Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங்

எல்லாப் பாதைகளுமே மகிந்தவை நோக்கி - தமிழ்நெட்

இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அறிவுரை கூறியதாக வெள்ளியன்று வந்த பத்திரிக்கைச் செய்திகள் கூறியுள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கூற்றுப்படி , " முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களையும் சேர்த்து மகிந்தவுடன் ஒற்றுமையாக அரசியல் தீர்வைத் தேடுங்கள் என்று இந்தியப் பிரதமர் எமக்கு அறிவுரை கூறினார்.நாம் அதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம்" என்றும் அவர் சொன்னார். அவர் மேலும் கூறுகையில், " தமிழர்க்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் 100% இந்தியாவிலேயே தங்கியிருக்கிறோம், இந்தியா நியாயமான திர்வென்று கருதுவதை மகிந்த தரச் சம்மதித்தால் நிச்சயம் நாம் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்" என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, சனிக்கிழமை வந்த செய்திகளின்படி, இலங்கைக் கொம்மினிஸ்ட் கட்சித் தலைவரும், மகிந்தவின் அமைச்சர்களில் ஒருவருமான குணசேகர அவர்கள் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கம்மூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றுகையில், "இறுதித் தீர்வை அமைக்கும் முயற்சியில் இலங்கை இந்தியாவின் உதவியையும், ஆலோசனையையும் கோரியிருப்பதாகக்" கூறினார்.

இந்த இந்திய விஜயத்தின்போது கூட்டமைப்பினர், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணன், உள்த்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் நிருபமா சென் ஆகியோரையும் சந்தித்தனர்.

விஜயத்திலீடுபட்ட கூட்டமைப்பினருக்கு இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்தில் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.

விஜயம் செய்த கூட்டமைப்பு எம்.பீக்களிடம் 1970 ஆம், 1980 ஆம் ஆண்டு சுதந்திர, தீவிரவாத எண்ணங்களையும், கோட்பாடுகளையும் கைவிட்டு விட்டு, யதார்த்தபூர்வமான செயற்பாடுகளின்மூலம், உண்மையாகவே நீதியான தீர்வொன்றை நோக்கி உழைத்துவரும் மகிந்தவுக்கு உதவுவதன் மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தி ஐலண்ட் பத்திரிக்கை கூறியுள்ளது.

தமிழ் வட்டாரங்களின் கருத்துப்படி, 70 களிளும் 80 களிளும் இருந்ததை விடத் தமிழர்கள் இன்று அழிக்கப்பட்டிருப்பதோடு, அடையாளங்களும் இல்லாமல் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமான தீவிர பயங்கரவாத எண்ணங்களைக் கொண்டிருக்கும் சிங்கள அரசிடம் அகப்பட்டு துன்புறுவது தமிழர்களே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

"அவர்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழரின் உரிமைக்கான விருப்பு இல்லாமல் போயிருக்கலாம், எமது சுதந்திரத்துக்கான தாகம் பழமையடைந்ததாக தோன்றலாம், ஆனால் என்றையும் விட இப்போதுதான் எமது சுதந்திரத்துக்கான தேவையும், நியாயப்பாடும் அதிகரித்திருக்கிறது என்பதோடு அதற்கு மாற்றீடான எந்தவொரு தீர்வையும் இதுவரை தருவதற்கு அவர்கள் எந்தக் கரிசணையுமே கொள்ளவில்லை" என்று யாழ்ப் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான "அறிவுறுத்தல்களின்" பிரகாரம் பல்வேறு பிண்ணணிகளிலிருந்து உருவாகிய தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் வேண்டுமென்றே "ஈழம்" எனும் சொல்லைத் தமது கட்சிப் பெயர்களில் தவிர்த்து வருவது இன்றைய அரசியல் சூழலில் காணப்படுவதாக தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பேராசிரியர் சிற்றம்பலம் கூறியதுபோல , தமிழ்க் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக "தமிழரசுக் கட்சி" எனும் பெயர் இல்லதொழிக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று அவ்வட்டாரங்கள் கேள்வியெழுப்பின.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் மத்தியில் சில படித்த மேதாவிகள் இந்தியா பிராந்திய வல்லரசு அதன் உதவி இல்லாமல் எம்மால் ஒன்றும் புடுங்க முடியாது என்று கொண்டிருக்கின்றனர். ஆனால் சிறீலங்காவே இந்தியாவை நம்பி நடப்பதில்லை.

இந்தியாவை அச்சுறுத்த தனக்கான சீன மேற்குலக ஆதரவை பயன்படுத்த.. சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார மந்திரியாக இருந்த கதிர்காமரே சிங்களவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

ஆனால் கூட்டமைப்பு 100% இந்தியாவை நம்பி மீண்டும் தமிழ் மக்களை ஆறாத்துயரில் ஆழ்த்தப் போவதையே செய்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு மெளனித்துக் கிடப்பதற்குப் பதில் சிறீலங்காவில் அதன் அரசியல் செயற்பாட்டை அங்குள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்த முயல வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச அளவில் தமிழர்களுக்காக ராஜிய உறவுகளை கட்டி வளர்க்க வேண்டும்.

இவைதான் இந்தியா என்றாலும் சரி சிறீலங்கா என்றாலும் சரி எம்மை பார்த்து பயப்பிட வழி வகுக்கும். முன்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் அவர்களிற்கிருந்த மன உறுதிக்குப் பயந்தார்கள். இன்று அந்தப் பயம் போன நிலையில்.. எதிரிகள் எம்மை அடிபணியச் சொல்வார்களே அன்றி எமக்கு உரிமைகள் பெற்றுத் தருவார்கள் என்பது பகற்கனவு..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மண் குதிரையை நம்பி என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள்.நெடுக்கர் சொல்வது போல நாடு கடந்த அரசு மௌனித்து இருப்பது நல்லதல்ல.உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும்.

