Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    20012
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    18
    Points
    46783
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/09/24 in all areas

  1. நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல் நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற் நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால் மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் இன்னும் சாதி பாப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன் இப்படிக்கு கறுவல் குமாரசாமி
  2. கவாய் சில நுhற்றாண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தார்கள்.ஜப்பான் பிடித்துவிடும் என்று அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து 1959 இல் அமெரிக்க மாநிலமாக பிரகடனப்படுத்தினார்கள். அவர்களுக்கென்று ஒரு மொழி வைத்திருக்கிறார்கள்.ஆங்கிலமும் பேசுகிறார்கள். கூடுதலான ஆட்களைப் பார்த்தால் ஏறத்தாள பிலிப்பைன்ஸ்காரர் மாதியே இருக்கிறார்கள்.ஆதிகாலத்திலேயே பிலிப்பைன்ஸ் ஜப்பானிஸ் என்று பலரும் குடியேறியிருக்கிறார்கள். நிறையவே பழங்கள் உள்ளன.சிறிய பப்பாப்பழம் ஒரு டாலருக்கு விவசாயிகள் சந்தையில் விற்கிறார்கள்.பழம் தேன் தான்.கலிபோர்ணியாவிலும் கவாயன் பப்பாபழம் பிரபல்யம். அடுத்து அன்னாசி.அதுவும் தேன் மாதிரியே இருக்கும்.மாம்பழங்கள் தேடுவாரற்று வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன.சந்தைக்குப் போனால் எல்லாமே பணம் தான்.ஏறத்தாள எமது நாட்டு காலநிலை என்றபடியால் ஊரில் சாப்பிடும் பழங்கள் அங்கேயும் இருக்கின்றன. காலநிலை பல மாதிரியாக இருப்பதாலோ என்னவோ எந்தநாளும் வானவில்லைக் காணலாம். தென்னமெரிக்கா போல மலிவு என்று எதிர்பார்க்க முடியாது.நியூயோர்க்கோடு ஒப்பிடும் போது கவாயில் விலைகள் அதிகமே.சாப்பிடப் போனாலே கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டும். கோட்டல் எடுத்து தங்கினால் சாப்பாட்டுக்கும் தனியாக செலவு செய்ய வேண்டும். வீடுகள் எடுத்திருந்தால் ஒரு சோறு கறி என்று சமைத்து சமாளிக்கலாம். வாடகை வாகனம் இல்லாமல் பிரயாணங்கள் செய்ய முடியாது. முக்கியமாக பல நாடுகள் கடலில் மூழ்கிக் கொண்டு போகின்றன.ஆனால் கவாய் ஒவ்வொரு ஆண்டும் எரிமலை வெடிப்பினால் கரைந்து ஓடி கடற்கரைகளை சேர்கின்றன. எரிந்து ஓடியவைகளை லாவா என்கிறார்கள்.தீவின் அரைவாசிக்கு இந்த லாவாவே இரும்புக்கட்டி போல படர்ந்துள்ளது. https://imgur.com/DeBvtUo https://imgur.com/a/JhkrE50 https://imgur.com/a/JhkrE50 முற்றும்.
  3. நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂
  4. மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
  5. இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம். ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.
  6. சூடாக இருக்கும் போதே பெயர்களை எழுதியுள்ளார்கள். விமான நிலையமும் பொதிகள் எடுக்குமிடமும் https://imgur.com/a/ZqXWL9q விமானநிலையத்திலிருந்து போகும்போதே வெளியே சகல இடங்களும் ரைக்ரரால் டிஸ் போட்டு பிரட்டி எறிந்த மாதிரி இருந்தது. ஆங்காங்கே தீப்பிழம்பாக வந்து காய்ந்து போய் இருப்பதாக சொன்னார்கள். தீப்பிழம்பாக வந்து காய்ந்து போயிருப்பது இரும்பு காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது. இதை லாவா என்று சொல்கிறார்கள்.சில இடங்களில் இந்த லாவா தொடர்ந்து பல மைல்களுக்கு உள்ளன. சாதாரண மழை தண்ணிக்கே ஐயோ குய்யோ என்று கத்திக் குழறும் நாங்கள் இந்த மாதிரி ஒரு அழிவை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ண மிகவும் கஸ்டமாக இருந்தது. தொடரும்.
