Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

21 DEC, 2024 | 01:59 AM
image

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.

https://www.virakesari.lk/article/201775

  • கருத்துக்கள உறவுகள்

சிறியரிடம் தூது போகச்சொல்லிக் கேட்டவையோ...

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, alvayan said:

சிறியரிடம் தூது போகச்சொல்லிக் கேட்டவையோ...

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தனிச்சந்திப்புகளை எப்படி நடத்துவதென பயிற்சியளிக்கப்படுகிறது.  மல்லுக்கு நிற்பவர்கள் போலிருக்கிறது இருவரையும் பார்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயும் சரி சுமத்ரனும் சரி சாணக்கி இந்த மூன்றும் இதுவரை தமிழர்களுக்கு துன்பமே விளைவித்து உள்ளார்கள் அதை உணர்ந்த வடகிழக்கு தமிழர்கள்  சுமத்தினுக்கும் தேர்தலில் தோல்வியை கொடுத்து உள்ளார்கள் 14வருடம் ஒன்றும் செய்ய முடியாத கூட்டம் தோல்வியை மறக்க மது அருந்த கூடிய கூட்டம் கலந்துரையாடல் என்று அடித்து விட்டு இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நோர்வேயும் சரி சுமத்ரனும் சரி சாணக்கி இந்த மூன்றும் இதுவரை தமிழர்களுக்கு துன்பமே விளைவித்து உள்ளார்கள் அதை உணர்ந்த வடகிழக்கு தமிழர்கள்  சுமத்தினுக்கும் தேர்தலில் தோல்வியை கொடுத்து உள்ளார்கள் 14வருடம் ஒன்றும் செய்ய முடியாத கூட்டம் தோல்வியை மறக்க மது அருந்த கூடிய கூட்டம் கலந்துரையாடல் என்று அடித்து விட்டு இருக்கினம் 

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை  விட தமிழ் மக்களுக்கு மிக மிக  அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள்.  அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது.  தமிழ் மக்களின் அரசியலுக்கு  தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

 

எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

 

எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது. 

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

  

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

  

சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்றுதான் நோர்வே  சொன்னது. ஆரம்பித்த சண்டைய நிறுத்தும்படி சொன்னதும் நோர்வேதான். இல்லை, நாங்கள் சண்டைதான் பிடிப்போம் என்று ஒற்றைக்காலில் நின்றது நாம்தான். இப்போது தட்டை மாற்றிப்போடுகிறீர்கள். 

சொல்ஹெய்ம் மீது எனக்கும் கோவம் இருந்தது. ஆனால் அவரின் பல கூற்றுக்களின் அர்த்தம்  காலப்போக்கில்தான் புரிந்துகொள்ள முடிகிறது. 

தவறுகளில் இருந்து பாடம் படிக்காத இனம் விடுதலைக்குத்  தகுதியற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

 

சாணக் +சுமந் VS சிறீதரன் கூட்டு. 

யார் யாரை அதிகம் சந்திப்பது என்பதில் போட்டி.  

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின்  அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?

  

இனக்கலவரம் என்றபோர்வையில் தமிழினப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்று தப்பிக் கண்களை மூடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று கண்விழித்துவிட்டார்கள்.😳

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள்  சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .

உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம்  கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது.  ( கடைசி ஆறு மாதங்களில்  இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. 

சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான  கோட்டாவின் படையிடம்.  சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. 

ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை. 

ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற  மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ ...😅

8 hours ago, island said:

நோர்வே தமிழ் மக்களுக்கு  ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 

14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை  விட தமிழ் மக்களுக்கு மிக மிக  அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள்.  அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது.  தமிழ் மக்களின் அரசியலுக்கு  தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம். 

நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இறையாண்மை உடைய ஒர் அரசாங்கத்தினாலயே  இந்தியாவின் அனுசாரணை இன்றி ஆட்சி செய்ய முடியாமல் இருக்கின்றது இதில எங்கயோ இருக்கும் (சமாதான வெடிகுண்டை மடியில் வைத்திருக்கும் )நோர்வேயினால் என்ன தான் செய்ய முடியும் ...ஏதாவது மீன் பிடி உபகர்ணங்களை வழங்குவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது ..உலக அரசியலில் ...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

சிறியரிடம் நோர்வே தூதுவர்  தூது போய்,  அவர் சொல்வதை சிறியர்,  “என்னவாம்” என்று முழுச அதை  மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂

இல்லாவிட்டால் ட்ரம்ப் கிந்தி பேசினது போல் பேச வேண்டும். பறவாயில்லையா??😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அனுரா சிங்களத்திலயும்,மோடி ஹிந்தியிலயும் பேசி பல்லாயிரம் மக்களின் கைதட்டலை பெறும் பொழுது நம்ம சிறியர் நோர்வே காரனுடன் பேசுவதற்கு நோர்வே பாசை தேவையோ .

