Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் முகத்தை எங்காவது கண்டீரா?: கவிதை: நிழலி

Featured Replies

என் விம்பத்தை கண்ணாடியில்

பார்க்கின்றேன்

உடைந்து போன ஒரு கண்ணாடியில்

தெரியும்

சிதறிய முகமாய் எனக்கு

என் முகம் தெரிந்தது

சிதறல்களில் தெரிந்த

என் முகம்கள்

ஒவ்வொரு முகமூடி அணிந்து

இருந்தது

இப்படி முன்னம்

என் முகம் இருக்கவில்லை

அதற்கே அதற்கு என

இரு கண்கள் இருந்தன

இரு செவிகள்

இருந்தன

ஒரே ஒரு நாக்கும்

ஒரு சோடி உதடுகள்

மட்டுமே இருந்தன

எப்ப பார்த்தாலும்

இது என் முகம்

என்று உரிமை கோரியிருந்தேன்

ஆனால்

கண்ணாடியில் இப்ப தெரியும்

என் முகம் எனதில்லை

என் முகத்தை என்னிடம்

இருந்து திருடியது யார்?

என் கண்களை அகற்றி

தம் கண்களை

செருகியது எவர்?

எனக்கே எனக்காக

இருந்த குரலையும்

திருடி

அதில் தம் குரலையும்

பதிந்தவர் யார்?

என் முகம்

என் குரல்

என் பார்வை

திருடப்பட்டனவா?

அல்லது

என்னாலேயே

தொலைக்கப்பட்டனவா?

எனக்கான ஒரு சொட்டு

வசனம் கூட இன்று

எனக்கில்லை

எனக்கான வார்த்தைகளைக் கூட

திருடி கொண்டது யார்?

உடைந்து போன

அல்லது திருட்டுப் போன

கோப்பைத் தட்டில்

வாழ்க்கையை உண்ணுகின்றேன்

எனது வாழ்க்கையை

நான் உண்ட

சாப்பாட்டுக் கோப்பை

காணாமல் போயிற்றா

அல்லது

திருட்டுப் போயிற்றா

என்று கூட உணராத

ஒரு காலைப் பொழுதில் தான்

என்

முகமும் சிதைக்கப்பட்டது

என்பேன்

சிதைத்தவர்களுக்காக பல முறை

காவடி எடுத்து இருந்தேன்

என் முகத்தை

நீங்கள் போகும்

ஒரு தெருவிலோ

அல்லது

ஒரு சந்திலோ

அல்லது

ஒரு

மலசல கூடத்திலோ

கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்

அதன் உரிமையாளன்

பல ஆண்டுகள் முன்னமே

செத்துவிட்டான் என

-------------------------

நிழலி

சனவரி 08, 2012

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சினை? :D

என் விம்பத்தை கண்ணாடியில்

பார்க்கின்றேன்

உடைந்து போன ஒரு கண்ணாடியில்

தெரியும்

சிதறிய முகமாய் எனக்கு

என் முகம் தெரிந்தது

சிதறல்களில் தெரிந்த

என் முகம்கள்

ஒவ்வொரு முகமூடி அணிந்து

இருந்தது

இப்படி முன்னம்

என் முகம் இருக்கவில்லை

அதற்கே அதற்கு என

இரு கண்கள் இருந்தன

இரு செவிகள்

இருந்தன

ஒரே ஒரு நாக்கும்

இரு சோடி உதடுகள்

மட்டுமே இருந்தன

எப்ப பார்த்தாலும்

இது என் முகம்

என்று உரிமை கோரியிருந்தேன்

ஆனால்

கண்ணாடியில் இப்ப தெரியும்

என் முகம் எனதில்லை

என் முகத்தை என்னிடம்

இருந்து திருடியது யார்?

என் கண்களை அகற்றி

தம் கண்களை

செருகியது எவர்?

எனக்கே எனக்காக

இருந்த குரலையும்

திருடி

அதில் தம் குரலையும்

பதிந்தவர் யார்?

என் முகம்

என் குரல்

என் பார்வை

திருடப்பட்டனவா?

