ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி வீரகேசரி இணையம் 6/9/2009 10:56:40 AM - இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,"இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு அந்நாட்டினருக்கு உரிமை கிடை…
-
- 16 replies
- 1.8k views
-
-
மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேத…
-
- 16 replies
- 2k views
-
-
இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo! இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பு…
-
- 16 replies
- 1.8k views
-
-
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=671762713107839233#sthash.clu3ZSla.dpuf
-
- 16 replies
- 1.6k views
-
-
வாகரை மோதல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்கள் குறித்தும், அங்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் இலங்கை அரசாங்கப் படையினரும், விடுதலைப்புலிகள் அமைப்பினரும் மற்றும் மக்கள் விடுதலைப்புலிகளும் வெவ்வேறு விதமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்தில் இன்று அவ்வப்போது எறிகணைச் சத்தங்கள் கேட்கின்ற போதிலும் ஓரளவு மோதல்கள் இன்று ஓய்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை இந்த மோதல்களை அடுத்து, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அங்கு செல்ல முயன்ற அரசாங்க அதிகாரிகளை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, மாங்கே…
-
- 16 replies
- 5.1k views
-
-
இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.! இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் தெரிவிக்கையில்.... இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். கட்சியின் தலைவராக…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது. யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் ஜ.நாவிற்கான தமது மகஜரை எடுத்த…
-
- 16 replies
- 975 views
-
-
ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2008, 08:03 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் நான்கு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் …
-
- 16 replies
- 2.7k views
- 1 follower
-
-
யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே இ்வ்வாறு கைத்தொலைபேசிகளைப் பாடசாலைக்குள் கொண்டு வந்து துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவா்களின் இந்த நடவடிக்கையை அறி்ந்த பாடசாலை நிா்வாகம் அவா்களில் சிலா் கொண்டு வந்த கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து அறிவுறை கூறியதாகவும் தெரியவருகின்றது. இதே நேரம் குறித்த பாடசாலை மாணவிகள் இருவரை பாடசாலை நிா்வாகம் நிறுத்த முற்பட்ட வேளை மாணவி ஒருவரின் தந்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவிகளை தொடா்ந்து அப்பாடசாலையில் கல்…
-
- 16 replies
- 1.6k views
-
-
இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரித்தார். காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற கதீப், முஅத்தின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர். 'நேற்று(சனிக்கிழமை) முழு நாளும் காலையிலே மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் நா…
-
- 16 replies
- 1.8k views
-
-
மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க..
-
- 16 replies
- 2k views
-
-
ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் ,அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது. உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக பிரேரணையொன்றை முன்மொழிந்தார். குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வ…
-
- 16 replies
- 4.4k views
-
-
சுதந்திரக் கட்சியுடன், இணைந்து... செயற்பட தயாராகின்றார், க.சுமந்திரன்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். இந்நிலையில், வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகின்றது. விரைவில், அவர் ஸ்ரீலங்கா சுதந்தி…
-
- 16 replies
- 885 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 02:41.36 AM GMT ] 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்ட போது சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை புரிந்துக்கொள்ளவில்லை. 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிய…
-
- 16 replies
- 823 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார். அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இ…
-
- 16 replies
- 1.7k views
-
-
சக்கர நாற்காலியில் இருத்திய இன அழிப்புப் போர்: சாதித்து காட்டிய மாணவிகள் Last updated Apr 28, 2020 நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதில் உயிரிழை அமைப்பின் பயனாளிகள் பிள்ளைகள் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் விஷேசமாக எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகள் இருவர் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று தங்களது கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர். 1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இ…
-
- 16 replies
- 1.7k views
-
-
வாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடு…
-
- 16 replies
- 1.7k views
-
-
20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. (மே31 - யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள். சிங்களத்தால் எரியூட்டப்பட்டஅறிவுச்சுரங்கமான யாழ் நூலகம்
-
- 16 replies
- 1.8k views
-
-
கருணாவை சந்திக்க நேரம் இல்லையாம்- பிள்ளையான். இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு துரத்தப்பட்ட TMVP யின் தலைவர் கருணா எனும் முரளீதரனை சந்திக்க நேரம் இன்மையால் முடியவில்லை எண்று கிழக்கின் முதலமைச்சரும் TMVP யின் உறுப்பினரும் ஆன சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் பதவி பற்றி கேட்க்கப்பட்ட கேள்விக்கு கருணா,தேவை இல்லாமல் முதலமைச்சர் பதவி பத்திரிக்கைகளால் இழுக்கப்படுகிறது எண்று வெறுப்பாக பதில் அளித்தார். ( சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்) http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._pillayan.shtml
-
- 16 replies
- 2.6k views
- 1 follower
-
-
தீவகத்து பிஞ்சுக் குழந்தைகள் செய்த தீது என்ன?: உலகத்தை உலுக்குங்களேன் புலம்பெயர் உறவுகளே...... [ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2006, 20:12 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தனது வரலாற்றுப் பாதையில் முக்கியமான திருப்பத்துக்கு வந்துவிட்டது. அதற்காக தமது உச்சக்கட்டப் பணியை செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் வந்துவிட்டது. இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக தனது உரிமைக்காக போராடிய தமிழினம் தனது போராட்டத்தின் நியாயப்பாட்டையும் நிலைப்பாட்டையும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு புரியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப்போய்விட்டது மட்டுமல்லாமல் இந்த தார்மீகப் போராட்டத்தில் தம்முயிரை எ…
-
- 16 replies
- 23k views
-
-
திருகோணமலை சிறிலங்கா கடற்படைக் கட்டிடங்கள் சேதம் அடைந்த படம் சண்டே டயிம்ஸில் இருந்து
-
- 16 replies
- 4k views
-
-
உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள…
-
- 16 replies
- 2.1k views
-
-
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழ.நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி நேற்று மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். சீர்காழி அருகே சேந்தன்குடி பகுதியில் சென்ற இந்த கார் மீது எதிரே வந்த எரிவாயு டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், நெடுமாறன் சென்ற காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணபதியைக் கைது செய்தனர். நக்கீரன்
-
- 16 replies
- 2.5k views
-
-
“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் ச…
-
- 16 replies
- 2.4k views
-
-
இன அழிப்பின் முக்கிய ஆதாரங்கள் பாகம் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.பிரித்தானியா தமிழர்களுக்கு அதிகளவில் புகலிட கோரிக்கைக்கு உதவிய வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு கிடைக்க பெற்ற ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்படுள்ளன.இதனால் சிங்கள அரசுக்கு பெரும் நெருக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆங்கில ஊடகம் பலவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர் நெருக்குதலால் அதிர்ந்துள்ள கொழும்பு தொடர் முயற்சியாக புலம்பெயர் இணையங்களுக்கு செய்திகளுக்கு சேகரித்து அனுப்பும் இலங்கையை சேர்ந்த நபர்களின் விபரங்களை திரட்டும்படி மகிந்த நேரடியாக புலனாய்வு துறையினருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இறுதி யுத்தத்தில் கைதாகி சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்ட பல போராளிகளின…
-
- 16 replies
- 2k views
-