Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    87990
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    31968
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/14/24 in all areas

  1. பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் என் எழுத்து கூட அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.
  2. வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்
  3. தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம் ....
  4. யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... யாழ்.கள வாசகர்களாகிய நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த.... @வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி, @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️ இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏
  5. "சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? *தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.! *மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..? *தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை... *மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..? *தலைவர்* : ஆம்.. *மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர். ( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...) மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.. சிரிக்க மட்டும் ...
  6. இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்
  7. சனம் இவங்களில இருந்த கடுப்பை அவங்களுக்கு வாக்களிச்சு தீர்த்துப்போட்டுது! நம்மட தோஸ்து ஒன்று அவங்கட பொக்கற் மீற்றிங்கில போய்ச் சொன்னது சரியாப் போச்சே! நீங்கள் வாக்கு கேட்க தேவையில்லை, வேட்பாளரை அறிமுகப்படுத்துங்கோ என்று சொன்னவராம்!!
  8. இந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்.. தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு... நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது… அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்.. நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢
  9. லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு.. சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்.. எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..
  10. வரும் 20ம் திகதியின் பின் தற்போதுள்ள சேர்வரின் பாவனைக் கால எல்லை முடிவடைகின்றது. நாளை / நாளை மறுதினம் சேர்வர் வேலைகளைப் பார்க்கலாம் என்றிருந்தேன். தேர்தல் முடிவுகள் வரும் வரை மாற்றத்தினை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடுகின்றேன். புதிய திகதி பின்னர் அறித் தருகின்றேன்.
  11. இப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி குதிரைகளுக்கு பணம்கட்டியும் மாடுகளுக்கு கொம்பு சீவியும் விட்டதன் பெறுபேறு எனக்கொள்ளலாம்.
  12. General Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து) . யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.
  13. கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!
  14. யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன்.
  15. @ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய் வாக்குப் போடுங்கோ. அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.
  16. தமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை. எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.
  17. எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின் உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...ஒரு அவதானம் ..ஊரில் போனபோது ..ஒவ்வொரு வீட்டிற்கும் போனேன்...அங்கு கண்டது அதிசயம் ...அவர்களிடம் எந்தவித எதிபார்ப்போ...ஆச்சரியமோ தென்படவில்லை..நீயும் நானும் சமந்தான் என்பதுபோல் இருந்தது..அதனை நான் வரவேற்கின்றேன்.. இங்குதான் திருப்புமுனை..அதாவ்து எம்முடைய கழிசடை அரசியல்வாதிகள் நேர்மையாக நடந்திருந்தால் ..இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது
  18. கொஞ்சநேரமாவது ஹப்பியா இருக்கட்டுமன் அவர்😂
  19. இது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை! நண்பனின் பதிவு .. அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂
  20. சைக்கிளுக்கு காற்று போச்சு பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.
  21. உண்மை புத்தன்...வெறுப்பு அரசியல்தான் இந்த முடிவே தவிர ..உணர்வு மங்கவில்லை..என் நேரடி அனுபவம்... இந்த களத்தி பரும் பலவகையாக சொல்லலாம்... உண்மை அதுவல்ல
  22. தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு!
  23. இதில் அதிசயம் எதுவும் இல்லை. 2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂. இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்!
  24. தீதும் நன்றும் பிறர் தர வாரா.. தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்… தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢 நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏
  25. என‌து நில‌மை இப்போது😁...................🙈🙉🙊
  26. இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும். ஏனெனில்: தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.
  27. FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!
  28. தபால் வாக்குகளில் மொட்டு கட்சி, 4% வரை எடுக்கிறது. ஜனாதிதேர்தலில் இது 2% ஆம். அதே போல் என் பி பி இப்போதைக்கு வந்த முடிவுகளில் 79%.
  29. முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன். அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா... கள்ளா..." என கோசம் போட்டார்கள். 😂 அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது. 🤣
  30. நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.
  31. அகற்றப்பட்டுள்ளன என்று வந்திருக்கவேண்டும்! எனக்கு ரிப்போர்ட்டர் வேலை தந்திருந்தால் இப்படி நீட்டி முழக்கி எழுதியிருப்பேன்😉👇🏿 இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் அகற்றப்பட்டு நேற்று காலை முதல் பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
  32. அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?
