Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points88806Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20348Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19662Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46969Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/25/24 in all areas
-
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest" வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது ......... . அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது.......... பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில் மோதியும் அந்த பறவைகள் அழிய தொடங்கின ............. எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழியக் காரணம் ஆனது...... . அதே போல்த் தான், எமக்கு கிடைக்காத வசதிகள் எல்லாவற்றையும் மற்றும் பாதுகாப்பையும் எண்ணி நம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி, கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்...... பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாடத் தெரியாது. அதே போல்த் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது...... பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள். நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.. நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன் /அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்....... நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி நமக்கும், நம்மை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல........ . இதைத் தான் தகுதியானவை நிலைத்து வாழ்தல் / survival of the fittest என்று சொல்லுகிறோம். அதை நோக்கித் தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]6 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பெரியவரே எனது பெயர்( வீரப் பையன்26 ) வீரப்பா பையன் கிடையாது லொல்😁...........................5 points
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
வடையை…. 800 ரூபாய்க்கும், கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கும் விற்று டொலரை சேமிக்கலாம் என்றால் வெள்ளைக்காரன் வீடியோ எடுத்து நாறடிக்கின்றான். 😂4 points
-
Lunch Box (சோறு)
3 pointsஇன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது. சில காட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார். அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடியல அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு டேஸ்ட் ? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….” அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரலை. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் அர்த்தம் ஓராயிரம். கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிடும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு. எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன். “மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.” நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்” “வெளில சாப்பிட்டுட்டேன்”. “ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”. “வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.” எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது. சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்படி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது. கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே. இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாறுமே..!!!!! “உணவே மருந்து இதயத்திற்கும்” படித்ததில் பிடித்து பகிர்கிறேன்.3 points
-
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
சுவிசுக்கு..கொண்டுபோய் திரும்பி வந்தபின்னர்...உடுப்புத்தோய்க்கிற கல்லாகப் பாவிக்கினம்..😃3 points
-
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
மிகவும் வேண்டிய ஆக்கம். பிள்ளைகள், அவவர்களின் தேவைகளை கூட கேட்டு, அது ஒப்பீட்டளவில் கடினமாயின், பெற்றோர் எடுக்கும் முயற்சியை அறிந்தே, கால தாமதித்து போன்றவை அனுபவித்தே பெறவேண்டும். அத்துடன், எந்த தேவை ஆயினும், சிறிய பொருளாயினும் அளவு. இங்கே, புலம் பெயர்த்தவர்களில் நோனாக்கள் பலர் - பிள்ளைகளை போட்டிக்கு அனுப்புவதில்லை, காரணம், தோல்வி வந்துவிடும் என்ற மனப்போக்கால். முயன்று தோற்பது அனுபவம், அனால், வெல்லத்தான் முற்றுமுழுதாக, முழுமனதாக, முயல வேண்டும். நான் அறிந்து, 2 குடும்பம், பிள்ளைகளை ஒரு போதும் தேசிய / அரச போக்குவரத்து சேவையை பாவிக்க பழ்க்கவில்லை. அவர்கள், முதல்தரம் பாவித்த அரசு போக்குவரத்தில் ஏதோ ஒரு முறுகல் அசம்பாவிதம் நடந்து விட்டது, அவர்களுக்கு மிகவும் பயம் தொற்றி, அரச போக்குவரத்தை பாவிக்கும் நம்பிக்கை (confidence) போய்விட்டது. பின், சிலகாலம் அவர்களின் பெற்றோர், உறவினர் அரசு போக்குவரத்தை பாவிப்பதற்கு அவர்களை பழக்கி எடுத்தார்கள். ஒரு முறை கோயிலில், ஒரு தாய் தனது பிள்ளை நிலத்தில் இருப்பதை பார்த்து ஏசினார் (கோயிலுக்கு வந்தால் எப்போதும் இருந்து விட்டு போகவேண்டும் என்றது கூட தெரியாதவர்கள்). (பின்பு அறிந்து கொன்டேன், அவர்கள் வடக்கில், வெளிநாடு வரு முன் அவர்களின் நிலை மிக வசதி குறைந்ததாக இருந்தது என்று). இப்படி, பல தக்கென பிழைக்கும் வாழக்கைக்கு வழிசொல்லும் அனுபவங்களை தடுக்கும் பெற்றோரை கண்டுவிட்டேன்.3 points
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
இலங்கை இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .3 points
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
MDH & EVERESTஎன்கிற இந்திய மிளகாய்த்தூள்,சரக்குத்தூள், மீன்கறி மசாலா,சாம்பார் மசாலா இப்படி பலதரப்பட்ட பொதிகளிலும் புற்று நோயை தூண்டக் கூடியதாக உள்ளதாக கூறி கொங்கொங் சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர். உங்கள் வீடுகளிலும் இந்த பெயர்கள் கொண்ட பொதிகள் இருந்தால் அவதானமாக செயற்படுங்கள். காணொளியைப் பாருங்கள் முடிவெடுங்கள்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது என்று வீரப்பா பையன் சொல்லுகிறார் அது சரி எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣2 points
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக2 points- காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்.
இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்த வகையில் சீமானை போற்ற வேண்டும். எந்த இடர் வந்தாலும்,தொடர் தோல்விகள் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறவில்லை. 👍🏼 ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் அவரவற்கு பிடித்த குணங்கள் ஏதாவது ஒன்றிருக்கும். அதனை அவர்கள் பாராட்டுவதில் என்ன தவறு? நாம் எதிர்க்கும் சிங்கள இனவாதிகளும் தலைவர் பிரபாகரனை பாராட்டிய வரலாறுகள் உண்டு அல்லவா? எது இருப்பினும் எங்கள் ஈழ அரசியல் உணர்சியையும் தமிழ்நாட்டவர்களின் ஈழ அரசியல் உணர்ச்சியையும் ஒரே தராசில் வைக்க முடியாது என்பது என்னைப்போன்றவர்களின் கருத்து.1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது 3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்திய காங்கிரஸ் பழைகாலத்து தலைவராக இருந்த காமராசர் என்பவரை சீமான் புகழ்ந்து பேசியதை நான் யாழ்களத்தில் படித்து இருக்கின்றேன்.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@goshan_che க்கு இண்டைக்கு நித்திரை முழித்து “ஓவர் ரைம்” செய்ய வேண்டி வந்திட்டுது. 😂 அங்காலை ஒரு கனடா துரையப்பா திரியும்… அவருக்காக “வெயிட்டிங்” 🤣1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக் கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை Madawala News 5 days ago சம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம். சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது. இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது. வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன். இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் . இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள். இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார். ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன். "அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝 ஐ.எல்.எம் நாஸிம் (ஊடகவியலாளர்) https://www.madawalaenews.com/2024/04/i_262.html1 point- உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி………. 😂1 point- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
1 point- "விசுவாசம்"
1 point"விசுவாசம்" நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம் அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம். ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல! எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது. நாம் அந்த நிகழ்வின் பின், மாற்று வழியாக நீண்ட தூரம் வாடகை மோட்டார் வண்டியில் பயணித்தே பட்டணம் போனோம். ஆனால் இன்றைய வாழ்க்கை செலவின், எதிர்பாராத அதிகரிப்பு அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. எனவே நான் என் தங்கையிடம், ' என் குட்டி செல்லமே, என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு வா, அப்படி என்றால் பயம் இல்லை' என்றேன். ஆனால், என் புத்திசாலி தங்கையோ, 'இல்லை அண்ணா, நீங்களே என் கையை பற்றிக் கொண்டு வாருங்கள்' என்றார். எனக்கு ஒரே கோபம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்னை சமாளித்துக் கொண்டு, தங்கையிடமே ஏன் என்று விளக்கம் கேட்டேன். தங்கையோ, சிரித்துக் கொண்டு, அதில் பெரிய வித்தியாசம் உண்டு என்றார். 'நான் உங்கள் கையை பிடித்துக் கொண்டு போனால், ஏதாவது தற்செயலாக நடந்தால், அநேகமாக நான் பிடியை தளர்த்தி விடுவேன், ஆனால் அண்ணா, நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் கட்டாயம், உயிரைக் கொடுத்து, உங்க பிடியை விடமாட்டீர்கள்' என்றார். அப்ப தான் என் தங்கை என் மேல் வைத்த மாறாத பற்று, நம்பிக்கை எவ்வளவு என்று உணர்ந்தேன்! தங்கை சொன்ன பாடம் எனக்கு புது தெம்பையும் தந்தது. பிழை விடுபவர்கள் [ஆசிரியர் போல்] , ஏமாற்றுபவர்கள் [அரசியல்வாதிகள் போல்] தவறான வழியில் போகாமல் [விழாமல்] தடுக்க வேண்டின் , நாம் அவர்களை பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் நாம் இல்லை என்றால், தாம் இல்லை என்பதை உணர வேண்டும். ஆமாம் அவர்களின் நம்பிக்கை, பற்று [விசுவாசம்], எமக்கு அவர்கள் மேல் இருப்பது போல, அவர்களுக்கும் எம் மேல் இருக்கவேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். 😂 "பாம்பின் கால், பாம்பு அறியும்." 🤣1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
