Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலித்து ஏமாற்றிய கயவனுடன் கட்டாயக் கல்யாணம். வீடியோ காட்சி.

Featured Replies

காதலித்து ஏமாற்றிய கயவனுடன் கட்டாயக் கல்யாணம். வீடியோ காட்சி.

பொழுதுபோக்கிற்காக காதலித்துவிட்டு பிறகு காதலியை கைவிடும் ஏமாற்றுக் காதலர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இங்கு காதலித்து ஏமாற்றப்பட்ட ஒரு பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன் காதலித்த பையனையே கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த ஒரு வீடியோ காட்சியினை பார்க்க வேண்டுமா? .

Edited by நிழலி
added link;

  • கருத்துக்கள உறவுகள்

அஹா! அவர் ஆனந்தப் பரவசத்துடன் அல்லாடுறார்! :lol:

அவர் விருப்பமின்மை காரணமாகவா அல்லது அவமானம் காரணமாகவா இப்படி முரண்டுபிடிக்கிறார் என்று அவருக்குத்தான் தெரியும். அவரது மனைவி அவருடன் ஒப்பிடும்போது தோற்றத்தில் அழகாய் உள்ளா. இவவைவிட இன்னமும் அழகிய பெண்ணை கலியாணம் செய்யவேணும் என்று நினைத்தாரோ என்னமோ. இது காதலிக்கும்போதே யோசித்து இருக்கவேணும். குறிப்பிட்ட நபரின் உணர்வுகளையும் பேட்டியாக கொண்டுவந்திருந்தால் இன்னமும் கொஞ்சம் விளக்கம் கிடைச்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயத் திருமணம் தான் இதற்கான முடிவா?

இந்தத் திருமணத்துடன் அவர்களது வாழ்க்கை முடிந்ததா?

எதிர்காலத்தில் அந்த கணவன் மனைவியின் நிலமை எப்படி இருக்கும்?

அந்த இளைஞன் மனம் திருந்தினால் சரி இல்லாவிட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன?

இன்னும் ஒத்துழைக்காத தாய் தகப்பனின் பேச்சைக் கேட்டு மீண்டும் அந்த இளைஞன் ஓடிவிட்டால்?

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயத் திருமணம் .

விட்டு விட்டு போக மாட்டான் என்பதில் என்ன நிச்சயம்?

  • கருத்துக்கள உறவுகள்

இதையே காதலித்து ஏமாற்றிய பெண்ணுக்கு செய்வார்களா..???! உடனே அதற்கு ஆயிரம் அடக்குமுறை ஆணாதிக்கம் என்று பெயரிட்டு விடுவார்கள்.

ஒருவன் காதலித்திருந்தால்.. நிச்சயமாக அவன் எக்காரணம் கொண்டும் தானாக விட்டு விலகமாட்டான். இவர் காதலித்ததாகத் தெரியவில்லை.

அந்தப் பொண்ணு தான் தவிச்ச முயல் அடிப்பதாகத் தெரிகிறது. இது பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடு..! பாவம் அந்த ஆண்.. அவன் செய்த குற்றம் என்ன..???! காதலிக்கிறன் என்றது ஒரு தப்பா..??! கலியாணம் செய்வேன் என்று எங்கும் பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லையே. காதல் எல்லாம் கலியாணத்தில் முடியனும் என்றால் எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல மனைவிகளும்.. கணவன்மாருமெல்லோ இருப்பினம்..! :D :D

இது இந்திய கலாசாரத்தின் காட்டுமிராண்டித்தனத்தின் பக்கமாகும்..! தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். அவரை ஆலோசனைகள் சொல்லி சம்மதிக்க வைப்பது வேறு கட்டாயப்படுத்துவது தவறு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவன் அழுகிற விதத்தைப் பார்க்கையில இவன் தான் உண்மையான காதலனா எண்டு சந்தேகமா இருக்கு..! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயத் திருமணம் தான் இதற்கான முடிவா?

இந்தத் திருமணத்துடன் அவர்களது வாழ்க்கை முடிந்ததா?

எதிர்காலத்தில் அந்த கணவன் மனைவியின் நிலமை எப்படி இருக்கும்?

அந்த இளைஞன் மனம் திருந்தினால் சரி இல்லாவிட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன?

இன்னும் ஒத்துழைக்காத தாய் தகப்பனின் பேச்சைக் கேட்டு மீண்டும் அந்த இளைஞன் ஓடிவிட்டால்?

வாத்தியார்

*********

வாத்தியார் சொன்ன மாதிரி... அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்குமா? :D

அதனை பஞ்சாயத்து போர்டு..... தொடர்ந்து கவனிக்குமா? :D

நாட்டாண்மை தீர்ப்பை மாத்து.... :lol::lol:

.

பாவமாக இருக்கு பெடியன பார்க்க, இப்படி அழுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவமாக இருக்கு பெடியன பார்க்க, இப்படி அழுகிறான்.

தெரியாமல் கல்யாணம் கட்டி மனிசிமாரிட்டை அடிவாங்கிற ஆம்பிளைகள் இப்ப ஞாபகத்துக்கு வருகிறது. எங்கே குமாரசாமியைக் காணவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

.

kokku%20para%20para.JPGnormal_trisha-pictures-kokku.jpg

யாழ் கள இளைஞர்களே.... அவசரப் பட்டு காதலிக்காதேங்கோ......

"ஓடு மீன் ஒடி.... உறு மீன்" வந்து மாட்டுப் படும் வரை பொறுமையாய் இருங்கோ..... :D

.

Edited by தமிழ் சிறி

இதையே காதலித்து ஏமாற்றிய பெண்ணுக்கு செய்வார்களா..???! உடனே அதற்கு ஆயிரம் அடக்குமுறை ஆணாதிக்கம் என்று பெயரிட்டு விடுவார்கள்.

ஒருவன் காதலித்திருந்தால்.. நிச்சயமாக அவன் எக்காரணம் கொண்டும் தானாக விட்டு விலகமாட்டான். இவர் காதலித்ததாகத் தெரியவில்லை.

அந்தப் பொண்ணு தான் தவிச்ச முயல் அடிப்பதாகத் தெரிகிறது. இது பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடு..! பாவம் அந்த ஆண்.. அவன் செய்த குற்றம் என்ன..???! காதலிக்கிறன் என்றது ஒரு தப்பா..??! கலியாணம் செய்வேன் என்று எங்கும் பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லையே. காதல் எல்லாம் கலியாணத்தில் முடியனும் என்றால் எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல மனைவிகளும்.. கணவன்மாருமெல்லோ இருப்பினம்..! :lol::D

இது இந்திய கலாசாரத்தின் காட்டுமிராண்டித்தனத்தின் பக்கமாகும்..! தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். அவரை ஆலோசனைகள் சொல்லி சம்மதிக்க வைப்பது வேறு கட்டாயப்படுத்துவது தவறு.

அப்போ இவர் காதல் என்ற பெயரில் அந்தப் பெண்ணை ஏமாத்தி வந்திருப்பார் என்று நினைகிறீர்களா? இருக்கலாம்!

ஆணோ, பெண்ணோ ஏமாத்துரார்கள் என்று விளங்கிக் கொண்டால், ஒன்று அதன் காரணத்தை அறிய வேண்டும், அல்லது பேசாமல் விலத்தி போக மனத் தைரியவளர்த்துக் கொள்ள வேண்டும் .

ஏனெனில் இப்போதெல்லாம் புலத்தில் தமிழ்கள் மத்தியில் அதிகமாம குடும்பங்கள் விவாகரத்தாகியும், விவாகரத்து எடுக்காமல் பொய் சொல்லியும் வேறு உறவுகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறார்கள். இதனால் காதலிப்பவர்களும் தமது நிதானத்தை இழந்து, ஏனோ தானோ என்று செயல் படுகிறார்கள். (காம இச்சைகளை பரீட்சித்துப் பார்த்துவிட்டு விலகிச் செல்கிறார்கள்)

காதலித்து திருமணமாகிய பின்னும் தனது குடும்பம், தனது பிள்ளைகள் என்று ஒரு அக்கறை, பாசம் இல்லாமல் அடுத்தவர் துணைக்கு ஆசைப் பட்டு அவர்களுடன் குடும்பம் நடத்தும் ஈனப் பிறப்புகளும் (இருபாலாரும்) சமுதாயத்தில் மனுசர் என்ற போர்வையில் இருப்பது ஏன்? இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாமா?

