Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88786
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    3115
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33792
    Posts
  4. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    10000
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/16/25 in all areas

  1. கருத்தின் இறுதிப் பகுதியில் தமிழில் எழுதுவதற்குரிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழில் எழுதி அதனை கொப்பி செய்து மேலுள்ள பகுதியில் ஒட்டியபின்னரே பதிவினை பதிவு செய்ய அழுத்த வேண்டும்: விருப்போ எதிர்ப்போ போட்டால் தானே காண்பிக்க வேண்டும்? இது முன்னரும் இருந்த போதும் தேவையில்லாமல் களம் முழுக்க கலர் அடிக்கும் வேலை நடந்தபடியால் அனுமதிக்கபட்டிருக்கவில்லை. இனியும் அனுமதிபற்றி யோசிக்க வேண்டும். 😀
  2. என்னையும் மறக்காமல் கேட்டுக்கொண்டதுக்கு நன்றி, நான் கிரிக்கெட் பார்ப்பதிலும் பின்தொடர்வதிலும் இருந்து வெகுதூரம் சென்று விட்டேன். இருந்தாலும், கேட்டதுக்காக எனது தெரிவுகள் கீழே உள்ளது. கிருபன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்லவும்: # Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG Select AFG Select AFG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) Aus #B2 - ? (2 புள்ளிகள்) AFG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rassie van der Dussen 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  3. போடுங்கள் கோயில்களும் பெரிசாக் கட்டிக் கும்பிடவோ அல்லது பூசை செய்யவோ ஆளில்லாமல் கிடக்குது. பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காயிது, ஆஸ்பத்திரீகளில் டாக்குத்தர் மாரே பிறைவேற்றுக்குப் போங்கோ எண்டு சொல்லுகினம். நாங்கள் தான் பழைய காலத்திலேயே வாழுறம் போல கிடக்குது அல்வாயன்.
  4. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்? Getty Images சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது. சுற்றியும் மூங்கில் மரங்கள் புதராய் வளர்ந்திருக்க, நடுவில் கிட்டத்தட்ட வட்டவடிவில் குட்டை. அங்கிருந்து சில அடிகள் வெளியே வந்தால் வெப்பம், உள்ளே சென்றால் மூங்கில் மற்றும் குட்டைநீரின் குளிர்ச்சி. இதமான அந்தக் குட்டையின் ஓர் ஓரத்தில் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் என இருந்த ஒரு பெரும் பாறையில், அதேபோல, பாதி உடல் நீரிலும், மீதி உடல் மேலேயுமாகப் படுத்திருந்தது அந்தப் பெண் புலி. சிறிதளவு ஓசைக்கே, எங்கள் வருகையுணர்ந்து கனநேரத்தில் அங்கிருந்து பாய்ந்து மறைந்தது. உடனே நாங்கள் அங்கிருந்து வேகமெடுத்தோம். பார்த்தது சில நொடிகளே என்றாலும், அதுவே காட்டில் புலியைப் பார்த்த எனது முதல் மற்றும் கடைசி அனுபவம். சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் புலி உயிரிழந்த செய்தி அறிந்ததும், அந்தப் பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது. அதேவேளையில், பெண் புலிகளின் வாழ்வியல் குறித்த சில கேள்விகள் தொடர்ச்சியாக எழுவதையும் காண முடிந்தது. உண்மையில், பெண் புலிகளின் வாழ்வியல் எப்படிப்பட்டது? இனப்பெருக்க காலத்தில் அவற்றின் செயல்பாடுகள் யாவை? அவை தம் குட்டிகளைப் பராமரிப்பதில் இருக்கும் தனித்துவம் என்ன? எல்லை வகுத்து தனிமையில் வாழும் புலிகள் புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்க காலம் தவிர பிற நேரங்களில் புலிகள் தனிமையிலேயே வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட புலியின் எல்லைப் பரப்பு, 10 சதுர கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 100 சதுர கி.