Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாமோகனின் பேட்டி

Featured Replies

தயாமோகனின் பேட்டி

இன்று பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுத்த தயாமோகன் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை ஏற்றுக் கொண்டு பேசினார். பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பது போன்றும் பேசினார்.

***

கனடா கீதவாணி வானொலிக்கு நேற்று தயாமோகன் அவர்கள் பேட்டிகொடுத்ததாக ஒருவர் எனக்கு கூறினார். நான் கேட்கவில்லை. முன்பும் கீதவாணி வானொலிக்கு பத்மநாதன் அவர்கள் பேட்டி கொடுத்து இருந்தார். அது எப்படி எல்லோரும் கனடா கீதவாணி வானொலியுடன் மட்டும் தொடர்பில் உள்ளார்கள்? தற்போது உள்ள குழப்பத்தில் கீதவாணி வானொலியின் பங்கு என்ன? ஏனைய நாடுகளில் வாழும் தமிழ்மக்களுடன் தொடர்புகொள்ளாமல் ஏன் எல்லோரும் கனடாவை மட்டும் மையப்படுத்தி தொடர்பாடல் செய்கின்றார்கள்? சரியோ, பிழையோ... உண்மையோ, பொய்யோ... இப்படியான விடயங்களில் அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் ஒரே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், பாரபட்சம் காட்டப்படக்கூடாது. இதேபோல் உலகில்வாழும் அனைத்து தமிழ்மக்களிற்கும் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதே எனது தாழ்மையான கருத்து.

  • தொடங்கியவர்

மோகன் நல்ல வேகமாக இருக்கிறார். வெட்டுப்படும் என்று எதிர்பார்த்தேன். இத்தனை விரைவில் நடக்கும் என்று நினைக்கவில்லை.

இன்று பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுத்த தயாமோகன் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை ஏற்றுக் கொண்டு பேசினார். பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பது போன்றும் பேசினார்.

தனக்குத் தெரிந்த தகவலை தயாமோகன் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றார். இதில் கோபிக்க என்ன இருக்கின்றது சபேசன்?

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குத் தெரிந்த தகவலை தயாமோகன் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றார். இதில் கோபிக்க என்ன இருக்கின்றது சபேசன்?

அவர் சொல்ல வாறது என்னவெண்டால் தலைவர் செத்ததை கேபி சொல்லியும் இன்னும் நம்பாமல் கேபியை துரோகியாக்கினீர்களே இப்ப தயா மோகனும் அதைத் தான் சொல்கிறார் அவரையும் துரோகியாக்க போறீங்களா எனக் கேட்கிறார்.

சில பேருக்கு தலைவர் செத்த செய்தி கேட்டது சரியான சந்தோசம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய நிலமையில் தேவையேற்படின் கடந்தகால அவலநிகழ்வுகளையும் இனிவரும் காலங்களையும் கருத்தில் கொண்டு கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் மட்டுறுத்தினர் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை எங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளமுடியாததும் எங்கள் வாழ்வின் அவலங்களின் ஒரு சோகம்தான்...பத்மநாதன் தலைமையை மறுப்பவர்கள் யாராவது அடுத்ததாய் யார் தலைமையேற்பார் என்றாவது சொல்வேண்டும். அடுத்தாக என்ன செய்யப்போகின்றோம் என்கிற ஒரு வழிகாட்டி இல்லாமல் கடவுள் நம்பிக்கை போல தலைமை நம்பிக்கையில் ஒரு இனம் தன் வாழ்நாளை கடத்துவது சோகமானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை தமிழர்களின் மிகப் பெரிய பிழை எதையும் உடனே நடக்க முன் விமர்சிக்க மாட்டார்கள் நடந்து முடிந்த பிறகு ஜயோ அவர் இப்படி செய்து விட்டாரே இவர் இப்படி செய்து விட்டாரே என்று கதைப்பார்கள்.புலி எதிர்ப்பு ஊடகங்கள் எவ்வாறு தங்கள் ஊடகங்களில் புலியை பற்றி உண்மையான கருத்து எழுத விடுவதில்லையோ அதே போல புலி ஆதரவு ஊடகங்களிலும் நடுநிலையாக கருத்தினை விமர்சிக்கவிடுவதில்லை இந்த நிலை மாற வேண்டும் என்பதே என் கருத்து.அதாவது ஒரு முக்கிய பதவியில் இருப்பவரை பற்றி நல்லதாகவும் விமர்சிப்பார்கள் கெட்டதாகவும் விமர்சிப்பார்கள் அதை தாங்கும் பக்குவம் அவருக்கோ அல்லது அந்த அமைப்புக்கோ இருக்க வேண்டும் என்பதே என் கருத்து அதை ஊடகங்கள் பாரபட்சம் இன்றி வெளியிட வேண்டும்.தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பொறுத்த வரை தமிழர்களின் மிகப் பெரிய பிழை எதையும் உடனே நடக்க முன் விமர்சிக்க மாட்டார்கள் நடந்து முடிந்த பிறகு ஜயோ அவர் இப்படி செய்து விட்டாரே இவர் இப்படி செய்து விட்டாரே என்று கதைப்பார்கள்.புலி எதிர்ப்பு ஊடகங்கள் எவ்வாறு தங்கள் ஊடகங்களில் புலியை பற்றி உண்மையான கருத்து எழுத விடுவதில்லையோ அதே போல புலி ஆதரவு ஊடகங்களிலும் நடுநிலையாக கருத்தினை விமர்சிக்கவிடுவதில்லை இந்த நிலை மாற வேண்டும் என்பதே என் கருத்து.அதாவது ஒரு முக்கிய பதவியில் இருப்பவரை பற்றி நல்லதாகவும் விமர்சிப்பார்கள் கெட்டதாகவும் விமர்சிப்பார்கள் அதை தாங்கும் பக்குவம் அவருக்கோ அல்லது அந்த அமைப்புக்கோ இருக்க வேண்டும் என்பதே என் கருத்து அதை ஊடகங்கள் பாரபட்சம் இன்றி வெளியிட வேண்டும்.தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சிப்பதற்கும் கருத்து கூறுவதற்கும் என்ன வித்தியாசம் என்று யாரவது சொலுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

