Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.

சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலகம் தமிழ் மக்களுடன் நிற்கும் என்பது உறுதியானது. பிரித்தானியா சம்பவம் மட்டுமல்லாது, அண்மையில் வெளியாகிய விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணங்களும் அதனை தான் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ளது. அதனை நாம் தவறவிட முடியாது. தமது உயிர்களை கொடுத்து போராளிகளும், தமிழ் மக்களும் இந்த வழியை எமக்கு திறந்துவிட்டுள்ளனர். அதனை நாம் தவறவிட முடியாது.

அண்மையில் பிரித்தானியா ஊடகங்கள் வெளியிட்ட காணொளி ஆணவத்தில் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரமேசுக்கு கொடுக்கப்பட்ட பணியும் அது தான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப்புலிகள் வகுத்த உத்திகள் என்பது சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்கவைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.

1987 களில் சிறீலங்காவுக்குள் வந்திறங்கிய இந்திய அமைதிகாக்கும் படையினர் காந்தியின் விம்பங்களை முகமூடிகளாக அணிந்து, அமைதியின் சின்னங்களாக தம்மை காண்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் ஜனநாய செயற்பாடுகள் என்ன? ஜனநாயக போராட்டங்களுக்கு காந்தி தேசம் கொடுக்கும் மதிப்பு என்ன? காந்தீயம் தற்போதும் இந்தியாவில் உயிர்வாழ்கின்றதா? என்பதற்கான விடைகளை தியாகதீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் வெளிக்கொண்டுவந்திருந்தது.

நீர் கூட அருந்தாது போரடிய திலீபன் துடி துடித்து உயிரைத்துறந்து இந்தியாவின் ஜனநாயக முகமூடியை தகர்த்திருந்தார். அன்று திலீபன் மேற்கொண்ட முதல் தகர்ப்புத் தான் பின்னர் விடுதலைப்புலிகளின் போரை இலகுவாக்கியதுடன், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளவும் வைத்திருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப்போரை நகர்த்துவதில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தியாகங்களில் பல அற்புதங்கள் உண்டு. உலகில் யாரும் அதற்கு இணையாக முடியாது. நல்லூர் முதல் ஜெனீவா வரை அதன் சுவடுகளை நாம் காணலாம். அது வரலாறும் கூட.

பிரிகேடியர்; ரமேஸ் இன் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.

கடந்த வருடம் மே 18 ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இளநிலை தளபதிகள் இருவர் தமது இறுதிநேர தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்தனர். அந்த அழைப்பின் முடிவில் அவர்கள் கூறியது இது தான். “எமக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள், அதேபோலவே போராட்டத்தை தொடருங்கள்” “நாம் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவ திட்டமிட்டுள்ளோம்” “புலிகளின் தாயகம் தமிழீழ தாயகம்” இந்த வசனங்களுக்கு பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இன்று வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை, எனவே அவர்கள் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இதனை ஏன் இங்கு தெரிவிக்கிறேன் என்றால், அதேபோல தன்னிடம் இருந்த சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர்; ரமேஸ் இற்கு பத்து நொடிகள் போதுமானது.

எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு உதவியாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு பா நடேசனும், சமாதானச் செயலாகப் பணிப்பாளர் திரு சி புலித்தேவனும் அனுப்பப்பட்டிருந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு பொறுப்பாக சென்றவர்களும், காயமடைந்த போராளிகளும், சரணடைந்த ஏனைய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கொண்டுவரும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் கவனத்திற்கும் சரணடையும் நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டன. ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னாவிடமும் அது தெரிவிக்கப்பட்டு, பசில் ராஜபக்சா ஊடாக சரணடையும் நடைமுறைகள் கேட்டறியப்பட்டன.

தமிழ்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரணடையும் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின், குறிப்பாக மேற்குலகத்தின் தூதரகங்களுக்கும் அவை தெரியப்படுத்தப்பட்டன. பிரித்தானியாவில் உள்ள த ரைம்ஸ் நாளேட்டின் ஊடகவிலாளருக்கும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின்னர் தான் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளும், காயமடைந்த போராளிகளும் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர், திரு பா நடேசனும், அவரின் மனைவியும், சி. புலித்தேவனும் சரணடையும்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tamil-Tiger-graves-420×0பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிவளைத்து நின்ற, 53 ஆவது படையணி, 59 ஆவது படையணி, 55 ஆவது படையணி, நடவடிக்கை படையணி எட்டு உட்பட பல சிறப்பு படையணி பிரிவுகளும் தம்மிடம் நாற்புறமும் சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் கோரமாக படுகொலை செய்தனர்.

நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப்போர் எனவும், அதில் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்வுகூறியிருந்தனர்.

ஆனால் அவர்களின் கணிப்புக்கள் இது தான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை. எனினும் தமது கணிப்புக்களை உறுதிப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையாக வெளி உலகிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர்.

சிறீலங்கா அரசிடம் சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தனது மரணத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பிரிகேடியர்; ரமேஸ். அவரின் தியாகமும் திலீபனின் தியாகத்தை போன்றதே.

ஆனால் தனக்கு மிகவும் அவமானமானதும், கோரமானதுமான மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்தும், என்ன நோக்கத்திற்காக பிரிகேடியர் ரமேஸ் சரணடைந்து மரணத்தை தழுவினாரோ அந்த நோகத்தை நிறைவேற்றும் முதல் அடியை பிரித்தானியா தமிழ் மக்கள் எடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கான ஆதரவுகளை உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

உரிய நேரத்தில் இந்த ஆதாரங்களை வெளியிட்ட உலகத்தமிழர் பேரவை, பிரித்தானியா தமிழ் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்த பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கிய பிரித்தானியா ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதே எம்முன் தற்போதுள்ள முதல் பணி என்பதுடன், அதற்கான தடைக்கற்களும் அகற்றப்பட வேண்டும்.

http://www.puthinamnews.com/?p=19040

தமிழ் பத்திரிகை கட்டுரையாளர்கள் பலர் ஆதாரமில்லாத கற்பனைகளை தயக்கமில்லாது எழுதி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களால்.. துரோகிகளால்.. கொல்லப்படலாம்.. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற தடங்களை அழிக்க முடியாது.

இது சேகுவராவில் இருந்து இன்று வரை நிஜமே. என்றும் நிஜமே..!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலகம் தமிழ் மக்களுடன் நிற்கும் என்பது உறுதியானது. பிரித்தானியா சம்பவம் மட்டுமல்லாது, அண்மையில் வெளியாகிய விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணங்களும் அதனை தான் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் அதனை வலுப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ளது. அதனை நாம் தவறவிட முடியாது. தமது உயிர்களை கொடுத்து போராளிகளும், தமிழ் மக்களும் இந்த வழியை எமக்கு திறந்துவிட்டுள்ளனர். அதனை நாம் தவறவிட முடியாது.

அன்பான உறவுகளே,

இந்த மின்னஞ்சல்

உங்களுக்கு அல்ல !

இது,

ஆலோசணைக்குழுவிற்கு கோரிக்கையை

அனுப்ப நினைத்தவர்கள்

அனுப்ப மறந்தவர்கள்

அனுப்பத்தான் வேண்டுமா என இன்னும் வாதிட்டுக்கொள்வோர்கள்

அப்படியா ? அது என்ன என ஆச்சரியப்படுபவர்கள்

என்போருக்கு ஒரு நினைவுபடுத்தும் அஞ்சல் !

எம் உறவுகள்

கொடூரமாக கொன்று குவிக்கப்பட்தை அறிந்தும்

இன்றும் சொல்லொனாத்துயரங்களை அனுபவிப்பதை அறிந்தும்

ஓன்றும் செய்யாதிருப்பது

அவர்களை மீண்டும் ஒரு முறை கொல்வதற்கு சமன்!

மீண்டும்

இந்த மின்னஞ்சல்

உங்களுக்கு அல்ல !

நீங்கள் மின்னஞ்சலை எப்போதோ அனுப்பியவர்கள்

அது மட்டுமல்லாது இன்றும் மற்றையவர்களை எழுத தூண்டுபவர்கள், உதவுபவர்கள்

இது உங்களுக்கு அல்ல !

