Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கழகம் இரண்டு இலக்க 'சி' யில் பேசியதாக தகவல்கள் இருவாரத்திற்கு முன்பே வந்தது

11 hours ago, குமாரசாமி said:

கொள்கை இல்லாதவர்கள் இங்கிருந்தால் என்ன? அங்கிருந்தால் என்ன?

1 hour ago, வீரப் பையன்26 said:

காளிய‌ம்மாள் விச‌ய‌த்தில் நான் எப்ப‌வும் காளிய‌ம்மாள் ப‌க்க‌ம் தான்......................காளிய‌ம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவ‌ன் சொன்னாலும் அவ‌ர்க‌ளின் கோம‌ன‌ம் உருவி தொங்க‌ விட‌ப் ப‌டும்............................

உள்ளாடைகள் பத்திரம் 🤣

  • Replies 68
  • Views 3.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்

  • Maruthankerny
    Maruthankerny

    பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசு

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளின் திறமைகள் எல்லாம் வீணாகிப்போகிறது .இப்படியான

திரிகளில் ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம்.. நாம் தமிழர்..

large.IMG_2614.jpeglarge.IMG_2617.jpeg

உன்னுடைய 6 வருட கடின உழைப்பிற்கு பிறகு உன்னால் வேறு எந்த கட்சியிலும் ஆத்மார்த்தமாக கௌரவமாக செயல் பட முடியாது… தமிழ் தேசியத்திற்காக நீ பேசிய வார்த்தைகள் அனைத்தையும் நீயே எதிர்த்து பேச வேண்டிய நிலை உருவாகும்... அப்படி பேச கூடிய நிலை வரும்போது இன்று உன் பால் அன்பு கொண்ட அனைவரும் உன்னையே கதறி குதறி விடுவார்கள்… அரசியலே வேண்டாம் என்று துறந்து செல்வது,அல்லது சில காலம் அமைதியாக இருப்பது, இதுதான் நீ செய்ய வேண்டியது காளியம்மா.…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உன்னுடைய 6 வருட கடின உழைப்பிற்கு பிறகு உன்னால் வேறு எந்த கட்சியிலும் ஆத்மார்த்தமாக கௌரவமாக செயல் பட முடியாது… தமிழ் தேசியத்திற்காக நீ பேசிய வார்த்தைகள் அனைத்தையும் நீயே எதிர்த்து பேச வேண்டிய நிலை உருவாகும்... அப்படி பேச கூடிய நிலை வரும்போது இன்று உன் பால் அன்பு கொண்ட அனைவரும் உன்னையே கதறி குதறி விடுவார்கள்… அரசியலே வேண்டாம் என்று துறந்து செல்வது,அல்லது சில காலம் அமைதியாக இருப்பது, இதுதான் நீ செய்ய வேண்டியது காளியம்மா.…

கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி, காளியம்மாள் இன்னும் எத்தனையோ தூய எண்ணத்தில், தமிழ் தேசிய ஆர்வத்தில் அரசியலுக்கு வந்த நல்ல இளைஞர்கள் ஒரு மடைமாற்றியால் ஒன்றுக்கும் உதாவாதவர்கள் ஆக்கி செல்லாகாசாக்கப்படுவது ஒரு வரலாற்று சோகம்.

பாவம் ரஜீவ்காந்தி, கல்யாண சுந்தரம், அவர்கள் வெளியேறிய போது தவெக போல் இன்னொரு தமிழ் தேசிய கட்சி இல்லை. எனவே மானமிழந்து தாம் விமர்சித்த திராவிட கட்சிகளில் ஐக்கியமாகி, அவமானப்பட்டார்கள்.

காளியம்மாளின் அப்படி இல்லை. தெரிவுகள் உள.

தமிழ் நாட்டில் உண்மையான தமிழ் தேசியம் நிலை பெற்று விடக்கூடாது என்ற ரோவின் சிந்தனை - இப்படியானவர்களை காரணம் இன்றி நாதகவில் இருந்து வெளியேற்றியபடியே இருக்கும்.

காளியம்மாள் நான் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை பொய்பிக்காமல் திமுக வோடு கூட்டு இல்லை என கோடி காட்டி உள்ளார்.

