Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

உலக வரலாற்றை வைத்து. பல மொழிகள் உருவானது ஒரு நாளில் அல்ல.  ஒன்று பலவாகியது தான் வரலாறு

கடந்த ஆயிரம் வருடத்தில் எத்தனை மொழி உருவாகி உள்ளது ?

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

விஜேய் பீஜேப்பியின் C ரீம் 

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் புல‌ம்ப‌ல்😁.....................

 

 

 

கோர்த்துவிடுகிறார்கள். 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உண்மைதான்.

ஆனால் என்ன தான் உபிஸ் 200 ரூபாய்க்கு ஓவர் டைம் பார்த்தாலும், மீம்ஸ் பேக்டரிகள் இயங்கினாலும்…எடப்பாடி, கமல், அண்ணாமலை, சீமான் …வஞ்சகம் இல்லாமல் மீம்ஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தார்கள் என்பதும் உண்மை.

விஜை இதை தன் பேச்சிலேயே, எம்மை பி டீம் என பச்சை குத்த முடியாது, மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியாது என கூறியது அவருக்கு விசயம் விளங்கவாவது செய்கிறது என நினைக்க வைக்கிறது.

நிச்சயம் விஜை வெல்ல இருப்பதை விட தோற்க இருக்கும் நிகழ்தகவே தற்போது அதிகம்.

ஆனால் எனக்கு அவரை எதிர்க்க ஒரு காரணமும் இன்னும் இல்லை, ஆதரிக்க பல காரணங்கள் உண்டு.

எப்படியோ திமுக பக்கம் எதிர்காலம் உதய்ணா என்பது கண்கூடு.

ஆகவே வரும் காலம்

விஜைண்ணா vs  உதய்ணா என அமைந்தால் நல்லது என நினைக்கிறேன்.

விஜையை பற்றி

மக்கா மிசி, பிரச்சனையை லெப்ட் ஹாண்டில டீலு பண்ணுற மைக்கல் ஹசி என நான் சொல்லவில்லை…/

மச்சி it’s a long way to go என்பதை நானும் ஏற்கிறேன்.

வாங்கோ, நல் மீள்வரவு! அப்ப நான் நீண்ட விடுமுறையில் போகலாம் இனி😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.  உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  

அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.  

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ சரி ந‌ண்பா👍.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது.

❤️...............

தனிமனித துதிகளாலும், குவிந்த அதிகார மையங்களாலும் உண்டாகும் நீண்டகால பாதக விளைவுகளை நன்றாகச் சொல்லியிருக்கின்றார் பேராசிரியர் ராஜன் குறை. 'மையங்களால் அழித்தல்' என்று சில மாதங்களின் முன் இன்னொரு கட்டுரை வேறு ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அதை நான் இங்கு களத்தில் பகிர்ந்தும் இருந்தேன்.

சனி அன்று ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். முழுவதும் 'ஹெல்தி ஃபுட்'............... குடிக்கும் பானம் கூட எல்லாம் கலந்து உடனடியாக அடித்து எடுக்கப்பட்ட ஒன்று............ கொடுமையும், பசியும் தாங்காமல், திரும்பி வரும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன்.

இது போலவே விஜய் கலந்து அடித்திருக்கின்றார். கொழும்பில் மனோ கணேசன் இதைப் போலவே பேசுவார். இந்தப் பேச்சுகளால் எதுவும் நடந்து விடப் போவதில்லை ஏனென்றால் இதில் எதுவும் புதிதே இல்லை. சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றன பொங்கும். ஆனால் சீமானுக்கு சமூக ஊடகங்களில் இதை விட அதிக வரவேற்பு நீண்ட காலமாக இருந்து வருகின்றதே.

மநீம இல் கமல் மட்டும் மேடையிலிருப்பார், இங்கு விஜய் மட்டும் இருப்பார். அடுத்த கட்டத்திற்கு இப்பொழுது கூடும் மக்கள் கூட்டத்தை நகர்த்தும் வல்லமை இவருக்கு இருக்கின்றதா என்பது பெரிய சந்தேகமே.

பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு திமுகவை பிடிக்காது. ஆதலால் இவர் திமுகவை விழுத்துவார் என்று விரும்பி, ஈழத்தமிழர்கள் அதை நோக்கி கருத்துகளை உண்டாக்குகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிமுக கொஞ்சம் அந்தரத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வரும் கருத்துகள் விஜய் அதிமுகவிற்கு மாற்றீடாக வருவதே நடக்கக் கூடும் என்கின்றன. 

உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்குப் போட்டவர்கள் அப்படியே திரும்பி இரண்டு யானகளுக்கு வாக்குப் போடும் அளவிற்கு அங்கொன்றும் அதிருப்தி இருப்பது போலத் தெரியவில்லை. விஜய்யும் அப்படியான ஒரு மாற்று போலவும் இல்லை. ஊழலும், இலஞ்சமும் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்கைகளுடனும் பின்னிப் பிணைந்தது, சினிமா நடிகர்கள் உட்பட. ஊழல் நீக்கம் என்பது அங்கு ஒரு பொருட்படுத்தக் கூடிய விசயமே இல்லை (இலங்கையில் அது ஒரு பெரிய விசயம்......).

**********************************

பெரியாரை பின்பற்றுபவர்கள் பிராமண ஆதிக்கம் பற்றி பேச வேண்டும் என்பது கட்டாயமே. ஆனால் அதை 'பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனர்கள் ஆதிக்கம்' என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ராஜன் குறை அவர்கள் சொல்லியிருப்பது சரி என்று தோன்றவில்லை. இந்தச் சொல் கிட்டத்தட்ட ஒரு 'இழி சொல்' ஆக இன்று மாறிவிட்டது. எங்களின் கருத்துகளை இழி சொற்களின் மூலம் தான் எடுத்து வைக்க வேண்டும் என்றில்லை.

** பார்ப்பனன் என்ற சொல்லின் அர்த்தம் இரு முறை உயிர் கொண்டவர்கள் என்பது. பறவைகள் போல. முட்டைக்குள் ஒரு உயிர், பின்னர் முட்டையை உடைத்து குஞ்சுகளாகும் போது இன்னொரு உயிர். பிராமணர்கள் தங்களுக்கு பூணூல் அணிய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு உயிர், அதன் பின்னர் இன்னொரு உயிர் என்று கருதுகின்றனர். ஆனாலும் இன்று இந்த அர்த்தம் மறைந்து, இது ஒரு இழி வழக்காக போய்விட்டது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

நான் யாரையும் கொச்சைப்படுத்தவில்லை. உண்மையையே எழுதினேன். நான் என்ன எழுத வேண்டுமென எனக்கு கட்டளையிட  உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அரசியலில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. பொது மக்களை பாதித்த அரசியலை செய்யும் எவரது தவறுகளும் பொது வெளியில் விமர்சிக்கப்படலாம்.  சுட்டிக்காட்டப்படலாம் . எவரும் இதற்கு விதி விலக்கு இல்லை. இதுவே உலக வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜேய் நேற்று ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ பேசின‌ சிறு காணொளி......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை! 

இது கொஞ்சம் விதிமீறலாக தெரிகிறதே தமிழன்? இதை நிர்வாகத்திடம் முறையிடுவதெல்லாம் பயனற்ற வேலை, ஆனால் "நக்கி, கால் கழுவி" என்பதெல்லாம் அப்படி இல்லாத ஒருவர நோக்கிச் சொல்லும் போது தனி மனித தாக்குதலாகும் அல்லவா?

இப்ப உதாரணமாக ஒருவர் உங்களை நோக்கி "இறுதிப் போருக்கு சேர்த்த காசை ஆட்டையப் போட்ட கூட்டம்"😎 என்று சுட்டினால் நீங்கள் அப்படியான ஒருவரில்லையானால் உங்களைத் தாக்குமல்லவா? 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான். ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311246
    • இஸ்ரேல் தவிர்ந்த வேறு ஒருவருக்கும் முழுமையான யுத்தத்தில் நாட்டம் இல்லை. 
    • இங்கே யாரும் நீங்கள் 20 வருடங்கள் முன்பு இருந்தது போல இல்லை. மேலும், இந்த தீவிர தேசிக்காய் குழுவில் நான் மட்டுமல்ல, மௌனமாக இருக்கும் தாயக மக்கள் கூட சேரப் போவதில்லை. எனவே, முட்டாள் தனமான ஆட்டு மந்தைக்கூட்ட ஒற்றுமையென்பது தமிழர்களிடையே வராதென நம்புகிறேன்.
    • டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர்,போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார். உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர். ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.   புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது. ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார். யார் காரணம்? ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது. சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர் புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான். உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது. இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார். ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார். ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது. ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார். உங்களை பிரமிக்க வைக்கும் உலகின் 8 அசாதாரண ஹோட்டல் அறைகள் - புகைப்படத் தொகுப்பு24 அக்டோபர் 2024 3 நாட்களில் 'தேசிய ஹீரோ' நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார். கடினமான இந்திய ஆடுகளம் சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம். ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது.   பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின? 'கிரிக்இன்போ' இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார். "இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார். யார் அந்த இலங்கை வீரர்? அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார். ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார். "புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வெட்டோரிக்குப் பின் கிடைத்த அடையாளம் இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார். முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.   பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது. பகலிரவு டெஸ்டில் அறிமுகம் இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும். அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார். ஐ.பி.எல் அறிமுகம் இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது. சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர். இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0qd0d0v471o
    • இது கொஞ்சம் விதிமீறலாக தெரிகிறதே தமிழன்? இதை நிர்வாகத்திடம் முறையிடுவதெல்லாம் பயனற்ற வேலை, ஆனால் "நக்கி, கால் கழுவி" என்பதெல்லாம் அப்படி இல்லாத ஒருவர நோக்கிச் சொல்லும் போது தனி மனித தாக்குதலாகும் அல்லவா? இப்ப உதாரணமாக ஒருவர் உங்களை நோக்கி "இறுதிப் போருக்கு சேர்த்த காசை ஆட்டையப் போட்ட கூட்டம்"😎 என்று சுட்டினால் நீங்கள் அப்படியான ஒருவரில்லையானால் உங்களைத் தாக்குமல்லவா? 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.