அட... இவ்வளவு நாளும் வேலை செய்து கொண்டா இருந்தவர். 😮 நமக்கு தெரியாமல் போச்சே.... 🤣1 point- கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
பிரெஞ்சு கலாச்சாரம் மிகவும் உன்னதமானது. வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தெரிந்தவர் தெரியாதவர் எல்லோருக்கும் எல்லோராலும் சொல்லப்படுவது வழக்கம்.1 point- ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன். யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை. ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது. இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன் உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்). (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). ) https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....1 point- குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣 ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நீங்கள் கூறிய பாராளுமன்ற பகிஸ்கரிப்பு மூலம் நாம் இழந்தவை மிக அதிகம் என்பதற்கு பல உதாரணங்களை கண் முன்னே கண்ட பிறகும் இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற முன்மொழிவை கூறுகின்றீர்கள். இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற கற்பனை வாதங்களை விடுத்து உண்மை உலகுக்கு வாருங்கள் என்று உங்களை நான் கேட்க போவதில்லை ஏனெனில், உங்களை அவ்வாறு கேட்பது உங்கள் முன்மொழிவுகள் போலவே useless ஆன விடயம் என்பது எனக்கு தெரியும். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகும்கூட இப்படியான useless கருத்துகளை கூறிக்கொண்டு அதே இடத்திலேயே நிற்பீர்கள். அதற்கான பூரண சுதந்திரம் உங்களுக்கு உண்டு.1 point- ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!
1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
....... என்று வந்தால் நகக்கீறல்களை பரிசாக பார்க்கணும் அண்ணை. அவை கேடயங்கள். நீங்கள் அறியாதததா? 🤩1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஐபிஎல்: கருணையில்லாமல் பந்தாடப்பட்ட கடைசி ஓவர் - எப்படிப் போட்டாலும் அடித்த ரிஷப் பந்த் பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறிவிட்டது. அந்த ரன்களுக்குள் எதிரணியை முடக்குவதற்கும் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40-வது லீக் ஆட்டமும் இப்படித்தான் இருந்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி, என 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் நிகர ரன்ரேட் இன்னும் மைனசிலிருந்து மீளவில்லை, மைனஸ் 0.386 என்ற அளவில்தான் இருக்கிறது. அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 7 நாட்களில் சந்திக்கும் 2-ஆவது தோல்வி இதுவாகும். 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.974 என்று இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் தலா 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கடந்த முறை இருந்ததைவிட மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 10 புள்ளிகளுடன் 3 அணிகளும், 8 புள்ளிகளுடன் 3 அணிகளும் இருப்பதால், அடுத்தடுத்து எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்பதை கணிக்க முடியாததாகவும், கடும்போட்டியாகவும் இருக்கும். இந்த நிலையில் குஜராத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அடுத்துவரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால்தான் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அடுத்து வரும் 5 ஆட்டங்களும் கடும் சவாலானவை. குஜராத் அணி 4 ஆட்டங்களில் வென்றால் 16 புள்ளிகளைப் பெறலாம். இந்த