நேற்றுவரை காளியம்மாளை புகழ்ந்து விட்டு, இன்று கழகம் 2 சி கொடுக்க ரெடி, காளியம்மாள் வாங்க ரெடி என மலின பிரச்சாரம் செய்தவர்களுக்கு நல்ல செருப்படி.

காளியம்மாள் போன்ற ஒரு ஆளுமை வீணாக போகக்கூடாது.

தவெகவில் நல்ல எதிர்காலம் உள்ளது. தவெகவில் சேர்ந்தால் இப்போ நாம் தமிழருக்கு விழலுக்கு இறைத்த நீராகும் வாக்குகள் அப்படியே தவெக போகும்.

தவெக பிரச்சார மேடையில் காளியம்மாள் திமுகவை ஒரு பிடி பிடிப்பார். அண்ணனை பற்றி ஒரு வார்த்தை பேசாமல் கூட அவரின் வாக்கு வங்கியை கிடுகிடுக்க வைப்பார்.

தவெக, காளியம்மாள் இருவருக்கும் இது win-win. நாகபட்டினம் சட்டமன்ற தொகுதியை கொடுப்பது தவெகவுக்கு பெரிய பிரச்சனை இல்லை.

தமிழ் தேசியத்துக்கு சீமான் தோதான தலைமை இல்லை என்பது காளியம்மாளின் சரியான முடிவு -ஆகவே மாற்றுதலைமையை அவர் இனம் காட்ட வேண்டும், அல்லது தானே அந்த மாற்று தலைமை ஆக வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்...

எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன. இதோ, அதோ என அவரது விலகல் விவகாரம் நீண்ட இழுபறியாக இருந்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காளியம்மாள்.

காளியம்மாள் - சீமான்

காளியம்மாள் - சீமான்

அவரது அறிவிப்பு அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் காளியம்மாள் மற்றும் அவரது கணவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து காளியம்மாள் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., த.வெ.க இதில் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது போன்ற பேச்சுக்கள் கிளம்ப, ஆளாளக்கு ஒன்றை பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் காளியம்மாள் செயல்பாடுகள் குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், "நாகப்பட்டினத்தில் காளியம்மாள் வசித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட போது தனி திறன் பிரச்சாரத்தால் எல்லோர் மத்தியிலும் கவனம் பெற்றார். பின்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து முரணால் அமைதியானார். இப்படியான சூழலில் காளியம்மாள் த.வெ.க-வில் இணையப்போவதாக சொல்லப்பட்டன. ஆனால் எதையும் வெளிப்படையாக அவர் வாய் திறக்கவில்லை.

அமைச்சர் அன்பில் மகேஸ் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆன பிறகு அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளை தி.மு.க-விற்கு இழுக்க தூண்டில் வீசப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ்காந்தி மூலம் காளியம்மாளிடம் பேசப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ராஜீவ்காந்தி, காளியம்மாள் உள்ளிட்டோர் சந்தித்து பேசி கொண்டதாக தகவல்கள் பரவின. இதை காளியம்மாள் மறுக்கவும் இல்லை.பனையூர் பயணம்..

கிட்டத்தட்ட அவர் தி.மு.க-வில் இணையப்போவதாக தி.மு.கவினரே பேச ஆரம்பித்தனர். இதற்கிடையே த.வெ.க-வில் இருந்து அழைப்பு வர பனையூர் சென்ற காளியம்மாள் ஆனந்திடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தி.மு.க தரப்பிடம் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் காளியம்மாள் இழுத்தடித்து வந்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் காளியம்மாள் தி.மு.க-வில் இணைந்திருப்பார். நாம் தமிழரில் இருந்த போது தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் அவர் யோசித்தாக தெரிகிறது.

இந்த நிலையில் அவருடைய விலகல் எப்படி பேசு பொருளாக இருக்கிறதோ அதே மாதிரி மாற்றுக் கட்சியில் சேர்வதும் பேசு பொருளாக இருக்கும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்" என்றனர்.

மேலும் சிலரோ, "தி.மு.க-வில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதன் பிறகு தன் முடிவை அவர் தெளிவாக சொல்லவில்லை. தி.மு.க-விடம் சில டிமாண்ட்கள் காளியம்மாள் வைக்க அதற்கு அவர்கள் கிட்டதட்ட ஓகே சொல்லி விட்டனர். அதே சமயத்தில் த.வெ.க-வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியதாக அவரது தரப்பை சேர்ந்தவர்களே பேசி வந்தனர். இப்படி இரு பக்கமும் வலையை வீசியதை தி.முக தரப்பு ரசிக்கவில்லை. காளியம்மாள் ஓவர் பில்டப் கொடுக்கிறார் அவரா ஒரு முடிவுக்கு வரட்டும் அதுவரை கண்டுகாதீங்கனு மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அன்பில் மகேஸ் சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகின.

காளியம்மாள்

காளியம்மாள்

இந்த நிலையில் எந்த கட்சியில் இணைந்தால் தனக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதை காளியம்மாள் உணர்ந்திருக்கிறார். அதற்கேற்ற முடிவை அவர் எடுத்து விட்டார் என்கிறார்கள். ஒரு வேளை தி.மு.க-வில் அவர் இணைந்தால் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தான் என்கிறார்கள். இதனால் வேட்பாளர் கனவில் இருக்கும் மாவட்ட முக்கிய பிரமுகர் சற்றே கலக்கத்தில் உள்ளார்.

காளியம்மாள் விலகல் குறித்து ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு இது களையுதிர் காலம் என்றார் சீமான். ஆனால், கச்சிதமாக காய்களை நகர்த்தி அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் காளியம்மாள். அவர் தி.மு.க-வில் சேர்வார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும்" என்றனர்.

தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்! | Nagapattinam: DMK or TVK, which party is Kaliammal joining? - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த அக்கா... தமிழ் தேசிய பரப்பில் காளியாக நின்று பேசியவர்.. இனி எங்காவது சேர்ந்து கூலியாக பேச வேண்டி வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். 🫶🙏

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Sasi_varnam said:

பாவம் இந்த அக்கா... தமிழ் தேசிய பரப்பில் காளியாக நின்று பேசியவர்.. இனி எங்காவது சேர்ந்து கூலியாக பேச வேண்டி வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். 🫶🙏

காளிய‌ம்மாள் ராஜிவ் காந்தி மாதிரி கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் வார்த்தைய‌ விட‌ மாட்டா.................

ஆனால் அக்கா மேல் நான் வைச்சு இருந்த‌ ந‌ம்பிக்கை வேறு மாதிரி , அண்ண‌ன் சீமான் பிசிறு என்று சொன்ன‌தால் கோவித்து விட்டாவாக்கும் என‌ நினைத்தேன் , காளிய‌ம்மாள் பொய் சொல்ல‌ மாட்டா என‌ நினைத்தேன் அவான்ட‌ பொய்க‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து , அதுக்காக‌ அக்கா மீது நான் விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ போவ‌து கிடையாது................தூக்கி விட்ட‌ அண்ண‌ன் ப‌டாத‌ அசிங்க‌த்தையா இவா ப‌ட்டு விட்டா என‌ இப்ப‌ நினைக்க‌ தோனுது..............ச‌ரி வில‌கி விட்டா வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைப்போம்

எங்கு இருந்தாலும் ந‌ல்லா இருக்க‌னும் என்று👍.................

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2025 at 23:37, வீரப் பையன்26 said:

காளிய‌ம்மாள் விச‌ய‌த்தில் நான் எப்ப‌வும் காளிய‌ம்மாள் ப‌க்க‌ம் தான்......................காளிய‌ம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவ‌ன் சொன்னாலும் அவ‌ர்க‌ளின் கோம‌ன‌ம் உருவி தொங்க‌ விட‌ப் ப‌டும்............................

👆ஏது…உங்க உள்ளாடையை நீங்களே உருவுவீங்க போலயே👇

2 hours ago, வீரப் பையன்26 said:

காளிய‌ம்மாள் பொய் சொல்ல‌ மாட்டா என‌ நினைத்தேன் அவான்ட‌ பொய்க‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து ,


https://x.com/ramvel0808/status/1894075446884536684

காளியம்மாள் த வெ க வின் டிவிட்டர் பக்கத்தை தொடர ஆரம்பித்துள்ளாராம்.


