-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் நேற்றையதினம்(17) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள். குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/310889 -
By வீரப் பையன்26 · Posted
நாளைக்கு பினலில் எந்த மகளிர் அணி வெல்லக் கூடும்........................... -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மரியன் கோஹன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை. இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்விடங்களில் வசிக்கின்றன. இவை சர்க்காடியன் இசைவு (circadian rhythm) இல்லாத வேற்றுக்கிரகங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன. நமது விண்மீன் மண்டலத்தில் உயிர்கள் வாழக்கூடிய தன்மை கொண்ட பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைக்கு பின்னால் ஒரு விளக்கம் உள்ளது. பால் வீதியில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் 70% சிறியளவிலான, சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள் ஆகும். அவை M-dwarfs என்று அழைக்கப்படுகின்றன. 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான எக்ஸோபிளானட் கணக்கெடுப்பு, எம்-டிவார்ஃப்ட் நட்சத்திரங்களில் 41% அவற்றின் "கோல்டிலாக்ஸ்" மண்டலத்தை சுற்றிவரும் கிரகங்களை கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கிரகத்தில் திரவ நீருக்கு ஏற்ற சரியான வெப்பநிலை உள்ளது. இதனை உயிர்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட மண்டலம் என்றும் கூறலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும். எனவே, உயிர்கள் வாழ இது உதவும். ஆனால், இந்த கோள்களில் உண்மையில் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES `டைடல் லாக்கிங்' எம்-டிவார்ஃப்-இன் 'உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்' சுற்றிவரும் பாறை கிரகங்கள் எம்-எர்த்ஸ் (M-Earths) என்று அழைக்கப்படுகின்றன. அவை அடிப்படையான விஷயங்களில் நமது பூமியிலிருந்து வேறுபடுகின்றன. ஒன்று, எம்-டிவார்ஃப் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும். அவை நெருக்கமாக அமைந்திருக்கும். நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை, கிரகத்தின் மறுபுறத்தைக் காட்டிலும் அருகில் உள்ள பக்கத்தின் மீது அதிகமாக செயல்படுகிறது. இது கிரகத்தின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது. எம்-எர்த்களில் பெரும்பாலானவை டைடல் லாக்கிங் (Tidal locking) செய்யப்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. அதாவது, அந்த கிரகத்தின் ஒரு அரைக்கோளம் தொடர்ந்து அந்த நட்சத்திரத்தை நோக்கி இருக்கும். மற்றொன்று எப்போதும் விலகியே இருக்கும். Tidal locking அல்லது `ஒத்தியங்கு சுழற்சி’ என்பது ஒரு வானியல்சார் பொருள் மற்றொரு வானியல்சார் பொருளைச் சுற்றி வரும் போது வானியல் பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும். டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகத்தின் ஆண்டு அதன் நாளின் நீளத்திற்கு சமம். நிலவு பூமியுடன் டைடல் லாக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. நிலவின் மறுபக்கத்தை பூமியில் இருந்தபடி நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது. எம்-எர்த் கிரகங்களில் பகல், இரவு இல்லை டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகம் விசித்திரமானதாகத் தோன்றலாம், ஆனால் உயிர் வாழக்கூடிய தன்மை கொண்ட கிரகங்கள் இதுபோன்று தான் இருக்கும். நமது கிரகத்திற்கு அருகிலுள்ள ப்ராக்ஸிமா சென்டாரி பி (நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி அமைப்பில் அமைந்துள்ளது) அநேகமாக டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்-எர்த் ஆக இருக்கலாம் . நமது பூமியைப் போலல்லாமல், எம்-எர்த்களுக்கு பகல், இரவு மற்றும் வெவ்வேறு பருவங்கள் இல்லை. பூமியில் பாக்டீரியாக்கள் முதல் மனிதர்கள் வரை பெரும்பாலான உயிரினங்கள் பகல்-இரவு சுழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது சர்க்காடியன் இசைவைக் கொண்டுள்ளது. இந்த சுழற்சியில் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததெல்லாம் இரவில் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால், சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்கள், பிற்பகலில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை விட அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு இரவு, பகல் என வெவ்வேறு தாக்கத்தைக் கொண்டிருக்கும். பயோரிதம்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியைப் போன்ற கிரகமான ப்ராக்ஸிமா சென்டாரி பி, ஒரு டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்.