Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது.

அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொட‌ர்‌ந்து அவ‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌ல் த‌ங்‌கி ‌சி‌‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌‌ர். எ‌னினு‌ம் ‌சி‌கி‌ச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனு‌க்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.

அனுராதா ரமணனு‌க்கு சுதா, சுபா என 2 மகள்கள் உ‌ள்ளன‌ர். இருவரு‌க்கு‌ம் ‌திருமணமா‌கி அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். பேரன், பேத்திகளு‌ம் உள்ளனர். அனுராதா ரமண‌னி‌ன் மறைவு கு‌றி‌த்த தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மக‌ள், த‌ங்களது குடு‌ம்ப‌த்துட‌ன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமண‌னி‌ன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழு‌த்தாள‌ர் வ‌ரிசை‌யி‌ல், பெ‌ண் எழு‌த்தாளராக ‌மிகவு‌ம் ‌பிரபலமானவரு‌ம், நாவ‌ல்க‌ள் எழு‌துவ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையு‌ம், சிறுகதைகளையு‌ம் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழக‌ம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.

தகவல்.வெப்துனியா

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

  • கருத்துக்கள உறவுகள்

ஊப்ஸ்.... நிலாமதியக்கா காலாவதியான செய்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் யாழில் இவருக்கு அஞ்சலி செய்த ஞாபகம் இருக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

திகதியைக் கவனிக்க இல்லைப் போலும் விடுங்கோ..16.05.2010ல் அனுராதா ரமணன் காலமாகி விட்டார்.ரதி நீங்கள் சிரிச்ச படியால் நானும் சிரிக்கிறன் யாழில் மட்டுமார் நாங்கள் சிரிக்கிறதுக்கு திட்டினால் இரண்டு பேருக்கும் பாதி,பாதி சரியோ.. :):)

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் ஒரு பச்சை. (ரதியும் , யாயினியும் பாதி பாதி). :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

நல்ல வேளை சிவப்பு குத்தும் முறை இல்லை இப்ப...அல்லாட்டி, சரியான தகவல் தந்ததுக்காக எனக்கு சிவப்பு குத்தி இருப்பார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முருகா,முருகா இதை எங்க போய் சொல்கிறது ...பக்கதில் சுவரும் இல்லை முட்டிக் கொள்வதற்கு.ஏன் கூ.சா அண்ணா ஊக்குவிப்பு புள்ளி போட்டனீங்கள்...அனுராதா ரமணனின் ஓராண்டு திவசத்தை நினைவுபடுத்தியதற்கா...? :)

ஒரு புள்ளி தந்துட்டு பாதி ஆக்கி விட்ட சுவி அண்ணாவுக்கு மிக்க நன்றிகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முடியல கு.சா அண்ணா உங்களை மாதிரி இன்னும் எத்தனை பேர் யாழில் இருக்காங்களோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

பச்சை குத்தி சிரிக்கப் பண்ணிய குமாரசாமியாருக்கு பச்சை குத்தி என்னை சிரிக்க வைத்ததால், கிருபனுக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஒரு திரியை நான் இது வரைக்கும் பார்க்கல...தொடரட்டும் உங்கள் பணி :D

மன்னிக்க வேண்டுகிறேன்.

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்காக நிலாமதியிற்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

கைய்யா இறப்பு செய்தியை சிரிப்பு செய்தி ஆக்கிய பெருமைக்கு உரியவர்கள் என்றால் நாங்களே தான்...நல்லவேளை கு.சா அண்ணா விருது கொடுக்காமல் பச்சை புள்ளியைப் போட்டு ஊக்குவித்து இருக்கிறார்.. :lol:gold.gif:)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

நான் சீறிப் பாய இல்லை நிழலி அண்ணா.. :)

எழுதிறதுக்கு வேறு ஒன்றும் இல்லையா அதற்காகவே அப்படி எழுதினேன்..நீங்களே அனுமதிக்கும் போது ..இனி நான் ஒன்றுமே சொல்ல இல்லை.. :)

நெல்லையன் மன்னித்துக் கொள்ளுங்கள். :)

Edited by யாயினி

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

இதுக்கு வேற 4 பச்சையா? முடியல.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.