தம்பிகள் காளிஅம்மாளை மிக கீழ்தரமாக இறங்கி விமர்சிக்கிறார்கள்.

இந்த முறை தூசண துரைமுருகன் சைலன்டாக இருக்க, இடும்பாவனம் கார்த்தி ஏவல் படையை உசுபேத்தி விடுகிறார்.

உண்மையில் கார்த்தி கூட காளியம்மாள் போல் நல்வழிக்கு திரும்பவேண்டிய ஒரு ஆடுதான்.

அவருக்கும் ஒரு தேதி இருக்கும்.


  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ பாட்டு பொதுவாய் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு

யாழ்க‌ள‌ உற‌வுக‌ளுக்கு , ஏன் என‌க்கும் பெருத்த‌மான‌ பாட‌ல்...............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Sasi_varnam said:

பாவம் இந்த அக்கா... தமிழ் தேசிய பரப்பில் காளியாக நின்று பேசியவர்.. இனி எங்காவது சேர்ந்து கூலியாக பேச வேண்டி வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். 🫶🙏

முற்றிலும் உண்மை.இருந்த மரியாதையும் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்களே உருவுவீங்க போலயே👇

நானும் நினைத்தேன் நேற்று தான் உறவு வீரபையன் சொன்னார் 👇

காளிய‌ம்மாள் விச‌ய‌த்தில் நான் எப்ப‌வும் காளிய‌ம்மாள் ப‌க்க‌ம் தான்......................காளிய‌ம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவ‌ன் சொன்னாலும் அவ‌ர்க‌ளின் கோம‌ன‌ம் உருவி தொங்க‌ விட‌ப் ப‌டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

👆ஏது…உங்க உள்ளாடையை நீங்களே உருவுவீங்க போலயே👇


https://x.com/ramvel0808/status/1894075446884536684

காளியம்மாள் த வெ க வின் டிவிட்டர் பக்கத்தை தொடர ஆரம்பித்துள்ளாராம்.


தம்பிகள் காளிஅம்மாளை மிக கீழ்தரமாக இறங்கி விமர்சிக்கிறார்கள்.

இந்த முறை தூசண துரைமுருகன் சைலன்டாக இருக்க, இடும்பாவனம் கார்த்தி ஏவல் படையை உசுபேத்தி விடுகிறார்.

உண்மையில் கார்த்தி கூட காளியம்மாள் போல் நல்வழிக்கு திரும்பவேண்டிய ஒரு ஆடுதான்.

அவருக்கும் ஒரு தேதி இருக்கும்.


பார்த்தியளே? காளியம்மா மீது "இருந்த மரியாதையும்" என்கிறார்கள்! எனக்கு விளங்கிய தமிழின் படி முன்னமே "அவ்வளவு பெரிய மரியாதை" அவரிடம் இருக்கவில்லைப் போல தெரிகிறது இதை வாசிக்கையில். என்ன காரணமாக இருக்குமென யோசிக்கிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பாவம் ரஜீவ்காந்தி, கல்யாண சுந்தரம், அவர்கள் வெளியேறிய போது தவெக போல் இன்னொரு தமிழ் தேசிய கட்சி இல்லை. எனவே மானமிழந்து தாம் விமர்சித்த திராவிட கட்சிகளில் ஐக்கியமாகி, அவமானப்பட்டார்கள்

ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.

உங்க‌ட‌ க‌ருத்து மிக‌ ச‌ரி🙏👍.............................

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி

நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு இவ்வளவு டிமாண்ட்??

வளர்ப்பு நல்லதாக இருக்கும்

திறமை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கும்

நாம் தமிழர் கட்சி உடைக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.

இதில் மாறுபட முடியாது.

ஆனால் கல்யாணசுந்தரத்தை நான் 2008 இல் சென்னையில் சந்தித்துள்ளேன். கம்யூனிஸ்டில் இருந்தார் என நினைக்கிறேன். கொழுத்தும் வெய்யிலில் - கருணாநிதி போகும் வரும் வழியில் ஒரு குழுவாக நின்று போரை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

நிச்சயமாக அப்போ மாசற்ற மனிதராகத்தான் இருந்தார்.

