சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
பெறுனர்: முத்துசாமி, தலைவர் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி தலைமைச் செயலகம் --------------------?? “என்ன கட்சி, நம்ம கட்சி?” *************************** அன்புள்ள முத்துசாமி அவர்களுக்கு, முதலில் உங்கள் இலங்கை பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் திடீரெண்டு கட்சி தொடங்கினது எங்களுக்கெல்லாம் சரியான அதிர்ச்சியெண்டால், அதைவிட அதிர்ச்சி நீங்கள் ஆறு மாசத்துக்கு முதலே இந்தக் கட்சி தொடங்கிட்டன் என்று சொன்னதுதான். உங்கட ஊடக மகாநாட்டில நீங்கள் கதைச்சதைக் கேட்டாப் பிறகு உங்களை நிறையக் கதைக்கோணும், கேள்விகள் கேட்கவேணும் போல கிடந்துது. அதுதான் இந்தக் கடிதம் எழுதுறன். போன மாசம்தான் திடீரெண்டு திரிபுரா முதல்வர், இலங்கையிலையும் நேபாளத்திலையும் பா.ஜ.க. …
-
- 0 replies
- 840 views
-
-
சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021 ================================ உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற…
-
- 0 replies
- 883 views
-
-
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப…
-
- 2 replies
- 1.2k views
-
-
குழந்தையைத் துன்புறுத்திய தாய் !? ============================= கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் அதிகம் விமர்சனத்திற்கும் ஆளான ஒரு வீடியோ, ஒரு இளம் தாய் தனது ஏழு மாதக் குழந்தையை ஒரு தடியினால் தனது கோபம் தீரும் மட்டும் அடிக்கும் காட்சியே. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனது குழந்தையை அடித்து இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து அங்கும் அடிக்கிறார். குழந்தை கதறி அழுகிறது. அந்தப் பெண்ணின் சகோதரன் என்று சொல்லப்படுபவர் இதனைக் கவனமாக வீடியோ எடுக்கிறார். நடு வீட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல (கண் விழித்தபடி) படுத்திருக்கிறார். பிந்திக் கிடைத்த தரவுகளின்படி அந்தப் பெண்மணி மத்ஹ்டிய கிழக்கி…
-
- 0 replies
- 996 views
-
-
கடிதமும் கடந்து போகும் ! ===================== நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தாளில் நண்பருக்கோ உறவினருக்கோ கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? போன வாரம்? போன மாதம்? போன வருடம்? அல்லது சில வருடங்களுக்கு முன்னர்? ஆமாம், இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் ஒன்றுதான் கடிதம். ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது பிரதான தொடர்பாடல் ஊடகமாக கடிதமே இருந்தது. அதற்கு தந்தி, தபால் அட்டை, inland letter, aerogram, air mail என்று வேறுவேறு வடிவங்களும் இருந்தன. Inland letter இந்தியாவில் மக்களிடையே உள்ளூர் கடிதத் தொடர்பில் அதிகம் புழக்கத்தில் இருந்தது. இதற்கு தனியாக கடித உறை மற்றும் முத்திரை தேவையில்லை (Ready made ஆடை போல). …
-
- 0 replies
- 1.2k views
-
-
அ.தி.மு.க-வை வீழ்த்த அ.ம.மு.க-வை பயன்படுத்துகிறதா பா.ஜ.க? - வானதி ஸ்ரீநிவாசன் கூறுவது என்ன?
