Jump to content

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

பொது வேட்பாளர் தெரிவு என்பது, வென்றாலும் (தமிழ் மக்கள் 100 வீதம் அவருக்கு வாக்களிப்பினும்) பூச்சிய விளைவை தருகின்ற, அதே நேரம் தோற்றால் பாதகமான சூழ் நிலையை தோற்றுவிக்கின்ற ஒன்று என இங்கு பல தடவை எழுதியுள்ளேன்.

பாதகமான விளைவுகளை சொல்லுங்கள் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

பொது வேட்பாளரை விட்டால் அடுத்து பேரினவாத தலைவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதை நாசூக்காக சொல்கிறீர்கள்.

சரி அவர்களுக்கு வாக்களித்து எதைக் கண்டோம்.

இனி எதைக் காணப் போகிறோம்?

இதைத் தானே மீண்டும் மீண்டும் நானும் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

4 minutes ago, ஈழப்பிரியன் said:

பாதகமான விளைவுகளை சொல்லுங்கள் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

 

வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

459820932_8256770077772254_4790331205442

 

459640743_507567938895520_64094014631397

 

May be an image of 2 people, speaker and crowd

 

459656066_122174746256210375_56887491975

 

459749332_122174746322210375_56764555512

 

May be an image of one or more people and crowd

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பொது வேட்பாளர் தெரிவு என்பது தமிழ் மக்களின் ஒற்றுமையை அல்ல, பிளவுகளை உலகுக்கு வெளிப்படையாக தெரிவுக்கும் ஒரு முறை என்பதால் தான், இதுபற்றி ஊடகங்களில் வர ஆரம்பித்த நாளில் இருந்து நான் எதிர்க்கின்றேன்.

இன்றிருக்கும் சூழ்நிலையில், முக்கியமாக வடக்கு கிழக்கு என்பது ஒன்றிணைந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இல்லாத போது, தமிழ் பேசும் மக்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு கூட கட்டமைக்கப்படாத சூழ் நிலையில், இது ஒரு விசப் பரீட்சை.

பொது வேட்பாளருக்கு 100 வீதம் தமிழ் மக்கள் வாக்களிப்பினும் கூட, அதன் விளைவுகள் பூச்சியம். வென்ற சனாதிபதியின் ஆட்சி தான் நிலவும். சர்வதேசமும் அவருடன் தான் கைகுலுக்கி தன் அலுவல்களைப் பார்க்கும்.

ஆனால் 50 வீதம் கூட பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை. அதனால் அதன்  விளைவு தமிழ் தேசிய அரசியலில் கடும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் அடிப்படையை தமிழ் பேசும் மக்களே நிராகரித்தனர் எனும் விதத்தில் இந்த விளைவு மற்றவர்களால் எடுக்கப்படும். 
தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களில் 50 வீதத்தினர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை  வாக்களிப்பின் மூலம் உலகுக்கு அறிவித்த பின், அங்கு எந்த அரசியல் மிச்சமிருக்க போகின்றது?

தமிழ் தேசிய அரசியல் வடக்கு கிழக்கு என்று இருந்து, பின் வடக்குக்கு மட்டும் என்று ஆகி, ஈற்றில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே என்று குறுகப் போகின்றது. 

 

நான் அவதானித்தவரை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வெளிநாட்டவர்  நாமல் ஆட்சிக்கு வருவதை நமட்டுக்குள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.. இதன் மூலம் இலகுவாக உறவினர்களுக்கு அசைலம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.. ஊரிலும் வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிக்கும் ஜடியாவில் உள்ளோர் சங்குக்கு போட்டு நாமலை ஆட்சியில் இருத்த விரும்புகிறார்கள்.. இதன் மூலம் இலங்கையை பதற்ற நிலையில் வைத்திருந்து வெளிநாட்டுக்கு போகலாம் என்று நம்புகிறார்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பலர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தேர்தலுக்கு கனடாவில் ஏன் சங்கூதுராங்கள்..?😂

என்ன என்ன கம்பிகட்டிற கதை எல்லாம் சொல்லுறாங்கள் ஆரோ நாலுபேற்ற விசர்க்கூத்துக்கு தமிழ்தேசியத்தை இழுத்து..😂

நீங்கள் அரியத்துக்கு காவடிதூக்குங்கோ இல்லா ஆட்டுக்குட்டிக்கு காவடி தூக்குங்கோ ஆனா தயவுசெய்து தமிழ்தேசியத்தை விட்டிடுங்கோ.. அதை உன்மையான தமிழையும் மக்களையும் நேசிக்கும் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் பாத்துக்கொள்ளுறம்..