  7. ஆண் பேய்க்கு கால் இல்லை பெண்பேய்க்கு இருக்கும் போல என்று பேய்க்காட்டுவார்கள். 😄😄
  8. மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கும் செய்யும் துரோகம்..தமிழ்த்தேசியத்தை விட்டு மக்களை சலிப்படையச்செய்து ஒதுங்கப்பண்ண செய்யப்படும் செயல்ப்பாடுகள்தான் இவை... மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல மக்களை சலிப்படையச்செய்யும் வேலை.. நான் எல்லாம் ஒருகாலத்தில் இவர்களுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு சண்டைபோட்ட ஆள்.. இவர்கள் பேய்க்காட்டுவதை பார்த்து பாத்து சலித்து வெறுத்து ஒதுங்கிய பலரும் நானும் ஓராளாகிறேன்.. தொழில்நுட்பத்துடன் நாங்கள் அப்டேற் ஆகாவிட்டால் எப்படி நாங்கள் கணணித்துறையில் நிலைக்க முடியாதோ அதே பழைய ரெக்னிக்குகளை பேசிக்கொண்டு இவர்களாலும் நிலைக்க முடியாது.. வேணுமானால் எழுபது எண்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டி பேசி பொழுதுபோக்க இவர்கள் செய்வது உதவும்.. ஆனால் 2கே கிட்ஸ் பெரும்பான்மையாகப்போகும் அடுத்த தலைமுறை அரசியலில் இது எடுபடப்போவதில்லை.. இவர்களை காலமே காலாவதியானவர்கள் என்று புறங்கையால் தட்டி ஒதுக்கிவிடும்..
  9. உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை
  10. காலநிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வயதிற்கு அவர் மனத்தைரியம் உள்ளவராகவே எனக்கு தெரிந்தார். 30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 😄
  11. மாவைக்கு, என்ன விசரே..... காலம் முழுக்க சுமந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தனித்தவில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீது, மாவை... என்ன நடவடிக்கை எடுத்தவர் எண்டு ஒருக்கால் சொல்லட்டும் பாப்பம். 😂
  12. தமிழ் தேசியவாதிகள் எறும்பு தமிழர்கள் கல்லு தமிழ்தேசியவாதிகள் செயல்களால் தமிழர்கள் தேய்ந்து தேய்ந்து போகிறார்கள்😟
  13. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார்.
  14. Hawaii Vocanoses National Park க்கு இருதடவைகள் போயிருந்தோம்.எனக்கு Lifetime membership என்றபடியால் வாகனத்தில் எத்தனை பேர் இருந்தாலும் எல்லோரையும் இலவசமாக போகவிடுவார்கள். பெரியதேசம்.ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.இயன்றளவு பார்த்தோம்.இந்த இடங்களில் பெரிதாக எரிமலை இல்லை என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் அதன் சீற்றம் குறைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது கூட அரைமைல் தூரத்திலிருந்தும் தாங்க முடியாத வெக்கையடித்தது. படங்களை இணைக்கிறேன். காணொளிகளைப் பார்க்க விரும்பினால் இணைக்கும் சுட்டிகளை அழுத்தி பார்க்கலாம். வழமையில் பெரிதாக எரிந்து மலைகளில் இருந்து தீப்பிழம்பு ஆறாக ஓடும்.நாங்கள் போனநேரம் எரிமலை தணிந்திருந்தது.ஆனாலும் எந்தநேரமும் வெடிக்கலாம் என்றே சொன்னார்கள். இந்த இடத்தில் யாரோ ஒருவர் காலை வைத்து பார்த்து கால் எரிந்துவிட்டதாக எழுதிப் போட்டுள்ளார்கள். https://imgur.com/a/noz6feo மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் காணொணி பார்க்கலாம்.
