Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்

எனது யூசர் நேம் User Name மற்றும் பாஸ்வேட் Password ஆகியவற்றை அனுப்பிவிடவும் எனது ஈ E mail மெயிலுக்கு என்னால் சையின் அவுட் Sign out செய்யமுடிவதில்லை தொடர்ந்து சைன் இன்னில் இருக்கவேண்டியுள்ளது வேறு இடத்துக்கு சென்றால் என்னால் லோக் இன் Login பண்ண முடியுதில்லை தயவு செய்து அனுப்பிவிடவும்.

நன்றி

உடன்பிறவ சகோதரன்

தமிழரசு

Edited by தமிழரசு

  • 1 month later...
  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

செய்திக்களத்தில் சென்றபோது ''you can not reply to this topic'' என்று வருகிறது.

மோகன் அண்ணா அல்லது நிழலி அண்ணா, ஏன் இப்படி வருகிறது என கூறுவீர்களா? அல்லது நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நன்றி

செய்திக்களத்தில் சென்றபோது ''you can not reply to this topic'' என்று வருகிறது.

மோகன் அண்ணா அல்லது நிழலி அண்ணா, ஏன் இப்படி வருகிறது என கூறுவீர்களா? அல்லது நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நன்றி

வணக்கம் கஜன்,

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

நீங்கள் புதிய உறுப்பினராக இருப்பதால் எல்லாப் பகுதியிலும் எழுத முடியாதுள்ளது. அரிச்சுவடிப் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள், விரைவில் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

yarlshot3.jpg

ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..! :)

ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..! :)

திருத்தப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் இப்படி ஏற்பட்டால் சுட்டிக் காட்டுங்கள். நன்றி. :)

வணக்கம் கஜன்,

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

நீங்கள் புதிய உறுப்பினராக இருப்பதால் எல்லாப் பகுதியிலும் எழுத முடியாதுள்ளது. அரிச்சுவடிப் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள், விரைவில் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

மிக்க நன்றி அண்ணா... !

நிர்வாகத்தினரிடம் ஓர் சந்தேகம்:

கருத்துக்களிற்கு சக கருத்தாளர்களினால் வழங்கப்படும் மதிப்புநிலை சம்மந்தமான தற்போதைய புதிய அமைப்புமுறை புரியவில்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு விளங்கப்படுத்துவீர்களா? உண்மையில் எனக்கும் புரியவில்லை. இதனால் நான் இன்னமும் இதை பரீட்சித்து பார்க்கவில்லை.

முன்பு பச்சை, சிவப்பு புள்ளிமுறை கொண்டுவரப்பட்டது. இது நேர், எதிர் புள்ளிகளின் ஒட்டுமொத்த வேறுபாட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த மதிப்புநிலையை தனித்தனி கருத்து மட்டத்திலும் பின்னர் தனியொருவரின் சுயவிபரக்கோவையிலும் மதிப்பு நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தியது.

பின்னர் சிவப்பு புள்ளிகள் நிறுத்தப்பட்டு பச்சை புள்ளிகளின் பயன்பாடு மாத்திரம் காணப்பட்டது.

இப்போது மீண்டும் சிவப்பு, பச்சை அம்புக்குறிகள் காணப்படுகின்றன. அவற்றை அழுத்தினால் தனியொரு கருத்திலும், சுயவிபரக்கோவையிலும் மதிப்புமட்டத்தில் எவ்வாறான மாற்றம் கிடைக்கும் என்று புரியவில்லை.

இதற்கான விளக்கத்தை தாருங்கள்.

இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை.

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நன்றி!

நன்றி கலைஞன் அண்ணா,

இதுவே எனது கருத்துமாகும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் சிகப்பு புள்ளி வழங்கும் முறையை கொண்டு வந்து உள்ளீர்கள்...கருத்துக்களத்தில் ஒருவரது கருத்தை ஆதரித்தால் பச்சையும்,எதிர்த்தால் சிகப்பும் கொடுக்கலாம்[எழுத விருப்பமில்லாமல்,எழுத நேரமில்லாமல்] ஆனால் இங்கு பல பேர் சிகப்பு புள்ளியை துஸ் பிரயோகம் செய்கிறார்கள்...தனிப்பட்ட முறையில் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பழி வாங்க சிகப்பை பயன் படுத்துகிறார்கள்....இந்த சிகப்பு,பச்சை புள்ளிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தான் என் கருத்து ஆகவே இந்த முறையை நீக்க வேண்டும் அல்லது சிகப்பு,பச்சை புள்ளிகளை தனித் தனியாக கணக்கில் எடுக்க வேண்டும்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

சபாஷ் :D :D :icon_idea: சரியான போட்டி.

இதற்கான விளக்கத்தை தாருங்கள்.

இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை.

வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.

நன்றி!

மேலும்

நல்ல முறையில் தொழில்படுவதானால் வாசகர் களுக்கு மட்டும் புள்ளி போடுவதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே உள்ள உறவுகள் ஆக்கபூர்வமான கருத்துகளை மட்டும் எழுத ஊக்க படுத்த வேண்டும்.