எர்த், இது தனித்துவமான பகல் மற்றும் இரவுகள் இருப்பதை பாதிக்கும் தூக்கம் மற்றும் உயிரணுக்களின் மீளுருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் நிச்சயமற்றது. அவ்வப்போது ஓய்வு தேவைப்படாத உயிரினங்கள் தொடர்ந்து செயல்படலாம். உதாரணமாக ஆழ்கடல் உயிரினங்கள், குகையில் வசிக்கும் உயிரினங்கள் மற்றும் பூமியின் மேலோடு மற்றும் மனித உடல் போன்ற இருண்ட வாழ்விடங்களில் வசிக்கும் நுண்ணுயிரிகள் எப்படி பகல் வெளிச்சம் இன்றி நன்றாகச் செயல்படுகின்றன? இந்த உயிரினங்கள் பல பயோரிதம்களை வெளிப்படுத்துகின்றன, அவை ஒளியைத் தவிர வேறு தன்மையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நேக்டு மோல் எலிகள் தங்கள் முழு வாழ்க்கையையும் நிலத்தடியில் கழிக்கின்றன. சூரியனை அவை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை தினசரி மற்றும் பருவகால வெப்பநிலை, மழைப்பொழிவு சுழற்சிகளுக்கு ஏற்ப சர்க்காடியன் கடிகாரங்களைக் கொண்டுள்ளன. ஹாட் வென்ட் இறால் மற்றும் ஆழ்கடல் மஸ்ஸல்கள் கடலின் அலைகளைப் பின்பற்றி வாழ்கின்றன. மனித குடலில் வாழும் பாக்டீரியாக்கள் அவை வசிக்கும் உடலில் உள்ள மெலடோனின் ஏற்ற இறக்கங்களுடன் ஒத்திசைகின்றன. மெலடோனின் என்பது இருளில் உடல் உற்பத்தி செய்யும் ஹார்மோன் ஆகும். வெப்ப துளைகள், ஈரப்பத ஏற்ற இறக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அனைத்தும் உயிரினங்களில் உயிர்-அலைவுகளைத் தூண்டும் எனவே `பயோரிதம்கள்’ உள்ளார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது. எம்-எர்த்ஸ் நாட்கள் மற்றும் பருவங்களுக்கு பதிலாக சுழற்சிகளைக் கொண்டிருக்கலாம் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது போன்ற கேள்விகளை ஆய்வு செய்ய, ப்ராக்ஸிமா சென்டாரி பி (Proxima Centauri) உட்பட, எம்-எர்த்ஸ்-இன் சூழல் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளனர். இந்த உருவகப்படுத்தலில், எம்-எர்த்ஸின் பகல் நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் இடையிலான வேறுபாடு, விரைவான காற்று மற்றும் வளிமண்டல அலைகளை உருவாக்குவதாகத் தெரிகிறது. இது வளைந்து அலைந்து செல்லும் பூமியின் `ஜெட் ஸ்ட்ரீம்’ காற்றுக்கு ஒத்திருந்தது. கிரகத்தில் தண்ணீர் இருக்குமாயின், பகலில் மின்னல்கள் நிறைந்த அடர்த்தியான மேகங்கள் உருவாகலாம். பரிணாமம் எப்படி நடக்கும்? காற்று, வளிமண்டல அலைகள் மற்றும் மேகங்களுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு நிலைகளுக்கு இடையேயான காலநிலையை மாற்றக்கூடும். இதனால் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் வழக்கமான சுழற்சிகள் ஏற்படலாம். இந்த சுழற்சிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பத்து முதல் நூற்றுக்கணக்கான பூமி நாட்கள் வரை வேறுபடும். அவை கிரகத்தின் சுழற்சி காலத்துடன் தொடர்புப்படுத்தப்படாது. இந்த கிரகங்களின் வானத்தில் நட்சத்திரம் நிலையாக இருக்கும் போது கூட, சூழல் மாறிக்கொண்டே இருக்கும். எம்-எர்த்ஸில் உள்ள உயிர்கள் இந்த சுழற்சிகளுடன் ஒத்திசைந்த பயோரிதம்களை உருவாக்கலாம் அல்லது உயிர்கள் பரிணாமம் நடப்பதற்கு வேறு ஒரு விசித்திரமான தீர்வு இருக்கலாம். கிரகத்தின் பகல் நேரத்தில் வாழும் இனங்கள் ஓய்வெடுக்கவும் மீளுருவாக்கம் செய்யவும் கிரகத்தின் இரவு நேரத்திற்கு குடிபெயரும் இனங்கள் இருக்கலாம் என்பது கற்பனையான யூகம். எனவே சர்க்காடியன் கடிகாரம் என்பது வேற்று கிரகங்களில் நேரத்தை சார்ந்திருப்பது அல்ல. ஒருவேளை வேற்று கிரகங்களில் வாழ்க்கை இருந்தால், தற்போது நமக்குத் தெரிந்த அனுமானங்களை விட இன்னும் ஆழமான உண்மைகளை கொண்டிருக்கும். அது நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy89dvyzk3eo -
By ஏராளன் · பதியப்பட்டது