unwanted talk must be removed.

தலைவருக்கு பக்கத்தில் இருந்தவர்கள் பலர் இருப்பர். தலைவர் மற்றும், எல்லோரும் எங்கே இருக்கின்றார்கள் என்பது மிக விரைவில் வெளிவரும் ஒரு வேலைக்கு பொறுப்புக் கொடுத்தவரிடம் இயக்கத்தை குடுக்கும் முடிவை அவசப்பட்டு எடுக்க கூடாது.

வெளியில் இருந்து நம்பிக்கை கொடுத்து எமது விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டுள்து. இயக்க விதி முறையை பாவித்து பலர் பல பாதங்செய்துள்ளார்கள். உதாரணம் கருணா தவறு விடுகிறான் என்று தெரிந்தும் தலைவரின் உத்தரவுக்காக காத்திருந்தால் அவன் இன்றும் உயிர்வாழ்கிறான்.

இயக்க விதி முறைகள் செயல்பட நாட்கள் ஆகும். விதி முறையை மீறுபவர்கள் அதிகாரத்தை பெற அவசரப்படுகின்றார்கள்.

அடுத்து சர்வ தேச காவல்துறையால் தேடப்படும் ஒரு நபர் தலைவர் என்பது தமிழ் இனத்தை மேலும் அழிவுக்கு இட்டுச்செல்லும்.

அரசியல் துறைப்பொறுப்பளரும், புலித்தேவன் அவர்களின் படுகொலைக்கும்....?

பல கேள்விகள் இருக்கின்றது.

யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

புலம் பெயர் தேசத்தில் தலைவாரால் விலத்தி வைக்கப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தி மீண்டு தலை எடுக்க முயற்சிக்கின்றார்கள்.

நெருப்புடன் விளையா புறப்பட்டால்...

உண்மைகளை எங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளமுடியாததும் எங்கள் வாழ்வின் அவலங்களின் ஒரு சோகம்தான்...பத்மநாதன் தலைமையை மறுப்பவர்கள் யாராவது அடுத்ததாய் யார் தலைமையேற்பார் என்றாவது சொல்வேண்டும். அடுத்தாக என்ன செய்யப்போகின்றோம் என்கிற ஒரு வழிகாட்டி இல்லாமல் கடவுள் நம்பிக்கை போல தலைமை நம்பிக்கையில் ஒரு இனம் தன் வாழ்நாளை கடத்துவது சோகமானது.

புதுக்குடியருப்பு கைப்பற்றப்பட்டது என்று நான் பதிந்த செய்தி அகற்றப்பட்டதோடு இங்கு நான் செய்திகள் பதிவதை நிறுத்திவிட்டேன்.

"இந்தாங்கோ பொல்லு" என்ற தலைப்பில் இறுதியாக வன்னியில் நடைபெறப் போவதை உணர்ந்து "மக்களை உடனடியாக விடுவித்து, சரணடைவதே ஒரே வழி" என்ற தொனியில் எழுதியதும் உடனேயே அதுவும் அகற்றப்பட்டது. ஈற்றில் அதுவே நடந்தது! அன்று தவறாக தெரிந்த கருத்து இன்று காலத்தால் நிஜமாகி நிற்கிறது.

