Jump to content

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

tik-tok.jpg?resize=750,375

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.

இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்தநிலையில்  25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார்.

டிக்டொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 லட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார்.

அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது.

அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன.

அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் கறந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

அத்துடன், இவர்களின் ‘அன்ரி’ (aunty) என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.

ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை கறந்துள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

https://athavannews.com/2024/1398281

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவருக்கு தேவையான வேளைகளில் சிரித்து சிரித்து பேசி மயக்கி காமம் ஊட்டி கரசேவைக்கு உதவியதற்கான கூலி கணிக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சுதியில் ஆடவேண்டியது. பின்னர் அழவேண்டியது. தூ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்படியானால் இவருக்கு தேவையான வேளைகளில் சிரித்து சிரித்து பேசி மயக்கி காமம் ஊட்டி கரசேவைக்கு உதவியதற்கான கூலி கணிக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சுதியில் ஆடவேண்டியது. பின்னர் அழவேண்டியது. தூ....

 

3 hours ago, தமிழ் சிறி said:

 

டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார்.

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.

giphy.gif?cid=6c09b952bgbwq8zs03llucgxel

சுவிஸ்கார அண்ணை, காட்டின  கத்தியையும் அவர்கள் பார்த்து விட்டு, 
47 இலட்சத்தையும் கறந்து போட்டு விட்டு விட்டார்கள். நாடு ரொம்ப மோசமப்பா... 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢

இந்த வயது போனவர்கள் நினைப்பது தாங்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில்தான் இன்னும் இன்றைய யாழ் தமிழ் மக்களை நினைக்கின்றார்கள், அந்த நிலை மாறும் வரை இவரைபோல் பல வழிகளில் ஏமாற புலம்பெயர் தமிழ......................🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நபருக்கு. சுதி வந்தால்! அதன் விலை 47இலட்சம். அப்போ லண்டன், கனடா, யேர்மனி நபர்களுக்கு சுதி வந்தால்???😳😩🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரத்துக்குள்ள பரமானந்தம் என்று போய் வந்து சொல்பவர்கள் கதை எல்லாம் பொய்யா கோபாலு? 🤑☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

இலகுவான வழி அந்த மூன்று பெண்களையும். அந்த நபருக்கு கொடுப்பது தான்    அவருக்கு காசு தேவையில்லை    பணம் பெண்களிடம் இருக்கட்டும்    🤣🤣🤣🤣.  அந்த மனிதரை பேச வேண்டாம்    நீங்களும் கூட முயற்சித்தால் வெற்றி பெற முடியும்  🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இந்த வயது போனவர்கள் நினைப்பது தாங்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில்தான் இன்னும் இன்றைய யாழ் தமிழ் மக்களை நினைக்கின்றார்கள், அந்த நிலை மாறும் வரை இவரைபோல் பல வழிகளில் ஏமாற புலம்பெயர் தமிழ......................🤣

உங்களின் கருத்து 100 % சரியான கருத்து உடையார் . ....... என்றாலும் 80/90 களில் புலம் பெயர்ந்தவர்கள், அப்பவே இங்கு வந்தவர்கள் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்கும்பொழுது நீங்கள் "இந்த வயது போனவர்கள் "  விளிப்பது இங்கு உலாவும்  என்போன்ற பலரின் இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்துவது புரிகின்றதா உங்களுக்கு உடையார் . .......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்துவாக்கில காதில விழுந்தது.

சம்பவம் 1: 25 பவுண் நகை, பணம் 50 லட்சத்திற்கு மேல் ஒரு பெண்ணுக்கு வழங்கி குடும்பத்தை விட்டுவிட்டு யாழில் வந்து செற்றிலானவரை அந்த பெண்ணே பொலிஸ் மூலம் அவரை தனது ஊருக்கு வரவிடாது வெருட்டி நடுத்தெருவில் விட மனைவி இரக்கப்பட்டு மீள வெளிநாட்டுக்கு அழைத்து பாஸ்போட்டை பறித்து வீட்டோடை வைத்திருக்கிறாராம்!

சம்பவம் 2: வகுப்புத் தோழி கணவரைப் பிரிந்து வாழ்கிறார் என பண(40லட்சம் வரை) உதவி செய்தார் வெளிநாட்டில் உள்ள நண்பர். ஊருக்குநேரில் வந்த இடத்தில் போனை எதேச்சையாக வாங்கிப் பார்த்தபோது இன்னுமொருவருடனும் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்து சண்டை பிடிக்க வகுப்பத்தோழி தலைமறைவு! இவ்வளவுக்கும் பணம் கொடுத்தவர் காதலித்து மணம் புரிந்து பிள்ளைகளுடன் வாழ்கிறார்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

காத்துவாக்கில காதில விழுந்தது.