மீ வரை இருக்கக்கூடும். வாழ்விடம், இரை உயிரினங்களின் எண்ணிக்கை, காட்டிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இது மாறுபடும். புலிகள் தங்கள் எல்லைகளை சிறுநீர் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி. அதோடு, அவ்வப்போது உருமுவதன் மூலம் தனது இருப்பை உணர்த்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவை கொண்டிருக்கின்றன புலிகள் இனப்பெருக்கம் செய்வது எப்படி? Getty Images மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் புலிகள் பெண் புலிகளைப் பொறுத்தவரை, இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கும் காலங்களில், சிறுநீரில் வெளிப்படும் மணம், ஆண் புலிகளுக்கு ஓர் அழைப்பாகச் செயல்படுகிறது. "அதன்மூலம், பெண் புலி இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருப்பதை உணரும் ஆண் புலி அதன் எல்லைக்குள் செல்லும். அங்கு இருவரும் சில நாட்களுக்கு இணைந்து வேட்டையாடுவது, இரையைச் சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது எனத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றன." ஒரு காதல் ஜோடியை போல சில நாட்களுக்கு இணைந்திருக்கும் ஆண், பெண் புலிகள், இனப்பெருக்க செயல்முறை முடிந்த பிறகு பிரிந்து விடுகின்றன. "அதற்குப் பிறகு குட்டிகளை ஈணுவது, அவற்றைப் பராமரிப்பது என்று அனைத்துமே பெண் புலியின் பொறுப்புதான்," என்று விளக்குகிறார் பீட்டர். குட்டிகளுக்காக தாய்ப்புலி செய்யும் தியாகம் ஒரு தாய்ப் புலி, தனது அன்றாடப் பணிகளான வேட்டை, எல்லைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் குட்டிகளைப் பராமரித்து, உணவூட்டி வளர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, தனது அன்றாட வேலைகளையும் குட்டிகளுக்கான நேரத்தையும் சமநிலையில் கொண்டு செல்ல, அவை தொடர்ந்து ஓய்வின்றிச் செயல்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில், சைபீரிய தாய்ப்புலிகளின் நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இதர அபாயங்களில் இருந்து பாதுகாக்க ஒரு தாய்ப்புலி, தனது அதிகபட்ச நேரத்தைக் குட்டிகளுடனேயே செலவிடுகின்றன. அதாவது தனது நேரத்தில் 80 சதவீதத்தை அவைதம் குட்டிகளுடன் கழிக்கின்றன. Getty Images தனது தாயுடன் கொஞ்சி விளையாடும் சைபீரிய புலிக்குட்டி புலிக்குட்டிகளுக்கு, கழுதைப்புலி போன்ற உயிரினங்களால் ஆபத்துகள் இருக்கும். ஆகவே தேவைப்பட்டால், சில புலிகள் வாழ்விட எல்லையைக்கூட குறைத்துக் கொள்வதாகக் கூறுகிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு. "தாய்ப் புலிகள், குட்டிகளை ஈன்ற பிறகு மிகவும் பலவீனமாக இருக்கும். அந்தச் சூழலில், தன் பாதுகாப்பும் குட்டிகளின் பாதுகாப்புமே முதன்மைக் குறிக்கோளாக இருக்கும். ஆகவே, அது எல்லை முழுவதையுமே கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, தனது பரப்பைச் சுருக்கிக் கொள்ளும்," என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, ஒரு தாய்ப்புலி குட்டிகள் பிறந்த புதிதில், அளவில் பெரிதாக இருக்கும் கடமான், காட்டெருது போன்ற இரைகளை வேட்டையாடாது. மாறாக, சிறிய மற்றும் இடைப்பட்ட அளவில் உள்ள இரைகள் மீதே அதிக கவனம் செலுத்தும். "இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தான் பலவீனமாக இருப்பதால் பெரிய இரைகளை வேட்டையாடுவது சவாலாக இருக்கும், அந்த முயற்சி தனக்கே ஆபத்தாக முடியலாம். இரண்டாவது, குட்டிகளால் கடினமான உணவுகளை உட்கொள்ள முடியாது. இரை மிருதுவாக, எளிதில் செறிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆகையால், அதற்கேற்ப வெளிமான், புள்ளிமான் குட்டிகள், காட்டு முயல் ஆகியவற்றை வேட்டையாடும்," என்று முனைவர் குமரகுரு விவரித்தார். இத்தகைய காலகட்டங்களில் ஒரு தாய்ப்புலி தனது ஓய்வு நேரம், எல்லைப் பரப்பு ஆகியவற்றோடு, போதுமான இரை கிடைக்காத நேரங்களில் தன் உணவில் ஒரு பகுதியையும் குட்டிகளுக்காகத் தயங்காமல் தியாகம் செய்வதாக சைபீரிய புலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. அரிதாக குட்டிகளை வளர்க்கும் ஆண் புலி Getty Images ராந்தம்போர் புலிகள் காப்பகத்தில் காணப்படும் ஆண் புலி ஒருவேளை குட்டிகளை ஈன்ற ஒன்றிரண்டு மாதங்களிலேயே தாய் இறந்துவிட்டால், அந்தக் குட்டிகள் காட்டில் பிழைப்பது 90% சாத்தியமில்லை என்கிறார் குமரகுரு. அதேவேளையில், சில தருணங்களில் குட்டிகளின் தந்தையான ஆண் புலி அவற்றுக்கு உணவூட்டி பரமாரிப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பீட்டர். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் 30-40% சந்தர்ப்பங்களில்தான் நடப்பதாகக் கூறுகிறார் முனைவர் குமரகுரு. "ஒருவேளை தாய் இறந்த சில நாட்களிலேயே தந்தையின் கண்ணில் அவை தென்பட்டால், அவற்றுக்குத் தனது இரையில் ஒரு பகுதியைப் பகிர்ந்துவிட்டுச் செல்லும். அப்போது அந்தக் குட்டிகள், ஆண் புலியைப் பின்தொடர்ந்து செல்லும். ஆகவே அவற்றைப் பேணத் தொடங்கும்," என்று விவரிக்கிறார் குமரகுரு. கடந்த 2021இல் மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் புலி குட்டிகளை ஈன்ற ஏழு மாதங்களில் இறந்துவிடுகிறது. ஆனால், அந்தக் குட்டிகளின் தந்தை அவை இருக்கும் பகுதியிலேயே சுற்றி வருவதையும், குட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதையும் கண்காணித்த வனத்துறை, அது அவற்றுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். புலிக்குட்டிகளை வேட்டையாடப் பழக்குவது எப்படி? Getty Images புலிக்குட்டி 6 முதல் 9 மாதங்களை எட்டும்போது அதற்கான வேட்டைப் பயிற்சிகள் தொடங்கும். அந்தப் பயிற்சி ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாகவே தொடங்கும் என்று விளக்கினார் குமரகுரு. குட்டிகள் தாயின் மேற்பார்வையில், வெட்டுக்கிளி, முயல் குட்டிகள், ஓனான் போன்ற சிறிய வகை உயிரினங்களைப் பிடித்து வேட்டையாடி விளையாடும். அந்தப் பயிற்சிகளின்போது, "அம்மாவை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, குட்டிகள் அதிகபட்சமாக 200 மீட்டர் வரை சுற்றி விளையாடும். காட்டெருது, கடமான் போன்றவை சுற்றித் திரியும் பகுதிகளுக்கு நடுவில் ஓடிச் சென்று தன் மழலைக் குரலில் உருமுவது போன்ற வேடிக்கைகளும் நடக்கும்," என்று அவர் விவரித்தார். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் குழந்தைத்தனமான விளையாட்டாகத் தெரிந்தாலும், அவை குட்டிகளுக்கு வேட்டையின் மீதான நம்பிக்கையை வழங்குவதற்கான தாயின் முதல்கட்ட முயற்சியே என்றார் குமரகுரு. இதற்கு அடுத்தகட்டமாக ஒரு வயது முடிந்த பிறகு, "தாய்ப்புலி ஒரு மானை வேட்டையாடினால், இரையைச் சுற்றி வளைத்து அம்மாவுக்கு உதவும் பணியில் குட்டிகள் ஈடுபடும். அப்போது தன் இரையை ஒரே அடியில் வீழ்த்தாமல், கால்களை உடைத்துவிட்டு, குட்டிகளே அதை வீழ்த்தும் வரை காத்திருக்கும்." இதிலும் பழக்கப்பட்ட பிறகு இறுதியாக, சுமார் ஒன்றரை அல்லது இரண்டு வயதை எட்டும்போது, ஓர் இளம் புலி சுயமாக அதன் வேட்டையைத் தொடங்கும் என்று விளக்கினார் முனைவர் குமரகுரு. இதில் ஆண், பெண் புலிக்குட்டிகள் இடையே இருக்கும் ஒரு வேறுபாட்டை எடுத்துரைத்தார் பீட்டர். அவரது கூற்றுப்படி, ஆண் குட்டிகள் அளவில் பெரிதாக இருப்பதால், ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு தாயின் இரையில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ள்ளும். அதனால், விரைவில் வேட்டையாடிச் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் பெண் குட்டிகளுக்கு ஏற்படும். ஆகவே தேவை கருதி ஆண் குட்டிகளைவிட, பெண் குட்டிகள் முன்கூட்டியே வேட்டையாடுவதில் தேர்ந்துவிடுகின்றன. வேட்டைக்குப் பழக குட்டிகளைப் பட்டினி போட்ட 'ராஜமாதா' Getty Images புலிகள் குட்டிகளை வேட்டைக்குப் பழக்குவது எப்படி என்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில் வயதாகி உயிரிழந்த காலர்வாலி என்ற புலியை உதாரணமாகக் கூறலாம். தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றுள்ள இந்தப் புலியை ஆய்வாளர்கள் 'ராஜமாதா' என்று அழைக்கின்றனர். ராஜமாதா, தனது குட்டிகளை வேட்டையாடப் பழக்குவதற்குப் பயன்படுத்திய அணுகுமுறை குறித்த அவதானிப்புகள் கடந்த 2013ஆம் ஆண்டு சான்ச்சுவரி ஏசியா (Sanctuary Asia) இதழில் வெளியானது. அதன்படி, ராஜமாதாவுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று ஆண் உள்பட நான்கு குட்டிகள் பிறக்கின்றன. ஒருநாள் அந்தக் குட்டிகளை ராஜமாதா பிரிந்து செல்கிறாள். நாட்கள் உருண்டோடுகின்றன. அவள் குட்டிகளிடம் இருந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு கி.