Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் யோசித்தேன்.

கேழாமலேயே ஓடிப்போய் 2004ம் ஆண்டு குப்பையைத் தட்டித்தூக்கி போட்டிருக்கிறார்.

பிற்போக்கு சோசலிச சித்தாந்தமா இருக்குமோ😅

  • Replies 131
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

  • சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

  • பிழம்பு
    பிழம்பு

    // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

2004  ஆம் ஆண்டையே தமிழர்கள் ஆகிய நாங்கள் கடந்து செல்லும் போது...... அந்த நாட்களில் .........
கிங்ஸ்லி மற்றும் ராஜன் ஆகியோர் யாருடைய ஆதரவாளர்கள்...... யாரால் அவர்கள் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டார்கள்......
ஏன்.... எதற்காக..... என்ன நடந்தது... என்பதை இப்போது அறிந்து யாருக்கும் இந்தப் பலனும் இல்லை
கடந்து செல்வோம்......

ஒமோம், வலு கவனமாக, பூனைப்பாதங்களால் சத்தமின்றிக் கடந்து செல்வோம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார்.

அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை.

ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர்.

இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள்.

 

படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள்.

உங்களுக்கு தேவையான தகவல்கள் இப்போது கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

சுமந்திரனும், சாணக்கியனும் தேர்தல்களில் நின்று வென்றவர்கள்.

அரியநேத்திரன், தற்போது இருக்கும் கஜேந்திரன், அண்மையில் அமரரான ஈழவேந்தன், ஒரு காலத்தில் ஜோசப் எம்.பி இவர்களெல்லாம் உங்கள் மொழியில் "பின்கதவு".

"எல்லோரும் பின்கதவு என்றார்கள், நானும் நம்பினேன், சொன்னேன்" என்பது எவ்வளவு தூரம் முதிர்ச்சியான வாதமென நினைக்கிறீர்கள்?

வாத்தியார் சொன்னது போல "மொள்ளக் கடந்து" போங்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

1) அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார்.

பதில்;  உங்கள் நம்பிக்கையை/விருப்பத்தை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

2) அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை.

பதில்) அரியர் பலியாடு ஆனபடியால் அவர் பின்கதவால் வரவேண்டியதேவை அவருக்கு இல்லை. பலியாட்டை இழுத்துத்தான் வருவார்கள். பலிகொடுப்பவர்கள்தான் பின்னால் வருவார்கள்’. ஆனால் 

3) ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர்.

பதில் ) அதே தமிழரசுக் கட்சியின் மிக மூத்த உறுப்பினரே அவர்களை உள்ளே கொண்டிவந்ததாக பலர் புலம்பித் திரிகிறார்கள். 

4) இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள்.

பதில்: ஆதாரமில்லாத ஒன்றை எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும் அது உண்மை ஆகாது.  அத்துடன் பிறர் ஆதாரம் இல்லாமல் கூறும் ஒன்றை தாங்கள் ஆதாரத்துடன் காவித் திரிந்தால் அது சரியான செயல். இல்லாது போனால் அது வதந்தியே. 

5) படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள்.

பதில் : உண்மையைக் கூறுவதற்கு கல்வித் தகைமை தேவையற்ற ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி @பிழம்பு.

அப்பிடியே சுமந்திரன் பற்றிய தகவலையும் பகிரலாமே?

உள்ளக விசாரணை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தால் என்னிலிருந்து பலரும் தெளிவடையலாம்.

அப்படியென்றால் பிழம்பால் இணைக்கப்பட்ட தகவல் உண்மை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2024 at 05:36, Kapithan said:

சுமந்திரனின் தவறுகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. 

சுனந்திரன் செய்த தவறுகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

ஆனால், வாக்கு எண்ணும் இடத்தில் சுமந்திரன் இருந்ததாகச் சொன்ன சசிகலாவுக்கு, அதை இன்னும் காவித்திரிவோருக்கு தேர்தல், எண்ணும் நிலையம் என்பன பற்றி ஒன்றும் தெரியாது என்பது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

சரி, எனக்கும் உங்களுக்குத்தான் வாக்கு என்னும் நிலையம் பற்றி தெரியாது.அங்கு நின்றோருக்கும், சண்டே டைம்ஸ் இல் எழுதியவருக்குமா தெரியாது. எதோ வாக்கு என்னும் நிலையத்தில் நீங்களும் நின்றமாதிரியல்லவா கதையளக்கிறீர்கள்.  முன்பு சொன்னதே, கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ...

