Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன்

Featured Replies

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.

இந்தப் பணிகளை நிறைவேற்றி - நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.

முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை.

நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் - இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே - மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் - அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும்.

அந்த நம்பிக்கையுடன் - நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் - நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் - தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.

யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.

நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com

================================

புதினத்தில் வருபவை Newsbot தானியங்கி மூலம் யாழில் பதியப் படும் என்றாலும், அதற்கு சில மணித்தியாலங்கள் எடுக்கும் என்பதால், இந்த அறிக்கையின் அவசியம் கருதி இப்போதே பதிகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்கால பூகோள அரசியல் நிலைக்கேற்ப சிந்தித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த அறிக்கை..! தமிழர் என்கிற ஒருகுடையின் கீழ் நாம் எல்லோரும் அணிதிரண்டால் வெற்றி நமது பக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி. இயன்ற வரை முயல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

" பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டமானது " தற்போதைய நிலையில் இது முக்கியமானதும் , அவசரமானதுமான வேலைத்திட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி சில காரியங்களை முன்னின்று செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தான் நன்று ............

முன்னேறும் வழி நோக்கி கைகொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நகர்வானது ஆக்கபூர்வமானதும் கருத்து வேறுபாடுகளுக்கப்பாலானதுமான பொதுக்கருத்தமர்வினூடாகச் செயற்படுதலுக்கான ஒன்றிணைவை ஏற்படுத்துமாயின் அதுவே எமது போராட்டத்தின் அரைவாசியை முன்னோக்கித் தள்ளியதாக அமையும். உலகுவாழ் தமிழினம் தனக்கான தன்மானத்தை நிலைநாட்ட, உணர்ச்சிகளுக்கப்பாலான அறிவுசார்ந்த சிந்தனையூடாக எமது சிக்கல் நிறைந்த தடைகளைத் தாண்ட அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியமானது.

" உலகெல்லாம் தமிழினம் அவனுக்காய் உலகிலொரு நாடில்லை"

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக் கொள்கையின் கீழான வேலைத்திட்டத்தில் நாங்கள் இணையலாமா அல்லது நமக்கென்று ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துகளாயிருந்தாலும் அதை பொதுக் கொள்கையின் கீழான வேலைத்திட்டத்துடன் பகிர்ந்து செயல்படுத்த விரும்பாது கடதாசி வெளிகளிலும், இணையங்களிலும் மட்டுமே எழுதி எழுதி குவிக்கலாமா? அல்லது இன்னும் கொஞ்சக்காலம் பார்ப்போம் இந்தப் பொதுக் கொள்கையின் கீழான திட்டங்கள் வலுப்பெற்றவையாக அமையும் பட்சத்தில் அதற்குள் குதித்து நம்மை இணைக்கலாம் என்று மதில் மேற் பூனையாக சிந்தித்து காலநீடிப்புகளை தோற்றுவித்து தமிழ் மக்களின் உயிர்களுடனும், வாழ்வாதாரங்களுடனும் விளையாடாமல் தமிழ் உறவுகளே! அனைவரும் இணையுங்கள். ஒவ்வொருவருடைய தாமதிப்புகளும் தமிழினத்தின் மீட்சியை பிற்போடும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே செல்லும். பட்டறிவும், படிப்பறிவும் மாத்திரமன்று செயற்திறனும் இணையவேண்டிய களம் இது. உறவுகளே! நாளை பார்க்கலாம் என்றோ நேரமில்லை என்றோ சாட்டுகள் சொல்லி உரிய வேலைத்திட்டங்களைச் சேடம் இழுக்க வைத்துவிடாதீர்கள்.

இணைந்து தான் செயற்பட்டோம்.

யாருடன் யார் இணைவதும்.

தமிழர் என்னும் குடையின் கீழ் எப்படி ஒன்றுபடுவது என்பதுதான் பிரச்சினையே.

தமிழர் என்னும் குடையின் கீழ் எப்படி ஒன்றுபடுவது என்பதுதான் பிரச்சினையே. காட்டிக்கொடுத்த கருணா அல்லது பிள்ளையான் , அல்லது டக்கிளசு மாறாக சங்கரி நாய் யாரின்கீழ் ஒன்றுபடுவது? புலம்பெயர் தமிழரின் கீழ்? யாரையா அது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்னும் குடையின் கீழ் எப்படி ஒன்றுபடுவது என்பதுதான் பிரச்சினையே. காட்டிக்கொடுத்த கருணா அல்லது பிள்ளையான் , அல்லது டக்கிளசு மாறாக சங்கரி நாய் யாரின்கீழ் ஒன்றுபடுவது? புலம்பெயர் தமிழரின் கீழ்? யாரையா அது?

புலம்பெயர் தமிழரை மையப்படுத்திய ஒரு அமைப்பு உருவாக்குதல். அதற்கு முதல்கட்டமாக,

1) புலம்பெயர் தமிழர்கள் அவரவர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளில் இணைதல். உதாரணத்துக்கு, கனடாவில் கனேடிய தமிழர் பேரவை. பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் அமைப்பு.