நடுநிலையான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயக் கூடிய புதிய கருத்துக்களத்தின் தேவையை இது உணர்த்துகின்றது. எற்கனவே அப்படி ஒன்று இருந்தால் தயவுசெய்து தனிமடலில் அறியத்தாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியருப்பு கைப்பற்றப்பட்டது என்று நான் பதிந்த செய்தி அகற்றப்பட்டதோடு இங்கு நான் செய்திகள் பதிவதை நிறுத்திவிட்டேன்.

"இந்தாங்கோ பொல்லு" என்ற தலைப்பில் இறுதியாக வன்னியில் நடைபெறப் போவதை உணர்ந்து "மக்களை உடனடியாக விடுவித்து, சரணடைவதே ஒரே வழி" என்ற தொனியில் எழுதியதும் உடனேயே அதுவும் அகற்றப்பட்டது. ஈற்றில் அதுவே நடந்தது! அன்று தவறாக தெரிந்த கருத்து இன்று காலத்தால் நிஜமாகி நிற்கிறது.

நடுநிலையான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயக் கூடிய புதிய கருத்துக்களத்தின் தேவையை இது உணர்த்துகின்றது. எற்கனவே அப்படி ஒன்று இருந்தால் தயவுசெய்து தனிமடலில் அறியத்தாருங்கள்!

உங்களுக்கு கரிநாக்கு எண்டு பயந்து போச்சினம் :rolleyes:

இக்காலகட்டத்தில் நாம் உண்மைகளை ஏற்காமலும், இனி நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவுகளுடன் திரிவோமாயின் ..... எம் பிணங்களையே திண்று ஏப்பம் விடும் டக்லஸ், கருணா போன்ற நரிகளும், கழுகுகளும் ..... நாளை ஈழத்தமிழர்களின் தலைவர்களாக்க நாமே காரணகர்தாக்கள் ஆகிவிடுவோம் மட்டுமல்ல எம்மின அழிவிற்கு நாமே முழுப் பொறுப்பாளிகள் ஆவோம்.

கருணா, டக்கு, சங்கரி போன்ற எல்லோருடனும் சேர்ந்து அரசியல் நடத்துவதற்கு தானே ஐயா அதிகாரம் கேட்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியருப்பு கைப்பற்றப்பட்டது என்று நான் பதிந்த செய்தி அகற்றப்பட்டதோடு இங்கு நான் செய்திகள் பதிவதை நிறுத்திவிட்டேன்.

"இந்தாங்கோ பொல்லு" என்ற தலைப்பில் இறுதியாக வன்னியில் நடைபெறப் போவதை உணர்ந்து "மக்களை உடனடியாக விடுவித்து, சரணடைவதே ஒரே வழி" என்ற தொனியில் எழுதியதும் உடனேயே அதுவும் அகற்றப்பட்டது. ஈற்றில் அதுவே நடந்தது! அன்று தவறாக தெரிந்த கருத்து இன்று காலத்தால் நிஜமாகி நிற்கிறது.

நடுநிலையான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயக் கூடிய புதிய கருத்துக்களத்தின் தேவையை இது உணர்த்துகின்றது. எற்கனவே அப்படி ஒன்று இருந்தால் தயவுசெய்து தனிமடலில் அறியத்தாருங்கள்!

நடுநிலை என்பதை முதலில் கோத்தபாயவிடம் போய் வேண்டிக் கொண்டு வாருங்கள். தனிக் களமமைச்சுத் தாறம்.. வந்திட்டாங்கையா...!

சமாதான நடவடிக்கைகள் முறியின்.. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ் எமது விடுதலைப் போராட்டம் அடக்கப்படலாம் என்பதை இங்கு பல கருத்துக்கள உறவுகள் சமாதான காலத்திலேயே எழுதிவிட்டனர். அப்போதெல்லாம் அவர்களை துரோகிகள் என்றோரும்.. விரட்டிக் கலைத்தோரும்.. இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றனர். நீங்கள் புதிசா சொன்னதாக எனக்கு எதுவும் படவில்லை. நீங்கள் டக்கிளசும் ஆனந்தசங்கரியும் கிளிநொச்சியை சிங்களப் படைகள் பிடித்த பின் சொன்னதைச் சொன்னீர்கள்.