இங்கேதான் ஒரு தலைமை உண்மையானதாக இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

1980 களின் ஆரம்பத்தில் புலிகளின் சேர்ந்தவர்களும், டெலோவில் சேர்ந்தோரும் ஒரே நல்லெண்ணத்துடந்தான் சேர்ந்தார்கள். 2009 இல் இவர்களில் புலிகளாக இருந்தபலர் கடைசிவரை கொள்கைவாதிகளா சாவடைந்தனர்.

ஆனால் டெலோவில் சேர்ந்தோர்? ஒன்றில் காடைகளாக அல்லது சிவாஜி, செல்வம், சிறிகாந்தா போல அரசியல்வாதிகள் ஆகினர்.

இங்கே வித்தியாசம் தலைவரின், சபாரத்தினத்தின் தலைமையே.

புளொட்டில், டெலோவில் அன்று நடந்ததுதான் பல துடிப்புள்ள, இணையும் போது உண்மையாக இருக்கும் தம்பிகளுக்கு இன்று நாதகவில் நடக்கிறது.

ஒரு கட்டத்தில் அண்ணனே ஒரு முழு திருடன் என புரியும் போது, 25 வயதாகி இருக்கும், வாழ்க்கை பயம் தொற்றி கொள்ளும், சரி நாம் எம் பங்குக்கு என்ன களவை செய்யலாம் என்றே மனம் ஓடும்.

இது காளியம்மாளுக்கு நடக்க கூடாது என்பதே என் விருப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

புளொட்டில், டெலோவில் அன்று நடந்ததுதான் பல துடிப்புள்ள, இணையும் போது உண்மையாக இருக்கும் தம்பிகளுக்கு இன்று நாதகவில் நடக்கிறது.

ஒரு கட்டத்தில் அண்ணனே ஒரு முழு திருடன் என புரியும் போது, 25 வயதாகி இருக்கும், வாழ்க்கை பயம் தொற்றி கொள்ளும், சரி நாம் எம் பங்குக்கு என்ன களவை செய்யலாம் என்றே மனம் ஓடும்.

இங்கே எனது கேள்வி

இவர்கள் அண்ணன் திருடன் என்று கன்டுபிடித்து வெளியேறும்போது தமிழ் தேசிய பரப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மாறியபின்னர் தான் வெளியேறுகிறார்கள். இன்னுமொரு வகையில் அதாவது ஆளுமைகளாக புகழ் வெளிச்சம் தங்கள் மீது பட்டபின்னர்தான் அண்ணனை திருடன் என்றே கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் வெளியேறும்போது இவர்களது தமிழ்த்தேசிய பரப்பிலான அறிமுகம் என்பது அண்ணன் நாதகவை ஆரம்பித்தபோது அவருக்கு இருந்த அறிமுகத்தை விட அபரிமிதமானது. நிற்க, இவர்கள் ஜனநாயக பொதுவெளியில் ஒருகட்சியை ஆரம்பிப்பது என்பது டெலோ புளொட்டில் சேர்ந்த இளையவர்கள் புதிய இராணுவ இயக்கம் கட்டுவதை விட மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நான் விளங்கிக்கொண்ட வரையில் நதகவில் சேர்வது கழகத்தில் உள்ள கடைக்கோடி, நடுக்கோடி ,முதற்கோடி தொண்டர்களை ஓவர்டேக் செய்து இலகுவாக முன்வரிசை ஆசனத்தை பிடிக்கும் ஒரு Smart & short route. இந்த ஆளுமைகள் எல்லோருமே கழகத்தில் இருந்து தங்களது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்றும் பசைவாளி போஸ்டருடன் வாழ்க ஒழிக கோஷம் போடும் ஒரு கடைநிலை, நடுத்தர உபிக்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த ஆளுமைகளின் இறுதிச்சரணாலயம் அவர்களது நோக்கங்களை தெளிவாக காண்பிக்கிறது. தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி வயிறு வளர்க்கும் சீமானை எதிர்த்து வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம் அதே தமிழ்தேசியத்தையும் சீமானையும் பயன்படுத்தி வயிறுவளர்க்கும் இவர்களது தவறுகளை சீமான்மீதே சுமத்தி நகர்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இங்கே எனது கேள்வி

