Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் அஞ்சலி....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் அஞ்சலி

கவிதை - இளங்கவி

உலகையே வியக்கவைத்த

எங்கள் உன்னத வீரர்கள்.....

சரித்திரங்கள் பலபடைத்த

சாதனைச் சிகரங்கள்.....

மலைகளைப் பிழந்து

தமிழன் வீரம் சொன்னவர்கள்....

உலகையே எதிர்த்து நின்று

எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்...

உலகச் சதிகளினால்

மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்....

இறந்தும் நம் மானம் காக்கும்

தமிழினத்தின் வித்துக்கள்....

ஒன்றல்ல இரண்டல்ல

முப்பத்தையாயிரத்துக்கு மேல்

தங்கள் மூச்சுக்களைத் திறந்து

எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்....

வியூகம் உடைக்க

வாவென்று அழைக்கு முன்னே..

வரிசையில் முதல் சென்ற

வரலாற்று நாயகர்கள்....

சுய நலம் நீங்கி

பொது நலம் தாங்கி...

விடுதலையே மேலோங்கி ; அதற்காய்

மரணித்த வீரர்கள்.....

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து...

விடுதலையை சிரசில் வைத்து...

அந்த ஒன்றையே சிந்தித்து....

எங்கள் மனங்களெல்லாம்

உரம் தூவிச் சென்றவர்கள்....

அவர் ஆசைப்பட்ட ஓர் உடை

போராளிக்கான சீருடை....

விரும்பிய ஆபரணம்

கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்....

எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய்

தங்கள் நித்திரை கலைத்தவர்கள்....

நிலம் காடு மேடெல்லாம்

படுக்கையாய் கொண்டவர்கள்....

மானிட உருவில் வந்த

தமிழின் மானம் நீங்கள்.....

விடுதலைக் கனவை மட்டுமல்ல

வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்...

மரித்தாலும் உயிர்த்து எழ

நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல....

மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட

எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்...

கார்த்திகை இருபத்தியேழு

உம் கல்லறையை வணங்கிடும் நாள்....

கார்த்திகை பூவினால்

உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்...

மாவீரர் இல்லங்களில்

தீபங்கள் ஏற்றிடும் நாள்..

எம் மனமும் உன் ஆன்மாவும்

கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்...

உம் லட்சியம் வெல்வோம்

இதை இன்று சத்தியமாய் கொள்வோம்..

உன் சாவின் கனவுகளை

நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கவி

மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

கருத்துக்கு மிக்க நன்றிகள்....

விடுதலைக்காய் வித்தாகிப்போனவர்களின் லட்சியஙளுக்காக உழைப்பதே எங்களின் இன்றய கடமை....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா..

மாவீர செல்வங்களை நினைச்சு தமிழ் இனம் ஏங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

நீண்ட நாளைக்கு அப்புறம் மீண்டும் நல்லதொரு கவிதையை தந்தமைக்கு மிகவும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

உலகையே வியக்க வைத்த

எங்கள் உன்னத வீரர்கள்.....

சரித்திரங்கள் பல படைத்த

சாதனைச் சிகரங்கள்.....

நல்ல கவிதைக்கு நன்றிகள் இளங்கவி. அவர்கள் மரணத்தை வென்றவர்கள்...!

நன்றி

எங்கள் மனதில் எழுந்து நிற்கும் வீரர் புகழ்பாடிய இளங்கவிக்கு நன்றிகள் பல உரித்தாகுக.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை ஒட்டிய கவிதை .......நன்றி இளங்கவி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறுக்குப்பையன் 26

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

நிச்சயமாக தமிழினம் என்றுமே மறக்கமுடியாத தியாகச் செல்வங்கள் அவர்கள்...

யாயினி

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்....

மானிட உருவில் வந்த

தமிழின் மானம் நீங்கள்.....

விடுதலைக் கனவை மட்டுமல்ல

வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்...

மரித்தாலும் உயிர்த்து எழ

நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல....

மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட

எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்...

நெஞ்சம் கனக்கும் கவிதை தந்தமைக்கு இளங்கவிக்கு நன்றிகள்..

இளங்கவி,

மண்ணின் செல்வங்களுக்காய வடித்திருந்த கவிதை நெஞ்சைக் கனக்க வைக்கிறது

Edited by Netfriend

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழமகள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்...

மாவீரர்கள் தமிழர் மனங்களில் என்றும் சாகா வரம் பெற்றவர்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசராசன்...

தமிழர் சரித்திரத்தில் என்றுமே அழியாவரம் பெற்ற அற்புதங்கள் எங்கள் மாவீரர்கள்.... அவர்களின் தியாகங்களை இன்னும் பலர் உணராமலே இருப்பது தான் மிக வேதனையான விடயம்....

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.

சத்தியவேள்விக்காய் நித்திரை கொள்ளும்

மாவீரர்களின் தியாகத்தை உங்கள் வரிகளில்

இயல்பாக எழுதியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

manivasahan

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

மாவீரச் செல்வங்களின் தியாகங்கள் வார்த்தைகளினால் விபரிக்க முடியாதவை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

netfriend

உங்கள் இணைப்புக்கு மிக்க நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

மிக நன்றிகள்...

தமிழர் சரித்திரத்தில் என்றுமே மறக்கமுடியாத தியாகிகள் மாவீரர்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கவி,

மாவீரர்,

வலிய எதிரிக்கு தங்கள் உயிரையையே தந்தவர்கள். தம்முயிர் தந்து எம்முயிர் காத்தவர்கள்.

"""கண்வழி கங்கைகள் பாயும் அவர் காவிய நாயகர் ஆகும்

புதைந்த குழியில் இருந்து மீண்டு எழுந்து வாருங்கள்

எரித்த இடத்தில் இருந்து மீண்டு எழுந்து வாருங்கள"""

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை வென்று தமழர் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள். அவர் நினைவு சுமந்து நீங்கள் வடித்த கவிதை நெஞ்சைக் கனக்க வைக்கிறது. நன்றி இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

volcano

உங்கள் கருத்துக்கு மிக்க ந்ன்றிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவர்

உங்க்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

கார்த்திகைப் பூக்களுடன் ஓர் கவிதைப் பூவும் செலுத்தி வணங்க நினைத்ததாலேயே இந்த வரிகள் எழுதினேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் ஆசைப்பட்ட ஓர் உடை

போராளிக்கான சீருடை....

விரும்பிய ஆபரணம்

கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்....

எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய்

தங்கள் நித்திரை கலைத்தவர்கள்....

நிலம் காடு மேடெல்லாம்

படுக்கையாய் கொண்டவர்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.