விடுதலைப்புலிகள் இலட்சிய உறுதிமிக்க போராளிகள். விடுதலை அல்லது வீரமரணம் என்று வாழ்ந்தவர்கள். சர்வதேச கூட்டெதிரிகளை எதிர்கொள்ள முடியாமல் பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது.. சரணடைவுக்குரிய ஒன்றல்ல. புலி அப்படிச் செய்யாது என்பதை உலகமே அறியும்..!

புலிகள் போராடப்புறப்பட்டவர்கள். இறுதி வரை போராடி இலட்சியம் காத்து வீழ்ந்தார்கள்..!

ஏலும் என்றால் நடுநிலை பேசுற நீங்கள் கோத்தபாயவிடம் இதையே பேசி வவுனியாவில் தடுத்து வைத்துள்ள மக்கள் பற்றிய தகவல்களை அவர்களின் உறவினர்களுக்கு பெற்றுக் கொடுங்கள் பார்க்கலாம். நடுநிலை விவாவதம் செய்ய இணையத்தில் களம் பார்ப்பம்.. பிறகு. வந்திட்டாங்கையா.. அதைச் சொன்னன்.. இதைச் சொன்னன் என்று கொண்டு.

எல்லாரும் புலியை மையமா வைச்சுத்தான் நடுநிலையும்.. நாட்டாமையும். சிங்களவன் அடிக்க அடிக்க வாங்கிக்கட்டிகிட்டு.. முன்னாலும் பின்னாலும் பொத்திக்கிட்டு திரிவினம். அப்ப எங்க போறதோ தெரியல்ல இவையிட நடுநிலையும்.. சன நாய் அகமும்..! வெளவால்களுக்கு தாம் கவுண்டு கிடந்து கக்கிறது புரிவதில்லை..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இனிவரும் காலத்தில் யார் யாருக்கிடையில் நடு நிலை பேணி நாறப்போயினம் பாப்பம்.

நான் தனிமடலில் கேட்ட விடையத்தை தயவுசெய்து நெடுக்காலபோவான் அறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! :rolleyes:

நடுநிலையான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயக் கூடிய புதிய கருத்துக்களத்தின் தேவையை இது உணர்த்துகின்றது. எற்கனவே அப்படி ஒன்று இருந்தால் தயவுசெய்து தனிமடலில் அறியத்தாருங்கள்!

யாழ் கள கருத்து பதிவாளர்களில் உங்களை sence சும் நல்ல அறிவும் உள்ளவர் என்று இதுவரை நினனத்து இருந்தேன்... இப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிக் குஞ்சாய் இருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை

ஈழத் தமிழ் சூழலில் நடு நிலையான கருத்து களமாவது இருக்கின்றதாவது....மோட்டுச் சிங்களவன் என்று எதிரியை எப்பவுமே முத்திரை குத்தி ஈற்றில் தான் விரும்புவதை தவிர மற்றவை அனைத்தையுமே மறுக்கின்ற சமூகமாக மாறிவிட்டது ஒரு காலத்தில் அறிவான சமூகம் என்று பலரால் பாராட்டப் பட்ட எம் சமூகம்...

யாழ் கள கருத்து பதிவாளர்களில் உங்களை sence சும் நல்ல அறிவும் உள்ளவர் என்று இதுவரை நினனத்து இருந்தேன்... இப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிக் குஞ்சாய் இருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை

ஈழத் தமிழ் சூழலில் நடு நிலையான கருத்து களமாவது இருக்கின்றதாவது....மோட்டுச் சிங்களவன் என்று எதிரியை எப்பவுமே முத்திரை குத்தி ஈற்றில் தான் விரும்புவதை தவிர மற்றவை அனைத்தையுமே மறுக்கின்ற சமூகமாக மாறிவிட்டது ஒரு காலத்தில் அறிவான சமூகம் என்று பலரால் பாராட்டப் பட்ட எம் சமூகம்...

இருந்த கொஞ்ச நஞ்ச அறிவானவர்கள் எல்லாரும் போயிட்டாங்கள்

மிஞ்சினது நாங்கள் தான்.

வருவோம்ல....

இந்தக் காலகட்டத்தில், மக்கள் மனதைக் குழப்பக் கூடிய இப்படி ஒரு இணைப்பு அவசியமற்றது என்பது என் கருத்து. மோகன் அண்ணா செய்தது சரியே!

இந்தக் காலகட்டத்தில், மக்கள் மனதைக் குழப்பக் கூடிய இப்படி ஒரு இணைப்பு அவசியமற்றது என்பது என் கருத்து. மோகன் அண்ணா செய்தது சரியே!

யாழை விட தமிழோசையை கேட்பவர்கள் அதிகம் என்று நம்புகின்றன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.