Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் அங்கவீனப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்காக சிட்னியில் நடைபெற்ற 'ஆஞ்சநேயம்' நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

97876985.png

சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் மீண்டும் போர் வெடித்தது. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். கண் முன்னால் இறந்தவர்கள், காயப்பட்டவர்கள் மத்தியில் உயிர் தப்பி முள்ளிவாய்க்காலுக்கு மக்களோடு மக்களாகச் சென்றார். அங்கும் இறப்பவர்கள், காயப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அங்கும் உயிர் தப்பி 2009 மே மாதம் நடுப்பகுதியில் மெனிக் பாம் என்ற முகாமுக்கு வருகிறார்.தாயகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்பு, அவுஸ்திரெலியா சிட்னியில் இருந்து வன்னி சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக சிட்னி திரும்பாத மற்றைய இரு தமிழ் அவுஸ்திரெலியர்களுடன் மெனிக் பாமில் சில நாட்கள் இருந்தபின் அங்கிருந்து ஒருவாறு வெளியே வந்து, பல இன்னல்கள் மத்தியில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிட்னி வந்தடைந்தார்.

பிரித்தானியாவில் பிறந்து மிகவும் சிறு வயதில் பெற்றோருடன் அவுஸ்திரெலியா சிட்னிக்கு குடிபெயர்ந்தவர் சேரன் சிறீபாலன். தமிழ் நாட்டில் அடையாரில் வசிக்கும் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் திரு தனஞ்சேயன் அவர்களிடம் பரத நாட்டியம் கற்றார். சிட்னியில் "இரசனா" என்ற நடனப் பள்ளியை நடாத்தி வருகிறார். தாயகத்தில் இருக்கும் எம்மக்களுக்கு எதாவது செய்யவேணும் என்ற துடிப்புடன் இருக்கும் இவர் 2006, 2007, 2008ம் ஆண்டுகளில் "நவம் அறிவுக்கூடத்தில்" இருந்த போரிலே உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நாட்டிய நிகழ்ச்சியினை நடாத்தினார். இதில் 3 வருடங்களும், இவருக்கு கிடைத்த கிட்டத்தட்ட 70000 அவுஸ்திரெலியா வெள்ளிகளை நவம் அறிவுக்கூடத்துக்கு அனுப்பினார். 2009ல் வன்னியில் கடும் போர் ஏற்பட்டதினால் அங்குள்ளவர்களுக்கு உதவி புரிய முடியாத நிலமை ஏற்பட்டது. இதனால் அவர் 2009ல் நாட்டிய நிகழ்ச்சியை நடாத்தவில்லை. எனினும் வன்னி தடுப்பு முகாம்களில் இருந்த 3 இலட்சம் உறவுகளுக்காக, விஸ்ணா சிவராஜா என்ற அவுஸ்திரெலியாவில் பிறந்த தமிழ் இளைஞனோடு சிட்னியில் இருந்து கன்பராவை நோக்கி கிட்டத்தட்ட 300 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாக நடந்து முடித்தார். அவுஸ்திரெலியா அரசு, ஊடகங்கள், மக்களுக்கு இந்த 3 இலட்சம் உறவுகளின் நிலமையைச் சொல்லி சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அவுஸ்திரெலியா அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் நடந்தார்கள்.