வட மாகாண மட்ட சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான பல சர்ச்சைகள், குழப்பங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் இந்தப் போட்டி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன. ஒரு மாகாண மட்ட போட்டி நிகழ்த்தப்படுவதாயின், ஏற்கனவே உரிய முறையில் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டிருத்தல் வேண்டும். ஆனால், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதை அறியமுடிகிறது. குறிப்பாக, காலை 8.30 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்துக்கு மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தூரப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்தப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டிய தேவை இருந்தபோதிலும் இலகுவில் அடையக்கூடிய ஓரிடத்தில் இந்தப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. ஐந்து மாவட்ட மாணவர்களும் இலகுவில் செல்லக்கூடிய ஒரு மத்திய நிலையத்தில் இந்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் பெரும் அசௌகரியங்களை மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. இப்போட்டிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கோட்டக் கல்வி அலுவலக வளாகமானது துப்பரவு செய்யப்படாது குப்பைகள் நிறைந்த பாதுகாப்பற்ற ஒரு பகுதியாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கு எந்த விதமான இட வசதிகளும் ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அத்தோடு, அவ்விடங்களில் அமர்வதற்கு கதிரைகள் இடப்படாதிருந்ததையும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அங்கே காணப்பட்ட ஒரு கொட்டகை பாதுகாப்பற்ற நிலையில் கூரை பொறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் இந்த கூரை விழுந்தால் பல மாணவர்களுக்கு உயிராபத்து கூட ஏற்படலாம் என்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு உள்ளதா, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அவதானித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து சீர்செய்யும் அதிகாரிகள், சிறுவர்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்போது பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் கவனத்தில் எடுப்பதற்கு தவறுவது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வளாகத்தில் குடிநீர் வசதி எதுவும் மாணவர்களுக்காக செய்து கொடுக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதாக கூறப்படும் இந்த போட்டி நிகழ்வில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமல் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த போட்டி நிகழ்வுக்காக மாணவர்களுக்கு சிற்றூண்டி, குளிர்பானங்களை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் அவை உரிய முறையில் பகிர்ந்து வழங்கப்படவில்லை. கல்வித் திணைக்கள அதிகாரிகள் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் அருந்துவதை கண்ட சில மாணவர்கள் தாக மிகுதியால் அவர்களிடம் கையேந்தி நின்று, அதனை பெற்றதாகவும் அதன் பின்னர் சில மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் பொருட்களை பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கி அவர்களினூடாக அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் செய்திருக்க முடியும். எனினும், அவ்வாறான நடவடிக்கை எதுவும் இங்கு எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இலகுவில் அடையக்கூடிய ஓர் இடத்தினை தெரிவுசெய்து, இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், வலய ரீதியாக சுழற்சி முறையில் இந்த போட்டிகள் நடைபெற வேண்டும். ஆங்கில தினம், தமிழ்மொழி தினம், சிங்கள மொழி தினம் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிகளும் அனைத்து வலயங்களிலும் சுழற்சி முறையில் வைக்கப்பட்டால் போக்குவரத்து, உணவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் குறையும். அவ்வாறன்றி, ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விடயமே. இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போட்டி நிகழ்வுகள் புதிய கட்டமைப்புடனும் உரிய ஏற்பாடுகளுடனும் மாணவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காத வகையிலும் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/196647
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 4 replies
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.- 20 replies
Picked By
மோகன், -
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts