Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால்  உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ரோஹன விஜயவீரவின் மகன், அவ்வாறானதொரு நிலைமையை நாடு தாங்காது என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்கு வாக்காளர்கள் பலியாகவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198053

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் மாதிரி...
எதிரிக்கு, பொல்லு எடுத்துக் குடுக்கிற ஆளோ.  😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் குதிப்பதற்கான முன்னறிவிப்பு,.😉

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

 

2 hours ago, nunavilan said:

இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

 

3 hours ago, ஏராளன் said:

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் முடிவு பண்ணுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து

சரியான நிலைப்பாடு.  

ஆனால் சிலர் நினைப்பதுபோல தேசிய மக்கள் சக்திக்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஒரு 127 இடங்கள் கிடைக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இப்படியும் ஒரு எதிர்ப்பு உள்ளது.
இவர் ஏதாவது கட்சியில் உள்ளாரா?

 

3 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

அண்ணை இந்தக் கட்சிப் பெயர் கேள்விப்பட்டனிங்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

 சரியான கருத்து.  எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர்  உள்ள நிலையில் இலங்கையில்  ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

 

அண்ணை இந்தக் கட்சிப் பெயர் கேள்விப்பட்டனிங்களோ?!

ரில்வின் சில்வாவுக்கு ஒரு செக் 😅

ஜெ.வி.பி யின் இரண்டாவது தலைமுறை பொதுசெயலாளராக இருக்குமோ? 
கட்சி ஜனநாயகம் இருக்குதாம என காட்டும் வ‌ழமையான இடதுசாரிகளின் புருடாவோ தெரியவில்லை...

வலதுசாரிகள் இப்ப யோசிப்பினம் இவனையும் அப்பனோட போட்டிருக்க வேணும் எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டாம் தலைமுறை கட்சி second generation party என்பது தனிக்கட்சி.

உவிந்து இதில் கேட்கிறார்.

https://mawratanews.lk/news/uvindu-wijeweera-announces-candidacy-for-upcoming-parliamentary-election-with-second-generation-party/

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 சரியான கருத்து.  எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர்  உள்ள நிலையில் இலங்கையில்  ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.

மிகச்சரியான கருத்து. 2/3 வைத்து என்ன செவ்வாய் கிரகத்துக்கா போக போறார்கள். 118 உடன் நாட்டை ஆளமுடியும்.

2/3 கிடைத்த ஜே ஆரும், மகிந்தவும் ஆடியதை பார்த்தபின்னும் இந்த கருத்தை ஏற்காமல் இருப்பவர்களை என்னத்த சொல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.