Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனசாட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாய் இருக்கிறது நானா இப்படி நடந்து கொண்டேன்...அன்று ஞாயிற்றுக்கிழமை நேரம் கழித்து எழும்பி என்ன இண்டைக்கு மத்தியானம் சாப்பிடலாம் என யோசித்து கேபாப் கடையில கேபாப் வாங்கி சாப்பிடலாம் என தீர்மானித்தேன்[ஒரு கிழமையாய் கேபாப் சாப்பிட ஆசையாய் இருந்தது]...நான் இருக்கும் பகுதியில் துருக்கிகாரர்கள் தான் அதிகம்...மதிய நேரம் வந்ததும் சாப்பாடு வாங்குவதற்கு முதல் கொஞ்ச நேரம் நடப்போம் எனத் தீர்மானித்து நடக்கத் தொடங்கினேன்...நடந்து கொண்டு இருக்கையில் இரு பெண்கள் ஒரு குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து எனக்கு நேரெதிரே வந்து கொண்டு இருந்தவர்கள் அநேகமாக ரூமேனியர்களாய் இருப்பார்கள் என்னைக் கண்டதும் ஓடி வந்து ஒரு கை சங்கிலியைக் காட்டி அதை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டார்கள் நான் என்னிடம் காசு இல்லை எனக் கூறி வேண்ட மறுத்து விட்டேன் ஆனாலும் அவர்கள் தங்கள் குழந்தைக்கு பால்மா வேண்ட காசு இல்லை என்டும் ஒரு இருபது பவுணாவது தருமாறு கேட்டார்கள் நான் என்னிடம் காசு இல்லை எனச் சொல்லி நகர்ந்து சென்று விட்டேன்...உண்மையாகவே நான் வெளியே செல்லும் போது காசு அதிகம் வைத்திருப்பதில்லை...சில நேரத்தின் பின் நான் நடந்து முடிந்து கேபாப் வாங்குவதற்காக கேபாப் கடையில் காத்து இருக்கையில் பக்கத்து கடையில் குய்யோ,மெய்யோ என சத்தம் கேட்டது பக்கத்து கடை துருக்கிகாரரின் பலசரக்கு கடை எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தார்கள் உணவகத்தில் பறிமாறுபவன் உட்பட நானும் தான்...என்னிடம் காசு கேட்ட பெண்கள் இருவரும் அக் கடையில் திருடி இருக்கிறார்கள் போலும் கடைக்காரன் கையும் களவுமாய் பிடித்து விட்டான்...வெளியே அப் பெண்களை கூட்டி வந்து அவர்கள் ரூமேனியர்கள்... நீளப் பாவாடை அணிந்திருந்தார்கள்...வெளியே கூட்டி வந்து பெண்களது பாவாடையை உதறும் போதும்,பாவாடையை தூக்கும் போதும் சீஸ்,சோஜேஜ் என ஒவ்வொரு சாப்பாட்டுப் பொருட்களாய் வெளியே வந்து வீழ்ந்தது... சுத்தி வர அவ்வளவு பேர் இருந்தும் ஒருத்தரும் அதை தடுக்க முன் வரவில்லை என்னும் சொல்லப் போனால் எல்லாரும் நின்டு அதை வேடிக்கை பார்த்தார்கள்...சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து விட்டது...நானும் கேபாபை வாங்கிக் கொண்டேன் உடனே என்ட கவலை எல்லாம் அந் நேரம் அந்த கேபாப் கடைக்காரனும் அவர்களுக்கு கிட்டப் போனானே அவன் அந்தப் பெண்களின் பாவாடையைத் தொட்டானா என்பதில் தான் இருந்தது என்டாலும் ஆசை ஆசையாய் கேபாபை வாங்கிக் கொண்டேன்...வீட்டுக்கு வந்தும் எனக்கு அந்த பெண்களின் ஞாபகமாகவே இருந்தது உண்மையாகவே அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தான் அந்த கைசங்கிலியைக் காட்டி காசு கேட்டார்களோ அந்த கைசங்கிலி பெறுமதி இல்லா விட்டாலும் காசை கொடுத்திருக்கலாம் என்டு என்ட மனசு கிடந்து அடித்து கொண்டு இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. லண்டனில் இருந்துகொண்டு உப்பிடிப் பரிதாபப் பட்டீங்கள் எண்டால் ஒரு காலத்தில் உங்கட நிலைமையும் பரிதாபமாய்ப் போயிடும். ^_^

குழந்தையின் பாலுக்கு காசு இல்லையெண்டால் அங்கதான் கவுன்சிலில் பணம் குடுக்கிறாங்களாமே.. அதுக்கு நீங்கள் முடிஞ்சால் கைகாட்டி விட்டிருக்கலாம். :unsure:

கையும் காலும் நல்லாயிருக்கிற நம்மாக்களே கிழமைக்கு 16 மணித்தியாலம் வேலை செஞ்சுகொண்டு மிச்சத்துக்கு கவுன்சிலில் காசை எடுக்கினமாம். உவையளும் எடுக்கலாம்தானே..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...நானும் சில வேளைகளில் வெளியால் போகும் இப்படியான காட்சிகளைக் கண்டு இரக்கபட்டு முன் பின் போசிக்காமல் ஏதாச்சும் செய்வது உண்டு.ஆனாலும் இப்போ நினைப்பேன் வெளிநாடுகளில் இருந்து கொண்டும் இப்படிச் செய்யிறார்களே ஏன் கை,காலை கடவுள் ஒழுங்காகத் தானே படைச்சு இருக்கிறார். எங்காவது வேலைக்கு போய் உளைத்து சீவிக்கலாம் தானே என்று என் உள்மனம் சொல்லிக் கொள்ளும்.அந்த இரண்டு பெண்களில் ஒருவர் வேலைக்கு போனாலும் எவ்வளவு உதவியாய் இருக்கும் என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள்.அவர்களின் பழக்கதோசமோ என்னமோ...நாம் கடைக்காரரையும் குற்றம் சொல்ல ஏலாது.நன்றி.

பாவங்கள்,என்ன கருமம் செய்திச்சுதுகளோ தெரியவில்லை என்று சொல்லி மனதை தேற்றி கொள்ளுங்கோ.....இந்த கடவுள் இப்படித்தான் என்று கடவுளின் மேல் பிழையை போட வேண்டியது தானே

இவர்கள் அரச உதவிப் பணமும் எடுத்துக் கொண்டுதான் இங்கு பிச்சை எடுக்கிறார்கள். வெளிநாடுகளில் அழைத்து சென்று பிச்சை எடுப்பதற்காகவே, ருமேனியாவில் சிறுவர்களை கடத்துவதாக சென்ற கிழமை செய்தி வந்தது. நானும் முன்பு விஷயம் தெரியாமல் ஒரு பவுண்ட் போடுவேன்.

கவலைபடாமல் நீங்கள் சந்தோசமாக உங்கள் கேபாப்பை அனுபவித்து சாப்பிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தயை காட்டி பிச்சைஎடுப்பது தான் இவர்கள் தொழில். களவேடுக்காமல் கடைக் காரனிடம்

நிலைமையை சொல்லி பால்மா கடன் கேட்டிருக்கலாம்

தெருவில் பொருட்களை வாங்குவது நல்லதொரு யோசனை இல்லை. விற்கப்படும் பொருட்கள் ஏற்கனவே திருடப்பட்டு காணப்படலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி...ரூமேனியக்காரர்களில் தொழிலே களவெடுத்தல் என்கிறார்களே இது உண்மையா?

ரூமேனியக்காரர்களில் தொழிலே களவெடுத்தல் என்கிறார்களே இது உண்மையா?

எனது வீட்டின் சில திருத்த வேலைகளை ருமேனியர்கள்தான் அடுத்த கிழமையிலிருந்து செய்யப்போகிறார்கள். அதுக்குள்ளே நீங்க பீதிய கிளப்பிறீங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டின் சில திருத்த வேலைகளை ருமேனியர்கள்தான் அடுத்த கிழமையிலிருந்து செய்யப்போகிறார்கள். அதுக்குள்ளே நீங்க பீதிய கிளப்பிறீங்கள். :unsure:

இன்சூரன்ஸ் கம்பனிக்கு இப்பவே ஃபோன் அடிச்சு சொல்லிப்போடுங்கோ..! :lol:

இன்சூரன்ஸ் கம்பனிக்கு இப்பவே ஃபோன் அடிச்சு சொல்லிப்போடுங்கோ..! :lol:

எதுக்கும் ஒரு நேர்த்திகடன் வைக்கிற நல்லம் போல கிடக்கு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இன மக்கள் கூட்டத்திலும் திருடர்கள் இருக்கின்றார்கள்.

ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்தைத் திருடர்கள் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அவர்களிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள்.

தப்பிலி அறிமுகம் இல்லாத யாரையும் வீட்டுக்குள்ளே அனுமதிப்பது ஆபத்தானது.

காவடி எடுத்தும் பிரயோசனம் இல்லை :lol:

வாத்தியார்

**********

காவடி எடுத்தும் பிரயோசனம் இல்லை :unsure:

வாத்தியார்

**********

:lol::D

அவரவர் தங்கட பாட்டைமட்டும் பாத்துக் கொள்ளவேண்டியதாக உலகம் மாறிவிட்டது.நல்ல வேளை கேபாப் சாப்பிடாமல் விட்டிருந்தால் கனவில் கெபாப் தான் வந்திருக்கும் இந்த கதைவந்திருக்காது.

பல வருடங்களுக்கு முன் நாண் லண்டனுக்கு வந்து முதல் நாள் எனது நண்பன் தான் வேலைக்கு போகவேண்டும் என்பதால் என்னை இல்பேட் சொப்பிங் சென்ரரில் இறக்கிவிட்டான் நானும் மருமக்களுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் ஜேர்சி வாங்க ஒரு ஸ்போட்ஸ் கடைக்குள் புகுந்தேன்.ஜேர்சியை வாங்கிவிட்டு கிரடிட் காட்டில் பேய் பண்ண வலற்றை மேசையில் வைத்ததும் தான் காணும் அடுத்த நிமிடமே மாயமாகிவிட்டது.பணம் உட்பட எனது கனேடிய பத்திரங்கள் அனைத்தும் அதற்குள்தான்.நண்பனுக்கு போன் பண்ண நண்பன் சொன்னான் நான் உனக்கு கள்வர் கவனம் என சொல்ல நினைத்து முந்தி இருந்தனி தானே என விட்டுவிட்டதாக.அனால் இப்போ யுரோப்பிய யுனியன் ஒன்றானபின் லண்டனில் கள்வர் பெரும் தொல்லை என்றுசொன்னான்.

கனடாவில் வலட்டைவிட்டுவிட்டால் அடுத்தநாளும் போய் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரூமேனிய நாட்டவர்களில் கள்ள வழியில் பணம் சம்பாதிப்பவர்களே அதிகம்.

ரதி குறிப்பிட்ட பெண்ணின் அடையாளத்தை வைத்துப் பார்க்கும் போது, அவர்களில் சிலரை சிகைன என்றும் இங்கு அழைப்பார்கள்.

அவர்கள் நாடோடிகள். (குறவர் என்னும் பதம் பொருந்துமா தெரியவில்லை) ஈழத்தமிழர் நாமே.... இப்போ குறவர் தான்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிலாந்தில் இருக்கும் போது பிம்ளிக்கோ புகையிரத நிலையத்தில் ஒரு கற்பிணிப் பெண் என்னைப் பார்த்து காசு கேட்டார். ஒரு பவுண்ஸ் காசினை அவருக்கு வழங்கினேன். இரண்டு கிழமைக்குப் பிறகு மீண்டும் அப்பெண்ணைக் கண்டேன். அவரின் வயிற்றைப் பார்த்தேன். பிள்ளை பிறந்து விட்டது என நினைத்தேன். காசு கேட்டதினால் ஒரு பவுண்ஸ் அன்றும் கொடுத்தேன். 4, 5 நாட்களுக்குப் பின்பு அதே புகையிரத நிலையத்தில் மீண்டும் அப்பெண்ணைக் கண்டேன். 9 மாதக் கற்ப்பிணிபோலக் காணப்பட்டார். காசு கேட்டார். தெரியாது போல நான் சென்று விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் ஒருவன் வந்த புதிதில் தெற்கு லண்டனில் இருந்து கிழக்கு லண்டனுக்குப் போகும்போது "மொனுயுமென்ற்" சுரங்க ரயில் நிலையத்தில் ரியூப் மாறும்போது ஒரு இளம் வெள்ளைக்காரப் பெண் இரண்டு வயது மதிக்கக்தக்க அழகிய குழந்தையுடன் இருந்து பண உதவி (நாகரிகமான வழியில் பிச்சை எடுத்தல்) கேட்டாளாம். இவன் முதலில் தன்னிடமிருந்த சில்லறைக்காசுகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அப்பால் போனவன், மனம் இளகித் திரும்ப வந்து இருந்த தாள்க் காசுகளையும் கொடுத்துவிட்டான் (குழந்தையோடு பிச்சை எடுப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் மனம் இரங்காமல் விடும்). அடுத்த நாள் கிழக்கு லண்டனில் இருந்து திரும்பிவருவதற்கு கையில் காசில்லாமல் அவன் அவதிப்பட்டது தனிக்கதை!

