Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகங்காரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரம்  

அகங்காரம் என்பது ஓர் தீயகுணம் .அதுவே பல தீயவிளைவுகளுக்கு காரணமும்கூட.

அகங்காரத்தில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடையமுடியாது.

அகங்காரம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களிடமிருந்து

அன்பு , நட்பு, பாசம்  போன்றவற்றைப் பெற இயலாது.

அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.

நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள்.

முடிந்த வரை அகங்காரர்களிடமிருந்து தூரவிலகிச்செல்ல வேண்டும்.

அவர்கள் எதிர்பட்டால் நாமே அந்த வழியிலிருந்து விலகிச் செல்லவேண்டும்.

அகங்காரம் அகப்பகைவன்.அதனை வெளியே இருப்பவர்களால் வெல்ல முடியாது.

அவரவர்களே வென்று தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தையவர்களுக்கு ஏதுனும் துன்பம் நேர்ந்தால் அவர்களை பற்றி மற்ற யாரும் துக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் யாருடைய இரக்கத்தையும்  பெறமுடியாது.

அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அப்படிபட்டவர்களுக்குள் அன்பு, நட்பு, பாசம்   ஒருக்காலும் இருக்கமாட்டாது .

அவர்கள் அருகில் கூட யாரும்  செல்ல மாட்டார்கள்.

ஆகையால் அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய மனதை வென்று

அவர்களின் அகங்காரத்தை அழித்து  

மற்றவர்களையும் மதித்து அவர்களையும் அரவணைத்துத்

தன் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால்  

அவர்களுக்கு வாழ்க்கையில்  எத்தனையோ வெற்றிகள் கிடைக்கும்.

அகங்காரமின்மையே வாழ்க்கையின்  வெற்றி. அந்த வெற்றியின் தத்துவம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்று மேன்மையான நிலையை

அடைய விரும்புகின்றவர்கள்  அகங்காரமற்றவர்களாக இருக்க வேண்டும்.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான தத்துவம் . பாராட்டுக்கள்

கருத்தாளமிக்க தேடலுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . மேலும் , அகங்காரமற்றவர்களுக்குத் தானே வேதனைகளும் , சோதனைகளும் , வரிசை கட்டி நிற்கின்றன . இதை வெல்ல என்ன வழி ? ஏனெனில் , பக்தி மார்கதில் ஊறித்திளைத்த பெற்றோருக்குப் பிறந்த எனக்கு , சில பக்தி மார்கப் போதனைகள் மனச்சோர்வினையே தருகின்றன :( :( :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான தத்துவம்  . பாராட்டுக்கள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாளமிக்க தேடலுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . மேலும் , அகங்காரமற்றவர்களுக்குத் தானே வேதனைகளும் , சோதனைகளும் , வரிசை கட்டி நிற்கின்றன . இதை வெல்ல என்ன வழி ?  ஏனெனில் , பக்தி மார்கதில் ஊறித்திளைத்த பெற்றோருக்குப் பிறந்த எனக்கு , சில பக்தி மார்கப் போதனைகள் மனச்சோர்வினையே தருகின்றன :( :( :) :) .

தேடினால்த் தானே கிடைக்கும் கோமகன்.அதற்காக கிடைப்பதையெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.எங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் கிடைப்பதை எங்கள் தேவைக்கேற்ற மாதிரிமாற்றிக் கொள்ளவேண்டும்.அடுத்தது இது பக்தி பற்றியது அல்ல.மனிதனைத் தொற்றிக் கொண்டுள்ள அகங்காரம் பற்றியது.அதை அகற்றி வாழ்க்கையை வெல்லும்  மனிதனின் வெற்றி பற்றியது.உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமகன். :D

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும், தகுதியில்லாதவர்களுக்குப் பதவிகள், பவிசுகள் வரும்போது தான், அகங்காரம் தலை தூக்குகின்றது!

இதற்கு நல்ல உதாரணம்! 'ஹிட்லர்".

அதிக தூரத்திற்குப் போவானேன்!

புலத்திலுள்ள அநேகமானவர்களிடம், இதை அவதானித்திருக்கின்றேன்!

அகங்காரத்தின் விளைவு ' ஆணவம்'.

ஆணவம் தலைக்கேறும் போது, அதன் இலக்கு 'அகல பாதாளம்'!!!

தங்கள் அருமையான பதிவுக்கு, நன்றிகள். வாத்தியார்!

நல்ல எழுத்து வாத்தியார்.

நான் என்ற ஆணவத்தையும் எனக்கு என்ற அகங்காரத்தையும் விட்டுத் தொலைத்தாலே நிம்மதி. வாழ்வும் செம்மையடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு வாத்தியார்.

