Jump to content

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

226,343 வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Published By: VISHNU   22 SEP, 2024 | 07:41 PM

image

(நா.தனுஜா)

  • வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம்
  • ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள்
  • ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள்

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும்.

மிகக்காத்திரமானதாகக் கருதப்பட்ட இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த சில தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருந்தன.

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்குக் கூறும் நோக்கில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப்பொதுவேட்பாளர் வட, கிழக்கு மாகாணங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல், அதாவது சுமார் 700,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் போட்டித்தன்மை மிக அதிகமான இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதன்படி அவர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 36,377 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 31.39, 16.74 சதவீதம் ஆகும்.

அதேபோன்று அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 18,524 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 36,905 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 9.985 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 7.74, 11.58, 2.36 சதவீதம் ஆகும்.

 மேலும் அரியநேத்திரன் வட, கிழக்கு மாகாணங்களில் தொகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளை நோக்குகையில் வடக்கில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170 வாக்குகளையும், காங்கேசன்துறையில் 5,726 வாக்குகளையும், மானிப்பாயில் 11,587 வாக்குகளையும், கோப்பாயில் 11,410 வாக்குகளையும், உடுப்பிட்டியில் 8,467 வாக்குகளையும், பருத்தித்துறையில் 8,658 வாக்குகளையும், சாவகச்சேரியில் 9,159 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

 அடுத்ததாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னாரில் 10,757 வாக்குகளையும், வவுனியாவில் 11,650 வாக்குகளையும், முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் சேருவிலில் 2,412 வாக்குகளையும், திருகோணமலையில் 11,300 வாக்குகளையும், மூதூரில் 4,381 வாக்குகளையும் பெற்றிருக்கும் அரியநேத்திரன், மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட்ததில் கல்குடாவில் 10,890 வாக்குகளையும், மட்டக்களப்பில் 12,758 வாக்குகளையும், பட்டிருப்பில் 12,356 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். 

மேலும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டததில் அம்பாறையில் 28 வாக்குகளையும், சம்மாந்துறையில் 2,299 வாக்குகளையும், கல்முனையில் 2,623 வாக்குகளையும், பொத்துவிலில் 4,802 வாக்குகளையும் அரியநேத்திரன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/194550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்த முட்டாப்பயல் எழுதுறான்👇

//

தேர்தல் முடிவு அறிவிக்க தொடங்கியதிலிருந்து முடிவு வரை ஒரு தமிழனின் பெயரும் அங்கே இருந்தது . 

#பா_அரியநேத்ரன்//

ஏண்டா முட்டாப்பயலுகளா இதுக்காடா அரியத்தை நிப்பாட்டின்னியள்..?

கடைசியாகக் கண்டது அது  ஒண்டுதான்.. பைத்தியங்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண மாவட்டத்தில் 31 வீதம், வன்னி மாவட்டத்தில் 16 வீதம்,  தமிழர்கள் வாழும் 

திருகோணமலை தேர்தல்  தொகுதியில் 15 வீதம், திருமலை மாவட்டம் முழுவதும் 7 வீதம்,  அரியத்தின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் 11.5 வீதம் பெற்ற பொது வேட்பாளர்  எதைச் சர்வதேசத்துக்கு சொல்லப் போகிறார்?  

வெறும் உசுபேற்றல்களும் வீராப்பு  பேச்சுக்களும் என்றுமே அரசியல்  தீர்வை நோக்கிய நகர்வுக்கு உதவப்போவதில்லை. 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁

அரியத்தின் வாக்குகளை சஜத்தும் ரணிலும் திருடி அவரை தோற்கடித்துவிட்டார்கள் என்று உருட்டினாலும் உருட்டுவார்கள். 😂  எலாக்கட்டத்தில் அப்படி உருட்டுவதும் வாடிக்கை தான். 😂😂

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக நின்றிருந்தால் 50 வீதம் சாத்தியமே. ஆனால்!??!

இனி அது சாத்தியமே இல்லை என்பதை இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

மொத்தத்தில் அரியத்தைத் தூக்கி கடாசியாகிவிட்டது.

JVP இனி மிகவும் சிம்பிளாகச் சொல்லும்,......  ஒரே நாடு ஒரே மக்கள். No 13 No 13 A or B ....... No வடக்கு கிழக்கு இணைப்பு,....

எந்த முகத்தோடு எம் அரசியல் வியாதிகள் இவர்களிடம் போவார்கள்? 

9 minutes ago, விசுகு said:

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக நின்றிருந்தால் 50 வீதம் சாத்தியமே. ஆனால்!??!

இனி அது சாத்தியமே இல்லை என்பதை இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

மொத்தத்தில் அரியத்தைத் தூக்கி கடாசியாகிவிட்டது.

JVP இனி மிகவும் சிம்பிளாகச் சொல்லும்,......  ஒரே நாடு ஒரே மக்கள். No 13 No 13 A or B ....... No வடக்கு கிழக்கு இணைப்பு,....

எந்த முகத்தோடு எம் அரசியல் வியாதிகள் இவர்களிடம் போவார்கள்? 

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

உங்களின் இந்த இரண்டு கருத்துக்களும் முரணாக உள்ளதே?

பொதுவேட்பாளர் தோற்றதால் இனி Jvp ஒன்றும் தராது எனும் நீங்கள் 50% எடுத்தாலும் பயன் இல்லை என்கிறீர்கள்?

Jvp தமிழர்களுக்கு எதுவும் செய்வதாக உறுதியளிக்கவில்லை…

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்.  தங்களது இரண்டுமாத Entertainment  காகவே இவர்கள் இதை செய்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்.  தங்களது இரண்டுமாத Entertainment  காகவே இவர்கள் இதை செய்தார்கள். 

அப்படியானால் எப்போ சாத்தியம் என்று தாங்கள் சொல்லுணும் இல்லையா???

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.