Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    38756
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    929
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/19/24 in all areas

  1. தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து. நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன். நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில் மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள். பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன். நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும்.
  2. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அண்ட்ரியஸ் கவுஸின் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களுடன் வெற்றியை அண்மித்தாலும், ஹார்மிற் சிங்கின் விக்கெட் போனபின்னர் இறுதி இரண்டு ஓவர்களில் தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் அடித்தாட முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. 41வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 93 2 ரசோதரன் 93 3 சுவி 86 4 ஈழப்பிரியன் 85 5 நந்தன் 85 6 கோஷான் சே 85 7 கந்தப்பு 83 8 கிருபன் 80 9 எப்போதும் தமிழன் 80 10 நீர்வேலியான் 79 11 குமாரசாமி 78 12 தமிழ் சிறி 78 13 வாத்தியார் 78 14 P.S.பிரபா 77 15 ஏராளன் 77 16 அஹஸ்தியன் 77 17 வாதவூரான் 76 18 நிலாமதி 75 19 வீரப் பையன்26 74 20 தியா 74 21 புலவர் 72 22 கல்யாணி 71 23 நுணாவிலான் 70 @suvy ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதுதான் இன்றைய விஷேசம்
  3. யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார். லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன். இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின் மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை, Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார். தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல. கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது, https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw
  4. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (20 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (C2) ENG எதிர் WI 10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். @வாத்தியார்மாத்திரம் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்துள்ளார். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ENG வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா ENG தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் WI எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி NZ கோஷான் சே ENG இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்? 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND 16 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தால் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 03 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா IND நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் IND கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் IND நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே IND இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?
  5. நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத் தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்.......! 😂
  6. ஓரினச் சேர்க்கையில் எங்கே "திரு" வருகிறது? "திரு" வே இல்லாதபோது "திருமணம்" மட்டும் எங்கேயிருந்து வரும்?
  7. வணக்கம், உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஒரு திருமண உடன்படிக்கையினால் வரும் சட்டரீதியான அனுகூலங்களையும் பிற அனுகூலங்களையும் இந்த same sex couples அடையும் வேண்டும் என்றால் அதற்கு அவர்களது திருமணத்தையும் சட்டரீதியாக்கவேண்டும், [இதற்குள் குழந்தைகளை தத்து எடுப்பது தொடங்கி surogacy, egg/sperm donors மூலம் பெறுவது ( இந்த முறைகளை தனியே same sex couples மட்டும் நாடுவதில்லை என்பதையும் நடைமுறையில் பார்த்து வருகிறோம்) முதல் எல்லா வகையான அனுகூலங்களும் வரும்]. இந்த விடயம் இலகுவில் முடிவுக்கு வரும் விடயமோ ஒரே நாளில் மாறும் விடயமோ இல்லை. இங்கே பலரும் தங்களது எண்ணங்களை எழுதியிருந்தார்கள். ஆகையால் இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை என்றாலும் கூட எனது கருத்திற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை சட்டரீதியாக திருமணம் செய்து வாழும் எனது பெற்றோரின் மூலம் என்ன நன்மைகளை சட்டரீதியாகவும் குடும்ப வாழ்க்கை என்றதற்குள் நான் பெற்றேனோ அதனை இந்த same sex couplesன் பிள்ளைகளும் பெறவேண்டும். De facto relationship கூட எல்லா உரிமைகளும் அனுகூலங்களும் இல்லை. ஆகவே திருமண உடன்படிக்கையை தவிர வேறு முறைகள் சரிவரமாட்டாது. நன்றி வணக்கம் அவுஸ்ரேலியாவில் 2017ல்தான் தனபாலினத்தவர்களின் திருமணத்தை சட்டரீதியானதாக மாற்றினர்கள் அப்படியென்றால் அதற்கு முன் நடந்த காட்டுத்தீ தொடங்கி வெள்ளப்பெருக்குகள் வரைக்கும் காரணம் இந்த தமிழ் கிறிஸ்தவர்களாமா?
  8. ஏன் தோல்வி அடைய வேண்டும் ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட சம பலமுடையவர்கள். எனவே சிங்களவர்களின். வாக்குகள். மூன்றாக பிரியும்” ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல் சிங்களவரும். வாக்கு போட்டால் தழிழர். ஐனதிபதி ஆக. முடியும் இல்லையா??
  9. @குமாரசாமி உங்க‌ளுக்கு ஏறுமுக‌ம் தாத்தா என‌க்கு இற‌ங்கு முக‌ம்.........................என‌க்கு இனி பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் இன்னும் இருக்கு ..........................என்டாலும் எங்க‌ட‌ ப‌ர‌ம‌ எதிரி க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ முறை முந்த‌ முடியாம‌ல் போய் விட்ட‌து🫤...........................................
  10. இலங்கைக்கு அடுத்தவருடம் உந்த பிரச்சனை இல்லை. அடுத்துவருடம் 2025 இல்பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன் கிண்ணத்தில் (2029 இல் இந்தியாவில் நடைபெறும்) விளையாட இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கிண்ண்ப்போட்டியில் முதல் 8 இடத்தினை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா , நியூசிலாந்து , இங்கிலாந்து , தென்னாபிரிக்கா, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள போட்டியில் இலங்கை தெரிவு செய்யப்படாததினால் , இலங்கையில் அவைக்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று அடுத்த வருடம் பிரச்சனை இல்லை.