அகங்காரம் கொண்டவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அளவுகடந்த அகங்காரத்தின் விளைவு அதலபாதாளத்தில் விழுந்து ஆறுதல் கூறக்கூட ஆட்களற்ற நிலையில் அவதியுறுவதையும் கண்ணுற்றுள்ளேன். கண்ணை மறைத்த அகங்காரம் உறவுகளை கொன்றுவிடும், நண்பர்களை விலத்திவிடும் தன்னந்தனியாகும்போது கொஞ்சக்காலத்திற்குத் தெரியாது... காலங்கடந்து தன்னைத்தானே நொந்தாலும் மீண்டும் நட்பு, பாசம் ஆகியவற்றைச் சம்பாதிக்க முடியாது... அகங்காரம் கொண்டவர்கள் திருந்தினாலும் சமூக ஏளனம் அவர்களைத் தினந்தினம் கொல்லும்.

நல்லதொரு பதிவு வாத்தியார்.

அகங்காரம் கொண்டவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அளவுகடந்த அகங்காரத்தின் விளைவு அதலபாதாளத்தில் விழுந்து ஆறுதல் கூறக்கூட ஆட்களற்ற நிலையில் அவதியுறுவதையும் கண்ணுற்றுள்ளேன். கண்ணை மறைத்த அகங்காரம் உறவுகளை கொன்றுவிடும், நண்பர்களை விலத்திவிடும் தன்னந்தனியாகும்போது கொஞ்சக்காலத்திற்குத் தெரியாது... காலங்கடந்து தன்னைத்தானே நொந்தாலும் மீண்டும் நட்பு, பாசம் ஆகியவற்றைச் சம்பாதிக்க முடியாது... அகங்காரம் கொண்டவர்கள் திருந்தினாலும் சமூக ஏளனம் அவர்களைத் தினந்தினம் கொல்லும்.

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அலை என்னைப்பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கிறது?..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார், நல்ல கருத்துக்கள், யாழிலும் ...லருக்கு இருக்கே இந்த வருத்தம்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தருக்கும் தங்களிட்ட இருக்கிற ஏதாவது ஒவ்வொண்டில அகங்காரம் இருக்கும்...ஊரில ஒருத்தர் இருந்தார்..அவருக்கு வயது 22 இல வடிவான மகள் ஒருத்தி இருந்தாள்..அதுதான் அவற்றை அகங்காரம்..என்ர மகள் சிறீதேவி மாதிரி..அவளின்ற வடிவுக்கு பெரிய கோடீஸ்வரனைத்தான் கலியாணம் கட்டிவைக்கப் போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுத்திரிவார்..ஊரிலை இருக்கிற பொடியள் ஒருத்தரும் அவளைப் பாத்திடக்கூடாதெண்டு கவனமா இருப்பார் :(....ஊரிலை இருக்கிற பெடியள் எண்டா நானும் அதுக்குள்ளைதான் வாறன்..... :lol: ஊரில ஒரு போஸ்ற்மன் இருந்தார்...மூண்டு பிள்ளையள் அவருக்கு..வயசு நாற்பது..படங்களில வாற மைனர்க் குஞ்சு மாதிரி ஊருக்குள்ள எல்லாப் பெட்டையளையும் சைற் அடிப்பார்..ஒரு நாள் அதிகாலை..ஊரே நிம்மதியாத்தூங்கிக்கொண்டிருந்தது...ஆனால் பெட்டையின்ர தகப்பன் மட்டும் தூங்கவில்லை..நிம்மதியிழந்து தவித்தார்..காரணம் அவற்றை மகள் ஊர்ப் போஸ்ற்மனுடன் ஓடிப்போய்விட்டாள்...அண்டைக்குப் பெட்டையோட சேர்ந்து அவற்றை அகங்காரமும் ஓடிப்போய் விட்டது... :(

Edited by சுபேஸ்

ஒவ்வொருத்தருக்கும் தங்களிட்ட இருக்கிற ஏதாவது ஒவ்வொண்டில அகங்காரம் இருக்கும்...ஊரில ஒருத்தர் இருந்தார்..அவருக்கு வயது 22 இல வடிவான மகள் ஒருத்தி இருந்தாள்..அதுதான் அவற்றை அகங்காரம்..என்ர மகள் சிறீதேவி மாதிரி..அவளின்ற வடிவுக்கு பெரிய கோடீஸ்வரனைத்தான் கலியாணம் கட்டிவைக்கப் போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுத்திரிவார்..ஊரிலை இருக்கிற பொடியள் ஒருத்தரும் அவளைப் பாத்திடக்கூடதெண்டு கவனமா இருப்பார் :(....ஊரிலை இருக்கிற பெடியள் எண்டா நானும் அதுக்குள்ளைதான் வாறன்..... :lol: ஊரில ஒரு போஸ்ற்மன் இருந்தார்...மூண்டு பிள்ளையள் அவருக்கு..வயசு நாற்பது..படங்களில வாற மைனர்க் குஞ்சு மாதிரி ஊருக்குள்ள எல்லாப் பெட்டையளையும் சைற் அடிப்பார்..ஒரு நாள் அதிகாலை..ஊரே நிம்மதியாத்துங்கிக்கொண்டிருந்தது...ஆனால் பெட்டையின்ர தப்பன் தூங்கவில்லை..நிம்மதியிழந்து தவித்தார்..காரணம் அவற்றை மகள் ஊர்ப் போஸ்ற்மனுடன் ஓடிப்போய்விட்டாள்...அண்டைக்குப் பெட்டையோட சேர்ந்து அவற்றை அகங்காரமும் ஓடிப்போய் விட்டது... :(