2009ல் நடந்த கொடூர யுத்தத்தின் பின்பு, வன்னி மக்களில் காயம் ஏற்படாமல் தப்பியவர்கள் பலர் கிடைக்கிற உதவிகளை வைத்து தங்களைப் பார்க்ககூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யுத்தத்தினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் பலர் தங்களைப் பார்ப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள். அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் நல்ல உள்ளங்கள் அனுப்பும் பணங்கள் இவர்களுக்கு போதாமல் இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதசெலவுக்கு 120 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவைப்படுகின்றன. வன்னியில் விற்பனையாளர்கள் பொருட்களை கொள்ளை விலைக்கு விற்று அதிக இலாபம் அடைகிறார்கள். வன்னியில் நேரில் பார்த்த இந்த மக்களுக்கு எப்படியாவேனும் உதவி செய்யவேண்டும் என்று உமா அவர்கள், உதவி செய்யக்கூடிய மனம்படைத்த சிட்னிவாழ் சிலருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். சிலர் மதிய போசன உணவு நிகழ்வொன்றினை நடாத்தி அதில் கிடைக்கும் பணத்தினை அனுப்பலாம் என்றார்கள். மாதமாதம் தங்களால் இயன்ற பணத்தை வழங்குவதன் மூலம் வன்னியில் உள்ள ஒரு குடும்பத்தை ஒருவர் பாராமறிக்க முடியும் என்று இறுதியில் முடிவெடுத்தார்கள்.இவர்கள் சென்ற ஜனவரி மாதம் முதல் உதவி புரிந்தார்கள்.ஆனால் வன்னியில் அங்கவீனப்பட்டவர்கள் கிட்டத்தட்ட முப்பத்தியையாயிரம் பேர் இருக்கிறார்கள். இங்கு சிட்னியில் உதவுவதாகச் சொன்னவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையானவர்கள். அதிலும் குடும்பம் என்று இருப்பவர்கள் எல்லாரினாலும் தொடர்ந்து உதவி செய்ய முடியாது. மற்றையவர்கள் வேறு வேறு அமைப்புக்களின் உதவியுடன் தாயகத்துக்கு உதவி புரிபவர்கள். இந்நிலையில் சேரன் தன்னால் ஒரு நடன நிகழ்வினை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்.இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் 4ம் திகதி உமா அவர்கள்'Patchwork' என்ற அமைப்பினை ஆரம்பித்தார். வன்னியில் செயல்படும் தொண்டர் அமைப்புக்களினூடாக அங்கு வலுவிழந்தோர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி செய்யப்படும்.

வன்னியில் காயப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி புரிவதற்காக சேரனின் 'ஆஞ்சநேயம்' என்ற நடன நிகழ்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை 11ம்திகதி சிட்னியில் உள்ள பாங்ஸ் டவூண்(Bankstown) மண்டபத்தில் அதிக பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. வீரம்,பக்தி,வியப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியவண்ணம் சேரன் அழகாக ஆடினார். இரசிகர்கள் மெய்மறந்து இரசித்த சேரனின் நடனத்துக்கு போட்டி போடும் விதத்தில் சிறப்பாக ஆடினார் கரிசன் இளங்கோவன். இவர் நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர். இவர் சென்ற வருடம் சிட்னியில் இருந்து சென்று தமிழ் நாட்டில் உள்ள சிதம்பரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் நடைபெற்ற நடனவிழாவில் கலந்து சிறப்பித்தார்.இவர் 7 வயதில் தனது தாயார் திருமதி சாந்தி இளங்கோவனிடம் முறைப் படி நடனம் பயின்றார். இவ்விருவர்களின் சவாலான நடனத்துக்கு ஏற்றவாறு சிறப்பாக நடனமாடினார் செல்வி இலாவண்யா தேவராஜா அவர்கள். இவர் ஜேர்மனியில் தனது 5 வயதில் இருந்து நடனம் பயின்றவர். அவுஸ்திரெலியாவுக்கு சிறுவயதில் புலம் பெயர்ந்தபின்பு திருமதி தமயந்தி பாலராஜ்,யாழினி திருலோஜன் அவர்களிடம் நடனம் பயின்றார். அடிலெய்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இலவண்யா தற்பொழுது 'இரசனா' நடனப்பள்ளியில் சேரனிடம் நடனம் கற்கின்றார்.

பாரத் மோகனின் மிடற்றிசை, நாராயணதாஸ் கோபதிதாசின் வயலின், கிறிசான் சேகரத்தின் மிருதங்கம், செந்தூரன் தேவராஜா, ஜனகன் சுதந்திரராஜ் ஆகியோரின் தாள வாத்தியங்கள், ஐங்கரன் மகாதேவனின் புல்லாங்குழல் ஆகிய பக்கவாத்தியங்களின் இசையும், பாட்டும் நடன நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றின. காயத்திரி கிருஸ்ணமூர்த்தி நட்டுவாங்கத்துடன்,பொருத்தமான விளக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். செந்தூரன் வழங்கிய சொற்கட்டுக்கள் நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தன.

