Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களை தாக்கி எச்சரித்த தெலுங்கான மாணவர்கள்

Featured Replies

பெல் நிறுவனம் நடத்திய தேர்வு எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1500பேர் ஐதராபாத்திற்கு சென்றார்கள். தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது.

மறு தினமே தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் பாதி மாணவர்கள் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்கள்.

இரண்டு நாட்களாகியும் தேர்வு முடிவு வராததால் நேற்று தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் ஐதராபாத் சென்றனர்ர்.

நேற்று ஐதராபாத் சென்று நேரில் தேர்வு விபரத்தை கேட்டனர். உங்களுக்கு மினஞ்சலில் தேர்வு முடிவுகள் வரும் என்று மழுப்பலாக பதில் சொல்லவும், விடாப்பிடியாக கேட்க,

இந்த தேர்வில் தமிழர்கள் 50% தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இதனால் தெலுங்கானா மாணவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு வேலை கொடுத்துவிட்டால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் என்று உங்கள் முடிவுகளை கொடுக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளனர்

குழப்பத்துடனேயே மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு பின்பு வந்து பேசிக்கொள்ளலாம் என்று உணவுவிடுதிக்கு சென்றனர். அப்போது அங்கே ஆயுதங்களுடன் வந்த தெலுங்கானா மாணவர்கள் தமிழர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

பின்பு தமிழ்மாணவர்கள் அனைவரையும் ரயில் நிலையத்தில் விட்டு எச்சரித்து சென்றுஉள்ளனர் தெலுங்கான மாணவர்கள். தமிழக மாணவர்கள் அவர்களது உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர்.

இது குறித்து இன்று பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, எங்களுது உடைமைகளை மீட்டுத்தாருங்கள். எங்கள் மதிப்பு சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் எல்லாம் அறைகளில் இருக்கின்றன. அவற்றை மீட்டுத்தாருங்கள்.

தேர்வுகளுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கோரியும் மனு கொடுத்தனர்.

Read more: http://meenakam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8e#ixzz0g1ucOnWS

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பத்துடனேயே மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு பின்பு வந்து பேசிக்கொள்ளலாம் என்று உணவுவிடுதிக்கு சென்றனர். அப்போது அங்கே ஆயுதங்களுடன் வந்த தெலுங்கானா மாணவர்கள் தமிழர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

முத்தமிழ் காவலர், கலைஞர், முதல்வர் மு.க.வின் ஆட்சியிலா இது நடந்தது? நான் நம்ப மாட்டேன்.

சிலவேளை இருக்கும்....., மெரீனா பீச்சிலை ஒரு உண்ணாவிரதம் இருந்தால் தீர்வு கிடைச்சுடும்.

பொறுக்கிப் பயல்கள். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகம் அடிவாங்கியே பழக்கப்பட்டுப்போச்சுதப்பா :(

  • கருத்துக்கள உறவுகள்
:( தமிழினம் நக்கிபிழைக்கவும் அண்டிப்பிழைக்கவும் என பிரம்மனால் படைக்கப்பட்ட ஒரு இனம். அது தமிழ் நாட்டுக்காரனாக இருந்தாலும் சரில் ஈழத் தமிழனாகவும் இருந்தால் சரி, எல்லாமே ஒன்றுதான். நாம் கெட்ட கேட்டிற்கு சுதந்திரமும் தன்மானமும் ஒரு கேடா??

கருணாநிதியின் பூர்வீகம் தெலுங்கு. அதனால் இது ஒரு பிரச்சனையாகாது அப்படி யாரும் கேள்வி கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்ற பதில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சிரிப்பு:

ஆசிரியர்: தமிழர்கள் ஏன் குனிந்து நடக்கும் பழக்கம் கொண்டவர்கள்?

மாணவன்: ஆதான் போற இடமெல்லாம் முதுகில டின் கட்டுறாங்களே..!

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் பூர்வீகம் தெலுங்கு. அதனால் இது ஒரு பிரச்சனையாகாது அப்படி யாரும் கேள்வி கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்ற பதில் இருக்கின்றது.

