Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதெப்படி ??

அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா???

மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

  • Replies 67
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள்  மட்டுமே.

  • இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியத

  • பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.  வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயம் said:

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.  அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

220px-Logo_of_the_National_People%27s_Power.svg.png

அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. 


கேள்வி பதில் அரங்கு.

பங்கு கொள்வோர்...
# இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்)
# எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)

வழிப்படுத்தல்: எம். பெளசர்.

காலை 10:00 மணி - கனடா.
மதியம் 2:00 மணி ஐரோப்பா.
மதியம் 3:00 இங்கிலாந்து.
மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும்.

Meeting ID : 831 9644 1969
Pass Code: 660804

Contact - Fauzer
0776613739 (Mob.)
0044 7817262980 (WhatsApp)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

 

புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍

3 hours ago, நியாயம் said:

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான  கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி  இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7109.jpeg.6e119a245b476c6000a6

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஏராளன் said:

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, putthan said:

விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....

 அந்த கெட்ட களைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முளைக்காமல் இருந்ததின் மர்மம் என்னவோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 அந்த கெட்ட களைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முளைக்காமல் இருந்ததின் மர்மம் என்னவோ? :cool:

பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை  செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂
சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன்.animiertes-kerzen-bild-0046.gif 

உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

உண்மை. ஆனால் மக்களிடம் இருந்த தேசியத்தின் மீதான பற்று இனஅழிப்புக்குத் துணைபோன ஈனர்களையெல்லாம் தேசியத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,(2024) கடந்த தேர்தல் எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களது அரசியல் சடுகுடு ஆட்டங்கள் அம்மணமாக்கிவிட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தை நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா வரை எப்படிப் குளிதோண்டிப் புதைப்பார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள். இனி மக்கள் கiளையெடுப்பார்கள் என்பதேசூழலாக மாறிவருகிறது. 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  images?q=tbn:ANd9GcRhEBZ3aB6tM4YKfrKWm6O  M._A._Sumanthiran.jpg

ஒன்றாக இருந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பை...
கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர்  தான் சுமந்திரன்.

ஜனாதிபதி தேர்தலுடன்...  மக்கள் அவர்களுக்கு கொடுத்த  அடியுடன்  மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும்,  "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா?

இப்போ.... இருந்த  பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக  இருக்கலாம். மக்களும்  அப்படி இருப்பார்கள் என்று  எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி  தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல.

"இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவுடன் நீங்கள் இணைந்து வேலை செய்வீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7109.jpeg.6e119a245b476c6000a6

உண்மையாகவா.......நீங்களா.......🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

ஜனாதிபதி அநுரவுடன் நீங்கள் இணைந்து வேலை செய்வீர்களா?

மற்றவர்கள் குறை சொல்லாத அளவிற்கு(மேற்குலகம்) இந்த முறை தமிழ் அமைப்புகள்  ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து காட்ட வேண்டும் என்பது என் அவா!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

மற்றவர்கள் குறை சொல்லாத அளவிற்கு(மேற்குலகம்) இந்த முறை தமிழ் அமைப்புகள்  ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து காட்ட வேண்டும் என்பது என் அவா!

இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியதாக இருக்க வேணும் மத்திய அரசாங்கம் தேவையில்லாமல் தலை போடாமல் இருக்க வேண்டும்...தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்த வேணும்....சோசலிச கொள்கையை அவர் சுதந்திரமாக கடைப்பிடிப்பது போல தமிழ் தேசியத்தை தமிழர்கள் பின் பற்ற விட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியதாக இருக்க வேணும் மத்திய அரசாங்கம் தேவையில்லாமல் தலை போடாமல் இருக்க வேண்டும்...தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்த வேணும்....சோசலிச கொள்கையை அவர் சுதந்திரமாக கடைப்பிடிப்பது போல தமிழ் தேசியத்தை தமிழர்கள் பின் பற்ற விட வேண்டும்

வணக்கம், என்றாலும் இவளவுக்குப்போய் ஆசைப்படுவது சாத்தியமாகுமா? சோஸலிசம் என்பது முகமூடி. அந்த முகமூடிக்குள் மறைந்திருப்பது இனவாதமுகம். நாடாளுமன்றத் தேர்தலில் 113ஆசனங்கள் கிடைத்தாலே, அவர்களது வேடம் தெரியவரும். ஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மைகிடைத்தால் இலங்கை - இந்திய ஒப்பந்தம் நீக்கப்பட்டு இந்தியாவோடு பகையேற்படாதவகையில் நேரடியான பொருளாதார ஒப்பந்தம்  ஒன்றுக்குப் போவார்கள். அதன் பின்னரே சந்திரிக்காக் காய்ச்சலில் விடுபட்டதுபோல், யே.வி.பி காய்ச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதற்குள் கிழக்கு முழுமையாகப் பறிபோயிருக்கும். அப்போதும் சிறிலங்காத் தமிழ் தேசியர்கள் இதைத்தனே நாம் முன்பே சொன்னோமே என்று சப்புக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.  
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