நிகழ்ச்சியின் இடையில் 'Patchwork' மூலம் வன்னியில் பயன் பெற்றவர்கள் சிலரின் கருத்துக்கள் திரையில் காணொளியில் காண்பிக்கப்பட்டன. உறுப்புக்கள், பார்வைகள் இழந்த இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை பற்றிய சோகக்கதைகளையும்,'Patchwork' மூலம் கிடைத்த நன்மைகளையும் சொன்னார்கள். இவர்களின் சோகக்கதைகள் கேட்டு கண்கலங்கிய பார்வையாளர்கள், சேரனின் இந்நிகழ்வினால் 39000 அவுஸ்திரெலியா வெள்ளிகள் சேர்க்கப்பட்டதைக்கண்டு கை தட்டி மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர்கள்,தொண்டர் அமைப்பு பிரதிநிதிகள் போன்ற அவுஸ்திரெலியர்களும் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி முடிய எதோ ஒருவிதத்தில் சிறு உதவியை தாயக மக்களுக்கு 'Patchwork' மூலம் உதவிக்கொண்டு சிறந்த நடன நிகழ்வை கண்டு களித்த மகிழ்ச்சியுடன் பார்வையாளர்கள் வீடு நோக்கிச் சென்றார்கள்.

'Patchwork' மூலம் உதவி வழங்க விரும்புபவர்கள், சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்கள். info@patchwork.org.au

தொடர்புடைய செய்திகள்/பதிவுகள்

1)சேரனின் 2006ல் நடைபெற்ற நடன நிகழ்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14592&view=findpost&p=231916

2)சேரனின் 2007ல் நடைபெற்ற நடன நிகழ்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26745

3)சேரனின் 2008ல் நடைபெற்ற நடன நிகழ்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=45728

4)சேரனின் 300 கிலோமீற்றர் நடைப்பயணம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62422

5)Many organisations exist to provide in post-war and post-conflict situations, but few are catered to provide for the high needs of persons with disabilities. A new organisation, Patchwork has formed to address this void. Patchwork seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.

Patchwork is being launched officially on Thursday 4th March 2010 at Parramatta Town Hall, Church Street, Parramatta. The event includes: Guest Speakers, Photo Exhibition, Live Music and Light refreshment.

For more info contact: Uma Raj Ph: +61 420 791 739

Email: info@patchwork.org.au Website: www.patchwork.org.au

http://www.disabilitycouncil.nsw.gov.au/bulletin/10/02.html

http://kanthappu.blogspot.com/2010/04/blog-post.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு விடையம்.இதை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

What is Patchwork?

Patchwork is set up to provide assistance for people with disabilities, who have been affected by war. It seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.

War is a horrific experience in which all survivors are subject to great hardship. As a result of war, people face loss of life, property, and injury and are often subject to forced displacement.

The UNDP has estimated that 10% of the world’s population is disabled. Of this, 80% of persons with disabilities live in developing countries. The UN has stated that for every child killed in warfare, three are injured and permanently disabled.

As a community based non government organisation we aim to work with both local and international NGOs, and government agencies to provide services focusing on empowerment, independence and equity for persons with disabilities, affected by war.

Patchwork launches first project

Patchwork’s first project is for the war affected people of Northern Sri Lanka. There are an estimated 35,000 people living with disabilities, some of whom live with multiple disabilities. These include sensory, physical, intellectual, cognitive and psychological disabilities.

Currently many thousand are living in refugee camps or have recently been released. Among these internally displaced people, the number of persons with disabilities is high, yet they are the most hidden, vulnerable,neglected and socially excluded among internally displaced people today.

As the living cost of persons with disabilities is higher than their non-disabled counterparts, our initial aim is to assist in obtaining equipment or devices necessary for daily living, such as wheelchairs, crutches and white canes.

We advocate policy development in areas of disability during war and post- war periods to improve the protection and conditions of persons with disabilities,at the national and international level. To this end, Patchwork has formulated policy documents on the treatment of persons with disabilities during forced migration and internal displacement and is keen to develop this work further.

Patchwork aims to obtain non-profit charity status recognised by ACFID and the Australian government as an international development organisation. With your support, this goal can be achieved as soon as possible.

Core Values

We believe that persons with disabilities,

affected by war:

Are entitled to basic human rights,legal, social and consumer rights that must be recognised and respected.

Are entitled to live free from prejudice,discrimination and vilification and ought to be empowered to exercise their rights and responsibilities.

Have the right to define the policies and programs that affect their lives.

Are entitled to a decent standard of living, an adequate income and to lead active and satisfying lives.

We strive to fulfil the United Nations Convention on the Rights of Persons with Disabilities, Article 1 to:

promote, protect and ensure the full and equal enjoyment of all human rights and fundamental freedoms by all persons with disabilities, and to promote respect for their inherent dignity

''98% OF CHILDREN WITH DISABILITIES IN DEVELOPING COUNTRIES DO NOT ATTEND SCHOOL.''(UNESCO)

Contact us :

Uma Raj +61 420 791 739

info@patchwork.org.au

www.patchwork.org.au

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்கள் செயற்பாட்டிற்கும், தகவலுக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு விடையம்.இதை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

சுவிஸ் நாட்டில் இருந்து இந்நிகழ்வு பற்றி ஆதாரவான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிகள்.

