Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:00 AM

image
 

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 

https://www.virakesari.lk/article/193826

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குமாத்தின்ரை திறத்திலை… அதுக்கு, குஞ்சம் கட்டி விட்டானாம். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் ஏற்கனவே பொய்யும் பிரட்டும் சுத்துமாத்தும்....😂
இதுக்குள்ள சொந்த பேப்பர் வேற😎

3 hours ago, ஏராளன் said:

"சுமந்திரம்"

சுமந்திரம் சமாந்தரமாய் இருக்குமா? எழுதுமா? 😁

3 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து,

தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியாதவனிடம் வெள்ளோட்ட தமிழ் பத்திரிகை கையளிப்பு. 
விளங்கினமாதிரித்தான். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விளக்குமாத்தின்ரை திறத்திலை… அதுக்கு, குஞ்சம் கட்டி விட்டானாம். 😂 🤣

பணம் கூட வந்தால் எங்கே வைப்பது?? எப்படி செலவழிப்பது??

அதுக்கு இது சரியான வழிதான்.  தொடர்ந்து நட்டம் காட்டுவதற்கு. ...

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியாதவனிடம் வெள்ளோட்ட தமிழ் பத்திரிகை கையளிப்பு. 
விளங்கினமாதிரித்தான். :cool:

இதை  சுமந்திரனின் அதிபுத்திசாலித்தனம் என்பதா, ராஜதந்திரம்  என்பதா? சுமந்திரன் தெற்கில் ஒன்று சொல்வார், வடக்கில் அதற்கு வேறு விளக்கம் கொடுப்பார். கேட்டால்; பத்திரிகைக்காரர் நான் சொன்னதை திரித்து எழுதி விட்டார்கள் என்பார், அல்லது தனது கருத்துக்கு சரியான சொல் சிங்களத்தில் இல்லை, ஆங்கிலத்தில் இல்லை என்று மழுப்புவார். இனி வருங்காலத்தில் சுமந்திரம் எனும் பத்திரிகையில் அவரின் சுத்து மாத்தெல்லாம் சுதந்திரமாய் வெளிவரும். அதை  வாசிப்பது சஜித்தாகத்தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தெரியும் இந்த தேர்தலோடு அவரின் அரசியல் மட்டுபடுத்தபட்டதாய் குறுகி விடும் எனவே அவசர அவசியமாய் ஊது குழல் ஒன்று தேவைப்படுது .

அவர் உடைத்து போட்ட தமிழரசு கட்சி இனி ஒரு போதும் ஒன்று சேர கூடாது தமிழர்கள் ஒரு தனிப்பெரும் சக்தியாக அரசியலில் எழுச்சி பெறகூடாது இது இந்திய டெல்லி யின் நோக்கம் அதற்கமையவே இந்த வேடதாரி இரண்டாவது மறவன் புலவு சச்சியர் அடுத்த கோமாளி வேலன் சுவாமி இவர்களை வழி நடாத்த யாழில் இந்தியன் தூதரகம் .

பேப்பர் என்ன தொலைக்காட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது .

டெல்லியின் நிகழ்ச்சி நிரலை தாண்டி பொது வேட்ப்பாளர் உருவாக்கம் டெல்லியை யோசிக்க வைத்துள்ளது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:00 AM

image
 

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 

https://www.virakesari.lk/article/193826

 

சுமந்திரம்; ஓசை : 01 மந்திரம் : 01 பக்கங்கள் : 12

பத்திரிகையின் ஒரு பீ டி எவ் கோப்பை இணையுங்கள் உள்ளே என்ன எழுதப்பட்டு உள்ளன என அறிய ஆவல். 

வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்திட்டங்கள், அறிக்கைகள், நிகழ்வுகள், அவற்றின் நிழற்படங்களின் தொகுப்புக்களை கையேடாக மாதம் ஒரு தடவையோ அல்லது காலாண்டுகளுக்கோ வெளிவிடுவார்கள். 

ஆனால், இலங்கை மக்களுக்கு இவை புதிய விடயம்தான் போல. சிங்கள அரசியல்வாதிகளும் இப்படி செய்கின்றார்களோ?

