ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம். We fear Gotabaya கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவ…
-
- 14 replies
- 1.8k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான சனத் ஜெயசூரியவின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சனத்தின் மனைவியான சன்ரா ஜெயசூரியா, கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 23ம் திகதி விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்தார் என்று அவருடைய வழக்கறிஞர் அனோமா குணதிலக்க தெரிவித்தார். மேலும் சனத் ஜெயசூரியாவிற்கு அறிவிப்பு கொடுத்தபின் வழக்கு தொடரும் என்றும் கூறினார். இவரது மனைவியின் விவாகரத்து விண்ணப்பத்தில் தலா 2 கோடி ரூபா வீதம் தனக்கும், தனது மூன்று பிள்ளைகளுக்கும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2010 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்…
-
- 14 replies
- 1.1k views
-
-
கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா? Friday, 09 May 2008 பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத் துணைப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கருணா விடுதலை செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவர் விடுவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 14 replies
- 7.7k views
-
-
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்! இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என அந்த அறிக்கையில் அமைச்சு அறிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகாரத் துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதஷது என தெரிவித்துள்ளது. கொரோனா அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான…
-
- 14 replies
- 908 views
-
-
இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் இணைந்து வாழ முன்வர வேண்டும். அத்துடன் சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். 30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் தமிழ் மக்களின் சமூக - பொருளாதார கட்டமைப்புக்களை விருத்தி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நடைமுறைக்கேற்ற தீர்வுத் திட்டத்துக்கு வர வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது. எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்ப…
-
- 14 replies
- 1.3k views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 14 replies
- 2.6k views
-
-
எமது மக்கள் மீது கருத்துத் திணிப்பினை மேற்கொள்ள எவருக்கும் அருகதை இல்லை! : வன்னிமக்கள் பேரவை புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், சில ஊடகங்களும், செய்தி இணையங்களும் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதாய் எண்ணி தூரநோக்கற்றுச் செயற்பட முற்படுவது வேதனை அளிக்கிறது!! அவைகளின் பசப்புவார்த்தைகளை நம்பி ஏமாறாமல், எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய எம்முடன் நின்று செயற்படக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வன்னி மக்கள் பேரவை வேண்டிக்கொள்கிறது. 21ஆம் நூற்றாண்டில் உலகில் மிகப் பெரும் அவலத்தைச் சந்தித்த ஒரு இனக்குழுமத்தின் ஆத்மார்த்த நேரடிச் சாட்சியமாய் இன்று வன்னி மக்கள் இருக்கிறார்கள். அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களையும் சொல்லிவிட முடியாத அவலங…
-
- 14 replies
- 987 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவின், வெற்றியில்... பங்கெடுத்த நாமல். கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விருந்துபசாரத்தில் மொட்டுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார் என்பதோடு அன்றைய இராப்போசன விருந்தில் 137 எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1292190
-
- 14 replies
- 906 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலை போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிகளால் ரொறன்ரோவின் நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது: இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும். ஒட…
-
- 14 replies
- 1.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை…
-
- 14 replies
- 1.4k views
-
-
கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்…
-
- 14 replies
- 1k views
-
-
யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். வீதியோரக் கட்டடங்களை அகற்றியும் பள்ளங்களைச் சீர்செய்தும் மரங்களை அகற்றியும் மிகவேகமாகப் இப்பணி நடைபெறுவதைக் காண முடிகின்றது. வீதியோரத்திலுள்ள தனியார் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுற்றுமதிலை சிறிது உள்வாங்கிக் கட்டியும் தமது எல்லைகளை இப்பணிக்கு விட்டுக் கொடுத்தும் உதவி செய்வதைக் காண முடிகின்றது. வீதிக்காகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலத்தைச் செவ்வை செய்தும் மண் நிரப்பி வீதிக்குள் உள்வாங்கியும் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருவதையும் காண முடிகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27603
-
- 14 replies
- 1.7k views
-
-
போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் தானே, அதனைத் தவிர போர் நிறுத்தம் என்ற எதுவும் இல்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எப்படியும் போர் நிறுத்தம் ஏற்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பலமான நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற அமைப்புகளும் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசு மற்றும் விடுதலைப்புலிகளிடம் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கைகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் நினைக்குமளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது தான் நன்கு உணர்ந்த விடயம் எனவும் மோதலில் சிக்கிய…
-
- 14 replies
- 2.8k views
-
-
ஏ.பி.எம்.அஸ்ஹர்: தாலிபான்களுடைய வெற்றி ஆபத்தானது... எனவே இலங்கை முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தாம் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இது ஒரு நல்ல சமிக்ஞையாக பார்க்க முடியவில்லை. அபசகுணமாகவே தோன்றுகிறது. உலக அதிகார சமநிலையில் மேற்கத்திய விளையாட்டின் ஒரு பகுதியாக இதனை பார்க்க முடிகிறது. இப்படித்தான் அல்கைதா இயக்கத்தை உருவாக்கினார்கள். இப்படித்தான் அரபு வச…
-
- 14 replies
- 986 views
-
-
களமிறங்குகிறாராம் கோத்தா! [Saturday 2017-12-30 19:00] 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 2019 அல்லது 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் காத்துக்க…
-
- 14 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணைவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர். http://akkinikkunchu.com/new/index.php
-
- 14 replies
- 1.8k views
-
-
இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 01:56 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20120311105756
-
- 14 replies
- 3.1k views
-
-
- நூருல் ஹுதா உமர்- சேர் பொன்னம்பலம் ராமநாதன் தொடங்கி பிரபாகரன் வரைக்கும் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைமைகள் எந்த வகையான கழுத்தறிப்புகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்தார்களோ அதையே சாணக்கியனும் செய்கிறார். இதை பார்த்து வியந்து பேசவோ ஆச்சரியப்படவோ வேண்டியதில்லை என்று இழப்பீட்டுக்கான ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார். அக்கரைப்பற்று இழப்பீட்டுக்கான ஆய்வு மைய காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தனியான இனம் என்பதை 85களில் தமிழ் மொழி மாநிலமாக ஆரம்பித்த போராட்டம் 90களில…
-
- 14 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லாமல் தனது மாவட்டத்தில் டியுசன் கொடுத்து கொண்டு உழைத்து கொண்டு திரிகிறார் என வாக்களித்த மக்கள் ஆதங்கப் படுகின்றனர். பாராளுமன்றம் செல்ல வாக்களித்த மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தனது தொழிலையே இவர் செய்து கொண்டிருப்பது மாவட்ட மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. அண்மையில் இவரது டுயுசன் கட்டவுட்கள் நகர வீதி முழுவதும் காட்சிப் படுத்தப் பட்டிருத்தமை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருத்தது. பாராளுமன்றம் சென்று இன பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என கனவு கண்டார்கலாம் ஆனால் இலக்கணம் சங்ககாலம் சங்கமருவிய காலம் என தமிழரின் தீர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…
-
- 14 replies
- 3.2k views
-
-
ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி http://www.kumudam.com/webtv_streaming.php...20&leftid=2 தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி. நன்றாக தொகுத்து அமைத்திருக்கிறார்கள். குமுதம் இணையதளத்திற்கு நன்றி.
-
- 14 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபசார நிலையமொன்று பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த விபசார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவ…
-
- 14 replies
- 1.3k views
-
-
இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும் -அருஸ் (வேல்ஸ்)- இராணுவ வழிகளில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமையை சிதைத்துவிட்டால், அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பது சில மேற்குலக நாடுகளின் சிந்தனை. ஆனால் இனப்பிரச்சனை என்ற ஒன்றே இங்கு இல்லை என வாதிடலாம் என்பது சிறிலங்கா அரசின் நப்பாசை. அது தான் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் சுருக்கம். அது மட்டுமல்லாது சிறிலங்காவில் தற்போது தோன்றியுள்ள நிலைமை அனைத்துலக நாடுகளின் போட்டியாளர்களையும் களத்திற்குள் இழுத்து விட்டுள்ளது. பாகிஸ்தான் ஆயுத விநியோகம், பயிற்சிகள் வழங்குதல், தாக்குதல்களுக்கு ஆலோசனை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. …
-
- 14 replies
- 3.9k views
-
-
ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ஆலய வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது கைகூடாததால் கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிறு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்ட தாகத் தெரி விக்கப்பட்டது. பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…
-
- 14 replies
- 1k views
-