நாளைக்கு அரியத்துக்கு எலெக்சன் நக்கீட்டு போச்சுதெண்டா அசிங்கம் நமக்குத்தான்.. உங்கட கட்ட வேகுறதுக்கு நாங்கள் எதுக்குடா எங்கட கவட்டைய வேகவைக்கோணும்..

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

16 Sep, 2024 | 03:56 PM
image
 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருகோணமலை மண்ணை பறித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் கடற்கரை அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும். 

திருகோணமலை மண்ணுக்கு பல வரலாறுகள் உண்டு. இலங்கைக்கு சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடி ஏற்றிய 22 வயது இளைஞன் நடராசா சுட்டுக் கொல்லப்பட்டார். 

1956இல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு தந்தை செல்வாவினால் இங்கு தான் நடாத்தப்பட்டது. அதன்போது இணைந்த வடகிழக்கின் தலைநகரமாக திருகோணமலையை அறிவித்திருந்தார்.

அப்போது கூட சமஷ்டியை வலியுறுத்தியே பேசியிருந்தார். 1977க்கு முன்பு பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. 1977க்கு பின்பு சேருவில எனும் தொகுதியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் லீலாரத்ன என்னும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

2009 மே 18இல் நடைபெற்ற போரின்போது நடந்த சம்பவம் பற்றி பல சர்வதேச நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசியிருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தடுத்தவர்களே வெட்கமில்லாமல் வாக்கு கேட்கின்றார்கள். அதற்கு சில தமிழ் தேசியத்தில் உள்ளவர்கள் சோரம் போகின்றார்கள்.

அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். சங்கு சின்னத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் பொய் வதந்திகள் வரலாம். அதனை நம்பி ஏமாற வேண்டாம். செயற்கை நுண்ணறிவு மூலமாக எனது படத்தை பயன்படுத்தி போலியான பிரச்சாரங்களை முன்வைத்து செயற்படுவார்கள். எதையும் நம்ப வேண்டாம் என்றார்.

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

IMG-2634.jpg

இது எப்படி இருக்கு?


மாவை
1. காலை சஜித் ஆதரவு 
2. மாலை பொதுவேட்பாளர் ஆதரவு 
3. இரவு ரணில் ஆதரவு… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் தேர்தலுக்கு கனடாவில் ஏன் சங்கூதுராங்கள்..?😂

 

 

 

சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?

Link to comment
Share on other sites

32 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் அவதானித்தவரை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வெளிநாட்டவர்  நாமல் ஆட்சிக்கு வருவதை நமட்டுக்குள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.. இதன் மூலம் இலகுவாக உறவினர்களுக்கு அசைலம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.. ஊரிலும் வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிக்கும் ஜடியாவில் உள்ளோர் சங்குக்கு போட்டு நாமலை ஆட்சியில் இருத்த விரும்புகிறார்கள்.. இதன் மூலம் இலங்கையை பதற்ற நிலையில் வைத்திருந்து வெளிநாட்டுக்கு போகலாம் என்று நம்புகிறார்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பலர்..

இல்லை, நீங்கள் எழுதும் காரணங்களுக்காகத் தான் புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர், பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் என எண்ணவில்லை. அவர்கள் எவரும் நாமல் வருவதை விரும்பக் கூடியவர்கள் அல்ல. அந்தளவுக்கு சுயநலமிகளும் அல்ல.

போர், சுனாமி, கொவிட் தொற்று நோய்க்காலம் என்று தாயக மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்திய பொழுதுகளில் எல்லாம் புலம்பெயர் மக்களின், அமைப்புகளின், சங்கங்களின் பொருளாதார, தார்மீக உதவிகள் இல்லாமல் விட்டிருந்தால் தாயக மக்கள் இன்னும் கடும் துன்பத்தை எதிர் நோக்கியிருப்பர். அவ்வாறானவர்களை இவ்வாறு குற்றம் சொல்வது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும்.

ஆனால், பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், வெற்றுக் கோசங்களுக்கு மயங்கும் தன்மை புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புகளின் பொதுவான பண்பு. அதன் வழிதான் சீமானை ஆதரிப்பதும், பொது வேட்பாளாரை ஆதரிப்பதும், முன்னர் சைக்கிள் அணியை ஆதரித்ததும்.

தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?

