Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் வோட்டு யாருக்கு

உங்கள் வோட்டு யாருக்கு 40 members have voted

  1. 1. ஐதேக ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து , மகிந்தவின் போர் குற்றத்தை விசாரிப்பேன் எண்று அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..???

    • ஆம்
    • இல்லை
    • புறக்கணிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஜானாதிபதி வேட்பாளர் டக்கிளஸ் தேவானந்தா

ஐதேக, ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..??? அவர் மகிந்தவின் போர் குற்றங்களை விசாரிப்பேன் எண்று அறிக்கையும் விடுகிறார்... சிங்கள மக்களும் அவருக்கே வாக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது... நீங்கள் வாக்களிப்பீர்களா...??

அவர் போட்டி இடுவது கூட சரத் பொன்ஸேகா சொல்லும் காரணங்களுக்காகத்தான்...

மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதுதான் கூட்டமைப்பின் குறிக்கோள் எண்று வைத்து கொள்ளுங்கள்.. சரத் பொன்ஸ்சேகாவை எதுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரங்கள் தான்...

சிந்திக்க நேரம் வேண்டியவர்கள் எடுத்து கொள்ளலாம்... பிரச்சினை ஏதும் இல்லை.. வாக்களிக்க விரும்பாதவர்கள் புறக்கணிக்கலாம்... உங்கள் வாக்குக்களை கட்டாயம் உபயோகிக்க வேண்டும் எண்றும் இல்லை...

மேலதிக சேர்க்கை:- டக்கிளஸ் ஐயா எந்த விதமான போர் குற்றத்திலும் மறை முகமாக கூட சரத் பொன்ஸ்சேகாவை போல குற்றம் சாட்டப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கோ...

இல்லை எண்று சொல்பவர்கள் ஏன் எண்டு சொன்னீயள் எண்டால் சந்தோசப்படுவன்...

Edited by தயா

  • Replies 80
  • Views 5.5k
  • Created
  • Last Reply

நான் ஆம் எண்று தான் வாக்களித்தேன். சரத்பொன்சேகாவை நாங்கள் மன்னித்து வாக்களிக்க முடியுமானால் தமிழனான டக்கிளசையும் மன்னிக்க முடியும்.

கேள்வி விளங்க இல்லையப்பு. டக்லஸின் கொலை வரலாறு ஒருபுறம் இருக்க.. இப்போது அவர் யாழ் தமிழ் மக்களுக்கு அக்கறையாக பலவிதமான காரியங்கள் செய்து வருகின்றார். டக்லஸ் கருணா மாதிரியான எதிரி அல்லவே. ஆரம்பத்தில் இருந்தே புலிகளுக்கு வெளிப்படையான எதிரி. எனக்கு வாக்குரிமை இருந்தால் நிச்சயம் டக்லஸுக்கு எனது வாக்கு இருக்கும். நேற்று கொலைகள் செய்த பொன்சேகாவுக்கு நாங்கள் வாக்குபோடலாம் என்றால் ஏன் டக்லஸ் தேவானந்தாவிற்கு வாக்கு போடக்கூடாது? நமது அரசியல் சிந்தனைகளில மாற்றங்கள் தேவை.

நான் ஆம் எண்று தான் வாக்களித்தேன். சரத்பொன்சேகாவை நாங்கள் மன்னித்து வாக்களிக்க முடியுமானால் தமிழனான டக்கிளசையும் மன்னிக்க முடியும்.

நான் சொல்ல வந்ததை நான் சொல்ல முன்னம் சொல்லிப்போட்டீர். பரவாயில்லை. :wub:

  • தொடங்கியவர்

மச்சான் நீங்கள் என்ன சொல்லவாறியளோ அதைத்தான் நானும் எதிர் பார்த்து கேட்டனான்... நானும் ஆம் எண்டு தான் வாக்கு போட்டேன்..