ஆனால் சிட்னியில் ஒரு சிலர் இந்நிகழ்வு எதற்காக நடைபெற்றது என்பது தெரியாமல் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாயாக நிகழ்வு என்றால் ஒரு வெள்ளிப் பணம் கூட செலவு செய்வதில்லை. தென்னிந்திய திரைப்படப் பாடகர்கள், நடிகர்கள், திரைப்படம் என்றால் அதிக பணம் குடுத்து ஆதரவு குடுப்பார்கள். சிறிலங்கா துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட சிட்னி வரும் போது சிங்களக் கொடியுடன் செல்வார்கள். ஒரு உதவியும் செய்யமாட்டினம். செய்பவர்களைப் பற்றிக் குறை கூறுவினம். நேரில் பார்த்த மாதிரிக் கதைப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நிகழ்வுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும் அதே நேரம் உதவிகள் முழுக்க முழுக்க நேரடியாக அந்தமக்களை சென்றடைவதுடன் அனைத்து கணக்கு விபரங்களும் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும்..அப்படியானால்தான் இனிவரும் காலங்களில் மக்களும் மனமுவந்து உதவுவார்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் செயற்பாட்டிற்கும், தகவலுக்கும்....

நான் தகவலை மட்டும் தான் தந்திருக்கிறேன். செயல்பட்டவர்கள் உமா ,சேரன் மற்றைய கலைஞர்களும், சில தமிழுணர்வாளர்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமாவின் PATCH WORK அமைப்புக்காக சேரனின் ஆஞ்சநேயம் -பராசக்தி சுந்தரலிங்கம்

சென்ற ஞாயிற்று கிழமை 11.4.2010௦ அன்று சிட்னி Bankstown நகர மண்டபத்திலே பிரபல நாட்டியக் கலைஞர் சேரன் சிறீபாலனின் தயாரிப்பிலே ஆஞ்சநேயம் பரதநாட்டிய நிகழ்வு PATCH WORK அமைப்புக்காக அரங்கேறியது. சேரனுடன் இணைந்து ஹரீஷன் இளங்கோவன், லாவண்யா தேவராஜா ஆகியோரும் ஆடினார்கள். இந்த நடன நிகழ்வு நல்லதொரு நோக்கத்துக்காக நடைபெற்றது என்பது மனநிறைவைத் தந்தது.

தமிழர் தாயகத்திலே போரினால் அங்கவீனம் உற்றவர்களின் மறுவாழ்வுக்காக சிட்னியை சேர்ந்த உமா ராஜ் PATCH WORK எனும் அமைப்பை அவுஸ்திரேலியாவிலே தொடங்கியுள்ளார். இது உலகளாவிய ரீதியில் இயங்கும் ஓர் அமைப்பு.

உமா சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர். துரதிஷ்டவசமாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், இந்நாட்டிலே அவருக்கு கிடைத்த சூழலின் பயனாக Braille முறையில் கல்வி பயின்று, தன்னம்பிககையுடன் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோதும் பிறர் துன்பம் கண்டு கண்கலங்குகிறார்.

aancha3.jpg

2004 ம் ஆண்டு, தமிழர் தாயகத்திலே சமாதானம் நிலவிய காலத்தில், அங்கு சென்ற உமா போரினால் கண்பார்வையை இழந்த சிறுவர் சிறுமியருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக Braille முறையில் கல்வி கற்பித்து வந்துள்ளார். இன்று அவருடைய அரிய முயற்சிகள் யாவும் போரினால் அடிபட்டுப்போன நிலையிலும் அவர் தனது பணியைக் கைவிடவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு அவர் திரும்பிய பின்னரும் அல்லும் பகலும் உமாவின் சிந்தனை தான் ஊரிலே நிராதரவாக விட்டுவிட்டு வந்த உறவுகளைப் பற்றியே இருந்திருக்கிறது . பார்வையற்றவர்களுக்கு மாத்திரமன்றி, அங்கங்களை இழந்து தவிப்பவர்களுக்ககவும் உதவும் நோக்குடன் PATCH WORK என்னும் அமைப்பை இங்கு ஆரம்பித்துள்ளார்.