சும்மா விசர்க்கதை கதையாதேங்கோ.. செப்டெம்பர் 22 ஆம் திகதி சிங்கள தலைவர்களுக்கு வேணுமெண்டால் கதிரையை பிடிக்குர நாளா இருக்கலாம், ஆனா எங்கட சங்கு தோழர்களுக்கு இவ்வளவு நாழும் கழுத்து புடிப்பில இருந்த சர்வதேசம் திரும்பி பார்க்கபோறநாள்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை | Mavai Senathiraja Support In Ariyanendren

தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை

இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா

Published By: VISHNU   16 SEP, 2024 | 10:28 PM

image
 

தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது. 

அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள்.

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன்.

அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/193882

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு

புதிய இணைப்பு

வடக்கு - கிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குச் சேர்ப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று(16.09.2024)மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது.

 

உரிமை கோரிக்கை

கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு | Election Campaign Batticaloa General Candidate

 

அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம்.

பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.

செய்தி - குமார்

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில்  ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரசார நடவடிக்கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர் பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.

election-campaign-batticaloa-general-candidate-

இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் 

மேலும், தமிழ் மக்கள் சங்குச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என  துணுகாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார்.

இகு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

https://www.facebook.com/LankasriTv/videos/490666260501955/?ref=embed_video&t=0

Gallery

Gallery

Gallery

https://tamilwin.com/article/election-campaign-batticaloa-general-candidate-1726482719?itm_source=parsely-api

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.

large.IMG_7035.jpeg.dbfd42ce7f7a62483b6a

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும். 

ஆயுதம் ஏந்தி போராடி அழிவுகளைத்தான் கண்டோம். அரியத்தாருடைய சிந்தனை அன்று யாருக்கும் வராமல் போயிற்றே. அப்பொழுதே பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத்தை அதிரவிட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லியிருக்கலாமே. காலம் கடந்து வந்து சங்கெடுத்து ஊதிக் கொண்டிருக்கிறோம்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மாவை
1. காலை சஜித் ஆதரவு 
2. மாலை பொதுவேட்பாளர் ஆதரவு 
3. இரவு ரணில் ஆதரவு… 😂

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை என்பவர் மோசமான சந்தர்பவாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.

இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.

சரியாக சொன்னீர்கள் புலம் பெயர் நாடுகளில்  தமிழ் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்ளுபவர்கள் ஒரு சீரியலை டெலிவிசனில் பார்ப்பது போலவே தாயக அரசியலை நோக்குகின்றனர். அவர்களுக்கு நாளாந்தம் பொழுது போக ஒரு  Thriling  அரசியல் வேண்டும். யுத்த காலங்களில் அவர்களுக்கு  இருந்த,  அவர்கள் ரசித்த அந்த சுவாரசியம் இப்போது இல்லாமல் தவிக்கிறார்கள் பாவம்.  

Edited by island
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0-1-1.jpg?resize=750,375

யாழ். வணிகர் கழகத்தினருடன் அரியநேத்திரன் விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை எனவும் பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, அனைவரும் ஏமாற்றப்பட்டதாகவும், எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399716

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து மத்திய மலைநாட்டிலும் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (17.09.2024) இடம்பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர்.

பிரசார கூட்டம்

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு | Ariyanethran Lobby Meeting At Upcountry

இந்நிலையில், இன்றைய தினம் மத்திய மலைநாட்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றதுடன் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

Gallery

Gallery

https://tamilwin.com/article/ariyanethran-lobby-meeting-at-upcountry-1726587545#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tna.jpg?resize=750,375

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் மாலை 05.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளா் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கௌரவ நீதியரசரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. புவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2024-09-18-at-8.48.22-AM.

https://athavannews.com/2024/1399857

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவு படுத்தியதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் அது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று  மட்டக்களப்பு – கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கொண்டுள்ளார்.

சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணமும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா, எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17266301630.png

17266301631.png

17266301632.png

17266301633.png

17266301634.png

https://thinakkural.lk/article/309483

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தாயக மக்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் மிகத் தெளிவாக உள்ளனர் தமது கருத்தை மக்கள் முன் வைக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு

 

 

இது மிகவும், தூர நோக்கும் இராஜதந்திரமும் மிக்க புலிகளின் செயல்களுள் ஒன்று என்பேன்!

புலிகளின் தண்டனையால் ரணில் படு தோல்வி அடைந்தார். மகிந்த பதவிக்கு வந்து, யுத்தம் மீண்டும் ஆரம்பித்து, முள்ளி வாய்க்காலில் பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். சர்வதேச நாடுகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தமிழர் பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்போது தமிழர் பக்கமே நிற்கின்றன. இனப்படுகொலையாளிகளான பக்சாக்கள் ஹேக் நகரில் சிறையில் இருக்கிறார்கள்! ரணில், இன்னும் தோல்வியில் இருந்து மீள இயலாமல் வீழ்ந்து கிடக்கிறார்!