வாத்தியார் சொன்ன மாதிரி... அவர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்குமா? :D

அதனை பஞ்சாயத்து போர்டு..... தொடர்ந்து கவனிக்குமா? :D

நாட்டாண்மை தீர்ப்பை மாத்து.... :D:lol:

.

சிறியண்ண இதே தீர்ப்பை இருபாலாருக்கும் குடுக்க வேணும் என்பதை பஞ்சாயத்து போர்டு கருத்தில் கொள்ள வேண்டும். :):lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இவர் காதல் என்ற பெயரில் அந்தப் பெண்ணை ஏமாத்தி வந்திருப்பார் என்று நினைகிறீர்களா? இருக்கலாம்!

ஆணோ, பெண்ணோ ஏமாத்துரார்கள் என்று விளங்கிக் கொண்டால், ஒன்று அதன் காரணத்தை அறிய வேண்டும், அல்லது பேசாமல் விலத்தி போக மனத் தைரியவளர்த்துக் கொள்ள வேண்டும் .

ஏனெனில் இப்போதெல்லாம் புலத்தில் தமிழ்கள் மத்தியில் அதிகமாம குடும்பங்கள் விவாகரத்தாகியும், விவாகரத்து எடுக்காமல் பொய் சொல்லியும் வேறு உறவுகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறார்கள். இதனால் காதலிப்பவர்களும் தமது நிதானத்தை இழந்து, ஏனோ தானோ என்று செயல் படுகிறார்கள். (காம இச்சைகளை பரீட்சித்துப் பார்த்துவிட்டு விலகிச் செல்கிறார்கள்)

காதலித்து திருமணமாகிய பின்னும் தனது குடும்பம், தனது பிள்ளைகள் என்று ஒரு அக்கறை, பாசம் இல்லாமல் அடுத்தவர் துணைக்கு ஆசைப் பட்டு அவர்களுடன் குடும்பம் நடத்தும் ஈனப் பிறப்புகளும் (இருபாலாரும்) சமுதாயத்தில் மனுசர் என்ற போர்வையில் இருப்பது ஏன்? இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாமா?

எமது சமுதாயம் என்பது ஓரளவுக்கு கல்வி அறிவு ஊட்டப்பட்ட ஒன்றாக இருந்தாலும்.. புலம்பெயர் சமூகம் என்பது அகதிகளை பெரிதும் கொண்டது. அவர்களில் பலர் வாழும் நாட்டுக்குரிய கல்வி அறிவையோ சமூக அறிவையோ பெற்றவர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை காணுவதெல்லாம் செய்யப்படலாம்.. என்ற நிலை. சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி. சந்தர்ப்பங்களை எல்லாம் தமதாக்க வேண்டும் என்ற தாகம். இப்படியாக வாழ நினைக்கும் மக்கள் கூட்டத்தினர் தான் தவறான பாதையில் போய் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தாயகத்தில் பிறந்தோருக்கு புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் விதிமுறைகளை இட்டுப் பயம். பிள்ளைகளை அடிகொடுத்து வளர்க்க தெரிந்தவர்களுக்கு அறிவூட்டி அன்பூட்டி.. பண்பூட்டி வளர்க்கத் தெரியாது. இதன் பின்னணியில் எழுகின்றன பிரச்சனைகள்..!

நான் அவதானித்த வரை சிறுபராயத்தில் இருந்து பெற்றோரின் அன்பு அறிவு பண்பை கண்காணிப்பை பெற்று வளரும் பிள்ளைகள்.. நல்ல மாதிரியாத்தான் வளர்கிறார்கள். யார் தவறான பாதையில் போகின்றனர் என்றால்.. பயங்காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளும்.. பெற்றோர் தவறான வழியில் போவதை கண்டு வளரும் பிள்ளைகளும்.. குடும்பப் பிரச்சனைகளை சதா சந்திக்கும் பெற்றோரோடு வளரும் பிள்ளைகளும் .. நல்ல நட்பு வட்டத்தை கொண்டிராத பிள்ளைகளும்.. அதற்கான கவனிப்பை செலுத்தாத பெற்றோரின் பிள்ளைகளுமே ஆகும்.

