Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் போக்குகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by இரும்பொறை on 19/06/2011 in செய்தி

இலங்கையின் போக்குகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியுடன் இருப்பதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஏமாற்றத்துடனேயே நாடு திரும்பியிருப்பதாகவும் சண்டே டைம்ஸின் பிரஸ்தாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் விஜயத்தின் தோல்வி குறித்து இந்தியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடனான கலந்துரையாடலின் போது இலங்கைப் பிரச்சினை பற்றிய விடயத்தில் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.eelampress.com/2011/06/27139/

  • கருத்துக்கள உறவுகள்

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும்

kanchipuram.jpg

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் விஜயத்தின் தோல்வி குறித்து இந்தியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடனான கலந்துரையாடலின் போது இலங்கைப் பிரச்சினை பற்றிய விடயத்தில் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கருத்தை பிரதமர் வெளிப்படையாக சொல்வதன் மூலம் தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தவே. இந்த செய்தியும் சொல்லப்பட்டுள்ளது தமிழக / ஈழத் தமிழர்களுக்கும் தமிழக அரசுக்குமே.

அதாவது உண்மையில் தமிழ் மக்கள் அழிந்தாலும் அவர்கள் மீது இதுவரை டெல்லிக்கு எந்த அக்கறையும் வரவில்லை, அதேவேளை சீனா கச்சதீவு வரை வந்ததின் பின்பு அழுது பிரயோசனம் இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kanchipuram.jpg

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும்..........

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும்..........

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர நாடக வர ஒரு பிரேரணையை கொண்டுவரலாம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர நாடக வர ஒரு பிரேரணையை கொண்டுவரலாம் :lol:

அதெல்லாத்துக்கும் ஒரு தகுதி வேண்டும்.

ஜனநாயக வேடம் போட்டு தமிழினத்தை அழிக்க முன்னின்று உதவிவரும் இனப்படுகொலையாளர்களை ஐ. நா. சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்ய முடியுமா? இது நடந்தால் ஐ. நா. சபையை பயங்கரவாதிகளின் முகாம் என அழைக்கவேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாத்துக்கும் ஒரு தகுதி வேண்டும்.

யாருக்கு,]?

பிரேரணையை கொண்டுவர இந்தியாவிற்கா?, அல்லது அப்படி ஒரு நிரந்தர நாடாவர இலங்கைக்கா?

ஒன்று யாரும் பிரேரணையை கொண்டுவரலாம், எண்டபடியால் இந்திய ஓகே...இலங்கையும் லேசுபட்டதாய் தெரியவில்லை, அணுக்குண்டு வைத்துள்ள இந்திய சொன்னாலே கேக்கிதுல்லை, ரசியாவும், சீனாவும், மூத்தக்காவாயும், பெரியக்கவாயும் உள்ளார்கள். நான் நினைக்கிறன் இலங்கைக்கு எல்லா தகுதியும் இருக்கு. உலகின் மிகப்பெரிய கொரில்லா படையை வென்று இருக்கிறார்கள், அமெரிகாவலும் ஏலத பயங்கர வாதத்தை முறியத்திருகிறார்கள்..எல்லா விதத்திலும் அந்த பதவி அவர்களுக்கு பொருத்தமானதே.

  • கருத்துக்கள உறவுகள்
“நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ என்று சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுண்டைக்காய் சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர முடியாத வக்கற்றவர்களுக்கு எதுக்கு வல்லரசு ஆசை?
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டைக்காய் சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர முடியாத வக்கற்றவர்களுக்கு எதுக்கு வல்லரசு ஆசை?

ஊருக்ககெல்லாம் சன்டித்தனம் காட்டுபவன் பெண்டாட்டியிடம் மன்டி இடுவதில்லையா அது போலத்தான் இதுவும் :unsure::lol:

அரகர நாராயணா ! சிவ சங்கரா ! ரூப - நிரூப அம்மமா! தாயே....... டெல்கிக்கு வந்த சோதனையோ?

இந்திய கெமிகல் பொம் தமிழர்கள் முதுகின் மேல்த்தான் வெடிக்கும் போலை. சிங்க்களவனைக் கண்டால் "தட்" ஆகி போகிடும்.

"குக்" பண்ண வெளிக்கிட்ட மலையாளத்தானுகளுக்கு எந்த தண்ணீலை தங்களின்ரை பயறு வேகுமெண்டு தெரியாது. கூலிக்கு வைச்ச இத்தாலிக்கு மிளகாய் அரைக்க தக்க தலையலை தெரியாது. இத்தாலி ஒரு இடமும் உறைக்க சாப்பிட்டு இல்லை.

ஆமிகாரனிட்டை ஐயா வேண்டின அடியின்ரை நோ எப்படி அம்மாவிக்கு தெரிஞ்சிருக்கும். ஒரு நாளைக்கு அம்மாவும் பொடியும் தனிய தனிய வந்து சிங்களவனிட்டை வாங்கினால்த்தான் உறைக்கும்.

இது இவன்கள் ஜெயா அம்மையாரை சுத்த விடுகிற நாடகம்.

உவன் (சோழியன்-சிங்) குடும்பி சும்மா ஆடமாட்டான்.

Edited by மல்லையூரான்

மன்மோகன் திருப்தியோடு இருக்கிறாரா? திருப்தியின்றி இருக்கிறாரா? என்பதை உண்மையில் அறிய வேண்டுமானால் அவரது முகத்திலிருக்கும் தாடி மீசையை முதலில் அகற்ற வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலின் போது, உலகத்தின் மனச்சாட்சி முற்றாக மூச்சிழந்து விடவில்லை!

எங்களுக்காகக் கொஞ்சம் முனகியபோது கூட, அதைத் தடுத்து நிறுத்தியது இந்த இந்தியா தான்!

எல்லாம் நான் பார்த்துக் கொள்கின்றேன்! நீங்கள் பேசாமல் இருங்கள் என்று தடுத்து நிறுத்தியவர்கள் இவர்கள் தான்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் கொண்டு வந்த ஒரு பிரேரணையைத் தடுத்து நிறுத்தியதும் இவர்கள் தான்!

அவர்கள் கேட்கிறார்கள் இல்லை என்று சிங்களத்தைக் குறை செல்லும் இந்த வருங்கால வல்லரசு, இன்னும் ஏன் வேட்டி சட்டை அணிந்து திரிகின்றது என்று தான் விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஐச்சச்சோ............. அடுத்தமுறை தூது குழுவை அனுப்பும்போது மகிந்தவுக்கு மறக்காமல் மிட்டாய் வாங்கி கொடுத்துவிடுங்கோ. நீங்கள் இந்த முறை மிட்டாயை மறந்துவிட்டீர்கள்போல் அதுதான் கோபத்தில் அடம்பிடிக்கிறார்.............. உங்களுடைய தூதுகுழுவும் அப்பாவிகள் உங்களைபோலவே அவரை கொஞ்சம் வற்புறுத்தி கேட்டால் அவருடைய மனம் உடைந்துவிடும் என்று அப்படியே வந்திருப்பார்கள்.

ஒண்ணுமே தெரியாத பச்சை குழந்தை கூட்டம். ( இதை தயவு செய்து குழந்தை சோனியாவிற்கு சொல்லிவிடாதீர்கள் மனமுடைந்துவிடும் அந்த குழந்தை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.