Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் பொரித்த குழம்பு

Featured Replies

தேவையான பொருட்கள்

கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய் - 10 அல்லது 12 காய்கள்

உரித்து, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிகருவேப்பிலை

கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4 அல்லது 5

உடைத்து, சிறிதாக வெட்டிய உள்ளி - 10 பல்

வெந்தயம் - ஒரு கைப்பிடி

பெருஞ்சீரகம் - தாளிப்பதற்கு சிறிதளவு

கடுகு - தாளிப்பதற்கு சிறிதளவு

தேங்காய் - பாதி ( முதல் பால் , இரண்டாம் பால் ஆகியவற்றை பிழிந்து எடுத்து வைக்கவும் )

புளி - ஒரு பாக்கு அளவு ( மூன்றாம் தேங்காய்ப்பாலில் கரைத்து வைத்துக்கொள்ளவும்)

கருவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு

செய்முறை

01) ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து தாச்சி காய்ந்த உடன் தேவையான அளவு எண்ணெய்விட்டு, கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய்த் துண்டுகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

02) இன்னொரு தாச்சியை அடுப்பில் வைத்து தாச்சி காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய்விட்டு உரித்து, கழுவி வெட்டிய சின்ன வெங்காயம், கழுவி வெட்டிய பச்சை மிளகாய், உடைத்து சிறிதாக வெட்டிய உள்ளி, கருவேப்பிலை ஆகியவற்றைப்போட்டு நன்றாக வதக்கவும்.

03) அதன்பின்னர் சிறிதளவு பெருஞ்சீரகம், சிறிதளவு கடுகு, ஒரு கைப்பிடி வெந்தயம் ஆகியவற்றைப்போட்டு தாளிக்கவும்.

04) பொரித்த வெண்டிக்காய்த் துண்டுகளைப்போட்டு மூன்றாம் பாலில் கரைத்த புளிக்கரைசல், இரண்டாம் பால், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகாய்த்தூள் ஆகியவற்றைப்போட்டு மூடிக் கொதிக்கவிடவும்.

05) பின்னர் முதல் பாலை விட்டு குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்குங்கள்.

06) சூடான, சுவையான வெண்டிக்காய்க் குழம்பு தயார்!

யாழ்ப்பாணத்து மக்கள் இவ்வெண்டிக்காய்க் குழம்பை இடியப்பம், புட்டு மற்றும் சோறு ஆகிய பிரதான உணவுகளுக்கு முக்கியமான கறியாகப் பயன்படுத்துவார்கள்.

நன்றி - www.yarlmann.lk

http://www.yarlmann.lk/head_view.asp?key_c=339

  • கருத்துக்கள உறவுகள்

.

நான் சிறு வயதில் வெண்டிக்காய் அவ்வளவு விரும்பி சாப்பிடுவதில்லை.

அப்போ.... அம்மா, வெண்டிக்காய் சாப்பிட்டால் தான் மூளை வளரும், நன்றாக படிக்கலாம் என்று வில்லங்கப் படுத்தி தருவா....

அதற்குப் பிறகு ஏனோ தானோ.... என்று சாப்பிட்டு, எனது மூளையும் நன்றாக வளர்ச்சி அடைந்தது.

இப்போ..... வெள்ளிக்கிழமைகளில் வெண்டிக்காய் பொரித்த குழம்பு இல்லாமல் சமையலே இராது.

இணைப்புக்கு நன்றி பிரியங்கா. :D

.

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்கா,நன்றி இணைப்புக்கு.வெண்டிக்காய்கறி புட்டு,இடியப்பத்துக்கு நன்றாக இருக்கும். அதோடு வெண்டிக்காய் நீரிழிவு நோய்க்கும் நல்லது என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்கா பதிவுக்கு நன்றி. சளிதன்மையை நினைத்தால் அருவருக்கும்.( புளி விடால் அது எடுபடும்)

எண்ணயில் வதக்கி சாப்பிடலாம்

வெண்டிக்காயை பச்சையாகச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது

பொரித்து குழம்பு வைத்து சாப்பிட்டால் 25வீத சத்துத்தான் உடம்பில் சேரும்

மிகுதி 75வீதம் கொழுப்புத்தான் சேரும் ஏனெனில் பொரித்த எண்ணை

அதனுடன் சேர்ந்து உள் செல்வதால்

பொரித்த வெண்டிக்காய் குழம்பு சோறு, இடியப்பம், புட்டு எல்லாவற்றுடனும் கலந்து அடிக்கலாம். அதன் மணமும் நல்லாய் காணப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காயை பச்சையாகச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது

பொரித்து குழம்பு வைத்து சாப்பிட்டால் 25வீத சத்துத்தான் உடம்பில் சேரும்

மிகுதி 75வீதம் கொழுப்புத்தான் சேரும் ஏனெனில் பொரித்த எண்ணை

அதனுடன் சேர்ந்து உள் செல்வதால்

நடக்கிற காரியமா கதையுங்கோ. வெண்டிக்காய்.. பச்சையா.. பொரிக்காமல் கறி சமைத்து சாப்பிடுவது என்பது நமக்கு ஆகாதது.

சளி போல் இழுபடும். சத்தி வரும் சார்...! :o:huh::wub:

வெண்டிக்காயை பச்சையாகச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது

பொரித்து குழம்பு வைத்து சாப்பிட்டால் 25வீத சத்துத்தான் உடம்பில் சேரும்

மிகுதி 75வீதம் கொழுப்புத்தான் சேரும் ஏனெனில் பொரித்த எண்ணை

அதனுடன் சேர்ந்து உள் செல்வதால்

நடக்கிற காரியமா கதையுங்கோ. வெண்டிக்காய்.. பச்சையா.. பொரிக்காமல் கறி சமைத்து சாப்பிடுவது என்பது நமக்கு ஆகாதது.

சளி போல் இழுபடும். சத்தி வரும் சார்...! :):huh::wub:

வெண்டிக்காயை அவிக்கும் போதே பாதி எலுமிச்சைப்பழச் சாறு விட்டு அவித்தால் இழுபடும் தன்மை அகன்று போகும். :o

இணைப்பிற்கு நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கிற காரியமா கதையுங்கோ. வெண்டிக்காய்.. பச்சையா.. பொரிக்காமல் கறி சமைத்து சாப்பிடுவது என்பது நமக்கு ஆகாதது.

சளி போல் இழுபடும். சத்தி வரும் சார்...! :):huh::wub:

இழுபடும் சளியில் மனித உடலுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்குமென்பதை குருவியிடம் கேட்டுப்பாருங்கள்? :)

நெடுக்கரே!

தினசரி வெண்டிக்காய் சாப்பிடுங்கள்.

பெண்ணாசை தானாக வரும் :o

  • கருத்துக்கள உறவுகள்

இழுபடும் சளியில் மனித உடலுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்குமென்பதை குருவியிடம் கேட்டுப்பாருங்கள்? :)

நெடுக்கரே!

தினசரி வெண்டிக்காய் சாப்பிடுங்கள்.

பெண்ணாசை தானாக வரும் :wub:

இப்ப யார் சொன்னது அவருக்கு பெண்ணாசை இல்லை என்று. :huh: அவருக்கு பெண்ணின் உள்ளத்தை தவிர பெண்ணில் உள்ளது எல்லாம் பிடிக்கும். :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னது யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் மற்றவர்கள் வெண்டிக்காய் சாப்பிட மாட்டார்களா :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் சொன்னது அவருக்கு பெண்ணாசை இல்லை என்று. :) அவருக்கு பெண்ணின் உள்ளத்தை தவிர பெண்ணில் உள்ளது எல்லாம் பிடிக்கும். :D

சக மனிதனாக.. பெண் கொண்டுள்ள அழகு.. அன்பு பிடிக்கும்..! அவள் கொண்டுள்ள ஆணவம் பிடிக்காது. :lol::D

வெண்டிக்காயை அவிக்கும் போதே பாதி எலுமிச்சைப்பழச் சாறு விட்டு அவித்தால் இழுபடும் தன்மை அகன்று போகும். :)

இணைப்பிற்கு நன்றி :)

மவனே இப்படிச் செய்து பார்க்கிறேன்.. சளி வரட்டும்.. நடக்கிறது வேற..! :D:)

இழுபடும் சளியில் மனித உடலுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்குமென்பதை குருவியிடம் கேட்டுப்பாருங்கள்? :)

நெடுக்கரே!

தினசரி வெண்டிக்காய் சாப்பிடுங்கள்.

பெண்ணாசை தானாக வரும்.

சரிங்கண்ணா. பெண்ணாசை அளவுக்கு மிஞ்சி வந்திட்டா.. அதுக்கு என்ன சாப்பிடனும் என்று சொல்லுங்க..! :lol:

என்னது யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் மற்றவர்கள் வெண்டிக்காய் சாப்பிட மாட்டார்களா :)

ரதி, யாழ்ப்பாணத்து குழம்பு தானன்றி யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் அல்ல.

இந்த்தக்குழ்ம்புக்குள் கத்தரிக்காயையும் பொரித்து சேர்க்கலாம். நன்றாக இருக்கும்.

சரிங்கண்ணா. பெண்ணாசை அளவுக்கு மிஞ்சி வந்திட்டா.. அதுக்கு என்ன சாப்பிடனும் என்று சொல்லுங்க..! :D

உது தானா பிரச்சனை? கால்கட்டு தான் சரியான வழி.

வேறை வழிகளும் இருக்கு, ஆனா வேற பல பிரச்சனைகளும்(!) சேர்ந்த்தே வரும்.

நடக்கிற காரியமா கதையுங்கோ. வெண்டிக்காய்.. பச்சையா.. பொரிக்காமல் கறி சமைத்து சாப்பிடுவது என்பது நமக்கு ஆகாதது.