  15. எந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை விட ஜேவிபி இன் அனுரவுக்கு வாக்களிக்காமல் விட்டால் நல்லது என்பது என் நிலைப்பாடு. ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்டு கொண்டிருக்கும் கடும் இனவாத கட்சி மட்டுமல்லாமல் சீனாவின் பக்கம் மீண்டும் இலங்கை யை சாய வைக்க கூடிய கட்சி. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்களின் வாழ்வும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. அனைத்தும் இழந்து போயிருக்கும் எம் சமூகத்துக்கு சிறுக சிறுக பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.
  16. நாவூறு/கண்ணூறுக்கு நாம கட்டி தொங்க விடுமமெல்லே 😂
  17. ம‌க‌ளிர் கூடை ப‌ந்தில் பின‌லில் அமெரிக்கா எதிர் பிரான்ஸ்............... ஆண்க‌ள் அணியும் அமெரிக்கா எதிர் பிரான்ஸ் பின‌லில் ஹா ஹா.................... இர‌ண்டு பிரான்ஸ் அணியும் தோல்வி அடைவ‌து உறுதி பிரான்ஸ் ஆண்க‌ள் அணி சில‌து அமெரிக்காவுக்கு சிர‌ம‌ம் கொடுப்பின‌ம் பிரான்ஸ் ம‌க‌ளிர் அணிய‌ அமெரிக்கா ம‌க‌ளிர் அணி சிம்பிலா வெல்வின‌ம்.......................... இர‌ண்டு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அமெரிக்காவுக்காக‌ காத்து இருக்கு🙏🥰............................
  18. என்ன இப்பிடி கேட்டுப்போட்டியள்? அவர்ர ஊசாருக்கு ஏரோப்பிளேனே ஓட்டுவார் போல கிடக்கு....😂
  19. மகிழுந்து இன்னும் ஓட்டுவதுண்டா?😌 திரி சுவாரசியமாக போவுது..👍
  20. ரொறொன்ரோவில் இருந்து ஐப்பசி கடைசியில் போவதானால் 400 அமெரிக்கன் டாலர்வரை வருகிறது.
  21. அப்ப ஏன் தான் அமசடக்கா இருக்கிறீர்கள்? கொஞ்சம் நல்லது கெட்டதை எடுத்து விடலாமே?
  22. எனக்கு ஊரிலிருந்தே ஹவாய்த்தீவை சுற்றிக்காட்டியதற்கு நான் தான் நன்றி சொல்லவேணும்! நன்றி அண்ணை.
  23. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 30 38 35 103 2 China 31 25 20 76 3 France 14 19 22 55 4 Great Britain 14 17 21 52 5 Australia 18 15 14 47 6 Japan 13 8 13 34 7 Italy 10 11 9 30 8 Republic of Korea 13 8 7 28 9 Netherlands 11 6 8 25 10 Germany 10 9 6 25 11 Canada 6 5 11 22 12 Brazil 2 6 8 16 13 New Zealand 6 6 2 14 14 Hungary 4 5 5 14 15 Spain 2 3 8 13 16 Ukraine 3 4 4 11 17 Sweden 3 3 3 9 18 Romania 3 4 1 8 19 Ireland 4 0 3 7 20 Kazakhstan 1 3 3 7 21 Switzerland 1 2 4 7 22 Greece 1 1 5 7 23 Iran 2 2 2 6 24 Croatia 2 1 3 6 24 Cuba 2 1 3 6 26 Belgium 2 0 4 6 27 Israel 1 4 1 6 28 Jamaica 1 3 2 6 28 Thailand 1 3 2 6 30 Poland 1 1 4 6 31 Chinese Taipei 1 0 5 6 32 DPR Korea 0 2 4 6 33 Uzbekistan 3 0 2 5 34 Kenya 1 1 3 5 35 Turkey 0 2 3 5 36 India 0 1 4 5 37 Azerbaijan 2 1 1 4 38 Austria 2 0 2 4 38 Hong Kong 2 0 2 4 38 Philippines 2 0 2 4 41 Denmark 1 2 1 4 41 Georgia 1 2 1 4 43 South Africa 1 1 2 4 44 Bulgaria 1 0 3 4 45 Mexico 0 2 2 4 46 Kyrgyzstan 0 1 3 4 47 Czech Republic 2 0 1 3 47 Indonesia 2 0 1 3 49 Ecuador 1 2 0 3 50 Argentina 1 1 1 3 51 Armenia 0 2 1 3 52 Lithuania 0 1 2 3 53 Moldova 0 0 3 3 53 Tajikistan 0 0 3 3 55 Serbia 2 0 0 2 56 Chile 1 1 0 2 56 Slovenia 1 1 