முதலில் கருணாதான் வேட்பாளராக மனதில் பட்டவர்... துரோகம் எண்டு அளப்பின எண்டுதான் தவிர்த்தனான்...

சரத் பொன்சேகா போலவே டக்கிறசும் இலங்கை இராணுவத்துக்கும், இலங்கை அரசுக்கும் நீண்ட நாள் விசுவாசி... நடந்த படுகொலைகளில் இருவருக்கும் பங்கு இருக்கிறது... ஆக தமிழன் ஆன டக்கிளசை எங்கட கூட்டமைப்பு ஆதரவு கொடுத்தால் எப்படி எங்களவர் முடிவெடுப்பினம் எண்டு பார்க்க ஆசை...

யாரும் இனி டகிளசை துரோகி எண்டு சொல்ல முடியாது போகட்டுமே... அந்த புகழை நான் வாங்கி கொள்ளுறன்.. :wub: தமிழர்களின் முக்கிய பிரதி நிதிகள் எண்டு கூட்டமைப்பும் உரிமை கோரமுடியாது... டக்கிளஸ் கருணா பிள்ளையான் ஆ சங்கரி எல்லாருக்கும் உரிமையும் மன்னிப்பும் உண்டு..

Edited by தயா

என் பொன்னான வேட்டு, இல்லை வோட்டு ...

மகிந்தனும் பொன்னனும் எதிரிகள். இவனோ துரோகி.

  • தொடங்கியவர்

என் பொன்னான வேட்டு, இல்லை வோட்டு ...

மகிந்தனும் பொன்னனும் எதிரிகள். இவனோ துரோகி.

எப்படி துரோகி தமிழன் எண்ட படியாலா...???

அவர் துரோகி இல்லை அவர் எனக்கு நினைவு தெரிந்து நீண்டகாலமாகவே எதிரிதான் எதிரி மட்டும் தான்... ( அவர் வெளி அரசியலுக்கு மக்கள் அறிந்தவராக வந்த காலம் முதல்..)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தமட்டில் எனது முதல் வாக்கு சிவாஜிலிங்கத்திற்கும், 2ம் வாக்கு விக்கிரமபாகு அவர்களுக்கும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி துரோகி தமிழன் எண்ட படியாலா...???

அவர் துரோகி இல்லை அவர் எனக்கு நினைவு தெரிந்து நீண்டகாலமாகவே எதிரிதான் எதிரி மட்டும் தான்... ( அவர் வெளி அரசியலுக்கு மக்கள் அறிந்தவராக வந்த காலம் முதல்..)

சிங்களவன் எதிரியாக இருப்பதனையும், ஒரு தமிழன், தமிழனுக்கு எதிரியாக இருப்பதனையும்,

எப்படி உங்களால் ஒரு தராசில் வைத்து பார்க்க முடிகிறது.

சிங்களவன் எதிரியாக இருப்பதனையும், ஒரு தமிழன், தமிழனுக்கு எதிரியாக இருப்பதனையும்,

எப்படி உங்களால் ஒரு தராசில் வைத்து பார்க்க முடிகிறது.

சிங்களவனா இருந்தா எதிரி

தமிழனா இருந்தா துரோகி

இதை இரண்டையும் நிறுத்து என்ன செய்யப்போரிங்கள்?

  • தொடங்கியவர்

சிங்களவன் எதிரியாக இருப்பதனையும், ஒரு தமிழன், தமிழனுக்கு எதிரியாக இருப்பதனையும்,

எப்படி உங்களால் ஒரு தராசில் வைத்து பார்க்க முடிகிறது.