இதில் ஆர்சிபி அணியுடனான இரு போட்டிகளும் அடக்கம். மற்ற 3 ஆட்டங்களில் சிஎஸ்கே, கொல்கத்தா, லக்னெள அணிகளுடன் குஜராத் மோத வேண்டியிருக்கிறது. ஒருவேளை இரு அணிகளும் அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் இன்னும் மைனசிலிருந்து மீளாதநிலையில் 14 புள்ளிகள் பெறும்போது நிகர ரன்ரேட்டையில் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆதலால், அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் 4 ஆட்டங்களிலும் வெல்வது கட்டாயம். பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் - டெல்லி போட்டியில் என்ன நடந்தது? நேற்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் ரிஷப் பந்த், அக்ஸர் படேல் இருவரின் ஆகச்சிறந்த பேட்டிங் என்று கூறலாம். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் கடைசி ஓவரில் மதம் பிடித்தயானை போன்று ஷாட்களை அடித்து, மோகித் சர்மாவை மோசமான சாதனைக்குள் தள்ளிவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 31 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்களுடன்(8சிக்ஸர்,5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விக்கெட் கீப்பிங்கிலும் இரு கேட்சுகளைப் பிடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ரிஷப் பந்த்துக்கு துணையாக ஆடிய அக்ஸர் படேல் ஆட்ட வரிசையில் உயர்வு பெற்று 3வது வீரராகக் களமிறங்கி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாகச் செய்தார். நேர்த்தியாக பேட் செய்த அக்ஸர் படேல் ஐபிஎல் தொடரில் 2வது அரைசதத்தை நிறைவு செய்து, 43பந்துகளில் 66ரன்கள்(4சிக்ஸர், 5பவுண்டரி) சேர்த்தார். ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். டெல்லி கேபிடல்ஸ் சேர்த்த ஸ்கோரில் பெரும்பகுதி இருவரும் சேர்த்த ஸ்கோர்தான். மற்ற வகையில் பிரித்வி ஷா(11), ஜேக் பிரேசர் மெக்ருக்(23), சாய் ஹோப்(5) என விரைவாக ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் சிறந்த கேமியோ ஆடி 7 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது. இதில் ரிஷப் பந்த் மட்டும் கடைசி ஓவரில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த 3 ஓவர்களில் டெல்லி அணி சேர்த்த ரன்கள்தான் மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் மோகித் சர்மா இந்த சீசனில் சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் என்று பெயரெடுத்து வந்தார். அவரை டெத் ஓவரில் மட்டுமே பெரும்பாலும் கேப்டன் கில் பயன்படுத்தி வந்தார். அதேபோல நேற்றும் மோகித் சர்மாவை பந்துவீசப்பயன்படுத்த, ரிஷப் பந்த் அவரின் பந்துவீச்சை துவம்சம் செய்து விட்டார். இறுதியில் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் என மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் என்ன சொன்னார்? டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ டி20 போட்டியில் எதுவுமே உறுதியில்லாமல், எதிர்பார்க்காத முடிவுகள்தான் கிடைக்கிறது. 15-ஆவது ஓவருக்கு மேல் பேட்டிற்கு பந்துகள் நன்றாக வந்தன. 44 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்திருந்தோம், அதன்பின் அக்ஸரும் நானும் பேசி சிறப்பாக ஆட முடிவு செய்தோம், சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் குறிவைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இந்த வெற்றி எங்களை உற்சாகப்படுத்துகிறது, 100 சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறேன். களத்தில் இருக்கும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்தார். குஜராத் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது. பந்துவீச்சில் அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க ரன் ரேட்டில்தான் ரன்களை வாரி வழங்கினர். இதில் சந்தீப் வாரியர் மட்டும் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வகையில் ரஷித் கான், நூர் அகமது இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகவீரர் சாய்கிஷோர் ஒரு ஓவர் வீசியநிலையில் 22 