-
- 0 replies
- 1.1k views
-
-
கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வை…
-
- 1 reply
- 936 views
-
-
Mano Ganesan - மனோ <சரித்திரம் திரும்புகிறது> 1990 வருடத்தில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், அன்று கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவிடம், முறையீடு செய்ய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்பி மஹிந்த ராஜபக்ச ஜெனீவா போனார். அவருடன் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, வாசுதேவ நாணயக்கார, நிமல்கா பென்ணான்டோ ஆகியோரும் போனார்கள். ஜ…
-
- 0 replies
- 912 views
-
-
விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?? வரலாற்றை நோக்குகின்ற பொழுது விகாரைகள் தென்பட்டால் அது சிங்களவர்களினுடையது என்று தமிழர்களுக்கு இருக்கும் பார்வையும், சிங்களவர்களு நாம் உருவாக்கிய அந்த பார்வையும் மிக பிழையானது. சமயத்தின் கொள்கைகளுக்கான யுத்தம், குடிகளுக்கான யுத்தம், சாதிகளுக்கான யுத்தம் என்பது ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் இருந்து ஒரு விடையத்தை அணுகுகின்ற பொழுது இன்று இருக்கும் மனநிலை, பழக்கவழக்கம், நடைமுறை மற்றும் அரசியல் நிலை கொண்டு நாம் வரலாற்றை அணுகுகிறோம். இது உண்மையில் பிழையான ஒரு விடையத்தையே தருகின்றது. ஒரு விடையத்தை நாம் பொது மேடையில் வைக்கின்ற பொழுது அதன் உண்மை தன்மையை எந்தவொரு தரப்பும் கேள்வி கேற்கும் வண்ணம் அம…
-
- 2 replies
- 1.5k views
-
-
தேசிய கீதமும் சைமன் காசிச் செட்டியின் நினைவும். தேசிய கீதம் தோன்றுவதற்கு முன்னரே,இலங்கையின் நீளத்தையும் சுற்றளவையும் அளந்து அறிவித்தவர் ஒரு தமிழர் என்ற நினைவை இந்நாட்களில் பதிவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இலங்கையின் அட்ச தேசாந்திரத்தையும் நீள அகலத்தையும், சுற்றளவையும் முதன்முதலாக ஐரோப்பிய நில அளவையாள நிபுணர்கள் வியக்கும் வகையில் அளந்து கணித்து நிதானமாக அறிவித்த பெரியார் சைமன் காசிச்செட்டி என்னும் தமிழரே. இன்றைக்கு உடனுக்குடன் வரும் சட்ட மாற்றங்களை அறிக்கைகளை வெளியிடும் அரசாங்க வர்த்தமானி (கசற்) வருவதற்கு முன்னோடி அவரே. பிரித்தானிய அரசுக்கு முதலே, இலங்கை பற்றிய செய்திகளையும், எல்லாவிதமான தகவல்களையும் திரட…
-
- 0 replies
- 1.1k views
-
-
எண்ணித் துணிக கருமம் ! #P2P ======================== கடந்த மூன்றாம் திகதி போலீசார், இலங்கையின் நீதித்துறையின் தள்ளுமுள்ளுடன் ஆரம்பித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P பேரணி இன்று இறுதிநாளாக யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறவுள்ளது. இது ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் இதற்கான ஆதரவு பெருகியதுடன், வடக்குக் கிழக்கின் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மலையகத் தலைவர்களும் கலந்து கொண்டதையும் ஆதரவு வழங்கியதையும் காண முடிகிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் மொழிபேசும் அனைத்து சிறுபான்மை மக்களும் இணைந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல நாடுகளின் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி ம…
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கையின் சுதந்திர தினமும் சிறுபான்மை இனமும் ! =========================================== இலங்கையில் மீண்டும் ஒரு சுதந்திர தினம் ஒரு தேசம், ஒரு கொடி, ஒரு மொழியெனக் கொண்டாடப்பட்டுள்ளது. வழமைபோல இம்முறையும் “இது எமது கொடியில்லை, தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை” போன்ற தமிழர் மத்தியில் கருத்துரைகளைப் பார்க்க முடிந்தது. அதேநேரம் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்ற ரீதியிலான பதிவுகளை சில சிங்கள நண்பர்களின் பதிவுகளில் காண முடிந்தது. சிலர் தமிழர்கள், நாட்டின் தலைவர் சிங்களத்தில் மட்டுமே உரையாற்றியதைச் சுட்டிக் காட்டியிருந்தனர். அரசு இவை எதையும் கணக்கில் எடுக்காது, வழமைபோல தனது பாணியில் 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. சனாதிபதி தனது உரைய…
-
- 0 replies
- 604 views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க படாமையால் இலங்கையின் 73-வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை வடிவேல்_சுரேஷ் https://www.facebook.com/100006954105374/videos/2977930355782072
-
- 0 replies
- 606 views
-
-
