Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவதையின் பாதங்கள் பற்றி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது.

சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள்.

சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க, ஏக்கம் தணிப்பவளாய் பலர் பேர் நின்றிருந்த அந்த வரிசையில் கடைசி ஆளாய் வந்து ஏறி என் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் என் எண்ணங்களை கற்பனை வானில் பறக்கவிட்டு.... அவள் கைபிடித்து உலா வந்து.. திருமண மேடையேறி.. குழந்தை பெற்று.. இன்புற்றுக் கொண்டிருந்தேன். அவளோ என்னருகில் முட்டியும் முட்டாமலும் அமைதியாக இருந்து கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே அவள் பூசி வந்த நறுமண திரவியங்களின் வாசனை என்னை விட்டு விலகத் தொடங்க. அதுவரை கற்பனைக் கனவில் இருந்த நானும் விழித்துக் கொண்டேன். அவள் இருந்த இடத்தில் இருந்து எழுந்து நகர ஆரம்பித்திருந்தாள். நானும் விடுவதாய் இல்லை. அவளைப் பார்வைகளால் பின் தொடர்ந்தேன். ஆகா இது எல்லோ இடை.. ஆகா இது எல்லோ நடை.. ஆகா இது எல்லோ கூந்தல்.. இவளைக் கம்பன் கண்டிருந்தால் எப்படி எல்லாம் வர்ணித்திருப்பான்.. இவள் இக்கால தமயந்தி நானோ இக்கால நளன் என்று மனம் ஆயிரம் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்க பேரூந்தும் பிறிதொரு தரிப்பிடத்தில் நின்றது.

அவளோ பூம்பாதங்கள் தரையில் பதிய பேரூந்தை விட்டு இறங்க ஆயத்தமானாள். ஏன் நானும் அவளைப் பின் தொடரக் கூடாது என்று என் மனம் கேள்வி கேட்க என் கால்கள் கேள்விக்கு விடையாய் அவளைப் பின் தொடர்ந்தன.

நான் அவளைத் தொடர்வதை அறியாதவளாய் என் அழகு தேவதை பேரூந்தில் இருந்து இறங்கி பிரதான வீதி நோக்கி நடந்தாள். அச்சமயம்...

மின்னல் வேகத்தில் உந்துருளிகள் ஆயுதம் ஏந்திய வீரர்களை காவிக் கொண்டு பறக்கின்றன. இவளோ பிரதான வீதியைக் கடக்க நிற்கிறாள். நானோ அவளை விட்டு ஒரு 50 மீற்றர் தொலைவில் அவளையே ரசித்தபடி அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். திடீர் என்று ஒரு பெரும் வெடியோசை காதைப் பிளக்கிறது.

அதன் பின்னர், என் சித்தம் தெளிந்த போது நான் வைத்தியசாலையில் கட்டிலில் உடற் காயங்களோடு வலியில் முனகலுடன்...

அருகில் மடிக்கப்பட்டுக் கிடந்த தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகப்பில்.. மங்கல் அடித்திருந்த என் பார்வையில் அவள் முகம். தற்கொலை குண்டுதாரி. தகவல் தரவும். வரிகள் கொட்டை எழுத்தில்...!

மனதுக்குள் " சலூட்" அடித்துக் கொண்டேன். என் மன வானில் சிட்டாய் பறந்தவள்.. ஒரு விடுதலைப் போராளி. பெருமைப் பட்டுக் கொண்டேன். அன்று கற்பனையில், அவள் பாதம் பதிந்த பாதையில் நடந்த நான் இன்று நிஜத்தில் அவள் பாதையில் நடக்க நிற்கிறேன்.

-யாவும் கற்பனை.

Edited by nedukkalapoovan

ஆகா...

கதை சுப்பர்... வாழ்த்துக்கள்

அட...நெடுக்ஸ் தாத்தாவின் கற்பனை கதையில் வரும் தேவதையை போல் பல தேவதைகள் அமைதியாக "துயில்" கொண்டு விட்டார்கள் :lol: ..அவர்களின் பாதங்களை தழுவி நம் பாதங்களை கொண்டு செல்ல வேண்டும் எண்டு..(அவர்கள் "துயில்" கொண்ட அந்த விநாடி மட்டும் நினைத்துவிட்டு).. :(

இன்னொரு நாகரீக தேவதைக்காக "பஸ்" தரிப்பிடத்தில் காத்து நிற்கும் கூட்டமல்லவா நாம்..(பலர்) :D ..அந்த தேவதையின் பாதம் போல் கதை சிறிசானாலும் அவளின் பாதங்கள் போல் இவ் கதை உணர்த்துவது பல வாழ்த்துக்கள் தாத்தா.. :lol:

அது சரி..(என்ன தாத்தாவின்ட கற்பனை கொஞ்சம் கூடுதலாகவே காதலை தளுவுது) ^_^ ..என்னாச்சு தாத்தா இன்னைக்கு யாராச்சையும் "பஸ்" தரிப்பிடத்தில பார்த்தனியளோ??.. :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி..(என்ன தாத்தாவின்ட கற்பனை கொஞ்சம் கூடுதலாகவே காதலை தளுவுது) :lol: ..என்னாச்சு தாத்தா இன்னைக்கு யாராச்சையும் "பஸ்" தரிப்பிடத்தில பார்த்தனியளோ??.. :D

அப்ப நான் வரட்டா!!

