Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல்நாகம் சடை விரிக்கும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

நன்றி அலைமகள் :wub:

இந்த உப்புக் கடலிலும், காற்றிலும் என் அன்னை மடியின் சுகம் இருக்கிறது

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

வல்வைக் கடற்கரையில் படம் எடுக்கலாம் சூரிய உதயத்தை நேரே பார்த்தபடி நிழல் படம் எடுக்கமுடியாது அலைமகள். ஏனென்றால் வல்வையின் வடக்குப்பக்கமே கடல்.

வணக்கம் சஹாரா,

'பாத்தமா ரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனை பேர் தான் கிழம்புவாய்களோ' என்று நான் கூறியதை ஒருவேளை நீங்கள் நான் கூறியதைக் காட்டிலும் பிறிதொரு வகையில் புரிந்திருப்பீர்களோ என்று தோன்றுகின்றது. இதை நான் இரண்டு வரிக் கவிதைக்கு அரைப்பக்கம் பின்னூட்டம் எழுதிய என் மீதான நையாண்டியாகவே வைத்திருந்தேன். ஆனால் அது உங்களை ஏதோ ஒரு வகையில் ஆத்திரப்படுத்தி விட்டதோ என்று தோன்றுகிறது. இதில் எந்த ஆரம்போ அறிவுரையோ பிழைபிடித்தலோ இல்லை. இது என்மீதான எனது நையாண்டி மட்டுமே.

அலையைக் கடல் என்று கூற முடியாது என்று கூறியுள்ளீர்கள். அதற்காகத் தான் ஒருவருடன் கோபம் போட்டு விட்டு அவரது மூக்குடன் நட்புப் பாராட்ட முடியாது என்ற உதாரணத்தோடு எழுதியிருந்தேன். மின்காந்த அலை போன்ற கடலுடன் தொடர்பற்ற அலைகள் உள்ளன தான் என்ற போதும், கடற்கரையில் நின்றபடி எவரும் குளத்து அலையைக் கூடக் குறிப்பிடமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. கடல் என்றால் என்ன? உப்பு நீரா, உப்பு நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பா, அந்த நீர் வாழும் உயிரினங்களா, கண்ணாடி மணற் கரையா, நீருள் தெரியும் விம்பங்களா அல்லது கடல் என்றால் தான் என்ன? என்னைப் பொறுத்தவரை இவை அனைத்ததும் சேர்ந்தது தான் கடல். இது எனது பார்வை மட்டும் தான்.

இறுதியாக கிரேக்க இலக்கியமும் எவ்விதத்திலும் உங்களைச் சீண்டுவதற்காகக் கூறவில்லை. ஒரு சாத்தியமான பார்வையாக மட்டுமே குறிப்பிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஹாரா,

'பாத்தமா ரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனை பேர் தான் கிழம்புவாய்களோ' என்று நான் கூறியதை ஒருவேளை நீங்கள் நான் கூறியதைக் காட்டிலும் பிறிதொரு வகையில் புரிந்திருப்பீர்களோ என்று தோன்றுகின்றது. இதை நான் இரண்டு வரிக் கவிதைக்கு அரைப்பக்கம் பின்னூட்டம் எழுதிய என் மீதான நையாண்டியாகவே வைத்திருந்தேன். ஆனால் அது உங்களை ஏதோ ஒரு வகையில் ஆத்திரப்படுத்தி விட்டதோ என்று தோன்றுகிறது. இதில் எந்த ஆரம்போ அறிவுரையோ பிழைபிடித்தலோ இல்லை. இது என்மீதான எனது நையாண்டி மட்டுமே.