அல்லது

என்னாலேயே

தொலைக்கப்பட்டனவா?

எனக்கான ஒரு சொட்டு

வசனம் கூட இன்று

எனக்கில்லை

எனக்கான வார்த்தைகளைக் கூட

திருடி கொண்டது யார்?

உடைந்து போன

அல்லது திருட்டுப் போன

கோப்பைத் தட்டில்

வாழ்க்கையை உண்ணுகின்றேன்

எனது வாழ்க்கையை

நான் உண்ட

சாப்பாட்டுக் கோப்பை

காணாமல் போயிற்றா

அல்லது

திருட்டுப் போயிற்றா

என்று கூட உணராத

ஒரு காலைப் பொழுதில் தான்

என்

முகமும் சிதைக்கப்பட்டது

என்பேன்

சிதைத்தவர்களுக்காக பல முறை

காவடி எடுத்து இருந்தேன்

என் முகத்தை

நீங்கள் போகும்

ஒரு தெருவிலோ

அல்லது

ஒரு சந்திலோ

அல்லது

ஒரு

மலசல கூடத்திலோ

கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்

அதன் உரிமையாளன்

பல ஆண்டுகள் முன்னமே

செத்துவிட்டான் என

-------------------------

நிழலி

சனவரி 08, 2012

:):):)1 .

  • கருத்துக்கள உறவுகள்

என் முகத்தை

நீங்கள் போகும்

ஒரு தெருவிலோ

அல்லது

ஒரு சந்திலோ

அல்லது

ஒரு

மலசல கூடத்திலோ

கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்

அதன் உரிமையாளன்

பல ஆண்டுகள் முன்னமே

செத்துவிட்டான் என

நல்ல கவிதை! நிழலி!

விலாசமிழந்து போன, வேதனைகளை மிகவும், பூடகமாக வடித்துள்ளீர்கள்!

எதற்கும் உங்கள், முகத்தின் படத்தையும் (பழைய படம்) இருந்தால் கவிதையுடன் இணைத்து விடுங்கள்!

அல்லது யாருடையதாவது, முகத்தைக் கண்டெடுத்து, 'நிழலி' என்று பேர் சொல்லிக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்!>> :D

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

நல்ல கவிதை! நிழலி!

விலாசமிழந்து போன, வேதனைகளை மிகவும், பூடகமாக வடித்துள்ளீர்கள்!

எதற்கும் உங்கள், முகத்தின் படத்தையும் (பழைய படம்) இருந்தால் கவிதையுடன் இணைத்து விடுங்கள்!

அல்லது யாருடையதாவது, முகத்தைக் கண்டெடுத்து, 'நிழலி' என்று பேர் சொல்லிக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்!>> :D

புங்கை...ஒரு முறை முழு நிர்வாணமாக (நிர்வாணம் என்பது வெறும் ஆடைகள் அற்று இருப்பது அல்ல) நின்று உங்களை கண்ணாடியில் பாருங்கள்...

இன்று புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் 'நீங்களும்', நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைத்த 'நீங்களும்' ஒன்றா....?

நேரமையான பதில் 'இல்லை' என்று வந்தால் என்னுடன் சேர்த்து உங்களின் முகத்தையும் தேடுங்கள்

Edited by நிழலி

இது உங்கள் மனைவி ஊருக்கு போனதால் வந்த அடுத்த கவிதை, மனைவி திரும்பி வர தொலைந்த முகமும் கிடைத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் மனைவி ஊருக்கு போனதால் வந்த கவிதை, மனைவி திரும்பி வர தொலைந்த முகமும் கிடைத்து விடும்.

நிழலி தொலைத்து முகமா இல்லை அகமா? :o

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை...ஒரு முறை முழு நிர்வாணமாக (நிர்வாணம் என்பது வெறும் ஆடைகள் அற்று இருப்பது அல்ல) நின்று உங்களை கண்ணாடியில் பாருங்கள்...

இன்று புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் 'நீங்களும்', நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைத்த 'நீங்களும்' ஒன்றா....?