சுமந்திரம் மூலம் மக்கள் ஏதாவது பயன் பெற்றால் வாழ்த்துக்கள்! 😁

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உதயன் பத்திரிகை இவருக்கு ஆதரவாக எழுதியது.உட்கட்சி முரண்பாடு வந்தவுடன் புதிய சுதந்திரன் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து தனக்குச் சார்பான கருத்துக்களை எழுத வைத்தார். அதுமட்டுமல்லாமல் வித்தியாதரனைக் கையில் போட்டுக் கொண்டு காலைக்கதிர் பத்திரிகையை ஆரம்பித்து காலைக்கதிர் மாலைமலர் என இரண்டு வேளையும் நடத்தி தனக்கு சார்பான செய்திகளை எழுதவைத்தார். இப்பொழுது தன்பெயரிலேயே சுமத்திரம் என்னும் பெயரில் பத்திரிகையை நடத்தி தனது சொம்புகளை வைத்து எழுதவைத்து தமிழரசுக்கட்சிக்குள்தனது செல்வாக்கைத் தக்க வைக்க முயலுகிறார். உழுதவயலை உழுது அன்றே நெருப்பில்லாமல் பொங்கல் பொங்கி ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலைக்காக தனது உடல் >பொருள் ஆவி அனைத்தைுயம் தியாகம் செய்த தலைனின் பெயரிலே கூட பத்திரிகை நடத்தப்படவில்லை. சுமத்திரன் தமிழ்மக்ககை மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு விசர்க்கூத்து ஆடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியாதவனிடம் வெள்ளோட்ட தமிழ் பத்திரிகை கையளிப்பு. 
விளங்கினமாதிரித்தான். :cool:

அண்ணை, சஜித் இந்த பத்திரிகையை எதற்கு உபயோகப்படுத்துவார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பணம் கூட வந்தால் எங்கே வைப்பது?? எப்படி செலவழிப்பது??

அதுக்கு இது சரியான வழிதான்.  தொடர்ந்து நட்டம் காட்டுவதற்கு. ...

ரணில்... சாணக்கியனுக்கு இந்த முறை 60 கோடி ரூபாயும்,

சுமந்திரனுக்கு 100 கோடி ரூபாயும் கொடுத்துள்ளாராம்.

சாணக்கியனுக்கு... கிடைத்த 60 கோடி ரூபாய் விடயம், அவைத் தலைவர் சிவஞானத்துக்கும் தெரியும் என்ற சங்கதியை  சில வாரங்களுக்கு முன் யாழ்த்தில் உள்ள  வேறொரு செய்தியின் இடையிலேயே   வாசித்து அறிந்து கொண்டேன்.

100 கோடி ரூபாய்க்கு.. சுமந்திரன் அவரது பத்திரிகைக்குட்டக் கணக்கு காட்டுவது என்றால்... அவர் இன்னும் 25 ருடங்களுக்காவது அந்தப் பத்திரிகையை நடத்த வேண்டும். அதற்குள் சிங்களம் முழுத் தமிழரையும் முழுங்கி ஏப்பம் விட்டு விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அண்ணை, சஜித் இந்த பத்திரிகையை எதற்கு உபயோகப்படுத்துவார்?

நான் நினைக்கிறேன் அவர் தமிழரசுக் கட்சியை துடைக்க இதை பயன்படுத்தலாம்.

ஏனெனில் தமிழரசுக் கட்சி தான் சுமந்திரன் ஆகி அது இன்று சுமந்திரம் ஆகி இருக்கிறது. எனவே அதை எடுத்து இதை துடைத்து விட்டால் தமிழரசுக் கட்சி சுத்தமாகி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் வாசிக்க தெரியுமா...?

ஒரு தமிழ் அறிஞர், ஒரு தமிழ் பெரியவரிடம் முதல் பத்திரிகையை கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை கூட இல்லாத சுமந்திரனுக்கு, தமிழர்களிடம் அரசியல் செய்ய என்ன யோக்கியதை இருக்கு.

சிங்களவர் மத்தியில் வாழ்வது பெருமை என்று சொன்ன ஆளிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது வீண். ஆகவே இந்தத் தேர்தலுடன் இவரை நிரந்தரமாக புறக்கணிப்பதே தமிழருக்கு நன்மை பயக்கும்.

சிங்களவனுக்கு... தனது முதல் பத்திரிகையை கொடுத்து தமிழன் முகத்தில் கரி பூசிய சுமந்திரனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

முதலில்... சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் வாசிக்க தெரியுமா...?

