Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்ப தோல்வியடைந்த நடவடிக்கைகளை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

புலிகள் ஆனையிறவு முதல் தரம் தாக்கிய போது பலத்த இழப்புக்களுடன் தாக்குதல் தோல்வியை ஒத்து கொண்டுள்ளார்கள். அதன் அடுத்த படிதான் ஆனையிறவிலே பலத்த இழப்புடன் இராணுவம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடித்தப்பியது. இனி கொஞ்ச பேருக்கு படம் போட்டு எப்படி தோல்வி ஏற்பட்டது என விளாவாரியாக புளி போட்டு விளக்கவேணும் போல.

  • Replies 92
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்ப தோல்வியடைந்த நடவடிக்கைகளை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

உமக்கு தெரியாவிட்டால் மற்றவர்களுக்கு தெரியவராது என்ற நினைப்பை கைவிடுங்கள்.

யார் கதை சொன்னது? எப்ப சொன்னது? என்ற துளவாரம் ஏன்.

ஆமாம் நீங்கள் எல்லாம் அறிஞ்சவர் தான். சொல்லுங்கள் எந்த தோல்வி நடவடிக்கையைப் புலிகள் மறைத்தார்கள் என்று?

உங்கள் எண்ணத்துக்குக் கதை விடுவீர்கள். அதை எப்படி என்று கேட்டால் உடனே துளவாரம், மயிர் மண்ணு என்று கொண்டு...

40 000 ஆயிரம் ஆட்லறி இருந்தால் இன்று யாழ்்பபாணம் பிடிக்கப்பட்டிருக்கும். ஓவராக எல்லாம் கதை விடக்கூடாது. இன்றைக்கு இந்த ஓராண்டுச் சமர்களில் கூட சிறிலங்கா அரசு 40 ஆயிரம் ஆட்லறிகளைத் தான் பாவித்திருக்கும்.

மாவிலாறுச் சமரின் நோக்கம் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு இதெல்லாம் தெரியாமல் மோட்டுத்தனமாக போய் நல்லா மாட்டுப்பட போறான்

சரி பின்னை, சரிநிகர் எழுத்தாளர் உங்கடை ஆய்வையும் எடுத்து விடுங்கோவன். ரிசியோ, ருசியோ என பார்ப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே விடுதலைப்புலிகள் இந்த ஆண்டில் கட்டாயம் ஒரு சிறிய வெற்றியையும் 2009ம் ஆண்டில் வன்னிப் பிரந்தியம் தவிர்ந்த ஒரு பிரதேசத்தில் பாரிய வெறியையும் ஈட்ட வேண்டும்.

சரியப்பா

உம்மடை ஆணையைத் தலைவர் தலைமேல் கொண்டு செயற்படுவார். திருப்தி தானே ?

மண்ணாங்கட்டி - வந்திட்டார் ஆலோசனை சொல்றதுக்கு!

30 பவுண்ஸ் காசைக் கொடுத்துட்டே உப்பிடியெல்லாம் ஆலோசனை சொல்ல முடியுமெண்டால் - உதை விடத் திறமான ஆலோசனைகளும் திட்டங்களும் உயிரைக் கொடுக்கிறவனிடம் இருக்கும்.

தள்ளி நிண்டு வேடிக்கை மட்டும் பாரும்.

ஓம் ஓம் யுகே ராஜ்.... சரியாக சொன்னீர்கள். மாவிலாறில் புலிகள் தண்ணியை மறித்து, உங்கள் மொழியில் சொல்வதானால் 'சண்டித்தனம்' செய்திருக்காமல் விட்டிருந்தால், அப்பாவிகளான மகிந்த மாமாவும், அவரின் செல்லத் தம்பி கோதபாயவும், அவரின் அன்பு நண்பன் சரத்தும் ஆக்கிரமிப்பு போரை தொடங்காமல், தமிழ் இன அழிப்பை செய்யாமல் 'ரொம்ப நல்லவங்களாக' இருந்திருப்பார்கள். கிழக்கும் போயிருக்காது.

அதே மாதிரி வடக்கில் உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த புலிகளின் கேணல், 40 ஆயிரம் ஆட்டு கறிகளுடன்.. மன்னிக்கவும் ஆட்டுலறிகளுடன் யாழ்பாணத்தை இந்தா பிடிக்கிறன் பேர்வழி என்று போயிருக்காட்டி, இப்போ நாங்கள் பூநகரியையும் இழக்க கூடிய சூழ்நிலைக்கருகில் வந்து இருக்க மாட்டம். சிங்கள அரசாங்கம் சும்மா இருந்திருக்கும்... தெரியாமல் செய்து போட்டார்கள் புலிகள்

(இன்னமும் பாலா அண்ணாவின் இடம் காலியாகத்தான் இருக்கு, எதற்கும் நீங்கள் ஒருக்கா அப் பதவிற்கு ஒரு விண்ணப்பம் போட்டால் சில வேளைகளில் உங்களுக்கு கிடைக்கலாம்)

சரி பின்னை, சரிநிகர் எழுத்தாளர் உங்கடை ஆய்வையும் எடுத்து விடுங்கோவன். ரிசியோ, ருசியோ என பார்ப்பம்.