நேரமையான பதில் 'இல்லை' என்று வந்தால் என்னுடன் சேர்த்து உங்களின் முகத்தையும் தேடுங்கள்

உண்மை தான் நிழலி!

நானும் தேடுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இங்குர்ந்த வீடுகளோ

இன்றில்லை. மருத்துவக் கூடங்களில்,

காலுக்கொரு தலையும்

தலைக்கிரு கண்களும்

தான் காணக் கிடைக்கின்றன

இந்த கவிதை ஊரில் இருப்பவர் ஒருவர் எழுதியது

  • கருத்துக்கள உறவுகள்

காலமும் அது செய்த கோலங்களும் தான் இவை

இரட்டைத்தனம் என்பது உள்ளுக்குள் இருக்கும்வரை,

முகமூடிகள் என்பவையும்...

தற்காலிக மானங்காக்கும்...

அது, அவை, அவற்றின் கோவணங்கள்தான்!

ஒரு மனதோடு ஒருங்கி வாழ

ஒறுத்து வாழல் என்பதற்கு ,

மனிதம் மறந்துபோன வதங்களிற்கு,

காவியுடையும் புதிதாய் வந்த கோவணந்தான்!

கண்டவரை, கொண்டவரை...

கனவிலும் காமந்தனை தின்ற வரை,

கண்ணீரில், செந்நீரில் மிதந்த ஊரவரை...

கொன்று போட்டுப் புதைத்ததும்...

மானிடம் மறந்த... மனித முகமூடிகள்தான்!

வெண் சூட்டுத் துளிகளை...

வெளியேற்றப் போராடிய பாவீரர்கள்!

வேஷம் போட்டுக் காப்பாற்ற காவிட வேண்டும்,

உரிந்தெறியப்பட்ட தமிழரின் இறுதியாடையாம்...

குதிதோய்ந்த தமிழரின் கோவணத்தைத்தான்!

தெறித்த கண்ணாடித் துகள்களில்,

தெரியும் அந்நிய முகங்களினைப் பார்த்து...

எரிந்துபோய் சாம்பலாய் விழுவது,

இலட்சியங்களைச் சுமந்த...

அக்கினி நட்சத்திரங்களுந்தான்!

என் வீட்டுக் கண்ணாடிமுன் நான் நின்று பார்க்கும்போது,

என் வீடும் பேய்வீடாய்த்தான் தெரிகின்றது.

ஒன்றில் அழுகுரல் கேட்கும் அன்றேல், சிரிப்பொலி கேட்கும்!

அணுங்கிச் சிணுங்கி வெம்பி வெடித்திடும் அழுகையில்,

சிதறிடும் கண்ணீர்த் துளிகளில் மட்டுமே...

நான் நானாகத் தெரிகின்றேன்!

நான் அழக்கூடிய நாட்களும்...

அரிதாகி வருகின்றது எனக்கு!!!

******************************************************************************************************

தங்களின் பலவரிகளில்........ என் வீட்டு கண்ணாடியின் முன், நானும் ....... குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய தருணங்களை உணர்ந்தேன்.

Edited by கவிதை

அருமையான கவிதை நிழலி. உங்களைப்போலவே பலர் இன்று தம் கனவுகளை நிஜங்களிடம் பறிகொடுத்தவர்களாகவே உள்ளனர். ஒன்ற கனவுகளைக் காப்பாற்ற போராட சக்தியில்லை. அல்லது அதைக் காப்பாற்றும் நேரத்தில் நிஜங்கள் தொலைந்துவிடுமோ என்ற பயம். வாழ்க்கையில் இரண்டு வலிகளில் ஒன்றை அனுபவித்தே தீரவேண்டும். போராட்டத்தின் வலி அல்லது போராடவில்லையே என்ற மனவருத்தம். என்னைப் பொறுத்தவரை இரண்டாவது வலி முதலாவதை விடக் கொடுமையானது. இந்தக் கவிதை அதிலிருந்துதான் பிறந்தது என்று நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