அதாவது தமிழனாக இருந்தால் அவன் துரோகி எண்டு எப்பிடி சொல்கிறீர்கள்... டக்கிளஸ் தேவானந்தா பிரேமதாசாவின் காலத்தில் யார் எண்று தெரியாத நிலையில் இருந்து அரசியலுக்கு வந்து தீவிர தமிழர் எதிர்பு அரசியல்,மற்றும் கொலைகள் செய்தவர்... சரத் அதுக்கு முன்னராக காலத்தில் இருந்து இலங்கையின் இராணுவத்தில் பணியாற்று தமிழர் கொலைகளுக்கு சன்மானமாக பதவி உயர்வுகளை பெற்றவர்... ஆக தமிழர்களின் கொலைகளுக்கு இருவரும் இருந்தாலும் இலங்கையின் ஜனாதிபதியின் கீழ் தான் வேலை செய்தனர்...

சரத்குக்கு வாக்கு போடலாம் எண்றால் டக்கிளசுக்கும் போடலாம் தப்பில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எம்மை பைத்தியக்காறர்கள் ஆக்கும் முயற்சியே இது.

இதற்கு நிர்வாகம் எந்தவகையில் அனுமதிக்கிறது என்று புரியவில்லை

எதையோ நிறுவுவதற்காக சுத்தி வளைத்து மூக்கைத்தொடும் விவகாரம் இது.

நிர்வாகத்தின் நோக்கமும் அதுதான் என்று நினைக்க வேண்டியுள்ளது

டக்கிளசுக்கு வோட்என்று ஆம் என்றாலும் பிரச்சினை

இல்லையென்றாலும் பிரச்சினை

என்னைப்பொறுத்தவரை இக்கேள்வியின் நோக்கம் புரிவதால் நிராகரிக்கின்றேன்

கூட்டமைப்பின் தற்போதைய தேவை புரியாது இது போன்ற குழப்பகரமான சிக்கலான நடைமுறைக்கு ஒவ்வாத பரீட்சைகளை நிராகிரிக்குமாறு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றேன்

என்னைப்பொறுத்தவரை இக்கேள்வியின் நோக்கம் புரிவதால் நிராகரிக்கின்றேன்

கூட்டமைப்பின் தற்போதைய தேவை புரியாது இது போன்ற குழப்பகரமான சிக்கலான நடைமுறைக்கு ஒவ்வாத பரீட்சைகளை நிராகிரிக்குமாறு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றேன்

கேள்வியின் நோக்கமும், அதில் உள்ள அரசியல் அங்கதமும் கள விதிகளுக்கு முரணாக இல்லை என்பதால் இந்த திரி அனுமதிக்கப்படுகின்றது. இந்த திரிக்கான அரசியல் தொடர்பாக உங்களின் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதே ஆரோக்கியமானது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2002 கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடந்துகொண்டிருந்த போது உள்ளே டக்ளசும் இழுக்கப்பட்டிருந்தால்

அண்ணரும் இன்று தமிழ்த்தேசியவாதிதான்.

----------

30 வருச போர் வரலாற்றில நான் கண்ட ஒரேயொரு மிச்சம்

முடிந்த முடிபெண்டு ஒண்டும் இல்லை. சுழிச்சும் நெளிச்சும் வளைச்சும் ஓடினாத்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

2002 கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடந்துகொண்டிருந்த போது உள்ளே டக்ளசும் இழுக்கப்பட்டிருந்தால்

அண்ணரும் இன்று தமிழ்த்தேசியவாதிதான்.

----------

டக்ளசும், சித்தார்த்தனும் எக்காரணம் கொண்டும் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். த.தே.கூ இன் உருவாக்கத்திற்கும கருத்துருவாக்கம் செய்து முன்னின்று உழைத்த டி.சிவராம், நடேசன் அண்ணா போன்றவர்களுக்கு புலிகளின் தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய நிபந்தனையாக இவை இருந்தன

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனா இருந்தா எதிரி

தமிழனா இருந்தா துரோகி

இதை இரண்டையும் நிறுத்து என்ன செய்யப்போரிங்கள்?

இது இரண்டையும் நிறுத்துவதா...... நடவாத காரியம். smiley-sick009.gif

மூக்கு இருக்கும் மட்டும், மூக்குச்சளி இருக்கும் எண்டமாதிரி...... smiley-sick010.gif சீறிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழனாக இருந்தால் அவன் துரோகி எண்டு எப்பிடி சொல்கிறீர்கள்...