மீ தொலைவிலேயே இருக்கிறாள். ஆனால், குட்டிகளை அழைக்க குரல் கொடுக்கவோ, அவற்றை நெருங்கவோ இல்லை. அவள் தன்போக்கில் வேட்டையாடுவதும் ரோந்து செல்வதுமாக நாட்கள் செல்கின்றன. சுமார் 10 நாட்கள் பசியில் வாடிய குட்டிகளில் ஒரு ஆண் புலி இறுதியாக புள்ளி மான் குட்டி ஒன்றை வேட்டையாடுகிறது. பல நாட்கள் பட்டினியில் கிடந்தாலும், அவை சண்டையின்றி தமக்குள் அமைதியாக உணவைப் பகிர்ந்து உண்கின்றன. ஆனால், இப்போதும் தாய்ப்புலியான ராஜமாதா அவர்களை நெருங்கவில்லை. நாட்கள் செல்கின்றன. அடுத்த சில நாட்களில் அந்தக் குட்டிகள் மேலும் இரண்டு புள்ளிமான்களை வேட்டையாடின. Getty Images மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில், தனது ஒரு குட்டியுடன் சேர்ந்து சுமார் 400 கிலோ எடையுள்ள கடமானை வேட்டையாடிச் சாப்பிடும் 'ராஜமாதா' இறுதியாக 16வது நாளில், ராஜமாதா தனது குட்டிகளை அழைக்க குரல் கொடுத்துவிட்டு, பெஞ்ச் ஆற்றின் கரையோரத்தில், ஒரு பெரிய புள்ளி மான் இரையுடன் அவள் காத்திருந்தாள். குட்டிகள் வந்ததும், குடும்பத்துடன் சேர்ந்து அவள் தனது இரையை ருசித்துச் சாப்பிட்டாள். இந்த ஆய்வில் சில அம்சங்கள் கண்டறியப்பட்டன. ராஜமாதா, தனது குட்டிகளை பெஞ்ச் ஆற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விட்டுச் சென்றிருந்தாள். அவள் விட்டுச் சென்ற பகுதி இரை உயிரினங்கள் அபரிமிதமாக வாழும், அடர்த்தி நிறைந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட காடு. அதாவது, தனது குட்டிகளை வேட்டைக்குப் பழகுவதற்காக இரைகள் நிறைந்த, தண்ணீருக்குப் பஞ்சமில்லாத, மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றிருந்தாள். அதோடு, இவற்றின் தந்தையான டி-2 என்ற புலி இறந்த பிறகு, அதன் எல்லைகளைத் தன்வசப்படுத்திய டி-30 என்ற புலி அங்கு சுற்றி வந்ததால், அதன்மூலம் தனது குட்டிகளுக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்க, ஒரு பாதுகாப்பான தொலைவில் அவற்றுக்குப் பாதுகாப்பும் வழங்கி வந்திருக்கிறாள், ராஜமாதா என்று அழைக்கப்படும் அந்தத் தாய்ப்புலி. ஆண் குட்டிகளை தாய் அடித்து விரட்டுவது ஏன்? Getty Images மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் தன் குட்டியுடன் நடந்து செல்லும் தாய்ப்புலி இப்படியாக, ஈன்ற காலகட்டத்தில் பாதுகாப்பு கருதிப் பல தியாகங்களைச் செய்து வளர்த்து, வேட்டையாடப் பழக்கி, சுயமாக வாழப் பயிற்றுவித்த பிறகு, தமது குட்டிகள் தனித்து வாழும் வயதை எட்டும்போது, அவை தாயைப் பிரிகின்றன. இதில் "பெண் குட்டிகளைப் பொறுத்தவரை, சிலநேரங்களில் தனது எல்லைப் பரப்பிலேயே ஒரு பகுதியை தாய்ப்புலி வழங்கக்கூடும். அனால், ஆண் குட்டிகளைப் பொறுத்தவரை நெடுந்தூரம் வரை அவை விரட்டியடிக்கப்படும்" என்கிறார் காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர். "ஆண் புலிகள், தாயின் வாழ்விடத்திற்கு அருகிலேயே இருந்தால், ஒருவேளை அவை தமது உடன்பிறப்புகளுடனோ அல்லது சில நேரங்களில் தாயுடனேகூட இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன" என்று பீட்டர் கூறினார் ''இதனால் மரபணுக் குறைபாடு ஏற்படும், அது எதிர்காலச் சந்ததிகளின் பிறப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலேயே ஆண் புலிகள் விரட்டியடிக்கப்படுகின்றன'' என்கிறார் அவர். இவை மட்டுமின்றி, ஒருவேளை தனது குட்டிகளில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால், அவற்றைத் தானே சாப்பிட்டு விடுவதன் மூலம், பலவீனமான சந்ததிகள் பெருகுவதைத் தடுப்பதாகவும் முனைவர் குமரகுரு கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx26d17n4qyo?at_campaign=ws_whatsapp
  5. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) SA ENG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rabada 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  6. அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்
  7. ஒரு காலத்தில் ஈவே ரா பேசிய பேச்சுக்களை விட சீமானின் மொழியாடல்கள் எவ்வளவோ மேல். சீமானின் மொழியாடல்களில் மிகுதிகள் குறைகள் இருப்பினும் மக்களின் எண்ணப் பிரதிபலிப்புக்கள் இலகு வடிவில் இருப்பதால்.. மக்களிடம் எடுபடுகிறது என்பதே உண்மை.
  8. ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.
  9. அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ... கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது. தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை... நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக. வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ... ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட சாக்குகளை உபயோக படுத்த முடியாது.. பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் .. இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் .. அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே) செய்வது கடினம் .
  10. காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு நானே செய்தேன் என்றார் நம்மாள் பூ......... என்று இழுத்தாள் ஊரில் அழகான அந்தப் பெண் வீட்டுக்கு முன் இருந்தது என்றான் அப்பாவியாக அன்று போன அந்த அழகுப் பெண் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை இப்ப இருப்பது இரண்டாவது காதலா என்றேன் ஆமாம் என்று அவசரமாக தலையாட்டினான் இப்ப அவர் அவனின் மனைவியும் கூட பூ............ என்று நான் இழுத்தேன் கடையில் வாங்கிக் கொடுத்தேன் என்றான் சோகமாக இதில் ஏன் சோகம் என்று நான் முழிக்க இவருக்கும் அப்பவே தெருவில் புடுங்கி கொடுத்திருக்க வேண்டும் என்றான்...................
  11. "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" "அன்பு வலிமையானது" "அன்பு வலிமையானது மனிதம் வளர்ப்பது துன்பம் வேதனையானது மனதை வாட்டுவது இன்பம் மகிழ்வானது சேர்ந்து அனுபவித்தால் புன்னகை கொடுப்பது இனிய வரவேற்பே நன்றாய் இவையை அறிந்தால் சொர்க்கமே!" "பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல் கண்கள் போல் காக்கவேண்டிய ஒன்றே மாண்போடு வாழ்தல் மனிதனின் தேவை விண்ணில் ஒளிரும் மீன்கள் போல வண்ண அழகில் மானிடம் மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "ஓடுகிற தண்ணியிலே" "ஓடுகிற தண்ணியிலே வாடிநிற்கும் கொக்கே தேடுகிற என்னழகியை கண்டதுண்டோ சொல்லாயோ? பாடுகிற குயிலே கிளையிலே இருக்கிறியே கூடுகிற ஆசையை தூரத்தே எறிந்துவிட்டு ஆடுகிற என்னெஞ்சுக்கு ஆறுதல் தாராயோ?" "வட்டவட்டப் பாறையிலே முட்டியோடும் ஆறே வளைகுலுங்கப் போகும் என்னவளைக் கண்டாயோ? விரிச்ச நெற்றியுடன் வீறாப்பு பேசுபவளை வெற்றிலைப் பாக்குடன் குறும்பு செய்பவளை கண்ணில் அம்பிட்டால் [அகப்படில்‌] எனக்குக் கூறாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. இந்தக் கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு காலமும் சீமான் ஒரு ஆளா என்று அவர் பெயர் கட்சியின் பெயரை இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் இப்பொழுது சீமான் சீமான் என்று அலநறகின்றன. ஒவ்வொரு நாளும் சீமான் பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். திமுகவுக்கு எதிரான முறையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்.அவர் தொடர்ந்து தனித்து செயற்படாமல் திமுகவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியில் இணைந்தால் கறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
  13. 2009 அழிவுடன் இருந்த ஆத்திரத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று அலைந்த நாட்களில் 2011 இலிருந்து சிலகாலம் இவருடன் தொடர்பில் இருந்தேன்.. காலம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுபோய்விடும்.. இவரின் கைது வருத்தமான செய்தி.. இவரைப்பற்றி பின்னர் சிலகாலம் இணையங்களில் தவறாகவும் எழுதப்பட்டதாக ஞாபகம்.. சாத்திரியோ அல்லது வேறு யாரோ யாழிலும் எழுதியதாக ஞாபகம்.. அமரதாஸ் கதைபோல் ஆகக்கூடாது என்பதால் என்னால் சரியாக நாபகம் இல்லை தவறாகவும் இருக்கலாம் என்பதை கூறிக்கொள்கிறேன்.. வரமாட்டார்கள்.. ஆனால் தமிழ்தேசியத்தை சீமான் உருவாகுவதற்கு முன்னரே யாழில் எதிர்த்தவர்கள் பலர் சீமானின் திரிகளில் தமிழ்தேசியத்தை தாம் சீமானிடம் இருந்து காக்கப்போவதாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவகள் எப்பொழுதும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.சீமானை வீழ்த்தியதும் மறுபடியும் முதலில் இருந்து புலிகளை விமர்சிக்கிறோம் என்று தமிழ்தேசியத்தை கழுவி ஊத்தும் வேலையை ஆரம்பிப்பார்கள்.. இதற்குதான் தமிழில் “நீலிக்கண்ணீர் வடிப்பது” என்று கூறுவார்கள்.. “ ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது” என்றும் கூறுவார்கள்..