ரன்கள் விளாசப்பட்டதால் அத்தோடு நிறுத்தப்பட்டது. டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் மோகித் சர்மா என்று பெயரெடுத்த நிலையில் கடைசி ஒரு ஓவரில் அனைத்தும் மாறிவிட்டது. தொடக்கத்தில் சந்தீப் வாரியர் 4வது ஓவரில் மெக்ருக், பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். அதன்பின் 6-ஆவது ஓவரில் ஹோப்பை வீழ்த்தி குஜராத் அணிக்கு உதவினார். சந்தீப் வாரியர் அமைத்துக் கொடுத்த தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்திருப்பார்கள். ஆனால், ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப்பை அமைக்கவிட்டது, குஜராத் பந்துவீச்சாளர்கள் செய்த பெரிய தவறாகும். இருவரையும் தொடக்கத்திலேயே பிரிக்காமல், கடைசி நேரத்தில் முயன்றது எந்தபயனும் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கையளித்த தமிழக வீரர் பேட்டிங்கிலும் கேப்டன் கில் 6 ரன்னில் நார்க்கியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு விருதிமான் சஹா, சுதர்சன் கூட்டணி ஓரளவுக்கு ஸ்கோரை குறையவிடாமல் கொண்டு சென்று பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்றது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பிரித்தார். சாஹா 39 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஓமர்சாய் நிலைக்கவில்லை. தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஆனால் மனம் தளராமல் ஆடிய மில்லர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர், ஒருபவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மில்லர் இருந்தவரை குஜராத் அணியின் வெற்றி மீது பசுமை காணப்பட்டது. முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரில், மில்லர் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டம் பரபரப்பாகியது, டெல்லி அணியின் கரங்கள் வலுக்கத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் கடைசி 2 ஓவர்கள் களத்தில் சாய் கிஷோர், ரஷித் கான் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரர் ரசிக் சலாம் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் ஒரு பவுண்டரியும், சாய் கிஷோர் இரு சிக்ஸர்களையும் விளாசினார், ஆனால் கடைசிப்பந்தில் சாய் கிஷோர் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான், மோகித் சர்மா களத்தில் இருந்தனர். முகேஷ் குமார் கடைசி ஓவரை வீச, ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார். முகேஷ் ஓவரில் முதல் இரு பந்துகளிலும் ரஷித் கான் இரு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த 2 பந்துகள் டாட் பந்துகளாக மாறவே 5வது பந்தில் ரஷித் கான் சிக்ஸர் விளாச ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. ஆனால் முகேஷ் குமார் பவுன்ஸராக வீசவே அதில் ரஷித் கான் ரன்அடிக்காமல் போக 4 ரன்னில் குஜராத் அணி தோற்றது. "போராடினோம் வெற்றி கிடைக்கவில்லை" குஜராத் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். கடைசியில் கிடைத்த தோல்வி வேதனையாக இருக்கிறது, ஆனால், போராட்டத்தை வெளிப்படுத்தினோம். 224 ரன்கள் சேஸிங் எளிதானது அல்ல. முதல்பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இம்பாக்ட் ப்ளேயர் பங்கு பெரியஸ்கோருக்கு வழிவகுக்கிறது. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்தோம் ஆனால் முடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுவிட்டோம். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரி, சிக்ஸர் எளிதாக இருந்தது.” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அசத்திய அக்ஸர் படேல் டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்பட்ட அக்ஸர் படேல் அதை நேற்று நிரூபித்துவிட்டார். டேவிட் வார்னர் காயத்திலிருந்து குணமாகாத நிலையில் 3வது வீரராக அக்ஸர் படேல் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்த அக்ஸர் படேல் 30 ரன்களைக் கடக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்களாக மெதுவாகவே ஆடினார். ஒரு கட்டத்துக்குப்பின்புதான் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 2வது ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துக்கு துணையாக பேட் செய்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் அக்ஸர் சிறப்பான பங்களிப்பு செய்தார். கேப்டன் கில் விக்கெட்டை வீழ்த்துவதில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் பெரிய திருப்புமுனையாகவும், பெரியவிக்கெட்டாகவும் அமைந்தது. அதேபோல குல்தீப் ஓவரில் சாஹா அடித்த ஷாட்டை ஒற்றைக் கையில் அக்ஸர் கேட்ச் பிடித்து பாட்ர்னர்ஷிப்பை உடைத்தார். பவர்ப்ளேயில் ரசிக் சலாம் முதல் ஓவர் முதல்பந்தில் சுதர்சன் அடித்த கேட்சை அக்ஸர் தவறவிட்டாலும், அடுத்தமுறை லாங்ஆன் திசையில் கேட்ச் பிடித்து சுதர்சனை வெளியேற்றினார். அக்ஸர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். 3 ஓவர்கள் வீசிய அக்ஸர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 11வது ஓவரில் ஓமர்சாயை விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் அக்ஸர் படேல். https://www.bbc.com/tamil/articles/c3g5494g9wjo1 point- விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
(நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
என்னது நைட் யூட்டி வேறையா? 😊 அப்பிடியெண்டால் கன கிழிஞ்சல்கள் கீறல்கள் வந்திருக்கணுமே? 🤣1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை.1 point- அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
1 pointஅமெரிக்காவால் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் டொலரில் ஆக 6 பில்லியனா யூக்ரேனுக்கு? சண்டைகள் தொடர வேண்டும். ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும். அதற்கான முதலீடாக கொள்ளலாம்.1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பகிடி..இது இன்னுமொரு வழிமுறை..நீங்கள் கனேடியரா இருந்து கொண்டு இன்னும் உங்கள் துணைவியார் கனேடிய பிரஜா உரிமை பெறாதவராக இருப்பின் உங்கள் பெற்றோரிடம் இருந்து துணைவியாருக்கு மாற்றம் செய்ய கூடியதாக இருக்கும்.சிலர் அப்படி செய்திருக்கிறார்கள்.உங்கள் வக்கீலிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.🖐️1 point- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்கப்படுவர், நீங்கள் எப்பிடி?1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
🤣 ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)1 point- அப்பா உடனே வாங்கோ.
1 pointவாழ்த்துக்கள் அண்ணா. அர்னாவ் நீடூழி வாழ வாழ்த்து. (அர்னாவ் என்ற பெயரில் ஒரு தமிழ் சீரியல் நடிகர் உள்ளார் என நினைக்கிறேன்).1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
@Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
காணியின் சந்தை மதிப்பின் 100% கட்ட வேண்டும். சந்தை மதிப்பும் நீங்கள் வேண்டிய காணியின் வரி மதிப்பீட்டு விலையும் ஒன்றல்ல. பொதுவாக வரி மதிப்பீட்டு விலை நிர்ணயம் கொள்வனவு விலையைவிட குறைவாகவே இருக்கு. நீங்கள் உங்கள் முதுசம் வேறொருவர் கைக்குள் போகக்கூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் அதை உங்களுக்கு உறவு என்கிற வகையில் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் (உ+ம்) வட மாகாண சபையின் காணி மதிப்பீடே காணியின் ஊண்மையான (வரி) மதிப்பாகும். அதற்குத்தான் நீங்கள் முத்திரை வரி கட்டுவீர்கள். நீங்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டபின்னர் (அதைப் பெற ஏறக்குறைய 1 வருடமாகும்) காணியை உங்கள் பெயருக்கு மாற்றினால் Dual citizenship இரட்டைக் குடிவைத்திருப்பவர்களுக்கு 4% மட்டுமே . கொசுறு; இரட்டைக் குடியுரிமை $2 000 US Dollars. (பிரதான விண்ணப்பதாரிக்கு, மேலதிக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு $500(Each person) ஒருவரது விண்ணப்பக் கட்டணம் 40 Canadian dollars. மேலதிக செலவு ஏறக்குறைய $ 500-600 (ஒருவருக்கு ) உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 😃1 point - தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.