ஊர் கூடி தேர் இழுக்கும் போது ..... அதனை தானும் சேர்ந்து இழுக்காமல், முட்டுக்கட்டை போட்டவர் தான் டக்ளஸ். அதற்கு பெயர் தான் துரோகம்.

டக்கிளஸ் தேவானந்தா பிரேமதாசாவின் காலத்தில் யார் எண்று தெரியாத நிலையில் இருந்து அரசியலுக்கு வந்து தீவிர தமிழர் எதிர்பு அரசியல்,மற்றும் கொலைகள் செய்தவர்...

அவர் பண்டாரநாயக்கா காலத்தில் அரசியலுக்கு வந்திருந்தால்..... இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின் தகப்பன் மாரை கொன்றிருப்பார். நாங்கள் பிறந்து இருக்க மாட்டோம். பிரேமதாச காலத்தில் அரசியலுக்கு வந்திருந்த படியால்..... நல்லதாய் போச்சுது.

சரத் அதுக்கு முன்னராக காலத்தில் இருந்து இலங்கையின் இராணுவத்தில் பணியாற்று தமிழர் கொலைகளுக்கு சன்மானமாக பதவி உயர்வுகளை பெற்றவர்... ஆக தமிழர்களின் கொலைகளுக்கு இருவரும் இருந்தாலும் இலங்கையின் ஜனாதிபதியின் கீழ் தான் வேலை செய்தனர்...

சரத்குக்கு வாக்கு போடலாம் எண்றால் டக்கிளசுக்கும் போடலாம் தப்பில்லை...

எந்த சிங்கள ஜனாதிபதிக்கு கீழே வேலை செய்திருந்தாலும்......

தமிழ் டக்ளஸ் தமிழனை கொல்வதற்கும், சிங்கள சரத் தமிழனை கொல்வதற்கும் நிறைய வித்தியாசம் தயா.

.

Edited by தமிழ் சிறி

ஜானாதிபதி வேட்பாளர் டக்கிளஸ் தேவானந்தா

ஐதேக, ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..??? அவர் மகிந்தவின் போர் குற்றங்களை விசாரிப்பேன் எண்று அறிக்கையும் விடுகிறார்... சிங்கள மக்களும் அவருக்கே வாக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது... நீங்கள் வாக்களிப்பீர்களா...??

அவர் போட்டி இடுவது கூட சரத் பொன்ஸேகா சொல்லும் காரணங்களுக்காகத்தான்...

மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதுதான் கூட்டமைப்பின் குறிக்கோள் எண்று வைத்து கொள்ளுங்கள்.. சரத் பொன்ஸ்சேகாவை எதுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரங்கள் தான்...

சிந்திக்க நேரம் வேண்டியவர்கள் எடுத்து கொள்ளலாம்... பிரச்சினை ஏதும் இல்லை.. வாக்களிக்க விரும்பாதவர்கள் புறக்கணிக்கலாம்... உங்கள் வாக்குக்களை கட்டாயம் உபயோகிக்க வேண்டும் எண்றும் இல்லை...

மேலதிக சேர்க்கை:- டக்கிளஸ் ஐயா எந்த விதமான போர் குற்றத்திலும் மறை முகமாக கூட சரத் பொன்ஸ்சேகாவை போல குற்றம் சாட்டப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கோ...

இல்லை எண்று சொல்பவர்கள் ஏன் எண்டு சொன்னீயள் எண்டால் சந்தோசப்படுவன்...