அனுப்பும் முடிவுத்திகதி

இன்று – டிசம்பர் 15 2010

மேலதிக தகவல்: http://www.cwvhr.org/unsubmission

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆகச் சரணடைதல் நாடத்தின் சூத்திரதாரி தலைவர்தான் என்கிறீர்கள். தாம் சரணடைந்தால் தம்மக்கு என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்து தலைவர் பன்னீராயிரம் போராளிகளையும் சரணடையச் சொன்னார் என்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டது கூட ஒரு திட்டமிட்ட "சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்தல்" சம்பவம் தான் என்கிறீர்கள். சிங்கலத்தின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசத்துக்குத் தோலுரித்துக் காட்டுவதற்காக மொத்தப் போராட்டத்தையும், அதனோடு 12,000 போராளிகளையும் தலைவர் காவு கொடுத்தார் என்கிறீர்கள். கடந்த 30 வருடங்களாக சிங்களம் எங்கள் மீது நடத்தி வந்த இனக்கொலையக் கண்டும் பார்த்தும் வாளாவிருந்த சர்வதேசம் இந்தப் போராளிகளின் கொலைகளைக் கண்ட பின்னர் ஓடிவந்து உதவும் என்று தலைவர் கருதினார் என்கிறீர்கள். ஆகச் சிங்களவர்களின் முகத்தை தோலுரித்துக்காட்டுவதற்காக தலைவர் போராட்டத்தையும் தமிழர்களின் நம்பிக்கையையும் காவுகொடுத்தார் என்கிறீர்கள்.

12,000 போராளிகளும் இன்று கும்பல் கும்பலாகக் கொலைக்களங்களில் கொல்லப்படுவதும் தலைவரால் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிறீர்களா அல்லது அப்படி நடக்கும் என்று தெரியாமல் தலைவர் மடைத்தனமாக முடிவெடுத்தார் என்கிறீர்களா?? இறுதிவரை கனரக ஆயுதங்கள் எல்லாம் இருந்தும் தலைவர் போராளிகளைச் சரணடையச் சொன்னது ஒரு சாத்வீகவழிப் போராட்டம்தான் என்கிறீர்களா??

சரணடைவது புலிகளின் மரபிற்கே இழுக்கென்பது எல்லோருக்கும் தெரியும். கழுத்தில் சயனைட் கட்டியிருப்பது இயக்க ரகசியங்கள் எதிரியிடம் சிக்காமலிருக்கவே என்பதும் தெரியும். அதெல்லாம் தெரிந்தும் 12,000 போராளிகளும் சரணடைய வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைச் சரியென்று நீங்கள் புதுக் காரணம் கண்டுபிடித்து வாதாட வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் முன்னர் ஒருமுறை உங்கள் ராணுவ ஆய்வொன்றில் ந்நிர்கொழும்பு வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புலிகளின் அணியொன்று சுட்டதில்த்தான் சிங்கள வான்படையின் விமானம் வீழ்ந்து நொருங்கியதென்று அலசியிருந்தீர்கள். ஆனால் நான் நம்பவில்லை. அதுபோல இப்போது சரணடைதல் நாடகத்தின் சூத்திரதாரி தலைவர்தான் என்று சொல்ல வருகிறீர்கள். அதையும் நான் அப்படியே எண்ணிக்கொள்கிறேன்.

ஆகச் சரணடைதல் நாடத்தின் சூத்திரதாரி தலைவர்தான் என்கிறீர்கள். தாம் சரணடைந்தால் தம்மக்கு என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்து தலைவர் பன்னீராயிரம் போராளிகளையும் சரணடையச் சொன்னார் என்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டது கூட ஒரு திட்டமிட்ட "சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்தல்" சம்பவம் தான் என்கிறீர்கள். சிங்கலத்தின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசத்துக்குத் தோலுரித்துக் காட்டுவதற்காக மொத்தப் போராட்டத்தையும், அதனோடு 12,000 போராளிகளையும் தலைவர் காவு கொடுத்தார் என்கிறீர்கள். கடந்த 30 வருடங்களாக சிங்களம் எங்கள் மீது நடத்தி வந்த இனக்கொலையக் கண்டும் பார்த்தும் வாளாவிருந்த சர்வதேசம் இந்தப் போராளிகளின் கொலைகளைக் கண்ட பின்னர் ஓடிவந்து உதவும் என்று தலைவர் கருதினார் என்கிறீர்கள். ஆகச் சிங்களவர்களின் முகத்தை தோலுரித்துக்காட்டுவதற்காக தலைவர் போராட்டத்தையும் தமிழர்களின் நம்பிக்கையையும் காவுகொடுத்தார் என்கிறீர்கள்.

12,000 போராளிகளும் இன்று கும்பல் கும்பலாகக் கொலைக்களங்களில் கொல்லப்படுவதும் தலைவரால் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிறீர்களா அல்லது அப்படி நடக்கும் என்று தெரியாமல் தலைவர் மடைத்தனமாக முடிவெடுத்தார் என்கிறீர்களா?? இறுதிவரை கனரக ஆயுதங்கள் எல்லாம் இருந்தும் தலைவர் போராளிகளைச் சரணடையச் சொன்னது ஒரு சாத்வீகவழிப் போராட்டம்தான் என்கிறீர்களா??

சரணடைவது புலிகளின் மரபிற்கே இழுக்கென்பது எல்லோருக்கும் தெரியும். கழுத்தில் சயனைட் கட்டியிருப்பது இயக்க ரகசியங்கள் எதிரியிடம் சிக்காமலிருக்கவே என்பதும் தெரியும். அதெல்லாம் தெரிந்தும் 12,000 போராளிகளும் சரணடைய வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைச் சரியென்று நீங்கள் புதுக் காரணம் கண்டுபிடித்து வாதாட வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் முன்னர் ஒருமுறை உங்கள் ராணுவ ஆய்வொன்றில் ந்நிர்கொழும்பு வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புலிகளின் அணியொன்று சுட்டதில்த்தான் சிங்கள வான்படையின் விமானம் வீழ்ந்து நொருங்கியதென்று அலசியிருந்தீர்கள். ஆனால் நான் நம்பவில்லை. அதுபோல இப்போது சரணடைதல் நாடகத்தின் சூத்திரதாரி தலைவர்தான் என்று சொல்ல வருகிறீர்கள். அதையும் நான் அப்படியே எண்ணிக்கொள்கிறேன்.

இந்த ஆய்வின் மைந்தர்கள் பிரிகேடியர் ரமேஸ் எனவும் பட்டமும் கொடுத்துள்ளார்கள். அவர் கேணல் ரமேஸ்... கேணல் ரமேஸ் வீரச்சாவு பற்றியோ அல்லது அவருக்கு பிரிகேடியர் தரம் வழங்கபட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவிக்கவில்லையே..

அடுத்ததாக சரண்டையுமாறு யார் கூறியது என்று கேட்டால் இன்றுவரை அங்கு இருக்கின்ர போராளிகள்.... எதுவித பதிலும் இல்லை. அதாவது சரண்டைவோம் என தம் பாட்டில் சில இடைமட்ட போராளிகள் கூரியுள்ளார்கள்.. சிலர் போராளிகளை வாருங்கள் போவோம் என பெற்றோர்களே கூட்டிக்கொண்டு போயுள்ளார்கள்.. சிலர் தாமாகவே முடிவெடுத்து போயுள்ளனர்... ஒரு சிலருக்கு தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் உங்களை சரண்டையட்டாம் என வதந்திகள் பரப்பபட்டுள்ளன.

இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் போராளிகளால் கூறப்படுகின்றன... முள்ளிவாய்க்காலிற்குள் எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. சதிகளும் தான் அவை என்றோ ஒரு நாள் வெளிவரும் அதுவரை ஆய்வுகள் செய்யாமல் இருப்பதே நல்லது.

மாண்புமிகு கட்டுரையாளர் வேல்ஸ் அருஷ் என்பவர்தான் பிரிகேடியர் பட்டத்தை ரமேசிற்கு வழங்கியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் தலைமை அவருக்கு கேணல் பட்டம்தான் வழங்கியது என்றே நானும் அறிந்திருந்தேன்.

இந்த ஆய்வாளர்தான் ஒருமுறை எழுதுமட்டுவாளில ஆமி கால்வச்சால் அப்படியே சுட்டு எரிஞ்சுபோடுவாங்கள் எண்டு ஆமி முன்னேறிவரக்க எழுதினவர்.

எல்லாரையும் மேண்டலாக்கொனும் என்றே ஆய்வு கட்டுரை எழுதுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள். தாங்கள் முன்பு எழுதிய இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை ஒரு தரம் ஆராய்ந்து பார்த்தால் புண்ணியமாப்போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

பிரிகேடியர்; ரமேஸ் இன் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.

எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையில் எனக்கு தெரிவது இதுதான்

இதுதான் உண்மை

ரமேஸ் அவர்களின் சரணடைவு எல்லோராலாலும்சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான்.

அவரது இந்த தியாகத்தையும் அவர் மூலம் இன்று வெளிவந்திருக்கும் உண்மைகளையும் நாம் பயன்படுத்தவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ரமேசினை சிறிலங்கா அரசு என்ன, என்ன சித்திரவதை செய்து கொலை செய்தததோ தெரியாது. ஆனால், மேற்படி கட்டுரையாளர் ரமேசினை சித்திரவதைக்கு மேலாக கேவலப்படுத்தியதோடு மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக வழங்கப்படாத பதவி நிலையினை தாமே வழங்கி கட்டுரையினை அழகுபடுத்தியிருக்கின்றார்.

அதாவது, தமிழ்த் தேசிய மக்குகளும் கட்டுரை ஆய்கின்றவர்களும் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் செய்துவருகின்றனர் என்பதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று என்பதனை அனைவரும் புரிந்துகொண்டால் சரி.

Edited by nirmalan

இங்கை பாருடா இன்னுமா ஊர் இவனை நம்புது? ^_^

இந்த கட்டுரையில் எனக்கு தெரிவது இதுதான்

இதுதான் உண்மை

ரமேஸ் அவர்களின் சரணடைவு எல்லோராலாலும்சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான்.

அவரது இந்த தியாகத்தையும் அவர் மூலம் இன்று வெளிவந்திருக்கும் உண்மைகளையும் நாம் பயன்படுத்தவேண்டும்

அதாவது பலியாடு போல? ஏற்கனவே இறுதி நேரம் பினத்தை வைத்து புலிகள் அரசியல் செய்தார்கள் என்று குற்ற சாட்டு இருக்கு இதுக்க நாங்களாவே வாக்கு மூலம் கொடுக்கிறதா?

இப்படியான கட்டுரைகள் நல்லதுக்கு இல்லை.

சிங்களவனுக்கு எடுத்து கொடுக்கிறார்கள். சரண்டைதலை புலிகள் ஒரு ஆயுதமாக பாவித்தார்கள் என்பது மகிந்தாவுக்கு நல்லதாக இருக்கும்,

அருள்ஸ் புலிகளிடம் இருக்கும் ஆயுத விபரம் சொன்ன ஆள் ஆச்சே :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் நின்ற போராளிகளை பற்றி பேசுவதற்கோ விமர்சனம் செய்வதற்கோ நமக்கு அருகதை இருக்கின்றதா என்று புலத்திலுள்ள நாம் அனைவரும் முதலில் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அதாவது, தமிழ்த் தேசிய மக்குகளும் கட்டுரை ஆய்கின்றவர்களும் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் செய்துவருகின்றனர் என்பதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று என்பதனை அனைவரும் புரிந்துகொண்டால் சரி.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று புலிகள் இருக்கும் வரை சொல்லி கொண்டு இருந்தார்கள்( உண்மையும் கூட) ஆனால் அப்போது இலங்கையும் சரி உலக நடுகளும் அதை செவி சாய்க்கவில்லை அவர்கள் புலிகளால் தான் இலங்கையில் பிரச்சனை அவர்களோடு பேசியாவது சரி இல்லை சண்டை பிடித்து அழித்தாவது சரி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார்கள் அதற்கு தான் உலகமும் ஆதரவு கொடுத்தது ஆனால் இப்ப புலிகள் அமைப்புக்கு யார் உண்மையான பிரதிநிதி என்பது கூட சொல்ல ஆள் இல்லை.

களத்தில் நின்ற போராளிகளை பற்றி பேசுவதற்கோ விமர்சனம் செய்வதற்கோ நமக்கு அருகதை இருக்கின்றதா என்று புலத்திலுள்ள நாம் அனைவரும் முதலில் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அண்ண விடியல் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தநீங்கள்.தமிழ் நாட்டில இருக்கிறியள்.மீனகம் இணையத்தளத்தை நடத்துறியள். ஏனண்ண உங்களை புலம்பெயர்ந்தாக்களோட சேர்க்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை பாருடா இன்னுமா ஊர் இவனை நம்புது? ^_^

அந்த கட்டுரையாளரை நம்புவதாக நான் எங்காவது எழுதினேனா...?