  11. இது கோலார் தங்க வயலில் பிறந்து வளர்ந்த தமிழரான பெஜவாடா வில்சன் அவர்களின் பேட்டி. 'அருஞ்சொல்' இதழிற்காக ரா. செந்திகுமார் வில்சனை பேட்டி எடுத்திருந்தார். கைகளால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாள குடும்பம் ஒன்றில் பிறந்த மதிப்புக்குரிய வில்சன் அவர்களுடனான இந்த உரையாடல் அறியாத பல வேதனையான நிகழ்வுகளையும், சமூகக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு எடுத்து வருகின்றது. பேட்டியில் இருக்கும் ஒரு பகுதி: "மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன்." ******************************************************************************** சந்திராயன் சரி; சாக்கடை சுத்தத்துக்கு இயந்திரம் இல்லையே! பெஜவாடா வில்சன் பேட்டி ரா.செந்தில்குமார் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினருடனான சந்திப்பிற்காக ஜப்பான் வந்திருந்தார் பெஜவாடா வில்சன். அவரை அழைக்க விமான நிலையம் சென்றிருந்தோம். பழைய காக்கி நிறத்தில் ஒரு குர்தா அணிந்து, காலில் சாதாரண செருப்புடன், தோளில் ஒரு சிறிய பையுமாக வெளியே வந்தார் பெஜவாடா வில்சன். ஜப்பானிலிருந்த மூன்று நாட்களுமே இதேபோன்ற எளிய உடைதான் அணிந்திருந்தார். பர்ஸ், காசு என எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை. ‘இந்தியாவில் இருக்கும்போது, கூட இருப்பவர்கள் செலவுசெய்வார்கள், எனவே பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை’ என்று சிரிக்கிறார். எந்தச் சமயத்திலும் உரையாடுவதற்குத் தயாராக இருக்கிறார். பேச்சில் சிறிய கிண்டல் கலந்த நகைச்சுவை எப்போதும் இருக்கிறது. ரமோன் மகசேசே விருதுபெற்ற மதிப்பிற்குரிய பெஜவாடா வில்சன் உடனான பேட்டியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்! கோலார் தங்க வயலில்தான் என்னுடைய பெற்றோர்கள் வேலைப் பார்த்தனர். எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருந்தனர். நான்தான் வீட்டில் கடைசி பிள்ளை. ஐந்தாம் வகுப்புவரை எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த தோட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளியிலேயே படித்தேன். அந்த வயதில் என்னுடைய சுற்றத்தினர் அனைவருமே ஒரே மாதிரியான ஏழ்மையான வாழ்க்கை சூழலைத்தான் கொண்டிருந்தனர். எனவே, ஆரம்பத்தில் சமூகப் பிரிவினைகள் குறித்தும், பாகுபாடுகள் குறித்தும் நான் பெரிய புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. கோலார் தங்க வயலில் என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் நிலவியது? அங்கு வேலைப் பார்த்தவர்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது? அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க தமிழர்கள்தான் வேலைப் பார்த்தனர். அதிலும் தலித் மக்கள்தான் அதிகம். எனவே, கர்நாடகா அரசியல் குறித்தெல்லாம் யாருக்கும் அங்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘தினத்தந்தி’, ‘மாலை மலர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகள்தான் டீக்கடைகள் எங்கும் கிடைக்கும். தமிழ்நாட்டுச் செய்திகளைத்தான் அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ் சினிமாக்கள்தான் தியேட்டரில் வரும். ஓய்வு நேரங்களில் டீக்கடையில் அமர்ந்துக்கொண்டு பள்ளி மாணவனான என்னைக் கூப்பிட்டு செய்திதாளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்படிக் கேட்கும் ஆள்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் படித்தால் பிடிக்கும் என எடை போட்டு அவற்றை மட்டும் படிப்பேன். தங்கச் சுரங்கத்தில் என்ன மாதிரியான வேலைச் சூழல் இருந்தது? மிகக் கடினமான வேலை அது. மண்ணுக்கு அடியில் பத்தாயிரம் அடி ஆழம் வரை கீழே சென்று பார்க்க வேண்டிய வேலை. அவ்வளவு ஆழத்தில், மிக வெக்கையாக இருக்கும். ஆக்ஸிஜன் மேலிருந்துதான் செலுத்தப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. இரண்டு மணி நேரம் வேலை, பிறகு ஒரு மணி நேரம் ஒரு மூலையில் உட்கார்ந்து அரட்டை, பிறகு மீண்டும் வேலை என அது தொடரும். ஆண்கள் மட்டுமே அங்கே வேலைப் பார்த்தனர். வெக்கை கொடுமையானதாக இருக்கும் என்பதால் உள்ளே சென்ற பிறகு ஆடை எதுவும் அணியமாட்டார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வரை அங்கு பணிபுரிந்தனர். அதில் மூவாயிரம் பேர் வரை துப்புரவுத் தொழிலாளர்கள். சுரங்கத்துக்குள் தோண்டியபடி உள்ளே செல்லும்போது, திடீரென்று பின்பகுதியில் மண் இடிந்து விழுந்துவிட்டால், முன்பக்கம் வேலைசெய்துகொண்டிருந்தவர்களை மறந்துவிட வேண்டியதுதான். மண்ணை முழுவதுமாக எடுத்து வழி ஏற்படுத்த எப்படியும் 10 நாட்கள் ஆகும். அதற்குள் மாட்டிக்கொண்டவர்கள் இறந்திருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் அங்கு உயிரழப்புகள் ஏற்படும். லிப்ட் போன்ற அமைப்பில்தான் சுரங்கத் தொழிலாளிகள் எல்லாம் உள்ளே செல்ல வேண்டும். வெளியே வரும்போது அனைவரையும் கடுமையான சோதனை செய்துதான் வெளியே அனுப்புவார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், ‘சுரங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கும், எங்களுக்கும் மட்டும்தான் தனி லிப்டு’ என்று. ஆம், மலம் அள்ளிய வாளியுடன் அவர்கள் மட்டும் தனியாக லிப்டில் வெளியேற முடியும்? ஒரு டன் மண் வெட்டியெடுத்து அதில் இரண்டு கிராம் தங்கம் எடுக்க முடிந்தால் அது லாபகரமானச் சுரங்கம் என்பார்கள். கோலார் தங்க வயல் லாபகரமானச் சுரங்கமாக பல வருடங்கள் இயங்கியது. ஆனால், அந்தத் தங்கத்தை எடுப்பதற்குத் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டால் தங்கத்தின் மீதான ஆசையே போய்விடும். எந்த வயதில் சமூகப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டீர்கள்? ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்காக, ஆந்திர பகுதியிலுள்ள குப்பம் என்னும் ஊரிலிருந்த சமூகப் பள்ளியில் நான் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். விடுமுறைக்குக் கோலார் தங்க வயல் வரும்போது, அக்கம்பக்கத்தினர் என்ன வேலை செய்கின்றனர் போன்றவற்றை அறிந்துகொள்ள முயன்றேன். அனைவருமே கோலார் தங்க வயலில் வேலை பார்ப்பதாக கூறினாலும், என்ன மாதிரியான வேலை என்பதைப் பொதுவாக சொல்ல மாட்டார்கள். அப்படி ஒருநாள் ஊருக்கு வந்திருந்தபோது, விளையாட்டில் சண்டை வந்து ஒரு நண்பன் என்னை, ‘தோட்டிப் பயலே’ என்று திட்டிவிட்டான். அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் “ஏன் நம்மை தோட்டி என்று திட்டுகிறார்கள்?” என்று கேட்டேன். “அது ஒண்ணுமில்லைப்பா, நம்பவூட்டாண்டே குப்பைத் தொட்டி ஒண்ணு இருக்குலே, அதான் தொட்டினு சொல்றாங்க நீ போய் விளையாடு” என்று சொல்லிவிட்டார். எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகளிடம் இந்த விஷயங்களைப் பேசாமல் முடிந்தவரை தள்ளிபோடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். குழந்தைமையை அப்படி எல்லாம் தற்காத்துக்கொள்ள சமூகம் விடுவதில்லையே. உங்களுடைய பெற்றோர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று எப்போது தெரியவந்தது? என்னுடைய அப்பா மட்டுமல்ல, சகோதரரும் மலம் அள்ளும் தொழிலைத்தான் செய்துகொண்டிருந்தனர். அண்ணன் என்னைவிட இருபது வயது மூத்தவர். எங்களுடைய சொந்த ஊரில் போய் திருமணம்செய்துகொண்டுவந்தார். பெரும்பாலும் அப்படி திருமணம்செய்யும்போது கேஜிஎஃபில் வேலைசெய்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், என்ன வேலை என்று சொல்ல மாட்டார்கள். அண்ணி திருமணம் ஆகிவந்த பின்பு, அண்ணனின் உடைகளைத் துவைக்கும்போது ஒருவித துர்நாற்றம் வருவதை உணர்ந்தார். ஏன் இப்படி நாற்றம் வருகிறது என்று அவர் கேட்டபோது அண்ணன், ‘குப்பை லாரி ஓட்டுவதால் அப்படி இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். இது மாதிரியான சூழலில்தான், எனது அப்பா என்ன வேலை செய்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அவரிடம் கேட்டால் அழைத்துச் செல்லமாட்டார் என்பதால் அவருடைய சக தொழிலாளர்களிடம் கேட்டு, அவர்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு நேரில் சென்றேன். அவர்கள் வாளிவாளியாக மலம் அள்ளிக்கொண்டிருந்தனர். எடுப்புக் கக்கூஸில் இருந்து மலம் அள்ளி டேங்கரில் கொட்டிக்கொண்டிருந்தனர். இந்த வேலையைத்தான் எனது பெற்றொர்களும் செய்கிறார்கள் என்பது உரைக்க, உரத்த குரலில் அழுதேன். “என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். “எங்க வேலையை கெடுக்காதே, அந்தாண்ட போ” என்று அதட்டி அனுப்பினார்கள். நம்ப முடியாமல் அழுதுகொண்டே நின்றேன். அங்கிருந்த ஒரு அம்மா விளக்குமாறை கீழே போட்டுவிட்டு என் அருகே வந்து, “நீ என்கிட்டே சொல்லு ராசா நான் கேட்குறேன்” என்று சொன்னார். அந்த அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன். உங்கள் 16, 17 வயதில் அந்த நிகழ்ச்சி மாபெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அது என்ன மாதிரியான மனநிலையை உண்டாக்கியது? மிகச் சிறிய வயதில் ஒருமுறை அம்மா என்னிடம் ‘ஒருபோதும் நீ விளக்குமாறை கையில் எடுக்கக் கூடாது’ என்று என்னிடம் சத்தியம் செய்து தரச் சொன்னார். அதன் அர்த்தம் அவர்கள் செய்யும் வேலையை நேரில் கண்டபோதுதான் புரிந்தது. கோலார் தங்க வயலில் எங்கள் வீட்டருகே ஒரு குறுங்காடு இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் சூழந்த அந்த இடத்தில், மனதிற்குக் கஷ்டமான நேரங்களில் போய் தனியாக அமர்ந்திருப்பேன். தனியாக பேசியபடி, அழுதபடி பல மணி நேரம் அங்கே உட்கார்ந்திருக்கிறேன். மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன். இப்படி ஒரு தொழில் திணிக்கப்பட்டதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கள் மக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பேரால் இந்தச் சுரண்டலைப் புனிதப்படுத்தும் முயற்சிகள்தான் நிகழ்ந்தன. மகாத்மா காந்தி, ‘நாம் குழந்தையாக இருக்கும்போது நம்முடைய அன்னைதான் மலத்தைத் துடைத்துச் சுத்தம் செய்கிறார். எனவே, மலம் அள்ளும் பெண்கள் எல்லாம் நமது அன்னை போன்றவர்கள்’ என்றார். இவையெல்லாம் எந்த மாறுதலையும் எங்கள் சமூகத்தில் கொண்டுவரவில்லை. ஹரிஜனம் என்பதும், வால்மீகி என்பதும் எந்தவிதக் கேள்வியுமின்றி அதே தொழிலை தொடரவே எங்களது மக்களைத் தூண்டின. ஆனால், பாபாசாகேப் அம்பேத்கார்தான் யாரையும் இந்தத் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று கொந்தளித்தார். அதுவே எங்களை இதிலிருந்து விடுதலையடைய தூண்டியது. இந்தியாவை விடுங்கள். நாடு பிரிவினையின்போது, முகமது அலி ஜின்னா நேருவிற்கு கடிதம் எழுதினார். பாகிஸ்தானிலிருந்து மற்ற இந்துக்களை அனுப்பிவிடுகிறோம். ஆனால் துப்புரவு தொழிலில் ஈடுப்பட்டுள்ள தலித் இந்துக்களை அனுப்ப இயலாது. அனுப்பினால் எங்கள் நாட்டில் துப்புரவுசெய்ய ஆள் இல்லாமல் போய்விடும் என்று எழுதியிருந்தார். கல்வி எந்தளவுக்கு இந்தச் சமூகச் சூழலிலிருந்து விடுபட உதவுகிறது? நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த வேலைவாய்ப்பு அலுவகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று தகவல்களை எழுதிக் கொடுத்தேன். அவரோ செய்ய விரும்பும் தொழில் என்னும் கேள்விக்கு, ‘தோட்டி’ என்று அவராகவே எழுதினார். அதை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பிறகு பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை. உங்களுடைய போராட்டம் எப்படி ஆரம்பமானது? நான் சொன்னேன் அல்லவா, உண்மையான அன்புடன் என்னுடைய மக்களிடம் நான் நெருங்கியபோது அவர்களும் அதே விதமான உணர்வுடன் என்னிடம் நெருங்கிவந்தார்கள். மனிதனின் கழிவை மனிதனே அகற்றுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ் (Drylatrine) முறையை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டப் போராட்டம் தொடங்கினேன். அப்படிதான் 1993ஆம் ஆண்டு எடுப்புக் கக்கூஸ் முறையைச் சட்டரீதியாக தடைசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிறகு நாங்கள் ஒரு இயக்கமாக நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினோம். சட்டம் இயற்றிய பின்பு எடுப்புக் கக்கூஸ் முறையை ஒழிக்க முடிந்ததா? இது 1993ஆம் ஆண்டு சட்டம் இயற்றிய பின்பும் பெரிதாக நிலைமை மாறவில்லை. எனவே, 2003ஆம் ஆண்டு, 7 துப்புரவுத் தொழிலாளர்களை வழக்குதார்களாகக் கொண்டு இந்திய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுகளை எதிர்த்து உடனடியாகச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கறிஞர் முரளிதரன் எங்களுக்காக வாதாடினார். கூடவே, களத்தில் நேரடியாகச் சென்று, இப்படி எடுப்புக் கக்கூஸ்கள் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்போம். பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்வார்கள். பிறகு, நாங்களே அப்படி உள்ள கக்கூஸ்களைக் கண்டுபிடிப்போம். ஒருநாள் கூட்டமாகக் கூடிச் சென்று அதை இடித்துத் தள்ளத் தொடங்கினோம். உடனடியாக காவல் துறையுடன் அரசு அதிகாரிகள் ஓடிவந்தார்கள். ‘இப்படிக் கக்கூஸ்களை இடிப்பது தவறு’ என்றார்கள். ‘நீங்கள்தான் எடுப்புக் கக்கூஸ்களே