கடைசியிலே தமிழனின் சுயபுத்தியை "POLL"லாலை அடிச்சி சோதிக்கவேண்டியதாய் போச்சு! :D

நான் புறக்கணிக்கிறேன் என்றே வாக்களித்துள்ளேன்,

காரணம்... கூட்டு சரியில்லை.! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் தேர்தலில் நிற்கலாம் என்றால் ஏன் கருணா நிற்கக் கூடாது...டக்லசை விடவும் கருணா புலிகளில் இருக்கும் போது தமிழருக்கு நல்லது தான் செய்து உள்ளார்[இங்குள்ள மக்களில் சிலர் ஈழத்தில் உள்ள மக்களுக்கும் புலிகளுக்கும் செய்ததை விட‌வும்] ... கருணா புலிகள் பிரதேச‌வாதம் பார்த்தார்கள் எனச் சொல்லி தான் பிரிந்தார்.கொலைகாரா டக்லசை விட‌ கருணா எவ்வளவோ மேல்.

ச‌ர‌த் ஜனாதிபதியாக வாற‌து புலிகளுக்கு செய்ற துரோகம் என்றால் டக்லஸ் வாறதும் துரோகம் தான் அதாவது பொன்சேகராவை கொல்ல சென்ற அந்தப் பெண் தற்கொலையாளியின் முகம் தான் முதலில் வரும் என்றால் டக்லசை கொல்ல சென்றவர்களின் முகம் வராதா? இதை வைத்து நான் பொன்சேகராவுக்கு ஆத‌ர‌வு என நினைத்து விடாதீர்கள்.

பொன்சேக‌ரா வந்தால் மகிந்தாவை சர்வதேச‌ கூண்டில் நிற்பாட்டலாம் என சிலர் சொல்கிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்த வரை தேர்தல் முடிந்த பின் மகிந்தாவை காட்டிக் கொடுக்க மாட்டான்.தேர்தலுக்காக சில உண்மைகளை சொல்லி உள்ளான். சர‌த் ஒரு பச்சை இன‌வாதி இதை பலமுறை அவனே தன் வாயால் சொல்லி உள்ளான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 60 வருடங்களாக மாறி மாறி வந்த ஆட்சிக்கு வந்த சிங்கள கட்சிகள் மாறி மாறி தமிழ் மக்களை கொலை, பாலியல் வல்லுறவு, நிலப்பறிப்பு என்று செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.ஆனால் எப்போதும் ஒரு சிங்கள கட்சியும் மற்ற சிங்கள கட்சியை காட்டி கொடுத்து விசாரணை என்று ஈடுபட்டதே இல்லை.மாறாக தங்களை காப்பாற்றியே கொண்டிருக்கிறார்கள். இப்போ டக்ளஸ் என்றவர் வந்து எல்லாவற்றையும் மாற்றுவாராம். இதை நாங்கள் கற்பனையில் என்றாலும் நம்ப வேண்டுமாம்.

ஒரு பேச்சுக்கு அல்லது உண்மையில் சரத் வந்தாலும் சிங்களவரை காட்டி கொடுக்கவே மாட்டார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.ஒரு வேளை கோத்தபாயவை பிடித்து உள்ளுக்கு போடலாம் அல்லது அரசியலில் அவரை பங்கு பற்ற விடாமல் அவரது நாட்டுருமையை பறிக்கலாம். இது தான் ஆக கூடியதாக நடைபெறும்.

எனது தெரிவு இல்லை என்பது தான். டக்ளஸ் கட்டையிலே போனாலும் திருந்த மாட்டார்.அவருக்கும் பாதாழ உலக குழுவுக்கும் வித்தியாசமே இல்லை.அவர் இப்படி பல்டி அடிக்கிறார் என்றால் தனது சுயநலமே தவிர தமிழரை பாதுகாப்பார் என நினைப்பது எமது அறிவீனம்.ஏன் இவரால் ஒரு கட்சியில் இருக்க முடியவில்லை என்று கேட்டாலே விடை கிடைத்து விடும்.?