 

16 hours ago, Justin said:

தெரியவில்லை, "சுருட்டு பத்த வைக்க நெருப்பிருக்கிறதா?" என்று கேட்கப் போயிருப்பாரோ😂?

கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நக்கல். எனக்கும் பதில் எழுதமுடியும். மட்டுறுத்தினர்களுக்கு வேலைவைக்க வேண்டாமென்று விலகிச்செல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

உங்களுக்கு தேவையான தகவல்கள் இப்போது கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

சுமந்திரனும், சாணக்கியனும் தேர்தல்களில் நின்று வென்றவர்கள்.

அரியநேத்திரன், தற்போது இருக்கும் கஜேந்திரன், அண்மையில் அமரரான ஈழவேந்தன், ஒரு காலத்தில் ஜோசப் எம்.பி இவர்களெல்லாம் உங்கள் மொழியில் "பின்கதவு".

 

Electoral history of P. Ariyanethiran
Election Constituency Party Votes Result
2004 parliamentary[3] Batticaloa District   TNA 35,377 Not elected
2010 parliamentary[6] Batticaloa District   TNA 16,504 Elected
           
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

இவரை இதில் சேர்க்கப்பட்டது பிழை   ஏனென்றால் 

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக   சிங்களவர்கள்  தீர்வு தரமாட்டார்கள். என்று உறுதியாக சொன்னவர்   

உயிர் இருக்கும் வரை. சிங்களவர்களை நம்பவில்லை   அவர் எமாந்தது இல்லை    

அவர் செய்த பிழை   உங்கள் போன்றோருக்குக்காக. போராடியது தான்  🙏 

large.IMG_7628.jpeg.be8c5e4de15b9c44b9daac845a68f897.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, island said:

large.IMG_7628.jpeg.be8c5e4de15b9c44b9daac845a68f897.jpeg

நீங்கள் தலைவர் பிரபாகரனை  கடவுள் ஆகப் பார்க்கிறீர்கள் 🙏 ஆனால் நான் அப்படி பாரக்கவில்லை  அவர் ஒரு

சிறந்த விடுதலை இயக்கத்தின் தலைவர் 

தமிழ் ஈழத்தின் தலைவர்

தலைசிறந்த இராணுவத் தளபதி 

கொண்ட கொள்கையில் உறுதியானவர் 

இலங்கையில் வடக்கு கிழக்கு இல் வாழும் தமிழர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுகளின்றி சமமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர் 

இப்படி தான் நான் பார்க்கிறேன்  ஆனால் நீங்கள் மேலே சென்று விட்டீர்கள்  வாழ்த்துக்கள் 🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நீங்கள் தலைவர் பிரபாகரனை  கடவுள் ஆகப் பார்க்கிறீர்கள் 🙏 ஆனால் நான் அப்படி பாரக்கவில்லை  அவர் ஒரு

சிறந்த விடுதலை இயக்கத்தின் தலைவர் 

தமிழ் ஈழத்தின் தலைவர்

தலைசிறந்த இராணுவத் தளபதி 

கொண்ட கொள்கையில் உறுதியானவர் 

இலங்கையில் வடக்கு கிழக்கு இல் வாழும் தமிழர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுகளின்றி சமமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர் 

இப்படி தான் நான் பார்க்கிறேன்  ஆனால் நீங்கள் மேலே சென்று விட்டீர்கள்  வாழ்த்துக்கள் 🙏🙏

நான் அரசியலை அரசியலாக பார்கிறேன். இதில் பக்தி விசுவாசத்துக்கு இடமில்லை.  தமிழ் அரசியலில் இராமநாதன் சகோதரர்கள்,  செல்வா, பிரபா, அமிர், சம்பந்தன் அனைவருமே தோல்வியடைந்த  அரசியல் தலைவர்களே.   தமது மோசமான அரசியலால் தமிழரின் அரசியல் பொருள்ளதார, கல்வி பலத்தை சிதைத்ததில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்று  விசுவாசத்துக்கு அப்பால் ஒளிவு மறைவின்றி கூறுகிறேன்.  யாரையும் வேறுபடுத்தி இகழவேண்டிய அல்லது துதி பாடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

ஒரு  கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம்.  என்ன ஒரு  ரெளடிசம்.?