இயற்கையில் அழகு எங்கிருந்தாலும் ரசிக்கப்படலாம். ஆனால் அதை அடையனும் என்று ஆசைப்படக் கூடாது. அப்படி ஆசைப்படுவதுதான் துன்பத்தில் கொண்டு போய் விடும். ரசிப்பதால்.. அதுவும் எட்ட இருந்து ரசிப்பதால்.. யாருக்கும் எந்தக் கேடும் இல்லை..! :(

நன்றிகள் கவரிமான் தங்கச்சி.. மற்றும் நம்ம பேராண்டி. :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கதை சிறிதாக இருந்தாலும் கருப்பொருள் மிகப்பெரியது.பாராட்டுக்கள். மேலும் இப்படி கதைகளை வழங்குங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கதை சிறிதாக இருந்தாலும் கருப்பொருள் மிகப்பெரியது.பாராட்டுக்கள். மேலும் இப்படி கதைகளை வழங்குங்கள்.

நன்றி நுணாவிலான். முயற்சிக்கிறேன். :D

நெடுக்ஸ்...அருமையான படைப்பு

நெஞ்சம் கனத்துவிட்டது..

கதையின் ஆரம்பத்தை வாசித்துக் கொண்டு செல்லும்பொழுது யோசித்தேன்என்னாச்சு நெடுக்சுக்கு பெண்ணை வர்ணித்து எழுதுகிறாரே காதலில் விழுந்துவிட்டாரோ என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து சென்றேன்;ஆனால் முடிவு நுணாவிலான் சொன்னமாதிரி கதையின் கருப்பொருள் பாராட்டுக்குரியதாக இருந்தது

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கதை என்றதும் இந்த தேவதை யாற்றையும் காலை வாரி விட்டதாகத்தான் முடிவு இருக்கும் என்று நினைத்தேன்

உண்மையில் நான் ஊகிக்காத முடிவு.பிரமாதம் நெடுகஸ்.தொருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூயா, சிவா மற்றும் சஜீவன்.

உங்களுக்காக மீண்டும் ஒரு குட்டிக்கதை எழுத முயற்சிக்கனும் போல ஒரு தூண்டுதல். :D

Edited by nedukkalapoovan

இது எந்தநாட்டில நடந்த கதை நெடுக்காலபோவான்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா எண்டால்.. உயிரே படத்திண்ட முடிவு மாதிரி வந்து இருக்கும் நீங்கள் அவவ கொஞ்சம் நாளைக்கு முன்னம் சந்திச்சு இருந்தால்... :D

ஆகா..சபாஷ்..காலத்திற்கேற்ற அழகான கதை...வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எந்தநாட்டில நடந்த கதை நெடுக்காலபோவான்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா எண்டால்.. உயிரே படத்திண்ட முடிவு மாதிரி வந்து இருக்கும் நீங்கள் அவவ கொஞ்சம் நாளைக்கு முன்னம் சந்திச்சு இருந்தால்... :D

இது எங்கு விடுதலைப் போராட்டம் நடக்கோ அதில் உயிராயுதம் பாவிக்கப்படுகுதோ.. அங்கு..! :lol:

நன்றி உதயம் உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை 50 மீற்றர் தள்ளி நிண்டபடியாலை தப்பிட்டீங்கள் இல்லாட்டி உங்களைப்பற்றிய விபரங்களையும் தரச்சொல்லி பேப்பரிலை வந்திருக்கும். அதை நாங்கள் எங்கை தேடுறது?? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் இன்றுதான் உங்களுடைய சிறுகதை எழுதும் கற்பனைத்திறன் வெளிப்பட்டு இருக்கிறது. பிசிறில்லாமல் அழகான ஓட்டம், வாசிப்பவரை ஈர்த்து வைக்கும் பாணி எல்லாம் மிகவும் சிறப்பான ஒரு எழுத்தாளனை அடையாளங் காட்டுகிறது. இன்றுதான் உங்களிடம் உள்ள விவாதபக்கங்களை விட்டு இலக்கிய ஆளுமையை காட்டியுள்ளீர்கள். ஒரு மனதிற்குப் பிடித்தமான நல்லபடைப்பைத் தந்ததற்கு நன்றி நெடுக்காலபோவான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை 50 மீற்றர் தள்ளி நிண்டபடியாலை தப்பிட்டீங்கள் இல்லாட்டி உங்களைப்பற்றிய விபரங்களையும் தரச்சொல்லி பேப்பரிலை வந்திருக்கும். அதை நாங்கள் எங்கை தேடுறது?? :unsure::unsure:

நக்கலு. நன்றி சாத்திரி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. :unsure:

நெடுக்காலபோவான் இன்றுதான் உங்களுடைய சிறுகதை எழுதும் கற்பனைத்திறன் வெளிப்பட்டு இருக்கிறது. பிசிறில்லாமல் அழகான ஓட்டம், வாசிப்பவரை ஈர்த்து வைக்கும் பாணி எல்லாம் மிகவும் சிறப்பான ஒரு எழுத்தாளனை அடையாளங் காட்டுகிறது. இன்றுதான் உங்களிடம் உள்ள விவாதபக்கங்களை விட்டு இலக்கிய ஆளுமையை காட்டியுள்ளீர்கள். ஒரு மனதிற்குப் பிடித்தமான நல்லபடைப்பைத் தந்ததற்கு நன்றி நெடுக்காலபோவான்.

