Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வை இந்தியா விரும்புகின்றதா?

Featured Replies

இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா?

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரேனும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது.

அதேநேரம் இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியாமல் இருக்கமுடியாது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றது. ஆக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்ற நோக்கமுடைய அரசும், இது நடக்கின்ற காரியம் இல்லை என்ற உண்மை தெரிந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதென்பது உலகின் முதற்தர அரசியல் நாடகம் என்று கூறக்கூடியது.

இதில் மிகவும் அப்பாவித்தனம், அரசும் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தை மூலம் எங்களுக்கு தீர்வு கிடைக்குமெனத் தமிழ் மக்கள் நம்பிக் கொள்வதாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால், அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புத் தேவை என்பது மறுக்கமுடியாத உண்மை.ஆனால், இந்தியாவோ இனப்பிரச்சினைத் தீர்வை இம்மியும் வலியுறுத்துவதாக இல்லை. மாறாக தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை, உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமோ என்ற அச்சமே தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை இன்னும் வலியுறுத்திக் கூறுவதாயின் உலக நாடுகள், இலங்கை விவகாரத்தில் தலையிடுவது இந்திய தேசத்தின் வல்லாதிக்கத்திற்கு சவால் என்று கூட இந்தியா கவலை கொள்ளவில்லை.

மாறாக, இந்தியாவின் கவலையயல்லாம் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடக்கூடாது என்பதாகும். இதன் காரணமாகவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடந்த கருத்தரங்கொன்றில், இலங்கை இனப்பிரச்சி னையில் உலக நாடுகளின் தலையீடு பிரச்சினையைத் தீர்க்கமாட் டாது. அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்ற கருத்தை இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் ´ஷியாம் சரண் முன்வைத்தார்.அவர் முன்வைத்த கருத்தை எவரும் அவரின் சொந்தக் கருத்தாகப் பார்க்க முடியாது.

ஆக, அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என்பதற்கு அப்பால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதை இந்தியாவிடம் கேட்டறிவது நல்லது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அறிய வேண்டும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25345

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் என்ன?

இந்தியா என்பது ஒரு பில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வாழும் ஒரு நிலபரப்பு.

தீர்வை விரும்புகிறதா? என்றால் ........... நிலமா? அதில்வாழும் மக்களா? அவர்களை மாறி மாறி ஆளுபவர்களா?

இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா?

ஆக, அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என்பதற்கு அப்பால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதை இந்தியாவிடம் கேட்டறிவது நல்லது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அறிய வேண்டும்.

வலம்புரியாரின் கேள்வி சரியானது. ஆனால் அவர் கேள்வியை கேட்க தெரிந்தெடுத்தவர்களையும் கவனத்திலெடுத்தால் வலம்புரியார் பூனைக்கு மணி கட்டச்சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரியின் கருத்துக்கள் 100 வீதம் உண்மையானவை.ததேகூட்டமைப்பு இந்தியாவின் ஆலோசனைப்படி மக்களை ஏமாற்றுவதை விடுத்து அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுடன் இராஜதந்திர நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிய ஒரு சர்வசன வாக்கெடுப்பைக் கோர வேண்டும்.இந்தியாவின் தாளத்திற்கு ஆடினால் வேலைக்காகாது.இவ்வளவு சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் முடிந்தால் தீவுப்பகுதியில் தங்கள் கட்சின் அரசியல் அலுவலகம் ஒன்றைத் திறக்க முடியுமானால் அதையாவது கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக வெளிக்கிட்டானாம்.அமெரிக்கப் பயணத்தை ஒட்டி எத்தனை பில்டப் குடுத்தார்கள். அவரைச் சந்திக்கப் போகிறோம் இவரைச் சந்திக்கப் போகிறோம் என்று.பயணத்தில் சம்பந்தர் கூறிய கருத்து வடக்கு கிழக்கு தமிழர்தாயகம் என்று நாம் கூறவில்லை.அடிப்படைக் கோரிக்கையையே கைவிட்டுவிட்டு என்ன அரசியல் செய்யப் போகினம்?????????????????

  • தொடங்கியவர்

இந்தியா விடயத்தில் கூட்டமைப்பு தானே நேரடியாக எதிர்க்காமல், சர்வதேச / மேற்குலக நாடுகள் , தமிழக/காங்கிரஸ் அல்லாத இந்திய தலைவர்கள் ஊடாக தீர்வை வேண்டி அழுத்தத்தை கூட்ட வேண்டும்.