ரெளடிசம்  அவ* க்குக் கைவந்தகலையல்லவா? இல்லாவிடில் போலிப் பந்தாவுக்காகக் போராளிகளைப் போடுக்கொடுத்தாளல்லோ.ஆட்கள் படித்தைவை அதாவது சட்டம் படித்தவை. மக்களின் வரிப்பணத்தில் படித்து மக்களிடம் வாக்குப்பெற்று வயிறு வளரப்பதோடு, தமது சொந்ததிகளுக்கும் சொத்துகளைச் சேர்க்கும் அரசியல் வியாபாரக்கூட்டம். இந்தப் போலியானது தனக்காகப் பலரை ஆள் நல்லதொகைகொடுத்துப் புலத்திலும் களமிறக்கிவிட்டுள்ளது போலுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

சுனந்திரன் செய்த தவறுகள் என்ன?

1) உந்த முட்டாள் கூட்டத்தை நம்பி அரசியலுக்கு வந்தது.

2) உந்த முட்டாள் கூட்டத்திற்கு தன்னால் ஏதாவது செய்யலாம் என நம்பியது. 

3) உந்த முட்டாள் கூட்டம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறியாதது. 

4) உந்த முட்டாள் கூட்டத்தை இன்னும் நம்புவது 

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, island said:

நான் அரசியலை அரசியலாக பார்கிறேன். இதில் பக்தி விசுவாசத்துக்கு இடமில்லை.  தமிழ் அரசியலில் இராமநாதன் சகோதரர்கள்,  செல்வா, பிரபா, அமிர், சம்பந்தன் அனைவருமே தோல்வியடைந்த  அரசியல் தலைவர்களே.   தமது மோசமான அரசியலால் தமிழரின் அரசியல் பொருள்ளதார, கல்வி பலத்தை சிதைத்ததில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்று  விசுவாசத்துக்கு அப்பால் ஒளிவு மறைவின்றி கூறுகிறேன்.  யாரையும் வேறுபடுத்தி இகழவேண்டிய அல்லது துதி பாடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

இது பிழையான. கருத்துகள்  மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை   காரணம் கொடுக்க எந்தவொரு சிங்களத். தலைவரும் முன் வரவில்லை 

இப்போது அனுர கொடுப்பார்கள் போல் உள்ளது   கேட்கமால்  

சிறந்த தமிழ் ஆளுநர்  வடக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார்  இங்கே தமிழ் தலைவர்கள் தேவையில்லை   ஆறு மாதங்கள் பொறுமையுடன் இருங்கள்   தொடர்ந்து உரையாடலாம் 

சிங்களத் தலைவர்கள் வலிய தரும் போது தமிழ் தலைவர்கள் தேவையில்லை  

சிங்களத்தலைவர்கள். தர மறுக்கும் போது  தமிழ் தலைவர்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை   🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

1) உந்த முட்டாள் கூட்டத்தை நம்பி அரசியலுக்கு வந்தது.

2) உந்த முட்டாள் கூட்டத்திற்கு தன்னால் ஏதாவது செய்யலாம் என நம்பியது. 

3) உந்த முட்டாள் கூட்டம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறியாதது. 

