Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் தமிழனை கைவிடவில்லை

Featured Replies

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் வைத்து முருகப்பெருமான் காட்சி

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார்.

கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார்.

இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்

http://www.tamilwin.org/view.php?2aSWnVe0d...d426QV2b02ZLu2e

Edited by sukan

முருகனிட்ட இந்த முடிச்ச (5000) வாங்கிறதுக்காக அந்த மனுசி எத்தினைய (5000க்கு மேலாக) முதலீடு செய்தாவோ - யாருக்கு தெரியும். முருகன் மக்களிட்ட சுரண்டினதில ஒரு சுண்டைக்காயைத்தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதுவும், அடுத்த கோடிகளுக்கான முதலீடு தான் இது என்பதை பக்தர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ. கதிர்காமக் கந்தனின் உண்டியல் நிரம்பி வழியட்டும் - அரோகரா.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட போராளிகள் தான் சாப்பாட்டுச் சாமான்கள் வேண்டித்தரச் சொல்லி கொடுத்து விட்டிருப்பாங்க. இந்தம்மா.. அதைக் கொள்ளை அடிக்கிறதற்காக.. முருகனை இழுத்து விட்டிருப்பாவோ..??!

ஏதோ போன வழிக்கு 5000 தேறியது பெரிய காரியம்..!

லண்டன் வழிய எல்லாத் தெய்வங்களும் சும்மா எல்லோ சாப்பாடு போடுதுகள். வன்னில காம்பில இருக்கிற மக்களுக்குத்தான் ஒரு தெய்வமும் ஒன்றும் போடுதில்ல..! தெய்வங்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் அருள் பாளிக்குங்களோ..!

அங்கால அலங்கார முருகன்.. நல்லூர் கந்தன்.. போர் முடிஞ்ச களிப்பில் திருவிழா எடுக்கிறாராம். எங்கட அசைலம் அடிச்ச பக்தகோடிகள்.. புறப்பட வேண்டிய தருனமாச்சே. 1986 இல் இருந்து முருகனுக்கு பூசகட்டி புறப்பட்டு வந்துதானே கனடாவிலும்.. ஐரோப்பாவிலும்.. அவுஸ்திரேலியாவிலும் அசைலம் அடிச்சு.. அது கிடைச்சு.. இப்ப சிற்றிசன் சிப்பையும் அப்பன் முருகன் வாங்கிக் கொடுத்திட்டி இருக்கிறார். எனி என்ன.. கிரடிட் காட்டில வாங்கின வீடியோ கமராவோட போய்.. அவருக்கு ஒரு அலங்காரப் பூசை செய்தால் தானே அப்பன் முருகன்.. இன்னும் இன்னும் கருணை மழை பொழிவான்..! <_<

ஏதோ நடத்துங்கோ.. உங்களை எல்லாம் நம்பி உயிர்விட்ட போராளிகளும் மக்களும் தான் ஏமாளிகள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

தற்போது தான் முதலாவது பேணியை உடைத்தனான்!! ......... இரண்டு ... மூண்று போக .... எனக்கும் காட்சி தரத்தொடங்குவார் ...

யோவ் பூசாரி அடியேன் 7 ஆவது பேணி தாண்டிவிட்டன். உமாதேவியாரின் கண்கொள்ளா காட்சிக்காக வழிமேல் விளிவைத்து...

வராட்டி போன் அடிச்சு கூப்பிடவோ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்பாவி புவனேஸு, நேற்று நான் உண்டியலுக்க களவெடுக்க பொலிஸ் கண்டிச்சு, தப்பிக்கிறதுக்காக கட்டியிருந்த சாறத்தை உருவி எறிஞ்சு போட்டுட்டு முருகன் பழனிக்கு போன கோலத்தில (ஓட சுகத்துக்காக) ஓடி வரும் பொழுது நீ எதிர வர, அந்த பணத்தை உங்கிட்ட தந்திட்டு பொலிஸிட்ட இருந்து எஸ்கேப் ஆனன், அந்த ஓடி வந்த கண் கொள்ளா காட்சியை பார்த்த பின்புமா முருகன் தான் தந்தார் எண்டு ஓவர் பில்டாப் பன்னி, ''பிரிட்டன் கொட் டலன்ற்'' சுசான் போய்ல் மாதிரி ஓவர் நைட்டில பிரபல்யம் ஆக றை பன்னுறமாதிரி இருக்கே???