  33. தாத்தா... ஸ்ரேடியத்துக்கு வந்து, என்னத்தை படம் எடுக்கிறார் என்று பாருங்கோ... 😂
  34. 🤣............. வந்து கொண்டிருக்கின்ற முடிவுகளைப் பார்த்தால், புலம்பெயர்ந்த எவரும் இனி தமிழர் சார்பாக பேசவே தேவையில்லை போலல்லவா இருக்கின்றது.............. புலத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே பேசி உள்ளார்கள்...........
  35. சும் வெண்டால் தனி மடலில் அறிவிக்கவும்.
  36. மாத்தளை மாவட்டம் - மாத்தளை தேர்தல் தொகுதி முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள் யார் எவரை கைவிட்டாலும், 'குடி'மகன்கள் தமக்கு உதவியவர்களை கைவிடுவது இல்லை 😀
  37. நல்லகாலம் சஜித் பதவியை ஏற்காமல் விட்டது, உலகம் முழுவதும் ஊடகங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று செய்தி வந்தது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இலங்கையில் அனைத்துக்கும் வரிசை யுகம், எரிபொருள் இல்லை, டொலர் கையிருப்பு இல்லை, தாறுமாறு விலைவாசி ஏறும் மக்கள் வாழ்வு இனி அதோ கதிதான் என்று உலகமே நினைத்தது, ரணில் தனது அனுபவத்தால் உலகவங்கி சர்வதேச நாணையநிதியம், இந்தியா சீனா என்று அனைவருடனும் பேசி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கடன் மறுசீரமைப்பு, அந்நியசெலாவணி இருப்பு உயர்த்தல்,படிப்படியாக இறக்குமதிகளை அனுமதித்தது என்று இலங்கையை மீட்டெடுத்தார். என்னதான் ரணில் என்ற சிங்களவனை பிடிக்காவிட்டாலும், அரசியலோ பொருளாதாரமோ எந்த அனுபவமும் இல்லாத சஜித்தைவிட மிக பெரும் திறமைசாலி என்பதை ஒப்புக்கொண்டே ஆகணும். தொடர்ச்சியாக வங்குரோத்து நிலையில் இலங்கை ஓரிரு வருடங்கள் நீடித்திருந்தால் கண்டிப்பா பட்டினி சாவில் பல ஆயிரம் பேரையாவது இழந்திருக்க நேரிடும்.
  38. உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?
  39. என்னப்பா.... இன்னும் தமிழ்ப் பகுதி, தபால் வாக்குகள் இன்னும் எண்ணி வரவில்லையா? யாழ். மத்திய கல்லுரியில் வாக்கு எண்ணுகிறார்களா, நித்திரை கொள்ளுகிறார்களா. சுமந்திரனை யாழ். மத்திய கல்லுரி வளவுக்குள் கால் வைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆளை... உள்ளுக்கு விட்டால், போனமுறை மாதிரி சுத்துமாத்து பண்ணிப் போடும். கவனம்.
  40. ஆசை… தோசை…. அப்பளம்…. வடை. 😂
  41. கொழும்பான்... மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் வேலை செய்வதாக முன்பு சொன்னவர். நீங்கள் நுணாவிலானையும், வாதவூரானையும் இலங்கையில் வசிக்கின்றார்கள் என்று சொல்வீர்கள் போலுள்ளது. சரியான வில்லங்கம் பிடித்த ஆளப்பா. 🤣
  42. நாம் நினைக்கும் அளவுக்கு அநுர அலையும் யாழில் இல்லையாம். பொறுத்திருந்து பார்பபோம்.
  43. மற்றவை எங்க இருக்கென்று பாக்கவே இல்லை அண்ணை! வாக்குச் சீட்டு பெரிதாக இருந்தது. என்னுடைய முச்சக்கர வாகனம் உட்செல்லக் கூடியவாறு வாக்குச் சாவடி அமைந்துள்ளது, அத்தோடு சிரேஸ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர் சகல வசதிகளையும் ஏற்புடுத்தித் தந்தார். புள்ளடி இட்டவுடன் சீட்டை மடித்து அவரிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பெட்டியில் போட வைத்தேன்.