4) உந்த முட்டாள் கூட்டத்தை இன்னும் நம்புவது 

 

தெரிகிறது அல்லவா??   வீட்டில் போய் இருக்க வேண்டியது தானே?? 😂🤪🤪.  எவருமே சுமத்திரன் அரசியலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கோரவில்லை  இந்த புத்திசாலியை  வீட்டிலேயே இருங்கள் என்பவர்கள்  அதி புத்திசாலியாகத் தான் இருக்க முடியும்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

தெரிகிறது அல்லவா??   வீட்டில் போய் இருக்க வேண்டியது தானே?? 😂🤪🤪.  எவருமே சுமத்திரன் அரசியலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கோரவில்லை  இந்த புத்திசாலியை  வீட்டிலேயே இருங்கள் என்பவர்கள்  அதி புத்திசாலியாகத் தான் இருக்க முடியும்   🙏

முட்டாள் கூட்டம் சொன்னால் கட்டாயம்  செய்யவேண்டும் என்று சட்டம் ஏதுமில்லையே கந்தையர். 

நாங்கள் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடிக்கத்தான் தகுதியான முட்டாள் கூட்டம் என்று சுமந்திரனுக்கு எங்கே புரியப்போகிறது. அதற்கு இன்னும் காலம் இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

சுமந்திரனும், சாணக்கியனும் தேர்தல்களில் நின்று வென்றவர்கள்.

தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி.

எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்?

இது தான் பலரதும் கேள்வி.

கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

சரி, எனக்கும் உங்களுக்குத்தான் வாக்கு என்னும் நிலையம் பற்றி தெரியாது.அங்கு நின்றோருக்கும், சண்டே டைம்ஸ் இல் எழுதியவருக்குமா தெரியாது. எதோ வாக்கு என்னும் நிலையத்தில் நீங்களும் நின்றமாதிரியல்லவா கதையளக்கிறீர்கள்.  முன்பு சொன்னதே, கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ...

 

கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நக்கல். எனக்கும் பதில் எழுதமுடியும். மட்டுறுத்தினர்களுக்கு வேலைவைக்க வேண்டாமென்று விலகிச்செல்கிறேன்.

நீங்களும், விசுகரும், ஈழப்பிரியனும் "பக்கத்தில் நின்று பார்த்து விட்டு" எழுதுகிறீர்கள் என்று முதலே சொல்லியிருந்தால் நான் அப்பவே சரணடைந்திருப்பேனே ஐயா😎? ஏன் இவ்வளவு லேற்றாக இந்த முக்கிய விடயத்தைச் சொல்கிறீர்கள்?

5 hours ago, Eppothum Thamizhan said:
Electoral history of P. Ariyanethiran
Election Constituency Party Votes Result
2004 parliamentary[3] Batticaloa District   TNA 35,377 Not elected
2010 parliamentary[6] Batticaloa District   TNA 16,504 Elected
           


முதலில் "ஒருவரைத் தூக்கி விட்டு பதவிக்கு வந்து" பின்னர் ஒரு தேர்தல் வென்ற அரியநேத்திரன் "முன்வாசல்". முதலில் தேசியப் பட்டியலில் வந்து, பின்னர் இரு தேர்தல்கள் வென்ற சும் "பின் வாசல்". இது என்ன புதுக் கணக்கு😂?

Just now, ஈழப்பிரியன் said:

தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி.

எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்?

இது தான் பலரதும் கேள்வி.

கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?

இதே கேள்வி அமரர் ஈழவேந்தன், அரியநேத்திரன் ஆகியோர் குறித்து உங்களுக்கு எழவில்லையே, ஏன்😂?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

அரியநேத்திரன், தற்போது இருக்கும் கஜேந்திரன், அண்மையில் அமரரான ஈழவேந்தன், ஒரு காலத்தில் ஜோசப் எம்.பி இவர்களெல்லாம் உங்கள் மொழியில் "பின்கதவு".