இல்லையென்றீர்களே? இல்லாத கக்கூஸ்களை நாங்கள்எப்படி இடிக்க முடியும்’ என்று கேட்டோம். தொடர்ந்து இதைச் செய்தது மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தோம். அதன் மூலம் ஓரளவுக்கு இந்த முறையை ஒழிக்க முடிந்தது. ஆனால், இன்னமும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த முறை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு நினைத்தால் ஒரே நாளில் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி அதை நிறைவேற்ற முடிகிறது. ஆனால், 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடைச் சட்டத்தை இன்றளவும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது? சாஃபய் கரம்சாரி அந்தோலன் (Safai Karamachari Andolan) எப்படித் தொடங்கப்பட்டது? எடுப்புக் கக்கூஸ் மட்டுமல்ல பிரச்சினை. செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் அதைச் சுத்தம் செய்யவும் மனிதர்களை அழைக்கிறார்கள். அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது அந்தக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். பாதாள சாக்கடைகள் அடைத்துக்கொண்டால் இதே துப்புரவுத் தொழிலாளர்கள் அதனுள் இறங்கி மாண்டுபோகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்தை நமது நாடு கொண்டிருக்கிறது. ஆனால், ரயிலில் கக்கூஸ் போனால், அப்படியே மலம் வெளியே வந்து தண்டவாளத்தில் விழுகிறது. இதையும் துப்புரவுத் தொழிலாளர்களே சுத்தம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தால்தான் போராட முடியும் என்பதற்காகவே சாஃபய் கரம்சாரி அந்தோலன் அமைப்பை சில நல்ல மனிதர்களின் துணையுடன் தொடங்கினேன். நாடு முழுவதும் தொடர்ந்து போராடிவருகிறோம். 1993 எடுப்புக் கக்கூஸ் தடைச் சட்டம் போலவே 2014ஆம் ஆண்டு நீங்கள் போராடி பெற்றுத் தந்த நஷ்டஈடு தொகைக்கான சட்டமும் மிக முக்கியமானது, அதைப் பற்றிச் சொல்லுங்கள்! 2013ஆம் ஆண்டு, சாக்கடையைச் சுத்தம் செய்யவும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யவும் என்று அதில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்துபோகும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை தர வேண்டும், அப்படி ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்திய வீட்டு முதலாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். 2014ஆம் ஆண்டு நீதிபதி சதாசிவம் இதற்கான தீர்ப்பை வழங்கினார். உடனடியாக 1993ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இப்படி இறந்துபோன தொழிலாளர்களின் விவரம்கேட்டு அரசை நாடினோம். ஆச்சரியமாக அவர்களிடம் எந்தத் தகவலும் இல்லை. ‘எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கெடுப்பது எங்களது வேலை அல்ல’ என்று சென்ஸஸ் அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, அவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதில் சிக்கல் நீடிக்கிறது. நாங்களே பிறகு இந்தக் கணக்கெடுப்பைச் செய்கிறோம். மொத்தம் 2378 பேர் இப்படிச் சாக்கடைகளில் இறங்கி இதுவரை இறந்திருக்கிறார்கள். ஒரு பெரிய போரில்கூட இத்தனை பேர் சாக மாட்டார்கள். உண்மையில் அவர்கள் சாகவில்லை. நாம்தான் கொன்றிருக்கிறோம். சாதிய கொடுமைகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் வாழ்ந்துதான் என்ன ஆகிவிடப்போகிறது என்று ஏறக்குறைய தற்கொலை மனநிலையில்தான் அந்தத் தொழிலாளர்கள் செப்டிக் டேங்கிலும், சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய இறங்குகிறார்கள். இனியாவது உயிர்கள் போகாமல் காக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6,500 தன்னார்வலர்கள் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தி நாங்களே இத்தகைய பணியில் ஈடுபட்டுவருகிறோம். தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது? தமிழ்நாடு பொதுவாகவே விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக ஊடகத் துறை அங்கு பலமாக இருக்கிறது. சாக்கடை மரணங்கள் நேர்ந்தால், உடனடியாக ஒரு பெரிய செய்தியாக அது அங்கு மாறுகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கம் அது. இந்தியாவில் சில மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தால் அது செய்தியாகக்கூட வருவதில்லை. தமிழ்நாட்டிலும், நகரங்களில் பாதாள சாக்கடை முழுவதுமாக நிர்மாணிக்கபடவில்லை. இது உடனடியாக அரசு செய்ய வேண்டிய பணி. ஜப்பானில் நீங்கள் பார்த்தவரை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமை எப்படியிருக்கிறது? ஜப்பானில் எத்தனையோ முன்னேறியிக்கிறார்கள். நாடு முழுவதும் பாதாள சாக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யும்முறை முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டிருக்கிறது. முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட புரோக்குமின் சாதியினர் மட்டும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் முறையும் இப்போது பெரும்பாலும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செய்யக்கூடிய தொழிலாக மாறிவருகிறது. இங்கிருக்கும் இயந்திரமுறை சுத்திகரிப்பை இந்தியாவில் காட்டி, இதைச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கதான் நான் ஜப்பான் வந்தேன். என்னுடைய நண்பர் பேராசிரியர் ராம்மகாலிங்கம் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் கஷ்டங்களைப் புரிந்துவைத்திருக்கும் ஜப்பான் நாட்டுத் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் எங்களுக்கு உதவுதாகக் கூறியிருக்கிறார்கள். சந்திராயன் ராக்கெட்டை நிலவுக்கு விடுகிறீர்களே, சாக்கடை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இல்லையா என்று என்னிடம் ஜப்பானியர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? இந்திய அரசு நினைத்தால் இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் இதற்கென கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் படும் துன்பம் அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. அவ்வளவுதான். https://www.arunchol.com/bezwada-wilson-interview-by-r-senthil-kumar
  12. நகலும் எடுக்க தேவை இல்லை. ஆயுதத்துக்கு செலவு செய்யும் பணத்தில் சிறு பகுதியை செலவு செய்து இறக்குமதி செய்து விடலாம். எப்படி இயக்குவது என அவர்களே வந்து காட்டி தருவார்கள். மோதி அரசுக்கு மனம் இருந்தால் இடமுண்டு. பிச்சைக்காரரை மறைக்க மதில் கட்டிய மோதி இதனை செய்வாரா என்பது கேள்விக்குறி.