 சிறியரிடம்  நோர்வே தூதுவரே தூது போவார் என்ற ஜோக்கை ரசித்து விட்டு மெளனமாக  கடந்து வந்தால்,  அந்த ஜோக்கிற்கு  பதிலான   எனது ஜோக்கையும் ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு ஏற்பதான உலக புறச்சூழல் ஏற்பட்டு வருகிறது, இதனை தமிழ் தரப்பு சரியாக பயன்படுத்துவது போலவே தெரிகிறது (Campaign positioning), ஒரு புறம் இந்தியாவிற்கு கஜேந்திரன் கடிதம், மறுபுறம் சாணக்கியன் நோர்வே, என பலதரப்புடனும் எமது பிரச்சினையினை பேசுவதற்கான புறச்சூழல் உருவாகி உள்ளது, இதில் சீன தரப்புடனும் நாம் பேச வேண்டும் சீனத்தரப்பும் தற்காலத்தில் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு ஆரவம் காட்டி வருகின்றனர் ( இதனை முன்பு கோசான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது).

இந்த Campaign position  ஒரு ஒழுங்குபடுத்த பட்டதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன் ஒரு ஜெனரல் போரை திட்டமிட்டு அதனை நெறிப்படுத்தி அதனை நிறைவேற்றுவது போல.

இந்த நிலையினை ஏற்படுத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரு பொது திட்டத்துடன் செயற்பட வேண்டும், இது தமிழர்களின் பேரம் பேசும் நிலையினை ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நோர்வே பலஸ்தீன மக்களுக்கே துன்பம் விளைவிக்கவில்லை பிறகு எப்படி எங்கன்ட மக்களுக்கு துன்பம் விளைவிப்பினம் ....யாசீர் அரபாத்துக்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு கொடுத்து அந்த அமைப்பை ...விலாசம் இல்லாமல் பண்ணிய பெருமை அவர்களுக்கு உண்டு என நான் நம்புகிறேன்

நோர்வே பாலஸ்தீன மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை. அதை விளைவித்தவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளும், இஸ்ரேல் கடும்போக்குவாதிகளுமே. நோர்வே வெறும் அனுசரணையாளர் மட்டுமே.   இருபகுதியும் யுத்தத்தை விரும்பினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

அதுவே இலங்கையிலும் நடந்தது.  அங்கும் இரு பகுதியும் யுத்தத்தே விரும்பியது உண்மை.  தலைவர் எப்ப அடிக்கபோறார் என்று 2005 ல் இருந்து எதிர்பார்த்து காந்திருந்து  யுத்தத்திற்கு தூபமிட்ட புலம் பெயர் தேசிக்காய் குஞ்சுளுக்கு நன்கு தெரியும் நோர்வே தமிழ் மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை என. இருப்பினும் தமது குற்றத்தை மறைக்க இந்த பொய்யை தமிழர்களிடையே மட்டும் பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை.  

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிராகரித்தாலும் சாணக்கியனுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்று படம் பிடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2024/1413421

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-7-17.jpg?resize=750,375&ssl=

 

image

நோர்வே  தூதுவருடனான ஒரு  சந்திப்பு... அலுவலகத்திலும்,
மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

New-Project-7-17.jpg?resize=750,375&ssl=

 

image

நோர்வே  தூதுவருடனான ஒரு  சந்திப்பு... அலுவலகத்திலும்,
மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣

இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து  டிப்  டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..

 

17 hours ago, ரசோதரன் said:

கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து  டிப்  டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..

சுமந்திரன், சாணக்கியனை... "பாட்டா பாத்ரூம்" செருப்பு போட வைத்து, பழி வாங்கிவிட்டார்.
கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட  ஒருவரை... அருகில் வைத்திருப்பதால்,  
ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த நிலை... சாணக்கியனுக்கு ஏற்படப் போகுது. 

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.