மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் – சு. அரங்கநாதன் முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற…
-
- 3 replies
- 10.2k views
-
-
நம் முன்னோர்கள் வடிவமைத்த, ஆலயங்களின் வியக்கவைக்கும் இரகசியங்கள்..
-
- 0 replies
- 473 views
-
-
தமிழர்கள் கோயிலில் ஆரியர்கள் எதற்கு? Pe. Maniyarasan Interview
-
- 1 reply
- 500 views
-
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60,000 முதல் 70, 000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகளும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரேயொரு லட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங…
-
- 0 replies
- 429 views
-
-
திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார். இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம். இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும…
-
- 0 replies
- 974 views
- 1 follower
-
-
ஈஷா மையம் என்ற மிகப்பெரிய நிருவனத்தலைவரும், கார்ப்பரேட் சாமியார்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்களில் ஒருவருமான ஜக்கி வாசுதேவ் எனும் சத்குருக்கு கண்டனம் தெரிவிக்கும் பதிவு. இது அரசியல் சார்ந்த பதிவல்ல மதம் சார்ந்த குழப்பங்களுக்கு கண்டனம். கிரகண காலத்தில் உணவு உண்ணலாமா என்ற கேள்விக்கு (நிகழ்ந்த சந்திர கிரகணம் சமயத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு) சந்திர கிரகணம் நடக்கும் முழு நிலவு நாளில் பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கும் அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கும் குறிப்பிட்ட கிரகண காலத்திலேயே நடக்கிறது அதனால் உணவு ஒரே நாளில் 28 நாட்கள் பழமையடைகிறது நஞ்சாகிவிடுகிறது என்பது போல் ஒரு அறிவார்ந்த பதிலை கொடுக்கிறார். கேள்வி :- சர்வ வல்லமை பொருந்தியவர் கடவுள் என்று சொல்லிவிட…
-
- 2 replies
- 1k views
-
-
செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார். இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள். மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்ற…
-
- 4 replies
- 546 views
-
-
-
- 0 replies
- 600 views
-
-
கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் - போராடும் வடமாநில இளைஞர் 22 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார். கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக…
-
- 4 replies
- 965 views
- 1 follower
-
-
மங்கலேஷ் டப்ரால் மூத்த பத்திரிகையாளர், பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. பொழிப்புரை : நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளா…
-
- 0 replies
- 899 views
- 1 follower
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்குறள் பொது நூலா? சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் …
-
- 130 replies
- 25k views
-
-
நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன. உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன். …
-
- 75 replies
- 11.1k views
- 1 follower
-
-
“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர். இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள் *திருநீறு இட்டார் கெட்டார்..* *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று எழுதி இருந்தார்கள். உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார். அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார். “சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார். அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார். “திரு நீற…
-
- 3 replies
- 1.6k views
-
-
அம்புலிமாமாக் கதை இராமாயணம் ஆக்கப்பட்டது. இராமாயணம் நடந்தாக கூறப்பட்ட காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்ததாக கூறப்பட்ட இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) 1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பௌத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்கள…
-
- 1 reply
- 2.8k views
-
-
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம். இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள். திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள். உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க …
-
- 0 replies
- 2.8k views
-
-
பூமியை கவர்ந்து சென்ற இரண்யாட்சகன் என்ற அரக்கன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். (கடல் எங்கு இருந்தது என்று அறிவு பூர்வமாக கேட்க கூடாது, கேட்டால் கடும் கோபம் வரும் எனக்கு) ஆலிலைஇல் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) அவதாமெடுத்து பூமிக்குள் சென்று1000 வருடங்கள் போர் புரிந்த்து அந்த அசுரனை கொன்றதோடு அந்த பூமியை தனது கொம்பில் தாங்கி வந்தார். இதன் போது பூமாதேவியோடு விஷ்ணுவுக்கு ஏற்பட்ட ஸ்பரிதத்தில் அதாவது உடலுறவில் நரகாசுரன் என்ற அசுரன் பிறந்தான். (இது எப்படி சாத்திம் என்றும் கேட்க கூடாது) அவன் தேவர்களையும் பூலோக மக்களையும் கொடுமை செய்தான். அவனது அட்டூழியங்களை பொறுக்க முடியாத பிரமா பெருமாளிடம் முறையீடு செய்தார். நரகாசுரன் தனது தாய…
-
- 45 replies
- 4.4k views
-
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... பலரும் தமது கற்பனைக்கு ஏற்ப, விநாயகர் வடிவங்களை உருவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு.... டிஜிடல் பிள்ளையார்.. எலி எப்படி செய்யப் பட்டுள்ளது என பாருங்கள். வெங்காய பிள்ளையார். முளை விட்ட வெங்காயத்தில் எலி.
-
- 3 replies
- 1.6k views
-
-
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை இந்து கடவுள் ராமன் வெற்றி கொண்டதை, நன்மை தீமையை வென்றதன் அடையாளமாக கருதி தசரா விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராமனைப் போன்று ராவணனையும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் கூறுகையில், ‘தசரா விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும். ஆனால், இங்கு மட்டும் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதில்லை, ராவணனின் அற…
-
- 1 reply
- 699 views
-
-
இந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை. குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் என்று அல்லோகலபடுகின்றன. இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு மு…
-
- 50 replies
- 6k views
-
-
கொலு எனும் நவராத்திரி திருவிழா. ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை. நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது. பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும். ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திர…
-
- 48 replies
- 9.8k views
-
-
“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா by வல்லினம் • February 1, 2018 • 8 Comments தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’ இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும் அமைப்பையும், பின்பு தலித் மாணவ-மாணவியர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கியவர். அதே காலக்கட்டத்தி அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு அடித்தளமிட்டவர். இந்த அமைப்பு தர்மபுரி…
-
- 15 replies
- 2.8k views
-
-
-
- 2 replies
- 667 views
-