  13. சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க. அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ? ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145. (ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்; யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்; கரணம் - மணமுறைகள்) தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல ! பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம் தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை. அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் ! பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும். நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும். https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk
  14. 👍......... ஓரிரு வருடங்களின் முன் சென்னை ஐஐடி பல்கலையின் ஒரு பேராசிரியரும், சில மாணவர்களும் சேர்ந்து இதற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து, மாதிரிச் செய்கை ஒன்றையும் காட்டியிருந்தனர். இது செய்திகளில் வந்திருந்தது. இப்படி செய்திகளில் காட்டுவதோடு இது போய் விடுமோ என்ற நினைப்பு அன்று வந்தது.........அப்படியே நடந்தும் விட்டது. புதிதாக ஒன்றும் செய்யவே தேவையில்லை. சுவி ஐயா சொல்லியிருப்பது போல வளர்ந்த நாடுகள் பலவற்றில் இதற்கான இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..........' என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போதும் என்ற மனநிலை. காந்தியடிகள் மற்றும் அம்பேத்கார் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், மிகச் சுருக்கமாகவே சொல்லப்பட்டிருந்தாலும், மனதை தைத்தது......😔.
  15. இன்றைய இலங்கை நிலையை துல்லியமாக சொல்லும் தலைப்பு. சிங்களவர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! தமிழர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! இது தான் இதுவரை சிங்களம் வெல்ல காரணம்.
  16. அதுவும் இன்னும் 10 ,15 வருடங்களுக்குதான் .....எங்கன்ட தலைமுறையினரின் பணம் அனுப்பும் படலம் முடிவடைந்த பின்பு வேறு மத நிறுவனங்களின் பணம் அதிகமாக கிடைக்க பெற்றால்...மக்கள் அங்கே தஞ்சமடைவார்கள்
  17. கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) அனைவரும் சரியான பதில்களைத் தந்துள்ளனர்! ENG AUS NAM SCOT OMA போட்டியாளர் ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி ENG AUS நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் ENG AUS P.S.பிரபா ENG AUS நுணாவிலான் ENG AUS பிரபா USA ENG AUS வாதவூரான் ENG AUS ஏராளன் ENG AUS கிருபன் ENG AUS ரசோதரன் ENG AUS அஹஸ்தியன் ENG AUS கந்தப்பு ENG AUS வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் ENG AUS நீர்வேலியான் ENG AUS கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) 12 பேர் மாத்திரமே சரியான வரிசையைக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி AUS ENG நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் AUS ENG P.S.பிரபா AUS ENG நுணாவிலான் AUS ENG பிரபா USA AUS ENG வாதவூரான் AUS ENG ஏராளன் AUS ENG கிருபன் ENG AUS ரசோதரன் AUS ENG அஹஸ்தியன் AUS ENG கந்தப்பு AUS ENG வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் AUS ENG நீர்வேலியான் AUS ENG கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! @theeya ஐத் தவிர எல்லோருக் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் OMA வீரப் பையன்26 OMA சுவி OMA நிலாமதி OMA குமாரசாமி OMA தியா NAM தமிழ் சிறி OMA புலவர் OMA P.S.பிரபா OMA நுணாவிலான் OMA பிரபா USA OMA வாதவூரான் OMA ஏராளன் OMA கிருபன் OMA ரசோதரன் OMA அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA வாத்தியார் OMA எப்போதும் தமிழன் OMA நந்தன் OMA நீர்வேலியான் OMA கல்யாணி OMA கோஷான் சே OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 78 2 ரசோதரன் 78 3 நந்தன் 74 4 ஈழப்பிரியன் 73 5 கோஷான் சே 73 6 சுவி 72 7 கந்தப்பு 72 8 நீர்வேலியான் 72 9 வாதவூரான் 70 10 அஹஸ்தியன் 70 11 கிருபன் 69 12 வாத்தியார் 69 13 எப்போதும் தமிழன் 69 14 P.S.பிரபா 68 15 ஏராளன் 68 16 வீரப் பையன்26 67 17 நிலாமதி 67 18 குமாரசாமி 67 19 தமிழ் சிறி 67 20 கல்யாணி 65 21 தியா 64 22 புலவர் 64 23 நுணாவிலான் 62
  18. உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.
  19. அவை ந‌ல்ல‌ அணியாய் தான் ஆர‌ம்ப‌ கால‌த்தில் இருந்த‌வை எப்ப‌ ஜ‌பிஎல் ஆர‌ம்பிச்சுதோ அதோட‌ வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணிக்கு விளையாடுவ‌தை விட‌ ஜ‌பிஎல்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம் 2005க‌ளில் தொட‌ங்கின‌ ஊதிய‌ பிர‌ச்ச‌னை 2013க‌ள் வ‌ரை தொட‌ர்ந்த‌து பொய் என்றால் பாருங்கோ உவை உல‌க‌ கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம்............................ இந்தியா அல்ல‌து அவுஸ்ரேலியா இந்த‌ இர‌ண்டு நாட்டுக்கும் தான் வெற்றி வாய்ப்பு அதிக‌ம்................................