  • கருத்துக்கள உறவுகள்

கேபாப் கடையில கேபாப் வாங்கி சாப்பிடலாம் என தீர்மானித்தேன் [ஒரு கிழமையாய் கேபாப் சாப்பிட ஆசையாய் இருந்தது]

மெலிந்த தேகத்தை விரும்புவர்கள் கொழுப்பு அதிகமுள்ள கேபாப் போன்ற உணவுகளை விரும்புவதில்லை. நீங்களும் ரதி போன்று அழகான மெலிந்த தோற்றத்தை வைத்திருக்கவிரும்புவர் என்று நினைத்தேன். ஆனால் கேபாப் அடிக்கடி சாப்பிடுபவர் போலிருக்கின்றதே! :wub:

என்ன வெகுளித்தனமாக இருக்கின்றான் என்று யாரோ சொல்லுவது காதில் கேட்கின்றது.

:D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வெகுளித்தனமாக இருக்கின்றான் என்று யாரோ சொல்லுவது காதில் கேட்கின்றது.

:D

அட.. இந்த ஸ்பொய்லர் விளையாட்டை இண்டைக்குத்தான் கவனிச்சன்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெலிந்த தேகத்தை விரும்புவர்கள் கொழுப்பு அதிகமுள்ள கேபாப் போன்ற உணவுகளை விரும்புவதில்லை. நீங்களும் ரதி போன்று அழகான மெலிந்த தோற்றத்தை வைத்திருக்கவிரும்புவர் என்று நினைத்தேன். ஆனால் கேபாப் அடிக்கடி சாப்பிடுபவர் போலிருக்கின்றதே! :wub:

என்ன வெகுளித்தனமாக இருக்கின்றான் என்று யாரோ சொல்லுவது காதில் கேட்கின்றது.

:D

ரதி என்ட பெயர் உடையவர்கள் எல்லாம் மெலிந்தவர்களாகவும்,அழகாகவும் இருக்க வேண்டும் என்டு இல்லைத் தானே...இப்ப விரதம் பிடிப்பதால் மனத்தை அடக்கி இருக்கிறேன் :lol:

அதெல்லாம் ச‌ரி, கேபாப் எப்பிடி எண்டு சொல்ல‌லையே.. அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை என்று தெரியாம‌ல் க‌ருத்து சொல்வ‌து பொருத்த‌மில்லை. இருந்தாலும், ஒரு ம‌னித‌ன் சுக‌போக‌ வாழ்க்கை த‌விர்ந்த‌ உண‌வு போன்ற‌ அடிப்ப‌டை தேவைக்கு உழைக்க‌ முடியாம‌ல் இருப்ப‌தை ஏற்றுக்கொள்ள‌ முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒரு நேர்த்திகடன் வைக்கிற நல்லம் போல கிடக்கு. :wub:

சிலவேளை நேர்த்திக்கடன் குடுக்கிற காசு களவு போகிற காசைவிட அதிகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட.. இந்த ஸ்பொய்லர் விளையாட்டை இண்டைக்குத்தான் கவனிச்சன்..! :lol:

:)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி என்ட பெயர் உடையவர்கள் எல்லாம் மெலிந்தவர்களாகவும்,அழகாகவும் இருக்க வேண்டும் என்டு இல்லைத் தானே...இப்ப விரதம் பிடிப்பதால் மனத்தை அடக்கி இருக்கிறேன் :lol:

மன்மதன் என்று நினைப்பவர்களும் அழகில்லாமல் இருப்பதில் தவறில்லைத்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.