இவர்கள் அண்ணன் திருடன் என்று கன்டுபிடித்து வெளியேறும்போது தமிழ் தேசிய பரப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மாறியபின்னர் தான் வெளியேறுகிறார்கள். இன்னுமொரு வகையில் அதாவது ஆளுமைகளாக புகழ் வெளிச்சம் தங்கள் மீது பட்டபின்னர்தான் அண்ணனை திருடன் என்றே கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் வெளியேறும்போது இவர்களது தமிழ்த்தேசிய பரப்பிலான அறிமுகம் என்பது அண்ணன் நாதகவை ஆரம்பித்தபோது அவருக்கு இருந்த அறிமுகத்தை விட அபரிமிதமானது. நிற்க, இவர்கள் ஜனநாயக பொதுவெளியில் ஒருகட்சியை ஆரம்பிப்பது என்பது டெலோ புளொட்டில் சேர்ந்த இளையவர்கள் புதிய இராணுவ இயக்கம் கட்டுவதை விட மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நான் விளங்கிக்கொண்ட வரையில் நதகவில் சேர்வது கழகத்தில் உள்ள கடைக்கோடி, நடுக்கோடி ,முதற்கோடி தொண்டர்களை ஓவர்டேக் செய்து இலகுவாக முன்வரிசை ஆசனத்தை பிடிக்கும் ஒரு Smart & short route. இந்த ஆளுமைகள் எல்லோருமே கழகத்தில் இருந்து தங்களது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்றும் பசைவாளி போஸ்டருடன் வாழ்க ஒழிக கோஷம் போடும் ஒரு கடைநிலை, நடுத்தர உபிக்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த ஆளுமைகளின் இறுதிச்சரணாலயம் அவர்களது நோக்கங்களை தெளிவாக காண்பிக்கிறது. தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி வயிறு வளர்க்கும் சீமானை எதிர்த்து வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம் அதே தமிழ்தேசியத்தையும் சீமானையும் பயன்படுத்தி வயிறுவளர்க்கும் இவர்களது தவறுகளை சீமான்மீதே சுமத்தி நகர்கிறோம்.

கல்யாணசுந்தரமும், ரஜீவ்காந்தியும் விலகியபோது - அவர்கள் தனி இயக்கம் காண வேண்டும் என்றே நான் யாழில் எழுதினேன்.

அதே போல் அவர்கள் திமுக, அதிமுகவில் சேரும் போது கடுமையாக விமர்சித்தும் உள்ளேன்.

  1. நீங்கள் அவர்கள் நாதகவில் சேரும் போதே, கழகங்களுக்கு மாறும் தீய எண்ணத்தில் சேர்கிறார்கள் என்கிறீர்கள்.

  2. நான் அப்படி நினைக்கவில்லை. சேரும் போது தூய எண்ணத்தில்தான் சேர்கிறார்கள். ஆனால் காலம் அவர்களுக்கு நாதகவும், கழகங்களும் ஒரே குட்டைதான் என்பதை உணர்த்தும் போது - அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டுபவன் முட்டாள் - என நினைத்து - தாமும் சுயநலமாக செயல்பட ஆரம்பிக்கிறனர்.

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தியில் பிழை இல்லை என நான் சொல்லவில்லை. என்று அவர்கள் திமுக, அதிமுக வில் இணந்தார்களோ அன்றே அவர்கள் சரசரி கோக்குமாக்கு அரசியல்வாதிகள் ஆகிவிட்டனர்.

ஆனால் இதற்கு எல்லாம் அடிப்படை சீமானின் பேச்சு ஒன்று செயல் ஒன்று என்ற நிலை.

நீங்கள் வெளியில் பிரபலமான இருவரை பற்றி மட்டுமே கதைக்கிறீர்கள். இன்னும் பெருந்தொகையானோர், மாவட்ட செயளாலர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாமும் கூட கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

இவர்களில் பலர் அரசியலை விட்டே ஒதுங்கி விட்டனர் (இப்போ கல்யாணசுந்தரமும் ஒதுங்கிவிட்டார் என கேள்விப்பட்டேன்). இன்னும் பலர் தமிழ் தேசிய பரப்பில் ஒன்றிணைந்து செயல்படுகிறனர்.