ஒரு தமிழ் அறிஞர், ஒரு தமிழ் பெரியவரிடம் முதல் பத்திரிகையை கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை கூட இல்லாத சுமந்திரனுக்கு, தமிழர்களிடம் அரசியல் செய்ய என்ன யோக்கியதை இருக்கு.

சிங்களவர் மத்தியில் வாழ்வது பெருமை என்று சொன்ன ஆளிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது வீண். ஆகவே இந்தத் தேர்தலுடன் இவரை நிரந்தரமாக புறக்கணிப்பதே தமிழருக்கு நன்மை பயக்கும்.

வடகிழக்கு தமிழருக்கு பிடித்த ஏழரை சனி சுமத்திரன் அவ்வளவு இலகுவாக அரசியலில் இருந்து ஒதுங்காது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

இதுக்குத் தான் ரணில் 10 கோடி ரூபா கொடுத்தாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பேட்டியில் குறிப்பாக 46ம் நிமிடத்தில் இருந்து பார்க்கவும் கேட்கவும் கிரகிக்கவும். 

38 minutes ago, தமிழ் சிறி said:

ரணில்... சாணக்கியனுக்கு இந்த முறை 60 கோடி ரூபாயும்,

சுமந்திரனுக்கு 100 கோடி ரூபாயும் கொடுத்துள்ளாராம்.

சாணக்கியனுக்கு... கிடைத்த 60 கோடி ரூபாய் விடயம், அவைத் தலைவர் சிவஞானத்துக்கும் தெரியும் என்ற சங்கதியை  சில வாரங்களுக்கு முன் யாழ்த்தில் உள்ள  வேறொரு செய்தியின் இடையிலேயே   வாசித்து அறிந்து கொண்டேன்.

100 கோடி ரூபாய்க்கு.. சுமந்திரன் அவரது பத்திரிகைக்குட்டக் கணக்கு காட்டுவது என்றால்... அவர் இன்னும் 25 ருடங்களுக்காவது அந்தப் பத்திரிகையை நடத்த வேண்டும். அதற்குள் சிங்களம் முழுத் தமிழரையும் முழுங்கி ஏப்பம் விட்டு விடும்.

தமிழ் சிறீயவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பேட்டியின் 46 ம் நிமிடங்களில் இருந்து பார்க்கவும். MPக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படிப் பாவிக்கப்படுகிறது என்பது தங்களுக்கு புரிந்து கொள்ளும்படி அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 

1 hour ago, நியாயம் said:

 

சுமந்திரம்; ஓசை : 01 மந்திரம் : 01 பக்கங்கள் : 12

பத்திரிகையின் ஒரு பீ டி எவ் கோப்பை இணையுங்கள் உள்ளே என்ன எழுதப்பட்டு உள்ளன என அறிய ஆவல். 

வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்திட்டங்கள், அறிக்கைகள், நிகழ்வுகள், அவற்றின் நிழற்படங்களின் தொகுப்புக்களை கையேடாக மாதம் ஒரு தடவையோ அல்லது காலாண்டுகளுக்கோ வெளிவிடுவார்கள். 

ஆனால், இலங்கை மக்களுக்கு இவை புதிய விடயம்தான் போல. சிங்கள அரசியல்வாதிகளும் இப்படி செய்கின்றார்களோ?

சுமந்திரம் மூலம் மக்கள் ஏதாவது பயன் பெற்றால் வாழ்த்துக்கள்! 😁

உதெல்லாம் உந்த பொடியளுக்கு விளங்காது கண்டியளோ,.. அவங்கள யாராவது உசுப்பேத்தினால் போதும் Crowd mentally யின் பாதிப்பின் காரணமாக கல்லெறிவார்கள். ஏனடா கல்லெறியிறீங்க என்று கேட்டால் அவங்களட்ட பதில் இருக்காது...

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, MEERA said:

அண்ணை, சஜித் இந்த பத்திரிகையை எதற்கு உபயோகப்படுத்துவார்?

சஜித்துக்கே அந்த பேப்பரை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் இருக்கலாம்.
நான் சுமந்திரம்  பேப்பர கூப்பன் மா அரிக்கக்கூட பாவிக்கமாட்டன்.

நெஞ்சிலே வஞ்சமும் எழுத்தில் விசமும் கலந்திருக்கும் சுமந்திரனின் சுமந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ரணில்... சாணக்கியனுக்கு இந்த முறை 60 கோடி ரூபாயும்,

சுமந்திரனுக்கு 100 கோடி ரூபாயும் கொடுத்துள்ளாராம்.