அலையைக் கடல் என்று கூற முடியாது என்று கூறியுள்ளீர்கள். அதற்காகத் தான் ஒருவருடன் கோபம் போட்டு விட்டு அவரது மூக்குடன் நட்புப் பாராட்ட முடியாது என்ற உதாரணத்தோடு எழுதியிருந்தேன். மின்காந்த அலை போன்ற கடலுடன் தொடர்பற்ற அலைகள் உள்ளன தான் என்ற போதும், கடற்கரையில் நின்றபடி எவரும் குளத்து அலையைக் கூடக் குறிப்பிடமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. கடல் என்றால் என்ன? உப்பு நீரா, உப்பு நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பா, அந்த நீர் வாழும் உயிரினங்களா, கண்ணாடி மணற் கரையா, நீருள் தெரியும் விம்பங்களா அல்லது கடல் என்றால் தான் என்ன? என்னைப் பொறுத்தவரை இவை அனைத்ததும் சேர்ந்தது தான் கடல். இது எனது பார்வை மட்டும் தான்.

இறுதியாக கிரேக்க இலக்கியமும் எவ்விதத்திலும் உங்களைச் சீண்டுவதற்காகக் கூறவில்லை. ஒரு சாத்தியமான பார்வையாக மட்டுமே குறிப்பிட்டேன்.

என்ன இன்னுமொருவன் உங்களை நீங்களே இப்படி ஓவரா நையாண்டி பண்ணியிருக்கிறீர்கள்? :lol:

உங்களுடைய கருத்துக்கள் என்னை எவ்விதத்திலும் ஆத்திரப்படுத்தவில்லை இன்னுமொருவன். நிறைய ஆச்சரியப்பட வைத்துள்ளன. இந்த இரு வரிகளுக்குள்ளும் உங்களின் தேடல் விரிவு இன்னும் நிறையவே நான் அறியவேண்டிய பக்கங்களை வலியுறுத்தி நிற்பதுதான் உண்மை. உண்மையைச் சொன்னால் இலக்கியத்திலும் சரி, நவீனத்துவம், அறிவியல் என்று பன்முகப்பார்வையை இனிவரும் காலங்களில் எனது ஆக்கங்களில் ஆணித்தரமாக இருத்தி நகர்த்த வேண்டும் என்ற ஒரு உள்ளெச்சரிக்கையை உருவாக்கியிருக்கிறது இன்னும் சொன்னால் ஒரு நெம்புகோலாகவே உங்கள் கருத்தை உணர்கிறேன். உண்மையில் மனந்திறந்து உங்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

img4999f.jpg

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

அழகான காட்சி.

அழகான கவிதை.

கடல்நாகம் சடை என்றால் பெண்ணின் கூந்தல் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை கவரும் தலைப்பு.

தலைப்பை பார்த்தவுடன், உள்ளே... என்ன உள்ளது என்று பார்க்கத் தூண்டியது.

படமும், திருக்குறள் மாதிரியான வரியும் அழகு வல்வைசகாரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

:blink:

அழகான காட்சி.

அழகான கவிதை.

கடல்நாகம் சடை என்றால் பெண்ணின் கூந்தல் என்று நினைத்தேன்.

நன்றி கறுப்பி

சடை நாகம் என்பது மணப்பெண்ணின் பின்னலுக்கு செய்யும் மலர் அலங்காரம் பலவகையில் உள்ளன. முத்துக்கள் கொண்டும், ஒளிரும் கற்களைக் கொண்டும் இந்தச் சடைநாகம் அமைக்கப்படுகிறது.

ஆட்களை கவரும் தலைப்பு.

தலைப்பை பார்த்தவுடன், உள்ளே... என்ன உள்ளது என்று பார்க்கத் தூண்டியது.

படமும், திருக்குறள் மாதிரியான வரியும் அழகு வல்வைசகாரா.

ஒன்று மட்டும் புரிகிறது

முன்பு ஒரு நாலுவரிக்கவிதை எழுதினேன் பலரின் கவனத்தைக்கவர்ந்தது. இப்போது இரண்டு வரிகள் இதுவும் பல பார்வைகளை பெற்றுள்ளது. ஆக குட்டிக்கவிதைகளே வெற்றிபெறும். நன்றி தமிழ்சிறீ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

சகாரா கருமையான நிறத்தில் உடுத்திருக்கின்றா சற்று உற்றுப் பாருங்கோ சாத்திரியாரே :)

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் போது கிறீஸ் பூதங்கள் மட்டுமல்ல அங்கு ஒரு பூதமும் இருக்காது பாருங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:wub: :wub: :wub: :wub:

.எல்லாம் சரி, எல்லாரும் கவிதை கவிதை என்று சொல்லினம், அது இந்த பதிவில் எங்கே இருக்கு?