மேலும்

நல்ல முறையில் தொழில்படுவதானால் வாசகர் களுக்கு மட்டும் புள்ளி போடுவதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே உள்ள உறவுகள் ஆக்கபூர்வமான கருத்துகளை மட்டும் எழுத ஊக்க படுத்த வேண்டும்.

அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?

புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.

அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........

அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா?

புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம்.

அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........

முடியும். ஆனால் பரவலாக நடை பெறாது. 3 பச்சை புள்ளிகள் மட்டும் என்பதை ஒருசிலர் இன்னொரு பெயரில் வந்து முறியடிக்கிறார்கள் இல்லையா?. 100% திருத்தமானதல்ல. யாழில் பதிந்து கொள்வோர் கூடிய திரிகளை பார்க்கவும் முடிகிறது. பதிந்து வந்தோர் சோம்பேறித்தனமாக பச்சையை குத்திவிட்டு போகாமல் பிடித்திருந்தால் அது எப்படி என்று ஒரு வரி எழுதவைக்கும்.

இல்லையேல் ஆரம்பத்தில் ஒருவருக்கு 10 பச்சைகள் கொடுக்கலாம். 1 பச்சை குத்தும் போது .2 பச்சையை(ஒரு மஞ்சள்) கழிக்கலாம். அதாவது ஒரு பச்சைப் புள்ளியை கொடுக்கும் உறுப்பினர் ஒரு மஞ்சள் புள்ளியை இழப்பர். 50 பச்சைகளின் பின் அவர் தனக்கு பச்சைகள் பெற்றிருக்காவிட்டால் அவரால் பச்சை குத்த முடியாது(புதுப்பெயரில் வரலாம்). அநாவசியமாக பச்சை குத்துபவர் தான் எடுத்த பச்சைகளை விரைவில் இழப்பார். நேரத்தையும் உழைப்பையும் போட்டு பச்சை எடுப்பவர் மற்றவர்களின் கருத்துக்களை அளக்க தகுதி உடையவராகிறார். இதோடு சேர்த்து வாகர்களுக்கு ஒருகருத்துக்கு ஒரு மஞ்சள் புள்ளி கொடுக்கலாம். 5 மஞ்சள் புள்ளிகளைப் பெற்ற உறுப்பினர் அதை ஒரு பச்சை புள்ளியாக மாற்றலாம். ஒரு உறுப்பினர் ஒருகருத்துக்கே 5 பச்சைகள் கொடுத்தாராயின் அந்த கருத்தில் ஒரு பச்சையை இழப்பர். வாசகர் ஒரு மஞ்சள் மட்டும்தான் கொடுக்க முடியும். உறுப்பினர் வேண்டியமட்டும், ஆனால் முழுமையான பச்சைகளாக கொடுக்கலாம்(தன்னிடம் இருப்பதை பொறுத்து).

Edited by மல்லையூரான்

மல்லையூரான்,

யாழ் கருத்துக்களத்தில் கீழ்வரும் மென்பொருளை பயன்படுத்துகின்றார்கள். மென்பொருள் குறியீடுகளை மாற்றி தேவைக்குத்தகுந்தபடி பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், அவ்வளவு தூரம் மினக்கடுவதற்கு மோகன் அவர்களிற்கு நேரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லும்வகையில் மதிப்பீட்டு திட்டத்தை செய்யலாம், ஆனால் அதற்குரிய மென்பொருள் அமைப்பை யார் உருவாக்குவார்கள்?

இங்கு செய்யக்கூடியது மென்பொருள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அமைப்பு செயற்பாடுகளை யாழ் கருத்துக்களத்திற்கு உகந்தவகையில் எப்படி பாவிப்பது என்பதுதான்.

யாழ் கருத்துக்களத்திற்கான கீழுள்ள மென்பொருள் வழங்கும் வழங்குனரின் தளத்திற்கு சென்று இதே மென்பொருளை பயன்படுத்தும் வேறு கருத்துக்களங்கள்மூலம் நாம் கற்றவேண்டிய விடயங்களை அறிந்து அவை பயனுள்ளவையாக இருப்பின் இங்கும் பிரயோகம் செய்யப்படுவதற்கு சிபாரிசு செய்யலாம்.

http://community.invisionpower.com/

மதிப்பீட்டு திட்டம் சம்மந்தமாக இங்கு தேடல்செய்து இவற்றின்மூலமும் இந்தமென்பொருள் மதிப்பீட்டுதிட்டம் சம்மந்தமாக அறிந்து பயனுள்ள சிபாரிசுகளை யாழ் நிர்வாகத்திடம் முன்வைக்கலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம்

எம்மை

பயங்கரவாதிகள்

மண்டை கழுவப்பட்டவர்கள்

படிக்காத முட்டாள்கள்

குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள்

பிள்ளைபிடிகாரர்கள்

அழிக்கப்படவேண்டியவர்கள்

இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது.

உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :( :( :(

இந்த பச்சை சிவப்பு புள்ளிகள் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.