மியான்மாரும் இலங்கையும் ====================== ஒரு நாடு இராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குவது நல்லதே. ஆனால் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவது வரவேற்கத்தக்கதல்ல. மியான்மாரின் ஆங் சான் சூ கீ மீண்டும் இராணுவப் புரட்சியின் விளைவாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல வருடங்கள் இவர் இராணுவத்தின் வீட்டுக் காவல், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை என சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்தான். அன்று அவர் சிறையில் இருக்கும்போது சமாதான தேவதையாகவே உலகினால் அடையாளப்படுத்தப்பட்டார். 1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் கடந்த தசாப்த காலத்தில் தொடர்ச்சியாக மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப…
-
- 0 replies
- 575 views
-
-
Thank You, LARRY KING !!! , LARRY KING, அமெரிக்க ஊடகத்துறையில் 63 ஆண்டுகள் கோலோச்சிய ஜாம்பவான். அவருடைய 87வது வயதில் இன்று (January 23, 2021) காலமானார். ஆட்சியாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை, ஆறு தசாப்தங்களில் சுமார் 50,000 நேர்காணல்களூடாக வரலாற்றைப் பதிவுசெய்த சாதனையாளன். 9 வயதிலேயே தந்தையை இழந்த King, பாடசாலைப் படிப்போடு கல்வியை நிறுத்திவிட்டு, ஊடகவியலாளராகும் கனவுடன் பயணப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் நா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் நா.உ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நேரலை இணையரங்க கலந்துரையாடல் நிகழ்வு! தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்" https://www.facebook.com/CanadianTamilCongress/videos/472379530591148
-
- 0 replies
- 774 views
-
-
உணவு பழக்கமும் வாழ்வு முறையும் https://www.facebook.com/makkalkalaipanpaaddukalam/videos/807207396491622 கலந்துரையாடுபவர்: மருத்துவர் சதிஷ் முத்துலிங்கம் நெறிப்படுத்தல்: புவி தயாரிப்பு: மக்கள் கலை பண்பாட்டுக் களம்
-
- 0 replies
- 820 views
-
-
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? https://www.facebook.com/keethan.au/videos/1807375296224021
-
- 0 replies
- 791 views
-
-
புத்தர் சிலையும் நினைவுத் தூபியும் ============================ யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் மீண்டும் இடித்த கைகளே அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே இன்னமும் அது கட்டப்படுமா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமும் அது நினைவுத் தூபியாகக் கட்டப்படாது. மாறாக அது சமாதானத் தூபியாக கட்டப்படும்; அதன் மூலம் தூபி எதற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் என்ற இன்னொரு விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிளிநொச்சியில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட செய்தி வேறு வேறு அனுமானங்களையும் சந்தேகங்களையும் …
-
- 2 replies
- 976 views
-
-
சிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது
-
- 0 replies
- 1.3k views
-
-
2021 வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுமா ?
-
- 2 replies
- 965 views
-
-
வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/001-1602249677607-696x348.png பாரதிராஜா எண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு தமிழ்ப்பிள்ளையாய் பாஜகவைக் கேள்விகேட்பேன் : சீறும் செந்தில்வேல்
-
- 0 replies
- 771 views
-
-
இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு ================================== சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளில் ஒன்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசையும் வகையில் சிறுபான்மை இனத்தவர்களில் இருந்து பலரை ஈர்த்து வைத்திருப்பதாகும். அந்த அடிப்படையில் தான் நாம் பல விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்ற வழி சமைக்கும். சம்பவம் ஒன்று: பேராசிரியர் சுரேன் ராகவன் இந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில், கனடிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றில் உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே மாதம் தமிழர் இனவழிப்பு வாரம் அனுஷ்டிக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பது தவறு, இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்கிறார…
-
- 2 replies
- 1k views
-
-
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகள…
-
- 0 replies
- 746 views
-