நீங்கள் சொன்ன அத்தனை பேரும் மண்ணுக்காக குரல் கொடுத்தவர்கள்.இவர்கள் இருவரும் எப்போ எங்கோ மண்ணுக்காக குரல் கொடுத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

2010 இற்குப் மன்னர் துமிழ்அரசியல் பரப்பில் சுமத்திரன் என்ற தமிழ்அரசியல் வாதி இருக்கவில்லை. 2010 இல் சம்பந்தர் பின கதவால் கொண்டு வந்து அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புக்களையும் கட்சியின் பேச்சாளர் பொறுப்பையும் தன்னிச்சையாக கொடுத்தார். சம்பந்தருக்கு அடுத்த நிலையில் எப்போதும் அவரை வைத்துக்கொண்டார்.சம்பந்தருக்குப் பயந்து கட்சி உறுப்பினர்கள் மூச்சு விடவில்லை. சசம்பந்தர் துணையுடன் சுமத்திரன் கட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும் கட்சிக்குள் தன் சார்பான ஆட்களைக் கொண்டு வந்து கட்சிக்குள் தன்பலத்தை தக்க வைத்துக் கொண்டார். காலம் கடந்து சுதாரித்துக் கொண்ட ஏனைய கட்சி உறுப்பினர்கள் இப்பொழுது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்குமான தண்டனையை தமிழ்மக்கள்தான் வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்; சிவகரன்

Digital News Team  

 

 

மன்னார் நிருபர்

“கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது” என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

sivakaran-1024x655.jpgமன்னாரில் இன்று புதன் கிழமை(12) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது. ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் பிரிந்து நின்றால் எவ்வாறான விளைவுகளை அவர்கள் எதிர் நோக்கப் போகின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்குள்ளே உள்ள முரண்பாடுகள் எவ்வாறான விளைவுகளை தமிழ் மக்களினுடைய இருப்புக்கு எதிர் காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இணக்க அரசியலில் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி சின்னா பின்னமாக சிதைந்து காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியும், வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், மட்டக்களப்பில் பிள்ளையான் அவர்களும் முதன்மை இடங்களை பெறக் கூடிய அளவுக்கு மக்கள் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு ஆதரவளித்து இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகள் கடந்த 2010 இல் இருந்து 2015 வரையான 7 தேர்தல்களில் இல்லை.

மக்கள் சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான இனக்க அரசியல் இவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலைமைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பாடம் கற்பதாக தெரியவில்லை.

இன்னும் தங்களுக்கிடையில் போட்டிகளையும் பிரச்சனைகளையும் அவர்கள் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர்.

இந்த நிலைமையில் நோக்குகின்ற போது மாற்று அணியும் ஒரு வலுவான அணியாக எதிர் கொள்ளவில்லை.

ஏனெனில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருப்பார்கள் எனின் ஒன்றில் விக்ணேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு அல்லது கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து இருக்க வேண்டும்.

அவர்களுக்கும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கவில்லை. அபிவிருத்திக்கும், இனக்க அரசியலுக்குமே கூட்டமைப்பு காட்டிய அரசியல் பாதையிலே மக்கள் போயிருக்கின்ற நிலைமைகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படா விட்டால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ச்சியாக அரசாங்கம் மிக இலகுவான முறையில் மேற்கொள்வதற்கு வழி வகை ஏற்படும்.

ஆகவே எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவர்கள் அல்லது ஒரு சக்தி வாய்ந்தவர்கள், அறிவு விஞ்ஞான பூர்வமாக உரையாடக் கூடியவர், இராஜ தந்திர அணுகுமுறைகளை பின் பற்றக் கூடியவர்கள் பெருவாரியாக இல்லை.

மிகச் சாதாரணமானவர்களையே மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்தானது அல்லது ஜனநாயகம் என்பது கும்பலின் ஆட்சி என்கின்ற லெனினுடைய கூற்றையும், அரசியல் என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் என்பதையும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியையும், சிறையில் இருப்பவர்களை போதைப் பொருள் வியாபாரிகளையும் மண் கடத்தல் காரர்களையும், சாதாரணமாணவர்களையும் பயனற்றவர்களையும் இந்த தேர்தலிலே பலர் நாடாளுமன்றம் சென்றுள்ள ஒரு அபத்தமான நிலை காணப்படுகிறது.