ரமேஸ் அண்ணர் சரணடைந்தது உண்மைதான்

அதற்கு காரணம் என்ன என்பதும் உண்மைதான்.

இதைத்தான் ஒப்புக்கொண்டேன். அது சிங்கள அரசுக்கு சாதகமானது என்ற வாதம் பொய்யானது. சர்வதேசம் இதற்கு பதில் சொல்லக்கடமைப்பட்டது. அதை நாம் செய்யவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

நன்றி

அந்த கட்டுரையாளரை நம்புவதாக நான் எங்காவது எழுதினேனா...?

ரமேஸ் அண்ணர் சரணடைந்தது உண்மைதான்

அதற்கு காரணம் என்ன என்பதும் உண்மைதான்.

இதைத்தான் ஒப்புக்கொண்டேன். அது சிங்கள அரசுக்கு சாதகமானது என்ற வாதம் பொய்யானது. சர்வதேசம் இதற்கு பதில் சொல்லக்கடமைப்பட்டது. அதை நாம் செய்யவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

நன்றி

அந்த கட்டுரையை இங்கை கொண்டு வந்து போட்டு அதுக்கு நானும் எலலரும் 4 கருத்து சொன்னா அப்படி தானே நினைபார்கள்? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

^_^ தமிழ்நெட்டில் வந்த செய்திகளின்படி ரமேஷ் அண்ணா சரணடையவில்லை. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சரணடைந்தவர் புலிகளின் காவல்த்துறைப் பொருப்பாளர் ரமேஷ். கேணல் ரமேஷ் அண்ணா மக்களுடன் மக்களாக வெளியேறியபோது ராணுவத்தால் இனங்காணப்பட்டு அழைத்துசெல்லப்பட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது. பின்னர் ராணுவ இணையத்தளத்தில் வந்த செய்திகளிலும் படங்களிலும் கேணல் ரமேஷ் அண்ணா கொல்லப்பட்டதைக் காட்டியதால், அவர்கள் அவரைச் சித்திரவதை செய்தபின்னர் கொன்றிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

டி.பி.எஸ். ஜெயராஜும் முன்னர் இதேபோல கேணல் ரமேஷ் அண்ணாவையும், காவல்த்துறை ரமேஷையும் ஒன்றென்று குளப்பிக் கற்பனைக் கட்டுரை வரைந்ததும், பின்னர் தகவல் பொய்யென்று தெரிந்ததும், புலிகள் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் என்று அழுது வடிந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரூஸ் பழையபடி பூவிசிறுகளை விட ஆயத்தமாக வருகின்றார்.. பராக். பராக். பராக்.

அரூஸ் பழையபடி பூவிசிறுகளை விட ஆயத்தமாக வருகின்றார்.. பராக். பராக். பராக்.

பழைய கட்டுரைகளை எல்லாரும் மறந்து இருப்பார்கள் என்று நினைப்பு போல?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகவலை நான் திரிவுபடுத்தி தெரிவிக்க விரும்பவில்லை. ரமேஸ் பிற்காலத்தில் பதவி இறக்கப்பட்டு எந்தவித பொறுப்புக்களும் கொடுக்கப்படாது சாதாரண நிலைப் போராளியாகவே இருந்ததாக அவருக்குக்கீழ் பணிபுரிந்த போராளிகள் தெரிவித்தனர்.

அதாவது, இவரும் சாதாரண நிலைப் போராளியாகவே களமாடியதாகவும் பின்னர் இறுதி நேரத்தில் மக்களோடு மக்களாக அதாவது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோருக்கு முன்னதாகவே இவர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்துவிட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இங்கே இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகவலை நான் திரிவுபடுத்தி தெரிவிக்க விரும்பவில்லை. ரமேஸ் பிற்காலத்தில் பதவி இறக்கப்பட்டு எந்தவித பொறுப்புக்களும் கொடுக்கப்படாது சாதாரண நிலைப் போராளியாகவே இருந்ததாக அவருக்குக்கீழ் பணிபுரிந்த போராளிகள் தெரிவித்தனர்.