சம்பவம் 1: 25 பவுண் நகை, பணம் 50 லட்சத்திற்கு மேல் ஒரு பெண்ணுக்கு வழங்கி குடும்பத்தை விட்டுவிட்டு யாழில் வந்து செற்றிலானவரை அந்த பெண்ணே பொலிஸ் மூலம் அவரை தனது ஊருக்கு வரவிடாது வெருட்டி நடுத்தெருவில் விட மனைவி இரக்கப்பட்டு மீள வெளிநாட்டுக்கு அழைத்து பாஸ்போட்டை பறித்து வீட்டோடை வைத்திருக்கிறாராம்!

சம்பவம் 2: வகுப்புத் தோழி கணவரைப் பிரிந்து வாழ்கிறார் என பண(40லட்சம் வரை) உதவி செய்தார் வெளிநாட்டில் உள்ள நண்பர். ஊருக்குநேரில் வந்த இடத்தில் போனை எதேச்சையாக வாங்கிப் பார்த்தபோது இன்னுமொருவருடனும் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்து சண்டை பிடிக்க வகுப்பத்தோழி தலைமறைவு! இவ்வளவுக்கும் பணம் கொடுத்தவர் காதலித்து மணம் புரிந்து பிள்ளைகளுடன் வாழ்கிறார்!!

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

சீ சீ அவ்வளவு சம்பவங்கள் இல்லை அண்ணை, ஆனால் காதில விழுந்தால் பகிர்கிறேன்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

காத்துவாக்கில காதில விழுந்தது.

சம்பவம் 2: வகுப்புத் தோழி 

 

 

7 minutes ago, suvy said:

அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......!   😂

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

உங்களின் கருத்து 100 % சரியான கருத்து உடையார் . ....... என்றாலும் 80/90 களில் புலம் பெயர்ந்தவர்கள், அப்பவே இங்கு வந்தவர்கள் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்கும்பொழுது நீங்கள் "இந்த வயது போனவர்கள் "  விளிப்பது இங்கு உலாவும்  என்போன்ற பலரின் இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்துவது புரிகின்றதா உங்களுக்கு உடையார் . .......!  😢

அப்ப என்ன அண்ணை  ??  வயோதிபர்களை   இளைஞனர்கள். என்ற சொல்ல முடியும்??  🤣🤣. நானும் உங்களுக்கு கிட்டத் தான்  ஆனாலும்  முதுமை.  என்பது வரம். ஆகும்   அது எல்லோருக்கும் கிடைக்காது    குறிப்பிடதக்க. தொகை வயோதிபர்கள்  உடலும் மனமும்  இளமையாகவே இருக்கிறது  அவர்கள் தான்   இப்படியான செயல்களை செய்கிறார்கள்    என்ன செய்வது…???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

என்ர காதில விழுந்ததால் உங்கள் ஆசையில் மண்ணைப் போட வாய்ப்புள்ளதாக நான் கனவிலும் எண்ணவில்லை அண்ணை. 
ஆனால் யாழைப் பார்த்தால் பாஸ்போட்டை பறித்து வீட்டுக் காவலில் வைக்க சந்தர்ப்பம் உள்ளதாகப் பட்சி சொல்லுது!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 

 

இந்நாள் என்ர ஆசையில் மண்ணை போடுது. அண்ணை???

😜

உங்கள் ஆசை தான் என்ன  ???  நாலு பிள்ளைகள் உண்டு   பேரப்பிள்ளைகளுமுண்டு 

இன்னும் என்ன ஆசை?? 🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

 குறிப்பிடதக்க தொகை வயோதிபர்கள்  உடலும் மனமும்  இளமையாகவே இருக்கிறது,  அவர்கள் தான்   இப்படியான செயல்களை செய்கிறார்கள். என்ன செய்வது…???

அண்ணை வயதுக்கேற்ப உடல் தளர்ந்து கொண்டு செல்லும்! ஆனால் மனம் என்றும் பதினாறு மார்க்கண்டேயனாக எண்ணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால்,
கணக்கு சரிதானே... விசுகர். 😂
அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣

சுத்து மாத்து செய்திருப்பதால் படங்கள் பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் குறைவு. மற்றும் படி நான் குறிப்பிட்ட விடயத்திற்கு தொலைபேசி வாயிலாக சந்தர்ப்பம் அதிகம். (இவருக்கு எல்லாத்தையும் கோடிட்டு காட்டவேண்டும்🤪)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஆசை தான் என்ன  ???  நாலு பிள்ளைகள் உண்டு   பேரப்பிள்ளைகளுமுண்டு 

இன்னும் என்ன ஆசை?? 🤣😂

அடுத்த சுற்று அண்ணா... 

ஆவியாக பின்னர் அமையக்கூடாது அல்லவா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அடுத்த சுற்று அண்ணா... 

ஆவியாக பின்னர் அமையக்கூடாது அல்லவா?🤣

அடுத்த சுற்றா ??