  14. கூட்டம் இன்னும் வேண்டும் என்றால், சீமான் - சுமந்திரன் - அர்ச்சுனா பெயர்களில் மூன்று entries இங்கே உள்ளே தள்ளி விடுவம். முழு யாழுமே இங்கே தான் நிற்கும்.................................🤣.
  15. கனேடிய தூதுவர், கள்ளு அடித்து விட்டு கதைக்கிறார் போலுள்ளது. அதுகும் ... சூட்கேஸுகளை பஸ்சில், யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு... கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்களாம். 😂
  16. டிரம்ப் 2015இல் எதற்காக அரசியலுக்கு வந்து தேர்தலில் நின்றாரோ அதே கரணுத்துக்காவே விஜய்யும் கடசி தொடங்கி இருக்கிறார். டிரம்ப் வரி மோசடி செய்யவே வந்தார் அப்போது அவரே தனக்கு வாக்கு போட ஒரு கூடடம் இருக்கும் என்று நம்பி இருக்கவில்லை. விஜய் தொடங்கியது கருப்பு பணத்தை வெள்ளையடிக்க இவர்களிடம் நிறைய பணம் சுவிஸ் வங்கியில் எந்த வட்டி கூட இல்லாமல் கிடக்கிறது அதை நகர்த்துவது என்றால் முதலில் வெள்ளையாக்க வேண்டும் ... அதற்க்கு அரசியல் கடசி சிறப்பான வழி. தேர்தலில் வென்றாலும் வெற்றி தோற்றாலும் வெற்றி ........ அதை புரிந்துகொண்டுதான் அவரை கண்காணிக்கவே இந்த பாதுகாப்பு நாடகத்தை இந்திய அரசு ஆடுகிறது என்று எண்ணுகிறேன்
  17. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ Select BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) PAK 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) Eng 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PAK 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shreyas Iyer 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK
  18. உதவி என்று கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வது..🤔இப்போ அங்குள்ள அனைவருமே எதிர்பார்ப்போடு தானே பேசுகிறார்கள்..🤭
  19. சாட் ஜிபிடி, ஜெமினி, எம் ஜி ஆர் சகலதையும் தவிடு பொடியாக்க வருகிறது…… வாக்கியம்+திருக்கணிதத்தை குழைத்து, கூடவே சங்கரன்கோவில் ஏட்டு சுவடிகள் சொல்வதையும் கருத்தில் எடுத்து, அண்டசராசரத்தில் உள்ள அத்தனை துகள்களின் அசைவின் அடிப்படையிலும் கணிக்கப்பெற்ற…. ஶ்ரீலஶ்ரீ உடான்ஸ் சாமியார் அவர்களின் கணிப்பு…. கட்டங்களை உருட்டிப்பார்த்தால்…இஸ்டதேவைதை இஸ்மியாக்கி தெற்குப்பார்வை பார்க்கிறார். குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SA ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Eng 😁 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், SA அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், Aus அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் SA அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும். சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? Eng 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? Aus 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shafeen Shah Afridi 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Mohammed Nabi 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? PAK 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND பெரும் கட்டிடங்கள் எல்லாம் ஒரு செங்கல்லில் ஆரம்பித்தவையே. பிகு விளையாட்டு திரியில் அரசியல் வேண்டாம். அடி வேணும் எண்டா அங்கால வாங்கோ, தல்லாம்🤣.
  20. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) AUS 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  21. வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை, இந்த வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது..!!!
  22. உங்கடை கார்க் கதை தானே 😁.
  23. ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!
  24. பிடித்து அனுப்பி விட்டார்களோ?
  25. கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???
  26. முன்னால் வீட்டுப் பூ வேலைக்காகது அண்ணை! அது காசுக்கு வாங்கி இருந்தால் தானாம்.....