0 2 56 Saint Lucia 1 1 0 2 56 Uganda 1 1 0 2 60 Guatemala 1 0 1 2 60 Morocco 1 0 1 2 60 Norway 1 0 1 2 63 Ethiopia 0 2 0 2 64 Kosovo 0 1 1 2 64 Portugal 0 1 1 2 64 Tunisia 0 1 1 2 67 Dominican Republic 0 0 2 2 67 Grenada 0 0 2 2 67 Malaysia 0 0 2 2 70 Algeria 1 0 0 1 70 Bahrain 1 0 0 1 70 Botswana 1 0 0 1 70 Dominica 1 0 0 1 70 Pakistan 1 0 0 1 75 Colombia 0 1 0 1 75 Cyprus 0 1 0 1 75 Fiji 0 1 0 1 75 Jordan 0 1 0 1 75 Mongolia 0 1 0 1 80 Cape Verde 0 0 1 1 80 Egypt 0 0 1 1 80 Peru 0 0 1 1 80 Singapore 0 0 1 1 80 Slovakia 0 0 1 1 80 Zambia 0 0 1 1
  24. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இதே 1990ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சுக்களில் (aerial bombing) ஏராளமான முஸ்லிம்கள் (நான் முழுமையாக எண்ணவுமில்லை, அதில் நாட்டமுமில்லை. எனினும் செய்திகளை எடுத்து வைத்துள்ளேன்) கொல்லப்பட்டனர். புத்தளத்திலும் 70களில் முஸ்லிம்கள் சிலர் சிங்களக் காடையரால் பள்ளிவாசல் சாரான இடமொன்றில் வைத்துக் கொல்லப்பட்டனர். (விதப்பான இடம் வலம் ஞாபகமில்லை) . தமிழர் கண்டனம் தெரிவித்தனர் அதன் பின்னர் இலங்கையில் மொசாட் மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் உள்ளதை எதிர்த்து 1984ம் ஆண்டு சூன் மாதம் 9,10ம் திகதிகளில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை முன்னணி காத்தான்குடியில் நடாத்திய கடையடைப்புப் போராட்டத்தின் போது 30 முஸ்லிம்கள் சிங்கள-இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலுக்கு புளட் அமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு "தமிழ் முஸ்லிம்களுக்கு" தோழமை தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் இவற்றிற்கெல்லாம் பின்னாளில் ஒருக்காலும் முஸ்லிம்கள் கண்டனமோ நினைவோ கூர்ந்ததில்லை. ஏனெனில் செய்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களின் பரம வைரியும்!!! செய்தால் என்ன நடக்குமென்று புரிந்திருக்கிறது; நீங்கள் சொன்னது போன்றே அவர்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை கெட்டுவிடும்! அளவாக ஆக்களுக்கு ஏற்ப தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக, என்னால் இயன்றளவு செய்கிறேன். விரும்பியவர்களும் எடுத்துச் சென்று செய்யலாம்.
  25. ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இராணுவ அமைச்சக அறிக்கை - பிரெஞ்சு மொழியில். ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் அந்த மொழியிலும் வாசிக்கலாம். https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12524497@egNews இன்றைய அறிக்கையின்படி ஊடுருவிய 945 உக்ரெயின் இராணுவத்தினர், 102 கவச வாகனங்கள், 12 தாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் ரஷ்ய படைகள் அழித்துள்ளன. ஆரம்ப தகவல்களின்படி ஊடுருவிய உக்ரெயின் இராணுவத்தினர் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்படு விட்டனர். 🙂
  26. சுமந்திரன் மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால், அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு இருக்க வேணும். 😂
  27. அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?