சாணக்கியனுக்கு... கிடைத்த 60 கோடி ரூபாய் விடயம், அவைத் தலைவர் சிவஞானத்துக்கும் தெரியும் என்ற சங்கதியை  சில வாரங்களுக்கு முன் யாழ்த்தில் உள்ள  வேறொரு செய்தியின் இடையிலேயே   வாசித்து அறிந்து கொண்டேன்.

100 கோடி ரூபாய்க்கு.. சுமந்திரன் அவரது பத்திரிகைக்குட்டக் கணக்கு காட்டுவது என்றால்... அவர் இன்னும் 25 ருடங்களுக்காவது அந்தப் பத்திரிகையை நடத்த வேண்டும். அதற்குள் சிங்களம் முழுத் தமிழரையும் முழுங்கி ஏப்பம் விட்டு விடும்.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக கொடுக்கப்பட்ட கப்பமா, கட்சியை பிரித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனதற்கு கூலியா, தேர்தலின் பின் புதிய கட்சி அமைக்க கொடுக்கப்பட்ட நிதியா இது? அது அபிவிருத்திக்கு தந்த பணம் என்பார்கள் இருவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா?

12 hours ago, நியாயம் said:

வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்திட்டங்கள், அறிக்கைகள், நிகழ்வுகள், அவற்றின் நிழற்படங்களின் தொகுப்புக்களை கையேடாக மாதம் ஒரு தடவையோ அல்லது காலாண்டுகளுக்கோ வெளிவிடுவார்கள். 

அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்!  இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து. 

உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த 12 பக்கங்கள் அடங்கிய பத்திரியை இணையுங்கள். உள்ளடக்கத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்வோம். 

உள்ளே நடுப்பக்கத்தில் சஜித் தேர்தல் பிரச்சாரம் படம் போட்டு உள்ளதோ என்னவோ. 😁

தவிர, சுமந்திரன் ஐயா ஆங்கில புலமை உடையவர். உள்ளே ஆங்கிலத்திலும் இரண்டு பத்தி காணப்பட வாய்ப்பு உள்ளது. 😁

யார் என்ன சொன்னாலும் ஐயாவுக்கு மனதில் எவ்வளவு வைராக்கியம். எவ்வளவு செல்ப் கொன்பிடன்ஸ். அதை பாராட்ட வேண்டும். 😁

பாடசாலை சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், வகுப்பு பிரிவுகள் இடையே சமூக ஊடக குழுமங்களில் உள்ள நிர்வாக முத்திரைகளுக்கு போட்டியிட்டு அடிபடும் இந்த காலத்தில் தனது அரசியல் எதிர்காலத்தின் ஸ்திரத்தன்மைக்கு சுமந்திரன் ஐயா எடுக்கும் முயற்சிகளை குறை சொல்வதற்கு இல்லை. 

நாட்டில் உள்ள மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்து அரசியல் செய்கின்றார்கள் என நம்புகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

எனக்கு இருக்கும் ஒரேயொரு பிரச்சினை பத்திரிகையின் தலைப்பு.
"சுமந்திரம்" என்பதை மாற்றிவிட்டு "கருமாந்திரம்" என்று வைத்தால் சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
அடுத்ததாக சுமந்திரம் தனது தெரிவை மக்களிடம் விற்கும் தரகுவேலையை புறத்தே வைத்துக்கொண்டு மக்களை அவர்கள் தெரிவை அவர்களே தெரிவுசெய்துகொள்ள ஜனநாயகப்படி அனுமதிக்கவேண்டும். அவரது சட்டாம்பித்தனத்தை நீதிமன்றத்திற்குள் வைத்துக்கொள்ளலாம்   

16 hours ago, Kapithan said:

உதெல்லாம் உந்த பொடியளுக்கு விளங்காது கண்டியளோ,.. அவங்கள யாராவது உசுப்பேத்தினால் போதும் Crowd mentally யின் பாதிப்பின் காரணமாக கல்லெறிவார்கள். ஏனடா கல்லெறியிறீங்க என்று கேட்டால் அவங்களட்ட பதில் இருக்காது...