ஆசிய - பசுபிக் பிராந்தியந்தில் அதிகரிக்கும் அமெரிக்க இராணுவ - அரசியல் மாற்றங்கள் ஊடாக எமது பிராந்திய மாற்றங்களை எமக்கு சாதகமாக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் என்ன?

இந்தியா என்பது ஒரு பில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வாழும் ஒரு நிலபரப்பு.

தீர்வை விரும்புகிறதா? என்றால் ........... நிலமா? அதில்வாழும் மக்களா? அவர்களை மாறி மாறி ஆளுபவர்களா?

இந்தியாவில் எல்லாமே கிந்தி பேசும் அதிகார வர்க்கம்தான் குறிப்பாக நேரு குடும்பத்தினரும் அவர்களை சார்ந்தவர்க்களும்தான் இந்தியா எனும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வாழும் ஒரு நிலபரப்பு கொண்ட நாட்டினை ஆழ்பவர்கள் ஆகவும் சொந்தகக்காரகவும் இருந்துவருகின்றனர்.

... எமக்கு அழிவைத் தந்த இந்தியா, வாழ்வையும் அதனால் தான் தர முடியும்!! ஆனால் ... நடப்பவைகள் தொடர் அழிவை ஏற்படுத்தவே இந்தியா தொடர்ந்து முயல்வதாக தெரிகிறது! ... தாயகத்தில் முடித்து விட்டு இன்று புலத்திலும் நாசங்களை செய்ய முயல்கிறது!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை இந்தியா பிரச்சனையை தீர்க்க நினைத்தாலும் அவர்களால் இயலாத நிலை தான் உள்ளது.கூட்டமைப்பு அமெரிக்கா/ஐரோப்பியா வுடன் சேர்ந்து ஏதாவது தீர்வுகளை எடுக்க முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை இந்தியா பிரச்சனையை தீர்க்க நினைத்தாலும் அவர்களால் இயலாத நிலை தான் உள்ளது.கூட்டமைப்பு அமெரிக்கா/ஐரோப்பியா வுடன் சேர்ந்து ஏதாவது தீர்வுகளை எடுக்க முயற்சிக்கலாம்.

ஒன்றில் இந்தியா விரைவாக வளர்ச்சியடைந்து வல்லரசாக வேண்டும் .

அப்போது மேற்குலகென்ன சீனாவே எம்மைத் தேடிவரும்

அல்லது வெகுவிரைவில் பத்தாக உடைந்து பதினொரு நாடுகளாக வேண்டும்.

அப்போது எமக்கும் ஒரு தீர்வு வரும்

இப்போது இருப்பது மாதிரி இந்தியாவின்

இரண்டும் கெட்டான் நிலை ஈழத் தமிழருக்கு

ஏற்றதல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்குரிய தீர்வைச் சிங்களவன் தரநினைத்தாலும் இந்தியா விடமாட்டார்கள். தமிழருக்கு ஆயுதம் கொடுத்துப் போராடச்சொன்னபோதும் இதே நிலை தான். போராடச்கொன்னார்களே தவிர தமிழீழத்தை அடையுமாறு சொல்லவும் இல்லை. அதை அடைவதிலும் விருப்பம் அடையவில்லை. அதனால் தான் கனிந்து வந்த தமிழீழத்தை உடைத்து 1957க்கு அப்பால் பின் தள்ளிவிட்டார்கள். இன்று திரும்பவும் 1957க்கு அப்பால் இருந்த போராட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கின்றனர். இலங்கை உடைந்தாலோ அல்லது தீர்வு கிடைத்தாலோ இந்தியா விரும்பாது. அதுவும் இன்று சீனா காலூன்றிய வேளை விரும்பவேமாட்டார்கள். தமிழனும், சிங்களவனும் சேர்ந்து இந்த இந்தியாவின் முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வை உருவாக்கினால் ஒழிய இங்கு பிரச்சனை ஓயாது.

ஒன்று இந்தியாவை சுக்கு நூறாக உடைக்கவேண்டும் அல்லது அங்கு பிரச்சனைகளை உருவாக்கவேண்டும். இதுதான் இலங்கையில் அமைதிக்கு வழி.

இந்தியாவின் பாதுகாப்புக்காக நாங்கள் பலிகடா ஆவதை நிறுத்தN;வண்டும்.

"ஒன்று இந்தியாவை சுக்கு நூறாக உடைக்கவேண்டும் அல்லது அங்கு பிரச்சனைகளை உருவாக்கவேண்டும். இதுதான் இலங்கையில் அமைதிக்கு வழி"

என்னா கதை இது??????