இதை மேலும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உள்ளாக்கி நிர்வாகத்தினரை கஷ்டப்படுத்தாமல் இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன?

கள உறவுகளன்றி யாரும் பச்சை குத்தலாமென்றால், ஒருவரே, பல்வேறு கணணிகளில் இருந்து குத்திக் கொண்டிருக்கலாம்.

மேலும், ஒரு உறுப்பினர், மிகவும் நீண்ட காலமாக (வருடக்கணக்கில்) கருத்து எதுவும் எழுதாமல் இருப்பாரென்றால், அவரது மின்னஞ்சலுக்கு அறிவித்து பின்னர் அவர்களை உறுப்பினர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின் நிரந்தரமாக நீக்கலாம். வேறு தளங்களில் இதைக் காணக்கூடியதாக உள்ளது.

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

நான் அவதானித்த வகையில் அர்ஜுன் இது போன்ற விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாடக்கூடிய ஒருவர்.

அவரது கருத்துக்கள் பல pragmatic ஆக இருக்கும், என்றாலும் நமக்கு சிலவேளைகளில் உண்மையை ஒத்துக்கொள்ள தயக்கம் இருப்பது வழமை தானே.

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

கீழ்த்தரமாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே நேரம், விமர்சனங்கள் தான் ஒருவரை வலுப்படுத்தும். பேச்சுரிமையின் முக்கியத்துவம் தான் மேலைத்தேய நாடுகளில் ஒரு விசேஷ அம்சம். அதை விட்டுத்தரக் கூடாது.

நான் அவதானித்த வகையில் அர்ஜுன் இது போன்ற விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாடக்கூடிய ஒருவர்.

அவரது கருத்துக்கள் பல pragmatic ஆக இருக்கும், என்றாலும் நமக்கு சிலவேளைகளில் உண்மையை ஒத்துக்கொள்ள தயக்கம் இருப்பது வழமை தானே.

இவரது கருத்துக்கள் pragmatic ஆக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு பல நல்ல முயற்சிகளை 'மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்' என வர்ணித்து வருவார். இன்னொரு உதாரணம் நாடுகடந்த அரசின் சபாநாயகரும் கனடாவின் பிரநிதியுமான பொன். பாலராஜனை நம்பி நீங்கள் பயணிப்பது ஏமாற்றம் தரும் என எழுதினார். எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கில் வசந்தம் அங்கு போய் பாருங்கள், இங்கிருந்து எழுதாதீர்கள் என்றார்.

Edited by akootha

கீழ்த்தரமாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே நேரம், விமர்சனங்கள் தான் ஒருவரை வலுப்படுத்தும். பேச்சுரிமையின் முக்கியத்துவம் தான் மேலைத்தேய நாடுகளில் ஒரு விசேஷ அம்சம். அதை விட்டுத்தரக் கூடாது.

நிச்சயம் பேச்சு சுதந்திரத்தை தடுக்ககூடாது. அதேபோன்று அதை துஸ்பிரயோகமும் செய்யக்கூடாது :D

இவரது கருத்துக்கள் pragmatic ஆக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு பல நல்ல முயற்சிகளை 'மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்' என வர்ணித்து வருவார். இன்னொரு உதாரணம் நாடுகடந்த அரசின் சபாநாயகரும் கனடாவின் பிரநிதியுமான பொன். பாலராஜனை நம்பி நீங்கள் பயணிப்பது ஏமாற்றம் தரும் என எழுதினார். எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கில் வசந்தம் அங்கு போய் பாருங்கள், இங்கிருந்து எழுதாதீர்கள் என்றார்.

அவரது எல்லாக் கருத்துக்களும் சரியென்று நான் சொல்ல வரவில்லை அகூதா.

இப்படி எழுதும்போது ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=100098 )

இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்"

முகப்பில் இப்படி காட்டுகின்றதே?

இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்"

திருத்தம் செய்யமுடியாதா? இந்தப்பிரச்சனை நீண்டகாலமாக கடைசியாக யாழ் முகப்பு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட காலத்திலிருந்து உள்ளது.

' ', "" ஆகியகுறியீடுககளை தலைப்பில் இட்டால் ஏன் " > என இவ்வாறு யாழ் முகப்பில் வருகின்றது? செய்தியோடையில் ஏதாவது தவறு உள்ளதா?

இதைமுன்பும் கேட்டுள்ளேன், திருத்தம் செய்யப்படவில்லை.

நன்றி!

Edited by கலைஞன்

எனது யாழ் கருத்து கள முகப்பு பின்வருமாறு அமைகிறது .

yarl.jpg

நெடுக்க்ஸ் இது பற்றி முன்னரும் குறிபிட்டு இருந்தார். இப்படி இரண்டு இடத்தில் வருவதை தவிர்க்க முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பகலவன் சுட்டிக்காட்டிய பிரச்சினை எனக்கும் உள்ளது..அத்துடன் எழுதும் தீமையும் மாற்ற முடியவில்லை..? :(

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.