Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது--இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

Featured Replies

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் எனச் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்தனர்.

இலங்கைப்படையினர் அனைத்து ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறிப்பிட்டது.

இலங்கை அரசாங்கம் இந்தியா தம்பக்கம் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசாங்கம் அத்துமீறிய குடியேற்றம் மட்டுமல்லாது அனைத்திலும் சிங்கள மயம் என்ற கொள்கையையும் திணித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.

இந்தநிலையில் கருத்துரைத்த இந்திய மன்மோகன் சிங், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தாம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தீர்வையல்ல அரசியல் தீர்வையே இந்தியா, இலங்கையில் ஏற்படவேண்டும் என வலியுறுத்துகிறது என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

ஈழத்தமிழர் அழிந்து போகும் வரைக்கும் கைவிட மாட்டார்கள்...!!!

ஈழத்தமிழர் அழிந்து போகும் வரைக்கும் கைவிட மாட்டார்கள்...!!!

மலையக தமிழர் குடியுரிமை பறித்து நாடுகடத்த எவ்வாறு இந்தியா உதவியதோ அப்படிதான் பூர்வீக தமிழரும் அடிமையாக இருக்க உதவி செய்து கைவிடமாட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆகா இந்த பதிலுக்காக தான் நாங்கள் இவ்வளவு நாளாக எவ்வளவோ துன்பங்களிற்கும் துயரங்களிற்கும் இடப்பெயாவுகளிற்கும் மரணங்களிற்கும் இடையில் எதிhபாhத்து கார்ரிருந்தம் ஆகா எவ்வளவு அற்புதமான கருத்துக்கள் எவ்வளவு இனிமையாக இருக்குது காதிலே ...... உங்களுடைய பதிலே பொதும் நாம் இன்று உணவு கூட இல்லாமல் இருந்து விடலாம் அவ்வளவ சந்தோசம் எமக்கு இதை கேள்விப்பட்டால் யாழில் உணவு நெருக்கடியின் பொழுது தமிழ்தேசிய உணர்வாளர்கள் அனுப்ப வெளிக்கிட்ட உணவுகளை நீங்கள் தடுத்ததை கேள்விப்பட்ட மக்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள் ஏன் வன்னியில் நீங்கள் கொடுத்த ஆயுதங்களினால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கம் எம் உறவுகள் எவ்வளவு ஆனந்தப்டுவார்கள் .....

ஆகா அற்புதம் அருமை .....

தலைப்பாகைகுள்ள தலைமயிரில்ல முழுக்கவே முளை தான் கிடக்குது !

இந்திய அரசு விரும்பிய பொருளாதரா உடன் படிக்கையில் கைச் சாத்திட சிறிலங்கா அரசு மறுத்து விட்டது.பாக்கிஸ்த்தான் சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய ஒரு நகலைக் கொண்டு வந்துள்ளது.

இதன் பின்னணியிலிருக்கும் புலிகளின் இராஜதந்திர நகர்வு என்ன? அண்மைய ஆனத்த விகடன் கருத்துக் கணிப்பின் பின்னணி என்ன?

இந்தியாவின் தேசிய நலங்களுக்கு தமிழர்கள் விரோதமானவர்கள் அல்ல.சிங்கள தேசமே வரலாற்று ரீதியாக இந்திய தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்பட்டு வந்திருக்கிறது. நாம் பல காலம் சொல்லி வருவதையே மீண்டும் சொல்ல வேண்டி உள்ளது. தமிழர்களே இந்தியாவின் நீண்ட கால நண்பர்கள்.இந்திய கொள்கை வகுப்பாளார்கள் இதனைப்புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.தமிழர்களின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்பது சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றியே.இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர வேண்டும்.

தமீழீழத்தின் நீண்ட கால நலங்களை முன் நிறுத்தி சிந்தித்து அரசியற் பக்குவத்துடன் கருதுக்களை எழுதுவோம்.

இந்தியாவின் தேசிய நலன்களுக்கு தமிழர்கள் விரோதமானவர்கள் அல்ல.

சிங்கள தேசமே வரலாற்று ரீதியாக இந்திய தேசிய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டு வந்திருக்கிறது. நாம் பல காலம் சொல்லி வருவதையே மீண்டும் சொல்ல வேண்டி உள்ளது.

தமிழர்களே இந்தியாவின் நீண்ட கால நண்பர்கள்.இந்திய கொள்கை வகுப்பாளார்கள் இதனைப்புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

தமிழர்களின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்பது சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றியே. இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர வேண்டும்.

புரிந்து கொள்ளவேண்டியவர்கள் இதை புரிந்து கொள்ளும் வேளையில் இந்தியாவுக்கும் நன்மை! தமிழர்களுக்கும் நன்மை!!

புரிந்து கொள்வார்களா??? அரசியல் சாணக்கியர்கள் என்றால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நடேசன் அண்ணாவும்

அண்மையில் கேட்டிருந்தார்...