  20. மைதானத்துக்கு அருகில் இன்று காலநிலை சரியில்லையாம் 😷 பாவம் தப்பி யசோ கவலைப்படாமல் இருப்பா மழை வராதாம் 🤣
  21. பிரபல பலகாரக்க்கட்த்தல் மன்னன் கலியாண வீட்டுக்குப் போகாபடியால் பலகாரம் எக்கச்சக்கமா மிஞ்சி விட்டுதாம்
  22. போட்டியில் இதெல்லாம் சகஜம் கிருபர் ஜீ .......😂 நாங்கள் பார்க்க வந்தவர்களும் எங்களுடன் சேர்ந்து வந்தவர்களும் எங்களை இங்கே அழைத்து வந்தவர்களும் தானே...... பத்துப் புள்ளிகளை சும்மா அள்ளிக் கொடுத்தாலும் வெல்லப்போவது ஒருவர் தானே.......👍
  23. "தொட்டால் கொரோனா மலரும்" "தொட்டால் கொரோனா மலரும் தொடாமலும் அது பரவும் பட்டால் முகம் சிவக்கும் படாமலும் நீ சிவப்பாய் !" "கண்கள் படாமல், கைகள் தொடாமல் காச்சல் வருவதில்லை இருமல் வாட்டுவதில்லை !" "நேரில் வராமல் சந்திப்பு செய்யாமல் வேலை கெடுவதில்லை காதல் தொலைவதில்லை !" "தும்மல் வந்ததாலும் இருமல் வந்ததாலும் முகத்தை மூடிவிடு திசுவால் தொடைத்துவிடு !" "வெளியெ சென்றாலும் உள்ளே இருந்தாலும் கையை கழுவிவிடு சானிடைசர் தடவிவிடு !" "மரபணு பிறழ்வடையும் புதிதாய் திரிபடையும் மரணம் அதிகரிக்கும் வாழ்வை முடக்கிடும் !" "வீட்டில் இருந்தாலும் துப்பரவாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இரு இடைவெளி விட்டுஇரு !" "ஆரோக்கியமாக இருந்தாலும் இளமையாக இருந்தாலும் தடுப்பூசி ஏற்றிவிட்டு கூட்டத்தை தவிர்த்துவிடு !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  24. ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ? சரி சரி இன்னும் எழுதுங்கோ .புதினங்களை வாசிப்பம்
  25. யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நான் தனிப்பட்ட முறையில் கீழே உள்ள முடிவுக்கு வருகிறேன். ஆனால் 'திருமணம்' என்ற வார்த்தையை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உணர்கிறேன், இல்லையெனில் மனித சமூகத்தின் சமூக அமைப்பும் அதன் அற்புதமான கலாச்சாரமும் எதிர்காலத்தில் வெடிக்கலாம் ?? குறிப்பாக சமூக கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் என்று எண்ணுகிறேன் எனினும் சமூகங்கள் வரலாற்று ரீதியாக சமூக விதிமுறைகள் மற்றும் வரையறைகளில் மாற்றங்களுக்கு ஏற்றதாக காலப்போக்கில், தன்னை சரிப்படுத்தி, ஆரம்பத்தில் சீர்குலைப்பதாகத் தோன்றுவது சாதாரணமாகி ஏற்றுக்கொள்ளப்படுவதும் உண்டு என்பதையும் நம்புகிறேன் ஒரே பாலின இணைப்பு அதிகாரப்பூர்வமாக "திருமணம்" என்று அழைக்கப்பட வேண்டுமா என்பது வரலாற்று, சமூக, மொழியியல் மற்றும் நெறிமுறை பரிமாணங்களை [historical, social, linguistic, and ethical dimensions] உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் சில மதிப்புமிக்க காரணங்கள் என் மனதில் தோன்றின. அவை சரியா பிழையா என்பதை நீங்கள் எடுத்துக் கூறலாம் ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான சில காரணங்களை கீழே தருகிறேன் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது / Equality and Non-Discrimination: சட்ட அங்கீகாரம் / Legal Recognition : ஒரே பாலினத் சங்கங்களை அல்லது இணைந்து வாழ்வதை "திருமணம்" என்று அழைப்பது, இந்த ஜோடிகளுக்கு பரம்பரை, வரிவிதிப்பு மற்றும் உடல்நலப் பாதுகாப்பு நலன்கள் [inheritance, taxation, and healthcare benefits] உட்பட, பாலினத் தம்பதிகளைப் போலவே சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் உரிமைகளை வழங்குகிறது இன்றைய நடை முறையில் [என்றாலும் சட்டங்களை அதற்குத் தக்கதாக, ஒரு பாலின கூட்டுக்கும் அவை செல்லுபடியாகும் என்று இலகுவாக மாற்றலாம்?? என்பதும் கவனிக்கத் தக்கது!!] சமூக ஏற்றுக்கொள்ளல் / Social Acceptance: இது, மேலே கூறியவை, சமூக ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிக்கிறது மற்றும் ஒரே பாலின உறவுகளின் செல்லுபடியாகும் தன்மையை பாலின உறவுகளுடன் சமமான நிலையில் அங்கீகரிப்பதன் மூலம் களங்கத்தை குறைக்கிறது. மொழியின் பரிணாமம்: மாறும் இயல்பு: சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மொழி காலப்போக்கில் உருவாகிறது. "திருமணம்" போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தற்கால புரிதல்கள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற கருதுகோள் முன்னோடிகள்: திருமணத்தின் வரையறை காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியதாக மாறி உள்ளது உதாரணமாக, பலதார மணம் என்பது பல கலாச்சாரங்களில் பொதுவானதாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே உள்ளது. வரலாற்று சூழல்: பல்வேறு நடைமுறைகள்: வரலாறு முழுவதும், பல்வேறு வகையான இணைவுகள் மற்றும் இருவர் ஒன்றாக வாழ்தல் உள்ளன. உதாரணமாக, சில பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்கள் ஒரே பாலின இணைவை அங்கீகரித்தன, இருப்பினும் அவர்கள் "திருமணம்" என்று என்றும் அழைக்கவில்லை. விரிவுபடுத்தும் வரையறைகள்: பல பாலினச் சூழல்களுக்குள்ளும் கூட, திருமணத்தின் கருத்து காலகட்டங்களில் கணிசமாக வேறுபட்டுள்ளது ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை நிராகரிப்பதற்கான காரணங்கள் கீழே தருகிறேன் பாரம்பரிய வரையறைகள்: வரலாற்று நிலைத்தன்மை / Historical Consistency: "திருமணம்" என்ற சொல் வரலாற்று ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சங்கத்தை குறிக்கிறது, சுமேரிய நாகரிகத்திலிருந்து தமிழ் சங்க காலம் மற்றும் பல கலாச்சாரங்கள் வரை அப்படியே பார்க்கப்படுகிறது. கலாச்சார முக்கியத்துவம்: பல கலாச்சாரங்களில், திருமணம் என்பது மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது இரு பாலின சேர்க்கை, அதாவது ஆண் & பெண் என்று கண்டிப்பாக வரையறுக்கிறது. மாற்று சொற்கள் / Alternative Terminology: சிவில் யூனியன்கள் / Civil Unions: ஒரே பாலின தம்பதிகள் தங்கள் கூட்டு வாழ்வை "சிவில் யூனியன்கள்" அல்லது "வீட்டு கூட்டு வாழ்வு / "domestic partnerships," போன்ற வேறுபட்ட வரையறைவுகளின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர், இதனால் திருமணத்தின் பாரம்பரிய கருத்தை மாற்றாமல் ஆனால், ஒரே மாதிரியான சட்ட உரிமைகளை வழங்க முடியும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் / Respecting Diversity: வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது உறவுகளின் பன்முகத்தன்மையை மதிப்பதுடன் அதன் இயல்பையும் தானாகவே வரையறுத்து, விளக்கமான கருத்தை துல்லியமாக கொடுக்கிறது. சமூக பதற்றத்திற்கான சாத்தியம்: திருமணத்தின் வரையறையை மாற்றுவது சமூக மற்றும் பாரம்பரிய கருத்துக்களை இலகுவாக சிதைத்து, வருங்கால சந்ததிக்கு எப்படியும் வாழலாம் என்ற ஒரு கட்டுப்பாடற்ற நிலையை அல்லது இதை புது நடப்பாக , ஃபேஷன்னாக ஊக்கிவிக்கலாம் ?? சமரச தீர்வுகள்: எனவே "சிவில் யூனியன்" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது, இந்த கூட்டு என்ன என்பதையும், அதன் தாற்பரியங்களையும் இலகுவாக எடுத்துரைக்க முடியும் இறுதியாக, உங்கள் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் . அது உங்களைப் பொறுத்தது நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்
  27. 'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த்தீர்களானால் அவர்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. ஜார்ஜ் புஷ், அவர் வேலை எதுவும் செய்வது போல் தெரியவில்லை ஆனால் அவர் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்தார். நீங்கள் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். அல்லாது போனால் உங்கள் சொந்த தலைக்கு உள்ளேதான் நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள் ஆனால் எல்லோருமே அப்படித்தான். *************************** 2. புத்தகங்களை இரல் தருவது --------------------------- நீங்கள் எப்போதும் தருபவராக இருக்கிறீர்கள், பெறுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென என் உளநல சிகிச்சையாளர் கூறினார். ஒரு பெண்ணைச் சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் முதலில் செய்வது உங்கள் புத்தகங்களைக் இரவலாகத் தருவதுதான். அவற்றைத் திருப்பித் தருவதற்காக அவள் திரும்பவும் உங்களைப் பார்க்க வருவாள் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது? அவற்றைப் படிக்க அவளுக்கு நேரம் இல்லை, அவள் உங்களை மீளவும் பார்த்தால் அவற்றைப் பற்றி பேசவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறாள் தவிரவும் நீங்கள் இன்னும் அதிகமாக நூல்களை இரவல் தரவும் கூடும். அதனால் அச் சந்திப்பையே அவள் ரத்து செய்துவிடுகிறாள். நீங்கள் நிறைய புத்தகங்களை இழப்பதோடு அது முடிகிறது. மாறாக நீங்கள் அவளிடம் இரவல் பெறுபவராக வேண்டும். https://akazhonline.com/?p=7575
  28. அப்படி Shakira பாடேல்ல அண்ணா.. கண்ணீர் விடாம நம்பிக்கையோட இருக்கச்சொல்லித்தான் பாடுறா.. அதான் கிருபனும் அவாவை போட்டிருக்கிறார்😊
  29. கப்பிதன், தாது கோபுரத்தின் அடித்தளம் மட்டுமே இருந்தது. கடந்தநான்கு வருடங்களில் இராணுவத்தாலும் பிக்குகளாலும்நீதிமன்றக் கட்டளையையும் மீறி முழு தாதுகோபுரமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த செய்திகள் யாழ் களத்திலேயே உள்ளது. தெரிந்தநீங்களே கேட்கும் போது வெளி ஆட்கள் எப்பிடிக் கேட்பினம். இது தான் சிங்களத்தின் திட்டமே.
  30. இது ஒரு உண்மைச் சம்பவம் என்று நினைக்கிறேன். அடிக்கு மேல அடியா? எப்படித்தான் இவ்விழப்புகளில் இருந்து மீழ்வது.
  31. யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? ஒரு பார்சல் அனுப்பிவிடவா கொள்ளையடிப்பதும் குற்றம் அவர்கள் தரும் சாமான்களை வாங்குவதும் குற்றம். ஏன் அவர்களோடு உறவு வைப்பதே பாவம். ஆளை விடுங்க சாமி. முதன்முதலில் எடுப்பது தான் கஸ்டம் குற்றம் வெட்கம் அப்புறம் அதுவே பழகிவிடும்.
  32. யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? ஒரு பார்சல் அனுப்பிவிடவா?
  33. மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டால் மனவுளைச்சல் மறைந்துவிடும்!