ஆக புலம்பெயர் சமூகத்தில் பலருக்கு அந்தந்த நாட்டில் வாழும் அடிப்படை தகுதியே கிடையாது. பலரிடம் அந்தந்த நாட்டு பாஸ்போட் இருக்கும்.. ஆனால் அந்த நாட்டு மொழி.. வரலாறு.. கலாசாரம்.. பண்பாடு... ஏன் அந்த நாட்டின் நாகரிகம் மக்கள் அவர்களின் சமூகப் பண்புகள்.. சமூக நடத்தைகள்.. என்று எதுவுமே தெரியாது. ஆனால் பிள்ளைகளோ அந்த நாட்டு கல்விச் சூழலில் அந்த நாட்டுக்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றனர். இங்குள்ள இந்த பெற்றோர் - பிள்ளைகள் - பிற சமூகத்துடனான தொடர்பு.. இடைவெளியும்.. சமூக கல்வி அறிவற்ற நிலைதான்.. இவற்றுக்கு எல்லாம் மூல காரணம்.

புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் பல பெற்றோரின் சராசரி கல்வி மட்டும் என்பது சிறீலங்காவின் சாதாரண தரப் பரீட்சைக்கும் கீழ் தான் காணப்படுகிறது. ஊரில் படிக்க முடியாத பலர் தான் போர் சூழலை காரணம் காட்டி காணியை பூமியை வீட்டை.. நகையை அல்லது வெளிநாட்டில் இருந்த பிறரின் தயவைக் கொண்டு வெளிநாடுகளுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் எப்படி கல்வி மற்றும் சமூக அறிவுடன் கூடிய செயற்பாட்டை.. குடும்பக் கட்டமைப்பை.. நாம் எதிர்பார்க்க முடியும்..????! :D

Edited by nedukkalapoovan

எமது சமுதாயம் என்பது ஓரளவுக்கு கல்வி அறிவு ஊட்டப்பட்ட ஒன்றாக இருந்தாலும்.. புலம்பெயர் சமூகம் என்பது அகதிகளை பெரிதும் கொண்டது. அவர்களில் பலர் வாழும் நாட்டுக்குரிய கல்வி அறிவையோ சமூக அறிவையோ பெற்றவர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை காணுவதெல்லாம் செய்யப்படலாம்.. என்ற நிலை. சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி. சந்தர்ப்பங்களை எல்லாம் தமதாக்க வேண்டும் என்ற தாகம். இப்படியாக வாழ நினைக்கும் மக்கள் கூட்டத்தினர் தான் தவறான பாதையில் போய் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தாயகத்தில் பிறந்தோருக்கு புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் விதிமுறைகளை இட்டுப் பயம். பிள்ளைகளை அடிகொடுத்து வளர்க்க தெரிந்தவர்களுக்கு அறிவூட்டி அன்பூட்டி.. பண்பூட்டி வளர்க்கத் தெரியாது. இதன் பின்னணியில் எழுகின்றன பிரச்சனைகள்..!

நான் அவதானித்த வரை சிறுபராயத்தில் இருந்து பெற்றோரின் அன்பு அறிவு பண்பை கண்காணிப்பை பெற்று வளரும் பிள்ளைகள்.. நல்ல மாதிரியாத்தான் வளர்கிறார்கள். யார் தவறான பாதையில் போகின்றனர் என்றால்.. பயங்காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளும்.. பெற்றோர் தவறான வழியில் போவதை கண்டு வளரும் பிள்ளைகளும்.. குடும்பப் பிரச்சனைகளை சதா சந்திக்கும் பெற்றோரோடு வளரும் பிள்ளைகளும் .. நல்ல நட்பு வட்டத்தை கொண்டிராத பிள்ளைகளும்.. அதற்கான கவனிப்பை செலுத்தாத பெற்றோரின் பிள்ளைகளுமே ஆகும்.

ஆக புலம்பெயர் சமூகத்தில் பலருக்கு அந்தந்த நாட்டில் வாழும் அடிப்படை தகுதியே கிடையாது. பலரிடம் அந்தந்த நாட்டு பாஸ்போட் இருக்கும்.. ஆனால் அந்த நாட்டு மொழி.. வரலாறு.. கலாசாரம்.. பண்பாடு... ஏன் அந்த நாட்டின் நாகரிகம் மக்கள் அவர்களின் சமூகப் பண்புகள்.. சமூக நடத்தைகள்.. என்று எதுவுமே தெரியாது. ஆனால் பிள்ளைகளோ அந்த நாட்டு கல்விச் சூழலில் அந்த நாட்டுக்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றனர். இங்குள்ள இந்த பெற்றோர் - பிள்ளைகள் - பிற சமூகத்துடனான தொடர்பு.. இடைவெளியும்.. சமூக கல்வி அறிவற்ற நிலைதான்.. இவற்றுக்கு எல்லாம் மூல காரணம்.

புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் பல பெற்றோரின் சராசரி கல்வி மட்டும் என்பது சிறீலங்காவின் சாதாரண தரப் பரீட்சைக்கும் கீழ் தான் காணப்படுகிறது. ஊரில் படிக்க முடியாத பலர் தான் போர் சூழலை காரணம் காட்டி காணியை பூமியை வீட்டை.. நகையை அல்லது வெளிநாட்டில் இருந்த பிறரின் தயவைக் கொண்டு வெளிநாடுகளுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் எப்படி கல்வி மற்றும் சமூக அறிவுடன் கூடிய செயற்பாட்டை.. குடும்பக் கட்டமைப்பை.. நாம் எதிர்பார்க்க முடியும்..????! :D

இங்கே பிறந்த பிள்ளைகள் பலர் நீங்கள் சொல்லவதைப் போல் இருப்பதை அவதானித்து இருக்கிறேன்!

அதே சமையம், ஊரிலிருந்து வந்து இங்கே பட்டப் படிப்புப் படித்து விட்டு திரும்பவும் ஊரில் போய் அதிகம் படித்திராத பெண்ணை திருமணம் செய்து இங்கே கூப்பிட்டு (தியாகச் செம்மல் என்று நினைப்பில்) ஓரிரு ஆண்டுகள் வீடு வேலைகளை செய்யவிட்டு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது உங்கள் மகள் என்று அந்தப் பெண்ணைத் திருப்பி ஊருக்கே அனுப்பிவிட்டு திரும்ப வேறு ஒரு பெண்ணை மணம் முடிப்பவர்களும் இங்கே உள்ளார்கள். இதுவும் கல்வி அறிவுப் போதாமையா? அல்லது என்ற திமிர் எடுத்த தனமா??

ஊரில் பத்தாம் வகுப்பு வரை படித்த எத்தனையோ பேர் (ஊரிலும் சரி, புலத்தில் இங்கு நீங்கள் சொல்வது போல் அகதியாக வந்தவர்களும் சரி) தங்கள் குடும்பங்களை நிமதியாக வைத்து இருக்கிறார்கள். ஒருவர் ஒருவர் மேல் அன்பாக இருக்கிறார்கள், பிள்ளைகளில் பாசமாக இருக்கிறார்கள் தானே??

உண்மையான அன்பை புரிந்து நடப்பதற்கு படிப்பறிவு மட்டும் இருந்தால் போதுமா? அடிப்படை மனிதத் தன்மை இல்லாதவர்கள் கலாநிதி பட்டம் பெற்றாலும் உருப்பட மாட்டார்கள் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படி அழுகிறார் :D:D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சரவணா இது?

வேள்விக்கு கட்டின ஆடு போல பொடியன் தலையை ஆட்டுறான். :D

  • கருத்துக்கள உறவுகள்

.

சிறியண்ண இதே தீர்ப்பை இருபாலாருக்கும் குடுக்க வேணும் என்பதை பஞ்சாயத்து போர்டு கருத்தில் கொள்ள வேண்டும். :lol::D

குட்டி, மைனர் குஞ்சு தண்டனையை..... ஒரு பாலாருக்குத்தான் பஞ்சாயத்து போர்டு கொடுக்கிறது வழமை.

வேணுமென்றால்..... மற்ற பாலாருக்கு.... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விடாலாம். :lol::D

.

பாவம் ஆடு..... வேள்விக்கு போறது தெரியாம சிரிச்சுகொண்டு நிக்குது..... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா இது?

வேள்விக்கு கட்டின ஆடு போல பொடியன் தலையை ஆட்டுறான். :D

ஜீவாக்கு பயம் வந்திட்டிது..! விளையாட்டுக் காட்டினால் இப்பிடித்தான் மவனே..! :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தொடக்கம்...

இருவரது நிம்மதி மட்டுமல்ல

அந்த இரு குடும்பங்களின் நிம்மதியும் போச்சு...

வாழ்க்கை வாழ்வதற்கே

கட்டிக்கொண்டு அழுவதற்கல்ல :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிறந்த பிள்ளைகள் பலர் நீங்கள் சொல்லவதைப் போல் இருப்பதை அவதானித்து இருக்கிறேன்!