உண்மையில் நாதக வில் கிடைத்த வெளிச்சத்தை பயன்படுத்தி மாற்று கட்சியில் மேலே வந்தது ரஜீவ்காந்தி மட்டுமே.

மிகுதி எல்லோரும் தமது வேட்கையை, இலட்சியத்தை, இளமையை, உழைப்பை தொலைத்து விட்டு அரசியல் அநாதைகள் ஆகிவிட்டனர். அவர்கள் உழைப்பில் சீமான் நீலாங்கரையில் ஆறு கோடி பங்களா கட்டியதுதான் மிச்சம். இதுதான் தமிழ் தேசியத்தின் எழுச்சியை காயடிப்பது என்பது.

ஆனால் இப்போ அப்படி இல்லை, காளியம்மாள் போன்றோருக்கு தவெக ஒரு மாற்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர். காளியம்மாளுக்கு இப்படியான தம்பிகளை விட்டு வெளியேறுவதில் தயக்கம் இருந்தது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர். காளியம்மாளுக்கு இப்படியான தம்பிகளை விட்டு வெளியேறுவதில் தயக்கம் இருந்தது உண்மை.

இருக்கலாம்…ஆனால் கட்சியில் இருந்த படியே, ஒரே மேடையில் வைத்து அண்ணன் 10 நிமிடம் தலைவரை சந்தித்தார் என போடு போட ஒரு கெத்து வேணும்.

அந்த கெத்து காளியம்மாளிடம் நிறையவே இருக்கிறது.

தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பற்று. கெத்து இவை இரெண்டும் அடிப்படையான மூலப்பொருட்கள்.

ஏனைய பிழைகளை, உடான்சு கதைகள் சொல்லாத ஒரு தலைமையின் கீழ் திருத்திகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஆனால் இப்போ அப்படி இல்லை, காளியம்மாள் போன்றோருக்கு தவெக ஒரு மாற்றாக இருக்கிறது.

பார்க்கலாம்.....காளியாத்தாவாக தொடர்கிறாரா இல்லை கழகத்தில் கரைகிறாரா என்று.

9 minutes ago, island said:

காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர்.

அண்ணனுக்கு ஏற்ற தங்கை இனி தம்பிக்கேற்ற அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணனுக்கு ஏற்ற தங்கை இனி தம்பிக்கேற்ற அக்கா

காளியம்மாளுக்கு 39 வயதுதான். விஜைக்கு 52?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான்.

🤣

வெளியேறுவதற்கு கொஞ்சமும் மனம் இல்லாமல் இழுத்து இழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன். மக்களுக்கு நன்மை செய்தவர் ஊழல் ஜெயலலிதா என்று சொன்னவராம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

காளியம்மாளுக்கு 39 வயதுதான். விஜைக்கு 52?

அவ்வளவு வயசாவா ஆகுது ....? தப்பு என்னோடது இல்லை அணில்ஸ் நடிக்கும் படங்கள் அப்படி.

அப்போ இன்னொரு அண்ணனுக்கு ஏற்ற தங்கை

5 hours ago, விசுகு said:

அதெப்படி

நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு இவ்வளவு டிமாண்ட்??

வளர்ப்பு நல்லதாக இருக்கும்

திறமை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கும்

நாம் தமிழர் கட்சி உடைக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மாதிரித்தான்.

இலங்கையில் அரச செலவில் அல்லது மக்கள் வரிப்பணத்தில் நல்லா படிச்ச என்னைப் போன்றவர்களை (அடப்பாவி நீயுமா என உங்கள் Mind Voice சொல்வது கேட்குது 😆 ) தங்கள் நாட்டுக்கு கவர்ந்து இழுத்து இறங்கியவுடனேயே நிரந்தரவதிவுடமை கொடுப்பது போலத்தான் இதுவும்.

நாங்களும் படிச்ச பிறகு, உந்த நாடு சரிவராது என்று இலங்கையை விட்டு கிளம்பி போனது போலத்தான் காளியம்மா மற்றும் மிச்ச ஆட்களும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.