சேரன் சிறீபாலன் தாயகத்தில் இயங்கி வந்த நவம் அறிவுக் கூடத்தின் பணிகளுக்காக சென்ற சில ஆண்டுகளாக தனது நடன நிகழ்வு மூலம் நிதி சேகரித்து உதவி வருவதை நாமெல்லோருமே அறிவோம் . இவ்வாண்டு சேரன் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு மூலம் PATCH WORK அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளமை எமக்கு பெருமையாக இருக்கிறது.

ஆஞ்சநேயன் என்பது அனுமனுக்கு மறுபெயர். ராமாயண காவியத்திலே ராமதூதனாக வந்து தனது ஆழ்ந்த பக்தியினாலும், வீரச் செயல்களாலும் மக்களின் மனதிலே நீங்காத இடத்தைப் பிடித்து தெய்வநிலைக்கு உயர்ந்தவன் அனுமன். அனுமனின் பிறப்பு, வீரம், ராமபக்தி ஆகியவற்றைப் புகழும் பாடல்களுக்கு

பரதநாட்டிய முறையில் நடனமமைத்து சேரன் சிறீபாலன் மேடையேற்றியுள்ளார்.

aancha2.jpg

அஞ்சனையின் மகனாக அவதரித்த அனுமன் சிறுவனாக இருக்கும் போதே வியத்தகு செயல்களால் தனது ஆற்றலை நிரூபித்தவன். சூரியனையே பழமென்று நினைத்துப் பறித்து விழுங்கிப் பின் தேவர்களின் வேண்டுகோளுகிணங்க விடுவித்து, அவர்களிடமிருந்து முக்கியமாக வாயு பகவானிடமிருந்து பல வரங்களைப் பெற்றவன் . இதனால் வாயு புத்திரன் மாருதி என்றும் அழைக்கபட்டான். ராமதூதனாக, சீதையை தேடிக் கடல் கடந்து இலங்கையை அடைந்து ராவணனுடன் வாதித்து இலங்காபுரியை இலங்காதகனம் செய்தவன்.

சேரனும் ஹரீஷனும் இணைந்து இக்காட்சிகளை தங்கள் விறுவிறுப்பான நடனம் மூலம் மேடையிலே தத்ரூபமாக கொண்டு வந்தனர். சேரன் அனுமனாகவும், ஹரீஷன் ராமன் மற்றும் ராவணனாகவும் தோன்றி ஆடினார்கள். லாவண்யா அஞ்சனை, சீதையாக நடனத்தில் இணைந்து கொண்டார். பிரபல நாட்டிய கலைஞர்களான சாந்தா, தனஞ்சயன் தம்பதியினரிடம் சேரன் நடனம் பயின்றவர். ஹரீஷன் நாட்டியக் கலையர் திருமதி ஜெயலக்ஷ்மி கந்தையாவின் மாணவர். லாவண்யா சேரனின் ரசன்னா கவின் கல்லூரி மாணவி.

அருணாசலக் கவிராயரின் ராமநாடகத்திலிருந்து "கைகூப்பிதொழும் அய்யன் நீ" என்னும் பாடலுக்கு அமைந்த நடனமும், மாருதி கவுத்துவமும் முக்கியமாக

ஐம்பூதங்களைப் பற்றிய வர்ணனை குறிப்பிடும்படி இருந்தன. "சரணம், சரணம்" என்னும் பஜன் பக்திச் சுவையுடன் பொருத்தமாக அமைத்திருந்தது. சேரனின் நடன ஆற்றலையும், நடன அமைபாண்மையையும் கீரவாணி ராகத்திலமைந்த வர்ணத்தில் கண்டு மகிழ முடிந்தது. ஹரீஷனும் லாவண்யாவும் இடையில் இணைந்து ஆடினர். வர்ணத்தில் சஞ்சாரிகளைக் குறைத்திருக்கலாம்.

இவர்களின் விறுவிறுப்பான, தொய்வில்லாத நடன நிகழ்வு, இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறவேண்டும் . நடனக் கலைஞர்களைப் போலவே பக்கவாத்தியக் கலைஞர்களும் சிறப்பாக இசை வழங்கினார்கள். எல்லோருமே இளைஞர்கள். வாய்ப்பாட்டிசையை வழங்கிய மோகன் பரத் நல்ல குரல் வளமுடையவர். ஆனால் பல பாடல்கள் அவருக்குச் சவாலாக அமைந்து விட்டன. கிஷானின் மிருதங்க இசை, செந்தூரனின் கடம், ஜனகனின் கெஞ்சிரா, டோலக், மோர்சிங் ஆகியன நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்திவிட்டன என்பதில் சந்தேகமில்லை.

aancha5.jpg

அனுமன், ராவணன் ஆகியோரின் சந்திப்பு கோபமாக வீராவேசத்துடன் அவர்கள் மோதியது போன்ற சந்தர்பங்களில் வாத்தியங்களின் பொருத்தமான இசை, செந்தூரனின் ஜதிகள் கலாரி முறையில் அமைந்த அசைவுக்கு மெருகேற்றிவிட்டன

.