உங்களைப் போன்று படைப்புக்களை கிரமமாகச் செய்பவன் அல்லன் நான். நீங்கள் உங்கள் அனுபவத்தால் கற்றதில் இருந்து இந்த கருத்தை முன் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.. இந்த தன்நம்பிக்கை மெருகூட்டலுக்கு நன்றிகள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் அண்ணா நல்ல அழகான கதை

தொடக்கத்திள் கதை வாசிக்க நல்லா இருந்திச்சு யாளியா இருந்து வாசிச்சு கொன்டு இருந்தேன்..முடிவை வாசிச்சதும் பயந்து பொனேன் :unsure:

வாழ்த்துக்கள் அண்ணா

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை 50 மீற்றர் தள்ளி நிண்டபடியாலை தப்பிட்டீங்கள் இல்லாட்டி உங்களைப்பற்றிய விபரங்களையும் தரச்சொல்லி பேப்பரிலை வந்திருக்கும். அதை நாங்கள் எங்கை தேடுறது?? :unsure::unsure:

நெடுக்கண்ணை எண்டபடியால் ஏதோ 50 மீ. தூரமாவது தள்ளி நிண்டார். இதே ஜம்மு பேபியா இருந்தால் இவ்வளவுக்கும் சங்கே ஊதியிருப்பாங்கள்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு நெடுக்ஸ் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு நெடுக்ஸ் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் .....

நன்றி புத்தன் உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. :unsure:

நெடுக்கண்ணை எண்டபடியால் ஏதோ 50 மீ. தூரமாவது தள்ளி நிண்டார். இதே ஜம்மு பேபியா இருந்தால் இவ்வளவுக்கும் சங்கே ஊதியிருப்பாங்கள்..! :unsure:

இதற்கு ஜமுனன் தான் பதில் சொல்ல வேணும். :unsure:

அட நெடுக் தாத்தா தேவதைகளின் பாதங்கள் பற்றி எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியத்தில் தொடர்ந்து வாசித்த போதுதானே முடிவு தெரிந்தது.

அழகாக சொல்லி இருக்கிறீங்கள். கதை சிறிதானாலும் அதன் பெறுமதி அதிகம்.

வீண் அலட்டல்களும் நீட்டல்களும் இல்லாமல் குறுகிய கதைக்குள் பெரிய விடயத்தை அடக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நெடுக் தாத்தா தேவதைகளின் பாதங்கள் பற்றி எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியத்தில் தொடர்ந்து வாசித்த போதுதானே முடிவு தெரிந்தது.

அழகாக சொல்லி இருக்கிறீங்கள். கதை சிறிதானாலும் அதன் பெறுமதி அதிகம்.

நெடுக்ஸ் தாத்தாட்ட இருந்து இதை எதிர்பார்க்கல்ல எல்ல. அங்க தான் இருக்கு இக்குட்டிகதை வாசகர் மீது செய்யும் தாக்கம். :unsure:

வீண் அலட்டல்களும் நீட்டல்களும் இல்லாமல் குறுகிய கதைக்குள் பெரிய விடயத்தை அடக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி மணிவாசகன் உங்கள் பெறுமதிமிக்க கருத்துப் பகிர்வுக்கு. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நெடுக்ஸ் தாத்தாவின் கதையா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. <_<

கதையின் ஆரம்பத்தில என்னடா இது தாத்தா பொண்ணை பற்றி வர்ணிக்கிறாரே என்ன ஆச்சு என்டு யோசித்தன் ஆனா பிறகு தான் கதையின் ஆழம் விளங்கிச்சுது.

நல்லதொரு குட்டிகதை தாத்தா. மேன்மேலும் கதை எழுதுங்கோ வாசிக்க ஆவலாக இருக்கிறேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நெடுக்ஸ் தாத்தாவின் கதையா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. <_<

கதையின் ஆரம்பத்தில என்னடா இது தாத்தா பெண்ணை பற்றி வர்ணிக்கிறாரே என்ன ஆச்சு என்டு யோசித்தன் ஆனா பிறகு தான் கதையின் ஆழம் விளங்கிச்சுது.

நல்லதொரு குட்டிகதை தாத்தா. மேன்மேலும் கதை எழுதுங்கோ வாசிக்க ஆவலாக இருக்கிறேன் :lol:

நன்றி புள்ள இன்னிசை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.