மாற்று அணி என்பது அவர்கள் ஒரு வாக்கு திரட்சியை ஏற்படுத்தவில்லை. வெறுமனே ஒரு கூட்டமைப்புக்கு எதிரான கோஸமாக அவர்கள் பின் பற்றினார்களோ தவிர ஒரு எதிர்ப்பு நிலையை வாக்கு திரட்சியாக மாற்றி அந்த எதிர்ப்பு மனே நிலையை வாக்கு சக்தியாக தங்கள் மீதான ஒரு கவர்ச்சிக்கு ஏற்படுத்தவில்லை.

அவர்களுடைய பேச்சை மக்கள் கேட்டார்களே தவிர ரசிக்கவில்லை. ரசிக்காத வரைக்கும் அது வாக்காக மாறக்கூடிய ஒரு நிலைமை காணப்படாது.

ஆகவே அவர்களும் பின்னடைவைச் சந்திக்க கூடிய இந்த நிலைமையில் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்கு மாறாக இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உள்ளே பல்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

சுமந்திரன் அவர்களும் சிறிதரன் அவர்களும் பகிரங்கமாகவே கட்சியினுடைய தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கின்ற போக்கு காணப்படுகிறது.

இதற்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது.நாங்கள் கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது.

மாவை சேனாதிராஜா அவர்களினுடைய தலைமைத்துவ பலவீனமே இவ்வாறான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தலைவராக 2014 ஆம் ஆண்டு வந்த காலத்திலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவராகவோ, ஒரு ஆளுமை செலுத்த கூடியவராகவும் இல்லாமல் சுமந்திரன் அவர்களில் தங்கி வாழ்ந்ததன் விளைவை மாவை சேனாதிராஜா அவர்கள் இன்றைக்கு எதிர் நோக்குகின்றனர்.

பலரை அவர் விடுவித்தும் பலரை காணா முகமாக இருந்து அறம் மாவை சேனாதிராஜா அவர்களையும் அடித்திருக்கின்றது.

எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை அழித்து ஒழித்து இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளையும் அழித்ததினால் ‘உள் வினை உருத்தி வந்துட்டும்’ என்பது போல அறம் எவ்வாறு அளித்ததோ அதே நிலைமை மாவை சேனாதிராசா விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் வந்திருக்கின்றது.

புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்கு அரசியலையும் மேற்கொண்ட சுமந்திரன் போன்றவர்களை கட்டுப்படுத்தாமலும், கட்சிக்குள் சர்வாதிகார நிலைமையை விட்டதும் சேனாதிராசா அவருடைய பங்கு.ஏனெனில் இந்த தான்தோன்றித் தனங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படவில்லை.

ஆனால் சுமந்திரன் அவர்களும் சிறீதரன் அவர்களும் பின் கதவால் கட்சியை கைப்பற்ற முனைவது ஏற்புடையது அன்று.

ஆனால் அ கைப்பற்றி விடுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஏனெனில் கட்சியினுடைய பொதுக்குழு என்பது 150 அங்கத்தவர்களை கொண்டது. மத்திய குழு என்பது 50 அங்கத்தவர்களை கொண்டது.

இந்த பொதுக்குழுவின் ஒப்புதலின்றி கட்சியை கைப்பற்றி விட முடியுமா? என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அப்படியானால் அண்ணா திமுகவை சசிகலா அல்லது பன்னீர் செல்வம் அணி போன்றது போல் இவர்களும் பொதுக்குழு அங்கத்தவர்களை விலைக்கு வாங்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம்.

அவர்கள் அதிலும் வல்லவர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் கூட இந்த மத்திய குழு 50 அங்கத்தவர்களில் சம்பந்தன் அவர்களிடம் ஏன் போய் தேசியப் பட்டியல் ஆசனத்தை கேட்கின்றார்கள் என்று தெரியவில்லை.
ஏனெனில் மத்திய குழுவின் தெரிவு பதவி வழி அங்கத்தவர்கள் 22 பேர்களும், மாவட்டத்துக்கான செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரூமாக மொத்தம் 40 ஆங்கத்தவர்கள்.

மேலும் 10 அங்கத்தவர்கள் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக நியமிக்கப்படுவது. இந்த 50 அங்கத்தவர்களுக்குள் சம்பந்தன் அவர்கள் இல்லை.