எழுதலாம் தான் நுணா. ஆனால் நான் எழுதிறதைப் பார்த்துட்டு, சரிநிகரில் இராணுவ கட்டுரைகளை தொடர்ந்து எழுதி கொண்டு வந்த டி.சிவராம் அண்ணாவின் ஆவி கூட என்னை மன்னிக்காது. பரவாயில்லையா?

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு இந்த ஓராண்டுச் சமர்களில் கூட சிறிலங்கா அரசு 40 ஆயிரம் ஆட்லறிகளைத் தான் பாவித்திருக்கும்.

பாகிஸ்தானில் இருந்து 10 நாளுக்கு ஒரு தடவை வருகிற கப்பலில் கொண்டு வரப்படுகிறவை உடனுக்குடன் பாவிக்கப்படுகின்றன. அத்தோடு பல்குழல் எறிகணை நிமிடத்துக்கு 90 அடிக்கிறார்களாம்.. நம்மட தல வந்து சரியான கணக்குச் சொல்லக்கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிது இங்க?????????????????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

பாகிஸ்தானில் இருந்து 10 நாளுக்கு ஒரு தடவை வருகிற கப்பலில் கொண்டு வரப்படுகிறவை உடனுக்குடன் பாவிக்கப்படுகின்றன. அத்தோடு பல்குழல் எறிகணை நிமிடத்துக்கு 90 அடிக்கிறார்களாம்.. நம்மட தல வந்து சரியான கணக்குச் சொல்லக்கூடும்!

அப்ப ஒருநாளைக்கு 129,600 ரொக்கட்டுக்கள் அடிக்கிறாங்கள் போல...... என்னே அறிவு..... தம்பிக்கு எந்த ஊர்? இடிவிழுந்தபட்டியா? அப்புறம் அது என்ன 10 நாள் கணக்கு? கப்பல் பாகிஸ்தானில் இருந்துதான் வருது எண்டு என்ன நிச்சயம்? அது சோமாலியாவில் இருந்தோ, இந்தியாவில் இருந்தோ வரலாம்.... யாழ், வர, வர, பொய்ப்பொத்தலாகிக்கொண்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

இல்லை

இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா?

சண்டையை நிறுத்திவிட்டு

கோலி மறிப்பினம்

அல்லது

துடுப்பாட்டம் ஆடுவினம்

அல்லது

????????????

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா?

சண்டையை நிறுத்திவிட்டு

கோலி மறிப்பினம்

அல்லது

துடுப்பாட்டம் ஆடுவினம்

அல்லது

????????????

:rolleyes:

என்ன சொல்ல வருகிறீர்கள்? எதையுமே விளங்கும்படியாக எழுத மாட்டீர்களா? கேள்விக்குறிக்குள்ளேயே உங்களின் அரைப்பகுதி கருத்துக்களை முடக்கி விடுகிறீர்கள். ஏன், மீதியை எப்படி முடிப்பது என்று உங்களுக்கே புரியவில்லையா? இனியாவது நீண்ட கேள்விக்குறிகளில் கருத்தாக எழுதாமல் சில எழுத்துக்களையும் சேர்த்தெ எழுதுங்கள். நாலு பேருக்கு உங்களின் கருத்தின் ஒரு பகுதியாவது விளங்கிவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிது இங்க?????????????????

கருத்து எழுதியே எதிரிக்கு தகவல்களை கொடுத்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது புலவர் ........... :rolleyes:

நாலு பேருக்கு உங்களின் கருத்தின் ஒரு பகுதியாவது விளங்கிவிட்டுப் போகட்டும்.

நாலுபேரல்ல... ஒராளுக்குதான் விளங்கவில்லபோல.............................. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து இயக்கம் இருந்திருந்தா என்ன நடக்கும் என்பதற்கு யாழ் களம் நல்லதோர் உதாரணம்.

ஒருத்தன் அடி எண்டுவான். ஒருத்தன் விடுடறது நல்லம் எண்டுவான். கடைசியில .......

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபேரல்ல... ஒராளுக்குதான் விளங்கவில்லபோல..............................

:rolleyes: யாரந்த ஒருவர் ? நீங்களா?

யாரந்த ஒருவர் ? நீங்களா?

இல்லட்டி? நீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நீங்கள்தான் என்று நீங்களே ஒத்துக்கொள்ளும் போது நான் என்னத்தைச் சொல்ல ?!