எஸ்கூஸ்மீ தலைப்பை கொஞ்சம் மாத்திவிடுறியளோ? ''தமிழன் கடவுளை கைவிடவில்லை எண்டு' :icon_mrgreen:

Edited by Danklas

எனக்கொரு சந்தேகம்,

1. முருகன் எங்க உளைக்கிறவர்? உளச்சாதானே அவருக்கு இலங்கைகாசு கிடைக்கும்?? இல்ல யாருட்டயாவது சுட்டிருக்கோணம்!,

தங்கம், வெள்ளி, இரத்தினம் ஏதாவது குடுத்திருந்தால் நம்பலாம்.. இலங்கையில அடிச்ச காசு எப்படி முருகண்ட கையுக்கு போச்சு??

தெடிந்தவர்கள் பதில்தரவும்,

தமிழனை முருகனுமா ஏமாத்துவார்??

40,000 தமிழரை அழிக்க கண்மூடிக் கொண்டிருந்ததற்காக கொலைவெறியன் கொடுத்த கையூட்டில் ஒரு பகுதியா? அல்லது கந்தசாமி கள்ள நோட்டு அடிக்கிற மெஸின் வைச்சிருக்கிறாரோ? யாமறியோம் பரபரமே.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் பூசாரி அடியேன் 7 ஆவது பேணி தாண்டிவிட்டன். உமாதேவியாரின் கண்கொள்ளா காட்சிக்காக வழிமேல் விளிவைத்து...

வராட்டி போன் அடிச்சு கூப்பிடவோ? :icon_idea:

நீங்களும் இதுவளியையோ சுத்தி திரியிறிங்கள்? கண்டதில சந்தோசம். கன நாளாய்க் காணவில்லையென நினைத்திருந்தேன். இடைக்கிடை கொஞ்சம் எண்டாலும் எழுதலாமே? :icon_mrgreen:

இந்த முறை லண்டன் ஈஸ்ற்காம் ( கிழக்கு பண்றி) கவுன்சில் £30 000 பவுன்ஸ் கேட்டதாலை மகாலச்சுமி கோயில் தேர் இந்த முறை இல்லையாம் எண்டு பக்த கேடிகள் கவலையாய் இருக்கினம்... உந்த காசை முருகன் அதுக்காக வாங்கி கொடுக்க சொன்னதாக அம்மளாச்சி என்ர கனவிலை வந்து சொன்னவ...

என்னக் கொடுமை இது சரவணன்! :icon_mrgreen:

பக்தியின் பெயரால் செய்யப்படும் இந்த பம்மாத்துக்களை என்று தமிழர்கள் மறக்கிறார்களோ

அன்று தான் பக்தியும் உருப்படும்!

தமிழர்களும் உருப்படுவார்கள்!!

Edited by vettri-vel

முருகன் இப்ப யாழ்களம் வாரதுஇல்லையாம் ,அவருக்கும் யாழ் கருதுக்களை வாசிக்க மனமில்லையாம்

கடவுள் நேரில வரமாட்டார்

அப்பப்போ மனித ரூபத்தில் வந்து

உதவி செய்வதாக சொல்கிறார்களே

அப்போ அதெல்லாம் பொய்ய்ய்ய்ய்யாயாயாயா?

ஏன் ஜஸ்ட் பைவ் தவுசன்ட்?.. பைவ் மில்லியன் கொடுத்திருக்கலாமே?

ஈஸ்ற்காம் ( கிழக்கு பண்றி)

கிழக்குச்சீமை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் எம்மவர்கள் உயிருக்காகக் கத்தும் போது உதவி செய்யாத முருகன் இந்த பெண்மனிக்கு உதவி செய்து இருக்கிறார். என்றாலும் கலைஞர் கருணாநிதியை விட முருகன் பரவாயில்லை.கலைஞர் ஈழமக்களுக்காக சேர்த்த பணத்தை சிறிலங்கா அரசின் ஊடாக தமிழர்களுக்கு அனுப்பியதாகச் சொன்னார். தமிழர்களுக்கு கிடைத்ததோ மிகவும் கொஞ்ச உதவிகள். பெரும்பாலானவை சிறிலங்கா அரசுக்குத் தானே சென்றது. முருகன் இந்த அம்மணிக்குத் தானே உதவி புரிந்தார். சிறிலங்கா அரசுக்கு காசு கொடுக்கவில்லை தானே. ஆகவே கலைஞர் கருணாநிதியை விட முருகன் மிகவும் நல்லவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.