அவர் இந்த பிரசினையை தெலிங்கில பேசி தீர்த்து வைப்பார் என எதிர்பார்கலாம். :(:):)

செம சாத்து வாங்கிய‌ ஒரு தமிழக மாணவர் உதை மயக்கத்தில் தெலுங்கானா மாணவ‌ரிடம் கேட்கிறார்: "என்னங்க சாமி இப்பிடி அடிச்சுப்புட்டீக.."

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் காவலர், கலைஞர், முதல்வர் மு.க.வின் ஆட்சியிலா இது நடந்தது? நான் நம்ப மாட்டேன்.

சிலவேளை இருக்கும்....., மெரீனா பீச்சிலை ஒரு உண்ணாவிரதம் இருந்தால் தீர்வு கிடைச்சுடும்.

பொறுக்கிப் பயல்கள். :(

தமிழையும் தமிழனையும் விற்று வயிறு கழுவும் கூட்டமிருக்கும் வரை தமிழரது நிலை இதுதான்!

அடி வாங்கி பழகிப்போய் விட்டோம் . ஆகவே பெரிசா எடுக்காதேங்க.சூடு சுரணையற்ற உன்னதமான இனம் தமிழினம்.

:D தமிழினம் நக்கிபிழைக்கவும் அண்டிப்பிழைக்கவும் என பிரம்மனால் படைக்கப்பட்ட ஒரு இனம். அது தமிழ் நாட்டுக்காரனாக இருந்தாலும் சரில் ஈழத் தமிழனாகவும் இருந்தால் சரி, எல்லாமே ஒன்றுதான். நாம் கெட்ட கேட்டிற்கு சுதந்திரமும் தன்மானமும் ஒரு கேடா??

ஆமோதிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில் டின்னு கட்டினாலும் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா!" என்.எஸ்.கிருஸ்ணன் பாணியில் வீரவேசம் பேசி தப்பிவிடவேண்டியதுதான்..வேறு வழி?

அடியும் நிற்காது, வசனமும் நிற்காது! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுகில் டின்னு கட்டினாலும் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா!" என்.எஸ்.கிருஸ்ணன் பாணியில் வீரவேசம் பேசி தப்பிவிடவேண்டியதுதான்..வேறு வழி?

அடியும் நிற்காது, வசனமும் நிற்காது! :wub:

ராஜ வன்னியன்

இங்கே நான் எனது தனிப்பட்ட கருத்தை சொல்லுகிறேன்...என்னெனில் எனக்கு பின்னால் பெரும் கூட்டம் இல்லாத படியால்/ இருக்கோ என்று தெரியாத படியால் ..

இங்கு சிலர் இந்தியர் / இந்தியா தமிழர்கள் எல்லாரையும் ஒரே தட்டில் வைத்து குறைகூறுவதுண்டு...அதற்க்கு எனது வருத்தத்தை சொல்லுகிறேன் ...நான் நியூ யோர்க்கில் ஒரு இந்தியரை (தமிழ்) சந்தித்தேன் என்னுடைய பெயரைபார்த்துவிட்டு ( Name batch ) தமிழா என்று கேட்டார் ...எனக்கும் சந்தோசம் ஆம் என்றேன், பின் எங்கு இருக்கீர்கள் / எந்த இடம் என்று கேட்டார் நான் இப்ப கனடா, அனா பிறந்தது யாழ் என்றேன்...அவருடைய மொழியில் இருந்து அவர் தமிழ்நாட்டு காரர் என்று தெரிந்தாலும், நீங்கள் இந்தியாவ என்று கேட்டேன்? அவர் உடனே " இல்லை / ஓம் "சென்னை" என்று சொன்னோர் . இதேபோல் வேறு ஒருவர் (இந்தியா) தமிழர் எனக்கு மிகுந்த உதவி செய்பவர் (தொழில் ரீதியில்) அதே நேரத்தில் இங்கே கனடாவில் ஒருநாள் walmart (ஒரு ஸ்டோர்) ..எதோ ஒன்று return பண்ண போகையில்...காசியர் ஹோல்ட் போட்டு போய்விட்டார்...அப்போது எனக்கு முன்பு நின்ற பெண்மணியின் நண்பி வந்து அவரிடம் கதைதலில் இருந்து அவர் தமிழ் என்று அறிந்து கொண்டேன் ...ஏனோ அன்று என்னுடைய விதி அந்த பெண்ணிடம் "நீங்கள் தமிழா" என்று கேட்டேன் "...இல்லை / ஓம் ..ஆனால் உங்ககடை தமிழ் இல்லை இந்தியா தமிழ் " என்றா...

ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்தியா இந்தியா என்று எங்களை சேர்க்காமல் இருப்பவர்களும் உண்டு அதேநேரத்தில் இந்தியா என்று சொல்லவேண்டியிருக்கே என்று கவலை படுவர்களும் உண்டு ...எல்லோரையும் ஒரேமாதிரி குறை சொல்லுவது சரியல்ல...உங்களுடைய பதிலில் எங்களையும் இணைத்த உணர்வு... "அப்பன் மவனே சிங்கமட" என்ன நாங்கள் சிங்கத்தை மாற்றியுள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

...ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்தியா இந்தியா என்று எங்களை சேர்க்காமல் இருப்பவர்களும் உண்டு அதேநேரத்தில் இந்தியா என்று சொல்லவேண்டியிருக்கே என்று கவலை படுவர்களும் உண்டு ...எல்லோரையும் ஒரேமாதிரி குறை சொல்லுவது சரியல்ல...உங்களுடைய பதிலில் எங்களையும் இணைத்த உணர்வு... "அப்பன் மவனே சிங்கமட" என்ன நாங்கள் சிங்கத்தை மாற்றியுள்ளோம்.

நன்றி எரிமலை. தமிழனுக்கு ஒரு இலட்சினையை கொடுத்தவரையில் வணங்கலாம். ஆனால் அதுவே ஒரு கடந்த காலமாய் சிங்கமாகி, சிங்களமாகாமல் இருந்தால் இன்னமும் மகிழ்சி. சிலருக்கு, குறிப்பாக வெளிநாடுகளில் தமிழன் என வெளியில் சொல்வது தலைகுனிவு-ஒருவித தாழ்வு மனப்பான்மை, பொந்தியர் என சொல்வதால் பாதுகாப்பான அடைக்கலம் கிடைப்பதாக நினைக்கலாம். அது சுயத்தை தொலைத்தவர்களின் பரிதாப நிலை.

இங்கேயும் கடைகளிலோ, இந்திய நிறுவனங்களிலிருந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முதலில் பேசும் போதோ "உங்களுக்கு இந்தி தெரியாதா?" எனக்கேட்டுவிட்டு, "இந்தியா?" என விளிப்பதுண்டு. என்னுடைய ஒரேவரி பதில் "இல்லை, தமிழ்!" என்பது மட்டுமே. உடனே, "சிறீலங்கா?" என கேள்வி வரும். அதற்கும் ஒரே பதில், "இல்லை, தமிழ்!" என்பதே! ஆகையால் உணர்ந்தவனுக்கு தமிழனாய் இருப்பதில் மகிழ்சி, உணராதவனுக்கு அதுவே இகழ்சி!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்,

உண்மையிலேயே நீங்கள் ஒரு உணர்வுள்ள தமிழர்தான். ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக உங்களுக்கு நன்றிகள் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொக்கு தெலுங்கனுக்கும், மொக்கு தமிழனுக்கும் தெரியவில்லை தாம் எல்லாம் ஒரே திராவிட இனம் என்று!

இவர்கள் எல்லாம் மாணவர்களாம், அப்படி என்னத்தை படித்து கிழிக்கிரார்களோ தெரியவில்லை. தாம் என்ன இனம் என்றே தெரியாத லூசுகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.