2) ஈழ‌த்தில், இப்போதைக்கு த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு. சிறிலங்காவில் இருந்து இவர்கள் செயல்படுவதால் வாக்குரிமை இல்லை.

3) த‌மிழ‌க‌த்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள். இந்தியாவில் இருந்து இவர்கள் செயல்படுவதால் வாக்குரிமை இல்லை.

4) இந்த அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து உலக அளவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்குதல்.

5) ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் உறுப்பினர் பலத்தின் அடிப்படையில் வாக்குரிமை வழங்குதல்.

6) ஜனநாயக ரீதியில் தலைமையையும் இதர பதவிகளையும் இட்டு நிரப்புதல்.

7) ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளுட‌ன் அர‌சிய‌ல்ரீதியில் பேசுவ‌த‌ற்கு ஒரு ஜ‌‌ன‌நாய‌க‌ அமைப்பு த‌யார்.

:lol:

ஏற்கனவே புலத்தில் இருக்கின்ற அமைப்புகள் இயங்கு நிலையில்தானே இருக்கின்றது.

இயங்காமல் இருந்தவர்களை இயங்கவைப்பதற்கான அறிக்கைகளாவே தெரிகின்றது.

அறிக்கைகளின் தரம் உயர்கின்றது.

புலம்பெயர் தமிழரை மையப்படுத்திய ஒரு அமைப்பு உருவாக்குதல். அதற்கு முதல்கட்டமாக,

1) புலம்பெயர் தமிழர்கள் அவரவர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளில் இணைதல். உதாரணத்துக்கு, கனடாவில் கனேடிய தமிழர் பேரவை. பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் அமைப்பு.

2) ஈழ‌த்தில், இப்போதைக்கு த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு. சிறிலங்காவில் இருந்து இவர்கள் செயல்படுவதால் வாக்குரிமை இல்லை.

3) த‌மிழ‌க‌த்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள். இந்தியாவில் இருந்து இவர்கள் செயல்படுவதால் வாக்குரிமை இல்லை.

4) இந்த அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து உலக அளவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்குதல்.

5) ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் உறுப்பினர் பலத்தின் அடிப்படையில் வாக்குரிமை வழங்குதல்.

6) ஜனநாயக ரீதியில் தலைமையையும் இதர பதவிகளையும் இட்டு நிரப்புதல்.

7) ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளுட‌ன் அர‌சிய‌ல்ரீதியில் பேசுவ‌த‌ற்கு ஒரு ஜ‌‌ன‌நாய‌க‌ அமைப்பு த‌யார்.

:lol:

தமிழகமக்கள் மத்தியில் தான் நிறைய வேலை செய்ய வேண்டி உள்ளது. தமிழகம் போருக்கு தாயார் ஆனால் மாத்திரமே இனி எல்லாம் சாத்தியம். இந்திய ஆளும் வர்க்கம் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்வை ஈழத்தமிழருக்கு பெற்று கொடு என்று தமிழகம் பொங்கி எழ வேண்டும். அவர்களோடு சேர்ந்து புலம் பெயர் மக்களின் கைகளும் சேரும் போது ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு ஒரு சாத்தியமான அரசியல் தீர்வு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 2 அறிக்கைகள் முரண்பாடாக இருந்தாலும் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக இருக்கிறது.

நன்றிகள் இணைப்பிற்கு ....

.... எல்லாவற்றையும் இழந்த பின்பும் ........ எம்மை நம்பி தம் வாழ்வை அர்ப்பணித்து இன்றும் காடுகளிலும், களணிகளிலும் *** தொடக்கம் *** வரை உண்ண உணவின்றி, அடுத்த கட்டம் என்னவென்றே தெரியாது அலையும் எம் ஓரிரு தளபதிகளையும், போராளிகளையும் காப்பாற்றவாவது ........... பத்மநாதனின் அழைப்பை ஏற்போம்!

.... 80களின் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவனான தன்னை இப்போராட்டத்தில் இணைத்து, ஒரு முற்றுகைக்குள் இருந்து மீண்டு ........... எம்மினம் பெற்ற அணைத்து வெற்றிக்கழிப்பிற்கும் பின்புலமாக இருந்து ...... தனக்கென்று ஓர் வாழ்வை தேடாத பத்மநாதனின் அழைப்பை நாம் நிச்சயாக நம்பலாம்/ஏற்கலாம்/வலுப்படுத்தலாம் ...... நம்பிக்கையுடன் ..... எம்மக்களைக் காப்போம்!

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அறிக்கை ஏதோ ஆக்கபூர்வமாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தான் உள்ளன, இருந்தபோதும் செ.பத்மநாதனைத்தவிர வேறு யாரேனும் இதைப்பற்றி அதாவது ஏற்கெனவே பல அரசியல் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்தவர்கள் எதையும் தெரிவிக்கின்றார்கள் இல்லையே!