.

மீண்டும் தமிழர் பிரச்சனையைச் சாட்டி இந்தியா தீவில் களமிறங்கப் போவதாக வசந்தி...

புலத்தில் ஒன்றுக்கு பத்து அமைப்புக்களை தொடங்குவதை விட்டு இருப்பதை பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசியல்த் தலைமைகள் ஈழத் தமிழருக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை .

எல்லோரும் சுயநலவாதிகள் .அப்படியானவர்கள் தலைமைப் பதவியில் இருக்கும் வரை ஈழத்தில் அவலங்கள் அதிகரித்துக் கொண்டு செல்லுமே தவற குறைவதற்கு வாய்ப்பில்லை.

தன்னலமற்ற புதிய தலைமை புலத்திலோ களத்திலோ தனது கடமையை விரைந்தது செயற்படுத்த வேண்டும் .

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதைத் தவிர வேறெதையும் செய்யாது.

30ஆண்டுகளில் தமிழரை எப்படிச் சிறுகச்சிறுக ஈழத்தீவிலிருந்து அழிக்கலாம் என்று திட்டமிட்டு அழித்து, இறுதியாக முள்ளிவாய்காலில் தனது ஆசையை நிறைவேற்றியதோடு, மீதமுள்ளவர்களையும் மெதுவாக அழித்தல், அல்லது சேர:ந்தோ அரவணைத்தோ அழித்தல் என்ற உத்தியை கையெலெடுத்துள்ளது. அதன் தற்போதைய நகர்வாக இது அமைகிறது. த.தே.கூ எச்சரிக்கையாக செயற்பட்டு எமக்குச் சாதகமான சூழலை அது சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு இணைந்து செய்தாலும் பரவாயில்லை. சிங்களம் காலத்துக்குக் காலம் இதனைச் செய்தே தன்னை பலப்படுதி வருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீக்கியனின் மயிர் பிரச்சணைய உயிர் பிர‌ச்சனையாகவும்

தமிழனின் உயிர் பிரச்சனையை மயிர்ப்பிரச்சனை போலவும் இவர்கள் பார்ப்பார்கள்

என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

சீக்கியனின் மயிர் பிரச்சணைய உயிர் பிர‌ச்சனையாகவும்

தமிழனின் உயிர் பிரச்சனையை மயிர்ப்பிரச்சனை போலவும் இவர்கள் பார்ப்பார்கள்

என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

தூங்கிரவனை எழுப்பலாம் ஆனால் அப்படி நடிப்பவனை

  • கருத்துக்கள உறவுகள்

.

மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங்

இவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதில் வல்லவர்கள்.

போர் முடிந்து ஒரு வருடமாகியும் அம்மக்களை குடியேற்றாமல். அவர்களது பூர்வீக நிலங்களில் சிங்களவனை குடியேற்றுவதிலும், இராணுவ முகாம் அமைப்பதிலும் அக்கறை காட்டி வரும் சிங்கள அரசை தட்டி கேட்க இந்தியாவுக்கு வக்கில்லை.

"கசாப்புக் கடைகாரனிடம் கருணையை" எதிர்பார்க்க சொல்லும் பிரயோசனமற்ற இந்தியாவிடம் கூட்டமைப்பு ஏன் திரும்ப திரும்ப போகின்றது.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வட்டாரங்களின் கருத்துப்படி, 70 களிளும் 80 களிளும் இருந்ததை விடத் தமிழர்கள் இன்று அழிக்கப்பட்டிருப்பதோடு, அடையாளங்களும் இல்லாமல் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமான தீவிர பயங்கரவாத எண்ணங்களைக் கொண்டிருக்கும் சிங்கள அரசிடம் அகப்பட்டு துன்புறுவது தமிழர்களே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அடேயப்பா...

சிங்களவனின் அறுவடையை நல்ல தமிழில் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களில்....

அமைதியாக...

ஆடம்பரமாக....

உல்லாசமாக.....

குளுகுளுப்புப்பாக...

நடக்கப்போகும் இன அழிப்பை எப்படி வர்ணிப்பார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங்

அடி ஆத்தீய்.......

அக்கா சொல்லுறது கொஞ்சம் தான் விளங்குது....... முழுமையாக யாராவது மொழி பெயர்த்து போடுங்களேன்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி ஆத்தீய்.......

அக்கா சொல்லுறது கொஞ்சம் தான் விளங்குது....... முழுமையாக யாராவது மொழி பெயர்த்து போடுங்களேன்.

.

மொட்டை வீரவன்சாவை தடவினது பிழையாம், பிழையான கண்ணோட்டத்தில் ஜநாவால் நோக்கபடுமாம், வீரவன்சா அப்படி பட்டவர் இல்லையாம், சிலவேளை மொட்டை அப்படிபட்டவரா இருக்கலாமாம். :lol::lol:^_^ டிக்க டிக்க சிங்கள தன்னுவ :o

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை வீரவன்சாவை தடவினது பிழையாம், பிழையான கண்ணோட்டத்தில் ஜநாவால் நோக்கபடுமாம், வீரவன்சா அப்படி பட்டவர் இல்லையாம், சிலவேளை மொட்டை அப்படிபட்டவரா இருக்கலாமாம். :lol::lol:^_^ டிக்க டிக்க சிங்கள தன்னுவ :)

அதுக்கு ஏன்..... கிழவியள் அழுகுதுகள். ts_weinen0035.gifgirl%20weint%20Taschentuch.gif:(:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.