  • தொடங்கியவர்

ச‌ர‌த் ஜனாதிபதியாக வாற‌து புலிகளுக்கு செய்ற துரோகம் என்றால் டக்லஸ் வாறதும் துரோகம் தான் அதாவது பொன்சேகராவை கொல்ல சென்ற அந்தப் பெண் தற்கொலையாளியின் முகம் தான் முதலில் வரும் என்றால் டக்லசை கொல்ல சென்றவர்களின் முகம் வராதா? இதை வைத்து நான் பொன்சேகராவுக்கு ஆத‌ர‌வு என நினைத்து விடாதீர்கள்.

உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்... தமிழனாக தன்னை நினைக்கும் எல்லாருக்கும் வரும் கோபம் தான் இது... ஆனால் கூட்டமைப்பு சிங்களவனான சரத்தை ஆதரிக்கலாம் எண்றால் கட்டாயம் டக்கிளசையும் ஆதரிக்க முடியும்... நாங்கள் கேட்டு போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்...

டக்கிளசுக்கும் சரத்துக்கும் வித்தியாசம் ஒண்று மட்டுமே அவன் சிங்களவன் இவன் தமிழன்... ஆனால் இருவரும் தங்களை இலங்கையின் குடுமக்கள் எண்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்பவர்கள்... டக்கிளஸ் கூட தன்னை ஒரு தமிழன் என்பதை விட இலங்கை குடுமகன் எண்றே சொல்கிறான்... ஆகவே இருவருக்கு வித்தியாசம் கிடையாது...

  • தொடங்கியவர்

கடந்த 60 வருடங்களாக மாறி மாறி வந்த ஆட்சிக்கு வந்த சிங்கள கட்சிகள் மாறி மாறி தமிழ் மக்களை கொலை, பாலியல் வல்லுறவு, நிலப்பறிப்பு என்று செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.ஆனால் எப்போதும் ஒரு சிங்கள கட்சியும் மற்ற சிங்கள கட்சியை காட்டி கொடுத்து விசாரணை என்று ஈடுபட்டதே இல்லை.மாறாக தங்களை காப்பாற்றியே கொண்டிருக்கிறார்கள். இப்போ டக்ளஸ் என்றவர் வந்து எல்லாவற்றையும் மாற்றுவாராம். இதை நாங்கள் கற்பனையில் என்றாலும் நம்ப வேண்டுமாம்.

ஒரு பேச்சுக்கு அல்லது உண்மையில் சரத் வந்தாலும் சிங்களவரை காட்டி கொடுக்கவே மாட்டார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.ஒரு வேளை கோத்தபாயவை பிடித்து உள்ளுக்கு போடலாம் அல்லது அரசியலில் அவரை பங்கு பற்ற விடாமல் அவரது நாட்டுருமையை பறிக்கலாம். இது தான் ஆக கூடியதாக நடைபெறும்.

எனது தெரிவு இல்லை என்பது தான். டக்ளஸ் கட்டையிலே போனாலும் திருந்த மாட்டார்.அவருக்கும் பாதாழ உலக குழுவுக்கும் வித்தியாசமே இல்லை.அவர் இப்படி பல்டி அடிக்கிறார் என்றால் தனது சுயநலமே தவிர தமிழரை பாதுகாப்பார் என நினைப்பது எமது அறிவீனம்.ஏன் இவரால் ஒரு கட்சியில் இருக்க முடியவில்லை என்று கேட்டாலே விடை கிடைத்து விடும்.?

தமிழன் ஒருவனை அதுவும் நீண்டகாலமாக எதிராக செயற்பட்டு எங்களை பழிவாங்கியவனை உங்களால் கற்பனையில் கூட உங்களின் வாக்கை போடும் அளவுக்கு நம்ப முடியாமல் இருக்கிறது இல்லை...???

ஆனால் கடந்த 5 வருடங்களாக 3 மாதம் முன் வரைக்கும். இந்த டக்கிளசையும் அவன் துணைப்படையையும் சேர்த்து தலைமை தாங்கி தமிழனத்தை அழிக்க முன்னிண்று உழைத்த சரத் பொன்சேகா வந்தால் வந்தால் தமிழர்கள் மீது செல்லுக்கு பதில் பூக்களை வாரி இறைப்பான் கொலைகள் ஏதும் செய்ய மாட்டான் எண்று சொல்கிறார்களே இதை நீங்கள் கற்பனையிலாவது நம்புகிறீர்களா...??