காயத்திரியின் நட்டுவாங்கம் எப்பொழுதும் போல கம்பீரமாக இருந்தது. ஐங்கரனின் வேணுகானம், கோபதிதாசின் வயலினிசை மிக ஒத்திசைவாக இருந்தன. நடனத்தின் சிறப்புக்கு இக்கலைஞர்களின் திறமை இன்றியமையாதிருந்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சம்.

ஆஞ்சநேயம் என்ற பரதநாட்டிய நிகழ்வை புஷ்பாஞ்சலி, வர்ணம், கீர்த்தனம் என்னும் முறையில் ஆடும் பொழுது ஒரே கருத்து திரும்பத் திரும்ப வருவதை தவிர்க்க முடியாமல் இருக்கும். இதனை ஒரு நாட்டிய நாடகமாகச் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் சேரனின் நடன அமைப்பாண்மையை குறைப்பது என்றாகாது.

அனுமனும் ராமனும் சந்திப்பது, ராம தூதனாக சீதையிடம் சென்று சூடாமணியை பெற்று ராமனிடம் கையளிப்பது, சேது பந்தனம், சஞ்சீவி பர்வததைக் கொண்டு வந்தது என்று சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடராகக் கொண்டு வந்திருந்தால் சூரியனைப் பழமென்று விழுங்கிய சம்பவத்தைத் திரும்பத் திரும்பக் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம். கம்பராமயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் யாவற்றிலும் அனுமனின் பிரபாவம் விரவியிருப்பதை அனுபவித்தவர்களுக்கு இவற்றையும் நடனத்தில் அழகாகச் சேர்த்திருக்கலாமே என்று தோன்றுவதில் வியப்பில்லை. அதே போல மகா பாரதத்திலும் பாரிஜாத மலரைத் தேடிச்சென்ற வீமனை அனுமனின் வால் குறுக்கே கிடந்து தடுத்ததையும் பின்னர் இருவரும் தாங்கள் வாயுபுத்திரர்கள், சகோதரர்கள் என்று உணர்ந்து மகிழ்ந்த்ததையும் கூட இணைத்திருக்கலாம் . மற்றும் அர்ச்சுனனின் கொடியில் இருந்தபடி அனுமன் நேரடியாக கீதோபதேசம் பெற்ற ஞானி .

ராமாயணமும் மகாபாரதமும் எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்ட கதைகள். எனவே ராவணேசனைப் படைத்த சேரன் போன்ற ஒரு சிறந்த கலைஞன் ஏன் இவற்றை சிந்திக்கவில்லை எனப் பார்வையாளர் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே கூற வேண்டும்.

அனுமன் என்றால் துளசிதாசரின் அனுமான் சாலிசா எல்லோருக்கும் நினைவுக்கு வரும். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் துதியாக, அனுமான் சாலிசாவிலிருந்து ஓரிரு பாடல்களை ஒலித்தால் , நன்றாக இருக்கும். பிரபல பாடகர்கள் பலர் இவற்றைத் தமிழிலேயும் பாடியுள்ளார்கள். அதேபோல நிறைவு செய்யும் போதும் தில்லானாவின் பின்னர் "சரணம் சரணம்" என்னும் பஜனைத் தொடர்ந்து மங்களம் வந்தால் அனுமனின் "காதலாகிக் கசிந்துருகும்" ராமபக்தி அந்த சரணாகதி தர்மம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.