On 29/9/2024 at 08:42, தமிழ் சிறி said:

"இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது

அந்த நம்பிக்கையில்தானே சும் அழைப்புவிடுத்திருக்கிறா. 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2024 at 02:13, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் இளையோர் சுயேச்சையாக நின்றாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.திருட்டு கூட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

வணக்கம், என்றாலும் இவளவுக்குப்போய் ஆசைப்படுவது சாத்தியமாகுமா? சோஸலிசம் என்பது முகமூடி. அந்த முகமூடிக்குள் மறைந்திருப்பது இனவாதமுகம். நாடாளுமன்றத் தேர்தலில் 113ஆசனங்கள் கிடைத்தாலே, அவர்களது வேடம் தெரியவரும். ஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மைகிடைத்தால் இலங்கை - இந்திய ஒப்பந்தம் நீக்கப்பட்டு இந்தியாவோடு பகையேற்படாதவகையில் நேரடியான பொருளாதார ஒப்பந்தம்  ஒன்றுக்குப் போவார்கள். அதன் பின்னரே சந்திரிக்காக் காய்ச்சலில் விடுபட்டதுபோல், யே.வி.பி காய்ச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதற்குள் கிழக்கு முழுமையாகப் பறிபோயிருக்கும். அப்போதும் சிறிலங்காத் தமிழ் தேசியர்கள் இதைத்தனே நாம் முன்பே சொன்னோமே என்று சப்புக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.  
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

அந்த நம்பிக்கையில்தானே சும் அழைப்புவிடுத்திருக்கிறா. 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

எல்லாத்துக்கும் ஆசைப்படு என நம்ம குரு ஜக்கிதேவ் சொல்லியிருக்கின்றார்..😅

அது தான் நடக்கும் அவர் தனது பேச்சில் மறைமுகமாக சொல்லியுள்ளார் ...தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களுக்கு ஒரு பிரச்சனை தான் உண்டு அது அவர்களின் வாழ்க்கைதரம்...(பொருளாதாரம்)..இந்த பொருளாதாரத்தை முதலாளிமார் சுருட்டி விட்டார்களாம் இவர் மீட்டு நாட்டை முன்னேற்றுவாராம்...அதற்கான் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படம் காட்டுகின்றார் ...காலம் பதில் சொல்லட்டும்...

இப்ப நம்ம தமிழ் எலைட் குறூப்களும் எதையும் வாசிக்காமல் அலசி ஆராயாமல் ....அணுராவின் படம் போட்ட சகல கிளிப்புக்களையும் வட்சப்பில் வொவெர்ட் பண்ணி கொண்டிருக்கினம்..

போற போக்கை பார்த்தால் இவையின்ட வீடுகளில் சாய்பாபாவுக்கு அடுத்த படி இவரின்ட படம் தான் வீடுகளில் இருக்கும் போல ...😅

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

எல்லாத்துக்கும் ஆசைப்படு என நம்ம குரு ஜக்கிதேவ் சொல்லியிருக்கின்றார்..😅

அது தான் நடக்கும் அவர் தனது பேச்சில் மறைமுகமாக சொல்லியுள்ளார் ...தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களுக்கு ஒரு பிரச்சனை தான் உண்டு அது அவர்களின் வாழ்க்கைதரம்...(பொருளாதாரம்)..இந்த பொருளாதாரத்தை முதலாளிமார் சுருட்டி விட்டார்களாம் இவர் மீட்டு நாட்டை முன்னேற்றுவாராம்...அதற்கான் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படம் காட்டுகின்றார் ...காலம் பதில் சொல்லட்டும்...

இப்ப நம்ம தமிழ் எலைட் குறூப்களும் எதையும் வாசிக்காமல் அலசி ஆராயாமல் ....அணுராவின் படம் போட்ட சகல கிளிப்புக்களையும் வட்சப்பில் வொவெர்ட் பண்ணி கொண்டிருக்கினம்..

போற போக்கை பார்த்தால் இவையின்ட வீடுகளில் சாய்பாபாவுக்கு அடுத்த படி இவரின்ட படம் தான் வீடுகளில் இருக்கும் போல ...😅

அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார்.

எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nochchi said:

எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. 

சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள்  மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2024 at 08:29, நியாயம் said:

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

 

 

உங்களுக்கு தகுதி இருக்கவில்லையா அங்குதானே இருகிறியல் நியாயம் என்ற போட்டை போட்டு விட்டு அநியாயம் செய்ய கூடாது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.