Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வ…

  2. ஐஸ்வர்யா ரவிசங்கர் பிபிசி தமிழ் …

  3. டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது. பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையில…

  4. மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, …

  5. http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/solvathellam-unmai-09-01-2014-zee-tamil-tv-show-solvathu-ellaam-unmai.html

    • 3 replies
    • 1.5k views
  6. ஊரில.. எங்கள் மக்கள் கடின உழைப்பால்.. வீடு கட்டி.. குடிபுகுந்து.....மதில் கட்டி.. இல்ல சுற்று வேலி போட்டு.. அழகாக முற்றம் பெருக்கி.. பலவகை பூமரங்கள் நாட்டி.. அதற்கு காலையும் மாலையும் தண்ணி பாய்ச்சி.. செழிப்புற.. வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில்.. சிங்கள பேரினவாத.. மேலாதிக்க வெறி எங்கள் தேசத்தையும் தானே பரிபாலிக்கனும் என்று விரும்ப.. நடந்த விரும்பத்தகாத திணிக்கப்பட்ட போர் விளைவுகளால்.. வீடிழந்து.. ஊரிழந்து.. நாடிழந்து.. இன்று நாடோடிகளாக உலகம் பூரா பரவி நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இன்று எம் வாழ்க்கை அதன் பாரம்பரியம் இழந்து.. போக்கிடம் திணித்தவை மென்று..விழுங்கி.. ஏதோ நாங்களும்.. வாழிறம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இப்ப எல்லாம் நாம்.. அதிகம்.. வீடு க…

  7. குறையொன்றுமில்லை -சுப. சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு ‘ஓடிப்போவதெல்லாம் உடன் போக்கல்ல’. அதில் நான் பதிவு செய்த கருத்து: ‘சிறகு முளைக்கும் முன்னர் காதல் வயப்படுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அப்போதே காதலுக்காகப் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து சென்று அல்லல்பட்டு மீண்டும் அப்பெற்றோரிடம் தஞ்சம் அடைவதோ அல்லது வேறு முடிவெடுப்பதோ காதலின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிப்பது. தன்னையும் தன் இணையையும் காக்கும் திறன் பெற்ற பின்னர், காதலை ஏற்றுக் கொ…

  8. உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவ…

  9. பத்து திருமண பொருத்தம் 1.விட்டுகொடுக்கும் மனப்பான்மை, 2.சகிப்புத்தன்மை, 3.சொந்த பந்தம் மற்றும் பெரியவர்களை மதித்தல், 4.மனைவி சொல்வதை கணவன் கேட்டு நடத்தல், 5.கணவன் சொல்வதை மனைவி கேட்டு நடத்தல், 6.சீரான தாம்பத்ய வாழ்க்கை, 7.புத்திரபாக்கியம், 8.தாம்பத்ய உறவில் மனைவியினால் கணவனுக்கு கிடைக்கும் சுகம், 9.தாம்பத்ய உறவில் கணவனால் மனைவிக்கு கிடைக்கும் சுகம், 10.வருமானத்துக்குட்பட்டு செலவு செய்யும் இருவரின் மனப்பான்மை, ஆகிய இந்த பத்து பொருத்தங்களும் இருந்தால், ஜாதக பொருத்தமே தேவையில்லை திருமணம் செய்யலாம். http://eluthu.com/

  10. ஜப்பான் ஒழித்த சாதி 100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது... கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்... அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது... 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற …

  11. ஈரானில் ஆண்கள் தமது 13 வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமானது அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தனது மிதவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற கவலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் சிறுமிகள் தமது 13 வயதில் தமது வளர்ப்புத் தந்தையையும் 15 வயதுடைய சிறுவர்களையும் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது. அதேசமயம் 13 வயதுக்கு குறைந்த சிறுமிகள் தமது தந்தையின் அனுமதியை மட்டுமே பெற்று திருமண பந்தத்தில் இணைய முடியும். ஈரானிய ஜனாதிபதி ரோஹ்ஹானி அமெரிக்க ஜனாதி பராக் ஒபாமாவுடன் முக்கியத்துவமிக்…

    • 3 replies
    • 990 views
  12. பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள் சந்திரலேகா கிங்ஸ்லி -இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள் சுயங்கள் நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன.பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக பெண் ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும்…