பி.கு: முடிவிலி எண்ணிக்கையான சமாந்தர அகிலங்கள் (parallel universe) இருக்கின்றன, அந்த சமாந்தர அகிலங்களில் ஒன்றில் 👆 இது நடக்கிறது என்ற நம்பிக்கையோடு வாசிக்கவும்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna.jpg?resize=750,375

என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப் படலாம்! -பா. அரியநேந்திரன்.

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள்  திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். சிலர் விருப்பு வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கூறுகின்றார்கள். அவ்வாறு செய்யாது தனியே தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். அதான் ஒவ்வொரு தமிழ் மக்களின் வரலாற்று கடமையாகும்.

கடந்த 23ஆம் திகதி ‘நமக்காக நாம்’ என்ற பிரச்சார பணியை நாம் யாழ்ப்பாணத்தில் பொலி கண்டியில் ஆரம்பித்து ,எட்டு மாவட்டங்களிலும் பிரச்சார பணிகளை முன்னெடுத்தோம். அதனூடாக மக்கள் மத்தியில் பொது வேட்பாளருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் பொது வேட்பாளர் பற்றி வதந்திகளை பொய்யான தகவல்களை பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர் என எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. AI  தொழிநுட்பத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்களைப்  பரப்பவுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

எனவே மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி காலை வேளைகளிலையே வாக்கு சாவடிகளை சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1400036