  28. கண்ணகி . .........எங்கேடா மதுரை . ........! 😂
  29. தமிழ்ப் பொதுவேட்பாளர் காலத்தின் தேவையே! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்து! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியது காலத்தின் தேவை. பொருளாதாரப் பிரச்சினைகளில் தமிழரின் உரிமைப் பிரச்சினை கரைந்து போகக்கூடிய அபாயநிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர் தம் திரட்சியை மீளவும் காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியவாதி. தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் புகுந்தவர். தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்துள்ளமை சிறப்பான விடயம். அதே நேரம் வேட்பாளர் ஊடாக தமிழரசுக்கட்சியும் அந்தக் களத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே தாயகக் கோட்பாட்டின் அடிநாதமாக விளங்குகின்றதும், சமகாலத்தில் உச்சப்பட்ச சவால்கள் எதிர்நோக்கியுள்ளதுமான கிழக்கு மண்ணிலிருந்து மீன்பாடும் தேன் நாடு, தென் தாய்மண் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முழுத் தமிழ்மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்டமை பொதுக் கட்டமைப்பின் நடுநிலைப் பார்வையை உயர்த்தி உள்ளது. தமிழ்த்தேசியத் தேரை முன்நோக்கி இழுத்து, தமிழ்த்தேசியத் திரட்சியை வெளிக்காட்டுவதற்கும், தேக்க நிலையை உடைத்துப் புதிய அத்தியாயம் படைக்கவும் முன்வருவோம்- என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளர்_காலத்தின்_தேவையே!
  30. கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩
  31. இந்தக் காணொளியை ஆறாவது நிமிடத்திலிருந்து பாருங்கள். ஒரு தலைவனுக்காக எமது மக்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள்? விருப்பு வெறுப்பை விடுத்து மக்களின் துணிச்சலையும் ஆர்வத்தையும் பாருங்கள்.
  32. காத்தான்குடி பள்ளிவாசலில் உயிர்களை கபாலிகாரம் செய்தவர்கள் திரும்பி பத்திரமாய் போய் சேர்ந்த இடமும் பக்கத்தில் இருந்த சிங்களராணுவ முகாம் என்றும் பதிவுகள் உள்ளன. தவிர புலிகள் இல்லாத காலத்தில் அதுவும் 2019 இல் ஈஸ்டர் தாக்குதலை எப்படியெல்லாம் கட்டமைத்து அரசியல் ஆதாயம் தேடிய கூட்டம் என்பதையும் மறக்கலாகாது.
  33. சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும் போட்டி இடமுடியும் ஒரு தமிழன் போட்டியிட்டால். தமிழனே எதிர்க்கிறன். ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது கூட கிடைக்கவில்லை
  34. 👍.......... பிரான்ஸ் இந்த ஒலிம்பிக்ஸில் தூள் கிளப்புகின்றது. அவர்களின் நாட்டில் இது நடக்கின்றது என்ற உத்வேகம், அத்துடன் மிக நன்றாக அவர்களின் வீரர்களும், அவர்களின் அணிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன. வாலிபாலில் கூட பலமான இத்தாலி அணியை 3 - 0 என்று வென்றுவிட்டார்கள். இறுதிப் போட்டியில் போலந்து நாட்டிற்கு எதிராக விளையாடப் போகின்றார்கள்.
  35. சிறப்பாக உள்ளது. 👍 தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.
  36. இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃
  37. 1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்? 2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??
  38. ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால் ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்???
  39. இது தான் தமிழரின் சாபம். எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???
  40. அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி விட்டு அனுதாபத்தையும் தேட முயற்சிக்கிறார்கள்.
  41. இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள். 1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே? இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன. ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான் ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது. எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம். போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை, முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை, அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள். 83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள். மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன் பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன், நன்னி, எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது. இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.
  42. இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை. அதன் பாடலும் கடைசி காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கும். 💔
  43. சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱
  44. நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும் உங்கள் விளங்கும். கொள்வனவு பற்றியும் தெரியும் சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர் ரணில் காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம் 13. .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார். என்று [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂 ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை கொட்டுங்கள். ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை ...மூச்சும். விடவில்லை எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை
  45. இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது. சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.