என் விம்பத்தை கண்ணாடியில்

பார்க்கின்றேன்

உடைந்து போன ஒரு கண்ணாடியில்

தெரியும்

சிதறிய முகமாய் எனக்கு

என் முகம் தெரிந்தது

சிதறல்களில் தெரிந்த

என் முகம்கள்

ஒவ்வொரு முகமூடி அணிந்து

இருந்தது

இப்படி முன்னம்

என் முகம் இருக்கவில்லை

அதற்கே அதற்கு என

இரு கண்கள் இருந்தன

இரு செவிகள்

இருந்தன

ஒரே ஒரு நாக்கும்

ஒரு சோடி உதடுகள்

மட்டுமே இருந்தன

எப்ப பார்த்தாலும்

இது என் முகம்

என்று உரிமை கோரியிருந்தேன்

ஆனால்

கண்ணாடியில் இப்ப தெரியும்

என் முகம் எனதில்லை

என் முகத்தை என்னிடம்

இருந்து திருடியது யார்?

என் கண்களை அகற்றி

தம் கண்களை

செருகியது எவர்?

எனக்கே எனக்காக

இருந்த குரலையும்

திருடி

அதில் தம் குரலையும்

பதிந்தவர் யார்?

என் முகம்

என் குரல்

என் பார்வை

திருடப்பட்டனவா?

அல்லது

என்னாலேயே

தொலைக்கப்பட்டனவா?

எனக்கான ஒரு சொட்டு

வசனம் கூட இன்று

எனக்கில்லை

எனக்கான வார்த்தைகளைக் கூட

திருடி கொண்டது யார்?

உடைந்து போன

அல்லது திருட்டுப் போன

கோப்பைத் தட்டில்

வாழ்க்கையை உண்ணுகின்றேன்

எனது வாழ்க்கையை

நான் உண்ட

சாப்பாட்டுக் கோப்பை

காணாமல் போயிற்றா

அல்லது

திருட்டுப் போயிற்றா

என்று கூட உணராத

ஒரு காலைப் பொழுதில் தான்

என்

முகமும் சிதைக்கப்பட்டது

என்பேன்

சிதைத்தவர்களுக்காக பல முறை

காவடி எடுத்து இருந்தேன்

என் முகத்தை

நீங்கள் போகும்

ஒரு தெருவிலோ

அல்லது

ஒரு சந்திலோ

அல்லது

ஒரு

மலசல கூடத்திலோ

கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்

அதன் உரிமையாளன்

பல ஆண்டுகள் முன்னமே

செத்துவிட்டான் என

-------------------------

நிழலி

சனவரி 08, 2012

நிழலி உண்மையின் தரிசனம்

சின்னவயதில் கண்ணாடியில் எதிரொலித்த ஒற்றைமுகத்தை இனி எம்மால் தேடி கண்டுபிடிக்கமுடியாது. மாயைகளால் பின்னப்பட்ட பிம்பங்களுக்குள் எங்கோ தொலைந்துபோய் எண்ணச்சுழிகளில் மட்டும் முகம் காட்டிச் செல்லும் ஏதோ சில பொழுதுகள் மட்டுமே அதனை நாம் மறுபடியும் மறுபடியும் தேடும் உந்துதலை அதிகரிக்கும்.. அப்படியொரு உந்துதல்தான் இத்தகைய கவிதையை படைத்திருக்கும். பலர் சொல்வார்கள் தனிமை சிறை என்று உண்மை அதுவல்ல தனிமை என்பது எம்மைத் தேடலுக்குள் இட்டுச் செல்லும் இயக்கம்...

நிழலி இப்போது முன்பைக்காட்டிலும் ஆழமாக உங்கள் எண்ணங்கள் பயணிக்கும் சக்தியுடையவையாக வளர்ந்திருக்கும். தேடலால் தின்னப்பட்ட மனிதனாக இந்தக்கவிதையின்மூலம் உங்களைப்பார்க்கமுடிகிறது... அட நம்ம நிழலிக்குள்ளும் தேடல்கள் புதையுண்டு இருக்கினறனவா?