  34. கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்: 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ WI AFG PNG UGA போட்டியாளர் ஈழப்பிரியன் NZ WI வீரப் பையன்26 NZ WI சுவி NZ AFG நிலாமதி NZ WI குமாரசாமி NZ WI தியா NZ WI தமிழ் சிறி NZ WI புலவர் NZ AFG P.S.பிரபா NZ WI நுணாவிலான் NZ AFG பிரபா USA WI AFG வாதவூரான் NZ AFG ஏராளன் NZ AFG கிருபன் NZ WI ரசோதரன் NZ WI அஹஸ்தியன் NZ WI கந்தப்பு NZ WI வாத்தியார் NZ WI எப்போதும் தமிழன் NZ WI நந்தன் NZ AFG நீர்வேலியான் NZ WI கல்யாணி NZ WI கோஷான் சே NZ WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இருவர் மாத்திரமே இரண்டு அணிகளின் வரிசையைச் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் WI NZ வீரப் பையன்26 WI NZ சுவி NZ AFG நிலாமதி WI NZ குமாரசாமி WI NZ தியா WI NZ தமிழ் சிறி WI NZ புலவர் NZ AFG P.S.பிரபா NZ WI நுணாவிலான் NZ AFG பிரபா USA WI AFG வாதவூரான் AFG NZ ஏராளன் NZ AFG கிருபன் WI NZ ரசோதரன் WI NZ அஹஸ்தியன் NZ WI கந்தப்பு WI NZ வாத்தியார் NZ WI எப்போதும் தமிழன் WI NZ நந்தன் WI AFG நீர்வேலியான் NZ WI கல்யாணி WI NZ கோஷான் சே WI NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 09 பேர் மாத்திரமே சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PNG வீரப் பையன்26 UGA சுவி PNG நிலாமதி UGA குமாரசாமி UGA தியா PNG தமிழ் சிறி UGA புலவர் UGA P.S.பிரபா UGA நுணாவிலான் UGA பிரபா USA PNG வாதவூரான் PNG ஏராளன் PNG கிருபன் UGA ரசோதரன் PNG அஹஸ்தியன் UGA கந்தப்பு UGA வாத்தியார் UGA எப்போதும் தமிழன் UGA நந்தன் PNG நீர்வேலியான் UGA கல்யாணி UGA கோஷான் சே PNG 49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 86 2 ரசோதரன் 83 3 நந்தன் 80 4 ஈழப்பிரியன் 78 5 கோஷான் சே 78 6 சுவி 76 7 கந்தப்பு 76 8 நீர்வேலியான் 74 9 வாதவூரான் 73 10 கிருபன் 73 11 எப்போதும் தமிழன் 73 12 ஏராளன் 72 13 அஹஸ்தியன் 72 14 வீரப் பையன்26 71 15 நிலாமதி 71 16 குமாரசாமி 71 17 தமிழ் சிறி 71 18 வாத்தியார் 71 19 P.S.பிரபா 70 20 தியா 69 21 கல்யாணி 69 22 புலவர் 67 23 நுணாவிலான் 65
  35. இதுக்கு பிறகும் இவங்களை யாராவது கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்களா?
  36. கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️
  37. மிகவும் தெளிவான கருத்து. ஓரின இணைகளில் மட்டுமல்ல, எதிர்ப்பால் இணைகளிடையேயும் கூட பாலியல் உறவு என்பது ஒரு மிகச்சிறு வீதத்தில் தான் அவர்களது பிணைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதுவும் பிள்ளைகள், குடும்பம் என்று உண்மையான பயணம் (அதுவும் கஷ்டமான பகுதி) சூடு பிடிக்கும் போது, செக்ஸ் என்பதை நினைக்காமலே பிணைப்பிலும், பாசத்திலும் இருக்கும் நிலை இருக்கிறது. ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂! வந்திறங்கிய நாள் முதல், அமெரிக்காவின் நீல மாநிலங்களில் தொடர்ந்து வாழ்ந்த அனுபவத்தில், இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் கொண்ட குடும்பங்கள் சிலவற்றைக் கண்டு பழகிய அனுபவம் இருக்கிறது. எனக்குப் புரிந்த வரை, இவர்கள் சாதாரணமான மனிதர்கள். சில விடயங்களில், சாதாரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக ஒதுக்கப் படும் மக்களின் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்கள். இவர்களை நாம் ஒதுக்கி வைக்க ஒத்துழைத்தால், குடியேறிகளின் வம்சாவழியினராக வாழப் போகும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு தரப்பைப் பகைத்து எமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் முட்டாள்களாக இருப்போம்!
  38. 1 point
    நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.
  39. கவர்ச்சிகரமான "தியரி"! முகட்டைப் பார்த்து யோசித்தால் அல்லது காலையில் ரொய்லெற்றில் இருக்கும் வேளைகளில் இது போன்ற தியரிகள் சிலருக்கு (எனக்கல்ல!) உதிக்கலாம்😂 ஆனால், இப்படியான தியரிகளை உண்மை போல பொது இடங்களில் பரப்ப முதல், இதைப் பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப் பார்க்க வேண்டும். ஆய்ந்திருக்கிறார்களா? ஆம், 34 ஆய்வுகள், அந்த 34 ஆய்வுகளை systematic review இனால் மீள ஆராயும் போது கிடைக்கும் பதில்: ஓர் பால் பெற்றோரின் பிள்ளைகள் சில விடயங்களில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட சிறப்பாக இருக்கிறார்கள். மற்ற படி மன நிலைகளில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட வேறுபாடுகள் இல்லை. இதன் சாதாரண மொழி இணைப்புக் கீழே: https://www.forbes.com/sites/roberthart/2023/03/06/kids-raised-by-same-sex-parents-fare-same-as-or-better-than-kids-of-straight-couples-research-finds/ இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? "liberal intelligentsia ஷதி தான் இந்த ஆய்வு" என்று புது தியரியோடு வருவீர்களா😎?
  40. நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது. உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான். ஒரு மாதிரிக்கு, 1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார். எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? 2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது. விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!
  41. இங்கே வருடத்தில் ஒரு முறை இப் பேரணி நடக்கும். இப் பேரணிகளை, பாடசாலைகளில் வைக்கப்படும் rainbow flags களை LGBTQ சமூகத்தை சக சமூகமாக அங்கீகரியுங்கள் என்பதை வலியுறுத்த, அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என காட்ட இவற்றை நடாத்துகின்றனர். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஓரினச்சேர்க்கை அவரவர் விருப்பு சம்பந்தமானது. எவராலும் திணிக்கப்பட முடியாது. Trend இனை பார்த்து ஒருவர் மாறினால், அவரைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிப் போட்டு கடந்து போகத்தான் முடியும். கபிதன் கூறியது வேறு, குமாரசாமி கூறியது வேறு. சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்கப்பட வேண்டியவர்கள் என எழுவது எல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் வகைக்குள் வராது.
  42. இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார். ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை. இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
  43. இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள். தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள். இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு! நன்றி கெட்ட உலகம் இது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.