ஆகையினால் எப்படி அவர் தமிழரசுக் கட்சியில் அதிகாரம் செலுத்த முடியும்? 2014 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தன் அவர்கள் சட்டப்படி தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கத்தவர் இல்லை.

ஆனால் மத்திய குழுவின் அரசியல் குழுவுக்கு தலைவராக இருக்கின்றார். அது மாத்திரமன்றி தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் 6 துணைச் செயலாளர்கள் தான் இருந்து விட முடியும்.

ஆனால் இன்றைக்கு 15க்கும் மேற்பட்ட துணைச் செயலாளர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் அவர்கள் வகிக்கின்ற துணை பொதுச் செயலாளர் பதவி கூட சட்ட விரோதமானது. யாப்புக்கு முரணானது.

சிவஞானம் அவர்கள் வகிக்கின்ற சிரேஸ்ட துணைத் தலைவர் பதவி கூட சட்ட விரோதமானது. அதிலேயே ஒரு சிரேஸ்ட உப தலைவரும் ஒரு துணை பொதுச் செயலாளருமே யாப்பில் உள்ளது.

2014 ஆம் ஆண்டில் சேனாதிராசா அவர்களுக்கு இந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி கடிதம் அனுப்பி இருந்தேன். யாப்புக்கு மாறான தெரிவுகள் என்றோ ஒருநாள் பிரச்சினையைக் கொடுக்கும் என்று.

அப்போது பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 2016 ஜனவரி மாதம் 28ஆம் திகதி இன்னும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தேன். ஊடகங்களில் கூட வந்திருந்தது. வழிப்போக்கர்களிடம் கட்சி பறிபோகின்ற நிலைமை ஏற்படும்.

சுமந்திரன் அவர்களால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் ஆபத்து ஏற்படும். இந்த நிலைமைகளை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

தான் தோன்றித் தனமாகச் செயற்படும் சுமந்திரனை கட்டுப்படுத்தாததன் விளைவு இன்றைக்கு மாவை சேனாதிராசாவை களைக்க வேண்டும் என்ற நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.
இது அரசியல் இது ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

ஆனால் சுமந்திரன் அவர்கள் போக்கு சில வேளைகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனெனில் சம்பந்தன் அவர்களும் துரைராஜசிங்கம் அவர்களும் அவர்களுடைய அணியைச் சேர்ந்தவர்கள்.

பொதுச்செயலாளரின் ஒப்புதலின்றி இந்த கட்சியில் ஏனைய எந்த விடையங்களையும் முன்னெடுக்க முடியாது. ஆகவே இந்தக் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு பொதுச்செயலாளராக இருக்கிற துரைராஜசிங்கத்தை பயன்படுத்தி கட்சியை இலாபகரமாக கைப்பற்றக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.

யார் கைப்பற்றுகிறார்கள்? யார் தலைவராக இருக்கிறார்கள்? என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமல்ல. தமிழ் தேசியத்தை சிதைத்து கூட்டமைப்பை உடைத்து சின்னா பின்னமாக்குகின்ற இந்த வேலையை இவர்கள் செய்யப் போகிறார்கள்.ஏனெனில் இவர்கள் வழிப்போக்கர்கள்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் அடி நாதம் தெரியாதவர்கள். பின் கதவால் கட்சிக்கு வந்தவர்கள். கட்சியினுடைய ஒரு முறைமைகளுக்கூடாக வந்தவர்கள் அல்ல.

இந்த இனத்தையும் அழித்து , இவர்களுடைய தலைமைத்துவத்தை மக்களோ அல்லது வாக்காளர்கள் அல்லது தொண்டர்கள், அங்கத்தவர்களும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்ற நிலைமை தெரியவில்லை.