திரு பத்மநாதன் அவர்கள் தேசியத்தலைவரினால் நியமிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் இதை ஒரு தனிமனிதன் அறிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே இந்த அறிக்கையிற்கு வலுச்சேர்க்கக்கூடிய வகையில் இன்னும் சிலரினதும் அறிக்கைகள் வந்தால் இன்னும் பலமானதாக இருக்கலாம் அல்லவா?

இதுவரை நாம் விட்ட தவறுகளுக்கு மூலகாரணம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததே. விமர்சனம் ஓர் மனிதனை முழுமனிதன் ஆக்குகிறது. எமக்கு சரி என்ன, பிழை என்ன என்பதை தெரிய வைக்கிறது!!

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் .... அதுமட்டுமல்ல .... அவைகளுக்கு இயன்ற மட்டும் பதிலளிக்க வேண்டும்!! விடும் பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டும்!!! ........

இன்று தலைமை அழிந்த நிலையில் .... மாலுமி அற்று தள்ளாடும் கப்பல் போன்று உள்ள தமிழினத்தை ........... அடுத்த கட்டத்துக்கு நாம் நகர்த்த வேண்டும்!! அதுவும் சர்வதேச அங்கீகாரத்துடன்!!!!!!!!!!!

அரசியலில் நண்பனும் இல்லை! எதிரியும் இல்லை!! ஆனால் நாம் நண்பர்களைத் தேட வேண்டும்!! உலக ஓட்டத்துக்கு அமைவாக நாமும் செல்ல வேண்டும்!! இல்லையேல் உலகில் ஓர் மூலையில், அதுவும் உலக சனத்தொகையில் ஓர் துளி சதவிகிதம் கூட அற்ற எம்மினம் அழிவதை நாம் தவிர்க்க முடியாது!! புலத்திலிருந்து கூக்குரல்களுடன் மட்டும் எம் கண் முன்னேயே எம்மினம் அழிக்கப்படுவதை நாம் நிறுத்த முடியாது!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சரி அறிக்கை ஏதோ ஆக்கபூர்வமாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தான் உள்ளன, இருந்தபோதும் செ.பத்மநாதனைத்தவிர வேறு யாரேனும் இதைப்பற்றி அதாவது ஏற்கெனவே பல அரசியல் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்தவர்கள் எதையும் தெரிவிக்கின்றார்கள் இல்லையே!

திரு பத்மநாதன் அவர்கள் தேசியத்தலைவரினால் நியமிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் இதை ஒரு தனிமனிதன் அறிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே இந்த அறிக்கையிற்கு வலுச்சேர்க்கக்கூடிய வகையில் இன்னும் சிலரினதும் அறிக்கைகள் வந்தால் இன்னும் பலமானதாக இருக்கலாம் அல்லவா?

:D:D:lol:

தலைவரே கைகாட்டிய ஒருவர்மீது ஏன் உங்களுக்கு நம்பிக்கையில்லை? :D

மற்றவர்கள் அமைதியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது திரு. பத்மநாதன் அவர்கள் சரியான வழியிலேயே செல்கிறார் என்பது..!

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:lol:

தலைவரே கைகாட்டிய ஒருவர்மீது ஏன் உங்களுக்கு நம்பிக்கையில்லை? :D

மற்றவர்கள் அமைதியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது திரு. பத்மநாதன் அவர்கள் சரியான வழியிலேயே செல்கிறார் என்பது..!

ஜயா டங்குவார் அவர்களே!

தேசியத்தலைவர் கை காட்டுகின்ற நேரத்தில் எல்லோரும் நீங்கள் நினைக்கின்ற மாதிரித்தான் இருப்பார்கள், அப்புறமாக சந்தர்ப்பவாதியாக மாறி பலரை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

ஆகவே தான் எறும்புமாதிரி ஒருத்தருக்குப் பின்னாலை ஒருத்தர் செல்லாமால் உறுதிப்படுத்திய பின்பு முடிவு எடுக்கலாம் தானே?

பத்மநாதன் இல்லையெண்டா பிரபாகரன் இல்லை. இவர் ஒரு முக்கியமான மனிதர்..

ஆனால் இவர்தான் அவரா? :lol:

உது ஏன் தமிழ்நெட்டில வரலை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்மநாதன் இல்லையெண்டா பிரபாகரன் இல்லை. இவர் ஒரு முக்கியமான மனிதர்..

ஆனால் இவர்தான் அவரா? :(

குட்டி பத்மநாதன் = செல்வராசா பத்மநாதன்.

(இதை அவரே கனேடியன் வானொலி செவ்வி ஒன்றில் அண்மையில் தெளிவு படுத்தினார் - செல்வராசா பத்மநாதன் என்பது தாய் தகப்பன் வைத்த பெயர், குட்டி பத்மநாதன் என்பது தனது நண்பன்/தலைவன் தந்த பெயர் என்று)

செல்வராசா பத்மநாதனின் அறிக்கைகள் = தலைவரின் கருத்து

என்பது கூற்று... அவர் அவரின் நம்பிக்கை.

பத்மநாதன் இல்லையெண்டா பிரபாகரன் இல்லை. இவர் ஒரு முக்கியமான மனிதர்.
:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.