  27. 'பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லாம்......................' என்பது போல, கட்டிய பின் கடையில் வாங்கிக் கொடுத்தாலும், தெருவில் புடுங்கிக் கொடுத்தாலும், அங்கிருந்து வரும் எஃபக்ட்டில், ரியாக்‌ஷனில் ஏதாவது குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை.. அல்வாயன் கேட்பது என்னவென்றால் வேறொரு பெண்ணுக்கு கொடுக்கலாமா என்பதே?
  28. முடிவெட்ட போயிற்று(வெயிலில் பகல் நேரம் அநாவசியமாக வெளியே செல்வதில்லை) வரும்போது குளிக்க உதவும் தம்பி வரத்தாமதமாக சிறிது நேரம் போயிருந்தேன் அண்ணை. 2 மணிக்கூட்டம் 2.45 அளவில் ஆரம்பமானது. பிரதமர் வந்திறங்கிய பின்னர் புறப்பட்டுவிட்டேன். தொல்புரத்தில் உள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் அமரர் சுப்ரமணியம் ஞாபகார்த்த 'சத்தியமனை' நூலகத்திற்கும் பிரதமர் சென்றிருந்தார்.
  29. 16 ஆண்டுகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமாகப்படுகிறது அண்ணை. அவருடைய நெருங்கிய நட்புகளாவது முயன்று பார்க்கலாமே? அவர் நேரடிப்போராளி இல்லைத்தானே? மனித உரிமைச் செயற்பாட்டாளர் தானே?
  30. அருமையான கவிதை பாராட்டுக்கள்.
  31. 🤣..................... சுவி ஐயா, நீங்கள் அடிச்சு முடிய ஒரு மெசேஜ் போடுங்கோ............................. நானும் வந்து ஒரு இரண்டு போட......................................😜.
  32. ஒரு பதாகையில் "சாராய யாவாரியை துரத்துவோம்" என்று இருக்கிறது. தமிழ்வின் "யாவாரி" யைக் காப்பாற்ற சுமந்திரன், சாணக்கியன் மீது செய்தியைத் திருப்பி விட்டிருக்கிறது. தமிழ்வின் வாய்க்கால் வெட்ட ரண்டு பேர் "மம்பட்டியோட" றெடியா நிப்பீனம் யாழில்😎!
  33. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் பெரிய‌ப்பு............................
  34. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா...................
  35. இதைத்தான் சொல்வது, உண்டி கூழுக்கு அழுகுது, கொண்டை பூவுக்கு அலையுது.
  36. சைனாவில் வட சைனாவில் இருப்போருக்கும், தென் சைனாவில் இருப்போருக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களுடன் பழகிய பின்பு அவை தெளிவாக ஆரம்பிக்கும். உருவம் மட்டும் அல்ல, உணவுப் பழக்கவழக்கங்கள் கூட வேறுபட்டவை. இரு பிரிவுகளுமே சீன மொழியின் மண்டாரின் மொழிப் பிரிவையே உபயோகித்தாலும், அவர்களில் ஒருவர் சிலவேளைகளில் இன்னொருவரை திக்குமுக்காட வைப்பார். நான் ஒரு நாள் வீட்டிலிருந்து கொய்யாப்பழம் எடுத்துப் போயிருந்தேன். தென் சைனாக்காரர் அதன் பெயர் என்னவென்று எழுதிக் காட்டினார். வடசைனாக்காரர் தான் தன் வாழ்க்கையில் அப்படி ஒன்றை கேள்விப்பட்டதேயில்லை என்றார்........... கொய்யாப்பழத்திற்கான அவர்களின் சொல்லை அப்படியே மொழிபெயர்த்தால், அதன் அர்த்தம் 'கற்பழம்' என்று வரும் - கல் போன்ற ஒரு பழம். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் எழுத்து உரு ஒரு தடியின் மேல் கல் ஒன்றை வைத்தது போலவே எனக்குத் தெரிந்தது............. ஹாங்காங்கில் சீன மொழியின் இன்னொரு மொழிப் பிரிவை பயன்படுத்துகின்றார்கள் - காண்டோனீஸ். இரண்டு பிரிவுக்கும் எழுத்து உருக்கள் ஒன்று என்றாலும், பேச்சு வழக்கு வேறுபட்டவை. வட சைனா, தென் சைனா, ஹாங்காங், இதைவிடவும் பல உட்பிரிவுகள் உள்ளது என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் சொல்லி விட்டு, அவர்கள் என்னைக் கேட்ட கேள்வி, 'அது சரி, ஆனால் நீங்கள் ஏன் எல்லா இந்தியர்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கின்றீர்கள்................. ஒருவரை ஒருவர் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கின்றீர்கள்.....................'....................🫢. வட சைனாவில் மாங்கோலிய நாட்டு எல்லையுடன் இருக்கும் சீனர்கள் இன்னும் வித்தியாசமானவர்கள். கொஞ்சம் அகண்ட உருவமும், உடற் பாகங்களும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் சைனாவை கலங்கடித்த ஜெங்கிஸ்கான் பரம்பரை அவர்கள்............ என்னுடைய நண்பனின் மனைவியும் அந்த இடமும், பரம்பரையும் தான்.......... அதனாலே ஆள் அடக்கமாகவே இருந்தான்..............