குழந்தையை எதிர்பார்த்தால்.  ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம்.   😂😂.  இந்த சமூகம் அடிக்க. வந்து விடும்    கவனம் 🤣🤣🙏.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அடுத்த சுற்றா ??

குழந்தையை எதிர்பார்த்தால்.  ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம்.   😂😂.  இந்த சமூகம் அடிக்க. வந்து விடும்    கவனம் 🤣🤣🙏.   

அதுக்கு தானே அண்ணா வகுப்புத் தோழியர் என்று எழுதினேன். 

ஒரு திருமணம் தான் செய்யலாம் என்றதால் கொஞ்ச ஏக்கங்கள் தள்ளி போடுதல்கள் பாக்கி இருக்கிறது. இனி டேஞ்சர் இல்லை 😜தானே.??

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

52 வயது என்பது ஒரு மனிதன் பேரன் பேத்திகளை காணும் வயசு. இந்த வயசில் 25 வயசு பெண் தனக்கு மாட்டிவிட்டது என்று நினைத்து ஏகப்பட்ட லட்சங்களை என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் எடுத்து விசுக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சபலம்?

இவர்களை பருவ வயதில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு அங்கிள் தாத்தா என்று சொல்லி வரவேற்பதுகூட மிக அபாயகரமானது.

கல்யாணம் என்பது சிலருக்கு அந்தந்த வயதில் தவறிபோகலாம், ஆனால் வசதியும் வதிவிட உரிமையும் உள்ள இவர் விதவைகளாக , இனி வாழ்வு எங்கே சென்று முடியும் என்று தெரியாமல்  கல்யாண வயதை கடந்தும் இன்றும் முதிர் கன்னிகளாக ஏழைகளாக வாழ்விழந்து போயிருக்கும் ஏகப்பட்ட நடுத்தர வயது பெண்கள் வாழும் எம் மண்ணில் சட்டப்படி அணுகி  திருமணம் செய்திருந்தால் இவரை வாழ்த்துவதற்கு வரிசையில் பலர் நின்றிருப்பார்கள்.

இவரை குறிப்பிடவில்லை, எல்லோரையும் குறிப்பிடவுமில்லை பெரும்பாலும் இவர் வயதையொத்த வெளிநாட்டில் நீண்டகாலம் திருமணம் செய்யாதவர்களில் பெரும்பாலோனோர் ஆபத்துக்குரியவர்கள்.

வாலிப வயது முழுக்க வேலைக்கும் போகாமல் கஞ்சா, தண்ணியடி, காட்ஸ் விளையாட்டு , அடுத்தவன்கிட்ட கடன் வாங்கிவிட்டு குடுக்காமல் விடுறது, காலம் முழுக்க ஆபாச படங்களுடன் காலம்  கழிப்பது,கடன் அட்டை ஏமாத்துவேலை என்று வயதுகளை தவற விட்ட பின்னர் வாழும் நாட்டில் இவர்களைபற்றி தெரிந்து விடுவதால் நாடுகள் கடந்து யாரையாவது காசையும் விசாவையும் காட்டி வலையில் விழுத்தி நாசமாக்க பார்ப்பார்கள்.

இவர்களை மோசடிபேர்வழிகளே மிக இலகுவில் வலையில் வீழ்த்துவார்கள் அந்த வலையில் ஐயாவும் தன்னை சொருகி கொண்டார்.

செக்ஸ் என்பது மனிதனின் வாழ்வியலின் ஒரு அங்கம் வழிமுறை தவறி போகாதவரை அது ஒன்றும் கொலை குற்றமும் அல்ல,, இப்படி ஏமாளியாகி அள்ளியிறைத்த பணத்திற்கு மேற்குநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாலியல் நிலையங்கள் சென்று பல வருடங்கள் தமது உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இப்படி எல்லாத்தையும் பறி கொடுத்து யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் செய்திகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு இவரின் செய்தியை பிரதானமாக்கும் அளவிற்கு போயிருக்க கூடாது.

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • R ரணில், A அனுர, S சஜித்.
    • போன கிழமை தானே... மாவை, ரணிலுக்கு  ஆதரவு தெரிவித்து இருந்தார். அதற்குள் மனம் மாறி... தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கக் கூடிய விடயம். 💪 ஆக... இப்போ, சுமந்திரன் தனியத் தான் ... சஜித்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் போலுள்ளது. 😂 தமிழரசு கட்சியில் இருந்து.... வேறு ஒருவரும் சுமந்திரனுடன், சஜித்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருப்பதை பார்க்க... இது சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முட்டாள் தனமான செயலாக உள்ளதை மக்களே அறிந்து கொள்வார்கள்.
    • ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்! ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச, ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1399540
    • ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.  காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய  அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபியின் இந்த செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1399493
    • ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1399550
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.