  44. அருணலு மக்கள் முன்னணி என்ற கட்சி தண்ணீர் பைப் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்கிறது. இவ்வணியின் செயலாளர் பெயர் - கிறிசான். கட்சி அலுவலகம் வெல்லம்பிட்டியாவில் இருக்கிறது நுவரெலியா மாவட்டத்தில் இக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது
  45. ஐசே க்றீம் என்பதை, கிறீஸ் போத்தல் என்று வாசித்து விட்டேன் வா. போன கிழமை கொஞ்சநாளா ஒரு கராஜிக்கு ஒடிடிங் செய்ய போனேவா, consumable stock ல் அங்க ஒரே க்றீஸ் போத்தல், லுப்ரிக‌ன்ட் பூசுதல், ஒயில் செஞ்சிங், ஜக் அடித்தல், வச‌லின் குப்பி, வேலை முடிய கைதுடைக்க கொட்டன் துணி என ஒரே இந்த ஜராவா சாமன்கள் தான் வா
  46. யார்? அந்த ஶ்ரீ சக்கரத்தை காவும்… பார்தசாரதி சொன்னதை கேட்கிறீர்களா? ஆம்… எமது தசாவதாரங்களில் நாதமுனியும் ஒன்று… என சொல்லிவிட்டால் அவர் நிம்மதியாக போய் கோப்பி குடிப்பார்🤣 நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
  47. இவர்கள் உலகளாவிய மக்களா , அல்லது us இல் இருப்பவர்களா? ஏனெனில், அந்த இன வகைப்படுத்தல் US இல் பாவிக்கப்படுவது. ஆம் அதில் இருப்பது US இல் என்று. "This is the first study to look at dementia risk in a large population representing the diversity of the United States" "The study population included more than 274,000 northern California members of Kaiser Permanente, the nation’s largest private integrated healthcare system with more than 10 million members." உலகளாவிய அடிப்படையில் இது வேறுபடலாம் ஏனெனில், us இல் இருக்கும் கறுப்பு, மற்றும் பூர்வீக குடிகளுக்கு சமீப வரலாறு சுமை, பொதி அகற்றப்படவில்லை.
  48. https://www.ucsf.edu/news/2016/02/401576/landmark-study-finds-dementia-risk-varies-significantly-among-racial-and-ethnic 👆 மேலே இருக்கும் ஆய்வு, கலிபோர்னியாவில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் செய்யப் பட்ட போது, வெள்ளையின மக்களுக்கும், ஆசியர்களுக்குமிடையே ஞாபக மறதியில் பாரிய வேறுபாடு இல்லை. உண்மையில் வெள்ளையின மக்களில் இது சிறிது அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஞாபக மறதி வரும் ஆபத்தில் உச்சத்தில் இருக்கும் இரு குழுக்கள், கறுப்பின மக்களும், சுதேச அமெரிக்கர்களும். இந்த இரு இன மக்களும், பல்வேறு சமூக, பொருளாதார (socioeconomic status) நெருக்கடிகள் காரணமாக, ஏனைய ஆரோக்கியக் குறைபாடுகளாலும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே, கார உணவு ஞாபக மறதியின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
  49. "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 03 பகுதி 02 இல் நாம் முக்கிய மான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 ,பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படி யென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன். 6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்க லாம். உதாரணமாக, நீடித்த அல்லது வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis], பலவீன மான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும் மன ச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பரா மரிப்பு ஒன்றை அவர்க ளுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசி யில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதா லும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது. 7. சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மூத்த வர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் கால த்தைப் பற்றிய நம்பிக்கை யற்ற வர்களாக பொது வாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community - based programs and services] அங்கு கட்டாயம் தேவைப்படுகிறது. 8. உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடு த்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூக ங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள். சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாது காப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல, ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனை யும் தடை செய்கிறது. முது மையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொது வாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது. 9. ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமை வது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொது வாக கையறுநிலை [bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும் இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70 வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. 10. முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்திய மான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இரு ந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது. 11. தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கி றார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கிய மற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும். முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்ற ல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்த மான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்த மான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்? 12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம். உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணை ப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கி ன்றன. உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றா யினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடு மையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனை க்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெ டுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோ ரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தி யாகப் படிக்கு ம்போதே நமக்கு வலிக்கிறது என்றா ல், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலு க்குள் பொருத்திக்கொள்வ தற்கு எதிர்கொ ள்ளு ம்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்த வர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளை களை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளை களால் தனித்துவிடப்படும்போது மிகப்பெ ரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்ப தும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டி யது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டிய டிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொ டுப்ப து, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லி க்கொடு ப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டா ட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதான வர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க ... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோ ர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோ ர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.