  37. பாடசாலை அதிபர்களுக்கு பணம் கொடுப்பதே ஏற்று கொள்ள முடியவில்லை அதில் வேறு கிளீன் என்ற புரட்சிகர சேசலிச திட்டங்களுக்கு. ஏன் அண்ணா முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்க புரட்சிகர தமிழர்களிடம் பாடசாலை அதிபர் கேட்கலாமே
  38. https://www.youtube.com/shorts/-Fi_g-zWhGs https://youtube.com/shorts/-Fi_g-zWhGs?si=FfnAIKHu8JBENUhB https://www.youtube.com/shorts/-Fi_g-zWhGs
  39. ஈழத்தமிழ் உலகம் நினைவிற் கொள்ள வேண்டியது, பேரறிவாளனின் விடுதலைக்கும், பின்னர் அதே வழக்கில் எஞ்சிய கைதிகள் விடுதலைக்கும் ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக ஆகிய "திராவிடக்" கட்சிகளின் செயல்பாடுகளும், அக்கறையும் பாரிய காரணங்கள்! "பட்டி மன்ற ஆவேசப் பேச்சுகள்" இந்தக் கைதிகளை விடுதலை செய்ய உதவவில்லை, அத்தகைய பேச்சுக்களால் இந்திய உயர் நீதிமன்றம் அழுத்தத்திற்குள்ளாகவில்லை. ஆதாரம், பேரறிவாளன் விடுதலையான செய்தியிலேயே இருக்கிறது👇: "..The court held that the Tamil Nadu Council of Ministers’ advice on September 9, 2018 to pardon Perarivalan was binding on the Governor under Article 161 (Governor’s power of clemency) of the Constitution" https://www.thehindu.com/news/national/supreme-court-invokes-extraordinary-powers-to-release-perarivalan/article65425403.ece
  40. பேரறிவாளன் ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். உண்மையில், தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது. உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் போன்ற கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே நன்றி கெட்டவர்கள்.
  41. தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு குறித்த மற்றொரு எக்ஸ் பதிவில் மோசடி, எலோன் மஸ்க்கின் குழந்தைகளுடன் தனது புதுமையான தருணங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார், அதில், பில்லியனரின் குடும்பத்தைச் சந்தித்ததும், பலதரப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவதும் மகிழ்ச்சியாக இருந்தது – என்று பதவிட்டார். டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பிய பின்னர் தனது முதல் அமெரிக்க பயணமாக பிரதமர் மோடி வியாழன் அதிகாலை வொஷிங்டன் டிசியை சென்றடைந்தார். மோடியின் அமெரிக்க விஜயம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421355
  42. மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது. கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.' இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............
  43. இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் முன்னோக்கு சிந்தனையில்லாத சர்வாதிகாரி சம்பந்தனே! தன்னோடு தோளோடு தோளாக நின்ற மாவையரை அவர் மதித்ததேயில்லை. சொல்லப்போனால், சுமந்திரனுக்கு முன்னாலேயே அவரை கடிந்துள்ளார். சம்பந்தன் மேல் உள்ள மரியாதை, வயதுக்கு கொடுத்த மதிப்பு, கட்சி உடைந்து போகக்கூடாது என்கிற எண்ணம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார். அவ்வாறே ஏனைய உறுப்பினர்களும் சம்பந்தனை பகைக்காமல் நடந்து கொண்டனர். அதை அவர்களின் பலவீனமாகவும், தான் ஏதோ சாணக்கியன் போலவும் நடந்துகொண்ட சம்பந்தர். தனக்குப்பின் கட்சியை அநாதரவாக விட்டுச்சென்ற முட்டாள். அதை சுமந்திரன் என்கிற பேராசை பிடித்த ஊழல்வாதி சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எந்த இலட்சியம், திறமை இல்லாத இரண்டு நரிகள் சிங்கத்தின் வாலோடு வால் இணைத்துக்கொண்டு திரியுதுகள். இவர்களுக்கு எதிராக அம்பு திரும்பும்போது புலம்புவதை தவிர வேறுவழியிருக்காது. சுமந்திரனை இவர்கள் பாதுகாத்து காப்பாற்றியதும் அவரின் அடுத்த இலக்கு இவர்கள்தான். சுமந்திரனுக்கு பதவியாசை மட்டுமல்ல, அவருக்கு இருப்பது தன்னைவிட அறிவாளியில்லை என்கிற ஒரு மனநோய்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.