அகங்காரம் இப்படியெல்லாம் பூந்து விளையாடும் எண்டு எனக்கு சத்தியமாய் தெரியாமல் போச்சுது . அது சரி பெடிச்சீன்ர பேர் என்ன :lol: ?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பெடிச்சீன்ர பேர் என்ன :lol: ?

அண்ணைக்கு இன்னுமொரு கலியாணம் கட்டுற ஜடியா இருக்குப்போல.. :icon_idea: பேரைச் சொல்ல வைச்சு எனக்கு இருட்டடி வாங்கித்தரத் திட்டமோ..? :o

Edited by சுபேஸ்

ஒவ்வொருத்தருக்கும் தங்களிட்ட இருக்கிற ஏதாவது ஒவ்வொண்டில அகங்காரம் இருக்கும்...ஊரில ஒருத்தர் இருந்தார்..அவருக்கு வயது 22 இல வடிவான மகள் ஒருத்தி இருந்தாள்..அதுதான் அவற்றை அகங்காரம்..என்ர மகள் சிறீதேவி மாதிரி..அவளின்ற வடிவுக்கு பெரிய கோடீஸ்வரனைத்தான் கலியாணம் கட்டிவைக்கப் போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுத்திரிவார்..ஊரிலை இருக்கிற பொடியள் ஒருத்தரும் அவளைப் பாத்திடக்கூடாதெண்டு கவனமா இருப்பார் :(....ஊரிலை இருக்கிற பெடியள் எண்டா நானும் அதுக்குள்ளைதான் வாறன்..... :lol: ஊரில ஒரு போஸ்ற்மன் இருந்தார்...மூண்டு பிள்ளையள் அவருக்கு..வயசு நாற்பது..படங்களில வாற மைனர்க் குஞ்சு மாதிரி ஊருக்குள்ள எல்லாப் பெட்டையளையும் சைற் அடிப்பார்..ஒரு நாள் அதிகாலை..ஊரே நிம்மதியாத்தூங்கிக்கொண்டிருந்தது...ஆனால் பெட்டையின்ர தகப்பன் மட்டும் தூங்கவில்லை..நிம்மதியிழந்து தவித்தார்..காரணம் அவற்றை மகள் ஊர்ப் போஸ்ற்மனுடன் ஓடிப்போய்விட்டாள்...அண்டைக்குப் பெட்டையோட சேர்ந்து அவற்றை அகங்காரமும் ஓடிப்போய் விட்டது... :(

அண்டைக்கு தகப்பன்காரனை விட, நீங்கள்தான் கூட ஒப்பாரி வைச்சி அழுதிருப்பியல். :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு தகப்பன்காரனை விட, நீங்கள்தான் கூட ஒப்பாரி வைச்சி அழுதிருப்பியல். :D

அண்டைக்கு நான் மட்டுமா அழுதன்..? என்னோட சேர்ந்து ஊரிலை ஒரு கூட்டமே அழுதது.... :o:lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

"அன்னக்கொம்பு கண்ணை மறைக்கிறது" என்று சொல்வது அகங்காரத்தை தானே??

  • கருத்துக்கள உறவுகள்

அகங்கார‌ம் என்பது தனக்குத் தானே எல்லாம் தெரியும் என்றும்,தான் செய்வதெல்லாம் சரி என்றும்,அப்படியே தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்ட‌ வயதிற்கு தான் மன்னிப்பு கேட்கிறதா என்ட அவர்களது ஈகோ விடாது...யாழில் இப்படியானவர்கள் தான் அதிகம் அதிலும்இந்த பதிவில் வந்து கருத்து எழுதின ஒரு சிலரும் இதில் அட‌க்கம்...தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும், தகுதியில்லாதவர்களுக்குப் பதவிகள், பவிசுகள் வரும்போது தான், அகங்காரம் தலை தூக்குகின்றது!

இதற்கு நல்ல உதாரணம்! 'ஹிட்லர்".

அதிக தூரத்திற்குப் போவானேன்!

புலத்திலுள்ள அநேகமானவர்களிடம், இதை அவதானித்திருக்கின்றேன்!