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு தெரியும்   நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம்  இந்தியாவை திட்டிக்கொண்டு   பகைத்துக்கொண்டு   சுயாட்சி   தமிழ் ஈழம்  பெற முடியாது என்பது தான்  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்   இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும்   ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள்  இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன்  குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள்  எப்படி நடத்தப்படுகிறார்கள்??  நன்றி வணக்கம்…   இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை 
    • "உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁
    • "வழிப்போக்கன்"     “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with love for her family, her home, her school. Gradually expanding, this love for the native land will turn into love for your country - for its history, its past and present ” (டிஎஸ் லிகாச்சேவ் / DS Ligachev).   உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற இலட்சியம் இல்லாமலே போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் இருட்டிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியைத்தேடி நடக்கிறார்கள்; சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள்; சிலர் பட்டு விரித்த பாதையில் செல்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர்.   இதை யாரும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக இன்று 19 செப்டம்பர் 2024. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த பரப்புரை காலத்தில் இவை எல்லாவற்றையும் நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அனுபவித்து இருப்பீர்கள். அவர்களும் அரசியலில், அரசியல் அரங்கில் ஒரு வழிப்போக்கன் தான்! ஆனால் வேறு வழியில் அல்லது நோக்கில் !!   என்றாலும் அவ்வப்போது வறுமையின் கொடும் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும், தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையைப் பஞ்சினும் இலேசாக மதித்துப் புன்னகை பூத்தபடியே நாடு நாடாய் பயணம் செய்து உலகின் ஒவ்வொரு மூலை முடக்கையும் ஆராயும் ஒரு “வழிப்போக்கன்.” னின் கதைதான் இது!   ஒரு காலத்தில், மலைகள் மற்றும் பசுமையான வயல் வெளிக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், சிவா என்ற ஒரு வழிப்போக்கன் வாழ்ந்து வந்தான். சிவா தனது சிந்தனையில் முயற்சியில், ஒரு நிலையாக நின்று விடாமல், எல்லைகள் தாண்டி அலைந்து திரிபவனாக இருந்தான், எனவே அவனது கிராமத்தின் எல்லைக்கு அப்பால் உலகை ஆராய வேண்டும் என்ற தீவிர ஆசை அவனுக்கு இருந்தது.   சிறு வயதிலிருந்தே, சிவா தொலைதூர நிலங்கள், கம்பீரமான உயர்ந்த மலைகள் மற்றும் அலைபாயும் கடல்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டான். அவனது அமைதியற்ற இதயம் எதாவது சாகசத்திற்காக ஏங்கியது, மேலும் அவன் தனது கற்பனையின் துண்டுகளாக இருக்கும் தொலைதூர இடங்களில் கால் வைக்க கனவு கண்டான்.   "ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர வேகாது கொஞ்சம் வெயிலும்தான் தணிய சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி"   ஒரு நல்ல காலை வேளையில், தோளில் கனமான பையுடனும், கையில் ஒரு வரைபடத்துடனும், சிவா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விடை பெற்று, ஏழாறு திக்கும் ஒரு ஈ காகம் கூட அற்ற, மக்கள் பொதுவாக குறைவாகப் பயணித்த பாதையில் செல்லத் தீர்மானித்த அவன், தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினான்.   பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டு தான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை. பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம். அப்படித்தான் சிவா உறுதியாக தன் பயணத்தை தொடர்ந்தான்.   ஒரு வழிப்போக்கனாக, சிவா பரந்த நிலப்பரப்புகளை கடந்து, பல்வேறு கலாச்சாரங்களை சந்தித்தான், மேலும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தான். அடர்ந்த காடுகளின் வழியாக நடைபயணம் மேற்கொண்டான், உயரமான சிகரங்களில் ஏறி, சீறி பாயும் ஆறுகளைக் கடந்தான். அவன் கால் பாதிக்கும் ஒவ்வொரு அடியும் அவனை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதற்கும் அவனது சொந்த குணாதிசயத்தின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியது.   ஆமாம், சிவாவுக்கு, சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை கூறிச் சென்றது ஞாபகம் வந்தது. அதை இன்று அனுபவரீதியாக கண்டும் கேட்டும் பழகியும் அவன் உணர்ந்தான்.   "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல ; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆறாது கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு நீர்வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புறநானூறு - பாடல் 192)   அவனது பயணத்தில், சிவா இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சந்தித்தான். அவன் இயற்கையின் அழகினை அடிவானத்தில் சூரிய அஸ்தமனத்தின் பொழுது கண்டான், அந்நியர்கள் பாடி மயக்கும் மெல்லிசைகளைக் கேட்டான், மேலும் பலவிதமான உணவு வகைகளை, மகிழ்விக்கும் சுவைகளை ருசித்தான். அவன் கணக்கில் அடங்கா சவால்களை எதிர்கொண்டான், இயற்கையில் சீற்றங்களான கொடிய புயல்களை எதிர்கொண்டான், பலதடவை தங்குமிடம் இல்லாமல் நீண்ட இரவுகளை சமாளிக்க வேண்டியும் அவனுக்கு இருந்தது , மற்றும் அறிமுகமில்லாத பிரதேசங்களுக்கு செல்லவும், விந்தையான மனிதர்களை சந்திக்கவும் வழிவகுத்தது. இவைகள் எல்லாவற்றையும் விபரமாக குறிப்பு எடுக்க அவன் தவறவில்லை.   அவன் மேலும் பயணங்கள் தொடரும் பொழுது, ஒரு வழிப்போக்கனாக இருப்பதன் உண்மையான சாராம்சம் உலகத்தின் பௌதீக ஆய்வில் அல்லது வெளி உலக ஆய்வில் மட்டுமல்ல, சுயத்தை ஆராய்வதிலும் உள்ளது என்பதை சிவா உணரத் தவறவில்லை. அது மட்டும் அல்ல, அவன் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் பகிர்ந்து கொள்ள எதோ ஒரு கதை மற்றும் மற்றவர்களுக்கு கற்பிக்க எதோ ஒரு பாடம் இருப்பதை அவன் உணர்ந்தான். எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல, தாழ்மையான எளிய கிராமவாசிகள் முதல் உயர்ந்த ஞான முனிவர்கள் வரை, ஒவ்வொரு தொடர்பும் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்து, வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டத்தை ஆழமாகவும் பரந்தளவும் வடிவமைத்தது. ஆண்டுகள் கடக்க கடக்க , சிவாவின் பயணங்கள் அவனை பூமியின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அவனை ஒரு அனுபவமிக்க பயணியாகவும், புத்திசாலியாகவும், அடக்கமாகவும், நினைவுகளின் பொக்கிஷமாகவும் மாற்றியது.   அவனது பயணங்களின் சாகசங்களின் இறுதியில், சிவா தனது கிராமத்திற்குத் திரும்பினான், அவனது இதயம் நன்றியுணர்வு மற்றும் புதிய ஞானத்தால், அறிவால் நிரம்பி வழிந்தது. அவன் தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் எல்லோருடனும் தனது கதைகளைப் பகிர்ந்து கொண்டான், இது மேலும் பலரை, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், அது வழங்கும் அதிசயங்களைத் கண்டு அறியவும் அவர்களுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைத்தது !   அவன், இன்று இந்த உலகில் இல்லை, ஆனால் அவனது உருவச்சிலை பலரை அவன் வழியில் உலகத்தை அறிய, ஆராய உருவாக்கிக் கொண்டே இருக்கிறது!   "சிவா வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி" என்று அவனின் உருவச் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டு இருந்தது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேயை வளர்த்திருக்கிற... சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது. 😂 Mohan Muthuram 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.