சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
-
- 0 replies
- 711 views
-
-
குழாய் நீர் வசதி எங்கள் ஊருக்கு வந்த பிறகும் எங்கள் வீட்டிற்கு மட்டும் இணைப்பைப் பெறாமலிருந்தோம். எந்தக் காலத்திலும் வற்றாத கிணறு வளவில் இருந்தது. நல்ல தண்ணீர். எந்தக் குறையும் இல்லை. எதற்கு குழாய் நீர் என்று நான் சாதாரணமாக கேட்டுவிட்டு இருந்துவிட்டேன். ஊரில் வீட்டில் வசிக்கும் உம்மா, ”இந்த பீ.எச்.சைகளின் தொல்லை தாங்கவில்லை” என்று அடிக்கடி புலம்பிக் கொண்டேயிருந்தார். (Public Health Inspector (PHI) ”ஊரில் உள்ள எல்லா சீமெந்துத் தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆர்பிக்கோ டாங்கி மட்டுந்தான் பயன்படுத்தலாம்” என்றார்கள். சீமெந்து டாங்கிகள், சுத்தமாக கழுவிப் பயன்படுத்தினால் எந்தக் குறைபாடுகளும் இல்லாதது. முதலாளித்துவத்திற்கு இந்த அதிகாரிகள் எ…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு: அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களை விநியோகித்த நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. 'அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடு களுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடை யாது' என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி…
-
- 0 replies
- 619 views
-
-
https://www.facebook.com/groups/1838618882939539/permalink/2225319530936137/
-
- 3 replies
- 961 views
- 1 follower
-
-
Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கி…
-
- 1 reply
- 877 views
-
-
வாங்க இண்டைக்கு நாம வீட்டுக்கு மீன், இறைச்சி வெட்ட ஒரு கத்திவாங்குவம், அத கடையில வாங்காம ஒரு பட்டறைக்கு போய் நாங்களே நமக்கு பிடிச்ச ஒரு வடிவத்தில, வில்லுதகடுல கத்தியா செய்வம் வாங்க. எப்பிடி வில்லுத்தகடா இருக்க ஒரு துண்டு கத்தியா மாற்றமடையுது எண்டு ஒவ்வொரு படிமுறையா உங்க கூட பகிர்ந்து இருக்கன், பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. ஒரு கத்தியின் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டு நீங்க நினைக்கிறீங்க சொல்லுங்க, யார் சரியா சொல்லுற எண்டு பாப்பம். https://youtu.be/FRJIyjtm4PY
-
- 0 replies
- 994 views
-
-
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை கூட்டணிப் பிச்சைகளும், தனித்துப்போட்டியிடுதலும் தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 16 ஆவது சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதியில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 72.78% of 6,28,69,955 = 4,57,56,754 அப்படி என்றால் 6,28,69,955 வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இதில் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 29,58,458. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இந்த முறை 6.85% சதவீதம் வாக்கு பெற்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 27.22% ஒரு க…
-
- 0 replies
- 959 views
-
-
ஓர் அகதியின் மரணம்...! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...! அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது. அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..! அந்த இளை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 859 views
-
-
ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை. நான் ஒரு அடிமை-தமிழன் இல்லையே. நான் ஒரு திமிர்-தமிழனாச்சே..! தமிழருக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கோ சிக்கல் வரும்போது நான் வாயை மூடிக்கொண்டு இருப்பதில்லையே..! நான் அவர்கள் மொழியிலே பேசி, அவர்களின் விகார…
-
- 1 reply
- 971 views
-
-
யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான். இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும். அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி …
-
- 7 replies
- 1.7k views
-
-
மீன் கறி என்ற வஸ்து சிம்ரன் போன்றது. யாரோடு சோடி சேர்ந்தாலும் நன்றாகத்தானிருக்கும். பிட்டின் மீது குழம்பை வார்த்துவிட்டு இரண்டு மீன் துண்டை தட்டின் ஓரத்தில் தட்டிவிட்டு, ஆறுதலாக உள்ளே அனுப்பினாலென்னா, சுடுசோற்றின் மீது தலையோடு கவிழ்த்து போட்டுவிட்டு ஆய்ந்து ஆய்ந்து ஒரு சிறுபோர் நடத்தினாலென்ன, பாண் - தோசை - இட்லி - இடியப்பம் என்றெல்லாம் களமாடி, கடைசியாக Mc Donlald's பேகரோடுகூட சாப்பிட்டுப்பார்த்திருக்கிறேன். மீனின் வம்ஸமே ஒரு தனி அம்ஸம்தான். இவ்வாறு நினைவிலேயே எப்போதும் நீந்துகின்ற கலாதியான கடற்கரும்பு எது என்று நாயிடம் கேட்டால்கூட, வாலை ஆட்டிக்கொண்டு சொல்லும் "மீன்தான்" என்று. ஆனால், போன மாதம் Netflix வெளியிட்டிருக்கின்ற Seaspiracy என்ற ஆவணப்படத்தை பார்த…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிலோன் விஜயேந்திரன் திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன். ’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ ’நீங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருந்த்து. அப்போதிருந்து நல்ல நண்பரானார். …