சளி போல் இழுபடும். சத்தி வரும் சார்...! :lol::):D

உடம்பிற்கு உகந்ததெனில் உவர்ப்பெனினும் உட்கொள்ள உளப்படு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெண்டிக்காயை பச்சையாய் மரத்திலிருந்தே ஓடிச்சுச் சாப்பிடப் பிடிக்கும். பொரித்து குழம்பு வைத்தாலும் விருப்பமில்லட்டிலும் சாப்பிட்டு வைப்பன்! :)

மவனே இப்படிச் செய்து பார்க்கிறேன்.. சளி வரட்டும்.. நடக்கிறது வேற..! :lol::)

செய்து பார்த்துவிட்டு அறியத் தரவும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிங்கண்ணா. பெண்ணாசை அளவுக்கு மிஞ்சி வந்திட்டா.. அதுக்கு என்ன சாப்பிடனும் என்று சொல்லுங்க..! :)

தினசரி ஒரு தேசிக்காய்கொட்டையை நன்றாக கடித்து இருபத்திநான்கு நாளைக்கு விழுங்குங்கள்.

அப்புறம்.....

மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எந்த பாலியல் நோக்கங்களும் இருக்கவேஇருக்காது. :lol:

நானும் என்பாடும் என இருப்பீர்கள் :D:lol:

தினசரி ஒரு தேசிக்காய்கொட்டையை நன்றாக கடித்து இருபத்திநான்கு நாளைக்கு விழுங்குங்கள்.

அப்புறம்.....

மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எந்த பாலியல் நோக்கங்களும் இருக்கவேஇருக்காது. :lol:

நானும் என்பாடும் என இருப்பீர்கள் :):D

உண்மையாகவா கு.சா அண்ணை??? இப்படித் தான் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தனீ ங்களோ ???? :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சரிங்கண்ணா. பெண்ணாசை அளவுக்கு மிஞ்சி வந்திட்டா.. அதுக்கு என்ன சாப்பிடனும் என்று சொல்லுங்க..! :)

பெண்ணாசை அளவுக்கு அதிகமக வந்திட்டாப் பாலும் பழமும் சாப்பிட வேண்டும்.

குறிப்பாக கல்யாண நாள் அன்று மணமகளின் கையால் சாப்பிட வேண்டும் .

முடியுமா நெடுக்ஸ் :D

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

பெண்ணாசை அளவுக்கு அதிகமக வந்திட்டாப் பாலும் பழமும் சாப்பிட வேண்டும்.

குறிப்பாக கல்யாண நாள் அன்று மணமகளின் கையால் சாப்பிட வேண்டும் .

முடியுமா நெடுக்ஸ் :o

வாத்தியார்

*********

அனைவருக்கும் நன்றி..

வெண்டிக்காயில் பொரித்த குளம்பு, பொரியல், பால்கறி செய்யலாம்,, பால் கறிக்கு தேசிக்காய் சேர்க்கும்போது நல்ல சுவையாக இருக்கும்.. உடம்பிக்கும் நல்லது..

ஆனால் பொரித்த குளம்புகள் சைவ நாளில் கை கொடுக்கும்.. அது மாத்திரமல்லாமல் புட்டு, இடியப்பத்துக்கு நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணாசை அளவுக்கு அதிகமக வந்திட்டாப் பாலும் பழமும் சாப்பிட வேண்டும்.

குறிப்பாக கல்யாண நாள் அன்று மணமகளின் கையால் சாப்பிட வேண்டும் .

முடியுமா நெடுக்ஸ் :lol:

வாத்தியார்

*********

கட்டாயம் பாலும் பழுமுமா சாப்பிடனும். பிசா.. பாஸ்ரா அப்படின்னு ஒரு 7up ஒட கொடுக்கமாட்டாய்ங்களா..??! :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பழமைவாதி எனக்குப் பாலும் பழமும் தான் தெரியும். நெடுக்ஸ் :o:lol:

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயம் பாலும் பழுமுமா சாப்பிடனும். பிசா.. பாஸ்ரா அப்படின்னு ஒரு 7up ஒட கொடுக்கமாட்டாய்ங்களா..??! :lol::D

சருகுஆமையை கொண்டுபோய் மெத்தையிலை படுக்க வைச்சாலும்......

அது சருகைத்தான் தேடிப்போகுமாம் :lol:

நல்லகாலம் மனிசன் தாம்பூலத்துக்கு பதிலாய் சுவிங்கம் சப்பலாம்தானே எண்டு கேக்காமல் விட்டது வந்தவரைக்கும் லாபம் :o

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் பொரித்த குழம்பை விட உரையாடல் நல்லா இருக்கு :lol:

யாழ்ப்பாணத்து வெண்டிக்காய் பொரித்த குழம்பை விட உரையாடல் நல்லா இருக்கு :lol:

யாழ் கள ஸ்பெசாலிட்டியே அதுதானே :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.