சேரனின் சிறந்த நடன அமைப்பாண்மையில் அமைந்த ஆஞ்சநேயம் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்படும் பொழுது மென்மேலும் மெருகடையும் என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியின் நிறைவில் உமா ராஜ் மேடையிலே தோன்றி PATCH WORK அமைப்பைபற்றி நல்லதொரு விளக்கத்தை தந்தது மனதைத் தொட்டது. "நான் இவரின் தொண்டை மதர் தெரேசாவின் சேவையாகவே காண்கிறேன்" என்று அவரை மேடைக்கு வழிகாட்டி அழைத்து வந்த திரு ஜெகன் அவர்கள் வர்ணித்த போது எல்லோரையும் கண்கலங்க வைத்தது. இன்றைய புலம் பெயர் இளையோர் பலர் தாயகக் கனவுகளைச் சுமந்த வண்ணம் தமது உறவுகளுக்காக ஆற்றிவரும் தொண்டு நம்பிக்கை தருகிறது,

"தன்னலமற்ற அன்பு" கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது இவையே அனுமன் என்பதன் தத்துவம். எனவே PATCH WORK அமைப்புக்காக ஆஞ்சநேயம் சாலப் பொருத்தமே.

-பராசக்தி சுந்தரலிங்கம்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நிகழ்வுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும் அதே நேரம் உதவிகள் முழுக்க முழுக்க நேரடியாக அந்தமக்களை சென்றடைவதுடன் அனைத்து கணக்கு விபரங்களும் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும்..அப்படியானால்தான் இனிவரும் காலங்களில் மக்களும் மனமுவந்து உதவுவார்கள்.

சிட்னியில் இப்படியான நிகழ்வுகளில் கணக்கு வழக்குகள் வெளியிடப்படும் புத்தகங்களில் அல்லது நிகழ்ச்சியின் போது திரையில் காண்பிக்கப்படும். இந்த 'ஆஞ்சநேயம்' நிகழ்வின் போது காணொளிகள் காண்பிக்கப்பட்டன. நீங்களும் சாந்தியும் நேசக்கரங்களில் உதவி பெறுபவர்களின் பேட்டிகளை யாழில் இணைத்து வருகிறீர்கள். அதே போல இந்நிகழ்வின் போது உதவி பெற்றவர்களின் பேட்டிகள் காணொளிகளாக திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் குற்றம் சொல்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு ஒரு நாளும் செல்வதில்லை. உதவியும் செய்வதில்லை. அதாவது இந்நிகழ்வுக்கு செல்லாதவர்களும், ஒரு நாளும் தாயகத்துக்கு பண உதவி செய்யாதவர்களும் தான் குறை சொல்லுகிறார்கள்.தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் வந்தால் எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க முன்னுக்கு நிற்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு பச்வேக் என்கிற அமைப்பை பற்றியும் உமா என்கிற பெண்ணைப்பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்...தாயகத்தில் அந்த அமைப்பால் உதவிகள் பெற்றவர்களே என்னிடம் நேரில் கூறியிருந்தார்கள்..அவரினதும் அவரது குழுமத்தினரதும் பணிகள் தொடரவேண்டும் மேலும் எமது உறவுகளிற்கான உதிவிகள்போய் சேரவேண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனால் குற்றம் சொல்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு ஒரு நாளும் செல்வதில்லை. உதவியும் செய்வதில்லை. அதாவது இந்நிகழ்வுக்கு செல்லாதவர்களும், ஒரு நாளும் தாயகத்துக்கு பண உதவி செய்யாதவர்களும் தான் குறை சொல்லுகிறார்கள்.தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் வந்தால் எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க முன்னுக்கு நிற்பவர்கள்.

இந்த பட்ச்வேர்க் நிறுவனம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ,அதிலும் குறை காணும் எம்மவர்களை என்ன சொல்ல?

என்னுடை நன்பர் ஒருவர் இந்தியா கலைஞர் எவர் வந்தாலும் போகாமல் விடமாட்டார்.அவரிடம் ஒருக்கா இதை போய் பாருங்கோ என்று சொல்ல அவர் திருப்பி கேட்டார் உந்த காசை அங்கே தான் பாவிக்கிரார்கள் என்று எப்படி எங்களுக்கு தெரியும் .

தனிநபர் காசு சேர்க்கும்(இந்தியகலைஞரை கூப்பிட்டு தன்களது பொக்கட்டை நிரப்புபவர்கள்) பொழுது கணக்கு கேட்காமல் கொடுப்பார்கள் ஆனால் இப்படியான நிகழ்வுக்கு பணம் சேர்க்கும் பொழூது அவர்களுக்கு கணக்கு வழக்கு எல்லாம் கேட்பினம்,மற்றும் பணம்கொடுப்பவர்களையும் கொடுக்கவிடாமல் பிரச்சாரம் செய்வினம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு பச்வேக் என்கிற அமைப்பை பற்றியும் உமா என்கிற பெண்ணைப்பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்...தாயகத்தில் அந்த அமைப்பால் உதவிகள் பெற்றவர்களே என்னிடம் நேரில் கூறியிருந்தார்கள்..அவரினதும் அவரது குழுமத்தினரதும் பணிகள் தொடரவேண்டும் மேலும் எமது உறவுகளிற்கான உதிவிகள்போய் சேரவேண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன்.