ஏனெனில் இன்றைய தமிழரசுக் கட்சி என்பது ஒரு முழுமையான சட்ட முரண்களுக்குள் காணப்படுகின்றது.
அந்த சட்ட முரண்களில் இருந்து எவ்வாறு தண்னை விடுவித்துக் கொள்ளப் போகிறது? என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு வருகின்ற சில நாட்களிலேயே விடை கிடைக்கும் என நம்புகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒன்றித்து ஐக்கியத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறான காட்டிக் கொடுப்புக்கள் , உட்கட்சிப் பிரச்சனைகள் யாவற்றையும் துறந்து மறந்து ஐக்கியத் தோடு செயலாற்ற முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/61901

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

 

பதில்) அரியர் பலியாடு ஆனபடியால் அவர் பின்கதவால் வரவேண்டியதேவை அவருக்கு இல்லை. பலியாட்டை இழுத்துத்தான் வருவார்கள். பலிகொடுப்பவர்கள்தான் பின்னால் வருவார்கள்’. 

மிகத் தவறான வஞ்சகமான கருத்து.

தாயகத்தின் பல மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பலரை சிபாரிசு செய்து அவர்களிடயே இருந்து ஜனநாயக ரீதியில் தேர்வுகளை நடாத்தி இறுதியில் இவரை தெரிவு செய்தார்கள இந்த ஜனநாயக பண்புகளை மெச்சுவதை விடுத்து மீண்டும் மீண்டும் துண்டுச் சட்டிக்குள்......????

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

இதே கேள்வி அமரர் ஈழவேந்தன், அரியநேத்திரன் ஆகியோர் குறித்து உங்களுக்கு எழவில்லையே, ஏன்😂?

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசியதை தலைவருக்குக் கூட சொல்லவில்லை என்று தான் எழுதினேன்.

நீங்க தான் பின்கதவைத் திறந்துவிட்டுட்டு இப்போ யார்யாரையோ எல்லாம் சாட்சிக்காக இழுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முட்டாள் கூட்டம் சொன்னால் கட்டாயம்  செய்யவேண்டும் என்று சட்டம் ஏதுமில்லையே கந்தையர். 

நாங்கள் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடிக்கத்தான் தகுதியான முட்டாள் கூட்டம் என்று சுமந்திரனுக்கு எங்கே புரியப்போகிறது. அதற்கு இன்னும் காலம் இருக்கு. 🤣

முட்டாள்களையும். புத்திசாலிகளையும்   தரம் பிரிக்க தெரிந்த   உங்களை எப்படி அழைக்கலாம்.???? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொன்ன அத்தனை பேரும் மண்ணுக்காக குரல் கொடுத்தவர்கள்.இவர்கள் இருவரும் எப்போ எங்கோ மண்ணுக்காக குரல் கொடுத்தார்கள்?

அது தான் வித்தியாசமென்றால், அதையல்லவா சுட்டிக் காட்ட வேண்டும்?

தேசியப் பட்டியலிலும், தேர்வானவரைத் தூக்கி விட்டும் முதல் பதவி எடுத்தவர் உங்கள் பார்வையில் "மண்ணுக்காக" குரல் கொடுத்தால் எப்படி வந்தார்கள் என்பது பற்றிக்  "கள்ள மௌனம்"😂. ஏனையோர் "குரல் கொடுக்கவில்லை" என்று நினைத்தால் அவர்களை வாக்காளர்கள் தேர்வு செய்தாலும் "பின் கதவு" என்ற வசவு.

இந்த இரட்டை நீதிக் கூத்தை ஆமி ஊருக்குள் வர முன்னரே வெளிநாட்டுக்கு வந்து விட்ட சில புலம்பெயர் தமிழர்கள் செய்வது, தாயக புலம் பெயர் தமிழர்களை எதிரெதிர் திசைகளில் நகர்த்தி வருகிறது என்பது பொது வேட்பாளர் தோற்ற பின்னரும் கூட உங்களுக்கு புரியவில்லையா? 

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி.

எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்?

இது தான் பலரதும் கேள்வி.

கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?

இது உங்கள் கேள்வியா இல்லையா? இதற்குத் தான் பதில். இப்ப கேள்வி வேற என்கிறீர்களா?😂

31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசியதை தலைவருக்குக் கூட சொல்லவில்லை என்று தான் எழுதினேன்.

நீங்க தான் பின்கதவைத் திறந்துவிட்டுட்டு இப்போ யார்யாரையோ எல்லாம் சாட்சிக்காக இழுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.