  • கருத்துக்கள உறவுகள்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை மெய் தேடத்தொடங்கியதே...நானும் தேடித்தேடித் தொலைந்து போகிறேன் கவலைகள் எதுவுமின்றி என் தாய் மடியில் தலைவைத்து நிம்மதியாகத் தூங்கிய என் குழந்தைக் காலங்களை.... :( :(

  • தொடங்கியவர்

பதில் தந்த அனைவருக்கும் நன்றிகள்

வாழ்க்கையில் எத்தனைவற்றுடன் சமரசம் செய்து கொள்ள முயல்கின்றோம். சமரசம் செய்ய வேண்டியவற்றுக்கு சமரசம் செய்யாமல், வெறும் வாழ்க்கையில் உயரப் போக வேண்டும் என்றதற்காக சமரசம் செய்து சமரசம் செய்தே எங்களின் முகம்களை தொலைத்து விடுகின்றோம். இளம் வயதில் இருந்த தவறுகளை சகிக்காது எதிர்ப்பதில் இருந்த ஆவேசம், உண்மைகளை எவருக்கும் அஞ்சாமல் சொல்கின்ற துணிவு, துயரில் இருப்பவர்களுக்கு லாப நட்டம் பார்க்காது ஓடிச் சென்று உதவும் குணம், அடிப்படை குணங்களை விட்டுக் கொடுக்காமல் முன்னேற துடிக்கும் நெஞ்சுரம்.....இப்படி எல்லாமும் கொண்ட எம் முகம் பொருளாதாரத்தை ஈட்டுவதே சவாலாகிப் போன வாழ்க்கை முறையில் தொலைத்து விட்டு நிற்கின்றோம்

கவிதையின் கவிதைக்கு ஒரு பச்சை புள்ளி

இரட்டைத்தனம் என்பது உள்ளுக்குள் இருக்கும்வரை,

முகமூடிகள் என்பவையும்...

தற்காலிக மானங்காக்கும்...

அது, அவை, அவற்றின் கோவணங்கள்தான்!

ஒரு மனதோடு ஒருங்கி வாழ

ஒறுத்து வாழல் என்பதற்கு ,

மனிதம் மறந்துபோன வதங்களிற்கு,

காவியுடையும் புதிதாய் வந்த கோவணந்தான்!

கண்டவரை, கொண்டவரை...

கனவிலும் காமந்தனை தின்ற வரை,

கண்ணீரில், செந்நீரில் மிதந்த ஊரவரை...

கொன்று போட்டுப் புதைத்ததும்...

மானிடம் மறந்த... மனித முகமூடிகள்தான்!

வெண் சூட்டுத் துளிகளை...

வெளியேற்றப் போராடிய பாவீரர்கள்!

வேஷம் போட்டுக் காப்பாற்ற காவிட வேண்டும்,

உரிந்தெறியப்பட்ட தமிழரின் இறுதியாடையாம்...

குதிதோய்ந்த தமிழரின் கோவணத்தைத்தான்!

தெறித்த கண்ணாடித் துகள்களில்,

தெரியும் அந்நிய முகங்களினைப் பார்த்து...

எரிந்துபோய் சாம்பலாய் விழுவது,

இலட்சியங்களைச் சுமந்த...

அக்கினி நட்சத்திரங்களுந்தான்!

என் வீட்டுக் கண்ணாடிமுன் நான் நின்று பார்க்கும்போது,

என் வீடும் பேய்வீடாய்த்தான் தெரிகின்றது.

ஒன்றில் அழுகுரல் கேட்கும் அன்றேல், சிரிப்பொலி கேட்கும்!

அணுங்கிச் சிணுங்கி வெம்பி வெடித்திடும் அழுகையில்,

சிதறிடும் கண்ணீர்த் துளிகளில் மட்டுமே...

நான் நானாகத் தெரிகின்றேன்!

நான் அழக்கூடிய நாட்களும்...

அரிதாகி வருகின்றது எனக்கு!!!

******************************************************************************************************

தங்களின் பலவரிகளில்........ என் வீட்டு கண்ணாடியின் முன், நானும் ....... குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய தருணங்களை உணர்ந்தேன்.

:):):) 2 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.