ஊர் கூடி தேர் இழுக்கும் போது ..... அதனை தானும் சேர்ந்து இழுக்காமல், முட்டுக்கட்டை போட்டவர் தான் டக்ளஸ். அதற்கு பெயர் தான் துரோகம்.

அவர் பண்டாரநாயக்கா காலத்தில் அரசியலுக்கு வந்திருந்தால்..... இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின் தகப்பன் மாரை கொன்றிருப்பார். நாங்கள் பிறந்து இருக்க மாட்டோம். பிரேமதாச காலத்தில் அரசியலுக்கு வந்திருந்த படியால்..... நல்லதாய் போச்சுது.

எந்த சிங்கள ஜனாதிபதிக்கு கீழே வேலை செய்திருந்தாலும்......

தமிழ் டக்ளஸ் தமிழனை கொல்வதற்கும், சிங்கள சரத் தமிழனை கொல்வதற்கும் நிறைய வித்தியாசம் தயா.

.

இரண்டு போருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை இருவரும் பேசும் மொழிகளை தவிர... தவிர டக்கிளஸ் கருணாவை போல தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கவும் இல்லை...

டக்கிளஸ் தமிழீழ போராட்டத்துக்கு எதிரி இந்த தளத்தில் இருந்தே அரசியலுக்கு வந்த காலம் முதல் செயற்பட்டு வருகிறான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தவனின் நிலை இப்படியாகிவிட்டது?

சாக்கடையில் இருக்கும் ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு நடப்பது போலுள்ளது?

உண்மையில் ஈழத்துஅரசியல் வரலாறு தெரிந்தவன் நிச்சயம் இந்த வாக்கெடுப்பு நடத்தமாட்டான்.

மன்னிக்கவும் தயா.

  • தொடங்கியவர்

ஈழத்தவனின் நிலை இப்படியாகிவிட்டது?

சாக்கடையில் இருக்கும் ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு நடப்பது போலுள்ளது?

உண்மையில் ஈழத்துஅரசியல் வரலாறு தெரிந்தவன் நிச்சயம் இந்த வாக்கெடுப்பு நடத்தமாட்டான்.

மன்னிக்கவும் தயா.

இதை நானும் விரும்பி செய்யவில்லை... நான் மேலையே குறிப்பிட்டு இருக்கிறேன் அண்ணா... நாங்கள் சரத்தை மன்னிக்க முடியும் எண்றால் ஏன் டக்கிளசை மன்னிக்க முடியாது...?? அப்படி டக்கிளஸ் கெட்டவன் எண்றால் சரத் மட்டும் எப்படி நல்லவன்..???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்தவன் செய்வதறியாது திக்குதெரியாமல் திணறும்போது வேறோரு நீரோட்டத்திற்கு இழுத்து செல்லாதீர்கள்.

  • தொடங்கியவர்

புலம்பெயர்ந்தவன் செய்வதறியாது திக்குதெரியாமல் திணறும்போது வேறோரு நீரோட்டத்திற்கு இழுத்து செல்லாதீர்கள்.

சுறணை இருக்கும் எல்லாருக்கும் உங்களை மாதிரி கோபம் வருவது நியாயமே அண்ணா.... டக்கிளசை ஆதரிப்பவன் எப்படி ஒரு கேவலமானவனாக உங்கள் மனதில் அருவெருப்பை தூண்டுகிறதோ அப்படித்தான் இருக்கிறது எனக்கு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை பார்க்கும் போது...

எனது உணர்வை வெளியிலை புரிய வைக்க நான் தேர்ந்து எடுத்த முறை மட்டுமே இது... பாதை இல்லை... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.