    • 3 replies
    • 10.4k views
  13. பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கி…

  14. காதலர்தினம் ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவ…

  15. அம்மா அப்பா. ஜேர்மனிய தமிழ் கலப்புத்திருமண விவரணப்பட முன்னோட்டம். http://www.kino-zeit.de/filme/amma-appa# http://www.kino-zeit.de/filme/trailer/amma-appa http://www.ammaandappa.com/#!homeeng/c14zq

    • 3 replies
    • 1.1k views
  16. முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்) கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 ) மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் என்ன?ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் பெண்களுக்கு என்ன நடக்கின்றது, அவர்கள் என்ன உணர்கின்றார்கள் என்பதைப்பற்றிய சமூக விளக்கம் என்ன? மூன்று நாட்களோ, அதற்கு கூடுதலான நாட்களோ உடலின் ஒரு பகுதியிலிருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருக்கும்;. அதனை “மறந்து” அத்தனை நாளாந்தக் கடமைகளையும்; இன்னோரன்ன பல காரியங்களையும் செய்து கொண்டிருக்கும் பெண்களது அந்த நாட்;களைப்ப…

  17. (சிலாபம் திண்ணனூரான்) 'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை…

  18. தனிவரிசை ஜெயமோகன் சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான் சீர…

  19. என் மூத்த சகோதரியின் மகனுக்கு, பெண் தேடும் வேட்டையில் இருந்தேன். நானும், அவளும், ஜாதகம் பொருந்திய சில பெண்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணைப் பற்றி சொல்லும் போது, "என் மகளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்யத் தெரியாது. ஆபீசுக்கு போவா, வருவா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சு வச்சுடுவேன்...' என்றனர். அதை விட கொடுமை என்னவென்றால், "என் பொண்ணுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. அவளுக்கு கிச்சன் எது என்பது கூட தெரியாது...' என்று மார்தட்டி பெருமிதம் கொள்ளும் வகையில், மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றனர். என்ன தான் இன்றைய பெண்கள், வேலைக்கு செல்வதாக இருந்தாலும், நளபாக சமையல் செய்யத் தெரியாவிட்டாலும், அன்றாட சமையல் கூட செய்யத் தெரியவில்லை என்றால்,…

    • 2 replies
    • 940 views
  20. திருமணத்தின் ஆரம்பத்தில் மணமகளுக்கு என்ன என்ன சடங்கு செய்ய வேண்டும், சாதாரணமாக தலையில் பால், அறுகு வைத்து நீராட்டுவது உண்டு, ஆனால் எந்து சந்தேகம் இதை விட வேறு சடங்குகளும் உண்டா ? மணமக்ளுக்கு நீராட்டிய பின்னர் என்ன சடங்குகள் செய்யப்படும். பல சந்தர்ப்பங்களில் சில பெண்கள் நின்றுஆராத்தி எடுப்பது போன்ர சிலவற்ரை செய்வது உண்டு. அதை விட மணமகளுக்கு நகைகள் சடங்கு ரீதியாக அணிவிக்கப்படுமா அல்லது ஒரு அலங்கார நிபுணரால் சதாரனமாக அணிவிக்கப்படுமா ? விடயம் தெரிந்தவர்கள் பதில் தரலாமே ?

    • 2 replies
    • 1.6k views
  21. பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார். சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.விசித்திர உலகம் : உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்…

    • 2 replies
    • 1.1k views
  22. இழிவுபடுத்திய ஆண்களுக்கு பதிலடி கொடுத்த கிளிநொச்சி வீரபெண்கள் சர்ச்சைகளையும் சாதனையாக்கும் தமிழ் பெண்கள் https://fb.watch/hGShs2GZZU/

  23. "நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBBC / PRASHANT NANAWARE (மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணிமுதலியார் என்ற பெண்மணியின் கதை. அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது கதையை அவரே விளக்குகிறார்.)…

  24. ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தை, பொதுப்பார்வைக்கு வெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின் முடிவு பிரச்சினைக்கு உரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும். ஏனெனில், கல்வி அமைச்சகத்தின் முடிவின்படி, இந்தப் பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்ல, அம்முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையையும், மாணவர்களின் மதிப்பெண…

  25. நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.