உங்களின் இக்கருத்து பச்வேக் மூலம் உதவுபவர்களின் எண்ணிக்கையைக் கூட்டும். மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பட்ச்வேர்க் நிறுவனம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ,அதிலும் குறை காணும் எம்மவர்களை என்ன சொல்ல?

என்னுடை நன்பர் ஒருவர் இந்தியா கலைஞர் எவர் வந்தாலும் போகாமல் விடமாட்டார்.அவரிடம் ஒருக்கா இதை போய் பாருங்கோ என்று சொல்ல அவர் திருப்பி கேட்டார் உந்த காசை அங்கே தான் பாவிக்கிரார்கள் என்று எப்படி எங்களுக்கு தெரியும் .

தனிநபர் காசு சேர்க்கும்(இந்தியகலைஞரை கூப்பிட்டு தன்களது பொக்கட்டை நிரப்புபவர்கள்) பொழுது கணக்கு கேட்காமல் கொடுப்பார்கள் ஆனால் இப்படியான நிகழ்வுக்கு பணம் சேர்க்கும் பொழூது அவர்களுக்கு கணக்கு வழக்கு எல்லாம் கேட்பினம்,மற்றும் பணம்கொடுப்பவர்களையும் கொடுக்கவிடாமல் பிரச்சாரம் செய்வினம்

அவரை எனக்குத் தெரியும். இப்ப என்னவென்றால் ஜெகத் கஸ்பரைப் பற்றி அச்செய்தியை வாசியும், இச்செய்தியை வாசியும் என்று அடிக்கடி தொல்லை தருகிறார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

anjaneyamvictoriaposter.jpg

மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”ஆஞ்சநேயம்” என்ற நாட்டிய நிகழ்வு எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் றிங்வூட் ஈஸ்ட்டில், மைன்ஸ் வீதியில் அமைந்துள்ள Karralyka மண்டபத்தில் (Karralyka Centre, Mines Road, Ringwood East, 3135 (Melway Ref: 50 A6))நடைபெறவுள்ளது.

இளம் கலைஞர் சேரன் சிறீபாலன் வழங்கவுள்ள இந்த நாட்டிய நடன நிகழ்விற்கு வருகை தந்து அந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தாயக உறவுகளுக்கு உதவியளிக்கும் நிதி திரட்டும் திட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளும்படி மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் "பட்ச் வேர்க்" என்ற அமைப்பின் ஊடாக தாயகத்தில் போரின் வடுக்களால் அவயவங்களை இழந்து அந்தரித்துவாழும் உறவுகளுக்கு அபயமளித்து அவர்களுக்கான உடனடி உதவிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களிற்கு ஜெகனை 0430 007 231 அல்லது கரனை 0430 411 469இல் தொடர்பு கொள்ளவும். இந்த நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்களை மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பின் தொண்டர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பச்வேக்' அமைப்பினூடாக போரில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவுவதற்காக பிரான்சில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சிட்னியில் புகழ்பெற்ற சேரன் சிறிபாலனின் நாட்டிய நிகழ்வு.

09071020002.jpg

தகவலுக்கு நன்றி கந்தப்பு.

எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இதை அனுப்புகிறேன்.

'பச்வேக்' அமைப்பினூடாக போரில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவுவதற்காக பிரான்சில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சிட்னியில் புகழ்பெற்ற சேரன் சிறிபாலனின் நாட்டிய நிகழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கந்தப்பு.

என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்

தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கந்தப்பு! நானும் முடிந்தவரை செய்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.

இன்றைய இக்கட்டான சூழலில் தம்பணியாற்றிடும் அனைவரும் பாராட்டுதற்குரியவர்கள்.

"புறம் சொல்லிப் புறமுதுகுகாட்டியது போதுமினி.

அறம் செய்வோரை அரவணைப்போம் தமிழா"

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடைப்பயணத்தில் கலந்து கொண்டதால் இந்த நிகழ்ச்சிக்கு போகமுடியவில்லை

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்பு கொண்டார்கள்

எனது பங்களிப்பாக 100 ஈரோக்களை அன்பளிப்பு செய்துள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.