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழரும் போர்க் குற்ற விசாரணையும் ! =============================== உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மற்றும் உரிமை மறுக்கப்படும் இனங்கள், சமூகக் குழுக்கள் தமது உரிமைக்காவும் இருப்புக்காவும் பல்வேறு முறைகளில் போராடி வந்திருக்கின்றன. அவ்வாறு போராடியவர்கள் ஆயுதமுனையிலும் சட்டத்திற்கு முரணான வகையிலும் அடக்கி மௌனிக்கச் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். அத்தோடு சந்தேகத்தின் பேரில் எத்தனையோ அப்பாவிகள் கொல்லபட்டிருக்கிறார்கள் அல்லது விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான சகல ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்த சமூகமாகவே…
-
- 0 replies
- 780 views
-
-
தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் ! ================================ ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் ! கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும் ஆய்வுகூட அற…
-
- 0 replies
- 762 views
-
-
தமிழரால் தமிழருக்கு ....... ! ==================== தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தமது இருப்பைத் தக்க வைக்கவும், தமக்கு எதிராக பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நியாயம் வேண்டியும் ஜனநாயக முறையில் போராடும் வேளையில் தமிழ் மக்களின் முக்கியமான பொதுப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கருத்துக்களை தொடர்ச்சியாக காவிச் செல்லும் சக்திகள் யார்? திட்டமிடப்பட்ட பின்புலங்களின் செயல்பாடுகளே இவர்கள் மூலம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றே ஊகிக்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் பல கொடுமுடிகள் அணிவகுத்து நிற்பதும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் புறவயச் சூழலுக்குள் தள்ளிவிட முனைவதையும் ந…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !! =============================== ” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது. இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான். தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்…
-
- 0 replies
- 5.4k views
-
-
<மன்னன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்> Mano Ganesan https://www.facebook.com/mano.ganesan.3 கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார். இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி…
-
- 14 replies
- 1.5k views
-
-
ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 24) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. தமிழாக்கம் : ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக இங்கு ஆற்றப்படும் உரைகளை அவதானித்து வருகிறேன். அநேகமாக எல்லா அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களும் தமதுரைகளில், இன்று இச்சபையில் திரு. எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த சில கருத்துகள் தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரான சுமந்திரன் தனதுரையில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தமையை பாராட்டியிருக்கிறார் அல்லது வரவேற்றிருக்கிறார். இங்கு உரையாற்றிய அரச தரப்பு நாட…
-
- 0 replies
- 564 views
-
-
பெறுனர்: முத்துசாமி, தலைவர் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி தலைமைச் செயலகம் --------------------?? “என்ன கட்சி, நம்ம கட்சி?” *************************** அன்புள்ள முத்துசாமி அவர்களுக்கு, முதலில் உங்கள் இலங்கை பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் திடீரெண்டு கட்சி தொடங்கினது எங்களுக்கெல்லாம் சரியான அதிர்ச்சியெண்டால், அதைவிட அதிர்ச்சி நீங்கள் ஆறு மாசத்துக்கு முதலே இந்தக் கட்சி தொடங்கிட்டன் என்று சொன்னதுதான். உங்கட ஊடக மகாநாட்டில நீங்கள் கதைச்சதைக் கேட்டாப் பிறகு உங்களை நிறையக் கதைக்கோணும், கேள்விகள் கேட்கவேணும் போல கிடந்துது. அதுதான் இந்தக் கடிதம் எழுதுறன். போன மாசம்தான் திடீரெண்டு திரிபுரா முதல்வர், இலங்கையிலையும் நேபாளத்திலையும் பா.ஜ.க. …
-
- 0 replies
- 848 views
-
-
சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021 ================================ உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற…
-
- 0 replies
- 891 views
-
-
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப…
-
- 2 replies
- 1.2k views
-
-
குழந்தையைத் துன்புறுத்திய தாய் !? ============================= கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் அதிகம் விமர்சனத்திற்கும் ஆளான ஒரு வீடியோ, ஒரு இளம் தாய் தனது ஏழு மாதக் குழந்தையை ஒரு தடியினால் தனது கோபம் தீரும் மட்டும் அடிக்கும் காட்சியே. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனது குழந்தையை அடித்து இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து அங்கும் அடிக்கிறார். குழந்தை கதறி அழுகிறது. அந்தப் பெண்ணின் சகோதரன் என்று சொல்லப்படுபவர் இதனைக் கவனமாக வீடியோ எடுக்கிறார். நடு வீட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல (கண் விழித்தபடி) படுத்திருக்கிறார். பிந்திக் கிடைத்த தரவுகளின்படி அந்தப் பெண்மணி மத்ஹ்டிய கிழக்கி…
-
- 0 replies
- 1k views
-