இதில் சொல்வதுக்கு என்ன இருக்கிறது? உங்களுக்கு விளங்கீட்டுதோ இப்ப??

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நல்லாவே விளங்கீட்டுது பனங்காய் !
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

யாழ் குடாநாட்டை கைவிட்டு விட்டு விடுதலைப்புலிகள் வந்தது முதல்.. கிளிநொச்சி பறிபோனது மட்டுமன்றி மாங்குளத்தையும் தாண்டி.. இராணுவம்.. நிலை கொண்டிருந்த போதும்.. நீங்கள் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள்..??!

ஆனால்.. இராணுவம் வன்னியை கிட்டத்தட்ட ஆக்கிரமித்து நின்ற போதுதான்.. ஓயாத அலைகள் அடிக்கத் தொடங்கின. எவருமே சிந்திக்க முடியாத ஊகிக்க முடியாத வேளைகளில்.. ஊகிக்க முடியாத பரிமானங்களில் அடி விழுந்ததன் பின்னர் தான்.. நீங்களே செய்திகளை அறிந்தீர்கள்.

நான் சொல்லவில்லை... அண்மையில் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டியளித்த சரத் பொன்சேகாக.. ஏ 32 வீதியை தக்க வைக்க நீண்ட மண்ணணையை படையினர் அமைத்து அதனைப் பாதுகாக்க முயல்வர் என்று கூறி இருக்கிறார். மண்ணையை அமைத்துவிட்டு.. காக்கா குருவியையா காவல் வைக்கப் போகிறார்கள்.

இந்திய இராணுவம் கூட வன்னிக்குள் இவ்வளவு தொகை படையினரை முடக்கி யுத்தம் செய்யவில்லை. அதற்கு இராணுவ பரிமானம் இருக்கிறது. சிங்களவன்.. இந்தியப்படையினர் போகாத காடெல்லாம் அலைகிறான்.. ஆனால் முக்கிய இடங்களை அவன் இன்னும் வன்வளைப்புச் செய்யவில்லை. 80 கிலோமீற்றர்கள் நீண்ட மேற்குக் கரையை கண்காணிப்பது என்பதற்கு எவ்வளவு படையினர்.. எவ்வளவு பலம் தேவை..???! ஊகித்துப் பாருங்கள்.

நிச்சயம் படைப்பலம்.. சிதறுண்ட நிலையிலேயே சிங்களப் படை இன்று நிற்கிறது. அதன் தன்மை இப்போ உங்களால் உணர முடியாதிருக்கலாம். ஆனால் ஓயாத அலை ஒன்று அடிப்பின்.. அப்போது உங்கள் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் போது விளங்கும்.. என்று நினைக்கிறேன்.

நான் ஆய்வாளனோ... வன்னிக்களமாடியோ அல்ல. அல்லது இராணுவ நுட்பங்களறிந்த.. விற்பன்னனோ அல்ல. தினமும் வரும் செய்திகளின் அடிப்படையில் எனது சிற்றறிவுக்கு பட்ட ஒரு பார்வையை எழுதிக் கொண்டேன். அது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நெடுக்கு, நான் மட்டும் என்ன வன்னியில் இருந்துபோட்டு இங்க வந்த ஆளே?

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். ஏ 9 படையினர் வசம் விழுந்தால் இவ்வளவு காலமும் கஷ்ட்டப்பட்டுப் பிடித்த ஆனையிறவும், தாக்குப்பிடிக்கிற முகமாலையும் எந்தச் சண்டையும் இல்லாமலேயே ராணுவம் வசம் வந்துவிடும் என்கிற கவலைதான். ஆனால், இதற்காகப் போராளிகளைப் பலி கொடுப்பதையும் விரும்பவில்லை. ஏதோ, அவர்களுக்குச் சரியானதை அவர்கள் செய்கிறார்கள், நமக்கு அதை விமர்சிக்க தகுதியில்லை என்பதே எனது எண்ணம் !

  • கருத்துக்கள உறவுகள்

மிக அன்புக்குரிய நண்பர்களே .......... :rolleyes:

எங்களுக்குள் சண்டை வேண்டாம் .

உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன் . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியை இராணுவம் கைப்பற்றியதாக எனக்கு இலங்கையிலிருந்து ஒரு நண்பன் குறுஞ் செய்தி ஒன்று அனுப்பியுள்ளான். யாருக்காவது மேலதிக விபரங்கள் தெரியுமா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூநகரியை இராணுவம் கைப்பற்றியதாக எனக்கு இலங்கையிலிருந்து ஒரு நண்பன் குறுஞ் செய்தி ஒன்று அனுப்பியுள்ளான். யாருக்காவது மேலதிக விபரங்கள் தெரியுமா? :)

படைத்தரப்பு அப்படித்தான் தெரிவிக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.