இலங்கையின் அமைதிக்கு சிங்களம் தமிழர்களை மிண்டு கொடுக்கவேண்டுமாம். நாராயணன் கூட்டத்திற்கு கொடுப்பனவுகள் போதாதாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீரில் முஸ்லீம்களின் இடங்களில் இந்துக்களைக் கூடியேற்றம் செய்வதை ஊக்குவிக்கும் இந்தியா, சிறிலங்காவிலும் தமிழர்களின் நிலங்களின் சிங்களவர்களைக் குடியேற்ற சிறிலங்காவில் ஊக்குவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கற்பனைக்கு சிங்களவனும் நாங்களும் சமாதானமாக சேர்ந்து வாழ்வோம் என்று முடிவு எடுத்தாலும் அந்த நாய்கள் விடாதுகள். :rolleyes:

தமிழருக்குரிய தீர்வைச் சிங்களவன் தரநினைத்தாலும் இந்தியா விடமாட்டார்கள். தமிழருக்கு ஆயுதம் கொடுத்துப் போராடச்சொன்னபோதும் இதே நிலை தான். போராடச்கொன்னார்களே தவிர தமிழீழத்தை அடையுமாறு சொல்லவும் இல்லை. அதை அடைவதிலும் விருப்பம் அடையவில்லை. அதனால் தான் கனிந்து வந்த தமிழீழத்தை உடைத்து 1957க்கு அப்பால் பின் தள்ளிவிட்டார்கள். இன்று திரும்பவும் 1957க்கு அப்பால் இருந்த போராட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கின்றனர். இலங்கை உடைந்தாலோ அல்லது தீர்வு கிடைத்தாலோ இந்தியா விரும்பாது. அதுவும் இன்று சீனா காலூன்றிய வேளை விரும்பவேமாட்டார்கள். தமிழனும், சிங்களவனும் சேர்ந்து இந்த இந்தியாவின் முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வை உருவாக்கினால் ஒழிய இங்கு பிரச்சனை ஓயாது.

ஒன்று இந்தியாவை சுக்கு நூறாக உடைக்கவேண்டும் அல்லது அங்கு பிரச்சனைகளை உருவாக்கவேண்டும். இதுதான் இலங்கையில் அமைதிக்கு வழி.

இந்தியாவின் பாதுகாப்புக்காக நாங்கள் பலிகடா ஆவதை நிறுத்தN;வண்டும்.

உங்களுக்கு பச்சை குத்தியது நான்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கற்பனைக்கு சிங்களவனும் நாங்களும் சமாதானமாக சேர்ந்து வாழ்வோம் என்று முடிவு எடுத்தாலும் அந்த நாய்கள் விடாதுகள். :rolleyes:

உங்களுக்கு பச்சை குத்தியது நான்தான்.

இந்தியா ஈழப் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும்.சஜீவன் அண்ணா  யாருக்கு  ? பச்சை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் ரெண்டுபட்டால்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. தீர்வு வந்துட்டா கூத்தாட எங்கிட்டு போறதாம்? நீங்க வேற இடம் காட்டுவீர்களா? லாஜிக் தெரியலன்னா கேளுங்கப்பா... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தனது பக்கத்து நாடுகள் அபிவிருத்தி அடையாமல் இருக்கவே இந்தியா விரும்புகிறது. 70களின் சிங்கப்பூர் முதல்வர், இலங்கை மாதிரி சிங்கப்பூர் வர வேண்டும் என விரும்பினார். சிறிலங்காவில் அப்பொழுது தமிழர்கள் போராட வெளிக்கிட்ட போது இந்தியா அதனை ஊக்குவித்து பல குழுக்களாகப் பிரித்து தான் சொல்கிறபடி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பியது. அதாவது தனது சொந்த நலனுக்காக ஈழத்தமிழரைப் பலிகடாவாக்க முடிவெடுத்தது இந்தியா.

சிறிலங்காவின் தலை நகரில் குண்டுகள் வெடிக்க இந்தியா உதவியது. இதனால் இலங்கையில் முதலீடு செய்யவிரும்பியோர் இந்தியாயாவில் முதலீடு செய்தார்கள். இதே போலத்தான் பாகிஸ்தானிலும் நடந்தது.அக்காலங்களில் பாகிஸ்தானிலும் பல வெளினாட்டவர்கள் சுற்றுலா செல்வதுண்டு. பாகிஸ்தானில் சாணாக்கியமாக இந்தியா நரி வேலைகள் பல செய்தது. இப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.