அகங்காரத்தின் விளைவு ' ஆணவம்'.

ஆணவம் தலைக்கேறும் போது, அதன் இலக்கு 'அகல பாதாளம்'!!!

தங்கள் அருமையான பதிவுக்கு, நன்றிகள். வாத்தியார்!

உங்கள் கருத்திற்கு நன்றி புங்கையூரன்.

நல்ல எழுத்து வாத்தியார்.

நான் என்ற ஆணவத்தையும் எனக்கு என்ற அகங்காரத்தையும் விட்டுத் தொலைத்தாலே நிம்மதி. வாழ்வும் செம்மையடையும்.

நன்றி தப்பிலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு வாத்தியார்.

அகங்காரம் கொண்டவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அளவுகடந்த அகங்காரத்தின் விளைவு அதலபாதாளத்தில் விழுந்து ஆறுதல் கூறக்கூட ஆட்களற்ற நிலையில் அவதியுறுவதையும் கண்ணுற்றுள்ளேன். கண்ணை மறைத்த அகங்காரம் உறவுகளை கொன்றுவிடும், நண்பர்களை விலத்திவிடும் தன்னந்தனியாகும்போது கொஞ்சக்காலத்திற்குத் தெரியாது... காலங்கடந்து தன்னைத்தானே நொந்தாலும் மீண்டும் நட்பு, பாசம் ஆகியவற்றைச் சம்பாதிக்க முடியாது... அகங்காரம் கொண்டவர்கள் திருந்தினாலும் சமூக ஏளனம் அவர்களைத் தினந்தினம் கொல்லும்.

உங்கள் கருத்திற்கு நன்றி சகாறா அக்கா.

நன்றி வாத்தியார், நல்ல கருத்துக்கள், யாழிலும் ...லருக்கு இருக்கே இந்த வருத்தம்

நன்றி உடையார் உங்கள் பதிவிற்கு.வீட்டில் மட்டுமல்ல வீதியிலும் பலருக்கு அகங்காரம் பிடித்து ஆட்டுது :)

ஒவ்வொருத்தருக்கும் தங்களிட்ட இருக்கிற ஏதாவது ஒவ்வொண்டில அகங்காரம் இருக்கும்...ஊரில ஒருத்தர் இருந்தார்..அவருக்கு வயது 22 இல வடிவான மகள் ஒருத்தி இருந்தாள்..அதுதான் அவற்றை அகங்காரம்..என்ர மகள் சிறீதேவி மாதிரி..அவளின்ற வடிவுக்கு பெரிய கோடீஸ்வரனைத்தான் கலியாணம் கட்டிவைக்கப் போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுத்திரிவார்..ஊரிலை இருக்கிற பொடியள் ஒருத்தரும் அவளைப் பாத்திடக்கூடாதெண்டு கவனமா இருப்பார் :(....ஊரிலை இருக்கிற பெடியள் எண்டா நானும் அதுக்குள்ளைதான் வாறன்..... :lol: ஊரில ஒரு போஸ்ற்மன் இருந்தார்...மூண்டு பிள்ளையள் அவருக்கு..வயசு நாற்பது..படங்களில வாற மைனர்க் குஞ்சு மாதிரி ஊருக்குள்ள எல்லாப் பெட்டையளையும் சைற் அடிப்பார்..ஒரு நாள் அதிகாலை..ஊரே நிம்மதியாத்தூங்கிக்கொண்டிருந்தது...ஆனால் பெட்டையின்ர தகப்பன் மட்டும் தூங்கவில்லை..நிம்மதியிழந்து தவித்தார்..காரணம் அவற்றை மகள் ஊர்ப் போஸ்ற்மனுடன் ஓடிப்போய்விட்டாள்...அண்டைக்குப் பெட்டையோட சேர்ந்து அவற்றை அகங்காரமும் ஓடிப்போய் விட்டது... :(

:lol: :lol: பதிவிற்கு நன்றி சுபேஸ்.

"அன்னக்கொம்பு கண்ணை மறைக்கிறது" என்று சொல்வது அகங்காரத்தை தானே??

இருக்கலாம் சரியாகத் தெரியாது நுணாவிலான். உங்கள் பதிவிற்கு நன்றி

அகங்கார‌ம் என்பது தனக்குத் தானே எல்லாம் தெரியும் என்றும்,தான் செய்வதெல்லாம் சரி என்றும்,அப்படியே தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்ட‌ வயதிற்கு தான் மன்னிப்பு கேட்கிறதா என்ட அவர்களது ஈகோ விடாது...யாழில் இப்படியானவர்கள் தான் அதிகம் அதிலும்இந்த பதிவில் வந்து கருத்து எழுதின ஒரு சிலரும் இதில் அட‌க்கம்...தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளவும்

அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது.:D உங்கள் கருத்திற்கு நன்றி ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.