நோ....நோ ....மிஸ்டர் சுமந்திரம்  கோ.ப.சே அப்படியெல்லாம் எல்லோரையும் ஒரே பட்டியலில் அடக்கப்படாது கண்டியளோ. ஏன்டா கல்லெறியுறீங்கள் எண்டு என்னிடம்  கேட்டால் வண்டி வண்டியாக கொட்டுவேன் என்பது உங்களுக்கும் தெரியும். பதில் சொல்லமுடியாமல் கப்பு சிப்பு ஆனவர் தான் நீங்களும்    

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

முதலில்... சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் வாசிக்க தெரியுமா...?

ஒரு தமிழ் அறிஞர், ஒரு தமிழ் பெரியவரிடம் முதல் பத்திரிகையை கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை கூட இல்லாத சுமந்திரனுக்கு, தமிழர்களிடம் அரசியல் செய்ய என்ன யோக்கியதை இருக்கு.

தமிழ் சிறி, உங்களுக்கு சுமந்திரன் மேல் உள்ள கோவம் தெரிகிறது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் சுமந்திரனின் பத்திரிகை முதலில் யாழில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கும், மேடையில் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு அதன்பின்னர்தான் சுஜித்துக்கு வழங்கப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kavi arunasalam said:

தமிழ் சிறி, உங்களுக்கு சுமந்திரன் மேல் உள்ள கோவம் தெரிகிறது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் சுமந்திரனின் பத்திரிகை முதலில் யாழில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கும், மேடையில் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு அதன்பின்னர்தான் சுஜித்துக்கு வழங்கப்பட்டது.

 

On 16/9/2024 at 08:46, ஏராளன் said:

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனால்... தமிழரசுட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகி சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள்.

முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது

தவறான புரிதல் தமிழ்சிறி. எனது கருத்துக்கள் பொது வேட்பாளருக்கு எதிரானது என்பதுதான் சரி. 

சுஜித்தின் யாழ்ப்பாண பிரச்சாரக் கூட்டத்தில் சுமந்திரன் பேசியதை ஏராளன் யாழ் களத்தில் இணைத்திருக்கிறார். அதனை கேட்டீர்களானால் (நேமில்லாவிட்டால் அந்த வீடியோவின் இறுதிப் பகுதி) தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2024 at 07:46, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:00 AM

image
 

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 

https://www.virakesari.lk/article/193826

 

On 16/9/2024 at 07:46, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:00 AM

image
 

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 

https://www.virakesari.lk/article/193826

"சுதந்திரம் தேடும் இனத்துக்கு சுமந்திரம்
சூது கவ்வுது தலை சுத்துது !
தந்திரம் இதுவோ மந்திர வேதமோ 
சுந்தர தமிழில் மந்தியின் பாச்சலோ?"


"மூன்று தேர்தலில் வழி காட்டினானாம்
மூக்கு உடைந்து ஒதுக்கப்பட்டது தெரியாதோ?
அபிலாசைகளை அடுக்கி ஒழுங்கு படுத்துகிறான் 
அதனை வலியுறுத்துவதை எதிர்த்து நிற்கிறான்?"


"மூன்று வேட்ப்பாளரை ஒப்பிட்டுப்  பார்க்கிறான் 
ஒன்றுக்கும் இணங்காத கட்சிக்குள் தேடுகிறான்?     
மூக்குக்கு மேலே நீரின்அளவு எதற்கு  
மூழ்கி மீண்டும்சாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறானாம் ?"  


"ஒற்றுமை இல்லா கட்சிகள் இவையோ
ஒழுக்கம் புரியா தலைவர்கள் இவர்களோ ?  
ஓதி குழப்பி மீன் பிடிக்கிறார்கள் 
ஓரமாய் மக்களை தள்ளும் தந்திரமோ?"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 
அத்தியடி , யாழ்ப்பாணம்]

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

நோ....நோ ....மிஸ்டர் சுமந்திரம்  கோ.ப.சே அப்படியெல்லாம் எல்லோரையும் ஒரே பட்டியலில் அடக்கப்படாது கண்டியளோ. ஏன்டா கல்லெறியுறீங்கள் எண்டு என்னிடம்  கேட்டால் வண்டி வண்டியாக கொட்டுவேன் என்பது உங்களுக்கும் தெரியும். பதில் சொல்லமுடியாமல் கப்பு சிப்பு ஆனவர் தான் நீங்களும்    

கல்லை வண்டி வண்டியாகத்தான் கொட்டுவார்கள். ஒவ்வொரு கல்லாகவா தூக்கி வருவார்கள் ? 

 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.