அதாவது, இவரும் சாதாரண நிலைப் போராளியாகவே களமாடியதாகவும் பின்னர் இறுதி நேரத்தில் மக்களோடு மக்களாக அதாவது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோருக்கு முன்னதாகவே இவர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்துவிட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

என்ன ஒரு ஆளமான கருத்து... இந்த தகவலை யார் சொன்னவை...??? சிங்கள இராணுவத்துக்கு வேலை செய்யிற KP அண்ணையும் அவரின் தோழர்களுமா....?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்கும் என்று கூறுவார்கள். அது தயாவுக்கு என்னவோ 100 வீதம் சரியாகவே பொருந்துகின்றது.

எதனை எடுத்தாலும் தேசிய மக்குகளுக்கு கே.பி.யின் ஆளோ, றோவின் ஆளோ, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் ஆளோ என்று சந்தேகிப்பதே வேலையாகிப் போய்விட்டதே தவிர ஒருவனின் கருத்தில் உள்ள உண்மைகளை மற்றவர்கள் ஊடாக சரி பார்க்கின்ற பழக்கம் எங்கே இருக்கின்றது?

இப்படியேதான் இருக்கப் போகின்றீர்கள் என்றால்- தமிழினத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்று தந்தை செல்வா கூறியது போல இனி அந்த ஆண்டவன் விரும்பினால் கூட காப்பாற்ற முடியாது.

ஏனெனில், எம்முள்ளே இருக்கக்கூடிய சந்தேகப் பேய்களே எம்மை அடிமைகளாக மட்டுமன்றி ஒரு வட்டத்தினை விட்டு வெளிவட்டத்தினை பார்க்காமலேயே இவ்வாறே அறிவற்ற சமூகமே இருந்து அழிய வேண்டியது.

அப்போதும் கூறிக்கொண்டு இருங்கள் பிரபாகரன் வருவார், தமிழீழத்தினை மீட்டுத் தருவார் என்று.

40 வருடம் கழிந்தும் பிரபாகரன் வருவார் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறிவிடாதீர்கள். ஏனெனில் அப்போது 90 வயதுக்கு மேல் ஆகிவிடும்.

உணர்ச்சிவசப்பட முன்னர் வரலாறுகளையும் தகவல்களையும் சரிபார்த்து எழுதுங்கள்.

எத்தனையோ வருடகாலம் இருந்த நடேசன் அவர்களுக்கு ஒரு தரநிலை கொடுக்கப்படவில்லை. அரசியல்துறைப் போராளியாக இருந்த புலித்தேவனுக்கு கொடுக்கப்படவில்லை.

இப்படி இருக்க, போர்க்குற்ற ஆவணம் கிடைத்துவிட்டது என்பதற்காக ரமேஸ் அவர்களுக்கு நீங்களாக எப்படி தரநிலை கொடுத்தீர்கள்? இதற்கு யாராவது பதில் கூறினால் நல்லது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளீன் தளபதிகள் ச‌ர‌ணடைந்து ஆமியிட‌ம் சித்திர‌வதைப்பட்டு செத்திருக்க கூடாது என்ட‌ நல் எண்ணத்தில் நிர்மலன் ர‌மேஸ் அண்ணாவை பதவி இறக்கி விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ரமேஸ் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்திருக்காது சாவடைந்திருக்கலாம்.

ஏனெனில், அந்த வீடியோவைப் பார்க்கின்றபோது தமிழனாக எனது மனம் வேதனையடைந்தது. கம்பீரமாக நின்ற தளபதி இவ்வாறு கெஞ்சிக்கொண்டு நிற்பது நன்றாகவா உங்களுக்குப் படுகின்றது?

அதனைவிட சோகம் இந்த ஆய்வாளர்கள் அவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவது. இது சிறிலங்காப் படையினர் படுகொலை செய்ததனை விட கேவலமான செயலாகவே எனக்கு படுகின்றது.

எங்கள் கவலைகளை, உண்மைகளை தெரிவிக்க ஆவனவற்றை செய்யவேண்டும்.

எங்கள் சோகங்களை அழுது தீர்க்க முடியாது, ஆனால் எழுதி தீர்க்க முடியும்!

" ஐ.நா நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிப்பு! "

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.