:lol:

img4999f.jpg

அழகிய சூழல், அழகிய படம் ...

......

அந்தி மயங்கும் நேரத்தில், நான்கு நண்பர்களுடன் அலை புரளும் மணலில் குந்தியபடி நான்கு மீன்களையும் சுட்டுத் தின்று நான்கு மூடிகளை உடைத்து ஊத்தவும் ... கடல்நாகம் சடை மட்டுமா விரிக்கும்????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்......சுவாசிக்கட்டும். அதுக்காக இப்பிடி துணிகூட போடாமல். சுத்திவர கிறீஸ் பூதங்கள் கவனம். :lol:

சகாரா கருமையான நிறத்தில் உடுத்திருக்கின்றா சற்று உற்றுப் பாருங்கோ சாத்திரியாரே :)

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் போது கிறீஸ் பூதங்கள் மட்டுமல்ல அங்கு ஒரு பூதமும் இருக்காது பாருங்கோ :lol:

நன்றி அலைமகள்.

img4979vi.jpg

அழகிய சூழல், அழகிய படம் ...

......

அந்தி மயங்கும் நேரத்தில், நான்கு நண்பர்களுடன் அலை புரளும் மணலில் குந்தியபடி நான்கு மீன்களையும் சுட்டுத் தின்று நான்கு மூடிகளை உடைத்து ஊத்தவும் ... கடல்நாகம் சடை மட்டுமா விரிக்கும்????????

நன்றி நெல்லையன்

  • 2 years later...

img4979vi.jpg

 

இன்றைக்குத்தான் பார்த்தேன். இதற்கு பிறகு ஒருவரும் எழுத இல்லை. போர் அடிச்சு போட்டு போலிருக்கு.  அனாவசியமான கொலை ஒன்று விழுந்து விட்டது. எனக்கும் ஆதங்கம்தான். இருண்டதும் விடியும், விடிந்ததும் இருளும். கவலைப்பட தேவை இல்லை. தொடர்ந்து எழுதியிருந்திருக்கலாம்.

 

சரி நானாவது திரும்பத் தொடக்கி வைத்துப் பார்ப்போம் இன்னும் கொஞ்ச போகுமா அல்லது வல்வையை வேறும் போறிங் என்று கழித்து வைத்துத்தான் விடப் போகிறார்களா என்று பார்க்க. 

 

"ராதா இருக்கா.  சிவாஜி இருக்கார். 

 

இளைய ராஜா ஏதாவது சொல்லாமே!" :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா.. :lol:

அருமையான பாட்டு. சீனறியுடன் போக கடல் காற்று என்றும் பாடலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

வவல்வை சகாறா அவர்கட்கு "மெல்லெனப் பாயும்தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயும்" என்பதையே அறிந்தேன். எது சரி

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2011 at 10:12 PM, வல்வை சகாறா said:

 

 

 

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

 

 

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நாகம் சடை விரிக்கும் என்பது சூரியனின் ஒளிக் கீற்றுகளை குறிப்பிடுகிறதா...

படங்கள் எதையும் காண இயலவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

2011´ம்  ஆண்டு, வல்வை சகாறா இணைத்த.. அழகிய  இரண்டு வரிக் கவிதைக்கு, 
2019´ம்  ஆண்டு, நினைவு வைத்து.. பொருத்தமான  காணொளிப்  பதிவை...ரசித்தோம். 👍

  • கருத்துக்கள உறவுகள்

பூடகமான கவிதைதான் எப்போதும் தாறுமாறாக சிந்திக்க வைக்கும்...... அந்த வகையில் இந்த கவிதை வருடங்கள் கடந்தும் நிற்பது அதன் வெற்றியே .....!  🌺

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.