அதே சமையம், ஊரிலிருந்து வந்து இங்கே பட்டப் படிப்புப் படித்து விட்டு திரும்பவும் ஊரில் போய் அதிகம் படித்திராத பெண்ணை திருமணம் செய்து இங்கே கூப்பிட்டு (தியாகச் செம்மல் என்று நினைப்பில்) ஓரிரு ஆண்டுகள் வீடு வேலைகளை செய்யவிட்டு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது உங்கள் மகள் என்று அந்தப் பெண்ணைத் திருப்பி ஊருக்கே அனுப்பிவிட்டு திரும்ப வேறு ஒரு பெண்ணை மணம் முடிப்பவர்களும் இங்கே உள்ளார்கள். இதுவும் கல்வி அறிவுப் போதாமையா? அல்லது என்ற திமிர் எடுத்த தனமா??

ஊரில் பத்தாம் வகுப்பு வரை படித்த எத்தனையோ பேர் (ஊரிலும் சரி, புலத்தில் இங்கு நீங்கள் சொல்வது போல் அகதியாக வந்தவர்களும் சரி) தங்கள் குடும்பங்களை நிமதியாக வைத்து இருக்கிறார்கள். ஒருவர் ஒருவர் மேல் அன்பாக இருக்கிறார்கள், பிள்ளைகளில் பாசமாக இருக்கிறார்கள் தானே??

உண்மையான அன்பை புரிந்து நடப்பதற்கு படிப்பறிவு மட்டும் இருந்தால் போதுமா? அடிப்படை மனிதத் தன்மை இல்லாதவர்கள் கலாநிதி பட்டம் பெற்றாலும் உருப்பட மாட்டார்கள் என்பது எனது கருத்து.

நான் எனது கருத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் குட்டி.. கல்வி அறிவும் சமூக அறிவும் அவசியம் என்று. வெறும் புத்தகப் படிப்பு மட்டும் கல்வி அறிவு என்பது சரியல்ல. அதுமட்டுமன்றி கல்வி அறிவோடு சமூக அறிவும் உள்ள ஒருவரால் தான் குடும்பம் அதன் அமைவிடம் மற்றும் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை விளங்கிக் கொண்டு அதனை வெற்றிகரமாக நடத்த முடியும்.

குடும்பம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கலியாணம் கட்டி பிள்ளை பெத்துக்கிட்டு அதை வளர்க்கிற ஒரு அமைப்பல்ல. குடும்பம் என்பது தான் வாழும் சமூகத்தை தீர்மானிப்பது. சமூகம் ஒவ்வொரு குடும்பத்தின் கையிலும் உள்ளது. வாழும் சூழலில் சமூகத்தோடு.. பிற குடும்பங்களோடு உறவாட முடியாத குடும்ப அமைப்பென்பது பிரச்சனைகளுக்கான காரணிகளாகின்றன.

புகலிடத்தில் இதுதான் அதிகம் நிகழ்கிறது. புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கும் அந்தந்த நாட்டு மக்களின் குடும்பங்களிடையேயும் பலத்த இடைவெளி உண்டு. அதை நிரப்பிக் கொள்வது இலகுவான விடயம் அன்று. அதை நிரப்பாமல்.. சமூக அறிவு பெறப்பட அல்லது பரிமாறப்பட வாய்ப்புக் குறைவு. இதுவே பெற்றோர் பிள்ளைகளிடையே பிரச்சனைக்கு வித்திடுகின்றன. பிள்ளைகள் உள்ளூர் சமூகக் கட்டமைப்புக்கு ஏற்பட அறிவூட்டப்பட பெற்றோர் வேறொரு கலாசாரத்துள் பண்பாட்டுள் கட்டுண்டு கிடக்க.. பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நாங்கள் இங்கு ஆங்கிலம் மிகவும் நன்றாக கதைத்தாலோ,பிரிட்டன் விசா இருந்தாலோ அல்லது அவர்களது கலாச்சாரம்,பழக்கவழக்கங்களை பழகினால் கூட வெள்ளையள் எங்களை தங்களுக்கு சமமாக ஒப்பிடப் போவதில்லை...ஓரளவுக்கு அவர்களின் கலாச்சாரம்,பழக்கவழக்கம் தெரிந்து வைத்திருந்தால் போதுமென்பது என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.