சிங்கு அண்ணாத்தை முதலில் போய் அந்த இந்திய தமிழகத்து அப்பாவி மீனவர்களைக் கைவிடாது காப்பாற்றப்பாரும். எங்களை காப்பாற்றிக் கொள்ள எமக்குத் தெரியும்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி

சனீஸ்வரனுக்கு விரதம் இருந்தீர். இந்த சனித்தோசம் விடாது என்று சொல்கின்றது. அதற்கு ஏதும் விரதம் இருக்கலாமே???

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒப்பந்தம் கொண்டுவந்து நீட்டினால் உடனடியாக கையொப்பம் வைத்த காலம் மலையேறிவிட்டது.

இப்போது விருப்பமிருந்தாலும்கூட மாட்டேன் என்று முதலில் சொல்லி இழுத்தடித்து அதை வைத்து எதையும்

கறக்கலாமா - காரியம் பெறலாமா - அழுத்தம் கொடுக்க இதைப் பயன்படுத்தமுடியுமா என்று சிந்திப்பது

இப்போது நடைமுறையிலிருக்கும் வழக்கம்.

இந்தியா தமிழர்களை கைவிடாது?.... :lol:

இந்தியாவைப்பொறுத்தவரை இந்திரா காந்தி அம்மையார் உயிருடன் இருந்த போது மட்டுமே

உண்மை தன்மை இருந்தது.....

அதன் பிறகு எல்லாம் விலாங்கு போன்று இலங்கையரசிற்கு முகமும், ஈழத்தமிழ் மக்களுக்கு

வாலும் காட்டி வந்தார்கள்...

தற்போது வெளிப்படையாகவே இலங்கைக்கு உதவி வருகிறார்கள்.....

இதற்கு காரணம் இந்தியாவின் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் ஆள ஊடுருவல்

மற்றையது அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியா பின்பற்றல்.......

ஆழமான தமிழ் எதிர் இன உணர்வு அதாவுது இந்தி மட்டும் கொள்கையாள் தமிழ் நாட்டு மீனவர்க்ள் தொடக்கம் ஈழத்தமிழ் மக்கள் வரை சிஙளப்படைகளல் அழிக்கப்பட கண்டு கொள்வதில்லை....

அதானல் தமிழ் மக்களை தமிழ் மக்களே காப்பற்றவேண்டிய நிலை...

எவரையும் நம்பி கால இழப்பும், அழிவும் தான் மிச்சம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்தவை வழிக்கு கொண்டு வாரதுக்குரிய உபாயமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து போகும் வரை தமிழர்களை பப்பாவில் ஏத்தி தனதும், தனது பரிவாரங்களின் உயிர்களையும் பாதுகாக்க (ராஜீவ் காந்தியை நினைவில் கொள்ளவும்) விடும் ஒரு அறிக்கை இது. மீண்டும் இந்தியா சென்றதும் பழைய பல்லவி தான். தலைவர் 25 வருடங்களுக்கு முன்பு அறிந்து கொண்ட தீர்க்க தரிசனம் இன்னும் எம்மவருக்கு புரியாதது அதிசயமே.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து போகும் வரை தமிழர்களை பப்பாவில் ஏத்தி தனதும், தனது பரிவாரங்களின் உயிர்களையும் பாதுகாக்க (ராஜீவ் காந்தியை நினைவில் கொள்ளவும்) விடும் ஒரு அறிக்கை இது. மீண்டும் இந்தியா சென்றதும் பழைய பல்லவி தான். தலைவர் 25 வருடங்களுக்கு முன்பு அறிந்து கொண்ட தீர்க்க தரிசனம் இன்னும் எம்மவருக்கு புரியாதது அதிசயமே.

அதைத்தான் தலைவர் சொன்னார்

இவர்கள் கையை பிடித்தாவிடமாட்டார்கள்

நாம் விடுபடுமளவுக்கு வழரவேண்டும் என்று..............

எம்மில் பலர் ஏக் கையைப்பிடித்துள்ளனர் என்று இன்னும் அறியாமல்??????????

எம்மில் பலர் ஏன் கையைப்பிடித்துள்ளனர் என்று இன்னும் அறியாமல்??????????

சில வேளை அவர் புலிகளை தமிழ் மக்காள் கைவிட்டு விட்டு வந்தால் இலங்கை தமிழ்ழரை இந்தியா கைவிடாதாம் :lol:

முன்பு ஈழத்தமிழர் என்று சொல்லி இப்ப இலங்கக தமிழர் ஆகிட்டோம்..

எல்லாம் ஆடி அமாவாசை விரதம் பிடித்தபலன் போல :lol:

இந்தியா கைவிட்டாலும் எங்களுக்கு சீனா இருக்கிறது. இப்பவே சீனா தனது இராணுவத்துக்கு செய்த ஆயுதங்களை பகிர்வது உலகில் புலிகளோடு மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கைவிட்டாலும் எங்களுக்கு சீனா இருக்கிறது. இப்பவே சீனா தனது இராணுவத்துக்கு செய்த ஆயுதங்களை பகிர்வது உலகில் புலிகளோடு மட்டும் தான்.

இது பித்த நல்லாய் தலைக்கு ஏறிட்டுது என்று அர்த்தம். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.