாட்டை ஆட்சி செய்கின்ற காரணத்தினால் எப்படி ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும்,எவ்வாறு ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்ற வரையறைகளை மீறிய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசிற்கு வருமானம் வேண்டும் இல்லையென்றால் இந்நிலையிலிருந்து மீள முடியாது என கூறுவார்கள். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகின்றது என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-bank-interest-and-tax-increase-1713744267?itm_source=parsely-api

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா?

சந்தோசம் 🤣.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும்.

2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல.

எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. 

உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும்.

https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in.

இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம்.

இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது.

வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர்.

# கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. 

வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா?

சந்தோசம் 🤣.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும்.

2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல.

எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. 

உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும்.

https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in.

இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம்.

இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது.

வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர்.

# கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣

நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

 

வட்டி என்பது பணப்பெறுமதியிழப்பிற்கான பரிகாரம் ஆகும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .

ஆமா நீங்கள்தான் உலக தமிழரின் பிரதிநிதி….உங்களிடம் வந்து எல்லாரும் ஒப்பு கொடுக்க வேண்டுமாக்கும்🤣.

இலங்கை இனவாத அரசு இன்று நேற்றா தமிழரை ஏமாற்றுகிறது?

1948 க்கு பின்னான இலங்கை அரசியலே தமிழரை ஏமாற்றுவதுதானே.

ஆனால் இந்த மாற்றங்கள் அனைவருக்குமானது, தனியே தமிழருக்கு மட்டும் என வரியை கூட்டவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சந்தோசம் 🤣.

மிகச் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👌
அடைக்கலம் தந்த நாடுகளில்  வைப்பில் இடாமல் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்து அடைக்கலம் தந்த நாட்டை வரியில் ஏமாற்றுவது.
ஒரு வரம்பு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது என்பது எல்லாநாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம்.

சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்…

இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top. 

 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, MEERA said:

@goshan_che

நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம்.

சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்…

இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top. 

 

ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). 

நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣.

இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது.

வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣.

அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣.

ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால்  நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். 

கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள்.

இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். 

இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். 

தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள்.

இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). 

நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣.

இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது.

வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣.

அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣.

ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால்  நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். 

கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள்.

இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். 

இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். 

தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள்.

இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.

எனக்கு இவர்கள் மீது கோபம் வரக் காரணம் இவர்கள் தான் தாயக மக்களுக்கு தவறான தமது நடத்தைகள் மூலம் வெளிநாட்டு மோகத்தை அந்த மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். இவற்றை நம்பி இங்கே வந்து சீரழிந்த சீரழியப்போகும் மக்கள் பலர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

அது தீராது  வளர்ந்து கொண்டு போகும்,.விலையும் கூட  90,...100. .....ரூபாய் என்று    இதுவும் தமிழர்கள் பிரச்சனை போல் தான்    வளருமே ஒழிய தீராது     வடையை. விற்ப்போர். தீர்க்க முயற்சித்தாலும்.  வடை சாப்பாடுவோர். தீரா. விடமாட்டார்கள்.  🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

வித்தவனும், வாங்கியவனும் மறந்தாலும், மன்னித்தாலும் - யாழ் களம் மறவாது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த  தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை  என்று சொல்ல சீ  என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று .

யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 

😀

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த  தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை  என்று சொல்ல சீ  என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று .

யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 

😀

பொய்யோ, மெய்யோ, பழசோ, புதிசோ….

யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும்.

பழைய காணொளி, புதிய செய்தி என மாறி, மாறி போட்டு அடித்து வாசகர்களை குழப்பி விட வேண்டும்.

அதுதான் சிறிதரன் அரசியலுக்கு உவப்பானது. அப்போதுதான் அவரின் தகிடுதத்தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டர்கள். 

அதற்குமாறா யாரும் போய் உண்மையை கண்டு வந்து எழுதினால் - அவர்கள் மீது வடை, பாயாசம், வடை சுட்ட சட்டி ஈறாக எறியப்படும்.

இவ்வண்,

#சிறிதரன் ஆமி - இலண்டன் கிளை🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2024 at 12:37, பெருமாள் said:

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 


இலங்கையில் சிங்களவன் அடித்து விரட்டி விட்டான் என்ற கோவத்தில் எழுதுவது போல் எல்ல கருத்துக்களும் இருக்கின்றன‌ ஐயா

19 hours ago, Kapithan said:

 

வட்டி என்பது பணப்பெறுமதியிழப்பிற்கான பரிகாரம் ஆகும். 

 

ஏன் இவரிடம் போய் இதை  கதைக்கின்றீர்கள், அரிவரி இல்லை பிறகு ஏன்?

compounding, discounting, time value for money என 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 


இலங்கையில் சிங்களவன் அடித்து விரட்டி விட்டான் என்ற கோவத்தில் எழுதுவது போல் எல்ல கருத்துக்களும் இருக்கின்றன‌ ஐயா

அப்ப  தெரிந்தவர்கள்  கொஞ்சம் விளங்கப்படுத்தலாமே ?

 

12 minutes ago, colomban said:

ஏன் இவரிடம் போய் இதை  கதைக்கின்றீர்கள், அரிவரி இல்லை பிறகு ஏன்?

நான் படிக்காதவன் தான் உங்களை போல் சோதனைக்கு படித்த ஆள் அல்ல .

விழுந்து விழுந்து இனவாத சிங்களவனுக்கு முதுகு சொரிந்து விடுவதில் அப்படியென்ன இன்பம் கிடைக்குது என்பது எனக்கு விளங்கவில்லை 

உங்களின் அநேக பதிவுகள் இணைப்புகள் வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரானவையாய் இருப்பது யாழ் கள  வாசகர்களுக்கு தெரியும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் குளிருக்குள் இருந்து கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை இனவாத சிங்கள அரசு நடாத்தும் வங்கிகள் ஏமாற்றி வாங்கி விட்டு இப்போ 1லட்ஷத்துக்கு வரி கட்டணும் என்கிறார்கள். அது சரியா ?

29 minutes ago, colomban said:

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 

@colomban நீங்கள்  கலாநிதி எம்.கணேசமூர்த்தியை விட  அதிகம் படித்து விட்டிர்கள் ஆக்கும் ?

புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓடும் என்றவர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

1 hour ago, goshan_che said:

யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும்.

இதை சொல்வதுக்கு  ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................

 

Edited by பெருமாள்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இதை சொல்வதுக்கு  ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................

இதை 2004 க்கு பிறகு இலங்கை போகாதவர் எழுதக்கூடாது.

அங்கே இருப்பவர் என்ன நிலாந்தனே எழுதியுள்ளாரே? பார்க்கவில்லையா அல்லது selective blindness ஆ?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. 

வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே. 

விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள்.

ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது.

இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள்.

இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள்.

ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது.

இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள்.

இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா 

முதலில் இது செய்ய வேண்டும்.

அப்புறமா வரி அறவிடணும்.

செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் இது செய்ய வேண்டும்.

அப்புறமா வரி அறவிடணும்.

செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.

மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன.

இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது.

இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும்.

இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது.

இதை விட  அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன்.

இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது.

அதே போலவே மருத்துவமும் இலவசம்.

அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள்.

எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர்.

நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம்.

அதை இப்போ அடைக்கிறார்கள்.

கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது.

https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள்.

ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது.

இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள்.

இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.